Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Aug 8, 2016

இஜ்திஹாத்தின் பெயரால் இஸ்லாத்தை புதிதாக பொதி செய்ய முயற்சி!


இஜ்திஹாதின் பொருளை சிதைப்பதற்கான முயற்சிகள் இன்று நிறையவே நடக்கின்றன. மார்க்கத் தீர்ப்பளிக்கின்ற உரிமையை ஒரு சில அரச அங்கீகாரம் பெற்ற அறிஞர்களிடமும், நிலையங்களிடமும் மாத்திரம் சுருக்கி மக்களின் அறிவு தேடும் வழிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் அத்ல் (நீதி) ஆனது எல்லாம் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்களே (தீர்ப்புக்களே) என இறைச்சட்டங்களுக்கு மீள வரைவிலக்கணம் வழங்குதல் என்பன இந்த முயற்சியில் முக்கியமான கைங்கரியங்களாகும்.

இந்த தீய முனைப்பில் சில இயல்புகள் அடிக்கடி பளிச்சிடுகின்றன:

1. அறிவு தேடுதலை கட்டுப்படுத்தல். (பெரும்பாலும் அரசுகளால்) அங்கீகாரம் பெற்ற அறிஞர்கள் சிலரைக் கொண்டு அல்குர்ஆன், அஸ்ஸுன்ஆவை நேரடியாக அணுகுவது ஆபத்தானது என்ற மனப்பதிவை முஸ்லிம்களின் மனதில் ஏற்படுத்தல். இந்த அழுத்தம் எந்தளவிற்கு பிரயோகிக்கபடுகிறது என்றால் சில சமயங்களில் ஒரு மார்க்கத் தீர்ப்பு மிகத் தெளிவான இஸ்லாமிய ஆதாரங்களுடன் முரண்படுவதாகத் தெரிந்தாலும், முஸ்லிம்கள் அது சம்பந்தமாக மௌனம் காத்து அவ்விடயத்தை அறிஞர்களின் கைகளில் மாத்திரம் விட்டுவிட வேண்டும் என்ற சிந்தனை வளர்க்கப்படுகிறது. இந்நிலை முன்னைய யூத, கிருஸ்தவ சமூகங்கள் அறிவை மத அறிஞர்களின் ஏகபோக உரிமையாக சுருக்கிவிட்டதன் விளைவால், மார்க்க அறிஞர்கள் வழி பிறழ்ந்த மக்களினதும், ஆட்சியாளர்களினதும் மனோ இச்சையை திருப்திப்படுத்தும் வண்ணம் வேத வெளிப்பாடுகளுக்கு வியாக்கியானம் செய்ததையொத்த கவலைக்கிடமான நிலையாகும்.

2. இஜ்திஹாத், என்ற தூய வழிமுறை இன்று “மார்க்கம் மௌனம் காக்கின்ற” விடயங்களில் “மனிதன் இயற்றுகின்ற சட்டங்கள்” என்ற பொருளை எட்டியிருக்கிறது.சில விடயங்களில் மார்க்கம் மௌனம் சாதிக்கிறது என்ற மிகப்பிழையான எடுகோளின் படி, தவறாகப் பயன்படுத்தப்படும் இஜ்திஹாத் வழிமுறை இன்றைய உலகை ஆள்கின்ற மனிதச் சட்டவாக்க பொறிமுறையுடன் நன்றாகவே ஒத்துப் போகின்றது. “எங்கெல்லாம் நீதி(அத்ல்) நிலைத்திருக்கிறதோ அதுதான் அல்லாஹ்(சுபு)வின் சட்டமாகும்” என்ற ஒரு புதுமையான வரைவிலக்கணத்தை அண்மையில் ஒரு ஷரீஆ துறை அறிஞர் என்னிடம் சொன்னது இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்லாமல்லாத குப்ர் தேசங்களில் மில்லியன் கணக்கான இஸ்லாமியச் சட்டங்கள் அமூல்படுத்தப்படுகின்றன என அவர் கூறிய பொழுது, அதிர்ச்சியோடு இல்லை...அவையெல்லாம் குப்ர் தேசங்களல்லவா... என்று நான் சுட்டிக்காட்ட, அவர் என்னை வியந்து பார்த்து “இத்தக்கில்லாஹ்” (அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்) என்று எச்சரித்ததையும் இங்கே நினைவு கூறுகின்றேன்.

3. இஜ்திஹாத் என்பது “அத்தரூரா - இன்றியமையாத நிலை” மற்றும் “ஹஃபத் தரரைன் - தீயதில் சிறியது” என்ற இரு அடிப்படைகளை மாத்திரம் சுற்றிச் சுழலும் ஒரு பொறிமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது. நவீன கால பிரச்சனைகள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்வாக்களில் ஏறத்தாழ அனைத்துமே நலன்களையும் (மஸ்லஹா), தீங்குகளையும் ஆராய்வதை மையம் கொண்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தீர்ப்புகளுக்குள் ஒரு திருமறை வசனமோ அல்லது நபிமொழியோ சொல்லப்பட்டால் அது இந்த நலன் VS தீங்கு கணக்கை தீர்க்க முன்வைக்கப்படும் ஆதாரமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தை மறுபொதி பண்ண எடுக்கப்பட்ட முயற்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை இலகுவாக காலணித்துவம் செய்வதற்காக அவர்களை அமைதிப்படுத்தி, இயங்காது வைத்துக்கொள்ள கடுமையான பிரயத்தனம் எடுத்தனர். குலாம் அஹ்மத் போன்றோர்களை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை அமைதிகாக்க கற்றுக்கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அதில் படு தோல்வியடைந்தனர். இதே நிகழ்ச்சி நிரலை “இஸ்மாயீலி” களைப் பயன்படுத்தி நிறைவேற்ற நினைத்தனர். அங்கேயும் மூக்குடைபட்டனர். காந்தியை பயன்படுத்தி அகிம்சையை போதித்த போது சில காலம் அது கைகூடினாலும் மேற்குலக மேலாதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் உம்மத்தை இயங்காது வைத்திருப்பதற்கு, எதிர்வினையாற்றாது அமைதி காக்கச் செய்வதற்கு அதுவும் நீண்ட காலம் வெற்றியளிக்கவில்லை. மேலும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும், பொருள் கொள்ளலுக்கும் ஏற்ப அல்குர்ஆனை மொழியாக்கம் செய்து முஸ்லிம்களின் கைகளில் தவழவிட்டுப் பார்த்தனர். எனினும் மூல அரபு மொழி குர்ஆனுடன் உம்மத்திற்கு இருந்த தொடர்பால் அவர்களின் சூழ்ச்சி பழிக்கவில்லை. ஹதீத்களை இஸ்லாத்திலிருந்து தொடர்பறுத்து இஸ்லாத்தை நடைமுறை ரீதியாக அமூலாக்கம் செய்வதை தடுக்க முயன்றனர். ஹதீத் கலையின் ஏற்புடமை பற்றி மக்களின் மனதில் ஐயப்பாடுகளை விதைக்கும் வண்ணம் தமது பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை ஏற்படுத்தி அதனைச் சாதிக்க நினைத்தனர். எனினும் ஒரு சிலரைத்தவிர ஏனையோரை அந்த முயற்சி வழிகெடுக்கவில்லை. இன்றும் பாகிஸ்தானிலே அல் கம்தி போன்ற தனிநபர்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தகைய ஆழமான முயற்சிகள் எல்லாம் பயனளிக்காத நிலையில் அவர்கள் பாவிக்கும் அண்மைக்கால யுக்திகளை இவ்வாறு சுருங்கக் கூறலாம்.

1) அறிவை குறித்த “அங்கீகாரம் பெற்ற அறிஞர்” களுக்கு மாத்திரம் மொத்தமாக குத்தகைக்கு வழங்குதல். அந்த அறிஞர்கள் கைமாறாக அரசாங்கங்களுக்கு கட்டுப்படும்படியும், தற்போதுள்ள (குஃப்ரான) வாழ்வொழுங்குடன் இரண்டரறக் கலந்து வாழும்படியும் மக்களுக்கு போதனை செய்தல்.

2) இஜ்திஹாத்தின் பொருளை “பலன்களையும், தீங்குகளையும் நிறுத்துப்பாக்கும் மனித மதிப்பீடு” என்பதாக மாற்றுதல்

3) “ஹுக்ம் ஷரீய்” இன் பொருளை அனைத்து “நீதி” ஆன சட்டங்களும் ஹுக்ம் ஷரீய்தான் என்பதாக மறுவிளக்கம் அளித்தல். அதன்படி மனிதன் இயற்றுகின்ற எத்தகைய நீதியான சட்டங்களும் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்கள்தான் என்ற நிலைப்பாட்டுக்கு வருதல்.

எனவே இன்றைய சூழலில் உலகில் எந்த எல்லையில் ஒருவர் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் அவர் இத்தகையதொரு ஆபத்தான திசை நோக்கி உம்மத்தை தள்ளுகின்ற முயற்சி இடம்பெற்று வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். உம்மத்தை சரியான சிந்தனை நோக்கி தொடர்ந்து விழிப்பூட்ட வேண்டும்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் கல்வி என்பது அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது முன்னமே அங்கீகாரம் பெற்ற அறிஞர்களுக்கு மாத்திரம் தனியுரிமையாக வழங்கப்பட்டதல்ல. அதேபோல சத்தியத்தை உரைப்பதும், ஆட்சியாளர்களை தட்டிக்கேட்பதும் இஸ்லாத்தின் முக்கிய அங்கங்களாகும். அதன்படி குப்ர் சிந்தனைகள் அனைத்தையும், அதனை கட்டிப்பாதுகாக்கின்ற அரசுகள், முறைமைகள் அனைத்தையும் நாங்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும். மேலும் நாங்கள் எங்களை நோக்கி வருகின்ற அனைத்து பத்வாக்களையும் கண்மூடிப் பின்பற்றக்கூடாது. அவற்றிலிருக்கும் குறைகளை, தவறுகளை கண்டு மௌனம் காக்கக் கூடாது. குறிப்பாக இன்றைய உலகை வழிநடாத்துகின்ற குப்ர் முறைமைகளுக்குள் இரண்டரறக் கலந்துவிடுவதற்காக அரசியல் நோக்கங்களுடன் வெளிவருகின்ற பத்வாக்களை ஒன்றுக்கு பலமுறை அவதானமாக அணுக வேண்டும்.

அல்குர்ஆனும், அஸ்ஸுன்ஆவும் சொல்கின்ற மிக நெருக்கமான பொருள் அல்லது சட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக எடுக்கப்படும் அதிகூடிய முயற்சியே இஜ்திஹாத் ஆகும். மாறாக முதலாளித்துவ, சடவாத, தாராண்மைவாத சட்டவாக்கப் பொறிமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சில பரிதாபமான இலாப – நஷ்ட ஆராய்ச்சி அல்ல. இஜ்திஹாத்திலிருந்து எட்டப்படுகின்ற தீர்ப்புக்கள் அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்புக்கு மிக அண்மித்த தீர்ப்புகளாகும். மாறாக மனித மூளையை நீதிபதியாக்கி “நன்மை, தீமைகளை தர்க்க ரீதியாக அளந்து பார்த்து” எடுக்கப்படும் தீர்ப்புகளல்ல. இத்தீய முயற்சி இன்னொரு வடிவில் “மனோ இச்சையை” பின்பற்றுவது கூடும் என சொல்வதை ஒத்ததே.

அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்பு என்பது அல்லது சட்டம் என்பது குர்ஆன், ஸுன்ஆவிலிருந்து மாத்திரம் யாக்கப்படுவதாகும். அதுதவிர வேறு எங்கேனும் இருந்து எட்டப்படும் முடிவுகள் - அது அல்லாஹ்வின் முடிவுக்கு ஒத்ததாக தெரிந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நபி(ஸல்) நவின்ற இந்த நபிமொழியை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் கூட அது இதற்கு சான்று பகரப் போதுமானதாகும்.

“எமது கட்டளையில் இல்லாத ஒரு செயலை ஒருவர் செய்வாரானால் அது நிராகரிக்கப்பட்டதாகும்.”

எனவே உலகை நீதியின் நிழலில் வழிநடாத்த இருக்கின்ற உம்மத்தின் எழுச்சியில் தாமதத்தை ஏற்படுத்த ஏவப்படும் இத்தகைய தீய அம்புகளிலிருந்து அல்லாஹ்(சுபு) எம்மைப் பாதுகாப்பானாக. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது, சித்தாந்தத்தை சித்தாந்தத்தால் முறியடிக்க முடியாது அற்பத்தனமான காரியங்களினூடாக உம்மத்தை குழப்பத்தில் ஆழ்த்த நினைக்கின்ற குப்பார்களினதும், முனாபிக்களினதும் முகத்தில் அவன் முன்புபோலவே இம்முறையும் கறியைப் பூசுவானாக!

DARUL AMAN

Jul 9, 2016

ஆதாரம் கொண்டு வர முடியுமா – மீடியாக்களுக்கு பகிரங்க சாவல் விடுத்துள்ள ஜாகிர் நாயக்

பிஜேபி மீது தற்போது எழுந்துள்ள 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காக மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விதம் ஜாகிர் நாயக் குறி்த்த சர்ச்சையை எழுப்பியுள்ளது பிஜேபி அரசு.

பிஜேபி அரசு மீது எழுந்த 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து வாய் திறக்காத நேஷனல் மீடியாக்கள் ஜாகிர் நாயக் சர்ச்சையை தூக்கி பிடிக்கின்றது.

இஸ்லாம் மதத்தை சாராத சமூக ஆர்வலர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



மீடியாவில் ஜாகிர் நாயகிற்கு எதிராக பேசும் டைம்ஸ் நவ் அர்னாப் பிஜேபியின் பின்னனியை சோ்ர்ந்தவர் என சோசியல் மீடியாவில் பல முறை விமர்சிக்கப்பட்டவர் என்பதும் இதை உறுதிப்படுத்துகின்றது.



தனது மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாகிர் நாயக் அவர்கள் ஒட்மொத்த இந்திய மீடியாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

அதில் , ”பங்களாதேஷ் ல் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் எனது பேச்சால் தான் அவ்வாறு நடந்தது என பங்களாதேஷ் அரசு தெரிவித்திருப்பதாக ஆதாரப்புர்வமான ஒரு செய்தியை கொண்டு வாருங்கள் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தான் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து வந்தேன் எனக்கு அங்கு தடை விதித்துள்ளதாக மீடியாக்கள் அப்பட்டமாக அவதூறு பரப்புகின்றது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தானே பேசியதாகவும் அவர்கள், நாங்கள் எதுவும் அப்படி சொல்ல வில்லை அந்த செய்தியை நாங்கள் நம்புவும் இல்லை எனக் பங்களாதேஷ் அரசு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ஜாகிர் நாயக் அவா்கள் இதில் கூறியுள்ளார்கள்.

ஜாகிர் நாயக்கின் இந்த பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் அரசு இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பங்களாதேஷ் ன் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் அவர்கள் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source :

http://www.bbc.com/news/world-asia-36462026

சம்பந்தபட்ட அரசே ஒன்றும் சொல்லதா நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு பிஜேபி அரசு வருவது ஏன் மீடியாக்கள் முனைப்பு காட்டுவது ஏன் ? முஸ்லிம்களுக்கு இந்தியாவில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஜாகிர் நாயகம் வெளியிட்டுள்ள வீடியோ அவரது இந்த சாவை ஏற்க மீடியாக்கள் தயாரா ?


Source
kaalaimalar.net

Jun 20, 2016

பள்ளிவாசல் பரிபாலனம்

இறை இல்லங்களை பரிபாலனம் செய்வது பொறுப்பான ஒரு பணியாகும். மஸ்ஜிதுகளை நிர்மாணிப்பதும் பரிபாலிப்பதும் நேர்வழி பெற்ற சிறந்த முஃமின்களின் பண்பாக அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 9: 18)



நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஒரு கறுப்பினப் பெண் இருந்தாள். பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்வது அவளது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் அவளைக்காண முடியவில்லை. இதனை அவதானித்த நபியவர்கள் அவளைப் பற்றி விசாரித்தார்கள். அவள் இறந்து விட்டதாக அன்னாருக்கு தெரிய வந்தது. “அவள் இறந்த செய்தியை அப்போதே நீங்கள் எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா?” என்று தோழர்களை விழித்துக் கூறிய நபியவர்கள், அவளது கப்ரை தரிசித்து அவளுக்காக தொழுகையையும் நிறை வேற்றினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)



இது மஸ்ஜிது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் சிறப்பை எடுத்துச் சொல்லப் போதுமான ஆதாரமாகும். மஸ்ஜித்களை நிர்வகிப்பது ஓர் உயர்ந்த அமலாக இருப்பது போலவே ஒரு பெரிய பொறுப்புமாகும். இந்த வகையில் தகுதியுடையவர்கள் பரிபாலன சபையில் இருக்கின்றபோதே ஒரு பள்ளிவாசல் அதன் பணியை செவ்வனே நிறைவேற்ற முடியும். பரிபாலன சபைக்கு நியமிக்கப்படுவோர் அல்குர்ஆன் குறிப்பிடும் மஸ்ஜித் பரிபாலனத்திற்குரிய தன்மைகளையும் தகைமைகளையும் பெற்றவர்களாக இருக்கின்றார்களா என்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.



“அல்லாஹ்வுடைய பள்ளிகளை பரிபாலனம் செய்பவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வையன்றி மற்ற எவருக்கும் பயப்படாமலும் இருப்பவர்களே. இத்தகையோர் நேர்வழி பெற்றவர்களாக இருக்கத்தக்கவர்களே.” (அல்குர்ஆன் 9: 18)


அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத், பொறியியலாளர் ரீஸா யஹ்யா

இமாமின் வகிபங்கு

பள்ளிவாசல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இமாம் மிகச் சிறந்த ஒருவராக, நன்கு கற்றுத் தேர்ந்த, மார்க்க விவகாரங்களில் ஆழமான விளக்கமுடைய சமூகப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்த, பல கோணங்களிலும் சிந்தித்து செயலாற்றக்கூடிய செயற்திறனுடையவராக, சாணக்கியமிக்கவராகத் திகழ வேண்டும். மக்களால் புரிந்து கொள்ள முடியாத விடயங்களை இமாமினால் புரிந்து கொள்ள முடியுமாக இருக்க வேண்டும்.

எந்தவொரு விடயத்தையும் ஷரீஆ கண்னோட்டத்திலும் அறிவியல் பூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் நோக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். நல்ல மனப்பாங்கும் நுண்ணறியும் திறனும் அவரிடம் குடிகொண்டிருக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு எட்ட முடியாத சந்தர்ப்பங்களில் அல்லது சிறந்த, பொருத்தமான தீர்வை முன்வைக்கும் நோக்கில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

குலபாஉர் ராஷீதீன்கள் காலப் பகுதியில் ஆட்சியாளரே (கலீபா) பள்ளிவாசல் இமாமாகவும் கடமையாற்றினார். உமைய்யா, அப்பாஸிய காலப் பகுதியில் ஆட்சியாளர் மார்க்கத்தின் தலைவராக, இமாமாக கடமையாற்ற வில்லை. இதன் விளைவாக மத்ஹப்கள் தோற்றம் பெற்றன. ஆட்சியாளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இன்று பள்ளிவாசல் நிர்வாகமே குறித்த பிரதேசத்தை அல்லது ஊரைக் கட்டுப்படுத்துகிறது. இந்நிலை மாறி இமாம் முழு ஊரையும் பகுதியையும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்குமளவு ஆளுமை பெற்றவராகத் திகழ வேண்டும்.

பள்ளிவாசல் இமாம் ஷரீஆத் துறையில் முதமானி அல்லது முதுகலைமானிக் கற்கைகளை நிறைவு செய்தவராக அல்லது ஷரீஆத் துறை உட்பட்ட பல்வேறு துறைகளிலும் தேர்ச்சிமிக்கவராக நவீன தொழில்நுட் பங்களைக் கற்றறிந்தவராக திகழ்ந்தால் ஊர் மக்கள் இமாமைத் தேடி வருவார்கள். ஊரில் இடம்பெறும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆற்றல், ஆளுமை அல்லது பிரச்சினையை இனங்கண்டு எத்தகைய துறைசார்ந்தோரைக் கொண்டு இதற்குத் தீர்வு காணலாம் என்று வழிகாட்டக் கூடிய ஓர் இமாம் பள்ளிவாசலுக்கு தலைமை தாங்கினால் அந்த இமாமைத் தேடி மக்கள் பள்ளிவாசலுக்கு வருவார்கள். அப்போது அந்த இமாமினால் மக்களுக்கு கட்டளை பிறப்பித்து அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். அப்போதுதான் சமூக மாற்றம் சாத்தியப்படும்.

சமூகத்தை வழிநடத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகத்தின் பங்கை விட இமாமின் பங்கு மகத்தானது. உமைய்யா, அப்பாஸிய காலத்தில் இமாம்களே சமூகத்தை வழிநடத்தினார்கள். இமாம்கள் ஆட்சியாளரின் தீர்ப்புக்கு முரணாக நேர்மையான தீர்ப்புக்களை வழங்கினர்.

தொழுகை ஒரு முஸ்லிமின் தக்வாவை அதிகரிப்பது போல பள்ளிவாசல் சமூகத்தின் தக்வாவை அதிகரிக்க வேண்டும்.


அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத், பொறியியலாளர் ரீஸா யஹ்யா

கடந்தகால மற்றும் நிகழ்கால இறையில்லங்களின் நிலைமைகள்:

நமது காலங்களில் உள்ள இறையில்லங்களையும், நமது கடந்தகால நேர்வழி பெற்ற முன்னோர்கள் காலத்து இறையில்லங்களையும் நாம் ஒப்பு நோக்குவோமானால் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. நமது முன்னோர்கள் சத்தியத்தை (ஹக்) கவனமாக எடுத்துக் கொண்டார்கள். வெளித்தோற்றத்தையல்ல. ஆனால் நாம் வெளித்தோற்றத்தை எடுத்துக் கொண்டு சத்தியத்தை விட்டு விட்டோம். எல்லாமே தலைகீழாக ஆகிவிட்டது. இறையில்லங்கள் ஜங்கால தொழுகை நிறைவேற்றிப்பட மட்டும், பயன்படுத்தப்பட்டு பிறகு முடப்பட்டுவிடுகின்றன. இதன் முடிவு இறையில்லங்கள் முஸ்லிம்கள் வாழ்வியல் விவகரங்களிருந்து முற்றிலும் புறக்கணிக்கபட்டுவிட்டது. மார்க்கத்திலிருந்து நடைமுறை வாழ்கையை பிரிக்கும் நோக்கத்தோடு அரசியல் பேச்சாளர்களும் ஆலோசனை கர்த்தாக்களும் மதத்தை அரசியலுடன் கலக்கக்கூடாது என்ற ஆட்சியாளர்களின் கருத்தை ஓங்கி ஒழிப்பதற்காக தங்கள் கோஷங்களை நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மத புரோகிதர்களுக்கு அரசியலில் எந்த வேலையுமில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் முடியாது இஸ்லாம் என்பது அரசியல் , பொருளாதாரம், சமூகம், நீதி நிர்வாகம்  ஆகிய அனைத்து
துறைகளையும் உள் அடக்கிய ஒரு முழுமையான மார்க்கம். இதில் எந்த ஒன்றையும் பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்தால் முழுமையான இஸ்லாமாக இருக்காது.

 இறுதியாக இறையில்லம் என்பது இஸ்லாம் என்ற மார்கத்தின் செய்திகள் உருவாக்கப்பட்ட இடம். இந்த இடத்திலிருந்துதான் இஸ்லாமிய மாபெரும் தலைவர்கள் தங்களது ஒளிமயமான பயணித்தை ஆரம்பித்தார்கள். உலகம் எங்கிலும் இஸ்லாத்தின் சங்க நாதத்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். ஆம் அந்த மதினாவின் இறையில்லம் மிகமிக எளிமையானதாகும். அதன் தரை பாகம் கூலன்ங்கற்களை கொண்டு பரப்பப்பட்டது. அதன் விளக்குகள் இரவில் மட்டும் ஏற்றப்பட்டது. அதன் கூரைகள் ஈத்த மர ஓலை கொண்டு வேயப்பட்டது.

முஸ்லிம்களே! அறிந்துகொள்ளுங்கள்.நாம் சத்தியத்தை விட்டுவிட்டு வெளிதொற்றதை மட்டும் தக்கவைத்து கொண்டு துர்பாக்கியசாலிகளாக இருக்கிறோம்.உயர்ந்து நிற்கும் மினாரக்களையும்,எழில் கொஞ்சம் இறை இல்லங்களையும் அமைத்து பெருமை பாராட்டி கொள்ளும் நாம் இஸ்லாத்தின் உயிர துடிப்பான செயல்களை செய்வதுமில்லை நினைத்து பார்ப்பதும் இல்லை ஆகவே இறை இல்லங்களை அலங்கரிக்கும் செயல்களில் நம்மை நாம் உட்படுத்தி கொண்டு இறை இல்லங்களின் தனித்தன்மையும் அதன் முக்கியத்துவத்தையும் பாழ்படுத்திவிட்டு அங்கு சச்சரவையும் இனபாகுபாடுகளையும் கொண்டுவரவேண்டாம் இப்போது நம்மிடம் பாகிஸ்தானிய பள்ளி, சிரியா பள்ளி, பாரசிக பள்ளி, குர்திஸ் பள்ளி, துருக்கி பள்ளி என்று எண்ணில் அடங்காத பிரிவு இறை இல்லங்கள் இருக்கிறது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளிகும் சொந்தமான இறை இல்லங்களும் கட்சிகளுக்கு சொந்தமான இறை இல்லங்களும் மத்ஹபுகளுக்கு சொந்தமான இறை இல்லங்களும் இருக்கின்றன அவைகள் ஒன்றில் மற்றொரு பிரிவுகள் சொல்வதை தடுத்துக் கொள்கின்றன. இஸ்லாத்தின் செய்திகள் அவைகளுக்கு இரண்டாம் பட்சம்தான்.தலைமைதுவதிற்கும், அதிகாரத்திற்கும் பிழைத்திருக்கும் தந்திரத்திற்கும் தான் முதலிடம். இவையெல்லாம் இன்று நமது இறையில்லங்களில் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இறையில்லம் அல்லாஹ்(சுபு)விற்கு சொந்தமானது என்று இஸ்லாம் கூறியபோதும் இவ்வாறு நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.


அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல்-குர்ஆன் 72:18)


ஆகவே நாம் வலியுறுத்துவது என்னவெனில் முக்கியமாக இஸ்லாமிய குழுக்களுக்கும், கட்சிக்களுக்கும், இமாம்களுக்கும், இறையில்லங்களில் அவர்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும் அதன் கதவுகளை உண்மையான முஸ்லிம்களுக்கும் என்றும் திறந்து வைத்திருக்க வேண்டும். அறிஞர்களுக்கும் சுஜூத் செய்பவர்களுக்கும்,மார்க்கத்தை போதிப்பவர்களுக்கும்,இஸ்லாம் மார்க்கதின்ம்படி முஸ்லிம்களின் அனைத்து  வாழ்வியல் விவகாரங்களும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக பணிபுரிபவர்களுக்கும் அது எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.அப்போது மட்டும்தான் அல்லாஹ்வின் திருநாமம் இறை இல்லங்களில் உயர்ந்து ஒலிக்கும். அப்போது மட்டும்தான் முஸ்லிம்கள் நல்லக்காரியங்களில் பங்கு கொள்வார்கள்.தீயவற்றில் இருந்து தங்களை காத்து கொள்வார்கள் தங்களின் சமூகத்திற்காக அவர்கள் பொறுப்பெடுத்து சிந்தனை செய்வார்கள். இந்தநிலை மீண்டால்தான் இறை இல்லங்கள் தனது பழைய அசலான நிலைக்கு வந்துவிட்டது என்று கூறமுடியும்.அங்கு இஸ்லாமிய தீனும்,அல்லாஹ்வின் திருநாமமும் மறுபடியும் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

இறை இல்லங்களில் அல்லாஹ் தனது திருநாமங்கள் துதி செய்யப்படுவதையும். உயர்த்தப்படுவதை அனுமதித்து இருக்கிறன் (குர்ஆன்)

இறையில்லங்களின் பக்கம் உங்கள் முகங்களை திருப்பியவர்களாக அல்லாஹ்விடம் அவனுடைய மார்கத்தை (மேலோங்குவதற்காக) பணிந்து வேண்டுங்கள்.


Source - இஸ்லாத்தில் இறை இல்லத்தின் பங்களிப்பு

May 3, 2016

தஃவா, களப்பணி, சிறை: ரிஷ்க் பற்றிய புரிதல்

     
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்று வந்த ஒரு நண்பர் எழுதிய, எமது சிந்தனையை தூண்டக்கூடிய ஓர் சிறிய ஆக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கிலாஃபத்தின் மீள்வருகைக்காக தீவிரமாகக் களப்பணிகளில் ஈடுபட்டு அடிக்கடி சிறைவாசம் அனுபவித்த சகோதரர்களை சந்தித்த அவரின் வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுபவை. நிச்சயம் அது உங்களையும் சிந்திக்கத் தூண்டும் என நம்புகிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்றிருந்த எனக்கு நீண்டகாலமாகத் அறிமுகமான ஒரு நண்பரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னை விட மிகவும் வயதில் குறைந்தவராய் இருந்தாலும் வாழ்வின் சோதனைகளை முகம் கொடுப்பதில் அவர் மிகவும் பக்குவப்பட்டவர். அவர் ஒரு அரசியல் செயற்பாட்டாளர். இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாக ஏற்று, அதன்படி வாழ்கின்ற, ஐக்கியப்பட்ட ஓர் உம்மத்தை உருவாக்குவதை நோக்கி அழைத்தல் என்ற அடிப்படையில் எங்களது செயற்பாடுகளுக்கு மத்தியில் பெரிய வேறுபாடு கிடையாது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், அவர் அந்த அரசியல் கருத்துக்களைக் கொண்டிருப்பதால் முகம் கொடுத்த சோதனைகள்தான்.
 
அவர் பல முறை சிறைவாசம் அனுபவித்ததால் அவரது கல்வியிலும், தனிப்பட்ட வாழ்விலும் அது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது. ஒருவருக்கு சிறை அனுபவத்தை வழங்க அவர் சிறைகளின் இழிவான வாழ்க்கைத் தரத்தையும், சித்திரவதையும் அனுபவிப்பது கட்டாயமானது என்பது முஸ்லிம் உலகின் சிறைகளின் யதார்த்தத்தை நீங்கள் அறிந்திருந்தால் தெரிந்திருக்கும்.
 
ஏன் அவர் அடிக்கடி சிறைக்குச் செல்ல வேண்டும்? அவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல மனிதர். வன்முறைகளை பரப்புரை செய்பவருமல்ல. எனினும் முஸ்லிம் உலகின் துரதிஷ்டமான நிலை என்னவென்றால் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்பது மாத்திரம் அரச இயந்திரத்தினால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட போதுமானது என்பதே.
 
இம்முறை அவரை சந்தித்த பொது பல மணிநேரங்கள் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். எனினும் விடைபெற முன்னர் அவர் எனக்கு ரிஷ்க் பற்றி புகட்டிய பாடத்தை, அத்தலைப்பில் பல கட்டுரைகளை வாசித்த பின்னரும், பல குத்பாக்களை நிகழ்த்திய பின்னரும் கூட அவர் விளக்கியது போல நான் புரிந்து கொண்டிருப்பேன் என்று நம்பவில்லை.
 
முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ரிஷ்க் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது என நாம் நம்புகிறோம். அந்த உறுதியான நம்பிக்கை எமது வாழ்வில் தொழிலை இழக்க நேரிடல், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படல் போன்ற சில பாதகமாக விடயங்கள் நடக்கின்றபோது எமது ஜீவனோபாயத்திற்கு என்ன செய்யப்போகிறோமோ தெரியவில்லை என்று அங்கலாய்ப்பதிலிருந்து எம்மை விடுவிக்க வேண்டும். மேலும் இந்த நம்பிக்கை வாழ்வாதாரம் பாதிப்படைந்து விடுமோ என அஞ்சி அல்லாஹ்(சுபு) எம் மீது சுமத்தியிருக்கின்ற கடமைகளை செய்வதில் சமரசம் செய்யாதிருக்க உதவ வேண்டும்.
 
ஒன்றை அறிந்து வைத்திருப்பது வேறு அதன்படி வாழ்வது என்பது வேறு
 
அந்த சகோதரர் வெளியேறிச் செல்லமுன் எனக்கு ஒரு கதை சொன்னார். அவர் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் அவரது குடும்பம் வேறொரு இடத்தில் சென்று வாழவேண்டியேற்பட்டதாம். அதனால் அதுவரை காலமும் படித்த பாடசாலையை விட்டு விலக வேண்டிய நிலை. அது அவரது பழைய நண்பர் வட்டத்திலிருந்து அவரைத் தூரமாக்கியதாம். பின்னர் புதிய நண்பர் வட்டம் ஒன்றை அவர் ஏற்படுத்திக் கொண்டாராம். அவருக்கு புதிய நண்பர்கள் கிடைந்த அதே சமயம் அவரது பழைய பாடசாலை நண்பர்கள் போதை பொருட்களுடனும், குற்றச்செயல்களுடனும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். அந்தத் தருணத்தில் தனக்கு நல்ல நண்பர்களை பெற்றுத்தந்தது அல்லாஹ்(சுபு) செய்த பேரருளாகும் என்று அவர் சொன்னார்.
 
பின்னர் அவரது பழைய நண்பர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது நண்பரும் ஏறத்தாழ அதே அனுபவத்தைதான் பெற்றிருக்கிறார். அவரும் சிறைக்கு சென்றிருக்கிறார். அவரது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருபாலாரினதும் அனுபவமும் ஒன்றாக இருந்தாலும் அதனை  அவர்கள் அடைந்த பாதை முற்றிலும் வேறுபட்டது. அவரது நண்பர்கள் தமது சுய இச்சையை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டார்கள். எனது நண்பரோ அல்லாஹ்(சுபு)வை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டிருக்கிறார்.
 
அவர் இறுதியாக ஒன்று சொன்னார், அதாவது அவரது ரிஷ்க் சிறைக்குள்தான் கிடைக்கும் என்று முன்பே எழுதப்பட்டிருந்தால் எந்த வகையிலோ நான் சிறைக்கு வந்து சேர்ந்துதான் இருப்பேன்;. ஆனால் அந்த ரிஷ்க்கை பெற்றுக் கொள்வதற்கு நாம் பாவிக்கும் வழியே கவனத்திற்குரியது என்று ரிஷ்க் பற்றிய புரிதலை மிக தத்ரூபமாகக் கூறி  முடித்தார்.
 
பின்னர் அவரை அழைத்துச் செல்ல வந்து விட்டார்கள். அவரும் விடைபெற்று சென்றுவிட்டார். அவரை திரும்ப எப்போது காணுவேனோ என சிந்தித்துக் கொண்டு எனது வீட்டுத்தொகுதிக்கு வந்துவிட்டேன். சில நிமிடங்கள் கழித்து எனது வீட்டு அழைப்பொலி கேட்டது. உள்ளே நுழைந்த எனது அன்னை  “பார், யாரை நான் திரும்ப அழைந்து வந்துள்ளேன்” என்று சொல்லி அந்த நண்பரைக் காட்டினார். அந்த நண்பர் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய போது அம்மா வீட்டில் இருக்கவில்லை, மாடிப்படியால் அவர் இறங்கிச் சென்று கொண்டிருந்தபோதுதான் வீடு திரும்பிக்கொண்டிருந்த அம்மா அவரைக் சந்தித்திருக்கிறார். அவர் வெளியேறிய போது இரவுச் சாப்பாட்டு நேரம் ஆகியிருந்தது. அவர் உணவருந்தாது சென்றதை அனுமதிக்காத எனது அம்மா அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் எங்களுடன் இராபோசனத்திற்காக மேசையில் அமர்ந்த அவர் பின்வருமாறு கூறினார், “இன்றிரவு எனது ரிஷ்க் இங்குதான் என எழுதப்பட்டிருக்கிறது” என்று.
 
sources:

Jul 23, 2015

நபி(ஸல்) அவர்களை அவமதிப்பதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!


முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டக்கூடிய பிரான்ஸ் வார இதழின் நடவடிக்கை பற்றி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டன. நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) என்ற ஃபிரான்ஸ் பத்திரிக்கை கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்துள்ளது. கடந்தவாரம் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களில் 12 பேர்கள் முகமூடி அணிந்த போராளிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலளிப்பாக மீண்டும் கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது! கடந்த சில வருடங்களாக நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து கேலிச்சித்திரங்களை வரையும் நடவடிக்கைகளில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முன்னணியில் இருந்துவருகிறது.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களின் கொலை பற்றி உணர்ச்சி மேலிட விவாதம் மேற்கொண்ட பத்திரிக்கைகளும் செய்தி ஊடகங்களும் பேச்சு சுதந்திரம் (Freedom of speech) தொடர்பான முஸ்லிம்களின் உடன்பாடற்ற மனநிலை குறித்து கேள்வி எழுப்பின! முஸ்லிம்கள் எதிர்செயல்பாடு கொண்டவர்கள் என்றும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்றும் சுதந்திரம்-(யீக்ஷீமீமீபீஷீனீ) என்ற சிந்தனையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அல்ல என்றும் அவை குற்றம் சுமத்தின!

 

முஸ்லிம்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

மேற்குலகின் ஜனநாயக மதச்சார்பின்மைவாதிகள்தான் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் தூ£ண்டிவிட்டு வருகிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War on Terror) என்ற கோஷத்தை முன்வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் திட்டத்தில் மேற்குலகம் எத்தகைய நடிவடிக்கையையும் விட்டுவைக்கவில்லை.

செப்டம்பர் 11 க்கு பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல்கள், அவமானங்கள், ஆக்கிரமிப்புகள் என்று பல்வேறு இடர்பாடுகளை தங்களுடைய ஈமானின் நிமித்தம் முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். இஸ்லாமிய நிலப்பரப்புகளை வெறித்தனமாக ஆக்கிரமித்ததார்கள்! அபூகுரைப் மற்றும் குவான்டனாமோ சிறைகளில் முஸ்லிம்களிலுள்ள ஆண்களையும் பெண்களையும் அடைத்துவைத்து கொடூரமாக சித்ரவதை செய்தார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டார்கள்! நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் கண்ணியமிக்க மனைவியரையும் இழிவுபடுத்தும் வகையில் புத்தகங்களை வெளியிட்டார்கள்! புனிதமிக்க குர்ஆனை இழிவுபடுத்ததினார்கள்! ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தார்கள்! ஸ்வீடன் நாட்டில் மஸ்ஜிதுகளுக்கு மினாரா கட்டுவதற்கு தடைவிதித்தார்கள்! மேலும் இதுபோன்று இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான எண்ணற்ற அநீத செயல்பாடுகளை கட்டவிழ்த்து வருகிறார்கள். 

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் அனுப்பிய நபிமார்களில் முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக இருக்கிறார்கள் என்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்கு முற்றிலும் முரண்பாடாக, மேற்குலக மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல், இழிவுபடுத்துதல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் முஸ்லிம்கள் சுதந்திரத்தை மதிப்பதில்லை என்று மேற்குலகவாதிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.

மதச்சார்பின்மை‎‎க்கும் மக்களாட்சிக்கும் பாதுகாவலன் என்று பறைசாற்றிக்கொள்ளும் ஃபிரான்ஸ் அரசு சமீபத்தில் முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கும் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கும் தடைவிதித்துள்ளது! எனினும் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதுகின்ற மாண்புமிக்க விவகாரங்களை காஃபிர்கள் தொடர்ந்து இழிபடுத்துவதை எதிர்க்கும்வகையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால், முஸ்லிம்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும் எதிர்மறை செயல்பாடுகளை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்! ஸவ்பான்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவருந்தும்போது ஒருவர் மற்றொருவரை விருந்திற்கு அழைப்பது போல் உங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மக்கள் விரைவாக மற்றவர்களை அழைப்பார்கள். அந்நாட்களில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாக இவ்வாறு நிகழுமா?’ என்று ஒருவர் வினவினார். இல்லை! அப்போது நீங்கள் திரளான எண்ணிக்கையில் இருப்பீர்கள், எனினும் கடல்நீரில் அடித்துச் செல்லப்படும் நுரை போன்று இருப்பீர்கள்! உங்கள் எதிரிகளின் உள்ளங்களில் உங்கள் மீதுள்ள அச்சத்தை அல்லாஹ் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் வஹ்னைபோட்டுவிடுவான்!என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று ஒருவர் வினவினார். உலகத்தின் மீதுள்ள பற்று மற்றும் மரணத்தின் மீதுள்ள வெறுப்புஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (அபூதாவூது, அஹ்மது)‎‎‎‎‎‎‎‎

இன்றைய முஸ்லிம்களின் உண்மைநிலை குறித்து இந்த ஹதீஸ் தெளிவாக விவரிக்கிறது, 170 கோடி மக்கள் தொகையையும் பெட்ரோலியம், நிலவாயு போன்ற அரிய இயற்கை வளங்களையும் பெருங்குவியலாக பெற்றிருந்தபோதும் இன்றைய முஸ்லிம்களுக்கு எத்தகைய முக்கியத்துவமும் இல்லை! அவர்கள் கடலின் நுரையைப் போன்ற சிறுமையடைந்து கிடக்கிறார்கள்!

 

இதற்குரிய தீர்வுதான் என்ன?

ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமாகவோ அல்லது ஃபிரான்ஸ் அரசுத்தூதருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலமாகவோ இந்த விவகாரத்திற்கு தீர்வு ஏற்படுத்தமுடியாது; மாறாக இத்தகைய விவகாரங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டபோது அன்றைய முஸ்லிம் தலைவர்கள் அவற்றிற்கு எவ்வாறு தீர்வுகண்டார்கள் என்ற முன்னுதாரணத்திலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும். சத்தியத்திற்கும் & அசத்தியத்திற்கும், இஸ்லாத்திற்கும் & குஃப்ருக்கும் எதிரான இப்போர் புதிதானதல்ல! இந்த தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக நடத்தப்படும் போரின் வெளிப்பாடாகவே இருக்குகிறது. கடந்த 19 ம் நூற்றாண்டில் முஸ்லிம்களுடைய ஈமானுக்கு எதிராக காஃபிர்கள் தாக்குதல் நடத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்களையும், அவர்களுடைய கண்ணியமிக்க மனைவி ஆயிஷா(ரளி) அவர்களையும் கேலி செய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற முயற்சித்தார்கள்! இதற்கு பதிலளிப்பாக அன்றைய முஸ்லிம்களின் கலீஃபாவாக இருந்த அமீருல் மூஃமினீன் இந்த இழிசெயலை மேற்கொண்ட நாடுகளின் அரசுத்தூதர்களை அழைத்து அந்த நாடகத்தை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்தார், உடனடியாக அவை கலீஃபாவின் எச்சரிக்கைக்கு அஞ்சி தங்களுடைய நடவடிக்கையை நிறுத்திவிடுவதாக கூறிவிட்டன! அந்நாடுகள் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகியவையாகும்!

கிலாஃபா ஆட்சியின்கீழ் பல்வேறு மதத்தை சார்ந்த மக்கள் ஒன்றாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள், அதில் சிறுபான்மையினர் நசுக்கப்படவில்லை, ஏழைகள் கவனிப்பின்றி விட்டுவிடப்படவில்லை! உண்மையாகவே முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிருஸ்த்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள் ஆகியோர் கிலாஃபா அரசின்கீழ் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதற்கு வரலாறே சான்றாக திகழ்கிறது.

பிரிட்டன் மற்றும் காலனியாதிக்க மேற்கத்திய அரசுகளின் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில்தான் முஸ்லிம்களின் நிலப்பரப்புகள் துண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டன! ஒற்றுமையாக வாழ்ந்துவந்த பல்வேறு மதத்தை சார்ந்தவர்கள் மத்தியில் பரஸ்பர வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டு ஓரிரவில் அவர்கள் எதிரிகளாக ஆக்கப்பட்டர்கள்!

 

கண்ணியமிக்க முஸ்லிம்களே!

நாம் மிகச்சிறந்த சமுதாயம் என்பதை நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும், மேற்கத்தியர்கள் நிச்சயமாக இதை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பெரும் திட்டங்களை தீட்டி செயலாற்றியபோதும் நம்மை சிறிதும் பலவீனப்படுத்த முடியவில்லை! எனவே நாம் உயிரினும் மேலாக கருதுகின்ற நமது இந்த விவகாரத்தில் இப்போது அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! ஆம்! நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் அல்லாஹ்வின் வேதத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த துணிந்துள்ளார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் தீட்டுவதை நாம் கண்டித்தால் அவர்கள் மேலும் அதுபோன்ற கேலிச்சித்திரங்களை வரைந்து வெளியிட்டு வருகிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தை கழிவறையில் வீசியெறிகிறார்கள்! அதை தீயிட்டு கொளுத்துகிறார்கள்! இந்த இழிவான நடவடிக்கைகள் வாயிலாக நம்முடைய இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் இறை வேதத்தின் மீதும் நாம் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.

கிலாஃபா எனும் உண்மையான தலைமை இல்லாவிடில் நாம் மிகநெருக்கடியான சூழலில் தள்ளப் பட்டுவிடுவோம் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபாதான் நம்முடைய கண்ணியத்தையும், சிறைபட்டுக் கிடக்கும் நம்முடைய சகோதரர்களையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது நிலங்களையும் நமது மஸ்ஜிதுகளையும் திரும்பவும் மீட்டுக்கொடுத்து இஸ்லாமிய மாண்புகளை அடித்தளமாகக் கொண்ட சமூகத்தை அமைப்பதற்கு ஆற்றல்பெற்றது. இஸ்லாத்தின் கண்ணியத்தையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க அது போராடும்!

 

இதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கவேண்டும்!

நமது இருப்பிடங்களில் அமர்ந்துகொண்டு முஸ்லிம் உலகத்தின் இக்கட்டான நிலையை செய்திஊடகங்களில் பார்த்து துயரங்கொள்வதால் மட்டும் எத்தகைய பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக எந்த நிலப்பரப்பில் நாம் இருந்தபோதும் இணைந்து செயலாற்றி நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

மேற்கத்தியர்களின் அச்சுறுத்தல்கள், நமது சகோதரர்களும் சகோதரிகளும் எதிர் கொண்டுள்ள இன்னல்கள் துயரங்கள், நமது இஸ்லாமிய நிலப்பரப்புகளின் ஆக்கிரமிப்புகள், வாழ்வியலில் நாம் அடைந்துள்ள பின்னடைவு போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரேயொரு தீர்வுதான் நமக்கு முன்பாக இருக்கிறது! ஆம்! ஒரே தலைமையின்கீழ் நாம் ஒன்றிணைய வேண்டும்! மனித சமுதாயம் முழுமைக்கும் நீதி செலுத்துவதற்கு திறன்பெற்ற செயலாக்க அமைப்பின்பால் நாம் ஒன்றிணையவேண்டும்! நமக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்தும் கீழ்நிலையிலிருந்தும் விடுபட வேண்டுமென்றால் நாம் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்! ஆம்! கிலாஃபத்திற்காக விடுக்கப்படும் அழைப்பில் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்!

எனவே நமது கட்டாயக்கடமை என்னவென்றால்,

·நமது உம்மத்தை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவையும் அது பற்றிய விழிப்புணர்வையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

·இந்த குறிக்கோளுக்கான ஹுகும்களையும் தீர்வுகளையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

·அல்லாஹ் அருளியுள்ள ஷரீஆவை நிலைநாட்டுவதற்காகவும் முஸ்லிம்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் அழைப்புவிடுக்கும் உலக முஸ்லிம் சகோதரர்களுடன் நாம் இணைந்து நிற்கவேண்டும்.

·நமது சகோதர சகோதரிகளுக்காகவும் அல்லாஹ்வின் உதவிக்காகவும் நாம் துஆ செய்யவேண்டும்.

·இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் இழிவுபடுத்துவதை நிறுத்துவதற்குரிய தீர்வு என்பது நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபா எனும் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதுதான் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அது முஸ்லிம்களின் கேடயமாகும்! அதுவே தீனுடைய பாதுகாப்பாகும்! அதுதான் இஸ்லாத்தின் சின்னமாகவும் அதன் அச்சாணியாகவும் விளங்குகிறது! இன்னும் முஸ்லிம்களின் வாழ்வாகவும் அவர்களுடைய கண்ணியமாகவும் உடமையாகவும் விளங்குகிறது!

 

ஈமான்கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுக்கு உங்களுக்கு வாழ்வளிக்கும் விஷயத்தை நோக்கி அழைப்பு விடுத்தால் அதற்கு பதிலளியுங்கள்!    (அல்அன்ஃபால் : 24) 

 

 

www.sindhanai.org

Aug 23, 2013

“வாழ்க்கைச் சித்தாந்தமாக”!!!!

இஸ்லாம் வெறுமனே ஆத்மீகத்தை போதிக்கும் மதமல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான செய்தியாக, சம்பூரணமான வாழ்க்கைத்திட்டமாக இஸ்லாம் விளங்குகிறது.

மனிதனது வாழ்வியல் விவகாரங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான அனைத்து உறவுகளையும் அது நிர்ணயம் செய்கிறது. அனைத்து வாழ்வியல் விவகாரங்களில் எழும் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை இஸ்லாம் வழங்குகிறது.

மேலும் படைப்பாளனான அல்லாஹ்வுடன் மனிதன் கொண்டுள்ள உறவு, மனிதன் தனக்குத் தான்னே கொண்டுள்ள உறவு, மனிதன் இதர மனிதர்களுடன் கொண்டுள்ள அனைத்து வகையான உறவுகளையும் அனைத்துக் காலங்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் வகையில் இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ளது.

இஸ்லாம் தனித்தன்மை கொண்ட தீர்க்கமான கருத்துக்களை கொண்டிருப்பதுடன் அவற்றில் இருந்து தனித்தன்மையான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

இக்கலாச்சாரம் வாழ்வியல் கண்ணோட்டம் குறித்து கோடிட்டுக் காட்டுவதுடன் அக்கலாச்சார வட்டத்தினுள் உறுதியாக நிலைப்படுத்துகிறது.

அத்துடன் தனித்துவம் கொண்ட சிந்தனைகளையும் ஹலால் ஹறாம் அடிப்படையிலான வாழ்வியல் கண்ணோட்டத்தையும் தனித்துவம் கொண்ட வாழ்க்கை முறையையும் இஸ்லாமிய ஷரீஆ உருவாக்கியுள்ளது.

இஸ்லாத்தின் செய்தி ஒரு முழுமையான செயலாக்க அமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஆட்சியமைப்பு, பொருளாதாரம், சமூகம், கல்வி, உள்நாட்டு விவகாரம், வெளிநாட்டு விவகாரம் தொடர்பான அரசின் கொள்கைகளையும் அரசிற்கும் சமூகத்திற்கும் மத்தியில் உள்ள உறவுகளையும், அரசிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் உள்ள உறவுகளையும், போர் மற்றும் அமைதி ஆகியவற்றில் ஏனைய அரசுகள் மற்றும் சமூகங்களுக்கு மத்தியிலும் உள்ள உறவுகளையும் நிர்ணயித்துள்ள ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

இவ்வாழ்க்கைச் சித்தாந்தத்தை அமுல்படுத்தும் இஸ்லாமிய அரசே கிலாபத்து அரசாகும்.

ஆனால் அத்தகைய இஸ்லாமிய அரசை இன்று முஸ்லிம் உம்மத் இழந்து நிற்கிறுது. அதனை மீள உருவாக்க உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமிதும் கடமையாகும்.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இஸ்லாம் பற்றிய அடிப்படையை “மாற்றீட்டுச் சித்தாந்தமாக”, “மாற்றீட்டு வாழ்க்கை முறையாக” பெரும்பான்மை குப்ர் சமூகத்திற்கு முன்வைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.

இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களது வாழ்கை முறைக்கெதிராகவும் முன்னெடுக்கப்படும் சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தள்ளப்பட்டுள்ளது என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் பொறுப்பு பற்றி சிந்தித்து செயற்படவேண்டும்.

இதனை நிரந்தமாக பேணும் ஒரு இஸ்லாமிய உலக தலைமையும் கிலாபாவினது மீள் உருவாக்கும் முஸ்லிம் நாடுகளில் உருவாக பங்களிப்புச் செய்யவேண்டும். அதற்கான தஃவாக்களை முன்னெடுக்க வேண்டும்.

இஸ்லாத்தை வெறுமனே ஒரு மதமாக பார்க்கும் சிந்தனைப்போக்கை மாற்றி அது வாழ்வில் எழும் அனைத்து விடயங்களுக்குமான தீர்வை வழங்கும் ஒரு “வாழ்க்கைச் சித்தாந்தமாக” முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கி தீனுல் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட உலக தலைமைத்துவம் மீள உலகில் உருவாகி மனித சமூகம் நேர்வழிப்பட, நிம்மதியடைய தமது தஃவாபற்றி பரந்து சிந்திக்க வேண்டும்.

நாம் வெறும் ஆத்மீகதிருப்தியோடு நின்றுவிடும் மனப்பாங்கை மாற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அருளாக அனுப்பப்பட்ட நோக்கத்தை உணர்ந்து இறுதி மனிதன் வரைக்கும் அல்லாஹ்வுடை தீன் சென்றடைவதற்கான இஸ்லாமிய ஆட்சிபற்றி சிந்திக்க வேண்டும். அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும்.