Showing posts with label இரசாயன படுகொலை. Show all posts
Showing posts with label இரசாயன படுகொலை. Show all posts

Sep 1, 2013

சிரியாவின் மீதான அமெரிக்காவின் இராணுவ முன்னெடுப்பின் நியாயமற்ற காரணங்களும் அதன் உண்மையான முகங்களும்!

அமெரிக்கா கடந்த இரண்டு வருடமாக சிரியாவில் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அனுமதித்தது மாத்திரமன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காயப்படவும் அனுமதித்தது.

ஆனால், அமெரிக்கா இன்று “அல்கௌதா” எனும் இடத்தில் இரசாயன ஆயுதத் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாகவே சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதனால் அசாத் “சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாக” கூறிக்கொண்டு சிரியாவின் மீதான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்வதில் எந்த நியாயங்களும் வெளிப்படை உண்மைகளும் இல்லை என்பதனை நாம் உணரலாம்.

அமெரிக்காவினது சிரியாவின் மீதான இராணுவ முன்னெடுப்பின் நியாயமற்ற காரணங்கள் பின்வருமாறு:

1.கடந்த இரண்டு வருடமாக சிரியாவில் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அனுமதித்தது மாத்திரமன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காயப்படவும் அனுமதித்தது.

2.எகிப்தில் ஜனநாயக அடிப்படையில் தெரிவசெய்யப்பட்ட முர்சியை பதவி கவிழப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கிவிட்டு ஆயிரக்கணக்கான மக்களை அல்-சிசி எனும் அரக்கன் கொன்று குவிக்க வழிசமைத்ததுடன் அங்கு மக்கள் புல்டோசர் கொண்டு நசுக்கப்படும் போது அவர்களுக்கு மனிதாபிமானமோ மனித உரிமையோ தென்படவில்லை.

3.இராக்கிய அமெரிக்க படையெடுப்புக்கு முதலில் 'ஹலாப்ஜா' எனும் இடத்தில் சதாம் ஹூசைன் குர்திசிய மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பிரயோகித்தும் அமெரிக்கா சதாம் ஹூசைன் பலவீனப்பட்டு விட்டவுடன் அதை பின்பு காரணமாகக் காட்டி ஈராக்கின் மீது மிகமோசமான ஒரு இராணுவ முன்னெடுப்பை தற்துணிவுடன் மேற்கொண்டது மாத்திரமன்றி 'பலுஜா' நகரில் யுரேனிய அனுக்கழிவுகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அந்த மக்களை கறுவறுத்த வரலாற்றுச் சாதனையை கொண்டுள்ளது.

4.அதேநேரம் இஸ்ரேல் 2009 இல் காசா மக்களுக்கு எதிராக 'வைட்பொஸ்பரசு' எனும் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியபோது அதனை கண்டுகொள்ளவில்லை.

அவ்வாறாயின் ஏன் அமெரிக்கா இன்று சிரிய மக்கள் விடயத்தில் அதீத அக்கறை எடுத்த நிலையில் ஒரு இராணுவ முன்னெடுப்பை காலனித்துவ கூட்டு சக்திகளான பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் களமிறங்கியுள்ளது?

இந்த அமெரிக்க தலைமையிலனா காலனித்து சக்திகளின் இந்த நகர்வின் அடிப்படைக் காரணம் இன்று அசாத் நலிவடைந்து விட்டான். அவனது பெரும் தொகையான ஆயுதங்களை முஜாஹிதீன்கள் தம்வசப்படுத்தி விட்டார்கள். இவர்கள் கிலாபா ஆட்சியை நிறுவப் போராடுகிறார்கள் என்ற நோக்கம் ஒரு புறமிருக்க அவர்களது தலையீட்டின் முலம் முஜாஹிதீன்களை பலமிழக்கச் செய்து அங்கு மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியெழுப்பட்ட ஜனநாயக ஆட்சியை நிறுவி கிலாபா மீள் உருவாக்கத்தை அவர்கள் தடுக்கவேண்டும்.

அதன் மூலமாகத்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளில் தங்கள் கரத்தை பலப்படுத்தி தொடர்ந்தும் வளங்களை உறிஞ்சவும் தங்களது நுகர்வுச் சந்தையாக முஸ்லிம் நாடுகளை தக்கவைக்கவும் முடியும் என்பதனை நன்குணர்ந்து எடுக்கும் அரசியல் மற்றும் இராணுவ நகர்வாக இஸ்லாத்திற்கு எதிரான யுத்தப்பிரகடனமாக ஒவ்வொரு முஸ்லிமும் இதனைப் பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவின் மனித நேய?


அமெரிக்காவின் மனித நேய ? குண்டுகளின் கோர தாண்டவம் இது ஈராக்கின் குழந்தைகள்

இவர்கள் சிரியா செல்லவேண்டியது தேவையா ?








Aug 23, 2013

சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் சொல்லும் செய்திகள். (ஒரு கணிப்பு.)




சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் பசர் அல் அசாத்தின் உண்மை நிலையை மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது . அத்தோடு மேற்கின் பக்குவமான முதலைக் கண்ணீரும் அதன் மீடியாக்களால் இதன் விடயத்தில் வடிக்கப் பட்ட நிலையில் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவ அரசியல் பற்றிய பார்வைகள் இதன் மூலம் மறைந்து போகின்றது .

பசர் அல் அசாதின் தரப்பு குறித்த ராக்கெட்டுகளை தான் ஏவவில்லை என மறுப்பதுடன் வேண்டுமானால் அதுபற்றி ஆய்வு செய்ய சர்வதேச சமூகத்தை வேண்டியுமுள்ளது .சம்பவம் இடம்பெற்ற பகுதி தலைநகர் டமஸ்கசின் மாகாண எல்லையான Ghouta என்ற பகுதியே

கடந்த புதன்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதும் இன்னும் சில சந்தேகங்களை ஏற்படுத்தி நிற்கின்றது .பொதுவாக சிரியக்களம் அதன் புரட்சிப் போராளிகளால் மரபு + கெரில்லா உத்தி கொண்ட போராட்ட முன்னெடுப்புகளை கொண்டே நகர்த்தப்பட்டுள்ளது .பொதுவாகவே ஊடுருவித் தாக்குதல் போன்ற இராணுவ உத்திகளை கெரில்லா அணிகள் இருளோடு கூடிய அதிகாலை நேரத்திலேயே மேற்கொள்வர் . இதன் போது எதிரி அணியின் பலம் வாய்ந்த பாதுகாப்பு நிலைகள் உடைக்கப் படுவதோடு எதிரி வான் வழி உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது போவதே அதற்கு காரணமாகும் .

பின்னர் சிதறிய எதிரிகளை 'கட் அவுட் ' போட்டு பிரித்து வேட்டையாடும் நிலை வரும்போது விடிந்து விடும் எதிரியோடு மிக நெருக்கமான சுடு தூரத்துக்குள் போராளிகள் வந்து விடுவர் இப்போதும் எதிரி ஆட்லறி உதவிகளையோ , வான் வழி உதவியையோ எதிர்பார்க்க முடியாது .அந்த வகையில் போராளிகள் குறித்த பகுதி ஊடாக டமஸ்கஸ் நகரை நெருங்கும் ஒரு பாரிய தாக்குதலை தொடுத்த வேலை சிரிய இராணுவத்தின் offensive line ,மற்றும் defensive line தாண்டிய நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் .(கிடைத்த தகவல்களின் படி டமஸ்கஸ் நகரம் சிரியப் போராளிகளால் முற்றுகையிடப் பட்டுள்ளது .)

பசர் அல் அசாதின் அண்மைய அறிக்கைகள் இன்னும் ஒரு விடயத்தை குறித்துக் காட்டுகின்றது .அது சர்வதேச தலையீட்டின் தேவையை இப்போது அவர் சிரியாவில் எதிர் பார்க்கிறார் என்பதே ஆகும். . கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இது சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவும் இதில் வேறு தலையீடுகள் தேவையில்லை என்று காட்டமாக கூறிய அவர் இப்போது சர்வதேச தலையீட்டை வேண்டி வருகிறார். எனவே இந்த சில்லரைக் கடவுளின் அல்லது முதலாளிக் கடவுள்களின் வேலையாக கூட இரசாயன ஆயுதப் பிரயோகம் இருக்கலாம்.

ஜனநாயக சிரியா மீதான புதிய package , U.N மற்றும் NATO இராணுவ சப்பாத்துக்கள் சிறிய மண்ணில் கால் பதிக்க அவசியம் வந்ததை காட்டும் நியாய அடையாளமாக கூட இந்த சம்பவம் இருக்கலாம். இஸ்ரேலின் தூக்குக் கயிற்றையும் , முதலாளித்துவத்தின் தோல்வி அரசியலையும் , உருவாக விட்டு பார்த்துக் கொண்டிருக்கவா முடியும்!? அழிந்து போவதை விட ஆழித்தாவது சற்று வாழ்வோம். எனும் நப்பாசை தான் இன்றைய சிரியா மற்றும் எகிப்து சொல்லும் செய்திகள் ஆகும்.

டமஸ்கஸ்ஸில் சிரிய இராணுவம் 'விஷவாயுவினை' உபயோகித்து தாக்குதல் !! 1300 பேரிற்கு அதிகமானவர்கள் பலி.


டமஸ்கஸ்ஸில் தம் பரம வைரிகள் நுழைவதை தாங்க முடியாமல் பஸர் அல் அஸாதின் இராணுவம் முஸ்லிம் போராளிகள் தாக்குதல்களை மேற்கொள்ளும் கள முனைகள் நோக்கி விஷ வாயு குண்டுகளை கொண்டு தாக்கியுள்ளது. கடந்த புதன்கிழமை (21 / இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டமஸ்கஸ் மாகாணத்தின் Ghouta மாவட்டத்திலேயே இந்த நச்சு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிகாலையில் நடாத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பரிதாபகரமாக தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

மக்கள் நெருக்கம் மிக்க Jobar பகுதியில் இந்த குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. டமஸ்கஸ்ஸிற்கு 03 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஷவாயு குண்டுகளை ஏந்திய முனைகளை ரொக்கட்களில் பொருத்தியே இந்த தாக்குதல் நிகழ்த்ப்பட்டுள்ளது.

Tahrir al-Sham Brigade அமைப்பினரின் தாக்குதல் அணியான Fadi al-Shami-ஐ இலக்கு வைத்தே இந்த குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. Jobar-Zamalka பகுதிகளை தம் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக முன்னேறிய போதே அதிகாலை 02.30-03.00 மணியளவில் இந்த குண்டுகள் ரொக்கெட்கள் மூலம் ஏவப்பட்டுள்ளன. இவை அப்பட்டமான இரசாயன தாக்குதல்கள் என்பது உறுதியாகியுள்ள போதும் சிரிய அதனை நிராகரித்துள்ளதுடன் தாங்கள் எந்த விஷ குண்டு தாக்குதல்களையும் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது நிகழ்த்தவில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. இந்த கொலைகார ஆட்சியாளர்களிற்கு ஆதரவாக ரஷ்யாவும் தன் பங்கிற்கு சிரியாவில் இரசாயன தாக்குதல்கள் நிகழ்த்தப்படவேயில்லை என கூறியுள்ளது.

1988-ல் சதாம் ஹுஸைன் குர்திஷ் போராளிகள் மேல் நடாத்திய இரசாயன ஏவுகனைத் தாக்குதல்களில் பல்லாயிரம் குர்திஷ் பொது மக்கள் பலியாகினர். இப்போது அதனை விடவும் மோசமான தாக்குதல்களை சிரிய ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். அண்ணலவாக 1300 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 1000 இற்கும் அதிகமானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், சிறுவர் சிறுமிகளாவர்.

“பாசிஸம் தன் தோல்வி தன்னை நெருங்கும் போது முதலில் தன்னை சூழ இருப்பவர்களையும் அழிக்க முற்படும்” என்பதே விதி.

டமஸ்கஸ் மாகாணம் சிரிய ஆட்சியாளர்கள் வசம் இருப்பதனால் இந்த படுகொலைகள் எகிப்திய படுகொலைகள் போல் ஊடகங்களால் வெளிக்கொணர முடியாத நிலையே இன்றும் உள்ளது.

Aug 21, 2013

இரசாயன படுகொலை (CHEMICAL ATTACKS)













S.O.S!!! CHEMICAL ATTACKS IN #DAMASCUS More than 1300 dead only this morning, include lot of women and children

Chemical massacre by #Bashar Al-asad #Syria today.


Chemical massacre by #Bashar Al-asad #Syria today.

சிரியா அல் Ghuda குழந்தைகள்


SyriaChemicalAttack From the children in Al Ghuda in Syria to the mothers of the Ummah - can you watch our small bodies suffocating and not work for change? Ina lilahi wa inailayhi ra'jioun

இரசாயன படுகொலையில் பாதிக்கப்பட்டவர்


They children are sleeping in #Syria today...permanently. Victims of Bashar Al-Assad's chemical massacre!!!!!!!