Showing posts with label மதீனா. Show all posts
Showing posts with label மதீனா. Show all posts

Jul 11, 2016

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-02


உலகில் உள்ள அத்தனை பயங்கரவாத இயக்கங்களுக்கும் சில அரசியல் இலக்குகள் உள்ளன. பயங்கரவாதம் என்பது அந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறை மாத்திரமே. ஒரு கிலாபாவை நிறுவுதல் அல்லது ஷரீஆவுடைய ஆட்சியை அமைத்தல் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இராணுவங்களை முஸ்லிம் நிலங்களில் இருந்து விரட்டுதல் அல்லது முஸ்லிம் நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சியார்ளகளைப் பதவியிறக்கம் செய்தல் என்ற ஏதாவது ஒன்றை ISIS இன் அரசியல் இலக்குகளில் ஒன்றாகக் கொள்ளலாம். அவ்வாறானதொரு தோற்றப்பாட்டையே மீடியாக்கள் உருவாக்கி இருக்கின்றன.

பொதுவாகவே எவ்வளவுதான் நியாயமான அரசியல் இலக்குகளாக இருந்தாலும் அவற்றைப் பயங்கரவாதம் என்ற வழிமுறையூடாக அடைந்து கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளையும் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதே சமூகத்தினால் இலக்குகளுக்கும் வழிமுறைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்து அறியமுடிவதில்லை என்பதால் பயங்கரவாதம் என்கின்ற வழிமுறையை எதிர்க்கின்ற அச்சமூகம் பயங்கரவாதத்தின் உயர்ந்த இலக்குகளையும் எதிர்க்க ஆரம்பிக்கும். ISIS என்ற இந்தப்பயங்கரவாத இயக்கத்திற்கு மீடியாக்களில் வழங்கப்படும் அதிகூடிய நேரஒதுக்கீடு, மற்றும் ISIS ஐ ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளோடு தொடர்புபடுத்திக்காட்டல் என்பவற்றின் மூலமாக இஸ்லாத்தின் எதிரிகள் இதனையே சாதித்துள்ளார்கள்: ISISஇன் பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற மக்கள் ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளையும் தற்போது எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள். ISISஇன் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்ட மேலைத்துவக் காலனித்துவ சக்திகளையும் அவற்றின் உள்நாட்டு முகவர்களையும் அவர்கள் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

எனவேதான் ISIS என்ற இந்த இயக்கம் முஸ்லிம் நாடுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடாது என்று விரும்புகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் கைப்பொம்மையா? என்று சந்தேகிக்கவேண்டி இருக்கின்றது. உண்மையிலேயே அவ்வாறு சந்தேகிப்போர் நிறையப்பேர் இருக்கின்றார்கள். இருப்பினும் இவர்கள் விடுகின்ற இமாலயத்தவறு என்னவெனில், முஸ்லிம் தேசங்களைத் தொடர்ந்து அடிமைத்துவத்தில் வைத்திருக்கவேண்டும் என்கின்ற அந்த இலக்கை அடைவதற்காக ISIS ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் – அல்லது அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் எனத் தாங்கள் நம்பும் - அந்தத் தீய சக்திகளைக் கண்டிக்காமல், ISIS என்ற அந்தக் கருவியைக் கண்டிப்பதாகும். அவ்வாறு செய்வதனால், உண்மையான குற்றவாளிகள் விமர்சனங்களிலிருந்து தப்பி விடுகின்றார்கள். ISIS மீது உண்டாக்கப்படும் வெறுப்பு இறுதியில் கிலாபா மற்றும் ஷரீஆ போன்றவற்றின் மீதான வெறுப்பாக மாறிவிடுகின்றது.

இஸ்லாமிய உலகில் இன்று எத்தனையோ அரசியல் / அறிவியல் இயக்கங்கள் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் இந்த அரசியல் / அறிவியல் இயக்கங்களின் இலக்குகளும் ISIS போன்ற இயக்கங்களின் இலக்குகளும் ஒன்றாக அமைவதும் உண்டு. ஒரு உதாரணத்திற்கு கிலாபா என்கின்ற இலக்கையே எடுத்துக்கொள்ளலாம். இது எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இலக்கு. ஆனால், ISISஐ முதலில் வெறுத்து, பின்னர் அந்த வெறுப்பின் தொடராய் கிலாபாவையும் வெறுப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்ட மக்களால் கிலாபா என்ற உயர்ந்த இலக்கைப் பயங்கரவாதம் அல்லாத அறிவியல் / அரசியல் வழிமுறைகளுக்கூடாகப் பெற்றுக்கொள்ளலாம், அவ்வாறு அதைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கும் இயக்கங்கள் இருக்கின்றன, அவ்வாறன இயக்கங்களுக்கு தாம் ஆதரவு வழங்கவேண்டும் என்ற உண்மைகள் புரிவதில்லை.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Mohamed Faizal

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-05

இறுதியில் நீங்கள் ஒரு பெரிய பொல்லால் அடித்துக் கொல்லப்படுவீர்கள்.


பயங்கரவாதம் என்ற பதப்பிரயோகத்தின் குளறுபடிகள்.
பயங்கரவாதம் என்ற சொல் பொதுவாக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வன்முறைச் சம்பவங்களுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தை நோக்குவோம்:
அமெரிக்காவில் இடம்பெற்ற ஒக்கலஹாமா குண்டுவெடிப்பின் போது 168 பேர் கொல்லப்பட்டு 680க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு ஆளானார்கள். அதேபோல் அமெரிக்காவின் பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பின் போது வெறும் 3 பேர் மாத்திரம் கொல்லப்பட்டார்கள்.
இந்த பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு அரசியல்வாதிகளாலும் மீடியாக்களாலும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று கண்டிக்கப்பட்டது. ஆனால், அதிக கொடுமை மிக்க ஒக்கலஹாமா குண்டுவெடிப்போ ஒரு வெறும் குற்றச்செயல் என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியே அழைக்கப்பட்டது. ஏனெனில், ஒக்கலஹாமா குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் முஸ்லிமல்லாத ஒரு வெள்ளைக்கார அமெரிக்கவன். பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு சந்தேகநபரோ ஒரு முஸ்லிம்.
பயங்கரவாதம் என்ற சொல்லை முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் வன்முறைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துகின்றார்கள். இதன் மூலம் முஸ்லிம் அல்லாதோரால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அத்தனை மகா பயங்கரவாதங்களும் ஒரு சாதாரண, போலீஸ் நிலையைப் பதிவுகளுக்குள் அடங்குகின்ற அன்றாட நிகழ்வுகளில் ஒன்று போல் சித்தரிக்கப்படுகின்றது. எனவே, பயங்கரவாதம் எனும் பதத்தைப் பயன்படுத்தப்படுவதாக இருந்தால் அது வன்முறை புரிவோரின் இன மத அடையாளங்களுக்கு அப்பால் பயன்படுத்தப்படவேண்டும். ஈராக்கில் அமெரிக்காவும், மியன்மாரில் அவர்களின் இராணுவ-தீவிர பெளத்த கூட்டமைப்பும், சிரியாவில் அசாத்தும் ரஷ்ய இராணுவமும் புரியும் வன்முறைகள் எல்லாமே பயங்கரவாதம் என்று அழைக்கப்படல் வேண்டும். இல்லையேல் அப்பதம் வழக்கிலிருந்து விலக்கப்படவேண்டும்.

அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கும் பயங்கரவாதத்திற்குமிடையான தொடர்பு.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னதான மற்றும் பின்னரான இரண்டு ஈராக்குகளையும் எடுத்துக்கொண்டால், ஆக்கிரமிப்புக்குப் பின்னரான ஈராக்கினுள்ளேயே வன்முறைக்குழுக்களும் வன்முறைகளும் தோற்றம் பெற்றன. ஆக்கிரமிப்புக்கு முன்னதான ஈராக் பாதுகாப்பும் இன மத ஐக்கியம் நிறைந்ததாகவும், அபிவிருத்தியில் உச்சநிலையத் தொட்டதாகவுமே இருந்தது.
அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ இராணுவங்கள் முஸ்லிம் தேசங்களில் உள்ள ஆளுகைக் கட்டமைப்புகளைச் சிதைக்கின்றபோது அங்கே ஒரு வலு-வெற்றிடம் தோன்றுகின்றது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக புதிய புதிய ஆயுதக்குழுக்கள் உருவாகுகின்றன. அது தவிர்க்க முடியாதது. அது இயற்கையானது.
ஜெர்மனிய நாட்சிக்கள் பிரான்ஸ் நாட்டை ஆக்கிரமித்தபோது பிரான்ஸ் நாட்டுக்குள்ளும் அவ்வாறான ஆயுதக்குழுக்கள் தோற்றம் பெற்றன. நாட்சிச எதிரிகளையும் அவர்களின் உள்ளூர் ஒத்துழைப்பாளர்களையும் விரட்டுவதற்காக வன்முறையை ஒருவழியாக இவர்கள் கருதினார்கள். இருப்பினும் எவரும் இந்த வன்முறைக் குழுக்களையோ பிரான்ஸிய சமூகத்தையோ குற்றம் சொல்லவில்லை. மாறாக, எல்லாவற்றிற்கும் அடிப்படைக்காரனமான ஜெர்மனிய நாட்சிக்களையே குற்றம் பிடித்தார்கள்.
ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கத்தின் நேரடி விளைவாக முஸ்லிம் தேசங்களில் வன்முறைக் குழுக்கள் தோற்றம் பெறுகின்றபோது, வெறுமனே அந்தக் குழுக்களும் அந்நாட்டு முஸ்லிம் மக்களுமே குற்றம் பிடிக்கப்படுகின்றார்கள். அடிப்படைக்காரனமான அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் தப்பித்துக்கொள்கின்றார்கள்.
சர்வதேச அரச பயங்கரவாதிகளை விட்டுவிட்டு, அவர்களின் பயங்கரவாதத்தைத் தினமும் அனுபவிக்கின்ற, பாதிப்புக்குள்ளான முஸ்லிம் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது வெறும் கோழைத்தனம். குறைந்தபட்சம் நான்கு வார்த்தைகள் கொண்டாவது முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் எவ்வாறு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு உள்நாட்டிலே வண்முறைக்குழுக்களின் பிறப்பிற்குக் காரணமாய் அமைகின்றது என்பதை எமது சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகள் முஸ்லிம்களை நோக்கி பயங்கரவாதம் என்ற பதத்தைத் திரும்பத்திரும்ப உபயோகிக்கப்பதற்கு இரண்டு பிரதான காரங்கள் இருப்பதாகக் கொள்ளலாம்: ஒன்று கவனக்கலைப்பு; மற்றையது முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தலும், முஸ்லிம்கள் மீதான மேலதிக பயங்கரவாதக் கட்டவிழ்ப்பிற்கான காரணிகளைத் தோற்றுவித்தலும்.

கவனக்கலைப்பு:

பொதுவாகவே மனிதர்களில் பெரும்பாலோனோர் இருக்கின்ற ஆதாரங்களை ஆராய்ந்து அல்லது வாதப்பிரதிவாதங்களைப் பரிசீலனை செய்து அதன் விளைவாக முடிவுகளுக்கு வருவதில்லை. அதிகாரத்தில் உள்ளோர் (இது அரசியல் அதிகாரமாக இருந்தாலும் சரி ஆன்மீக அதிகாரமாக இருந்தாலும் சரி) அவர்கள் எடுக்கின்ற முடிவுகளை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள்.
இன்றைய மேலைத்தேய உலகும் அவர்களுடைய மீடியாக்களும் மிகப்பெரும் அதிகார வர்க்கங்கள். இந்த அதிகார வர்க்கங்கள் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் அது ஒரு தேவவாக்கு போல், குரானிய வசனம் போல் அப்படியே பெரும்பாலோனோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்தவிதமான ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே அமெரிக்க-ஐரோப்பிய உலகு (முஸ்லிம்) பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் போது, அதன் பக்கவிளைவாய், கண்டனம் செய்கிற அமெரிக்க-ஐரோப்பிய உலகு பயங்கரவாதத்தை விட்டும் மிகவும் தூரமானவர்கள் என்ற ஒரு மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தை விட்டும் உலகின் கவனம் கலைக்கப்படுகின்றது. இது ஒருவகையான பிர்அவுனிய மாயாஜாலமே! இந்தக் கவனக்கலைப்பில், இந்த பிர்அவுனிய மாயாஜாலத்தில் அதிகமான முஸ்லிகளும் சிக்குண்டு போயுள்ளார்கள்.
அடுத்ததாக...
நச்சுப் பாம்புகளாகச் சித்தரிக்கப்படும் ஒரு சமூகம் இறுதியில் பெரிய பொல்லால் அடித்துக் கொல்லப்படும். இது ஒரு வரலாற்று உண்மை.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பொய்யான நச்சுப் பிரச்சாரங்களை முஸ்லிம்கள் எதிர்கொள்ளவில்லையெனில், முஸ்லிம்கள் அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தின் பாதிப்புக்களைத் தினமும் அனுபவிப்பவர்கள் என்கின்ற உண்மையை நாம் உலகுக்கு எடுத்துக் காட்டவில்லையெனில், அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளே அதிபெரிய பயங்கரவாதத்தின் ஊற்றிடம் என்பதை உலகுக்கு உணர்த்தவில்லையெனில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகளையும் அநீதிகளையும் அரச பயங்கரவாதங்களையும் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள்.
எனவே பயங்கரவாதம் பற்றிய ஆழமான அகலமான புரிதலை முஸ்லிம் சமூகம் எட்டவேண்டிய ஒரு மாபெரும் தேவை உள்ளது.
அந்தத் தேவையை எட்டச் செய்வதற்கான ஒரு சிறு முயற்சியே இந்தக் கட்டுரைகள். இதை அங்கீகரிக்குமாறு அல்லாஹ்வை வேண்டியவனாக....


Mohamed Faizal

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-04




இஸ்லாமிய / முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள் எதுவும் எந்தவொரு முஸ்லிம் பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அச்சமடைவதில்லை என்றும்; உண்மையில் அவ்வாறான குழுக்களின் இருப்பை அவர்கள் விரும்புகின்றார்கள் என்றும்; இதற்குக்காரணம் இக்குழுக்களின் இருப்பைக் காரணமாகவைத்து அவர்களால் தங்களின் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகளை இலகுவாக அடைந்துகொள்ளமுடியும் என்பதுதான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த வாரம் Dr. ஜாகிர் நாயிக் மற்றும் அவரது Peace TV இரண்டையும் தடைசெய்யக் கோரி இந்தியாவில் எழுந்துள்ள கூக்குரல் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இன்று இந்தியாவின் சின்னவீடாகிப்போயுள்ள பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் ஒன்றிற்கும் Dr. ஜாகிர் நாயிக் அவர்களுக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் பிதற்றுகின்றார்கள்.

Dr. ஜாகிர் நாயிக், பொதுவாக, மதங்களுக்கிடயான ஒற்றுமை வேற்றுமைகள் பற்றிப்பேசும் ஒரு அறிஞர். ஓரிரு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கெதிரான அமெரிக்க ஐரோப்பியப் பயங்கரவாதத்தைத் தோலுரித்துக்காட்டியும் உள்ளார். மேற்குலகினர் முஸ்லிம் பயங்கரவாத்தைச் சுட்டிக்காட்டுவதில் தம் வாழ்நாளைச் செலவழிப்பது தமது பயங்கரவாத்தைச் செயல்களிலிருந்து உலகின் கவனத்தைத் திருப்புவதற்கே என்பதையும் இவர் விளக்கியுள்ளார். இவரது இந்த அறிவியல் செயற்பாட்டை முடக்குவதற்காகவே இவரை அவர்கள் பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் ஒன்றோடு தொடர்புபடுத்துகின்றார்கள். இந்த வன்முறைச்சம்பவத்தொடு தொடர்புபட்ட ஒருவர் Dr. ஜாகிர் நாயிக்கின் சமூகவளைத்தலத்தில் இணைந்திருந்ததுதான் இதற்கு ஆதாரம் என்கின்றார்கள்.

(Dr. ஜாகிர் நாயிக் அவர்களை எதிர்த்துக்கொண்டு இஸ்லாமிய விரோதிகளோடு கைகோர்க்கவும் முஸ்லிம்களில் ஒருசாரார் புறப்பட்டுள்ளார்கள். இஸ்லாமிய சட்டக்கலை தொடர்பான விடயங்களில் இவரோடு உள்ளக முரண்பாடு கொண்டவர்களே இவர்கள்.)
*******
பயங்கரவாதம் பற்றிய சரியான புரிதலை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமெனில் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்” (Agent Provocateurs) மற்றும் “பொய்க்கொடித் தாக்குதல்” (False Flag Operations) என்றால்
என்னவென்று நாங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

“ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்”

அநீதிக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆட்படுகின்ற ஒரு சமூகம் நீதியையும் சுதந்திரத்தையும் பெறுவதற்கு முயற்சி செய்யும். பொதுவாக இந்த முயற்சிகள் அவசியமானவை; பாராட்டப்படவேண்டியவை; அனைவரும் பங்கெடுக்கவேண்டியவை. இருப்பினும் இம்முயற்சிகளிற் சில, சில சமையங்களில், புறநடையாக, உசிதமற்ற முயற்சிகளாக அமைவதும் உண்டு. இவ்வாறன உசிதமற்ற முயற்சிகளில் ஒன்றுதான் பயங்கரவாதமும்.

பயங்கரவாதிகள் எனப்படுவோரின் இலக்குகள் உன்னதமானதாக இருப்பினும் அவர்களின் வழி முறைகள் சாத்தியமற்றவையாக, ஆபத்தானவையாக, எமது உன்னதமான இலக்குகளை விட்டும் எம்மைத் தூரப்படுத்துபவையாக அமைந்து விடுகின்றன. எனவே இவ்வாறான உசிதமற்ற முயற்சிகள் அறிவுரைகளூடாக சீர் செய்யப்படவேண்டும். உசிதமற்ற முயற்சிகளைக் காட்டிக்கொடுப்புகள் மூலம் சீர்திருத்தம் செய்யலாம் என்பது சீர்திருத்தம் என்கின்ற இன்னுமொரு உயர் இலக்கிற்கான இன்னுமொரு பிழையான வழிமுறை; இன்னுமொரு உசிதமற்ற முயற்சி. காட்டிக்கொடுப்புகள் அநீதிக்கு ஆட்பட்ட சமூகத்தை மேலும் பலமிழக்கச் செய்யும்; அதற்கெதிரான அநீதிகளை இன்னும் அதிகரிக்கும்; அதிகரிக்கின்ற அந்த அநீதிகள் இன்னும் அதிகமான உசிதமற்ற வழிமுறையாளர்களின் பிறப்பிற்குக் காரணமாகும். இதனை ஒரு “விஷியஸ் சைக்கிள்” என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

அநீதிகளைக் கண்டு ஆத்திரப்படாதவன் ஒரு ஜடம். அவனால் எதுவித பிரயோசனமில்லை. ஆனால், அநீகளுக்கெதிரான நியாயமான அந்த ஆத்திரம் மாத்திரம் இருப்பது போதாது. ஆத்திரம் என்பது ஒரு உனர்ச்சி. வெறும் உணர்சிகளால் மாத்திரம் உந்தப்படும் செயல்கள் எதிர்பார்க்கப்படும் விளைவுகளைத் தரப்போவதில்லை.

ஆகவே ஆத்திரமும் சீரான சிந்தனையும் ஒன்றிணையவேண்டும். அவ்வாறு இரண்டும் ஒன்றாகக் கிடைக்கப்பெற்றவனே பிரயோசனமான ஒரு மனிதன். அவனால் மாத்திரமே தீர்வுகளுக்கான சரியான வழிமுறைகளைக் கண்டறிய முடியும். அத்துடன், தன்னிடமுள்ள ஆத்திரத்தையெல்லாம் ஒரு இயக்க சக்தியாக மாற்றி தீர்வுக்கான வழியில் பயணிக்க முடியும்.

அநீதிக்கு ஆட்பட்ட எந்தவொரு சமூகத்திலும் அதிக ஆத்திரமும் குறைவான, சீரற்ற சிந்தனைகளும் கொண்ட ஒரு சிலர் இருப்பது இயற்கையானதே. இதற்கு முஸ்லிம் சமூகம் விதிவிலக்கல்ல. 

“ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்”
எனப்படுவோர் இவ்வாறான அதிக ஆத்திரமும் சீரற்ற சிந்தனைகளும் கொண்ட இளைஞர்களைத் தேடி அலைவார்கள். அவர்களின் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பேசி அவர்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற ஆத்திரத்தை இன்னும் அதிகரிப்பார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கின்ற அல்லது அவ்வாறு கருதப்படுகின்ற தேசத்திற்கெதிராக அல்லது சமூகத்திற்கெதிராக வன்முறைகளில் ஈடுபடத் தூண்டப்படுவார்கள். அவ்வாறன வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்குத் தேவையான பயிற்சிகளையும் தளவாடங்களையும் வழங்குவார்கள். இவர்கள் “வெற்றிகரமாக” ஒரு வன்முறையைப் புரிந்துவிட்டால் மிக்க மகிழ்ச்சியுறுவார்கள். ஏற்கனவே வன்முறையைப் பிரயோகித்துக்கொண்டிருந்த அரசோ அல்லது சமூகமோ இந்த வன்முறையைச் சுட்டிக்காட்டித் தங்களை பாதிக்கப்படுவோராகக் காட்டும். இந்த வன்முறையைக் காரணம் காட்டி புதியதும் அதிகமானதுமான வன்முறையத் தங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடும்.

“பொய்க்கொடித் தாக்குதல்” என்பது அநீதிகள் இளைத்துக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தை அல்லது குழுவைப் பிரதிநிதித்துவம் செய்யும் முகவர்கள், குறிப்பாக புலனாய்வுப் பிரிவுகள், தாமாகவே நேரடியாக தாம் பிரதிநிதித்துவம் செய்யும் அரசுக்கு அல்லது சமூகத்திற்கு எதிரான ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து, பின்னர் அந்தப் பழியை எதிரிச் சமூகத்தின் மீது சுமத்துவதைக் குறிக்கும். இவ்வாறான “பொய்க்கொடித் தாக்குதல்களின்” விளைவும் நான் மேலே விளக்கிய “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்களின்” செயற்பாடுகளை ஒத்ததாகவே இருக்கும்.

(சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்ட “பொய்க்கொடித் தாக்குதல்கள்” மற்றும் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்களின்” செயற்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்களை நீங்கள் சுயதேடலில் பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.)

எனவேதான், முஸ்லிம் சமூகத்தைப் போன்ற ஒரு (underdog) சமூகத்திற்கெதிராகப் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இடம்பெற்ற பயங்கரவாதச் செயலில் “பொய்க்கொடித் தாக்குதல்கள்” மற்றும் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்” களின் வகிபாகம் என்னவென்றெல்லாம் நாங்கள் ஆராய முற்படவேண்டும். இதயசுத்தி இழந்து, எதிரிகளிடம் நற்பெயர் பெறவேண்டும் என்ற நோக்கில், வேண்டாதவனைக் காட்டிக்கொடுக்கவேண்டும் என்ற முனைப்புகளோடு சக முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமாகப் பயங்கரவாத முத்திரை குத்தப் புறப்படக்கூடாது.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Jul 8, 2016

ரமதானும் குண்டுவெடிப்புகளும்

முஃமீன்களின் குருதி அநியாயமாக சிந்தப்பட்ட இன்னுமொரு ரமதானை சற்று முன்னரே நாம் தாண்டியிருக்கிறோம். இஸ்தான்புல் விமானநிலையத் தாக்குதலாக இருக்கலாம், டாக்கா சிற்றுண்டிச் சாலைச் தாக்குதலாக இருக்கலாம், கராச்சியில் கவ்வாலின் படுகொலையாக இருக்கலாம், பக்தாத் சிடி சென்டர் குண்டு வெடிப்பாக இருக்கலாம், இன்று புனித்தளமான மதீனா அல் முனவ்வரா உட்பட அரேபிய தீபகற்பத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களாக இருக்கலாம் - அவை அனைத்தும் ரமதானின் புனிதத்தன்மையை மதியாத, உம்மத்தை கதிகலங்க வைத்த நிகழ்வுகளாக இடம்பெற்று இருக்கின்றன.
இவ்வாறு இந்த புனித மாதத்தில் பதைக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட எமது உறவுகளை அல்லாஹ்(சுபு) ஷ}ஹதாக்களாக ஏற்றுக்கொள்வானாக! இவற்றில் அகப்பட்டு காயமடைந்தவர்களுக்கு விரைவான சுகத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிறைவான பொறுமையும் வழங்குவானாக!
இவை இஸ்லாமிய குழுக்களில் கைவேலைகள் என்று சிலர் கூற, இன்னும் சிலர் அவை போன்ற குழுக்களின் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட சில தனிநபர்களின் தன்னிச்கையான கருமங்கள் என நம்ப, இன்னும் சிலர் இவை வெளிநாட்டு நாசகார பாதுகாப்பு முகவர்களின் சதிவேலைகள் என வாதாடலாம்.
எனினும் எது நிச்சயமானது என்றால் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சூழ்ச்சிகள் பலிக்காத அல்லாஹ்(சுபு)வின் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்பதே.
மேலும் எது நிச்சயமானது என்றால் சிந்தப்பட்ட இரத்தையும், உருவாகியிருக்கும் பீதியையும் தாண்டி இந்த நிகழ்வுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் எதிரிகளும், முஸ்லிம்களின் எதிரிகளும் கச்சிதமாகப் பயன்படுத்துவார்கள் என்பதுமே.
  • முஸ்லிம் உலக அரசுகள் இந்த நிகழ்வுகளை விமர்சகர்களினதும், அரசியல் எதிராளிகளினதும் குரல்வலைகளை நசுக்குவதற்காக பயன்படுத்துவார்கள். அத்தகையவர்கள் வன்முறை நடவடிக்கைகளுடன் எவ்வித தொடர்பற்றிருந்தாலும் கூட. சவூதி மன்னர் சல்மான் தீவிரவாதத்தை இருப்புக்கரம் கொண்டு நசுக்கப்போவதாக நேன்று முன்தினம் தெரிவிருத்திருந்தமை இதற்கொரு நல்ல சமிக்ஞை.

  • மேற்குலக அரசாங்கங்கள் தமது இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு இந்தத் தாக்குதல்களை பயன்படுத்துவார்கள்.

  • இஸ்லாத்தின் எதிரிகள் இந்தத் தாக்குதல்களை இஸ்லாத்தின் அரசியல் சிந்தனைகளை மலினப்படுத்துவதற்கும், இஸ்லாத்தை மதச்சார்பின்மையாக்க அழைப்பு விடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

  • இந்த நிகழ்வுகள் முஸ்லிம் உலகில் காணப்படும் இஸ்லாமிய மாற்றத்திற்கான அழைப்புக்களிலிருந்து மக்களை தூரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். 70களின் எகிப்த்திலே பயன்படுத்தப்பட்டதைபோல...90களில் அல்ஜீரியாவிலே பயன்படுத்தப்பட்டதைப்போல...

  • இத்தகைய நடவடிக்கைகளைக் பயன்படுத்தி இஸ்லாமே வன்முறைகளின் தோற்றுவாய் எனப் பரப்புரை செய்யப்படும் புனைவுகளால்; பஷாரினது அல்லது சீசியினது சடவாத அரசுகள் நிகழ்த்தும் வன்முறைகளும், காலணித்துவ அல்லது நவகாலணித்துவ அரசுகளான சவூதியும், குருங்குழுவாத பக்தாத் அரசும் புரியும் அயோக்கியங்களும்;, மேற்குலக சக்திகள் ஆளில்லா விமானங்களையும், நேரடி படையெடுப்புக்களையும்; பயன்படுத்தி மேற்கொள்ளும் அத்துமீறல்களும், பலஸ்தீனத்திலும், காஷ்மீரிலும் தசாப்த்தங்களாக தொடரும் ஆக்கிரமிப்புக்களும் மூடி மறைக்கப்படும். இஸ்லாமே அனைத்து பிரச்சனைகளுக்குமான சூத்திரதாரி என காட்டப்படும்.

ஆனால் உண்மை தலைகீழானது. இஸ்லாத்தின் அரசியல் பிரசன்னம் உலகில் இல்லாமையே அனைத்து பிரச்சனைகளுக்குமான மூலம் என்பதைதான் வரலாறு பகர்கிறது!
எமது உலகில் நிலைக்கும் இந்த அராஜகச் சூழல் 1924 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உத்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சியிலிருந்தே வீரியமடைந்தது.
இன்று முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதோர்களையும், குருங்குழுவாத வேறுபாடுகளாலும், சிந்தனைப்பள்ளி பிரிவுகளாலும் வேறுபட்டவர்களையும் ஓர் தேசத்தின் பிரஜைகளாக நீதமாக வழிநாடத்தும் கலீஃபா எம் மத்தியில் இல்லை. மாறாக இன்று எம்மீது வீற்றிருப்பது பிரித்தாளும் நரித்தனத்திற்கு இந்த வேறுபாடுகளை பயன்படுத்தும் கொடுங்கோல் ஆட்சியாளர்களே.
வெளிநாட்டுப் படையெடுப்புக்களில் இருந்து எம்மை பாதுகாப்பதற்கும், எமது நிலங்களை ஆக்கிரமிப்புக்களிலிருந்து மீட்டெடுப்பதற்கும் எமக்கொரு கேடயம் (இமாம்) இல்லை. எது சரி, எது பிழை என அதிகார பூர்வமாக வழிகாட்ட எமக்கொரு தலைமை இல்லை. எமது நிலங்களில் இன்றிருக்கும் உயர்தர ஆன்மீகத் தலைவர்களில் அனேகர் அவ்வவ்வரசுகளின் ஊதுகுழல்களாகவே தொழிற்படுகின்றனர்.
உலக வல்லாதிக்க சக்திகளின் கொடிய முதலாளித்துவ கொள்கைகளால் அல்லலுறும் முஸ்லிம்களையும், ஏனைய நலிவுற்ற மக்களையும் மீட்டெடுப்பதற்கு எமக்கொரு அமீருல் முஃமிமீன் இல்லை. மாறாக கொடிய முதலாளித்துவதற்கு இஸ்லாமியச் சான்றுதல் அளிப்பதற்கு எம்மில் பல தலைமைகள் தலையெடுத்திருக்கிறார்கள்.
எனவே முஃமீன்களின் உயிரழப்புக்களுக்காக கண்ணீர் வடிக்கும் நாம், இத்தகைய நாசகார நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடையும் நாம் இந்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேற்றப்படும் இன்றைய உலக சூழலை மறந்து அவற்றைப் பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வுகளின் கர்த்தாக்கள் யார்? அரங்கேற்றாளர்கள் யார்? பாத்திரங்கள் யார்? அதற்காக ஆடுவது யார்? பாடுவது யார் என்பதை ஆழமாக நோக்க வேண்டும். இந்த இழி நிலையை உலகு ஏன் அனுபவிக்கிறது? அதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன என்பதை வஹியின் வெளிச்சத்தில் தேட வேண்டும்.
அவ்வாறு செய்தால்...
மனிதகுல அவலங்களின் தீர்வுக்கும், பீடித்திருக்கும் பீதிகளின் முடிவுக்கும், முழு உலக அமைதிக்கும் வல்ல இறைவன் எதனை தீர்வாக முன்வைக்கிறானோ அதன் பக்கம் எம் கவனம் குவியும். உலகம் அமைதிப் பூங்காவாக மலரும். தீர்வு திருமறையின் ஒரே வசனத்தில் இவ்வாறு அமைகிறது,
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அந்நூர்:55)

Sources : Darulaman.net

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-03


இன்று அநேகமான முஸ்லிம்கள், முஸ்லிம்கள் பயங்கரவாதிகளும் அல்ல இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் மார்க்கமும் அல்ல என்பதை நிரூபிப்பதற்குக் கடும் பிரயத்தனம் எடுப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த முயற்சியின் விளைவுதான் மதீனாவில் நடந்தது போன்ற ஒரு வன்செயலுக்குக் காரணம் முஸ்லிம்களில் ஒருசாரார்தான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட உடனேயே முந்தியடித்துக்கொண்டு அந்த வன்செயலைக் கண்டிப்பதுவும், அதற்குக் காரணமானவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டோருக்கு காபிர்கள் என அவசரமாக பத்வா கொடுக்கமுனைவதும்.

சாதாரனமாக எந்தவொரு குற்றச்செயலும் இழைக்கப்படும்போது எழுப்பப்படும் கேள்விகள் எதுவும் இங்கு எழுப்பப்படவில்லை. இதில் ஒரு மடமையும், தெளிவான ஒரு சுயநலமும் இருக்கின்றது: தாங்கள் எந்த வகையிலும் குற்றவாளிகள் அல்ல என்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்போர் முன்னிலையில் நிரூபித்து நற்பெயர் பெறவேண்டும் என்ற ஒரு உந்துதல் இருக்கின்றது.

இவ்வாறு நாம் செயற்படுவது எமது சுயபெறுமானம் வலுவிழந்த நிலையக்காட்டுகின்றது. அவ்வாறு செய்யவேண்டிய எந்தத் தேவையும் எமக்கில்லை. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பதிலளிப்பதையே ஒரு மார்க்கக் கடமையைப்போல் நாம் எடுத்துக்கொண்டால் நாம் ஒருபோதும் முன்னேற்பாட்டுச் செயற்பாட்டாளர்களாக (proactive) மாறமாட்டோம்; தொடர்ச்சியான எதிர்வினைச் செயற்பாட்டாளர்களாகவே (reactionary) இருப்போம். அதாவது, எமக்கென சொந்தமான எதுவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், எம் எதிரிகளின் நிகழ்ச்சிநிரலிலேயே இயங்கிக்கொண்டிருபோம். எமது பொதுஎதிரிகள் யார் என்பதை மறந்து, அவர்களின் நோக்கங்கள் என்ன என்பதை மறந்து, எம் இருப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பான அவர்களின் வேலைத்திட்டங்கள் என்ன என்பதை மறந்து உள்ளக முரண்பாடு வளர்ப்பதிலேயே நாம் காலம் கழிப்போம். இது எழுச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத்தின் பண்பாக இருக்கமுடியாது.

எமக்கிடையான உள்ளக முரண்பாடுகள் மிகவும் உக்கிரமாகத் தூண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஈரான் மற்றும் சவூதியின் ஊக்குவிப்போடு குறிப்பாக ஷீஆ-சுன்னி முரண்பாடுகள் இன்று சூடுபிடித்து வருகின்றன. சவூதி சலபிக்களை எதிர்க்கும் சில ஷீஆ ஆதரவுக் குழுக்கள் தங்களின் எதிரிகளை ISIS காரர்களாகச் சித்தரித்து காட்டிக்கொடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவர்களுக்கு
ISIS இலங்கையில் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கு விடைகான்பதில் எதுவித அக்கறையும் இல்லை. தங்கள் எதிரிகளைக் காட்டிக்கொடுத்துப் பழிவாங்கவேண்டும் என்ற வேட்கையில் இலங்கையிலும் ISIS இருக்கின்றது என்ற மாயையையும் அச்சத்தையும் இவர்கள் தோற்றுவிக்க முனைகின்றார்கள்.

அத்துடன் இந்தக் காட்டிக்கொடுப்புகள் சில சவூதிசார் சலபிக்களாலும் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. சவூதியின் சர்வாதிகாரப் போக்கையும், அதன் காலனித்துவ நாடுகளுடனான கள்ளத்தொடர்பைக் கண்டிக்கின்ற அத்தனை குழுக்கள் மீதும் இவர்கள் ISIS முத்திரை குத்துவார்கள். இக்குழுக்களின் வழிமுறை வன்முறை அற்ற வெறும் அரசியல் / அறிவியல் வழிமுறையாக இருக்கின்றபோதும் கூட இந்தக் காட்டிக்கொடுப்பைச் செய்ய இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

2011ஆம் ஆண்டிலே ஆப்கானிஸ்தானிற்குள் தாலிபான் என்ற “பயங்கரவாதிகளும்” 2013ஆம் ஆண்டிலே ஈராக்கிற்குள்ளே சத்தாம் ஹுசைன் என்ற “பயங்கரவாதியும்” இருப்பதாகக் கூறிய அமெரிக்கா அவ்விரு “பயங்கரவாதிகளிடமுமிருந்து”அந்நாட்டு மக்களைத் தான் விடுவிக்கப்போவதாகப் பொய்க்கோசம் எழுப்பியது. அப்போது ஆப்கானிஸ்தானிற்கு எதிராக ஈரானும், ஈராக்கிற்கு எதிராக சவூதியும் அமெரிக்காவுடன் இணைந்து காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அந்தத் துரோகத்தனத்தின் விளைவாக இன்றும் அவ்விரு நாடுகளிலும் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று இங்கு (இலங்கையில்) இல்லாத ஒரு ISIS இற்கு எதிரான காட்டிக்கொடுப்பு அவ்வாறன ஒரு விபரீதத்தையே ஏற்படுத்தும்.

அமெரிக்கா உலகில் உள்ள எந்தவொரு இராணுவச் சக்தியுடனும் ஒப்பிடமுடியாத அளவு பலம் கொண்ட ஒரு இராணுவச் சக்தி. அதனோடு இரானுவரீதியாகப் பொருதி வெற்றிகொள்ளக்கூடிய எந்தவொரு நாடும் உலகில் இல்லை. அப்படியிருக்க, சாதாரண ஆயுதக்குழுக்களால் எவ்வாறு அதனைத் தோற்கடிக்க முடியும்? எனவே எந்தவொரு பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அமெரிக்கா அச்சமடைவதில்லை. மாறாக அவ்வாறன பயங்கரவாதக் குழுக்களின் இருப்பு அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகின்றது. ஏனெனில், அவ்வாறன குழுக்கள் இருக்கின்றபோதுதான் அமெரிக்காவை எங்கள் நாடுகளுக்குள்ளும் சமூகங்களுக்குள்ளும் வரவேற்கின்ற துரோகிகள் எங்களுக்குள் உருவெடுக்கின்றார்கள். எனவே, உண்மையிலேயே அவ்வாறன பயங்கரவாதக்குழுக்கள் இல்லாவிடில் அவற்றைத் தாமே தோற்றுவிக்கும் பணியிலும் தாமே இறங்குகின்றார்கள். இதற்கான சான்றுகள் தென்னமெரிக்க நாடுகளுடனான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் நிறையவே காணக்கூடியதாக உள்ளது.

எனவே எம்மத்தியில் ISIS போன்ற குழுக்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்ற கேள்விகளும்; உண்மையிலேயே அவை காணப்பட்டால் அவற்றைத் தோற்றுவித்தது யார்? என்ற கேள்விகளும்கூட அர்த்தமற்றவை. இருக்கின்ற அல்லது இல்லாதிருக்கின்ற இந்தப் பயங்கரவாதக்குழுக்களைக் காரணமாகக் காட்டி அமெரிக்கா (மற்றும் ஏனைய முஸ்லிம் விரோத சக்திகள்) எவ்வாறு எங்களுக்குள் ஊடுருவல் செய்யமுனைகின்றன என்பதிலேயே எங்கள் பிரதான கவனம் இருக்கவேண்டும். முஸ்லிம் நாடுகளுக்கெதிரான இன்றைய யுத்தங்களைத் தலைமை தாங்குகின்ற மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள்தான் எங்களின் எதிரிகள். அந்நாடுகளின் நகர்வுகள் தொடர்பாகவே நாங்கள் அதிகூடிய கவனம் செலுத்தவேண்டும்.

இயக்கவெறி என்ற நோய்க்கு ஆட்படாத எவராலும் இந்த இயக்கவாதத்தின் ஆபத்துகளை உணரமுடியும். இந்த இயக்கவெறி நோயிலிருந்து இந்த உம்மத்தைக் காப்பதற்கான ஒரேயொரு வழி எமது பொது எதிரி யார் என்பதை அடையாளப்படுத்திக்கொண்டு அந்த எதிரி தொடர்பான எமது செயற்பாடுகளைக் கூட்டிக்கொள்வதில்தான் உள்ளது.

எமது பொதுஎதிரி மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள்தான். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இவர்களின் யுத்தங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலத்தில் தொடங்கிய முஅத்தா யுத்தம் முதல், பின்னர் சிலுவை யுத்தங்கள், அதன் பின்னர் காலனித்துவம், தற்போது “பயங்கரவாதத்திற்கு” எதிரான யுத்தம் என்று தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே எமது பொது எதிரி மீதான கவனத்தை விட்டுவிட்டு முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற அல்லது இருப்பதாகச் சொல்லப்படுகின்ற குழுக்களை விமர்சிப்பதிலேயே நாம் காலம் கழிப்பது எமது எதிரிக்கு நன்மையாகவே அமைகின்றது. நாம் அப்படிச் செய்வதையே அவர்களும் விரும்புகின்றார்கள்.

அமெரிக்கா எந்தவொரு பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அச்சமடைவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்குக்காரணம் அதனிடம் இருக்கின்ற அதியுயர் இராணுவ பலம். அமெரிக்கா மிகவுமே அஞ்சுவது அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனங்களைத் தோலுரித்துக்காட்டி மக்கள் மனங்களிலிருந்து அதனைத் தூரப்படுத்த முனைகின்ற அறிவியல் / அரசியல் இயக்கங்களையே. உதாரணமாக இலங்கையில் உள்ள ஒரு இஸ்லாமிய இயக்கம் இலங்கைவாழ் சமூகங்களிடையே அமெரிக்காவின் காலனித்துவ யதார்த்தத்தைப் புரிய வைத்து, அதன் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக்காடுகின்ற வேலையைச் செய்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த முயற்சியில் அது வெற்றியும் பெறுகின்றது என்றும் வைத்துக்கொள்வோம். இதன் விளைவு என்னவாக இருக்கும்? இது இலங்கை – அமெரிக்காவிடையான உறவுகளில், ஒத்துளைப்புகளில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும்? இவ்வாறான இயக்கங்கள் உலக நாடுகள் அனைத்திலும் செயற்பட்டால், உலகநாடுகளிடையே அமெரிக்காவின் நிலை என்னவாகும்? எனவே அமெரிக்கா, மற்றும் காலனித்துவ ஐரோப்பிய சக்திகள் மிகவும் அஞ்சுவது இவ்வாறான முஸ்லிம் அறிவியல் / அரசியல் இயக்கங்களையே. எனவே, ISIS போன்ற இயக்கங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அச்சத்தையும் கோபத்தையும் பயன்படுத்தி, வன்முறையற்ற, சாத்வீகமான அறிவியல் / அரசியல் முயற்சிகளை முன்னெடுக்கின்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் இவர்கள் தடை செய்வார்கள். இதை முஸ்லிம்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் அனைவரும் மிகவும் வருந்தவேண்டி வரும்!



From Mohamed Faizal
(தொடரும் இன்ஷா அல்லாஹ்