Showing posts with label சீனா(Xinjiang). Show all posts
Showing posts with label சீனா(Xinjiang). Show all posts

Jun 14, 2016

சீன அரசின் Xīnjiāng மாகாண முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளும் அதன் எதிர் விளைவுகளும் !! (மீள்பதிப்பு)



 
 



ரமழான் மாதம் வந்து விட்டாலே, ஒரு கரப்பான் பூச்சியை அல்லது ஓர் எலியை பார்ப்பது போல் முஸ்லிம்களை தொடர்ந்து கவனமாக அவதாானிக்கும் சீன காபிர்கள்.

Xinjiang. சரியாக சொன்னால் சீனா ஆக்கிரமித்த கஸகிஸ்த்தான், கிருக்கிஸ்த்தான், தஜிக்கிஸ்த்தான பெரு நிலப்பகுதி. சீன அரசு ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வந்து விட்டால் Xinjiang-ல் உள்ள முஸ்லிம்களின் அடிப்படை மனித உரிமைகளை மிக மோசமாக நசுக்குவது வழமையான விடயம். இம்முறையும் அது தனது அதிகார எல்லைகளிற்கு அப்பால், பொது நிறுவனங்களின் ஊடாகவும் அவர்களின் மீது தனது காட்டுத்தனமான உரிமை மீறல்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளது. இதில் தனியார் கம்பனிகள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், கல்லூரிகள் என பலவும் அடங்கும். மாகாணம் முழுவதும் இந்த சட்டங்கள் அமுலானாலும் இதன் உச்ச தாக்கங்கள் தலைநகர் உரும்கியிலேயே விளைந்துள்ளது.

ஒரு காலத்தில் பெரும்பான்மையாக உய்க்குர் முஸ்லிம்களும், அடுத்த சிறுபான்மையாக கஸாக் முஸ்லிம்களும் இருந்த இந்த மாகாணத்தில் சீன அரசு மிக நீண்டகாலமாக திட்டமிட்ட சட்டவிரோத குடியேற்றங்களை உருவாக்கி அங்கு 5 விகிதமாக இருந்த ஹான் இன சீனர்களை உய்க்குர் முஸ்லிம்களிற்கு சமானமாக பெருக்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி 42:42 என்ற சம விகிதாச்சாரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதுடன் கஸாக் முஸ்லிம்களை மிகச் சிறுபான்மையாளர்களாகவும் மாற்றியுள்ளது. உய்க்குர், கஸாக் மொழிகளை பேசுவதை பின்னிலைப்படுத்தி மன்டரின் மொழியை கட்டாய அரச மொழியாக சீன அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சரி ரமழானில் என்ன நடக்கிறது அங்கே என்று பார்ப்போம்.

இந்த ரமழானில் பாடசாலை மாணவர்களும் நோன்பு பிடிக்க முடியாத நிலை. கல்லூரி நிறுவாகங்கள் ஒரு உணவுப்பார்சலையும், தண்ணீர் போத்தலையும் முஸ்லிம் மாணவர்களிற்கு பலவந்தமாக கொடுத்து அதனை மதியம் உண்டு பருகும் படி வற்புருத்துவதுடன் யார் உண்கிறார்கள்?, யார் உண்ணவில்லை? என்பதனை கவனாக கண்காணிக்கிறார்கள். உண்ண மறுக்கும் மாணவர்கள் பற்றிய விபரம் உடனடியாகவே மாகாண பொலிஸாரிற்கு தெரியப்படுத்தப்படுகிறது. குறித்த மாணவர்களின் வீடுகளிற்கு உடனடியாக விரையும் பொலீஸார் அந்த மாணவர்களின் தாய் தந்தையர் மேல் விசாரணைகளை மேற்கொள்வதுடன் தேச துரோக வழக்குகள் வரை பதிவு செய்கின்றனர். 
இதற்கு ஒரு படி மேலாக Kashgar Normal College நிர்வாகம் சென்றுள்ளது. மாணவர்களிற்கு கடந்த மாதமே அது ஒரு சுற்று நிருபம் அனுப்பியுள்ளது. அதில் யாராவது நோன்பு நோற்றால் அவர்களை உடனடியாகவே வெளியேற்றுவோம் என்றும், இதற்கு முன் அவர்கள் தங்கள் கல்லூரியில் பெற்ற டிப்ளோமா மற்றும் உயர் சான்றிதல் கற்கை நெறிகளை உடனடியாகவே வலிதற்றதாக இரத்தச் செய்வோம் என்றும் அறிவித்துள்ளது. (2014)

இந்த நிலைமை தொழிற்சாலைகள், அலுவலகங்கள், தனியார் வேலைத்தளங்கள், சுரங்க அகழ்வு நிலையங்கள் என்று எல்லா மட்டங்களிலும் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரச ஸ்தாபனங்களிலும், அலுவலகங்களிலும் கேட்கவே தேவையில்லை. கரப்பான் பூச்சியை அவதானமாகப்பார்க்கும் நிலையில் நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் சீன காபிர்களால் உற்று நோக்கப்படுகிறார்கள்.

தராவீஹிற்கு தடை. ரமழான் உபந்நியாசங்களிற்கு தடை. சிறப்பு பிரசங்கங்களிற்கு தடை. ஏன் 03 பேர் ஒன்றாக ரமழானில் கூடி நின்று பேசுவதற்கும் தடை. இப்தார் நிகழ்வுகள் கூட தங்கள் வீடுகளில் மட்டும் தமக்கு தாமே நிகழ்த்திக்கொள்ள வேண்டும். அடுத்த வீட்டிற்கு சென்று கூட்டாக நோன்பு திறந்தால் கூட அது, புரட்சிகர சீனக்குடியரசிற்கு எதிரான ஒன்று கூடல் என்றே சட்டம் சொல்கிறது. புரிகிறதா ரமழானின் நிலை வடமேல் சீன மாகாணத்தில்?...

ஆனால் இந்த உரிமை மீறல்களையும், சீன அரசின் கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஈமானிய உந்துதலால் இரகசியமாக பல்லாயிரக்கணக்கான உய்க்குர் சீனர்கள் நோன்பு நோற்கிறார்கள். சின்சியாங்கின் பெரு நகரங்களிளேயே சீன காவலர்களினால் மோப்பம் பிடிக்க முடிகிறது. 1005 சிறு நகரங்களும் கிராமாங்களும் உள்ள இந்த மாகாணத்தில் அவர்களால் இதனை தடுக்க முடியாமல் போயுள்ளதே உண்மை நிலை.

ஐயன்ஸ்டைன் சொல்லும் ஒரு தாக்கத்திற்கு மறு தாக்கம் உண்டு எனும் பொளதீக விதி, சீனாவிற்கும் பொருத்தம். உரும்கியில் சீன அரசு செய்யும் ரமழான் மாத ஏதேச்சாதிகார நடைமுறைகள் பற்றி இப்போது சின்சியாங்கின் கிராமப்புர மக்கள் இது பற்றி பேசுகிறார்கள். விவசாயிகளாகவும், சுரங்க தொழிளார்களாகவும், தொழிற்சாலை வேலையாட்களாகவும் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட இவர்கள் இப்போது பீஜிங்கின் அநியாயங்கள் பற்றியும், ஹான் இனத்தவரின் இனவாத சட்டங்கள் பற்றியும் தங்களிற்குள் கூடி கூடி வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சீன அரசு 14 நகரங்களில் எது நடக்கக்கூடாது என எதிர்பார்த்ததோ அது இப்போது 1005 கிரமாங்களில் நடந்து கொண்டிருக்கிறது. புரட்சி பற்றிய பேசிய தேசம், உலக புரட்சிகளிற்கு வித்திட்ட தேசம் இப்போது செய்யும் பாசிஸ அடக்குமுறைகளிற்கு எதிராக மக்கள் தங்களிற்குள் பேசும் காலம் உருவாகி விட்டது. இதுபற்றியும், இதன் பின்னராக அடுத்த கட்டங்கள் பற்றியும் இதே சீன அரசின் பிதா மாவோ சேதுங் தனது லிட்டில் ரெட் புக்கில் என்ன சொல்லியுள்ளார் என்பதை இவர்களே உணரவில்லை.

by:Abu Sayyaf


China Restricts Ramadan Fast For Muslim Uyghurs in Xinjiang - 2016
http://www.rfa.org/english/news/uyghur/restricts-06092016162515.html

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி செய்த அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அதன்படி அன்று சீனாவை ஆட்சி செய்த "டாங்" பேரரசிற்கும் கடிதம் எழுதினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து மூன்றாம் கலீஃபா ஹஜ்ரத் உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் அதாவது கி.பி. 650ல் இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழு சீனாவிற்கு அனுப்பப்பட்டது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாமா ஹஜ்ரத் ஸஃதுபின் அபிவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் சென்ற அந்தக் குழு சீனாவின் டாங் பேரரசர் குவாஸாங் அவர்களை சந்தித்து ஒரிறை கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள்.

இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழுவிற்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் கொடுத்து வரவேற்ற குவாஸாங், முஸ்லிம்கள் விரும்பியவாறு சீனாவில் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு இடமளித்து உதவி செய்தார்.

ஹஜ்ரத் ஸஃது பின் அபிவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்ட அந்தப் பள்ளிவாசல் இன்றும் கேண்டன் நகரில் மெமோரியல் மஸ்ஜித் என்று அழைக்கப்பட்டு மிகக் கம்பீரமாக காட்சியளிக்கிறது.ஹஜ்ரத் ஸஃது பின் அபி வக்காஸ் அவர்களது அதிகாரப்பூர்வ வருகைக்கு முன்பாகவே அரபு வணிகர்கள் மூலம் இஸ்லாம் சீனாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு முழுவதும் சில்க்ரோடு வணிகத்தோடும் அரபு மக்கள் வந்து சேரும் இடமாகவும் இந்த சிங்ஜியாங் மாகாணம் விளங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளின் மக்களும் வியாபார நிமித்தமாக குடியேறியதால் பலவிதமான கலப்பு இனங்கள் சிங்ஜியாங் மாகாணத்தில் உருவானது.

1949 வரை சுயாட்சி பெற்ற தனிநாடாக சோவியத் யூனியனின் ஆதரவோடு கிழக்கு துருக்கிஸ்தான் என்ற பெயரில் விளங்கி வந்தது. இன்றைய சிங்ஜியாங் மாகாணம் முழுவதும் கிழக்கு துருக்கிஸ்தானாக இருந்தது.
 
1949ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மூலம் சிங்ஜியாங் பகுதியை தன்னோடு இணைத்துக் கொண்டது சீன குடியரசு. இந்த இணைப்பை ஏற்காத சிங்ஜியாங் மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். சீன குடியரசின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அன்றிலிருந்து இன்று வரை கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற அமைப்பு அந்த மக்களின் விடுதலைக்காக போராடி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் இப்போது தஜக்கிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர்

2009 இல் இடம்பெற்ற மோதல்

சீனாவின் வடமேற்கு எல்லைப் புறமாகாணமாக சிங்ஜியாங்க் உள்ளது. இதன் தலைநகரான உரும்கியில் கடந்த 2009 ஜூலை மாதம் 5 ஆம் தேதியன்று இரண்டு இனங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் 184 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் படுகாயமடைந்தனர்.

மோதலுக்கான காரணம்:

1949 வரை கிழக்கு துர்கிஸ்தானாக இருந்த சிங்ஜியாங் பகுதியில் 95 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள். உய்குர், கிர்கிஸ், உஸ்பெக், டாடார், ஸாலா போன்ற துருக்கிக் மொழி பேசும் முஸ்லிம் இனங்களும், டங்ஸயாங், பாவோன் என்ற மங்கோலிய இன முஸ்லிம்களும் தாஜித் என்ற ஈரானிய இன முஸ்லிம்களும் சைனிஸ் ஹாய் இன முஸ்லிம்களுமாக 95 விழுக்காடு முஸ்லிம்கள் தான் இந்த மாகாணத்தில் வாழ்ந்தனர். 4 சதவீத ஹான் இன மக்களும் வாழ்ந்து வந்தனர். இதில் உய்குர் இன முஸ்லிம்கள் தான்பெரும்பான்மையினர். 1949 வரை இந்த நிலைதான் இருந்தது.
சிங்ஜியாங் முஸ்லிம்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் கைவினை கலைஞர்கள். கைவினை பொருட்கள் செய்வதில் வல்லுனர்கள். சிங்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பான்மையை குறைக்க வேண்டும் என்ற சதிதிட்டத்தின் காரணமாக முஸ்லிமல்லாத ஹான் இன மக்களை சிங்ஜியாங் பகுதியில் குடியமர்த்த திட்டமிட்டது சீன அரசு.

சிங்ஜியாங் மாகாணத்தில் இயற்கை வளங்கள் அபரிமிதமாக உள்ளன. இன்றைய தேதியில் சீனாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 40 விழுக்காடு சிங்ஜியாங்கில் தான் கிடைக்கிறது. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் சீனாவின் 60 விழுக்காடு தேவையை பூர்த்தி செய்கிறது. இன்னும் பருத்தி, கால்நடை வளர்ப்பு, காற்றாலை, கம்பளி, வேளாண்மை என்று சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிங்ஜியாங் மாகாணம் திகழ்கிறது. இப்படிப்பட்ட மண்ணிற்கு சொந்தமான மக்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை குறைத்தால் தான் அங்கே உள்ள வளங்களை சுரண்ட முடியும் என்ற காரணத்தால் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் முஸ்லிம்களைப் புறக்கணித்து ஹான் இன மக்களை நியமித்தது.

உய்குர் முஸ்லிம்களிடம் உள்ள கைவினை பொருட்கள் தயாரிக்கும் திறனை பயன்படுத்தி விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்ஜியாங் பகுதியில் தொடங்காமல் மத்திய சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கினர். பிறகு இந்த மக்களை சிங்ஜியாங் மாகாணத்திலிருந்து மத்திய சீனாவிற்கு வேலை தேடி புலம் பெயர செய்தனர். தங்களது மண்ணின் வளங்களை சுரண்டத்தான் இந்த புலம்பெயர்தல் என்ற சூழ்ச்சியை அறியாத உய்குர் முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் வேலை தேடி புலம்பெயர்ந்தனர்.

பல்வேறு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த ஹான் இன மக்களை வைத்து சிங்ஜியாங் பகுதியின் வளங்கள் அனைத்தையும் சீன அரசு உறிஞ்சி வருகிறது. 1947ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள் 2004 கணக்கெடுப்புபடி 45 விழுக்காடாகவும் ஹான் இனத்தவர் 45 விழுக்காடாகவும் மாறிப்போயினர்.

வேலைதேடி சீனாவின் மத்திய மாகாணத்திற்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலின் காரணமாக சீன விளையாட்டுப் பொருட்களை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தடை செய்ததின் விளைவாக அவர்கள் பணியாற்றிய ஏறக்குறைய ஒரு லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

அதிர்ச்சியுற்ற முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணிற்கு வந்த போது தான் சிங்ஜியாங் மாகாணத்தில் எல்லா முக்கிய பொறுப்புகளிலும் ஹான் இனத்தவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒரு பக்கம் வேலை வாய்ப்பற்று வறுமையில் மண்ணின் மைந்தர்கள் வாட, மறுபக்கம் அவர்களின் வளங்களை எல்லாம் ஹான் இனத்தவர் சுரண்ட, இரு சமூகத்தாருக்கும் சம வாய்ப்பளிக்க வேண்டிய சீன கம்யூனிஸ்டு அரசு ஹான் இனத்தவர் பக்கம் ஒரு தலைபட்சமாக நடக்க, மோதல் முற்றி கலவரமாகி உயிர்பலி ஏற்பட்டுள்ளது.

1949ல் சிங்ஜியாங் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து சீன கம்யூனிஸ்ட் அரசு முஸ்லிம்கள் மீது மத ரீதியான தாக்குதலையும் தொடுத்து வருகிறது. முஸ்லிம் ஆண்கள் தாடி வைக்கக் கூடாது, பெண்கள் புர்கா அணியக் கூடாது 18 வயது நிரம்பியவர்கள் தான் பள்ளி வாசலுக்கு செல்லவேண்டும், அரசு அச்சடித்து தரும் குர் ஆனைத்தான் முஸ்லீம்கள் ஓத வேண்டும் என்ற முஸ்லிம்கள் தங்கள் உயிரே போனாலும் ஏற்றுக் கொள்ள இயலாத இத்தகையை ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது சீன அரசு. ஆனால் இந்த செய்திகள் எல்லாம் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை.

பாலஸ்தீனத்தில் அரபு மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து யூதர்களை இஸ்ரேல் அரசு குடியமர்த்துவது போல ஈழத்தில் தமிழ் மக்களையெல்லாம் அகதி முகாமில் அடைத்துவிட்டு தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் சிங்களர்களை இலங்கை அரசு குடியமர்த்துவது போலத்தான் சீன அரசு மண்ணின் மைந்தர்களைப் புலம் பெயர செய்து பிற மக்களை குடியமர்த்தி வளங்களை தேசியம் என்ற பெயரால் சுரண்டி வருகிறது. போதாக் குறைக்கு உய்குர் மக்களின் மொழியான துருக்கிக் என்ற அரபி வரி வடிவம் கொண்ட மொழியையும் சிதைத்து அவர்களது கலாச்சாரத்தையும் சிதைத்து வருகிறது. தொடர்ந்து சீன அரசிற்கு எதிராக புரட்சிகள் சிங்ஜியாங் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ் அது ஒரு நாள் நிச்சயம் வென்றே தீரும்!.

கட்டுரையாசிரியர்: C.M.N.ஸலீம்,

Jul 12, 2014

சீன அரசின் Xīnjiāng மாகாண முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளும் அதன் எதிர் விளைவுகளும் !!


 
 



ரமழான் மாதம் வந்து விட்டாலே, ஒரு கரப்பான் பூச்சியை அல்லது ஓர் எலியை பார்ப்பது போல் முஸ்லிம்களை தொடர்ந்து கவனமாக அவதாானிக்கும் சீன காபிர்கள்.

Xinjiang. சரியாக சொன்னால் சீனா ஆக்கிரமித்த கஸகிஸ்த்தான், கிருக்கிஸ்த்தான், தஜிக்கிஸ்த்தான பெரு நிலப்பகுதி. சீன அரசு ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வந்து விட்டால் Xinjiang-ல் உள்ள முஸ்லிம்களின் அடிப்படை மனித உரிமைகளை மிக மோசமாக நசுக்குவது வழமையான விடயம். இம்முறையும் அது தனது அதிகார எல்லைகளிற்கு அப்பால், பொது நிறுவனங்களின் ஊடாகவும் அவர்களின் மீது தனது காட்டுத்தனமான உரிமை மீறல்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளது. இதில் தனியார் கம்பனிகள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், கல்லூரிகள் என பலவும் அடங்கும். மாகாணம் முழுவதும் இந்த சட்டங்கள் அமுலானாலும் இதன் உச்ச தாக்கங்கள் தலைநகர் உரும்கியிலேயே விளைந்துள்ளது.

ஒரு காலத்தில் பெரும்பான்மையாக உய்க்குர் முஸ்லிம்களும், அடுத்த சிறுபான்மையாக கஸாக் முஸ்லிம்களும் இருந்த இந்த மாகாணத்தில் சீன அரசு மிக நீண்டகாலமாக திட்டமிட்ட சட்டவிரோத குடியேற்றங்களை உருவாக்கி அங்கு 5 விகிதமாக இருந்த ஹான் இன சீனர்களை உய்க்குர் முஸ்லிம்களிற்கு சமானமாக பெருக்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி 42:42 என்ற சம விகிதாச்சாரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதுடன் கஸாக் முஸ்லிம்களை மிகச் சிறுபான்மையாளர்களாகவும் மாற்றியுள்ளது. உய்க்குர், கஸாக் மொழிகளை பேசுவதை பின்னிலைப்படுத்தி மன்டரின் மொழியை கட்டாய அரச மொழியாக சீன அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சரி ரமழானில் என்ன நடக்கிறது அங்கே என்று பார்ப்போம்.

இந்த ரமழானில் பாடசாலை மாணவர்களும் நோன்பு பிடிக்க முடியாத நிலை. கல்லூரி நிறுவாகங்கள் ஒரு உணவுப்பார்சலையும், தண்ணீர் போத்தலையும் முஸ்லிம் மாணவர்களிற்கு பலவந்தமாக கொடுத்து அதனை மதியம் உண்டு பருகும் படி வற்புருத்துவதுடன் யார் உண்கிறார்கள்?, யார் உண்ணவில்லை? என்பதனை கவனாக கண்காணிக்கிறார்கள். உண்ண மறுக்கும் மாணவர்கள் பற்றிய விபரம் உடனடியாகவே மாகாண பொலிஸாரிற்கு தெரியப்படுத்தப்படுகிறது. குறித்த மாணவர்களின் வீடுகளிற்கு உடனடியாக விரையும் பொலீஸார் அந்த மாணவர்களின் தாய் தந்தையர் மேல் விசாரணைகளை மேற்கொள்வதுடன் தேச துரோக வழக்குகள் வரை பதிவு செய்கின்றனர்.

இதற்கு ஒரு படி மேலாக Kashgar Normal College நிர்வாகம் சென்றுள்ளது. மாணவர்களிற்கு கடந்த மாதமே அது ஒரு சுற்று நிருபம் அனுப்பியுள்ளது. அதில் யாராவது நோன்பு நோற்றால் அவர்களை உடனடியாகவே வெளியேற்றுவோம் என்றும், இதற்கு முன் அவர்கள் தங்கள் கல்லூரியில் பெற்ற டிப்ளோமா மற்றும் உயர் சான்றிதல் கற்கை நெறிகளை உடனடியாகவே வலிதற்றதாக இரத்தச் செய்வோம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலைமை தொழிற்சாலைகள், அலுவலகங்கள், தனியார் வேலைத்தளங்கள், சுரங்க அகழ்வு நிலையங்கள் என்று எல்லா மட்டங்களிலும் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரச ஸ்தாபனங்களிலும், அலுவலகங்களிலும் கேட்கவே தேவையில்லை. கரப்பான் பூச்சியை அவதானமாகப்பார்க்கும் நிலையில் நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் சீன காபிர்களால் உற்று நோக்கப்படுகிறார்கள்.

தராவீஹிற்கு தடை. ரமழான் உபந்நியாசங்களிற்கு தடை. சிறப்பு பிரசங்கங்களிற்கு தடை. ஏன் 03 பேர் ஒன்றாக ரமழானில் கூடி நின்று பேசுவதற்கும் தடை. இப்தார் நிகழ்வுகள் கூட தங்கள் வீடுகளில் மட்டும் தமக்கு தாமே நிகழ்த்திக்கொள்ள வேண்டும். அடுத்த வீட்டிற்கு சென்று கூட்டாக நோன்பு திறந்தால் கூட அது, புரட்சிகர சீனக்குடியரசிற்கு எதிரான ஒன்று கூடல் என்றே சட்டம் சொல்கிறது. புரிகிறதா ரமழானின் நிலை வடமேல் சீன மாகாணத்தில்?...

ஆனால் இந்த உரிமை மீறல்களையும், சீன அரசின் கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஈமானிய உந்துதலால் இரகசியமாக பல்லாயிரக்கணக்கான உய்க்குர் சீனர்கள் நோன்பு நோற்கிறார்கள். சின்சியாங்கின் பெரு நகரங்களிளேயே சீன காவலர்களினால் மோப்பம் பிடிக்க முடிகிறது. 1005 சிறு நகரங்களும் கிராமாங்களும் உள்ள இந்த மாகாணத்தில் அவர்களால் இதனை தடுக்க முடியாமல் போயுள்ளதே உண்மை நிலை.

ஐயன்ஸ்டைன் சொல்லும் ஒரு தாக்கத்திற்கு மறு தாக்கம் உண்டு எனும் பொளதீக விதி, சீனாவிற்கும் பொருத்தம். உரும்கியில் சீன அரசு செய்யும் ரமழான் மாத ஏதேச்சாதிகார நடைமுறைகள் பற்றி இப்போது சின்சியாங்கின் கிராமப்புர மக்கள் இது பற்றி பேசுகிறார்கள். விவசாயிகளாகவும், சுரங்க தொழிளார்களாகவும், தொழிற்சாலை வேலையாட்களாகவும் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட இவர்கள் இப்போது பீஜிங்கின் அநியாயங்கள் பற்றியும், ஹான் இனத்தவரின் இனவாத சட்டங்கள் பற்றியும் தங்களிற்குள் கூடி கூடி வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சீன அரசு 14 நகரங்களில் எது நடக்கக்கூடாது என எதிர்பார்த்ததோ அது இப்போது 1005 கிரமாங்களில் நடந்து கொண்டிருக்கிறது. புரட்சி பற்றிய பேசிய தேசம், உலக புரட்சிகளிற்கு வித்திட்ட தேசம் இப்போது செய்யும் பாசிஸ அடக்குமுறைகளிற்கு எதிராக மக்கள் தங்களிற்குள் பேசும் காலம் உருவாகி விட்டது. இதுபற்றியும், இதன் பின்னராக அடுத்த கட்டங்கள் பற்றியும் இதே சீன அரசின் பிதா மாவோ சேதுங் தனது லிட்டில் ரெட் புக்கில் என்ன சொல்லியுள்ளார் என்பதை இவர்களே உணரவில்லை.

by:Abu Sayyaf