Showing posts with label பாலஸ்தீன். Show all posts
Showing posts with label பாலஸ்தீன். Show all posts

Feb 3, 2018

அப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்

இழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து


பாலஸ்தீன மத்தியக் குழுவின் கூட்டம் 15/1/2018, திங்களன்று முடிவுற்றது, அதன் இறுதி தீர்மானமானது சர்வதேச சட்டம் மற்றும் அமைதிக்கான அரபு நாடுகளின் முயற்சியின் அடிப்படையில் 1967ல் வரையப்பட்ட எல்லைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல் பாலஸ்தீன அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அதன் தலைநகரம் கிழக்கு ஜெரூசலேமாக இருக்க வேண்டும் எனவும் சர்வதேச தலைமையில் அமைதிக்காக வேண்டி உண்மையாக நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள வேண்டும் என கோரியது. அது ஓஸ்லோ உடன்படிக்கையின் காலம் முடிந்துவிட்டது எனக் கருதி பி.எல்.ஓ மூலமாக இந்த யூத அரசாங்கத்தின் (சட்டவிரோத) அங்கீகாரத்தை ரத்து செய்யவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை ரத்து செய்யவும் மற்றும் இந்த ஆக்கிரமப்பாளருடனான பொருளாதார சார்பு நிலையை துண்டித்து விடவும் பரிந்துரை செய்தது.


பாலஸ்தீனத்திலுள்ள ஹிஸ்புத்தஹ்ரீரில் உள்ள நாங்கள் பாலஸ்தீன அரசின் தலைவர் என்ன பேசினாரோ அதனையும் பாலஸ்தீனத்தையும், அதன் மக்களையும் அதன் கண்ணியத்தையும் இழக்க வைத்த இந்த துரோகமிழைக்கும் அணுகுமுறையை பாலஸ்தீன அரசும் அதன் நிறுவனங்களும் தொடர்ந்து கடைபிடிக்கும் போக்கை வலியுறுத்தும் இந்த மசோதாவையும் கண்டிக்கிறோம். இந்த தீர்மானமானது பாலஸ்தீனர்களின் எதிர்காலத்தை உம்மத் மீதும் பாலஸ்தீன மக்களின் மீதும் பகைமையை கொண்டுள்ள பெரும் சக்திகளிடம் பிணையாக ஆக்கியுள்ளது. இந்த யூத அரசை (சட்டவிரோத) அங்கு நிர்மாணித்து, நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கி மற்றும் அநீதமான சர்வதேச தீர்மானங்கள் நிறைவேற்றுவதன் மூலம் அதற்கு ஆதரவளித்து வந்தது இந்த சக்திகள் தான். அதேசமயம் பாலஸ்தீன அரசாங்கம் பாலஸ்தீனத்தின் விடுதலை குறித்தான கோரிக்கையை முழுமையாக கைவிட்டுவிட்டு உம்மத்தையும் அதன் ராணுவங்களையும் அவ்வாறே செய்யுமாறு கோருகிறது.


இவ்விஷயத்தில் கீழ்வருனவற்றை நாம் வலியுறுத்துகிறோம்:


ஜெரூசலேத்தின் விஷயத்தில் அமெரிக்கா தனது தீர்மானத்தை நிறைவேற்றி ஓங்கி அறைந்து மற்றும் இந்த நூற்றாண்டின் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு பின்னர் பாலஸ்தீன அரசாங்கத்தின் தீர்மானங்கள் அவர்கள் அமெரிக்க எதிர்ப்பு வாக்கு வன்மையிலிருந்து விலகிச் சென்றுள்ளதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த தீர்மானங்கள் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மற்றும் விருப்பங்களுக்கு அடிபணிந்துள்ளதாக இருக்கின்றது, அது இந்த அரசு ஓஸ்லோவை புதைப்பதிலிருந்தும் யூத அரசாங்கத்தை (சட்டவிரோத) அங்கீகரிக்க மறுத்த நிலையிலிருந்தும் பின்வாங்கச் செய்தது, மற்றும் ஓஸ்லோ நிருவப்பட்ட இடைநிலை கால அவகாசம் முடிவுற்றதை மட்டுமே அறிவித்தது மற்றும் இந்நிறுவனத்திடம் அதன் அங்கீகாரத்தை நிறுத்திவைக்குமாறு பரிந்துரைத்தது. இந்த தீர்மானங்களானது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பாலஸ்தீன மக்கள் மீது விரோதத்தை கொண்டிருக்கும் நாடுகள் ஏற்படுத்திய அமைதிக்கான தீர்மானங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் மாநாடுகளை பின்பற்றியதாக இருந்தது. இந்த அமைதி நடவடிக்கை மற்றும் துரோகமிழைக்கும் ஒப்பந்தங்களானது பாலஸ்தீன மக்களுக்கு பேரழிவையும் குற்றங்களையும் இழைப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது அது மேற்கு ஜெரூசலேம் உட்பட பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை முழுவதுமாக யூதர்களுக்கு உரியதாக ஆக்கியுள்ளது அதேவேளையில் மீதமுள்ளவை (நிலப்பரப்பு) குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்றும் அது பாலஸ்தீன அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்பு அமைப்புகளையும் யூத அரசுடைய (சட்டவிரோத) பாதுகாவலராக ஆக்கியுள்ளது; எவ்விதமான பாதுகாவலர் என்றால் இந்த ஆக்கிரமிப்பின் பாதுகாப்பு, நிதி, பொருளாதார மற்றும் அரசியல் பலுவை சுமந்ததாகவும் பாலஸ்தீன அரசாங்கத்தின் தலைவர்கள் இதை அங்கீகரித்ததன் மூலம் இந்த ஆக்கிரமிப்பை வரலாற்றின் மலிவான ஆக்கிரமிப்பாக ஆக்கியுள்ளது, தினசரி உயர்ந்து வரும் வரிகளுக்கு பாலஸ்தீன மக்கள் தங்களுடைய உதிரங்களை கொண்டும் தங்களுடைய குழந்தைகளின் வாழ்வாதாரத்தை விலையாகவும் கொடுத்து வருகின்றனர்….


இருநாடு உருவாக்கம் எனும் தீர்வை கடைபிடிப்பது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கும் அவர்களுடைய உதிரங்களுக்கும் தியாகங்களுக்கும் இழைக்கும் துரோகமாகும். இத்தீர்வானது ஆக்கிரமிப்பாளருக்கு ஜெரூசலேத்தின் பெரும்பகுதி உட்பட 80% நிலப்பரப்பை வழங்கி பலப்படுத்துவதாகவும், பாலஸ்தீன அரசாங்கத்துக்கு “கிழக்கு ஜெரூசலேம்” என்று அவர்களால் அழைக்கப்படுவது உட்பட சிரிய அளவிலான 20% நிலப்பரப்பை வழங்குவதாக இருக்கின்றது”; சந்தேகமில்லாமல் அவர்கள் தீர்மானித்திருப்பது தீங்கை விளைவிக்கக்கூடியதை தான்! பாலஸ்தீன அரசாங்கமும், மத்தியக் குழுவும், பாலஸ்தீன விடுதலை இயக்கமும் அதன் பிரிவுகளும் விடுதலை அடைவது (பாலஸ்தீனத்தின்) எனும் கருத்தை முழுமையாக கைவிட்டுள்ளன மற்றும் அதன் அகராதி மற்றும் சொல்லகராதியிலிருந்து நீக்கியுள்ளன. அது விடுதலை அடைவதற்கான ஒரே வழியை அதாவது உம்மத்துடைய இராணுவங்களை அணிதிரட்டி அதன் அனைத்து சக்தி மற்றும் திறன்களை இந்த யூத அரசை வேரோடு அழிப்பதற்காக வேண்டி தீர்க்கமான போர் ஒன்றை புரிவதை நோக்கி இயக்க வேண்டும் என்பதை அகற்றியுள்ளது. மாறாக அது குற்றம் புரிந்த நாடுகளின் நரிகள் அதற்கு சர்வதேச அளவிலான பாதுகாப்பைத் தரவேண்டும் என கோரிக்கையை கொண்டுள்ளது; ஆக, பாலஸ்தீனம் மீதான யூத ஆக்கிரமிப்புக்கு கூடுதலாக சர்வதேச ஆக்கிரமிப்பு ஒன்றையும் சேர்த்துள்ளது. சந்தேகமே இல்லாமல் அவர்கள் தீங்கை தான் தீர்மானித்திருக்கிறார்கள்! இஸ்லாமிய உமமத்தின் உதிரமானது அதன் நரம்புகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதை பாலஸ்தீன அரசாங்கம், அமெரக்கா, ஐரோப்பா மற்றும் யூத அரசாங்கம் (சட்டவிரோத) ஆகியோருக்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்.


நீங்கள் சார்ந்திருக்கும் ஆட்சியாளர்களையும் அவர்களுடைய கீழ்படுதலையும் மற்றும் உங்கள் மீதான அவர்களது விசுவாசத்தையும் துடைத்தெரியும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உம்மத் அல்லாஹ்வின் ஆணையைக் கொண்டு வெகுவிரைவில் இவர்களை தூக்கியெறிந்து நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபா ராஷிதாவை நிறுவும்; அது இவர்களை வேரோடு தூக்கி எறிந்து ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் அனைத்து முஸ்லிம் தேசம் என முழுவதையும் விடுவித்து மற்றும் அமெரிக்காவையும் மேற்கத்திய நாடுகளையும் அவர்களுடைய உறைவிடத்திற்கு துரத்திவிடும் மற்றும் துரோகமிழைத்த அனைவருக்கும் தண்டனை வழங்கும்.


அந்நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போருக்கு அந்நாள் வெகு அருகில் உள்ளது.


“நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) (அல்குர்ஆன் : 65:3)

Jul 3, 2016

காசாவில் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்

இஸ்ரேலிய போர் விமானங்கள் அதிகாலையில் காசா நகர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹமாஸ் இயக்கத்திற்கு தொடர்புடைய நான்கு இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.

ஹமாஸின் கட்டுப்பாட்டில் தற்போது காசா நிலப்பரப்பு உள்ளது.இந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்திருப்பதாக பாலஸ்தீன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, காசா பகுதியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று, இஸ்ரேலில் உள்ள காலியான மழலையர் பள்ளிக் கட்டிடத்தைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

செய்தி BBC

Jun 24, 2016

மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே!




இது கதையல்ல!

அந்த பூமியில் இவள் பிறந்த போது சியோனிசத் தோட்டாக்கள் தாம் தாலாட்டுப்பாடின! 

எஞ்சிய இடிபாடுகளுக்குள் இருந்த உடைந்த பராலைகளில் கட்டப்பட்ட கிழிந்த துணியினால் ஆன தொட்டிலில் சுதந்திரக் காற்றை தேடி இவள் ஆழமாக மூச்சுவிட்டபோது...! 

அதில் கலந்திருந்த கந்தக வாசம் பிறப்புரிமை ஆனது! வெடிகுண்டுகளை தடாவிய வாறுதான் தவழ்ந்தாள்! 

யூத துப்பாக்கிகளின் குறிகளை கண்டவாறுதான் எழுந்தாள்! 


வீரத்தையும் தன்னம் பிக்கையையும் தவிர! பெரிதாக எதுவும் பாலஸ்தீன முஸ்லீம் களிடம் இல்லை! 

அதற்கு இவள் விதிவிலக்கல்ஒரு யூதக் கயவனின் வல்லுறவையும் எதிர்வு கூறிய வாரே பாலஸ்தீனில் ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்துகிறாள்! 

இந்த வருடம் மட்டும் 1823 பெண்கள் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தி படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள்! 

1000 பெண்கள் வரை சிறையிடப் பட்டுள்ளார்கள்! காரணம் ஒன்றே ஒன்றுதான்.... அவர்கள் முஸ்லீம்அவளது வயதும் வெறும் 14 மட்டுமே!

 அந்த கொடுமை மிக்க பாலஸ்தீன நிலத்தின் வரலாற்றுச் சுமையை சுமந்த வாரே கல்வி கற்பதற்காக புத்தகங்களை சுமந்தவள்! 

யூத இராணுவம் சந்தேகத்தின் பெயரில் அவளை கைது செய்தது! கொடூரமாக தம் சந்தேகத்தை பாலியல் வக்கிரம் மூலம் தீர்த்து படுகொலை செய்தன அந்த யூத நாய்கள்!

 பின்னர் ஒரு குப்பையை போல அவளை வீதியோரத்தில் வீசி எறிந்திருந்தனர்! 

எந்த மீடியா இதை பேசியது!? மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே! 

பொஸ்னியாவில் ,ஈராக்கில், காஸ்மீரில், ஆப்கானில் எல்லாம் இப்படித்தானே நடந்தது! நடக்கிறது! 

முஸ்லீம் என்றவுடன் ஏளனப் பார்வை பார்க்கும் குப்ரிய வர்க்கம், இஸ்லாத்திற் கென்றவுடன் கூட்டுச் சேர்ந்து கருவறுக்க தயங்குவதில்லை! 

முஸ்லீம் உம்மத் கிலாபா எனும் உலகலாவிய இஸ்லாத்தின் கேடயத்தின் கீழ் வராதவரை இத்தகு அக்கிரமங்கள் ஓயப் போவதில்லை. ஒரு பெண் உதவி கேட்டு அழைத்ததன் முடிவாகவே முஹம்மது பின் காசிமின் தலமையில் முழு சிந்துப் பகுதியையும் கட்டுப் பாட்டில் கொண்டுவர உமையா கிலாபத்தினால் படைநடாத்தப் பட்டது என்ற பேருண்மையை நாம் புரிந்திடல் கட்டாயமாகும்.

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-05

துருக்கி தேசியவாதமும் அரபு தேசியவாதத்துக்கும் இடையிலான மோதல்
பலஸ்தீன் பகுதியை கைப்பற்ற துருக்கி இஸ்லாமிய கிலாபத்தை வேரோடு கவிழ்க்கின்ற சூழ்ச்சு ஆரம்பமாகியது.
இந்த சூழ்ச்சியிலும் மேற்குலக அரசியல்வாதிகளோடு ஆரம்பத்தில் இருந்தே யூத சிந்தனைகளும் இணைந்தே செயற்பட்டுக்கொண்டிருந்தன.

இஸ்லாமிய சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சி அமையாமல் துருக்கி இனநலனையும் துருக்கி தேசியவாதத்தையும் அடிப்படையாக கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்ற சிந்தனை துருக்கியர்களிடையே பரப்பப்பட்டு இயக்கமாக திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் உண்மையில் துருக்கியர்கள் அரபுக்கள் குருதுக்கள் என பல பிரதேச முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சிக்குள் அடங்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட ஓர் ஆட்சியை துருக்கி இன ஆட்சியாக உருமாற்றுவதன் பொருள் என்னவெனில் துருக்கியர்கள் அல்லாத ஏனையோரின் உதவியும் ஒத்துழைப்பும் அடியோடு விலகிவிட வேண்டும் என்பதே!!

மறுபுறம் அரபிகளிடையே அரபு தேசியவாதம் நீரூற்றி வளர்க்கப்பட்டது. துருக்கியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் நிலை மாறி சுதந்திர அரபிகளாக மாற வேண்டும் என்ற சிந்தனை வேரூன்றி வளர்க்கப்பட்டது.

அரபுகளிடையே இத்தகைய அரபு தேசியவாதத்தை ஊன்றியவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ அரபுக்களாக இருந்தார்கள். ‪#‎பைரூத்_பல்கலைக்கழகம்‬ அவர்களுடைய தலமைத்தளமாக இருந்தது. இந்த அமெரிக்க பல்கலைக்கழகம் தேசியவாதத்தை பரப்புகின்ற மையத்தளமாக இருந்தது.

இவ்வாறாக துருக்கியர்களிடையேயும் அரபுக்களிடையேயும் ஒரே நேரத்தில் வேறுபட்ட இரு தேசியவாத கருத்துக்கள் வேரூன்றி வளர்க்கப்பட்டன. அவை மென்மேலும் வளர்ந்து செழிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் அமுல்படுத்திக்கொடுக்கப்பட்டன.

1914 ‪#‎1ம்_உலகப்போர்‬ தொடங்கியபோது நிலமை எந்தளவு மோசமானதாக மாறிக்காணப்பட்டது என்றால் அனைத்து உம்மத்தும் ஓரணியில் தோள்கொடுத்து போரிடுவதற்கு பதிலாக அரபிக்கள் பிரித்தானியா சார் அணியாகவும் துருக்கி ஜேர்மன் சார் அணியாகவும் ரத்தவெறிபிடித்த காட்டேறிகளாக சக முஸ்லிம் சகோதரனின் இரத்தத்தை குடித்தே தீரவேண்டும் என்ற அளவுக்கு பகைமை முற்றிப்போய் எதிர் எதிர் அணியில் நின்று போரிட்டனர்.

‪#‎இன்சாஅல்லாஹ்‬......
‪#‎தொடரும்‬.......

‪#‎புகைப்படம்‬:- அமெரிக்க பைரூத் பல்கலைக்கழகம் - சவூதி அரேபியா


சிந்தனை கலஞ்சியம்

Jun 18, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-04

யூதர்களின் திட்டங்கள் - இஸ்ரேல்_உருவாகிய_வரலாறு - தொடர்: 04

எப்படிப்பட்ட திட்டங்களை தீட்டி யூதர்கள் பலஸ்தீன் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என இனி பார்க்கலாம்.

முதலில் அவர்கள் ஓர் இயக்கத்தை தொடங்கினார்கள். உலகெங்கிலும் உள்ள யூதர்கள் பலஸ்தீனை நோக்கி இடம்பெயர வேண்டும் அங்கு சொத்துக்களை வாங்க வேண்டும் என்பது தான் அவ்வியக்கத்தின் குறிக்கோள் பிரச்சாரமாக இருந்தது.

இதன்படி 1880ம் ஆண்டு முதல் புலம்பெயர்வு தொடங்கியது. ஐரோப்பாவில் வசித்துவந்த யூதர்கள் ஒருவர் பின் ஒருவராக பலஸ்தீனில் குடியேறினார்கள்.

அதன் பின் புகழ்பெற்ற யூத தலைவனான #தியோடர்_ஹெர்சல் 1897ம்ஆண்டு #ஜியோனிஸ்ட்_மூவ்மென்ட் எனப்படும் யூத இயக்கத்தை துவங்கினான். (Zionist organization -ZO) பலஸ்தீனை கைப்பற்றுவது மற்றும் ஹைஹலுஸ் ஸுலைமானியை மீண்டும் கட்டுவது என்பனவற்றையே அவ்வியக்க குறிக்கோளாக அறிவித்தான். இதற்காக யூதர்கள் கோடிக்கணக்கில் செல்வங்களை வழங்கினர்.

Zionist movement இன் முதல் மாநாடு வட சுவிஸ்லாந்தின் பெஸ்லே நகரில் நடைபெற்றது. அப்போது தியோடர் தன்னுடைய டயரியில் பின்வருமாரு எழுதினான். " பெஸ்லேயில் யூத தேசத்தை நான் கண்டுகொண்டேன் என்பதை நான் அறிவித்தால் உலகமே என்னை பைத்தியக்காரன் என்று சொல்லும். ஐந்து அல்லது ஐம்பது அண்டுகளில் இந்த பேருண்மையை உலகம் உணர்ந்து கொள்ளும். "

1901ம் ஆண்டு தியோடர் இஸ்லாமிய கலீபாவான #சுல்தான்_அப்துல்_ஹமீது_கான் இடம் தன்னுடைய தூதரை அனுப்பி வைத்தான்.
"பலஸ்தீன் பகுதியை யூத தேசமாக அறிவித்துவிட வேண்டும். அதற்கு பதிலாக துருக்கிய அரசின் கடன்களை நாங்கள் கொடுத்துவிடுகிறோம்".
இதுதான் அவன் கொடுத்தனுப்பிய செய்தி

இதை கலீபா ஏற்றுக்கொள்ளவில்லை. காரித்துப்பி நிராகரித்துவிட்டார். " நான் உயிரோடு இருக்கும் வரை துருக்கி கிலாபத் நிலைத்திருக்கும் வரை பலஸ்தீனை யூதர்களிடம் ஒப்படைப்பது நடைபெறாது.உங்களது அனைத்து செல்வங்களின் மீதும் காரி உமிழ்கிறேன்" என கூறிவிட்டார்.

தியோடர் கலீபாவிடம் பேசுவதற்காக அனுப்பிய யூத தூதுவனின் பெயர் #கர்ரா_ஸவ்_ஆவ்பந்தி ஆகும்.

அதாவது இஸ்லாமிய கலீபாவிடம் நேருக்கு நேர் பலஸ்தீன் மண்ணுக்கு விலை பேரம்பேசும் அளவுக்கு யூதர்களின் பலம் கூடியிருந்தது.

பேரத்தை மறுத்த கலீபாவை நோக்கி யூத தூதுவன் "நாங்கள் சொல்வதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்" என எச்சரிக்கை செய்யும் அளவு அவன் துணிச்சல் பெற்றிருந்தான்.

கிலாபத் இருக்கும் வரை பலஸ்தீன் பற்றிய தங்கள் கனவு பலிக்காது என தெரிந்த யூதர்கள் கிலாபத்தை உடைக்கும் பணிகளில் இறங்கினார்கள்.

பிரீமேசன்,தோனாமா,மற்றும் மேற்கத்தைய கல்வியை கற்று துருக்கிய தேசியவாதத்துக்கு பலியான இளைஞர்களும் யூதர்களின் சதியில் பங்குபற்றினர்.

(இங்கு தோனாமா எனப்படுவோர் முஸ்லிம்களாக வெளியில் நடித்த யூதப்பற்றாளர்கள்)

இவர்கள் யூத இராணுவத்தின் உதவியையும் பெற்றார்கள்.

கடைசியாக இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டது. சுல்தான் அப்துல் ஹமீது கான் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதன்போது வரலாற்றிலே_மிக_மிக_கேவலமான_சம்பவம் முஸ்லிம் உம்மத்தால் நிகழ்த்தப்பட்டது. இதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அதாவது

1908ம் ஆண்டு கலீபா அப்துல் ஹமீதிடம் "நீங்கள் பதவியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள்" எனும் செய்தியை சுமந்தவாரு மூன்று நபர்கள் சென்றார்கள். அதில் இருவர் துருக்கியர். மூன்றாம் நபர் யார் தெரியுமா???

நாம் ஏற்கனவே பார்த்த #ஹர்ரா_ஸவ்_ஆவ்பந்தி அவனே தான். பலஸ்தீனை பேரம்பேச சென்று கலீபா காரி உமிழ்ந்து அனுப்பினாரே அவனேதான்.

முஸ்லிம்கள் செய்த ரோஷம்கெட்ட கேவலமான பணி இது. கலீபாவை நீக்கியும் விட்டு அந்த செய்தியை யாரிடம் கொடுத்து அனுப்பினார்கள் என்று பார்த்தீர்களா???

எந்த யூதனை காரி உமிழ்ந்து கலீபா விரட்டினாரோ அவனிடம் "நீ வெளியே போகலாம்" என்ற செய்தியை கொடுத்தனுப்பினார்கள் இந்த மானம்கெட்ட உம்மத்.

நான் காரித்துப்பியவனே என்னை வெளியே போ என்று சொல்லும் போது கலீபாவின் மனம் எப்பாடுபட்டிருக்கும் என கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

இன்சா அல்லாஹ்...
தொடரும் ....


சிந்தனை கலஞ்சியம்


 #புகைப்படம்:- கலீபா கிலாபத்தை விட்டு வெளியேறும் காட்சி



 

Jun 17, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-03

யூதர்களின் நன்றி கெட்டத்தனம்
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அதாவது கி.பி.70ம் ஆண்டிலேயே ஹைஹலுஸ் ஸுலைமானி உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டது. இதை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம்.
ஆனால் இஸ்லாத்தின் மீள்வருகைக்கு பின் உமர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலே பைத்துல் முகத்திஸ் வெற்றிகொள்ளப்படுகிறது. அப்போது அங்கே யூதர்களின் எந்தொரு வழிபாட்டுத்தலமும் இல்லை. மாறாக ஒருசில கட்டிட சிதலங்களே அங்காங்கு காணப்பட்டன.
எனவே மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பொன்னிற கூரை கொண்ட கூவ்வதுஸ் ஸக்ராவையும் எங்கள் வழிபாட்டுத்தலங்களை அழித்துவிட்டே முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள் என யூதர்கள் போலிக்குற்றச்சாட்டு சுமத்த முடியாது.
இவை வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் உண்மைகளாகும்.
இனி ஐரோப்பாவில் யூதர்கள் எப்படி நடாத்தப்பட்டார்கள் என பார்ப்போம்
 
ஐரோப்பியர்களுக்கு யூதர்கள் சபிக்கப்பட்ட ஓர் இனமாகவே கருதப்பட்டார்கள்.
இங்கிலாந்து மன்னர் ‪#‎முதலாம்_எட்வர்ட்‬ 1290ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதில் யூதர்கள் அனைவரும் இங்கிலாந்தின் எல்லையை விட்டே வெளியேறிவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கிறித்தவ பாதிரிகளும் நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து யூதர்களுக்கு எதிராக மக்களை திரட்டும் பணியை செவ்வனே செய்தார்கள்.
பிரான்ஸ்ஸில் ‪#‎மன்னர்_பிலிப்ஸ்‬ 1302ல் யூதர்கள் அனைவரும் பிரான்ஸை விட்டே போய்விடவேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
அதேபோன்று
1498ம் ஆண்டு ‪#‎12ம்லூயிஸ்_மன்னர்‬ யூதர்கள் ஒன்று நாடுதுறக்க வேண்டும் அல்லது கிறித்தவத்துக்கு மாற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
ஜேர்மனிலும் ரஸ்யாவிலும் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலும் யூதர்கள் சொல்லொனா துயரங்களுக்கு ஆளானார்கள். அவர்கள் மீது சமூக பொருளாதார அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
ஒரு சில நாடுகள் யூதர்கள் எவரையும் விட்டுவைக்காது நாட்டைவிட்டே வெளியேற்றும் பணியை செய்தன. இன்னும் சில நாடுகளோ குறிப்பிட்ட சில நிலப்பரப்பை ஒதுக்கி அவ்விடங்களில் மட்டுமே யூதர்கள் வாழ வேண்டும் என்றும் வேறு இடங்களுக்கு செல்லலாகாது என்றும் தடை விதித்தன. அப்பகுதிகளை சுற்றியும் பெரும் அரண்களை போன்று சுவர்கள் எழுப்பப்பட்டன. இப்பகுதிகள் "‪#‎ஹெட்டோ‬" என அழைக்கப்படுகின்றன.
இனி யூதர்கள் தொடர்பாக முஸ்லிம்களின் நிலைப்பாட்டை பார்க்கலாம்
 
உஸ்மானிய கிலாபத்தின் கலீபாவான ‪#‎2ம்_பயாஸீத்‬ 1493ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதாவது தன்னுடைய ஆட்சி எல்லைக்குள் வசிக்கின்ற யூதர்களோடு மக்கள் நன்முறையில் நடந்துகொள்ளவேண்டும் என்பதே அந்த அரசாணை.
இவ்வாறு யூதர்கள் கடந்த 13நூற்றாண்டுகளாக (அதாவது 1924 கிலாபத் வீழ்ச்சியடையும் வரை )யூதர்கள் ஓர் இடத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள் என்றால் அது முஸ்லிம்களின் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியின் கீழ் தான் என்பது யூதர்களும் மறுக்க இயலாத உண்மையாகும்.
ஸ்பெயின்(உந்துலிஸ்) நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த காலம் தான் எங்களுடைய வரலாற்றில் பொற்காலம் என யூத வரலாற்று ஆசிரியர்களே கூறியுள்ளார்கள்.
அழுகைக்கதவு என்ற ஒன்றை யூதர்கள் தம்முடைய மதத்தின் புனித பொருளாக கருதிவருகின்றார்கள். இந்த கதவு கூட முஸ்லிம்களின் கருணையால் தான் யூதர்களுக்கு கிடைத்தது. அதாவது இக்கதவு மண்ணுள் புதையுண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு காணாது போயிருந்தது. முற்புதர்களும் குப்பைகூளங்களும் அதை மூடிவிட்டிருந்தன. கி.பி. 16ம் நூற்றாண்டில் சுல்தான் சலீம் உஸ்மானி ஆட்சிக்காலத்தில் அக்கதவு கண்டுபிடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு யூதர்கள் அதை தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. (ஆதாரம்:- News from Israel bulletine july1987, the government of isrel Bombay)
ஆனால் இந்த நன்றிகெட்ட இனம் இன்று என்ன செய்கிறது???
இன்சா அல்லாஹ்....
தொடரும்.....

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-02

பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் யூதர்கள் எவரும் நுழைய கூடாது என ரோமானியர்கள் தடைவிதித்திருந்தனர். இவ்வாறாக பலஸ்தீனில் ஒரு யூதர்கள் கூட இல்லை என்ற நிலை காணப்பட்டது.
மேற்கூறப்பட்ட வரலாற்றிலிருந்து பின்வரும் முடிவுகளை நாம் எடுக்கலாம்
1. பலஸ்தீன் எங்களது பூர்வீக நிலம் என யூதர்கள் கூறுவது முற்றிலும் பொய்
2. இனப்படுகொலை செய்து அங்கு வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்துவிட்டே அவர்கள் அங்கு குடியேறினர்.
3. வட பலஸ்தீன் பகுதியில் அதிகபட்சம் ஐந்து நூற்றாண்டுகளே வாழ்ந்தனர்.
4. தென்பலஸ்தீனில் அதிகமாக எட்டு நூற்றாண்டுகளே யூதர்கள் வாழ்ந்தார்கள்
5. அரபுக்கள் வட பலஸ்தீன் பகுதியில் 25 நூற்றாண்டுகளும் தென் பலஸ்தீன் பகுதியில் 20 நூற்றாண்டுகளும் வசித்து வந்தனர்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க இன்று யூதர்கள் என்ன கூறுகிறார்கள்??
பலஸ்தீன் எங்களது மூதாதையர் வாயிலாக எங்களுக்கு கிடைத்த பூமியாகும். இறைவன் எங்களுக்கு வாக்களித்த பூமியாகும். எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியை எப்படியாவது வலுக்கட்டாயமாக அடைந்தே தீருவோம். அதாவது அங்கே யார் வாழ்ந்தாலும் அவர்களை இனத்தோடு அழித்துவிட்டு அப்பிரதேசத்தை அடைந்தே தீருவோம். அதற்கான உரிமை எங்களிடம் இருக்கின்றது. என கூறுகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் ஒரு பிரார்த்தனையை செய்து வருகின்றார்கள். ""பைத்துல் முகத்திஸ் எங்களது கைகளில் வந்து சேர வேண்டும் அங்கே கைஹலுஸ் ஸுலைமானை நாங்கள் நிறுவ வேண்டும் "" என்பதே அந்த பிரார்த்தனை.
அதுமட்டுமல்ல யூதர்களின் வீடுகளில் நடைபெருகின்ற சடங்குகளில் தவறாமல் ஒரு நாடகம் சித்தரிக்கப்பட்டு நடிக்கப்படுகிறது. எகிப்திலிருந்து நாம் எவ்வாறு வெளியாகினோம். பலஸ்தீன் பகுதியில் எவ்வாறு குடியேறினோம். பபிலோனியர்கள் எவ்வாறு துரத்தியடித்தனர். பலஸ்தீன் பிரதேசத்தில் எவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டோம். என்பன எல்லாம் அந்நாடகத்தில் சித்தரிக்கப்படுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு யூத குழந்தையின் மனதிலும் யூத தேசம் உன்னுடையது அதை அடைவதே உன் வாழ்வின் இலட்சியம் அங்கு கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவதே உன் இலக்கு எனும் நச்சுக்கருத்து விதைக்கப்படுகின்றது.
கி.பி.12ம் நூற்றாண்டு புகழ் பெற்ற யூத தத்துவ ஞானியான "மூசா இப்னு மைமூனிடஸ்" தன்னுடைய யூத நூலான " The code of jews law" எனும் நூலில் தெளிவாக எழுதியுள்ளதாவது:- " பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் கைஹலுஸ் ஸுலைமானியை நிறுவுவது யூதனாக பிறந்த ஒவ்வொரு நபரினதும் வாழ்க்கை குறிக்கோளாகும்."
இதற்காகவே Free Mason Movement அமைப்பினை உருவாக்கி உலகலாவிய ரீதியில் கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவது தொடர்பான கருத்தலைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த தகவல்களின் அடிப்படையில் இன்று அடிக்கடி பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் தீப்பற்றி எரிவதும் அங்காங்கே தீப்பற்றி எரிவதும் அவ்வளாகத்தை இலக்காக கொண்டு பல தாக்குதல்கள் நடைபெறுவதும் இவர்களின் திட்டத்தின் செயற்பாடுகளே.
ஆக யூதர்கள் அவர்களது முயற்சியில் வெற்றி பெறவே முயற்சி செய்வார்கள்.
இன்சா அல்லாஹ்.....
தொடரும் .......

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-01

பைத்துல் முகத்தஸைப்பற்றியும் பலஸ்தீனைப்பற்றியும் முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கி.மு.13ம் நூற்றாண்டில் தான் அங்கு முதன்முதலில் யூதர்கள் குடியேறினார்கள். தொடர்ந்து அங்கு இரண்டு நூற்றாண்டுகளாக போரிட்டே அங்கு வாழ்ந்து வந்தனர். பலங்காலந்தொட்டு அவர்கள் அங்கு வசித்துவரவில்லை. அவர்கள் அப்பகுதியின் பூர்வீக குடிகளும் அல்லர். அங்கு வசித்து வந்த பூர்வீக குடிகள் பற்றி பைபிளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த ‪#‎செவ்விந்தியர்களை‬, அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த ‪#‎அபோரிஜின்களை‬ எப்படி வெள்ளையினம் முற்றாக அழித்து குடியேறினார்களோ அதேபோன்று தான் யூதர்கள் பலஸ்தீன் பகுதியில் வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்து அங்கே குடியேறினர்.
அதன் பின்பு யூதர்களின் கலகத்தை அடக்க ஆசிரியர்கள் கி.மு.8ம் நூற்றாண்டு வட பலஸ்தீன் பகுதி நோக்கி படையெடுத்து யூதர்களை முற்றாக அழித்து அப்பகுதியை விட்டு விரட்டியடித்துவிட்டு அண்மித்த பகுதிகளில் வசித்துவந்த அரபினத்தவர்களை குடியமர்த்திவிட்டு சென்றனர்.
அதன்பின்பு கி.மு.6ம் நூற்றாண்டில் பாபிலோனிய சக்கரவர்த்தி பஃக்து நஸர் தென்பலஸ்தீனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அங்கு வசித்துவந்த யூதர்களை முற்றாக வெளியேற்றினார். அத்துடன் பைத்துல் முகத்திஸையும் சின்னாபின்னமாக்கி சுவடே இல்லா அளவுக்கு அழித்தார்.
கி.மு.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹைஹலுஸ் ஸுலைமானி எனப்படும் Temple of Solomon ஐயும் முற்றாக சுவடே இல்லாத அளவுக்கு அழித்தார்.
பல ஆண்டுகளாக நாடோடிகளாக சுற்றித்திரிந்த யூதர்கள் ஈரானிய பேரரசின் ஆட்சிக்காலத்தில் மறுபடியும் பலஸ்தீன் மண்ணில் குடியேறினர். அப்போது பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் மறுபடியும் ஹைஹலுஸ் ஸுலைமானை நிறுவினர்.
ஆனால் இந்த குடியேற்றம் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கவில்லை. கி.பி.70ம்ஆண்டளவில் யூதர்கள் ரோம பேரரசை எதிர்த்து கலகம் செய்தார்கள். இந்த கலகத்தை அடக்கும் முயற்சியில் அப்பிரதேசமும் Temple of Solomonஉம் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதன்பின்பும் கி.பி.135ம் ஆண்டில் மறுபடியும் ஏற்பட்ட கலகத்தை அடக்கும் முயற்சியில் யூதர்கள் ரோம படையினால் பலஸ்தீன் பகுதியிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டனர். இதன் போது இப்பகுதியில் அரபினத்தவர்கள் மறுபடி குடியேற்றப்பட்டனர்.
இன்சா அல்லாஹ்...
தொடரும் ....
(இவ்வாக்கம் சையத் அபுல் அஃலா மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் "யஹூதியொ உன் கா மன்ஷூபாஹ்" என்ற மூல நூலின் தமிழாக்கத்தின் பகுதிகளாக வெளிவருகிறது.)

Jan 27, 2016

அக்ஸாவும் அய்யூபியும்


கற்களுக்கும் குண்டுகளுக்கும்
இடையே பாலஸ்தீனத்தில்
ஒரு போட்டி!

யுத்தம் முந்தியது
மனித ரத்தம் சிந்தியது !

சஹீதுகள் வீட்டில் ஓலம் இருந்தாலும்
வெற்றியின் சந்தோசம் இருக்கின்றது ! .

மகளை பிரிந்தாலும் மகனை பிரிந்தாலும்
பிரியாமால் தொடர்கின்றது போராட்டம்!
சொல்லாமல் போனாலும்
போராடும் தொடர் குணமே
வாரிசுகளின் நாட்டம் !

அக்ஸாவை பார்க்கும் பொழுதெல்லாம்
வெட்கப்படுகின்றேன் ?

சலாஹுதீன் அய்யுபிக்கு இருந்த தைரியம்
எங்களுக்கு இல்லையே !

சலாஹுதீன் வெற்றிக்கு காரணம்
படை பலமா ? ஈமானிய உயர் பலமா ?

ஈமானிய உயர் பலம்! உறுதி பலம் !

முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்
குதிரைகளின் சேனைகளை கட்டுகிறேன்
வாள்களின் உலோகத்தை கூராக்குகிறேன்
இறைவன் கடைமைகளை சீராக்குகிறேன்
குர் ஆன் வேதத்தை இதோ வாசிக்கிறேன்
சலாஹுதீன் அய்யுபியை நோக்கி
புன்னகை சிதற விட்டு புறப்படுகிறேன்
பிரார்த்தனை செய்கிறேன்இப்போது!

இறைவா
அக்ஸாவை மீட்க உதவி செய் !

– அபூஷேக் முஹம்மத்

SOURCES FROM IQRAH.NET

Nov 15, 2015

மீண்டும் ஒருமுறை பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரயீல் போரை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது!

நமது பொறுப்பு என்ன?
 
 
 

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
 நிச்சயமாக நாம் நம்முடைய தூதருக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம் சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்! (அல்மூஃமின் : 51)

 
 அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
 
உண்ணுதல் நிமித்தம் மக்கள் ஒன்றுகூடுவது போலவே (பல்வேறு) சமுதாயத்து மக்கள் உங்களுக்கு எதிராக வெகுவிரைவில் ஒன்றுகூடுவார்கள்!  ‘அந்நாட்களில் நாங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாகவா?’ என்று வினவப்பட்டது. ‘இல்லை! அந்நாட்களில் நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பீர்கள்! எனினும் கடல் நுரையை போன்று (பலவீனமாக) இருப்பீர்கள்! அல்லாஹ்(சுபு) உங்களை பற்றிய அச்சத்தை உங்கள் எதிரிகளிடமிருந்து அகற்றிவிட்டு உங்கள் இதயங்களில் வஹ்னை போட்டு விடுவான்!’ என்று கூறினார்கள். ‘அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று வினவப்பட்டது. ‘உலக வாழ்க்கையின் மீதுள்ள (ஆழமான) விருப்பம் மற்றும் மரணத்தின் மீதுள்ள (கடுமையான) வெறுப்பு!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (நூல் : அஹ்மது, அபூதாவூது)
 
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு எதிராக பல வாரங்கள் நிகழ்த்தப்பட்டுவரும் போரில் இஸ்ரேலிய படைகள் ஆண்களையும் பெண்களையும் முதியவர்களையும் இளைஞர்களையும் குழந்தை களையும் எத்தகைய வேறுபாடுகளுமின்றி பட்டப்பகலில் கொன்று குவித்துவருகிறது! கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக புனித மண்ணை ஆக்கிரமித்துள்ள நிலையில் முஸ்லிம்களை மிருகத்தனமான கொடுமைகளுக்கு உள்ளாக்குவதில் இஸ்ரேலிய அரசு எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை!
 
முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் ஒன்றபின் ஒன்றாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன! குறிப்பாக பாலஸ்தீன மக்களின் நிலை குறித்து ரசூலுல்லாஹ்வின் இந்த சமுதாயம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளது!
 
 பாலஸ்தீனம் என்றால் என்ன? இஸ்லாத்தில் அதற்கு என்ன முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது?
பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்வெளி பயணத்திற்கு உயர்ந்துசென்ற புனித பூமியாகவும் திகழ்கிறது!
 
 அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
(அல்லாஹ்) மிகவும் பரிசுத்தமானவன்! அவன் (முஹம்மது ஸல் எனும்) தனது அடியாரை (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து (தொலைதூரத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் எனும்) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓர்இரவில் அழைத்துச்சென்றான்! நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிக்கும் பொருட்டு அதனை சூழவுள்ள பகுதிகளை நாம் செழிபுற்று அபிவிருத்தி அடையச்செய்துள்ளோம். நிச்சயமாக அவன் நன்கு செவியுறு பவனாகவும் (அடியார்களை) உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்  (அல்இஸ்ரா : 1)                                                  

 
அன்றியும் பாலஸ்தீன பூமி முஸ்லிம்களின் மூன்றாது புனித ஸ்தலமாகவும் விளங்குகிறது!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறியதை செவியுற்றதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது,
மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து வேறெதற்கும் (புனித)பயணம் மேற்கொள்ள வேண்டாம்! அவையாவன : எனது மஸ்ஜித் (மஸ்ஜித் அந்நபவி); மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா); மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) ஆகியவையாகும் (நூல் : முஸ்லிம் # 007 ஹதீஸ் எண் #  3218)
 
முஸ்லிம்களின் இத்தகைய புனித பூமியில்தான் இஸ்ரேலிய படைகள் அட்டூழியம் புரிந்து வருகின்றன! மிருகங்கள் புரிந்திடாத கொடிய செயல்களை யூதவெறியர்கள் நிகழ்த்தி வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் இளம் சிறுமிகளை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை! கல்விகற்க செல்லும் அவர்களை சோதணையிடுதல் என்ற சாக்கில் இடைமறித்து இஸ்ரேலிய இராணுவம் இழிவுபடுத்துவதோடு பகிரங்கமாக சுட்டிக்கொல்கிறது. இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன!

 
முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் அங்கமாக இருப்பவர்கள் என்ற முறையில் நமது சகோர சகோரிகளுக்கு எதிராக இழைக்கப்படும் இந்த வன்கொடுமை குறித்து கவலை கொள்ள வேண்டியதும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதும் அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதும் நம்மீது கட்டாயக்கடமையாக இருக்கிறது.

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ஒருவருக்கொருவர் பேணவேண்டிய நேசத்திலும் இரக்கத்திலும் கருணையிலும் மூஃமின்கள் (மனித) உடலுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்!‎காலில் ஒருகாயம் ஏற்பட்டால் முழு உடலும் காய்ச்சலுக்கு உட்பட்டு உறக்கமின்மை ஏற்படுகிறது (நூல் : முஸ்லிம்)

 
இக்காலகட்டத்தின் குறிப்பிட்ட வரலாற்று பாங்கின் பின்னணியில் தோன்றியுள்ள முஸ்லிம் உலகத்தின் இன்றைய தலைவர்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற தங்கள் கடமையை பற்றிய எத்தகைய தார்மீக உணர்வையும் பெற்றிருக்கவில்லை! போஸ்னியா, மியான்மர், சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் இதுதான் எதார்த்த நிலையாக இருக்கிறது. முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக மேற்கத்திய அரசுகள் கட்டவிழ்த்துவிடும் அக்கிரம செயல்களை தடுப்பதற்குரிய அரசியல் துணிவு இல்லாத அவர்களின் நிலை மேற்கத்தியர்களுக்கு அவர்கள் அடிமைப்பட்டுள்ளதை பறைசாற்றுகிறது! சர்வதேச முஸ்லிம்களை பொறுத்த சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் அவர்கள் ஆழமாக பிளவுபட்டிருக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் நிலப்பரப்புகளை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் கொடுங்கோலர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு துணிவில்லை என்பதையும் அது பறைசாற்றுகிறது!

 
 முஸ்லிம் சகோதர சகோதரிகளே!
முஸ்லிம் உலகம் ஆபத்தான பெருந்துயரத்தில் வீழ்ந்துகிடக்கும் இவ்வேளையில் உங்கள் இல்லங்களில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிகளை பார்த்து முஸ்லிம்களின் நிலை குறித்து வருந்திக்கொண்டிருப்பதில் எத்தகைய பயனும் விளையப்போவதில்லை! மாறாக, நாம் எந்த நிலப்பரப்பில் இருந்தபோதும் ஒன்றிணைந்து இந்த பாதகமான நிலையை மாற்றுவதற்கு வழிவகை காணவேண்டும்!

 
ஒரு தலைமைக்கும் மனித இனம் முழுமைக்கும் நீதி வழங்குவதற்கு திறன்பெற்ற ஓர் அரசியல் கட்டமைப்பிற்கும் கீழ் முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவது மட்டுமே இதற்குரிய தீர்வாகும். மேற்கத்தியர்களின் அத்துமீறல்களுக்கும், நமது சகோதர சகோதரிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், மாண்புமிக்க இஸ்லாமிய மண்ணில் காலனியாதிக்கவாதிகள் ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளுக்கும், நமது வாழ்க்கை முறையில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கும், நமது அனைத்து பிரச்சினைகளுக்கும் இதுமட்டுமே ஒரே தீர்வாக இருக்கும்! நமது கரங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய அரசியல் கட்டமைப்பு என்ற கிலாஃபா ராஷிதாவை மீண்டும் மறுநிர்மாணம் செய்வதற்கு அழைப்புவிடுப்பது மட்டுமே முஸ்லிம்களின் இந்த அவலநிலையை போக்குவதற்குரிய ஒரே வழியாக இருக்கிறது! கிலாஃபா அரசால் மட்டுமே முஸ்லிம்கள் இரத்தம் சிந்துவதையும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாவதையும் தடுத்துநிறுத்த இயலும்!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
இமாம் என்பவர் கேடயமாவார்! (முஸ்லிம்களாகிய நீங்கள்) அவருக்கு பின்நின்று போரிடுகிறீர்கள், அவரை கொண்டே பாதுகாப்பு அடைகிறீர்கள் (நூல் : முஸ்லிம்)

 
சுதந்திரமாகவும் நீதமாகவும் மேற்கத்திய ஆதிக்கத்தின் அடிமைத்தளைக்கு உட்படாமலும் செயலாற்றுவதற்கு திறன் பெற்றுள்ள கிலாஃபா ராஷிதாவின் தலைவரான கலீஃபாவின் இராணுவம் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படும் நிலையில் செயலற்று நின்றிருக்காது!‎‎‎‎‎ கலீஃபா உஸ்மானின்(ரளி) ஆட்சிக்காலத்தில் இவ்வாறுதான் நிகழ்ந்தது. பைசாந்திய (ரோமானிய) சஸானிய (பாரசீக) வல்லரசுகளின் அடிமைத்தளையில் சிக்குண்டு பெரும் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்த வடஆப்பிரிக்க நிலப்பரப்புகளை விடுவிப்பதற்கு முஸ்லிம் உலகத்தின் மாபெரும் வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி உஸ்மான்(ரளி) போரிட்டார்! முஸ்லிம் உலகத்தில் கிலாஃபா ராஷிதாவை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், அது ஒட்டுமொத்த உலகத்திலும் அடக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சரணாலயமாக விளங்கும்!

 
இதை சாத்தியமாக்க வேண்டுமெனில் நம்மை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவை நாம் அதிகரித்துக்கொள்ள வேண்டும், நம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ளவேண்டும், இஸ்லாத்தின் எதிரிகள் முன்வைக்கும் தர்க்க வாதங்கள் பற்றியும் அவற்றிற்குரிய மறுப்புரைகள் பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். தீனுடைய அனைத்து விஷயங்களின் கருத்தாக்கங்கள் மற்றும் அவற்றை நடைமுறையில் பின்பற்றுவது குறித்த தெளிவான விளங்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை நாம் பெற்றிருக்க வேண்டும்.

 
இந்த நோக்கத்தை நிறைவுசெய்வதற்குரிய திறன்கள் அனைத்தையும் நாம் பிரயோகிக்க வேண்டும். இதன்பொருட்டு வன்முறையற்ற ஆர்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டும், முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சம்பவங்கள் குறித்து ஊடகங்களுக்கு விபரமாக எழுதவேண்டும், நமது குரல்களை பதிவுசெய்வதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் அவர்களுடைய தீய செயல்பாடுகளை தடுக்கும் வண்ணம் அரசுகளின் மீது நாம் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்! இஸ்லாத்தின் தூதுவர்கள் என்ற முறையில் நாம் நமது நிலை குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும்! ஷரீஆ சட்டங்களுக்கு முரண்படாத வகையில் நாம் நமது செயல்பாடுகளை வன்முறையற்ற வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும்.

 
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அல்லாஹ்(சுபு)விடம் துஆ மேற்கொள்ளவேண்டும், அவனுடைய நேசத்திற்குரிய தூதர்(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் மீது கருணையையும் சாந்தியையும் நல்கவேண்டும் என்று எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு)விடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த உலகவாழ்க்கையில் இஸ்லாமிய தீனை நிலைநிறுத்துவதற்கு அவன் முஸ்லிம் உம்மாவிற்கு பலத்தையும் கண்ணியத்தையும் அளிப்பானாக!

 
இந்த பிரச்சாரம் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுங்கோண்மை மிக்க இஸ்ரேலிய யூதவெறியர்கள் மேற்கொண்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிராக உங்கள் குரல்களை பதிவுசெய்வதற்கும் கீழ்க்கண்ட இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்,


 
Facebook  : https://www.facebook.com/vaomuslims
Twitter : https://twitter.com/vaomuslims
உங்கள் கருத்துக்களை மின்னஞ்கல் மூலம் பதிவுசெய்யவும்‎‎ ‎‎‎‎‎  – mif.sindhanai@gmail.com

Nov 10, 2015

அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்

74] நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்
 
 
 
1967 - இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம்.
 
ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள்.
 
அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள்குற்றம் சாட்டினார்கள்.
 
நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், அப்புறம் இந்த அரசாங்கங்களை நம்பி என்ன புண்ணியம்?
 
ஆகவே, ஏதாவது ஒரு மாற்று வழி யோசித்தே தீரவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.மக்களுடைய இந்தச் சிந்தனைப் போக்கின் விளைவுதான், பாலஸ்தீனில் ஏராளமான விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயின. அத்தனை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, சரியான திட்டம் வகுத்து, கவனம் குவித்து, இஸ்ரேலுக்கெதிரான முழுநீள யுத்தத்தை வழி நடத்தும் பொறுப்பு, பி.எல்.ஓ.வின் தலையில் விழுவதற்குக்காரணமானது.
 
அப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் இருப்பவர், மிகப்பெரிய ராஜதந்திரியாகவும் மாவீரராகவும் மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டுமென்றுதான் யாசர் அராஃபத்தை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார்கள்.
 
அதுவரை குவைத்தில் இருந்தபடி அல் ஃபத்தாவை வழிநடத்திக்கொண்டிருந்த அராஃபத். அரபு தேசங்களில் இருந்த எந்த ஒரு போராளி இயக்கத்துக்கும் அதுவரை பரிச்சயமில்லாமல் இருந்த 'கெரில்லா' தாக்குதல் முறையில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்த அராஃபத்.1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கெய்ரோவில் கூடிய பாலஸ்தீன் தேசிய காங்கிரஸின் சிறப்புக் கூட்டத்தில், யாசர் அராஃபாத் முறைப்படி பி.எல்.ஓ.வின் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
அவர் அந்தப் பொறுப்புக்கு வந்தபோது பி.எல்.ஓ.வில் உறுப்பினராக இருந்த விடுதலை இயக்கங்கள் இவை:
 
1. Fatah, 2. western Sector, 3. Force 17, 4. Popular Front for the Liberation of Palestine PFLP, 5. Democratic Front for the Liberation of Palestine DFLP), 6. Hawatmah Faction; 7.Abd Rabbu Faction; 8. Popular Front for Liberation of Palestine (General Command), 9. Palestine Liberation Front, (PLF) 10. Abu Abbas Faction, 11. Tal'at Yaqub Faction, 12.AlSaiqa Organization, 13. Arab Liberation Front (ALF), 14. Palestinian Arab Liberation Front , 15. Palestinian Democratic Union (Fida), 16. Palestine Islamic Jihad Movement, 17.Palestinian People's Party [Hizb Al Sha'ab], 18. Palestinian Popular Struggle Front.
 
இவற்றுள் ஃபத்தா மட்டும் அராஃபத்தின் சொந்த இயக்கம்.
 
மற்ற அனைத்தும் தோழமை இயக்கங்கள். இத்தனை இயக்கங்களையும் கட்டிக்காப்பதுடன் மட்டுமல்லாமல் சரியான, முறைப்படுத்தப்பட்ட போர்ப்பயிற்சி அளிப்பது, இஸ்ரேலை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கவனம் கவர வழி செய்வது என்று அராஃபத்துக்கு இருந்த பொறுப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
 
வெற்றிகரமாக அவரால் அதனைச் செய்ய முடிந்ததற்கு மிகப்பெரிய காரணம், முன்பே பார்த்ததுபோல, அரசுகள் மீது மக்கள் இழந்துவிட்டிருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை அப்படியே அப்போது விடுதலை இயக்கங்களின்பக்கம் சாயத் தொடங்கியது.
 
இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், பாலஸ்தீன் மக்கள், ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைத்தார்கள். அதே சமயம், இந்தப் போராளி இயக்கங்கள்தான் தமக்கு விடுதலை பெற்றுத் தரப்போகிறவர்கள் என்றும் கருதினார்கள்.
 
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.போராளி இயக்கங்கள் பொதுவாக, தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களாகச் சித்திரிக்கப்படுவது சர்வதேச மரபு. இதை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா.
 
அமெரிக்க அரசுக்குத் தலைவலி தரக்கூடிய எந்த ஓர் அமைப்பையும், பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதுதான் அத்தேசத்தின் வழக்கம்.
 
அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த வழக்கத்தை முதலில் இங்கிலாந்தும் பிறகு ஐரோப்பிய யூனியனில் உள்ள அத்தனை தேசங்களும் அப்படியே எவ்வித மாறுதலும் செய்யாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன.
 
சர்வதேச அளவில் எந்த ஒரு தேசத்தில் விடுதலைக் குரல் கேட்கிறதோ, அந்தக் குரலுக்கு உரியவர்களைத் தீவிரவாதிகள் என்று உடனே சொல்லிவிடும் வழக்கம், அப்போது ஆரம்பித்ததுதான்.
 
உண்மையில் விடுதலை இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அரசாங்கங்கள் கைவிட்டு, அரபு லீக்கும் கைவிட்டு, ஐ.நா.சபையும் கைவிட்டபிறகு, இழந்த தங்கள் நிலத்தைத் திரும்பப்பெற பாலஸ்தீன் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றானது வரலாறு.
 
அவர்களைப் போராளிகள் என்று சொல்லாமல் தீவிரவாதிகள் என்று வருணிப்பது எப்படிச் சரியாகும்?ஆனால் இந்தப் போராளி இயக்கங்கள் சமயத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதுண்டு என்பதும், மறுக்கமுடியாத உண்மையே ஆகும்.
 
உதாரணமாக, யாசர் அராஃபத் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஐந்தாம் ஆண்டு, அதாவது 1974-ம் வருடம் பி.எல்.ஓ.வின் ஒரு குழுவினர் இஸ்ரேலில் உள்ள மா'லாட் என்கிற இடத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் புகுந்து, கையெறி குண்டுகளை வீசி 21 குழந்தைகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று வீசினார்கள். இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீவிரவாதம்.
 
இன்னும் சொல்லப்போனால் கொலைவெறியாட்டம். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான யுத்தத்துக்கும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? யூதர்களில் சிறுவர், பெரியவர் என்று பாராமல் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட ஆரியக் கிறிஸ்துவரான ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டது இஸ்ரேல்.
 
நியாயப்படுத்தவே முடியாத இத்தகைய செயல்களால்தான் போராளி இயக்கங்களுக்கு சர்வதேச ஆதரவோ, அனுதாபமோ பெரும்பாலும் கிடைக்காமல் போகிறது.போராளி இயக்கங்களின் நோக்கத்தில், செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய சறுக்கல்களால்தான் அவர்கள்மீது விழவேண்டிய நியாயமான கவனம், விழாமல் போகிறது.
 
அராஃபத் பொறுப்புக்கு வந்த ஆரம்ப வருடங்களில் மிகக் கவனமாக இஸ்ரேலிய ராணுவம், காவல்துறை போன்ற இலக்குகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இது,இஸ்ரேலுக்குள்ளாக. இஸ்ரேலுக்கு வெளியிலும் பல்வேறு தேசங்களில் பி.எல்.ஓ.வின் போராளிகள் கவன ஈர்ப்புக்காக ஏராளமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
 
ஆனால் மிகக் கவனமாக அத்தனை தாக்குதல்களுமே, யூத இலக்குகளின் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.உலகம் முழுக்க பி.எல்.ஓ., பி.எல்.ஓ., என்று பேசிக்கொண்டிருந்த காலம் அது. யார், என்ன என்கிற விவரம் கூடத் தெரியாமல், அராஃபத்தைப் பற்றிப் பேசினார்கள்.அணுகுண்டுகள் வைத்திருக்கும் இயக்கம் என்றெல்லாம் கதை பரப்பினார்கள். உண்மையில், நாட்டுவெடி குண்டுகளுக்கு அப்பால் பி.எல்.ஓ.வினரிடம் அப்போது வேறெந்த ஆயுதமும் கிடையாது.வாங்குவதற்குப் பணம் கிடையாது முதலில். பி.எல்.ஓ.வின் பிரசாரப் பிரிவினர் அரபு தேசங்களெங்கும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி வசூல் செய்தே இயக்கத்தை வழி நடத்திக்கொண்டிருந்தனர்.
 
சவுதி அரேபியா போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் மட்டும் மறைமுகமாக பி.எல்.ஓ.வுக்கு நிதியுதவி செய்திருப்பதாகத் தெரிகிறது.1973-ம் ஆண்டுவரை பி.எல்.ஓ.வுக்கு மிகப்பெரிய அளவில் நிதிப்பிரச்னை இருந்திருக்கிறது. இது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை.ஒரு பக்கம் பி.எல்.ஓ.வில் இருந்த இயக்கங்கள், மிகத் தீவிரமாக இஸ்ரேலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதே காலகட்டத்தில், பாலஸ்தீனில் வேறு சில புதிய இயக்கங்களும் தோன்றத் தொடங்கின.'இஸ்ரேல் என்கிற திடீர் தேசத்தை வேரோடு ஒழித்துவிட்டு, அகண்ட பாலஸ்தீனை மறுபடியும் ஸ்தாபிப்பதற்காக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.ஆயுதங்கள் மூலம் அச்சமூட்டுவோம். இன விருத்திமூலம்கலவரமூட்டுவோம். யூதர்களைத் தூங்கவிடமாட்டோம். ஜெருசலேம் உள்பட, இஸ்ரேல் எங்களிடமிருந்து அபகரித்த அத்தனையையும் திரும்பப் பெறாமல் ஓயமாட்டோம்' என்கிற யாசர் அராஃபத்தின் அன்றைய பிரகடனம் ஒரு வேத மந்திரம் போல, அத்தனைபேரின் செவிகளிலும் விழுந்து சிந்தனையைக் கிளறிவிட்டதன் விளைவே இது.
 
இப்படித் தோன்றிய இயக்கங்களில் சில திசைமாறிப் போயின என்றாலும், பெரும்பாலான இயக்கங்கள் பி.எல்.ஓ.வில் சேராவிட்டாலும் பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யத் தயங்கவில்லை.குறிப்பாக, ஆயுதங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது அன்றைக்கு பி.எல்.ஓ.வினரின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.குறிப்பாக அரபு தேசங்களுக்கு வெளியே அவர்கள் திட்டமிட்ட ஒவ்வொரு கவன ஈர்ப்புச் செயலுக்கும் தேவையான ஆயுதங்களைக் கடத்தியோ, உருவாக்கியோ, வாங்கியோ தரும் பணியைச் செய்ய இத்தகைய இயக்கங்கள் மிகவும் உதவி செய்தன.
 
அப்படி 1967 யுத்தத்துக்குப் பிறகு உதித்த பாலஸ்தீன் இயக்கங்களுள் ஒன்றுதான் ஹமாஸ்.'இஸ்ரேல் அரபுப் பிரச்னை என்பது அரசியல் சார்ந்ததல்ல.
 
அது இஸ்லாத்துக்கும் யூதமதத்துக்குமான பல நூற்றாண்டு காலப் பிரச்னையின் நீட்சி. நடப்பது அரசியல் யுத்தமல்ல. அது இரு மதங்களின் மோதல் மட்டுமே' என்கிற பிரகடனத்துடன் உருவான இயக்கம் இது.
 
பிரச்னையை முற்றிலும் அரசியல் சார்ந்து மட்டுமே பார்க்கக்கூடியவராக அராஃபத் இருந்த நிலையில், ஹமாஸின் இந்த திடீர் பிரவேசம் உரிய கவன ஈர்ப்பைப் பெற்றதே தவிர, ஹமாஸால் இதன் காரணம் பற்றியே பி.எல்.ஓ.வில் இணைய முடியாமலும் போனது.
 
அது அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னென்ன பிரகடனங்கள் செய்துகொண்டாலும், எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். குறிக்கோள் ஒன்றுதான். கனவும் நினைவும் ஒன்றுதான்.அது இஸ்ரேலை ஒழிப்பது. யூதர்களைப் பூண்டோடு அடித்துத் துரத்துவது.இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் அடைந்து, பாலஸ்தீனுக்குப் புத்துயிர் அளிப்பது.ஆகவே, பி.எல்.ஓ.வுக்குள் இல்லாமலேயே ஹமாஸ் பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான பணிகளைச் செய்ய ஆரம்பித்தது.தொடர்ந்தும் தீவிரமாகவும் இஸ்ரேலிய ராணுவத்தை, காவல்துறையை, அரசு இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலம் அச்சுறுத்தி வருவதுதான், சரியான ஆரம்பமாக இருக்கும் என்பதில் இவர்கள் யாருக்குமே கருத்து வேறுபாடு இல்லை.
 
தேவைப்பட்டால் ஆயுதப் போராட்டத்துக்காக அவர்கள் வகுத்து வைத்திருந்த வழிமுறைகளில் சில மாறுதல்கள், கூடுதல், குறைவுகள் செய்துகொள்ளலாமே தவிர, போராட்டத்தை வேறு எந்த விதமாகவும் தொடருவதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அத்தனை பேருமே கருதினார்கள்.பி.எல்.ஓ.வின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த யாசர் அராஃபத்துக்கு அந்தத் தொடக்க காலத்திலேயே வெஸ்ட் பேங்க் பகுதியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது.
 
அறிவிக்கப்படாததொரு மகாராஜாவாகத்தான், அவரை மக்கள் அங்கே கருதினார்கள்.அதே போல, காஸா பகுதியில் தோன்றி, வேர்விட்டு, வளர்ந்து, நிலைபெற்ற ஹமாஸுக்கு அங்கே பி.எல்.ஓ.வைக்காட்டிலும் செல்வாக்கு அதிகம். இந்த வெஸ்ட் பேங்க் என்று சொல்லப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்துத்தான், சுதந்திர பாலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்று இன்றுவரை பேசிவருகிறார்கள்.
 
நமக்குப் புரியும் விதத்தில் சொல்லுவதென்றால், இந்தியா - பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது எப்படி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று இரு வேறு துண்டுகளை இணைத்து ஒரே தேசத்தை உருவாக்கினார்களோ, அதுபோல.இந்தமாதிரி நிலப்பரப்பு ரீதியில் பெரிய இடைவெளிகளுக்கு அப்பால் ஒரே தேசத்தின் வேறொரு பகுதி இருக்கும் இடங்களிலெல்லாம், எப்போதுமே பிரச்னைதான். காஸா விஷயத்தில் என்ன பிரச்னை என்பதைப் பிறகு பார்க்கலாம்.

இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) மொஸாட்.

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 73
 
 
 
பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை.


அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம்.சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன?


அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா?


பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும்.


அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது?


ஏன் யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை?


எகிப்து, சிரியா, ஜோர்டன் என்று மூன்று தேசங்கள் இணைந்துதான் 1967 யுத்தத்தில் இஸ்ரேலை எதிர்த்தன. இத்தனைக்கும் அவர்களுக்கு சோவியத் யூனியனின் மறைமுக ஆதரவு வேறு இருந்தது.


ஆனாலும் யுத்தத்தில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது; தான் நினைத்ததைச் சாதித்தது. அதற்கு முன்னால் நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போதும் போர்நிறுத்தத்துக்கு முன்னதாகத் தனக்கு என்ன வேண்டுமோ அதை இஸ்ரேலால் அடைந்துவிட முடிந்தது. அதற்கும் முன்னால் நடைபெற்ற 1948 யுத்தத்திலும் இஸ்ரேலுக்குத்தான் வெற்றி.


எப்படி இது சாத்தியம்? அரேபியர்களின் வீரம் இஸ்ரேலிடம் எடுபடக்கூடிய தரத்தில் இல்லையா?


அது இருக்கட்டும். ஆயிரம் எதிர்ப்புகள் வருகின்றன; ஐ.நா. சபையில்அடிக்கொருதரம் தீர்மானம் போடுகிறார்கள்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனபோதும் எல்லாம் அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருந்து மறைந்துவிடுவது ஏன்?


இவை எல்லாவற்றுக்கும் காரணம், இஸ்ரேலின் தனிப்பெரும் அடையாளமும் மிகப்பெரிய பலமுமான அதன் உளவு அமைப்பு. அதன் பெயர் HaMossad leModiin uleTafkidim Meyuhadim. சுருக்கமாக மொஸாட் (Mossad).


உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் தரத்தில் மொஸாட், சி.ஐ.ஏ., எம் 16 ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது.


பொதுவாக உளவு அமைப்புகளுக்குரிய அதிகார வரம்புகளைக் காட்டிலும் சற்றே கூடுதல் அதிகாரங்கள் பெற்ற அமைப்பு இது. ஆனால் மொஸாடில் வெளிப்படையான ராணுவப் பிரிவு கிடையாது.


சி.ஐ.ஏ.வில் அது உண்டு. எம்.16_ல் உண்டு. ரஷ்யாவின் கே.ஜி.பி.யில் கூட ஒரு துணை ராணுவப்பிரிவு உண்டு என்று சொல்லுவார்கள்.


ளின்டின் பணிகள் மிகவும் எளிமையானவை.
 
1. ஆட்சிக்கு இடையூறு தரக்கூடியவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.
 
2. தேவைப்பட்டால் சத்தமில்லாமல் அரசியல் கொலைகளைச் செய்தல்,
 
3. யுத்தங்களுக்கான திட்டம் தீட்டி, வழி நடத்திக் கொடுத்தல்.
 
4. அரபு தேசங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் அரபு அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.


இவற்றுள் முதலாவது மற்றும் மூன்றாவது, நான்காவது பணிகளை உலகின் அனைத்து தேசங்களின் உளவு அமைப்புகளும் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு அனுமதி பெற்ற ஒரே உளவு அமைப்பு மொஸாட் மட்டுமே.


இஸ்ரேலில் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொஸாட் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது உலகின் வேறெந்த நாட்டு உளவு அமைப்புக்கும் இல்லாத அதிகாரம். சி.ஐ.ஏ.வுக்குக் கூடக் கிடையாது.


ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் மொஸாட் உளவாளிகள், எக்காரணம்கொண்டும் யூதர்களைக் கொல்லக்கூடாது! அவ்வளவுதான்.


இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியான டேவிட் பென் குரியன், 1951-ம் ஆண்டு மொஸாட்டைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் பாலஸ்தீன் போராளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மட்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக விரைவில் மிகப் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது.


இன்றைய தேதியில் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2000.
 

ஆனால் கண்ணுக்குப் புலப்படாத மொஸாட் ஏஜெண்டுகள் பல்லாயிரக் கணக்கில் உலகெங்கிலும் உண்டு.


மொஸாட்டின் இணையத்தளத்துக்கு முடிந்தால் போய்ப் பாருங்கள். அழகாக, சுத்தமாக, மிகவும் வெளிப்படையாக அப்ளிகேஷன் பாரம் கொடுத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் மொஸாட்டின் ஏஜெண்டாக விண்ணப்பிக்கலாம்.


உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டபிறகு, வேறு சில வினாக்களும் அங்கே கேட்கப்படும்.


உதாரணமாக நீங்கள் ஒரு யூதர் அல்லாதவர் என்றால் எதற்காக மொஸாட்டுக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என்று கேட்பார்கள்.


இது தவிரவும் ஏராளமான கேள்விகள் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் விடை எழுதி அனுப்பினால், அந்த விடைகள் அவர்களுக்குத் திருப்தி தரக்கூடுமென்றால் ஒரு வேளை உங்களை யாராவது ஒரு மொஸாட் ஏஜெண்ட் கண்காணிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்னும் அதிகமோ, குறைவோ. நீங்கள் சரியான நபர்தான், தேவையான நபர்தான் என்று அவர்கள் தீர்மானித்தால் அடுத்தகட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகும்.


எத்தனை கட்டங்களாகப் பரிசோதிப்பார்கள், என்னென்ன பயிற்சிகள்அளிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள். மொஸாட்டின் விண்ணப்பப் படிவம் மட்டும்தான் வெளிப்படை.


மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் மொத்தம் ஆறு துறைகள் இயங்குகின்றன. (ஆரம்ப காலத்தில் எட்டு துறைகளாக இருந்திருக்கிறது. பின்னால் அதனை ஆறாகச் சுருக்கி இருக்கிறார்கள்.)


1. தகவல் சேகரிப்புப் பிரிவு (Collections Department). இதுதான் அளவில் மிகப் பெரியது. உலகெங்கும் மொஸாட் உளவாளிகள் அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் இஸ்ரேல் அரசுக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகச் சேகரித்துத் தொகுத்து வைப்பார்கள். அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தருவது, ஆயத்தங்களுக்கு அறிவுறுத்துவது போன்றவை இந்தப் பிரிவின் தலையாய பணி.
 
 
2. அரசியல் மற்றும் நல்லுறவுப் பிரிவு (Political Action and Liaison Department). இது கிட்டத்தட்ட ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் போன்றது. இஸ்ரேலின் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்கு வழி செய்து தமக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகப் பெற்றுத் தரவேண்டியது இந்தப் பிரிவின் பணி. எதிரி தேசங்கள் என்றால் அங்குள்ள அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை வளைக்க முடியுமா என்று பார்ப்பதும் இவர்களின் பணியே.
 
 
3. Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவு. இவர்கள்தான் அரசியல் கொலைகளைச் செய்பவர்கள். ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, வழிகாட்டுவது, தேவைப்பட்டால் தாங்களே களத்தில் இறங்குவது ஆகியவை இப்பிரிவின் பணிகள்.
 
 
4. Lohamah Psichlogit என்கிற மனோதத்துவப் பிரிவு. விசாரணைகள், ரகசிய ஆராய்ச்சிகள் செய்வது, தேவையான தகவல்களை மக்களிடையே பரப்புவது, மீடியாவைக் கண்காணிப்பது, இஸ்ரேல் குறித்து மீடியா வெளியிடும் தகவல்களைச் சரிபார்ப்பது, தேவைப்பட்டால் சர்வதேச மீடியாவுக்குள் ஊடுருவி, தமக்குச் சாதகமான செய்திகளை வரவைப்பது போன்றவை இப்பிரிவின் பணிகள்.
 
 
5. Research Department என்கிற ஆராய்ச்சிப் பிரிவு. மேற்சொன்ன அத்தனை பிரிவினரும் கொண்டுவந்து சேர்க்கும் தகவல்களை வைத்துக்கொண்டு ஆய்வு செய்து வேண்டிய விவரங்களைத் தேடித்தொகுப்பது இவர்கள் பணி.
 
 
6. இறுதியாகத் தொழில்நுட்பப் பிரிவு (Technology Department). மொஸாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அல்லது கடன் வாங்கி, துறையை எப்போதும் நவீனமயமாக வைத்திருப்பது இவர்கள் வேலை.


இந்த ஆறு பிரிவினருள் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், மொஸாட்டின் Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவுதான்.


முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து குருஅக்ஷவ் பேசிய ஒரு சர்ச்சைக்கிடமான பேச்சைக் கண்டறிந்து வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.


பாலஸ்தீன் பிரச்னை குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Black September என்கிற ஒரு தீவிரவாத அமைப்பு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் ஒரு மாபெரும் படுகொலைத் திட்டத்தைத் தீர்மானித்து நடத்தி, உலகையே உலுக்கிப் பார்த்தது. இந்தச் சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இஸ்ரேல் அரசு,


படுகொலைக்குக் காரணமானவர்களைக் கொல்லும்படி மொஸாட்டுக்குக் கட்டளையிட்டது.கறுப்பு செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த அலி ஹாஸன் ஸல்மே (Ali Hassan Salameh) என்கிற தீவிரவாதிதான் அந்தக் கொலைக்குப் பொறுப்பாளி.


ஆனால் மொஸாட்டின் மெட்ஸடா பிரிவு உளவாளிகள், சம்பந்தமே இல்லாமல் நார்வே நாட்டில் இருந்த அஹமத் பவுச்சிகி (Ahmed Bouchiki) என்கிற ஒரு வெயிட்டரைக் கொலை செய்துவிட்டார்கள்.
 
அதுவும் எப்படி? மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள்!


கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை! இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘சரியான நபரை மீண்டும் தேடிக் கொலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார்கள்!


இச்சம்பவம் மட்டுமல்ல; பல்வேறு பாலஸ்தீன் போராளிகளைக் கொலை செய்வதற்காக பிரிட்டன், சைனா, ஜோர்டன் தேசத்து பாஸ்போர்ட்களைப் போலியாக உருவாக்கிப் ‘புகழ்’ பெற்றவர்கள் இவர்கள்.


மொஸாட்டின் மிகப்பெரிய பலம், அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது டெல் அவிவ் நகரில் இருக்கும் அதன் தலைமையக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருபோதும் வெளியே வராது என்பதுதான்.


அத்தனை விசுவாசமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு அது. யுத்தங்களின்போது இஸ்ரேலிய ராணுவம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை போதிப்பதற்காக, மொஸாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரமும் உலகெங்கும் நடக்கும் யுத்தங்களைக் கூர்மையாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கும்.


எதிரிப் படைகளின் இருப்பையும் நகர்வையும் கண்காணிப்பதற்குச் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள். 1967 யுத்த சமயத்தில் ஒரு மொஸாட் உளவாளி யுத்தம் நடந்த ஆறு தினங்களும் கோலன் குன்றுப் பகுதிகளில் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மரத்தடியில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தவன் போலக் கிடந்திருக்கிறான். சோறு தண்ணீர் கிடையாது! சுவாசிக்கக்கூட முடியாது! அசையாமல் அப்படியே இருந்து ரகசியமாகத் தகவல்களைக் கடத்தியிருக்கிறான்.


இஸ்ரேல் அரசு இன்றைக்கும் தனது ஆண்டு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொஸாட்டுக்காக ஒதுக்குகிறது. இது வெளியே சொல்லப் படுவதில்லை. ஆனால் ஆயிரம் சிக்கல்கள் வந்தாலும் இஸ்ரேல் சமாளிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்த மொஸாட்தான்.


மொஸாட் உருவானதிலிருந்து இன்றுவரை மொத்தம் பதினொரு பேர் அதன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் பலபேர் ராணுவ அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றபோதும் மொஸாட்டில் ராணுவப் பதவிகள் ஏதும் கிடையாது. ஒரு சிவிலியன் அமைப்பாகத்தான் மொஸாட் செயல்படுகிறது.


இந்த உளவு பலத்தைக் கொண்டுதான் இஸ்ரேல் தொட்டதிலெல்லாம் வெற்றிவாகை சூடுகிறது என்பது பாலஸ்தீனப் போராளிகளுக்குப் புரிவதற்கு வெகுகாலம் ஆனது.


பி.எல்.ஓ.விலும் ஒரு சரியான உளவுப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆறு நாள் யுத்தத்துக்குப் பிறகு முடிவு செய்தார்கள். அதற்கு முன் தலைவரை மாற்றினால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்துதான் யாசர் அராஃபத்தைப் பிடித்தார்கள்.


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 4 ஆகஸ்ட், 2005