Showing posts with label சிறப்புக் கட்டுரைகள். Show all posts
Showing posts with label சிறப்புக் கட்டுரைகள். Show all posts

Nov 8, 2015

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 4




கலீஃபாவை தேர்வுசெய்யும் தேர்தல் :

     புதிய கலீஃபாவை தேர்வுசெய்வதில் மஜ்லிஸ் அஷ்ஷுரா உறுப்பினர்களில் குறைந்தபட்சம் பெரும்பான்மையினரின் ஓப்புதலையேனும் கலீஃபா வேட்பாளர் பெறவேண்டியது கட்டாயம் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

     கலீஃபா வேட்பாளர் மஜ்லிஸ் அஷ்ஷூராவில் உள்ளவராகவும் சிறந்த இஸ்லாமிய பண்புகளை பெற்றவராகவும் இருக்கும்பட்சத்தில் ஒரேயொரு ஓட்டு அடிப்படையில் கூட தகுதியுள்ள நபருக்கு கலீஃபா பதவியை அளிக்கலாம் என்று அல்அஷரி(ரஹ்) கருதுகிறார். இவ்வாறு செய்யும்போது முறையான ஆதாரம் அல்லது சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படை யிலுள்ள சட்டரீதியான ஆட்சேபனைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

     சிறந்த முஸ்லிம்களாக உள்ள மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்கள் இருவரின் ஓட்டுக்களை கலீஃபா வேட்பாளர் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்களிலுள்ள மற்றொரு குழுவினர் அபிப்ராயம் கூறுகிறார்கள் (ஏனெனில் மஜ்லிஸ் அஷ்ஷூரா என்பது ஒரு ஜம்ஆ என்ற முறையில் அதில் மூன்று நபர்கள் இடம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்)

       கலீஃபா வேட்பாளருக்கு எதிரான ஆட்சேபனைகள் எதுவும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் நான்கு ஓட்டுகளை கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்று நான்காவது அபிப்ராயம் கூறுகிறது, ஏனெனில் இஸ்லாத்தில் விபச்சாரம் தொடர்பான குற்றத்தை நிரூபனம் செய்வதற்கு நான்கு சாட்சிகள் கட்டாயமாக இருக்கிறது.

     ஒரு ஜம்ஆவின் குறைந்தபட்ச பலத்தை பெற்றிருக்கும் வகையில் கலீஃபா வேட்பாளர் குறைந்தது மூன்று ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டியது கட்டாயமாகும் என்று ஐந்தாவது அபிப்ராயம் கூறுகிறது.

     வலுவான முறையில் தீர்மானிக்கும் விதமாக கலீஃபா வேட்பாளர் குறைந்தபட்சம் ஐந்து ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டும் என்று ஆறாவது அபிப்ராயம் கூறுகிறது.

     இறுதியாக, புதிதாக தேர்வுசெய்யப்படும் கலீஃபா வேட்பாளர் மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்களின் 40 ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்களிலுள்ள ஏழாவது குழுவினர் கருதுகிறார்கள், ஏனெனில் (சில அறிஞர்களின் அபிப்ராயத்தின்படி) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை சட்டரீதியாக செல்லுபடியாக வேண்டும் என்றால் அதற்கு 40 பேர்கள் இணைந்து தொழுகையை நிறைவேற்றவேண்டும்.

கலீஃபாவை பதவிநீக்கம் செய்தல் :

     அல்மாவர்தி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபா குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சி செய்யும்போது அவரை பின்பற்ற வேண்டியதும் அவருக்கு ஆதரவு அளிக்கவேண்டியதும் கட்டாயமாகும். இதற்குமாறாக, அவர் அநீதமானவராகவோ அல்லது (குருட்டுத்தன்மை அல்லது உடலுறுப்புகள் துண்டிக்கப்படுதல் ஆகியவற்றின் காரணமாக) உடல் ஊனமுள்ளவராக ஆகிவிடும் பட்சத்தில் அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்பாக்தாதி(ரஹ்)ஹ கூறுவதாவது : ‘கலீஃபா நீதி தவறி செயல்படும் பட்சத்தில் அவர் நேர்வழிக்கு திரும்பும் வகையில் உம்மா அவரை முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும், இதற்கு பலன் ஏற்படவில்லை என்றால் பிறகு அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்ஜுவைனி(ரஹ்) கூறுவதாவது : ‘உம்மாவின் இலட்சியம் இஸ்லாமாக இருப்பதால் இந்த இலட்சியத்திலிருந்து விலகிச்செல்லும் எவரையும் கலீஃபா பதிவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பது கட்டாயமாகும்’

     அஷிகிஸ்தானி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘கலீஃபா அறியாமை உடையவராகவோ அநீதம் இழைப்பவராகவோ அலட்சியம் செய்பவராகவோ இருக்கும் பட்சத்தில் அல்லது பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர் காஃபிராக ஆகிவிடும் பட்சத்தில் உடனடியாக அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்கஸ்ஸாலி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபா அநீதம் இழைப்பவராக இருக்கும்பட்சத்தில் தனது குற்றத்திலிருந்து விலகிக்கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தல் செய்யவேண்டும், அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் பிறகு அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்துவிவேண்டும்’

     அல்இஜி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபாவை பதவிநீக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காரணங்கள் தொடர்பான திட்டவட்டமான பட்டியல் உம்மாவிடம் இருக்கிறது’

     அல்அஸ்கலானி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘கலீஃபா நிராகரிப்பவரை போல செயல்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் அவருக்கு கீழ்ப்படிவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதோடு அவருக்கு எதிராக போரிடுதல் வாஜிபாகும். ஒருவருக்கு ஆற்றல் இருக்கும் என்றால் அவரை எதிர்த்து நிற்கவேண்டியது வாஜிபாகும் & இதற்கு மகத்தான நற்கூலி இருக்கிறது. இத்தகைய சூழல் ஏற்படும்போது அதை கண்டுகொள்ளாமல் விலகியிருப்பதை ஒருவர் தேர்வுசெய்தால் பிறகு அவர் பாவத்தில் வீழ்ந்துவிடுவார், அதேவேளையில் அவருக்கு எதிராக போரிட ஆற்றல் இல்லாதவர்கள் (அவரை எதிர்த்து போரிடுபவர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு) ஹிஜ்ரத் செய்யவேண்டும்’

அல்அஸ்கலானி(ரஹ்) தனது அபிப்ராயத்திற்கு ஆதரவாக குர்ஆனின் இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்.

     அல்அஹ்ஸாப்  அத்தியாயத்தின் 67&68வது வசனங்கள் முதல் ஆதாரமாகும் : அன்றியும் எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் வழிபட்டோம். நாங்கள் தவறான வழியில் செல்லும்படி அவர்கள் செய்துவிட்டார்கள். எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இருமடங்கு வேதனையை கொடுத்து அவர்கள்மீது மாபெரும் சாபத்தை ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார்கள். இரண்டாவது ஆதாரம் அல்பகரா அத்தியா யத்தின் 167வது வசனமாகும் : அன்றியும் (அவர்களை) பின்பற்றிய இவர்கள், ‘நாம் மற்றொரு முறை (உலகத்திற்கு) திரும்பிச்செல்ல கூடுமாயின் எங்களை இவர்கள் கைவிட்டபடியே நாங்களும் இவர்களை கைவிட்டுவிடுவோம்’ என்று கூறுவார்கள். இவ்வாறே (அவர்களுடைய நெஞ்சங்கள் துயரமடையும் பொருட்டு) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக்காட்டுவான். அன்றியும் அவர்கள் நரக நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.

இப்னு உமர்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

     அமீர்கள் தீயவற்றை ஏவினால் தவிர அவர்களுக்கு முஸ்லிம்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (தீயவற்றை ஏவும்) இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் அவர்களுக்கு கட்டுப்படவும் கூடாது செவிசாய்க்கவும் கூடாது. (நூல் : முஸ்லிம்)

இப்னு மாலிக்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     சிறந்த அமீர் யாரெனில் அவரை நீங்கள் நேசிப்பீர்கள் அவரும் உங்களை நேசிப்பார்; மோசமான அமீர் யாரெனில் அவரை நீங்கள் வெறுப்பீர்கள் அவரும் உங்களை வெறுப்பார். எனினும் உங்களுடைய அமீர் அநீதம் இழைப்பவராக இருந்தாலும் அவர் தொழுகையை நிறைவேற்றும் வரையில்,  வெளிப்படையான குஃப்ரை ஏவாத வரையில் அவருக்கு எதிராக போரிடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (முஸ்லிம்)

உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     அனைத்து காரியங்களிலும் அனைத்து சூழல்களிலும் நீங்கள் உங்கள் அமீருக்கு கட்டுப் பட்டு நடந்துகொள்ளுங்கள், வெளிப்படையான குஃப்ரை ஏவாத வரையில் அவரை பதவிநீக்கம் செய்யாதீர்கள்.

  அறிஞர்களின் வேறுபட்ட கண்ணோட்டங்கள் தொடர்பாக விரிவான விளக்கம் தே¬ப் பட்டால் http://www-personal.umich.edu/~luqman/Belief/Khilafah/eleven.html என்ற இணையதளத்தை பார்க்கவும்

     அல்மாவர்தி(ரஹ்) இஸ்லாமிய ஆட்சியமைப்பு சட்டங்கள் தொடர்பாக ‘அல்அஹ்காம் அஸ்ஸுல்த்தானியா’ என்ற நூலை எழுதியுள்ள போதும் அவரை போன்ற அறிஞர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டும் அதேவேளையில் இஸ்லாத்தில் ஆட்சியமைப்பு சட்டங்கள் எதுவுமில்லை என்று கூறுபவர்கள் அறிவுரீதியாக உண்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதத்தோன்றுகிறது!

சட்டங்களை ஏற்று அமல்படுத்துதல் அரசிற்கு வாஜிபு அல்ல எனும்போது இஸ்லாமிய அரசை பெற்றுக்கொள்ளும் வகையில் ஆட்சியாளர் முஸ்லிமாக இருந்தால் அதுவே போதுமானதாகும்!

     மேற்கண்ட கூற்றிற்கு விரிவான பதில் கூறத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். உட்பிரிவு விவகாரங்களில் கலீஃபா சட்டங்களை ஏற்று அமல்படுத்தலாம் அல்லது (ஆளுநர்கள், ஆமில்கள், நீதிபதிகள் ஆகியோர் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கும்வரை) அவர்களுடைய சொந்த இஜ்திஹாத் அடிப்படையில்ஹ சட்டங்களை ஏற்று அமல்படுத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கலாம்.

மக்களிடமிருந்து இல்மை பெற்றுக்கொள்ளும்போது தக்வாவை மட்டுமே அடிப்படையாக கொள்ளவேண்டும் :

ஹதீஸ்கலையின் பிதாமகர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி(ரஹ்) கூறியிருப்பதாவது,

     எவரிடமிருந்து இல்மை பெற்றுக்கொள்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் ஏனெனில் அது உங்களுடைய தீனாக இருக்கிறது!

     நமது தீனுடைய விளங்கிக்கொள்ளுதலை சிதைப்பதற்கும் திரித்துக்கூறி பிரச்சாரம் செய்வதற்கும் இஸ்லாத்தின் எதிரிகள் தங்களுடைய அனைத்து ஆற்றல்களையும் செலவிட்டு வரும் இந்த தருணத்தில் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. அறிஞர்களும், குர்ஆனை ஓதும் காரீகளும், முன்னாள் இஸ்லாமிய அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும், எழுத்தாளர்களும், இமாம்களும் இஸ்லாத்திற்கு எதிரான ஆயுதங்களாக பிரயோகப்படுத்தப் படுகிறார்கள்!

     நயவஞ்சகர்களும் (முனாஃபிகூன்), மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்களும் (முர்த்ததூன்), வெளிப்படையாக பாவம் செய்பவர்களும் (ஃபாஸிகூன்), இன்னும் நிராகரிப்பவர்களும் (காஃபிரூன்) கூட இஸ்லாத்தில் மிகுந்த அறிவுடையவர்களாக இருக்கலாம் என்பதை நாம் நமது முந்தைய வரலாற்றிலிருந்து உணர்ந்துகொள்ளவேண்டும். நாம் அவர்களிடமிருந்து மார்க்க அறிவை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் இதற்கு பொருளாகும். நேசத்திற்குரிய நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதுகுறித்து நம்மை எச்சரிக்கை செய்துள்ளார்கள்!

எனது உம்மாவின் விஷயத்தில் குர்ஆனை கொண்டு விவாதம் செய்யும் நாவன்மை பெற்றுள்ள நயவஞ்சகர்கள் குறித்துதான் நான் மிகுந்த அச்சம் கொண்டுள்ளேன் (நூல் : அஹ்மது, அல்பஸார், இப்னு அப்து அல்பர்&பக்கம் 439)

     முஸ்லிம்கள் ஒருகலீஃபாவை பெற்றிருக்கவேண்டியது வாஜிபாகும். மனித சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்வது தடைசெய்யப்பட்டுள்ளது போன்ற இஸ்லாத்தின் திட்டவட்டமான அஹ்காமில் பூசல்களை ஏற்படுத்துபவர்கள் இவர்களில் இருக்கிறார்கள். இவர்கள் ஏற்படுத்தும் பூசல்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தியுள்ளது என்றால், இஸ்லாத்தில் ஓரினசேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது என்பதில் இவர்கள் சர்ச்சை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

     அறிஞர்களின் பலவீனமான அபிப்ராயங்களையும் பூசல்களை ஏற்படுத்தும் வன்மமான அபிப்ராயங்களையும் மேற்கோள் காட்டுவதில் எப்போதும் குறியாக இருந்து வருகிறார்கள் என்பதால் இவர்களை குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளவேண்டும்!

இமாம் அல்பைஹகீ அறிவித்திருப்பதாவது :

     ‘இஸ்மாயீல் அல்காதி கூறினார், ‘ஒருநாள் நான் அப்பாஸித் கலீஃபாக்களில் ஒருவரான அல்முஃதாதித் அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். உடனடியாக அவர் ஒரு நூலை என்னிடம் காண்பித்து அதை படிக்கும்படி கூறினார். அந்த நூலில் அதன் ஆசிரியர் அனைத்து உலாமாக்களும் கூறிய விநோதமான கூற்றுகளை தொகுத்திருந்தார். எனவே இந்த நூலின் ஆசிரியர் பொதுவான மார்க்க கொள்கைகளுக்கு புறம்பாக தீய கோட்பாடுகளை பின்பற்றும் மனிதர் (லீமீக்ஷீமீtவீநீ) என்று நான் கலீஃபாவிடம் கூறினேன். அவர் ஏன் இவ்வாறு செய்துள்ளார் என்று கலீஃபா என்னிடம் வினவினார், இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறையில் எந்த அறிஞர்களும் கருத்து கூறவில்லை என்று நான் கூறினேன். மனக்கொடையுடன் (முஃதா) கூடிய திருமணத்தை சட்டரீதியானதாக ஆக்கிய அவன் இசை பாடுவதை சட்டரீதியானதாக ஆக்க வில்லை, ஒரு செயலை சட்டரீதியானதாக ஆக்கிய அவன் மற்றொரு செயலை சட்டரீதியான தாக ஆக்கவில்லை! ஒவ்வொரு ஆலிமும் சில விநோதமான அபிப்ராயத்தை கூறியிருப்பார்கள், எனவே அனைத்து இமாம்களின் வன்மமான கருத்துக்களை ஒருவர் தொகுத்து அவற்றை ஏற்று செயல்பட எண்ணினார் என்றால் பிறகு தீன் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அந்த நூலை எரித்துவிடும்படி கலீஃபா கட்டளையிட்டார்’ .

     இமாம் அல்அவ்ஸயி(ரஹ்) கூறியிருப்பதாவது, ‘அறிஞர்களின் கூற்றுகளில் விநோதமான அபிப்ராயங்களை தேடுபவர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிடுகிறார். குறிப்பிட்ட ஓர்அறிஞர் மிகுந்த அறிவு பெற்றவராகவும் மிக்க மதிப்பு உடையவராகவும் இருக்கும் அதேவேளையில் வன்மம் நிறைந்த சில கருத்துக்களை கூறுபவராகவும் இருக்கக்கூடும். எனவே ஒவ்வொரு அறிஞர்களும் கூறிய வன்மமான கருத்துக்களை திரட்டி அதை புதிய மத்ஹபாக ஆக்குவதற்கு ஒருவர் முனைந்தால் பிறகு அதிலிருந்து நீங்கள் எத்தகைய இல்மை பெற்றுக்கொள்ள முடியும்!’(நூல் : இஜ்திஹாத் மேற்கொள்வதற்கு எவருக்கு உரிமையிருக்கிறது, ஆசிரியர் : ஸல்மான் அல் உதஹ்)

 குறிப்பிட்ட சிலர் நன்கு படித்தவர்களாகவும் சிறந்த நினைவாற்றல் உள்ளவர்களாகவும் அறிவுத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கக்கூடும், எனினும் அவர்களிடமிருந்து நாம் இல்மை  பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர்களிடம் விஸ்வாசம் கொள்ளலாம் என்றும் இதற்கு அர்த்தம் கிடையாது. கடந்த காலத்தில் மகத்தான அறிவை பெற்றிருந்தவர்களும் பெரும்பெரும் ஃபிக்ஹ் நூற்களை எழுதியவர்களும்கூட இஸ்லாத்தைவிட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்! அவர்களுடன் ஒப்பிடும்போது இன்றைக்கு விந்தையான கருத்துக்களை கூறும் அறிஞர்கள் கற்றுக்குட்டிகளாகவே இருக்கிறார்கள்!ஹ

     இப்னு ருஷ்த் அவார்ரிஸ் (கி. பி. 1126-1198) மாலிக் மத்ஹபை பின்பற்றும் அறிஞராக இருந்தார், அவர் ‘பிதாயத் அல்முஜ்தஹித் வ நிஹாயத் அல்முக்தாயித் ’ என்ற பிரபலமான ஃபிக்ஹ் நூலை எழுதியிருந்தார், எனினும் அது தத்துவ நூலாக ஆகிவிட்டதால் இஸ்லாத் திலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்பதை அனேகமானவர்கள் அறிவார்கள். பிரபலமான விஞ்ஞானியாகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய இப்னு ஸினா போன்றவர்கள் இறுதியில் இந்த உலகம் அழிவற்றது என்றும் என்றென்றும் நிலையானது என்றும் சிந்தித்ததின் மூலமாக மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டவர்களில் (முர்தத்) ஆகிவிட்டார்கள்!

     அறிவில் மிகைத்தவர்களை நாம் காணலாம், எனினும் தக்வா என்ற நிபந்தனையை அவர்கள் நிறைவுசெய்தால் ஒழிய அவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்வதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மற்றவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்ளுதல் என்ற விவகாரத்தில் கீழ்க்கண்ட சில முக்கியமான கருத்துக்கள் ஒருவரின் தக்வாவை அறிந்து கொள்வதற்கு உறைக்கல்லாக பயன்படுகிறது :

  • அவர் இஸ்லாத்தின் திட்டவட்டமான விஷயங்களுக்கு எதிராக இருக்கக்கூடாது

  • அவருடைய பேச்சுக்களுடன் அவருடைய செயல்பாடுகள் முரண்படக்கூடாது

  • அவர் இரட்டை முகம் கொண்டவராக இருக்கக்கூடாது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது : இரட்டை முகம் கொண்டவர்கள்தான் மனிதர்களில் மிகவும் தீயவர்கள் ஆவார்கள்! இத்தகையவர்கள் இவர்களிடம் ஒரு முகத்தையும் அவர்களிடம் ஒருமுகத்தையும் காண்பிப்பார்கள் (நூல் : புஹாரி, முஸ்லிம்)

  • அஹ்காம் ஷரீஆவில் அவர் வரம்புமீறக்கூடாது பின்வரும் ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பது போல அவர் நிஃபாக் தன்மையை கொண்டவராக இருக்கக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘நயவஞ்சகரின் அறிகுறிகள் மூன்றாகும் : பேசும்போது பொய்யுரைப்பார்; வாஹக்குறுதி அளித்தால் அதற்கு மாறுசெய்வார்; அமானிதமாக ஏதேனும் ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வார். அவர் நோன்பு நோற்றாலும் தொழுகையை நிறைவேற்றினாலும் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் (அவர் நயவஞ்சகரே!) (புஹாரி, முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘எவர் நான்கு (வகையான) தன்மைகளை பெற்றிருக் கிறாரோ அவர் நயவஞ்சகர் ஆவார், ஒருவர் இந்த நான்கு தன்மைகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்கும் நிலையில் அதிலிருந்து நீங்கிக்கொள்ளாத வரையில் அவர் நய வஞ்சகர்களில் ஒருவராகவே இருந்துவருவார் : பேசினால் பொய்யுரைப்பார்; வாக்குறுதி அளித்தால் அதற்கு மாறுசெய்வார்; ஒப்பந்தம் செய்தால் அதற்கு துரோகமிழைப்பார்; சச்சரவு செய்யும்போது கண்ணியக்குறைவாகவும் அவமரியாதையாகவும் நடந்து கொள்வார். (புஹாரி)

     நயவஞ்சக தன்மையில் இரண்டு நிலைகள் இருக்கின்றன; ஒன்று நம்பிக்கையுடன் தொடர்புடையது மற்றொன்று செயலுடன் தொடர்புடையது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இன்னு ஆமிர்(ரளி) அறிவித்துள்ள ஸஹீஹ் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

     எனது உம்மாவிலுள்ள நயவஞ்சகர்களில் பெரும்பான்மையினர் காரீகளில் (கிராத் ஓதுபவர்களில்) உள்ளவர்களாக இருப்பார்கள்! (அஹ்மது, தப்ரானி மற்றும் இதர ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பார்க்கவும் – ஸஹீஹ் அல்ஜமீ# 1203)

இமாம் அல்மனாவி(ரஹ்) ஃபய்துல் கத்ர் என்ற தனது நூலில் இந்த ஹதீஸ் பற்றி குறிப்பிட்டிருப்பதாவது : ஹஹ

     ‘எது நோக்கமாக உள்ளதோ அந்த அசலான அர்த்தத்திற்கு அப்பாற்பட்டு இவர்கள் வியாக்ஞானம் அளிப்பார்கள், அன்றியும் அதன் அர்த்தத்தை தவறான கோணத்தில் காட்டு வார்கள். (ஷரீஆ) உரையில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளை அவர்கள் மனனம் செய்திருந்த போதும் அது சுட்டிக்காட்டும் அர்த்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) காலத்தில் இருந்த நயவஞ்சகர்கள் இத்தகைய தன்மைகளையே பெற்றிருந்தார்கள்’

இமாம் அஷ்ஷமக்ஷரி(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘நபி(ஸல்) அவர்கள் நிஃபாக் (நயவஞ்சகத்தன்மை) பற்றி குறிப்பிடும்போது ரியா (மற்றவர் களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக வணக்கவழிபாடு தொடர்பான செயல்பாடுகளை மேற் கொள்ளுதல்) என்ற அர்த்தத்திலேயே கூறியுள்ளார்கள். ஏனெனில் உள்ளரங்கமாக நம்பிக்கை மற்றும் வெளியரங்கமான செயல்பாடு ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கின்றன என்பதை (நிஃபாக், ரியா ஆகிய) இந்த இரண்டு தன்மைகளும் சுட்டிக்காட்டுகின்றன’

     ‘நபி(ஸல்) அவர்கள் நிஃபாக் பற்றி கூறும்போது செயல்பாடுகள் தொடர்பான நிஃபாக் தன்மையை சுட்டிக்காட்டுவதை நோக்கமாக கொண்டிருந்தார்களே ஒழிய குஃப்ர் தொடர்பான நிஃபாக் தன்மையை சுட்டிக்காட்டுவதை நோக்கமாக கொள்ளவில்லை’

     ‘நயவஞ்சகர்கள் உள்ளார்ந்த முறையில் ஈமான் கொண்டிராதபோதும் தங்களது உயிர்கள், உடமைகள் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்வதற்காக ஈமான் கொண்டிருப்பதை போல வெளியில் காட்டிக்கொள்வார்கள். ரியா எனும் பகட்டுக்காட்டும் தன்மையை கொண்டுள்ள மனிதர் இம்மையில் குறிப்பிட்ட சில ஆதாயங்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் மறுமையில் நற்கூலியை பெற்றுத்தரும் செயல்பாடுகளை மேற்கொள்வார். (வழி கேட்டில் உள்ள) காரீ ஒருவர் தன்னுடைய அறிவையும் செயலையும் மக்கள் புகழ்ந்து கூற வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டிருந்தபோதும் தான் அல்லாஹ்(சுபு)வின் நற்கூலியின் பொருட்டே செயல்படுவதாக வெளியில் கூறிக்கொள்வார். இந்த மூன்று வகையான மனிதர்களும் பொதுவாக ஒருதன்மையை பெற்றிருப்பார்கள் & அவர்களுடைய உள்ளரங்கமான நோக்கமும் வெளியரங்கமான செயல்பாடும் வேறுபட்டதாக இருக்கும்’

     இதன்காரணமாகவே இமாம் அல்கஸ்ஸாலி(ரஹ்) பின்வருமாறு கூறியிருக்கிறார்,

     கீழ்க்கண்ட நான்கு தன்மைகளை கொண்டுள்ள காரீகளிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

  • அல்&அமல் (உலக ஆதாயத்தை அதில் நோக்கமாக கொண்டிருப்பார்கள்)

  • அல்&அஜ்லா (தனது செயல்களுக்குரிய ஆதாயத்தை இம்மையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசரப்படுவார்கள்)

  • அல்&கிப்ர் (தற்பெருமையும் பெரும் அகம்பாவமும் கொண்டவர்களாக இருப்பார்கள்)

  • அல்&ஹஸது (பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் பெற்றுள்ளவற்றை தான் பெறவேண்டும் என்றும் மற்றவர்கள் பெற்றுள்ளதை அவர்கள் இழந்துவிடவேண்டும் என்றும் விரும்புவார்கள்)

     உலக ஆதாயத்தை தேடுவதில் வழிகேட்டில் இருக்கும் காரீ இஸ்லாத்திற்கு முரண்பட்ட வற்றையும் ஒழுக்க மாண்புகளுக்கு புறம்பானவற்றையும் மேற்கொள்வார். பொய்யுரைத்தல், தூற்றுதல், இழிவுபடுத்துதல், ஏமாற்றுதல் போன்ற தீயசெயல்பாடுகள் அனைத்தையும் கொடுங் குற்றவாளிகள் வெட்கி தலைகுணியும் அளவுக்கு மோசமான முறையில் மேற்கொள்வார்.

இமாம் அந்நவவி(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘(வழிகேட்டில் இருக்கும்) காரீ, உலமா ஆகியவரை தவிர்த்து மற்ற எவரும் என்னை இழிவு படுத்துவார்கள் என்று நான் அஞ்சவில்லை’

     அவருடைய இந்த கூற்றை செவியுற்றவர்கள் தங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்தி னார்கள், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது,

     ‘இந்த கூற்று அசலாக என்னுடையதல்ல, அது இப்ராஹிம் அந்நகய்(ரஹ்ஹ) கூறியதாகும்’

அத்தா(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘காரீகள் குறித்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்! (முக்கியத்துமற்ற சிறிய விஷயத்தில்) நான் அவர்களில் ஒருவருடன் கருத்துவேறுபாடு கொள்ளும் பட்சத்தில், உதாரணமாக ஒருபழத்தை பற்றி கூறும்போது ‘அது இனிப்பாக இருக்கிறது’ என்று நான் கூறினால் ‘அது அழுகிவிட்டது’ என்று அவர்கள் கூறுவார்கள்! பிறகு எனது இரத்தத்தை ஓட்டும் பொருட்டு (எனக்கு மரண தண்டனை அளிக்கும் பொருட்டு)ஹ கொடுங்கோலரான ஸுல்தானிடம் (சென்று) வழிவகை தேடுவார்கள்!’

அல்ஃபுதைல் இப்னு இய்யாது(ரஹ்) தனது புதல்வரிடம் கூறியதாவது :

     ‘காரீகளிடமிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ள ஒருவீட்டை விலைகொடுத்து வாங்கு வாயாக! அவர்களிடமிருந்து எனக்கு என்ன தேவை இருக்கிறது?! என்னிடமுள்ள ஒருகுறை வெளிப்பட்டால் அப்போது எனது மரணத்திற்கு அவர்கள் வழிவகை தேடுவார்கள்! என்னிடமுள்ள ஒரு நற்குணம் பற்றி மற்றவர்கள் வெளிப்படையாக பேசினால் அப்போது என்மீது பொறாமை கொள்வார்கள்! மக்களுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும்போது நிச்சயமாக அவர்கள் அகம்பாவம் கொண்டவர்களாகவும் உதவி மனப்பான்மை அற்றவர் களாகவும் இருப்பதை நீ காண்பாய். மற்றவர்கள் அனைவரைவிடவும் தங்களுடைய தொழுகை சிறந்தது போன்று அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். சுவனம் செல்வதற்கும் நரக நெருப்பி லிருந்து விடுதலை அடைவதற்கும் நன்மராயம் கூறப்படும் வகையில் அவர்களுக்கு வஹீ அருளப் பட்டுள்ளதை போன்று நடந்துகொள்வார்கள். தங்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் நாடும் அதேவேளையில் மற்றவர்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் நாடுவார்கள். தீவிரமான தற்பெருமைக்காரர்களாகவும் பெரும் அகம்பாவம் கொண்டவர்களாகவும் இருந்தபோதும் நைந்துபோன பழய ஆடையை அணிந்து கொண்டு அடக்கம் நிறைந்தவர்கள் போன்று எளிமையுடன் காட்சியளிப்பார்கள்!’  (அல்மனாவி எழுதியுள்ள விரிவுரை நூலின் பாகம் 2 பக்கம் 80-81)

      மதச்சார்பற்ற இஸ்லாத்தை முன்மொழிபவர்களின் தர்க்கவாதங்களை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் சிந்திக்கவேண்டும், நாம் அவர்களின் கண்ணோட்டங்களை பின்பற்றுவோம் எனில் இஸ்லாமிய உலகத்திலுள்ள கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும், முஸ்லிம் நிலப்பரப்புகள் துண்டாடப்பட்டிருப்பதையும், காலனியாதிக்க குஃப்ஃபார் நமது நிலங்களை ஆக்கிரமித்திருப்பதையும் அங்கீகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! அழைப்புப் பணி மேற்கொண்டுள்ள உண்மையான முஸ்லிம்களை கைது செய்வதையும் அவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்குவதையும் அங்கீகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! இதன் விளைவாக நாம் இம்மையிலும் மறுமையிலும் பெரும் இழப்புகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்!

ஸஹீஹ் அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டு, ஹஹஅத்தப்ரானியின் அல்கபீர் வல் பஸாரில் பதிவு செய்யப்பட்டுள்ள அவ்ஃப் இன்னு மாலிக்(ரளி) அறிவிப்பில்‎ கூறப்பட்டிருப்பதாவது :

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     எனது உம்மாவினர் எழுபதிற்கும் மேற்பட்ட பிரிவுகளாக ஆகிவிடுவார்கள்! அவர்களில் தங்கள்  சொந்த அபிப்ராயத்தின் அடிப்படையில் விவகாரங்களை மதிப்பிடும் மனிதர்கள்தான் எனது உம்மாவின் மீதுள்ள மிகப்பெரிய சோதனையாக இருப்பார்கள்! எனவே தடைசெய்யப் பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாகவும் அனுமதிக்கப்பட்டவற்றை தடைசெய்யப்பட்ட வையாகவும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்! இந்த ஹதீஸ் அல்ஹைஸமியின் மஜ்மா அஸ்&ஸவாயித் என்ற நூலின் கிதாபுல் இல்ம் என்ற முதற்பாகத்தில் அத்தக்லித் வல் கியாஸ் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

அபூஸியாது இப்னு ஹுளைர் அறிவிப்புத்தொடர் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸை அபூஷமா பதிவுசெய்துள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது :

     ‘இஸ்லாத்தை அழிக்கக்கூடியது எது என்பதை நீர் அறிவீரா?’ என்று உமர்(ரளி) என்னிடம் வினவினார். ‘இல்லை’ என்று நான் கூறினேன். ‘ஓர் அறிஞர் (சட்டத்தில்) ஒரு தவறு செய்கிறார், மக்களின் வழிகேட்டை நாடுகின்ற நயவஞ்சகர்கள் தங்களின் எழுத்தை கொண்டு அதில் விவாதம் செய்கிறார்கள்; அமீர்கள் அதை கொண்டு ஆட்சிசெய்கிறார்கள்!’ என்று கூறினார்.
 
 
Sources

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 3

கிலாஃபாவின் உட்பிரிவு விவகாரங்களில் அறிஞர்கள் கருத்துவேறுபாடுகள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இஸ்லாத்தில் அரசியல் இல்லை என்று அர்த்தமா?!
 
 
 

     கிலாஃபா தொடர்பான உட்பிரிவு விவகாரங்களில் பாரம்பரிய உலாமாக்கள் பல்வேறு கருத்துவேறுபாடுகளை கொண்டுள்ளார்கள் என்பதால் அது இஸ்லாத்தில் திட்டவட்டமான விவகாரமாக இல்லை என்பது மற்றொரு விந்தையான கண்ணோட்டமாக இருக்கிறது. அதாவது அரசியல் தொடர்பான அனைத்து விவகாரங்களும் திட்டவட்டமற்றது என்பதால் இஸ்லாத்தின் ஆட்சியமைப்பு அம்சங்கள் திட்டவட்டமானதாக இல்லை என்பது இதன் பொருளாகும்!

     தொழுகையின் உட்பிரிவு விவகாரங்களில் அறிஞர்கள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ளார்கள் என்பதால் தொழுகையின் வாஜிபை தள்ளுபடி செய்துவிடலாம் என்பதை போன்றதுதான் இந்த கண்ணோட்டமாகும். வாஜிபு தொடர்பான உட்பிரிவில் கருத்து வேறு பாடுகள் இருந்தபோதும் அதன் முக்கியமான அடிப்படைகள் திட்டவட்டமானவையாக இருக்கின்றன என்பதால் அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது கேலிக்கும் நிந்தனைக்கும் உரிய கருத்தாகவே இருக்கிறது.

     ஆட்சியமைப்பு தொடர்பான கண்ணோட்டமும் இதுபோன்றதுதான். சொல்வழக்கு தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் சட்டரீதியான இக்திலாஃப் (கருத்து வேறுபாடுகள்) ஆகியவை எத்தகையதாக இருந்தபோதும் ஆட்சியமைப்பு தொடர்பாக தெளிவான திட்ட வட்டமான அஹ்காம் ஷரீஆ இருக்கின்றன, அதை தரீக்கா (இஸ்லாத்தின் வழிமுறை – method) என்று அல்லது நிழாம் (இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு system of Islam) என்று அழைக் கிறீர்களா அல்லது வேறுவிதமாக அழைக்கிறீர்களா என்பது இங்கு முக்கியமல்ல மாறாக, இந்த அஹ்காம் ஷரீஆவைஹ இன்றைய முஸ்லிம் நாடுகளின் அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் கவனத்திற்குரிய விஷயமாகும்!

     ஆட்சியமைப்பு தொடர்பான சில திட்டவட்டமான அஹ்காம் ஷரீஆவை இப்போது நாம் ஆய்வு செய்வோம், இந்த சட்டங்களின் உட்பிரிவுகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும் என்பது உண்மையே. இந்த சட்டங்கள் குறைந்தபட்சம் திட்டவட்டமான அர்த்தத்தை கொண்டுள்ளன, அவற்றில் சில அறிவிப்பு ரீதியாக திட்டவட்டமானமானவையாக இருக்கின்றன. அவற்றிற்கு மத்தியிலுள்ள வேறுபாடுகள் தெளிவாக அறியப்பட்டதுதான், அவற்றில் சிலவற்றை ஒருவர் மறுக்கும் பட்சத்தில் அது வெளிப்படையான பாவத்தின்பால் இட்டுச்செல்லும், இன்னும் திட்டவட்டமான அறிவிப்பாகவும் (Qata’i subooti – definite in transmission) திட்டவட்டமான அர்த்தத்தை கொண்டதாகவும் (Qata’i Dalalah – definite in meaning) உள்ளவற்றை மறுத்தால் அது குஃப்ரின்பால் இட்டுச்செல்லும். ஆட்சியமைப்பு தொடர்பான திட்டவட்ட மான அஹ்காம் ஷரீஆ பின்வருமாறு :

  • கலீஃபாவை பெற்றிருக்கவேண்டியது வாஜிபாகும்.

 இவ்விவகாரம் தொடர்பாக இடம்பெற்றுள்ள பன்முக ஆதாரங்களையும் அறிஞர்களின் மேற்கோள்களையும் மீண்டும் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை என்பதால் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுதல் போதுமானதாக இருக்கும். கலீஃபாவிற்குரிய நிபந்தனைகளில் சிலவற்றில் அறிஞர்கள் கருத்துவேறுபாடுகள் கொண்டுள்ளார்கள், அவற்றில் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகள் திட்டவட்டமானதாக இருக்கின்றன.

 இமாம் அந்நவவி(ரஹ்) (கி. பி. 1278ல் மரணமுற்றார்) கூறியிருப்பதாவது :

 ‘கலீஃபாவை தேர்வுசெய்ய வேண்டியது முஸ்லிம்கள்மீது வாஜிபாக இருக்கிறது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளார்கள்’ (அந்நவவியின் ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 12 பக்கம் 205)

  ‘இஸ்லாத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை வெட்டவெளிச்சமாக்குதல்’ என்ற நூலின் இரண்டாம்   பாகத்தில் இது தொடர்பான மற்ற ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

  • கலீஃபாவிற்கு பைஆ செய்வது வாஜிபாகும்.

     இந்த விவகாரத்தின் உட்பிரிவுகள் தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருப்பது உண்மையே. http://www-personal.umich.edu/~luqman/Belief/Khilafah/eleven.html என்ற இணைய தளத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

  • மாகாணங்களை ஆட்சிசெய்யும் வாலி (ஆளுநர்கள்) மற்றும் நகரங்களை ஆட்சிசெய்யும் ஆமில் (மேயர்கள்) ஆகியவர்களை நியமிப்பதற்கு கலீஃபாவிற்கு அதிகாரமுண்டு என்பதற்கு சுன்னாவிலும் இஜ்மா அஸ்ஸஹாபாவிலும் ஆதாரம் இருக்கிறது.

  • அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் (இதுகுறித்து ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது) இது கலீஃபா, வாலி, ஆமில் ஆகிய அனைவர்மீதும் வாஜிபாகும்.

  • ஒருகலீஃபாவிற்கு அதிகமாக இருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது (இதுகுறித்து ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது)

  • ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு கலீஃபாவிற்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்கு சுன்னா மற்றும் இஜ்மா அஸ்ஸஹாபா ஆகியவற்றில் தெளிவான ஆதாரம் இருக்கிறது. எனினும் நீதித் துறையின் தூணாக விளங்கும் பல்வேறு வகையான நீதிபதிகளின் தகுதிகள் போன்ற உட்பிரிவுகள் தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.

  • குற்றவியல் தண்டனை சட்டங்களை (hudud) நடைமுறைப்படுத்தவேண்டியது வாஜிபாகும். பல்வேறு தண்டனை சட்டங்களும் கிஸாஸ் தொடர்பான சட்டங்களும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • ஜிஹாது மேற்கொள்ளுதல் வாஜிபாகும். குர்ஆனில் ஜிஹாது தொடர்பாக 119 வசனங்கள் அருளப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் அது நன்கு அறியப்பட்ட விஷமாக இருக்கிறது.

  • ஸகாத் வசூலித்து அதற்கு உரிமையுள்ளவர்களிடம் விநியோகம் செய்யவேண்டியது வாஜிபாகும். ஸகாத்தை பெறுவதற்கு உரிமையுள்ள எட்டு பிரிவினர்களில் அரசின் சார்பாக ஸகாத் வசூலிப்பவர் ஒருவராக இருக்கிறார் என்பது குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இதற்கு சுன்னாவிலும் இஜ்மா அஸ்ஸஹாபாவிலும் ஆதாரம் நிறுவப்பட்டுள்ளது. ஸகாத் கொடுக்க மறுத்தவர்களுடன் அபூபக்கர்(ரளி) போரிட்டார் என்பது பிரபலமாக அறியப்பட்ட செய்தியாகும்

  • சட்டங்களை ஏற்று அமல்படுத்துவதற்கு கலீஃபா அதிகாரம் பெற்றுள்ளார்,  சட்ட ரீதியாக கருத்துவேறுபாடு உள்ள விவகாரங்களில் அவர் குறிப்பிட்ட சட்டத்தை ஏற்று அமல்படுத்தும்போது கலீஃபாவின் அபிப்ராயம் அனைவரையும் கட்டுப்படுத்தும். அதிகாரத்தை கொண்டுள்ளவர்களுக்கு (உலில் அம்ர்) கீழ்படியவேண்டும் என்பது குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது, அன்றியும் கலீஃபாவிற்கு கட்டுப்பட்டு நடப்பது வாஜிபு என்பதை பல்வேறு ஹதீஸ்கள் சுட்டிக்காட்டுகின்றன. சட்டத்தை ஏற்று அமல் படுத்துவதை பொருத்தவரை அதற்கு இஜ்மா அஸ்ஸஹாபாவில் ஆதாரம் இருக்கிறது.

     இவை அறிஞர்களின் ஒருமித்த கருத்து அடிப்படையிலுள்ள ஆட்சியமைப்பு தொடர்பான பல்வேறு சட்டங்களில் சிலவாகும். தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, நிக்காஹ், ஒப்பந்தங்கள் மற்றும் இதர அஹ்காம் ஷரீஆவில் தங்களுடைய விளங்கிக்கொள்ளுதல் அடிப்படையில் வெவ்வேறு முஜ்தஹிதின்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களை கொண்டிருப்பது போலவே அரசு தொடர்பான சில விவகாரங்களிலும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டுள் ளார்கள். இவற்றில் கலீஃபாவிற்குரிய நிபந்தனைகள், ஷூரா மேற்கொள்ளுதல், மஹ்காமத் அல்மழாளிம்ஹ (அநீதி செயல்பாடுகள் தொடர்பான நீதிமன்றம்) போன்ற விவகாரங்கள் அடங்கும். ஆட்சியமைப்பின் உட்பிரிவுகள் தொடர்பாக பாரம்பரிய அறிஞர்களின் வேறுபட்ட கண்ணோட்டங்கள் கீழே குறிப்படப்பட்டுள்ளன :

மஜ்லிஸ் அஷ்ஷூரா :

     அல்மாவர்தி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் மூன்று நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும் : அவர் நீதி செலுத்துபவராக இருக்கவேண்டும்; கலீஃபா நல்ல அம்சங்களை பெற்றவரா அல்லது தீயஅம்சங்களை பெற்றவரா என்பதை சீர்தூக்கிப்பார்த்து வேறுபாடுகளை அறிந்துகொள்வதற்குரிய அறிவுத்திறனை பெற்ற வராக இருக்கவேண்டும்; சிறந்த தலைவரை தேர்வுசெய்யும் அளவுக்கு அவர் போதுமான ஞானத்தையும் தீர்மானிக்கும் திறனையும் பெற்றவராக இருக்கவேண்டும்’

     அல்ஜுவைனி(ரஹ்) கூறியிருப்பதாவது : ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் நான்கு நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும். அவர் ஆணாக இருக்க வேண்டும்; அறிவுத்திறன் பெற்றவராக இருக்கவேண்டும்; சராசரி மனிதரைவிட உயர்வானவராக இருக்கவேண்டும்;  முஸ்லிமாக இருக்கவேண்டும்’

     அப்துல் ஜப்பார்(ரஹ்) கூறியிருப்பதாவது : ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுபப்பினராக உள்ள ஒவ்வொருவரும் எவரை கலீஃபாவாக தேர்வுசெய்ய வேண்டும் என்பதில் அறிவித்திறன் பெற்ற வராக இருக்கவேண்டும். குறிப்பாக இஸ்லாமிய அறிவு பெற்றவராகவும் பொதுவாக ஞானமும் தீர்மானிக்கும் திறனும் உடையவராகவும் இருக்கவேண்டும்’

     அல்பாக்தாதி(ரஹ்) கூறியிருப்பதாவது : ‘மதிநுட்பத்துடன் தேர்வுசெய்யும் திறன்பெற்றுள்ள மனிதர்களிலிருந்து கலீஃபாவும் மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்களும் தேர்வுசெய்யப்பட வேண்டும்’
 
Sources

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 2

 
 
 
அறிஞர்களின் கருத்துக்களை தவறாக மேற்கோள்காட்டுதல் :
     உண்மைக்கு புறம்பானவற்றை கூறி மக்களை ஏமாற்றுவதற்கும் கொடுங்கோண்மை ஆட்சியாளர்களை அங்கீகரிப்பதற்கும் முக்கியமான சிலஅறிஞர்களின் பெயர்களையும் அவர்கள் எழுதிய நூற்களின் பெயர்களையும் மேற்கோள் காட்டுதல் என்பது எப்போதும் பயனளிக்கும் தந்திரமாகவே இருந்துவருகிறது. அந்த அறிஞர்களின் கருத்துக்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது அவசியமானது என்று கருதுகிறேன், அவர்களின் பெயர்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் பட்சத்தில் மிகுந்த வருத்தம் அடைவார்கள்!
     அவர்களின் சில கூற்றுகள் தெளிவான முறையில் தவறாக வியாக்ஞானம் செய்யப் பட்டுள்ளன. ‘கிலாஃபா என்பது அறிவுரீதியான தேவையாக இருக்கிறதே ஒழிய அது ஷரீஆ உரையின் மூலமாக நிரூபிக்கப்படவில்லை’ என்ற கூற்றை அல்மாவர்தி அல்லது மற்ற சில அறிஞர்கள் கூறியுள்ளார்கள் என்று மேற்கோள் காட்டுவது போன்றவை இதிலடங்கும். இத்னா அஷரி அஷ்ஷியா என்ற அறிஞர் கலீஃபா என்பவர் அல்லாஹ்வினால் தெய்வீகமான முறையில் நியமனம் செய்யப்படுகிறார் என்று நம்பிக்கை கொண்டுள்ளது போன்றும், கலீஃபாவை நியமனம் செய்வது வாஜிபு என்பது தொடர்பான நிரூபனம் அறிவுரீதியானது என்று சில தத்துவ அறிஞர்கள் கருதுவது போன்றும் அல்மாவர்தி போன்ற சில அறிஞர்கள் கிலாஃபா குறித்து மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே! எனினும் இந்த கண்ணோட்டங்கள் சட்டரீதியானவை என்று அவர்கள் கூறுகிறார்கள் என்று இதற்கு பொருளல்ல. கலீஃபா அல்லாஹ்வினால் நியமனம் செய்யப்படுகிறார் என்பதால் அவர் மாசற்றவராக (மஃஸும்) இருக்கவேண்டும் என்ற இத்னா அஷரி அஷ்ஷியாவின் கண்ணோட்டத்தை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதற்காக அது சட்டரீதியான கண்ணோட்டம் என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?!
இப்னு கல்துன்(ரஹ்) கூறுவதாவது :
     ‘இமாம் பதவி என்பது அவசியமான ஒன்றாகும். முஹம்மது(ஸல்) அவர்களுடன் இருந்த மனிதர்களின் ஒருமித்த கருத்தும் அவர்களை பின்தொடர்ந்து வந்த இரண்டாவது தலைமுறை மனிதர்களின் ஒருமித்த கருத்தும் மார்க்க சட்டங்களின் அடிப்படையில் இமாமத் இருக்க வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. நபி(ஸல்) அவர்களின் மரணத்தின்போது அவர்களை சூழயிருந்த மனிதர்கள் அபூபக்கருக்கு(ரளி) பைஆ கொடுப்பதற்கும் மக்களின் விவகாரங்களை மேற்பார்வையிடும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பதற்கும் முனைந்தார்கள். அதற்கடுத்து வந்த காலகட்டத்திலும் இவ்வாறே நிகழ்ந்தது. எந்தவொரு காலகட்டத்திலும் குழப்பமான நிலையில் வாழுமாறு மக்கள் விட்டுவிடப்படவில்லை! மக்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் நிலைமை இவ்வாறு இருந்துது என்பது இமாம் பதவி அவசியமானது என்பதை நிரூபனம் செய்கிறது’
     ‘இமாமத் அவசியமானது என்பதை அறிவு சுட்டிக்காட்டுகிறது என்றும் இதில் நிலவும் ஒருமித்த கருத்து என்பது அறிவிற்குரிய அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே ஏற்படுகிறது என்றும் சிலர் அபிப்ராயம் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது போல, சமூகம் என்ற ரீதியில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய தேவை மனிதர்களுக்கு இருக்கிறது என்பதும் அவர்கள் தாங்களாகவே வாழ்வதும் நிலைத்திருப்பதும் சாத்தியமற்றது என்பதும் இமாமத்தின் தேவையை அவர்களுக்கு அறிவுரீதியாக உணர்த்துகிறது. மனிதர்கள் சமூகரீதியாக ஒருங்கிணைக் கப்படும்போது ஏற்படும் ஒத்திசைவற்ற பரஸ்ப்பர நோக்கங்களின் காரணமாக அவர்களுக்குள் உடன்பாடற்ற போக்குகள் நிலவுதல் என்பது தவிர்க்கமுடியாத விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது. அடக்கியாளும் ஆதிக்கத்தை கொண்டுள்ள ஓர்ஆட்சியாளர் இல்லாவிடில் குழப்பம் விளைவதற்கும் பெரும் இடர்பாடுகள் ஏற்படுவதற்கும் வழியேற்படுத்தி இறுதியில் மனித இனத்தை பேரழிவின்பால் இட்டுச்சென்றுவிடும்! எனவே மனித இனத்தை பாதுகாத்தல் என்பதே மார்க்க சட்டங்களின் பிரதானமான நோக்கமாக விளங்குகிறது!’
     ‘அல்லது (கிலாஃபா என்பது அறிவுரீதியான தேவையாக இருக்கிறது என்ற குற்றச் சாட்டிற்கு எதிராக) அறிவின் ஆளுமை அடிப்படையில் அநீதி தடுக்கப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு தனிமனிதரும் அறிந்துகொள்ளுதல் சமூகத்தில் நிலவும் உடன்பாடற்ற சூழலை நீக்குவதற்கு போதுமானது என்று நாம் கூறலாம். இவ்வாறு கூறினால் பிறகு, உடன்பாடற்ற சூழலை நீக்குதல் என்பது ஒருதருணத்தில் மார்க்க சட்டங்களின் மூலமாகவும் மற்றொரு தருணத்தில் இமாம் பதவியின் மூலமாகவும் ஏற்படுகிறது என்ற அவர்களுடைய கூற்று தவறானதாக ஆகிவிடும். அதிகாரமிக்க தலைவர் ஒருவர் இருப்பதின் மூலமாகவும் அல்லது இமாம் பதவியின் மூலமாக ஏற்படுவது போலவே, பரஸ்ப்பர அநீதத்தின் விளைவாக முரண் பாடான நிலையை ஏற்படுத்துவதிலிருந்து மக்கள் விலகியிருப்பதின் மூலமாகவும் உடன்பாடற்ற சூழல் நீக்கப்படலாம். எனவே இந்த கருத்தின் அடிப்படையில் ஏற்படும் அறிவு ரீதியான நிரூபனம் உறுதியான ஒன்றல்ல. (இமாம் பதவி) தேவை என்பது மார்க்க சட்டங்கள் அடிப் படையில் சுட்டிக்காட்டப்படுகிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது, அதாவது நாம் முன்பு குறிப்பிட்டிருப்பதை போல பொதுவாக ஏற்படும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இமாம் பதவி தேவை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது’  (நூல் : அல்முகதிமா, அத்தியாயம் 3)
     இப்னு கல்துனும் மற்ற சில அறிஞர்களும் இமாம் ஒருவர் தேவை என்ற வாஜிபு தொடர்பாக அறிஞர்களின் மாறுபட்ட கண்ணோட்டத்தை குறிப்பிட்டுள்ளார்கள் என்பதற்கு அவர்கள் இந்த கண்ணோட்டத்தை சட்டரீதியானது என்று ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று பொருளல்ல.
இதுபற்றி இப்னு கல்துன்(ரஹ்)ஹ மேலும் கூறியிருப்பதாவது :
     ‘அறிவு ரீதியாகவோ அல்லது மார்க்க சட்டங்கள் ரீதியாகவோ இமாம் பதவி தேவை யில்லை என்று கூறுவதின் மூலமாக சில அறிஞர்கள் விதிவிலக்கான நிலையை மேற்கெண்டு இருக்கிறார்கள்.ஹஹ இத்தகைய நிலையை மேற்கொண்டுள்ளவர்களில் முஃதஸிலா, அல்அஸாம், ஆகிய குழுவினரும், காரிஜாக்களில் சிலரும் மற்றவர்களும் அடங்குவார்கள். இவர்கள் மார்க்க சட்டங்களை கடைபிடித்தல் மட்டுமே போதுமானது என்று கருதுகிறார்கள். முஸ்லிம்கள் நீதியை ஏற்றுக்கொண்டு இறைசட்டங்களை கடைபிடித்து ஒழுகும்போது இமாம் இருப்பது தேவையற்றது என்பதோடு அவருடைய பதவியும் தேவையற்றதாக ஆகிவிடுகிறது என்று இவர்கள் கருதுகிறார்கள். பொதுவான ஒருமித்தகருத்து அபடிப்படையில் (இவ்வாறு வாக்கு வாதம் செய்யும்) இவர்களின் கருத்திற்கு மறுப்பு கூறப்படுகிறது’(நூல் : அல்முகதிமா, அத்தியாயம் 3)
 மேலும் இப்னு கல்துன்(ரஹ்) குறிப்பிட்டிருப்பதாவது :
     ‘இமாமத் அவசியமானது என்பதை அறிவு சுட்டிக்காட்டுகிறது என்றும் இதில் நிலவும் ஒருமித்த கருத்து என்பது அறிவிற்குரிய அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே ஏற்படுகிறது என்றும் சிலர் அபிப்ராயம் கூறுகிறார்கள். ஒருமித்த கருத்து என்பதை அவர்கள் மறுஹக்கவில்லை மாறாக அறிவு ரீதியாக அறிந்து கொள்ளப்படுவதற்கு அது இணக்கமாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்’
        ‘ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்கள் ஆகியவர்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் இமாமை நியமனம் செய்வது வாஜிபு என்பதை ஒவ்வொருவரும் அறிந்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னர் அவர்களின்(ஸல்) தோழர்கள் அபூபக்கரை(ரளி) தங்களின் கலீஃபாவாக நியமனம் செய்வதில் விரைந்து செயல்பட்டார்கள். அதன்பின்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் முஸ்லிம்கள் கலீஃபா ஒருவரை பெற்றிருந்தார்களே ஒழிய எந்தவொரு கால கட்டத்திலும் குழப்பான நிலையில் அவர்கள் விட்டுவிடப்படவில்லை. இது இமாம் (கலீஃபா) ஒருவரை நியமிக்கவேண்டியது கட்டாயம் என்பதற்குரிய அறிஞர்களின் ஒருமித்தகருத்து என்றே கருதப்படுகிறது’ (நூல் :  அல்முகதிமா, பக்கம் 210)
 
 
Sources

Nov 3, 2015

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 1


 


இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தெளிவான சாதகமாக இருக்கும் வகையில் இந்த தருணத்தில்  இஸ்லாத்தின் அரசியல் அம்சங்கள் குறித்து சிலர் சந்தேகங்களை எழுப்ப முயற்சிப்பது மிகவும் விந்தையாக இருக்கிறது! குறைவான அறிவு பெற்றிருப்பவர்களை குழப்புவதற்கு முயற்சிக்கும் வகையில் இவர்கள் அறிஞர்களின் கூற்றுகளில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களில் பூசல்களை ஏற்படுத்திவருவதோடு அவற்றிற்கு தவறான வியாக்ஞானம் அளித்து வருகிறார்கள்! சுதந்திர சிந்தனை என்ற பெயரில் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் ஆன்மீக செயல்பாடுகளுக்குள் இஸ்லாத்தை சுருக்க முயன்ற முஹம்மது அப்துஹ் மாணவரான எகிப்தின் நவீனகால எழுத்தாளர் அலீ அப்துர் ராஸிக் (கி.பி. 1888-1966) போன்ற நபர்களிடமிருந்து இரவல் வாங்கிய வாதங்களை முன்வைத்து இவர்கள் வாக்குவாதம் செய்துவருகிறார்கள். வரையறுக்கப்பட்ட ஆட்சியமைப்பு முறை எதையும் இஸ்லாம் முன்வைக்கவில்லை என்று கூறுவதின் மூலம் முஹம்மது அப்துஹ் கிலாஃபா தொடர்பான தெளிவான வாஜிபை மறுக்கிறார்.



     ‘அல்இஸ்லாம் வ உஸூல் அல்ஹுகும்’ (இஸ்லாம் மற்றும் ஆட்சியமைப்பு விதிமுறைகள்) என்ற தனது நூலில் அவர் கூறியிருப்பதாவது :
 
 

     ‘முஸ்லிம்கள் ‘கிலாஃபத்’ என்று பொதுவாக விளங்கியுள்ள இந்த கட்டமைப்பிற்கும் இஸ்லாத்திற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. மதத்திற்கும் குறிப்பிட்ட ஆட்சி அமைப்பை கொண்டுள்ள அரசாங்கத்திற்கும் எத்தகைய தொடர்புகளும் கிடையாது! முஸ்லிம்கள் தங்களுடைய பழய அரசியல் செயலாக்க அமைப்பை உடைத்தெறிந்துவிட்டு மானுட எழுச்சிகள் மற்றும் நவீன சமுதாயங்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் புதிய கருத்தாக்கங்கள் அடிப்படையில் புதியதோர் ஆட்சியமைப்பை உருவாக்கிக்கொள்வதை தடைசெய்யும் வகையில் எத்தகைய விஷயங்களும் இஸ்லாத்தில் இடம்பெறவில்லை!
 
 
 

     மேலும் அவர் கூறுவதாவது :
 
 

     ‘இஸ்லாம் என்பது ஒரு மதமாகும், அதன் பொதுவான விதிமுறைகள் தனிமனிதரின் ஒழுக்க மாண்புகளுடன் தொடர்புடையதாக மட்டும் இருக்கின்றன என்ற அடிப்படையில் அரசியல், அதிகாரம் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. ஆகவே மதமும் ஸியாஸா  என்ற அரசியலும் வெவ்வேறுபட்ட செயற்துறைகளை சார்ந்த விஷயங் களாகும். கிலாஃபாவின் கீழுள்ள முஸ்லிம்களின் அரசியல் வரலாறு இஸ்லாத்தின் போதனை களுக்கு முரண்பட்டதாக இருக்கிறது ஏனெனில் தனிமனித ஒழுக்க மாண்புகள் என்ற வரை யறைக்குள் இயங்குவதால் இஸ்லாம் தனிமனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதையே நோக்கமாக கொண்டுள்ளது. ‘கிலாஃபத் கோட்பாடு’ என்ற போர்வையில் மதத்தை அரசியல் ஆதிக்கத்தின் பால் விரிவுபடுத்துதல் என்பது சட்ட வல்லுநர்களும் இறையியல் அறிஞர்களும் ஏற்படுத்திய புதினமாகும்!’
 
 

     அலீ அப்துர் ராஸிக் போன்றவர்கள் எழுப்பும் இதுபோன்ற கூச்சல்கள் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒன்றுதான்!நீண்ட விவாதங்களை மேற்கொள்ளாமல் இந்த வாக்குவாதத்தில் காணப்படும் தவறான அம்சங்கள் சிலவற்றை எடுத்துக்காட்டுவதற்கு மட்டுமே நான் விழைகிறேன்.
 
 
 
தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தத்தில் பூசல்களை ஏற்படுத்துதல் :



     சில அறிஞர்கள் தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்கள் என்பதால் அதன் அர்த்தத்தை திரித்து கூறும் தர்க்கவாதத்தில் அலீ அப்துர் ராஸிக் ஈடுபட்டிருக்கிறார்! தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தம் திட்ட வட்டமானதல்ல (indefenite) என்பதால் இன்றைய நாட்களில் முஸ்லிம் நாடுகளின் ஆட்சி யாளர்களாக இருப்பவர்கள் குஃப்ரை கொண்டு ஆட்சிசெய்வதை அவர் ஞாயப்படுத்த முயற்சிக்கிறார்!
 
 

     தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தம் தொடர்பான கருத்துவேறுபாடு எத்தகையதாக இருந்தபோதும், இன்றைய முஸ்லிம் நாடுகளின் அரசுகள் அல்லாஹ்(சுபு) அருளவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது திட்டவட்டமாக தடை செய்யப் பட்ட விவகாரம் என்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செயல்பாட்டை மேற்கொள்ளும் ஆட்சியாளர் காஃபிராக ஆகிவிடுகிறாரா அல்லது ஃபாஸிக்காக (வெளிப்படையாக பாவம் செய்பவர்) இருக்கிறாரா அல்லது ழாளிமாக (அநீதம் செய்பவர்) இருக்கிறாரா என்பதில் உள்ளபடியே அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
 
 

     இப்னு அல்கய்யும்(ரஹ்) கூறுவதாவது :
 

     ‘இந்த விவகாரம் தொடர்பான சரியான அபிப்ராயம் என்னவென்றால், அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஒருவர் ஆட்சிசெய்யும்போது ஆட்சியாளரின் நிலைப்பாடு அடிப்படையில் அதில்ஹ பெரும்பாவம் மற்றும் சிறுபாவம் ஆகியவை அடங்கி யுள்ளன. அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்வது வாஜிபு என்று ஒருவர் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் அவர் அதற்கு கீழ்ப்படியாமல் இருந்தால், அவருடைய செயல் தண்டனைக்குரியது என்பதை அவர் ஒப்புக்கொண்டால் அப்போது அது சிறிய குஃப்ராகும். அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்வது வாஜிபு என்பது அல்லாஹ்(சுபு)வின்ஹ சட்டம் என்பதை உறுதியாக அறிந்திருந்தபோதும் அதை பின்பற்றுவது வாஜிபு அல்ல என்றும் இதில் அவர் தனது விருப்பப்படி செயல்படலாம் என்றும் ஒருவர் கருதினால் அப்போது அது பெரிய குஃப்ராகும்’  (அல்மதாரிஜ் அஸ்ஸாலிஹீன் பாகம் 1 பக்கம் 336-337)
 
 

     இப்னு அப்பாஸின்(ரளி) பிரபலமான அபிப்ராயத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதை போன்று சிறிய குஃப்ர் என்பது இந்த இடத்தில் பாவம் என்ற அர்த்தத்தை கொண்டுள்ளது.
 

     இது குறித்து இப்னு தைம்மிய்யா(ரஹ்) கூறுவதாவது :
 
 

     ‘அல்லாஹ்(சுபு) அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றை கொண்டு ஆட்சி செய்வது வாஜிபு என்பதில் எவர் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர் சந்தேமற்ற முறையில் காஃபிர் ஆவார், அன்றியும் அல்லாஹ்(சுபு) அருளியவற்றை புறக்கணித்துவிட்டு மக்களை தனது சொந்த அபிப்ராயத்தின் அடிப்படையில் ஆட்சிசெய்வதற்கு அனுமதியுண்டு என்று எவரேனும் கருதினால் அவரும் நிச்சயமாக காஃபிராகவே இருக்கிறார். . . . எனவே ஒட்டுமொத்தமாக உம்மாவின் விவகாரங்களில் எவை பொதுவானவையாக இருக்கின்றனவோ அவற்றில் குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றை தவிர்த்து மற்றவற்றை கொண்டு ஆட்சிசெய்வதற்கு அல்லது தீர்ப்பு வழங்குவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அறிஞர், அமீர், ஷைக், அல்லது மன்னர் போன்றவர்களின் கூற்றுகளை பின்பற்றவேண்டும் என்று மக்களிடம் கூறுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. இதுபோன்றவற்றை கொண்டு மக்களை ஆட்சிசெய்யலாம் என்றும் குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சி செய்வது வாஜிபு அல்ல என்றும் எவரேனும் கருதினால் அவர் நிச்சயமாக காஃபிர் ஆவார்’  (மின்ஹாஜ் அஸ்ஸுன்னா பாகம் 5 பக்கம் 130-132)
 
 

     அஷ்ஷவ்கானி(ரஹ்) இதுபோன்ற அபிப்ராயத்தையே கொண்டுள்ளர், அவர் தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது :
 
 

           i) தாகூத்திடம் (ஷைத்தான், இஸ்லாம் அல்லாதவை) தீர்ப்பு கோருதல் என்பது பெரிய குஃப்ரில் உள்ளதாகும்.
 

           ii) தாகூத்திடம் தீர்ப்பு கோருதல் என்பது குஃப்ர் செயல்பாடுகளில் உள்ளதாகும், இத்தகைய செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் ஒருவரை காஃபிர் என்று கட்டணம் செய்வதற்கு அனுமதியுண்டு.
 

           iii) இத்தகைய குஃப்ர் செயல்பாடுகளுக்கு உதாரணம் : சொத்துக்களில் பெண்களின் வாரிசுரிமையை மறுத்தல் மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வதில் ஒருவருடன் ஓத்துழைத்தல் ஆகியவை பெரிய குஃப்ரில் அடங்கும்.  (அஷ்ஷவ்கானியின் அர்ரஸாயில் அஸ்ஸலஃபியா பக்கம் 33-34)
 
 

    
ஆகவே உண்மையில் செல்வழக்கு அடிப்படையில்தான் சொற்களின் அர்த்தங்களில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. எனவே அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் என்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
 
 
உஸ்மானிய (கிலாஃபா) அரசின்காலகட்டத்தில்முஃப்திகள்அளித்தஃபத்வாக்கள் :


 
இஸ்லாமிய ஆட்சிமுறை பற்றிய ஆதாரத்தை மறுக்கும் விவகாரத்துடன் அரிதாக தொடர்புடைய விஷயமாக இருக்கிறது என்ற வகையில் ஃபத்வாக்கள் தொடர்பான குற்றச்சாட்டு பலவீனமான ஒன்றாகவே இருக்கிறது. உஸ்மானிய அரசை கிலாஃபா என்று ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் மனதில் பூசல்களை ஏற்படுத்துவதற்காகவும் தனது இறுதி நாட்களில் அந்த அரசு சில இஸ்லாத்திற்கு அந்நியமான சட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்தியது என்பதை தெரியப் படுத்துவதற்காகவும் இந்த விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.
 

     
உலமாக்களின் அறியாமை காரணமாக உஸ்மானிய கிலாஃபா தனது இறுதி கால கட்டத்தில் இஸ்லாத்திற்கு அந்நியமான சில சட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்தியது என்பது உண்மையே. ஹிஜ்ரி 1288ல் (கி. பி. 1870) நீதித்துறையை ஷரீஆ நீதிமன்றம் என்றும் நிழாம் நீதிமன்றம் (official law court) என்றும் இருபிரிவாக பிரித்தது.
 

    
முதலாவதாக, எந்த வகையிலும வரலாற்றை ஷரீஆவிற்கு ஆதாரமூலமாக கொள்ள முடியாது. எந்தவொரு காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளும் ஷரீஆவிற்கு ஆதாரமூலமாக இருக்கவில்லை என்பதால் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் இதை விவாதிக்கமுடியாது.
 
 

     இரண்டாவதாக, உஸ்மானிய கிலாஃபா கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி கால கட்டத்தில் குஃப்ர் சட்டங்களை ஏற்று அமல்படுத்திய பின்னர் அது கிலாஃபா அரசு என்ற அந்தஸ்த்தை இழந்துவிட்டது என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. வெளிப்படையான குஃப்ர் (குஃப்ர் புஃஆ) மற்றும் தெளிவான குஃப்ர் (குஃப்ர் ஸரீஹ்) ஹஆகியவை தொடர்பான ஹதீஸின் காரணமாக இந்த விவகாரத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருந்து வருகின்றன. உஸ்மானிய அரசின் இறுதி காலகட்டத்தில் இருந்துவந்த அறிஞர்கள் அறியாமையின் காரணமாக இதற்கு ஒப்புதல் அளித்தார்களா என்ற கோணத்தில் குஃப்ரை நடைமுறைப்படுத்துதல் மற்றும் வெளிப்படையான குஃப்ரை நடை முறைப்படுத்துதல் என்ற விவகாரம் தொடர்பான வரையறையை அவர்கள் அறிந்தவர்களாக இருந்தார்களா அல்லது அதில் அறியாமை உடையவர்களாக இருந்தார்களா என்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்கள்.
 
 

     குஃப்ர் சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு அனுமதியுண்டு என்று இதற்கு எவ்வகையிலும் அர்த்தம் கொள்ளக்கூடாது ஏனெனில் இன்று சில முஃப்திகள் குஃப்ர் சட்டங்களை ஏற்றுக்கொள்வதை அங்கீகரிக்கிறார்கள். இதற்கு முன்பு குறிப்பிடப் பட்டுள்ளதை போல அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சி செய்தல் என்பது திட்டவட்டமான விவகாரமாகவும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டு தடைசெய்யப் பட்ட விஷயமாகவும் இருக்கிறது.
 
 

     மூன்றாவதாக, உஸ்மானிய அரசின் இறுதி காலகட்டத்தில் இருந்துவந்த முஃப்திகள் சந்தேகத்திற்குரிய (ஷரீஆ)ஆதாரத்தின் ((ஷுப்ஹத் தலீல்) அடிப்படையில் இதற்கு ஒப்புதல் அளித்தார்கள் என்பதால் இது சட்டரீதியான அபிப்ராயமாக இருக்கிறது என்று சிலர் கூறுவதையும் சரியான அபிப்ராயம் என்று கருதமுடியாது. இது தொடர்பான விளக்கத்திற்கு ஷேக் அப்துல் கதீம் ஸலூம் எழுதியுள்ள ‘கிலாஃபா எவ்வாறு வீழ்த்தப்பட்டது’ என்ற நூலின் ‘மேற்கத்திய சட்டங்களை ஏற்று அமல்படுத்துதல்’ என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக் களை பார்க்கவும்.
 
Sources

Nov 2, 2015

நானும் ஒரு பொருளாதார அடியாள் இறுதி பகுதி

 
மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP)

மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டினரால் உற்பத்தி செய்யப்பட்ட பணிகள் அல்லது பண்டங்களின் மொத்த இறுதி சந்தை மதிப்பாகும்.

 
மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP)

ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product - GDP).


நாம் அடிக்கடி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் கேள்விப்படும் இந்த இரண்டு வருத்தைகளும் மக்களை ஏமாற்றும் ஒரு கருவிகாக தான் பயன்படுத்தபடுகிறது.


இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது. (ஏப்ரல் 14,2015 dailythanthi)


வாக்குமூலம் - "மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்".


வாக்குமூலம் - “ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திலும், அது காலணிகளை உற்பத்தி செய்து வந்தாலும் சரி, விளையாட்டு பொருட்களைத் தயாரித்து வந்தாலும் சரி, கனரக இயந்திரங்களை உருவாக்கி வந்தாலும் சரி அவையனைத்தும் தங்களுக்கென்று பொருளாதார அடியாட்களைக் கொண்டுள்ளன. பொருளாதார அடியாட்களின் படை அணிவகுத்துச் செல்லத் தொடங்கி விட்டது. அது இந்த பூமி முழுவதும், மிக விரைவாகச் சுற்றி வளைத்து வருகிறது. வணிகர்கள் போல் உடையணிந்து மரியாதைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, இலண்டன், டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைமையகங்களிலிருந்து வரும் ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு கண்டத்திலும் ஊடுருவிப் பரவிவருகின்றார்கள். அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை, நிறுவன அதிகாரவர்க்கத்தின் அடிமைகள் ஆக்குகிறார்கள். அவர்களைக் கொண்டு நாடு முழுவதற்கும் கடிவாளமிடுகிறார்கள். மனிதனின் இரத்தத்தையே உறிஞ்சி எடுக்கும் கடின உழைப்புத் தொழிற்சாலைகளுக்குத் தங்களைத் தாங்களே விற்று கொள்ளும்படி பாவப்பட்ட மக்களைத் தூண்டுகிறார்கள்."




உலகப்பேரரசு அது சுயநலமிக்கது. தனக்கு மட்டுமே சேவை புரியக்கூடியது. வணிகத்தை மட்டுமே, இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. தனக்கு முன்பிருந்த எல்லாப் பேரரசுகளையும் போலவே, இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யவும், கண்ணில் காணும் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது. அதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் காலடியில் மேலும், மேலும் அதிக செல்வத்தைக் கொட்ட தேவையான அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தக்கூடியது உலகப் பேரரசு.


இஸ்லாத்திற்கு எதிரான யுத்தம்:

அடுத்த நூற்றாண்டில் நடக்கப் போகும் உண்மையான யுத்தம் கம்யூனிஸ்டுகளுக்கும், முதலாளித்துவாதிகளுக்கும் இடையேயானதாக இருக்காது. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயானதாகத்தான் இருக்கும்.

                           ஆர்னால்டு டோய்ன் பீ (Toyn Bee)
                          (Civilization on Trial and world and west)

மேற்கு உலகம், குறிப்பாக அதற்குத் தலைமை வகிக்கும் அமெரிக்கா உலகம் முழுவதையும் அடக்கியாள உறுதிபூண்டுள்ளது. இதுவரை வரலாறு காணாத மாபெரும் பேரரசாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறது. இதனால் தான் அமெரிக்க மற்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிக்கிறது. அதற்கு முதலாளித்துவ கொள்கையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இந்த முதலாளித்துவ கொள்கைக்கு இன்று பெரும் எதிரகாக இருப்பது இஸ்லாம மட்டுமே. வளந்து வரும் இஸ்லாமும், இஸ்லாமிய தலைமைக்கான (கிலாஃபத்) கோஷம்களும் அவர்களின் பேரரசு பேரரசை களைத்துக் கொண்டு இருக்கிறது. அவர்களின் அச்சபடு அவர்களின் செயல்பாடுகளில் தெரிக்கிறது. முதலாளித்துவ சித்தாந்தம் 2008ம் ஏற்பட்ட பொருளாதார சரிவின் முலம் அது இன்னும் தன்னால் தலை துக்க முடியாமல் இருக்கிறது. இவர்கள் எத்தனை  பொருளாதார அடியாள்களை கொண்டு தனது பொருளாதாரத்தை மேம்படுத்துனாலும் சரியே. 
 
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது.

தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்தது போல தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.


தீர்வு:

எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமே ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடை செய்திருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை மட்டுமே சிறந்த ஒரே மாற்று வழியாக இருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த இஸ்லாமிய தலைமை(கிலாஃபத்) வேண்டும். இஸ்லாமிய தலைமையில் உள்ள பொருளாதாரக் கொள்கையில் வெளிநாட்டவர் தலையீடு இருக்காது. ஆகையால் ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் இங்கு அவசியம் இருக்காது.

இஸ்லாம் மாத்திரமே விமோசணம்.
இன்ஷா அல்லாஹ்.


முற்றும்

நாசிக். S
DXB