Showing posts with label காசா. Show all posts
Showing posts with label காசா. Show all posts

Jul 3, 2016

காசாவில் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்

இஸ்ரேலிய போர் விமானங்கள் அதிகாலையில் காசா நகர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹமாஸ் இயக்கத்திற்கு தொடர்புடைய நான்கு இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.

ஹமாஸின் கட்டுப்பாட்டில் தற்போது காசா நிலப்பரப்பு உள்ளது.இந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்திருப்பதாக பாலஸ்தீன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, காசா பகுதியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று, இஸ்ரேலில் உள்ள காலியான மழலையர் பள்ளிக் கட்டிடத்தைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

செய்தி BBC

Sep 3, 2015

ஐந்து ஆண்டுகளில் காசா யாரும் வாழ முடியாத இடமாக மாறிவிடலாம்: ஐநா எச்சரிக்கை!!

இஸ்ரேலிய வான் தாக்குதலில் காசா பெரும் அழிந்துள்ளது.
               
மத்திய கிழக்கின் காசாவில் தற்போதைய கெடுபிடிகள் நீடித்தால் ஐந்து ஆண்டுகளுக்குள் அவ்விடம் ஆட்கள் வசிக்க முடியாத இடமாக மாறிவிடும் என்று ஐநாவின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
 
இஸ்ரேல் விதித்துள்ள தடைகள் மற்றும் அண்மைய காலத்தில் அங்கு செய்யப்பட்ட மூன்று இராணுவ நடவடிக்கைகள் காரணமாக காசாவின் சமூகப் பொருளாதாரக் குறியீடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி தொடர்பான ஐநா நிறுவனமான UNCTAD எச்சரித்துள்ளது.
காசாவை இஸ்ரேல் கைப்பற்றிய கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் முன்பில்லாத அளவில் நிலைமை மோசமாக உள்ளதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உணவு, உறைவிடம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாமல் காசாவில் மக்கள் பலர் வாடுவதாகவும், அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாகவும், பொருளாதார உற்பத்தி என்று எதுவுமே இல்லை என்றும் UNCTAD குறிப்பிடுகிறது.

சர்வதேச உதவிகளால் காசாவுக்கு நிலைக்கக்கூடிய நெடுங்காலத் தீர்வாக இருக்க முடியாது என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

செய்தி : BBC

Jul 24, 2014

பலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதனின் அச்சமும் விலகாது


“இறுதிப் பலஸ்தீனியன் இருக்கும் வரை ஹமாஸை அழிக்க முடியாது” - Ismail Haniyeh (ஹமாஸின் பிரதி அரசியல் தலைவர்)


இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல்கள் பற்றி காஸாவின் முன்னாள் பிரதமரும் ஹமாஸின் அரசியல் பிரிவின் பிரதித் தலைவருமான Ismail Haniyeh அவர்கள் அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையொன்றில் இருந்த அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர் பலஸ்தீனத்தின் அழிவிற்கு முழு உலக நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என சாடியுள்ளார்.

“இஸ்ரேல் கடந்த 08 வருடங்களாக காஸாவை முழு முற்றுகைக்கு உள்ளாக்கி வந்துள்ளது. இந்த சட்டவிரோத முற்றுகையை உலக நாடுகளும் கண்டிக்கவில்லை, எமது சகோதர அரபு தேசங்களும் கண்டிக்கவில்லை. இப்போது அது காஸாவின் ஒரு பகுதியை அழிக்க முனைகிறது. அப்போதும் இந்த சர்வதேசமும், முஸ்லிம் தேசங்களும் இதனை தடுக்காமல் வாழாவிருக்கின்றன. யூஹுதிகளின் கொலை வெறிக்கு எமது இரத்தத்தின் மீது உறுதி கூறுகிறோம், நாம் சளைக்காமல் போராடுவோம் என்று. அது போலவே இந்த பிரச்சனை தீரா வேண்டும் என்றால் யூதர்கள் சிந்தும் இரத்தத்தின் பின்பே அது நடக்கும். ”

“எம்மை இஸ்ரேல் தாக்கும் போது, எமது சிறார்களையும், எமது குழந்தைகளையும் கொன்றொழிக்கும் போது, அவர்கள் மேல் இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்கும் போது எதுவும் பேசாத அமெரிக்காவும் ஐரோப்பாவும், நாம் யூதர்களிற்கு பதிலடியை கொடுக்கும் போதும் அதில் பல வெற்றிகளை ஈட்டும் போதும் சிந்தப்படும் யூதர்களிற்காகவும் அவர்களது இரத்தத்திற்காகவும் இந்த தேசங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளியிடுகின்றன. இஸ்ரேலின் செயலிற்காக வக்காலத்து வாங்குகின்றன.”

“நாம் யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அது போலவே யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போரட்டத்தை முடிவிற்கு கொண்டு வரப்போவதுமில்லை. எங்கள் அனைத்து நம்பிக்கைகளும் தவக்கல்களும் அந்த ஏக இறைவன் மீது மட்டும் தான். அவன் எமக்கு உதவுவான் என நாம் உறுதியாக நம்புகிறோம். அவனது வானவர்கள் எமக்கு உதவ அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதியாக நம்புகிறோம்.”

“ரபாஃவின் வாசலினால் வரும் அத்தியாவசியப் பொருட்களை காட்டி எமது போராட்டத்தை எகிப்து கட்டுப்படுத்த முடியாது. இது இறை பாதையில் நடக்கும் போராட்டம். எமது கடைசி குழந்தை மரிக்கும் வரை பலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதனின் அச்சமும் விலகாது.”

“உலகம் துவங்கியது முதல் அது முடியும் வரை பலஸ்தீனத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு. இருக்கிறது. அந்த வரலாற்றின் எந்தப் பகுதியில் நின்று நான் இதை கூறுகின்றேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் பலஸ்தீனர்கள் அல்-அக்ஸாவின் சொந்தக்காரர்கள். உலகின் பெரும் அறிஞர்களும், தளபதிகளிலும் இங்கிருந்து வெளியாகியுள்ளார்கள். அந்த பரம்பரையில் வந்த ஒவ்வொரு பலஸ்தீனியனும் தனது மண்ணிற்காக போராடுவான். எமது விடா முயற்ச்சியான கடுமையான போராட்டத்தின் ஊடாக அந்த வெற்றியை விடுதலையை உறுதிப்படுத்துவோம்.”

“என் கண் முன் எனது சகோதரிகளும் சகோதரர்களும் கொல்லப்படுவதை கண்டு துடித்து போகிறேன். ஆனால் நாங்கள் வெற்றியின் வாயற்கதலை திறந்து விட்டோம். இந்த காஸாவின் சண்டைகள் அதற்கான படிக்கட்டுக்கள். அந்த படிக்கட்டுக்களின் கீழ் பலஸ்தீனியர்களின் உதிரம், சதை, எலும்பு எல்லாம் புதைந்து கிடக்கிறது.”

“நாம் நாளை இஸ்ரேலை வெற்றி கொள்ள முற்படும் போது எம்மை பயங்கரவாதிகள் என்று கூறி உலகத்தின் சர்வதேசப் படைகள் காஸாவை முற்றுகையிடும். அது எமக்கும் தெரியும். அதையும் தாண்டி நாம் அல்லாஹ்வின் வானவர்களுடன் சேர்ந்து அவர்களையும் எதிர்ப்போம். அல்ஹம்துலில்லாஹ்.”

Jul 22, 2014

புனித பூமி எவ்வாறு மீட்டு எடுப்பது...??



இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் பூமி மீதான ஆக்கிரமிப்பிற்கு வயது அறுபத்து ஆறுகிறது!


“ தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப்பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே, செவியேற்கிறவன், பார்க்கிறவன். (அல் இஸ்ரா:1)

அருள்பாலிக்கப்பட்ட பூமியான பலஸ்தீனை - இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த அந்த பூமியை – அதன் நகரான அல் குத்ஸின் அதிகாரத்தை மிகவும் பணிவுடன் நடந்து வந்து, எமது இரண்டாம் கலீபா உமர் இப்னு அல் கத்தாப் (றழி) அவர்கள் கைப்பற்றிக்கொண்டதன் விளைவாகவே அந்த பூமி இஸ்லாத்திற்காக முதன்முதலாக திறந்து விடப்பட்டது. உமர்(றழி) அவர்கள் பலஸ்தீனத்தை தனது இஸ்லாமிய கிலாபத்தின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் நீதியையும், அமைதியையும் அந்த பூமியில் நு}ற்றாண்டுகளாக நிலைகொள்ளச் செய்வதற்கு வழி செய்ததுடன், அங்கே முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும், யூதர்களும் அக்கம் பக்கமாக, அண்டைவீட்டுக்காரர்களாக பிணைந்து வாழ்வதற்கும் அத்திவாரமிட்டார்.

எனினும் 1917ம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் பலஸ்தீன பூமி சூரையாடப்பட்டு, 1948ம் ஆண்டில் அந்த பூமியின் சொந்தக்காரர்களல்லாத, மேற்குலகில் அலைக்கழிந்து கொண்டிருந்த பிரிதொரு அந்நிய சமூகத்திற்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. இதே பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய மேற்குலக அரசுகளால் படுகொலைகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆண்டாண்டு காலமாக ஆட்பட்ட ஐரோப்பிய யூத சமூகமே அந்த அந்நிய சமூகமாகும். எனினும் ஐரோப்பியர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்ட யூதர்களை அகற்றுவதற்கு ஐரோப்பியர்கள் வழங்க நினைத்த பூமி ஐரோப்பியர்களுக்கு சொந்தமானதல்ல. மாறாக முஸ்லிம்களின் உணர்வுடனும், வரலாற்றுடனும் ஒன்றித்த பலஸ்தீன பூமியையேயாகும்.

எனவே இதனை சாத்தியப்படுத்துவதற்கு மிகக் கொடூரமான, இராணுவமயப்படுத்தப்பட்ட ஓர் இரும்பு அரசை அங்கே நிறுவ வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த யூத அரசு தனது 60 வருடகால வரலாற்றில் அதனது இருப்பிற்காக எத்தகைய அநியாயங்களையும், அட்டூழியங்களையும் எதுவித அச்சமுமின்றி மேற்கொண்டு வருவதை நாம் காண்கிறோம். மிலேச்சத்தனமான படுகொலைகள், வகைதொகையின்றிய கைதுகள், கொடூரமான சித்தரவதைகள், ஈவிரக்கமற்ற பொருளாதாரத்தடைகள் என்பவற்றை இஸ்ரேலிய அரசு பலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது. இன்று எந்தளவிற்கென்றால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் காஸா பகுதிக்கு செல்லும் அனைத்து விநியோகப்பாதைகளையும் கட்டுப்படுத்தி அங்குள்ள முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும், நோயாலும் வதைப்பட்டு மடிவதை கண்டு களிக்கும் அரக்கர்களாக இவர்கள் மாறியிருக்கிறார்கள்.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களே!

இந்த இருண்ட மணிநேரங்களில், பலஸ்தீன ஆக்கிரமிப்பின் ஆறு தசாப்த்த கால முடிவில் இஸ்லாத்திற்காக எழுந்து நிற்கும்மாறும், பலஸ்தீன முஸ்லிம்களின் விடுதலைக்காக இஸ்லாம் காட்டும் வழிமுறையில் வீறுகொண்டு போராடுமாறும் உங்களை வேண்டுகோள் விடுக்கிறோம். அதற்காக கீழ்வரும் மைற்கற்களை நீங்கள் துணிச்சலுடன் கடக்க தயாராகுங்கள்.

1. முதலில் பலஸ்தீன் மீதான இந்த ஆக்கிரமிப்பை (இஸ்ரேலிய அரசை) சட்ட ரதியானதாக நாம் ஏற்றுக்கொள்ளலாகாது. அதனை இஸ்லாமும் ஏற்றுக்கொள்ளாது – முஸ்லிம்களாகிய நாமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இஸ்லாம் பலஸ்தீன பூமியின் ஓர் யாண் நிலத்தையேனும் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்க எந்த நிலையிலும் அனுமதிக்காது. எனவே 60 வருட கால ஆக்கிரமிப்பின் பின்னும் கூட முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். சீனா எவ்வாறு தாய்வானை ஏற்றுக்கொள்ளவில்லையோ – ரஸ்யா எவ்வாறு இன்னும் கொசோவாவை அங்கீகரிக்கவில்லையோ அதேபோல உலக முஸ்லிம்களும் இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முஸ்லிம்கள் கொண்டுள்ள இந்த நிலைப்பாட்டிற்கு, முஸ்லிம்களின் பூமியை எந்த நிலையிலும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று அல்லாஹ்(சுபு)வும், அவனது து}தர்(ஸல்) அவர்களும் இட்ட கட்டளையே காரணமோழிய வேறொரு நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.

2. பலஸ்தீனத்திலும், ஏனைய அனைத்து முஸ்லிம் உலகிலும் மேற்குலக காலனித்துவ தலையீட்டினை நாம் எதிர்க்க வேண்டியதுடன், அவர்களின் தலையீட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடவேண்டும். இத்தகைய அந்நியத்தலையீடுகள், தலையிடும் நாடுகளின் நலன்களை மாத்திரம் நோக்கமாக கொண்டெதேயல்லாமல், அது பலஸ்தீன பிராந்தியத்தில் தொடர்ந்தும் வன்முறையையும், இரத்தக்களரியையும் அதிகரிக்கவே வழிகுக்கும். 1948ம் ஆண்டில் கூட ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் பாதுகாப்பை பிரித்தானியா கருத்திற்கொள்ளவில்லை. மாறாக அதன் உள்நோக்கு வேறாகவே இருந்தது. இஸ்ரேல் அரசின் உருவாக்கத்திற்கு முன்னர் சுமார் 40 வருடங்களுக்கு முன்னரேயே பலஸ்தீன பிராந்தியத்தின் மீதான காலனித்துவத்தின் ஈடுபாடு வேறொன்றாக இருந்ததனை முன்னாள் பிரித்தானியாவின் பிரதம மந்திரி சேர். ஹென்றி கெம்மல் பென்னர்மேனின் கூற்று உறுதிப்படுத்துகிறது. அவர் பின்வருமாறு சொல்கிறார்.
“ அங்கே மக்கள் பரந்து விரிந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அங்கே அபரிமிதமான வளங்கள் மறைந்திருக்கின்றன. உலகின் முக்கிய போக்குவரத்து பாதைகளை அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களுடைய பூமிகள் மனித நாகாPகத்தினதும், சமயங்களினதும் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருக்கிறது. இந்த மக்கள் ஒரே நம்பிக்கையை, ஒரே மொழியை, ஒரே வரலாற்றை, ஒரே அபிலாசையை கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் எந்தத்தடைகளாலும் இவர்களை ஒருவரிடமிருந்து ஒருவராக பிரிக்க முடியாதுள்ளது… … இவற்றையெல்லாம் மிகத் தீவிரமாக கருத்திற்கொண்டு, இந்த பூமி தனது கிளைகளையெல்லாம் ஓர் இடத்தில் குவித்து முடிவுறாத யுத்தங்களில் கூட தனது சக்தியை தொடர்ந்து வெளிப்பாச்சுவதை தடுப்பதற்காக, இந்த பூமியின் இருதயத்திலே ஓர் அந்நிய அலகினை (நாட்டினை) நாம் ஏற்படுத்த வேண்டும். அந்த அந்நிய அலகு, மேற்குலகு அந்த பூமியில் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு தாவு தளமாகவும் இருக்க வேண்டும்.”

ஆகவே இஸ்ரேல் எனப்படும் இந்த சியோனிச அரசு என்பதுகூட மேற்குலகின் ஓர் கருவி என்பதற்கு மேலாக ஒன்றுமில்லை. இன்று 66 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ புஷ் மத்திய கிழக்கிற்கு பயணித்தபோது கூட இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. ஐக்கிய அமெரிக்கா முஸ்லிம் உலகை மதச்சார்பற்ற உலகாக மாற்ற முயன்றுவரும் தனது வியூகத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேலின் கொடூரங்களிலும், படுகொலைகளிலும் தோளோடு தோள் நின்று ஒத்துழைத்து வருகின்றது. பிரித்தானியா எவ்வாறு இஸ்ரேலின் உருவாக்கத்தை முஸ்லிம்களினதும், இஸ்லாமிய ஆட்சியினதும் ஒற்றுமைக்கு பிரதான தடைக்கல்லாக கருதியதோ அதே போன்று அமெரிக்கா தனது “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் (இஸ்லாத்திற்கு எதிரான யுத்தத்தின்)” பிரதான அங்கமாகவே இஸ்ரேலினை கருதுகிறது.

3. நாங்கள் இன்று மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும் போலியான சமாதான நடைமுறைகளின் உண்மைநிலையினை அம்பலப்படுத்த வேண்டும். இந்த சமாதான நடைமுறைகள் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளதே தவிர அவை முஸ்லிம்களுக்கு நீதியை வழங்குவதற்கோ, ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ மேற்கொள்ளப்படுபவையல்ல. யாரெல்லாம் பலஸ்தீனப் பிரச்சனைக்கு ‘இரு அரசுத் தீர்வை’ முன்வைத்து, அதற்காக குரல்கொடுக்கிறார்களோ, அவர்கள் பலஸ்தீன பூமியை அந்நியர்களுக்கு தாரைவார்க்கிறார்கள். மேலும் இஸ்ரேலின் கொடூரங்களையும், இனச்சுத்திகரிப்பையும் அங்கீகரித்து அவர்களை திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். ஓர் நாட்டின் குடிமக்களை தமது பலப்பிரயோகத்தைக் கொண்டு வெளியேற்றிவிட்டு அந்த நாட்டை சூரையாடிக்கொண்டவர்களுடன் எவ்வாறு நாம் பேச்சுக்களில் ஈடுபட முடியும்? மாறாக இஸ்ரேல் அரசு எந்த விலையினை செலுத்தியேனும் தனது சட்ட hPதியற்ற ஆதிக்கத்தினை தக்க வைத்துக்கொள்ளவே முனையும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே சமாதான முயற்சிகளால் உருவாகும் பலஸ்தீன அரசுக்கு உண்மையான விடுதலையோ, உண்மையான பலமோ, உண்மையான வளமோ எட்டப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும். இத்தகைய சமாதான நடைமுறைகளில் வாக்குறுதியளிக்கப்படும் பலஸ்தீன அரசு என்பது வெறும் பித்தலாட்டத்தனமேயொழிய வேறொன்றல்ல. மாறாக ‘இரு அரச தீர்வு’ எனும் செயற்திட்டம் இஸ்ரேல் தன்னை, அல்லது தனது இருப்பை சட்ட hPதியாக நியாயப்படுத்திக் கொள்ள எடுக்கும் ஓர் கடைசி முயற்சி என்பதை நாம் துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். இதனாலேயே இஸ்ரேலின் இன்றைய பிரதம மந்திரி இவ்வாறு கூறுகிறார்.

“ எந்தத்தினத்தில் இரு அரசுத் தீர்வு என்ற எமது செயற்திட்டம் இடிந்து விழுகிறதோ, அன்று நாங்கள் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போன்ற – வாக்குரிமைக்கான சம அந்தஸ்தினை பெற்றுக்கொள்ளும் ஒருவகைப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இந்த நிலை ஏற்படும் போது இஸ்ரேல் அரசின் கதையும் முடிந்துவிடும்.”

எனவே இதுதான் இந்த சமாதான முயற்சிகளின் பின்னாலுள்ள யதார்த்தமாகும். ஆகவே எவரேனும் இந்த சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் - அவர் கடந்த 66 வருடகாலமாக தொடரும் ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் ஆதரவு தெரிவித்தவராகின்றார். 4. இஸ்ரேலினை வாய்களால் மாத்திரம் சாடிக்கொண்டு அதேநேரத்தில் உண்மையில் ஆதரித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் உலகை ஆளும் அனைத்து கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும் நாம் நிராகரிக்க வேண்டும். அவர்கள்தான் ‘சமாதான முயற்சிகள்’ என்ற பெயரால் ‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிலைப்பதற்காகவும், அதனை பாதுகாப்பதற்காகவும், முன்னிலையில் நின்று உழைப்பவர்கள். அவர்கள்தான் தமது மேற்குலக காலனித்துவ எஜமானர்களின் அடிமைகளாகவும், இந்த போலியான சமாதான நடைமுறை மாத்திரமே முஸ்லிம்களுக்கு முன் இருக்கும் ஒரேயொரு தீர்வு எனக் கூவி விற்கும் வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய ஆக்கிரப்பை தணிக்கை செய்து உலகிற்கு வழங்குபவர்களும், இஸ்ரேலின் பிடியிலிருந்து பலஸ்தீன பூமியை மீட்க தத்தமது நாடுகளில் முனையும் முஸ்லிம்களை தமது அரச படைகளை பாவித்து அடக்கி அநியாயம் செய்வர்களும் இந்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்களேயாகும். எனவே இத்தகைய கொடிய கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து முஸ்லிம் உலகை மீட்டு அதனை கிலாபத்தின் கையில் ஒப்படைக்க வேண்டும்.

5. நாம் பலஸ்தீன பிரச்சனையை முழுமையாகக் கையாளக்கூடிய, பலஸ்தீன பூமியை மீட்டு அங்கே நீதியான ஆட்சியை நிலைநாட்டக்கூடிய, நு}ற்றாண்டு காலமாக அங்கு வாழ்ந்த அனைத்து சமூகங்களையும் நிம்மதியாக வாழ வைக்கக்கூடிய இஸ்லாமிய கிலாபத்தை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். உண்மையில் இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் புனித பூமியான பலஸ்தீனை மீட்பதற்கு - சதாப்தங்களாக நிலவும் ஆக்கிரமிப்பினையும், கொடுமைகளையும் தனது அனைத்து ஆளுமைகளையும் பிரயோகித்து முடிவுக்கு கொண்டு வரக்கூடிய கிலாபத்தினால் மட்டுமே முடியும். ஏழு நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் ஸலாஹ}த்தீன் அய்யூபி எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பை வெற்றி கொள்வதற்கு முன் முஸ்லிம் பூமிகளில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் வளங்களையெல்லாம் ஒன்று குவித்து நெறிப்படுத்தினாரோ – அதுபோலவே இந்த பணியினை மேற்கொள்வதற்கு கிலாபத்தினால் மாத்திரமே முடியும்.

கிலாபத்தின் பலஸ்தீன மீட்பானது யூதர்களை அநீதியாக நடத்துவதையோ, பலஸ்தீனர்களை யூதர்கள் இனச்சுத்திகரிப்பு செய்ததைப்போன்ற யூத இனச்சுத்திகரிப்பையோ குறிக்காது. யூதர்களும், முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் நு}ற்றாண்டு காலமாக எவ்வாறு கிலாபத்தின் கீழ் வாழ்ந்தார்களோ அதே போன்றதொரு சுபீட்சமான நிலையையே அது தோற்றுவிக்கும்.

ரஸ}ல்(ஸல்) சொன்னார்கள்.
“ எவரொருவர் திம்மி (கிலாபத்தின் கீழிருக்கும் முஸ்லிம் அல்லாத பிரஜைகள்)க்கு நோவினை செய்கிறாரோ, அவர் எனக்கு நோவினை செய்கிறார்.”

ஆகவே கிலாபாவின் மீள் உருவாக்கமே, அல்லாஹ்(சுபு) உதவியுடன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து பலஸ்தீனை விடுதலை செய்யும் ஒரேயொரு தீர்வாகும். கிலாபா மாத்திரமே பலஸ்தீனத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு நீதியையும், சுபீட்சத்தையும் மலரச் செய்யும் என்பதால் நாம் அனைவரும் அணிதிரண்டு கிலாபத்தை உருவாக்கும் போராட்டத்தில் சங்கமிப்போம்!

“ விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும்(அவனுடைய) து}தருக்கும் - உங்களைவ வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் து}தராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள். (அல் அன்பால்: 24)

Jul 21, 2014

மரணப் பொறிக்குள் யூத தலைகள் !


சுற்றியிருந்த முஸ்லீம் தேசங்களின் புறக்கணிப்பு மற்றும் இஸ்ரேல் சார் அரசியல் மூலம் ஏமாற்றம் அடைந்த பாலஸ்தீன மண்ணின் மைந்தர்கள் நடாத்தும் விடுதலைக்கான ஜீவமரணப்போராட்டமே இன்றைய காஸா சமராகும் .யூத இஸ்ரேலின் தொடக்க அரசியலே கிலாபா எனும் இஸ்லாமிய அரசியலை வீழ்த்தி இஸ்லாமிய பெருநிலத்தை தேசிய கடிவாளத்தால் பூட்டியதன் பின்னரே சாத்தியமானது.
எனவே கிலாபா அரசின் மீள்வரவின் மூலம் மாத்திரமே பாலஸ்தீன் உண்மையான சுதந்திரத்தை சுவைக்க முடியும் . எனவே அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது முதல்நிலை பணி.ஆனாலும் அதுவரை யூதனின் அடாவடி அரசியலை சகிக்க முடியாது என்பதே இன்றைய போராட்டத்துக்கான ஒரே நியாயமாகும்.

ஊகங்களையும் ,கணிப்புகளையும் தாண்டியதே யுத்தமாகும் .அதிலும் மக்கள் மகமாகியுள்ள ஒரு கெரில்லா அணியை யூதர்கள்  எதிர்கொள்வது ஒரு பலத்த சவாலே என நடப்பு நிலவரங்கள் காட்டி நிற்கின்றன. சிலவேளை சிவிலியன் பாதிப்பு வீதத்தை பன்மடங்கு ஆக்குவதன் மூலம் எதிர் சமருக்கான வலுவை கணிசமாக கட்டுப்படுத்தலாம் ;என்பதே யூதர்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம் .

காரணம் நகர் யுத்தத்தின் அடிப்படையே சிவிலியன்களின் ஆதரவு தளத்திலேதான் தங்கியிருக்கும் . போராளிகளை தனிமைப்படுத்தும் யுத்த அரசியல் பற்றி யூத இராணுவம் சிந்திக்கின்றது .தளபாட ரீதியான ஆயுத சமநிலையில் ,மற்றும் ஆள்வளம் என நோக்கும்போது காஸா யூத மரபு இராணுவ அணியால் மிக இலகுவாக சுற்றி வளைத்து கைப்பற்ற கூடியது .இருந்தும் போரிடும் வலிமையை பொருத்தமட்டில் யூதர்களுக்கு பலத்த நம்பிக்கையீனம் நிலவுகிறது .

அதாவது இங்கு மிகப்பிரதானமான கேள்விக்குறி யூத இராணுவத்துக்கு இருக்கிறது . கிடைக்கும் பொருட்களை வைத்து இஸ்ரேலின் இதயம் வரை 'சஹாதத் ' தாக்குதல் மூலம் அச்சப்படுத்திய அதே அணியையே இன்று சந்திக்கிறார்கள் . சென்றமுறை எட்டநின்று சொட்டிப்பார்த்து விட்டு சென்றவன் ,இம்முறை தரைப்படை அனுப்ப முடிவெடுத்த போதே போராளிகள் 'டெத்லி வெல்கம்' சொல்லி விட்டார்கள்.

யஹ்யா அய்யாஸ் ,மொஹிடீன் சரீப் போன்றவர்கள் இஸ்ரேலால் இலகுவாக மறக்கக் கூடியவர்கள் அல்ல .இன்று அவ்வாறானவர்களின் வீடு தேடி சென்று இருக்கிறார்கள் !!

என்ன யூ .என் வந்து பேரக் குழந்தையான தன்னை காப்பாற்றும் .என்ற இறுதி நம்பிக்கையில் ஒரு 'டிப்லோமடிக் பாயிண்ட்'உடன் பலிபீடத்தில் யூத வீரர்களின் தலையை வைக்க சொல்லிவிட்டது இஸ்ரேல் !! பொறுத்திருந்து பார்ப்போம் .

Bro Abdul Raheem

இதுவரை நடக்கும் காஸா யுத்தம் பற்றிய மீளாய்வு ...!!


காஸாவின் ஆக்கிரமிப்பு பொக்ஸிங் போன்றது. இதில் இஸ்ரேல் பொயின்ட்ஸ்களை பெறலாம். ஆனால் ஒரு போதும் ஹமாஸை நொக்- அவுட் பண்ண முடியாது.

ஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் அதற்கு ஏற்பட்ட நல்ல மற்றும் கெட்ட அறுவடைகள் என்ன என்பது பற்றிய ஓர் ஆய்வு (இன்றைய திகதி வரை மட்டும்), சுருக்கப் பார்வையில்....  இஸ்ரேல் 2006-ல் இருந்து 04 சண்டைகளை நிகழ்த்தியுள்ளது. லெபனான் மீது ஒரு முறையும், காஸா மீது 03 முறையும் ஆக்கிரமிப்புக்களை நடாத்த முற்பட்டு தோல்விகளை சந்தித்து எதிர்பார்க்கப்பட்ட யுத்தத்திற்கான காலவரையறைகள் நீட்சி பெற்று சென்றதனால் தனது இராணுவத்தை பின்வாங்கியுள்ளது. 

ஸ்ரேல் எதிர்கொண்ட சாதக நிலைமைகள் (1)
  • 900-இற்கும் மேல் ஹமாஸ் போராளிகள் ரொக்கெட்களை ஏவினாலும் அவற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மிக சொற்பமானவையே. இது எதிரியின் ஏவுகணைகளின் தாக்கம் பற்றிய அச்சத்தை மதிப்பீடு செய்ய உதவுகிறது. 
  • இஸ்ரேலினுள் வந்து வீழ்ந்த காஸாவின் ரொக்கெட்களினால் பாரிய பொருளாதார சேதங்கள் ஏற்படாமை.
  • 2012-இற்கு பின்னர்  Iron Dome anti-missile system-த்தின் செயற்பாடானது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் இதனை மேலும் சிறப்பாக செயற்படதக்கதாக மாற்ற வேண்டிய தொழில்நுட்ப அளவீடுகளை பெற முடிந்தமை.
  • அல்-கஸ்ஸாம் படையணியால் மேற்கொள்ளப்பட்ட கடல் மற்றும் வான் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டமையும், அவர்களின் தாக்குல்கள் தோல்வியில் முடிந்தமையும்.
  • ஹமாஸிற்கு அரபு நாடுகளின் நேரடி உதவிகள் கிடைக்கப்பெறாமை.
  • ஹமாஸிற்கு ஆதரவாக வெளிநாட்டு முஸ்லிம் போராளிகள் களம் இறங்காமை.
  • மேற்குக்கரையில் காஸாவிற்கு ஆதரவாக அல்-பதாஃ செயற்படாமை.
  • மேற்குக்கரையில் ஹமாஸிற்கு ஆதரவாக அல்-அக்ஸா பிரிக்கேட் தாக்குதல்களை நடாத்தாமை.
  • இஸ்ரேலிய அராபியர்களின் கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமையும் அவர்கள் மேலும் எந்த செயற்பாடுகளிலும் இறங்காமல் முடக்கப்பட்டமையும்.


ஸ்ரேல் எதிர்கொண்ட எதிர்மறை நிகழ்வுகள் (2)
  • காஸா தாக்குதல் பற்றிய இஸ்ரேலிய அமைச்சரவையில் ஏற்பட்ட முரண்பாடுகள்.
  • இஸ்ரேலிய கம்யூனிச மற்றும் மனித நேய அமைப்புக்களின் அரசு மீதான கடுமையான குற்றச்சாட்டுகளும், காஸா தாக்கதல்கள் மீதான எதிர்ப்பும்.
  • ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம்.
  • எதிர்காலங்கள் ஹமாஸ் பெரிய தாக்கம் விளைவிக்கும் ஏவுகணைகளை ஏவுமோ என்ற பொதுமக்களின் அச்சம். 
  • அயன் டோம் எம்மை பாதுகாக்காது என்ற இஸ்ரேலிய பொதுமக்களின் உளநம்பிக்கையின்மை.
  • விமான தாக்குதல்களிற்கு முகம் கொடுத்த காஸா மக்கள் தாக்குதல்களை நிறுத்துமாறு ஹமாஸை எதிர்க்க முன்வராமை.
  • விமானங்களில் காஸாவில் போடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும், குண்டுகளையும் கண்டு காஸா மக்கள் கலக்கமடையாமை.
  • தொடரான பல நாட்கள் சண்டைகளை மக்கள் விரும்பான்மை.
  • தொடரான பல நாட்கள் சண்டையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பீடுகள்.
  • எதிர்பார்க்கப்பட்ட மேற்கு நாடுகளின் ஆதரவில் ஏற்பட்ட தளற்ச்சி.
  • மேற்குநாடுகளின் 2006 சண்டைகளில் (Operation Pillar of Defense) கிடைத்த ஆதரவு இம்முறை கிடைக்கப்பெறாமை.
  • சிரியா, சினாய் போன்ற பிரதேசங்களில் உள்ள போராளிகள் இஸ்ரெலிற்கு எதிரான தாக்குதல் மனோபாவத்திற்கு மாறியமை.
  • ஹமாஸின் தாக்குதல் திறனை மட்டுப்படுத்த முடியாமை.



ஸ்ரேல் எதிர்கொண்ட பாதக நிலைமைகள் (3)

  • இஸ்ரேலிய உளவமைப்புக்களின் ஹமாஸ் பற்றிய தவறான மதிப்பீடு.
  • இஸ்ரேலிய உளவமைப்புக்களின் இஸ்லாமிக் ஜிஹாத் பற்றிய தவறான மதிப்பீடு
  • இஸ்ரேலிய உளவமைப்புக்களால் பலஸ்தீன போராட்ட அமைப்புக்களின் அதி உட்ச இலக்குகள் (ஹைலி டார்கெட்டட் பிப்ஸ்) பற்றிய தகவல்களை திரட்ட முடியாதனால் பல தாக்குதல் இலக்குகள் தப்பித்தமையும், சந்தர்ப்பங்கள் வீணாக்கப்பட்டமையும்.
  • அல்-கஸ்ஸாமின் தாக்குதல் திறன்களினால் அது தனது அரசியல் தலைமைகளை கட்டுப்படுத்தும் பிரிவாக உருவாவதனால் ஏற்படும் இஸ்ரெலிற்கு எதிரான நிலைமைகள்.
  • ஹமாஸின் அரசியல் பிரிவை விட காஸாவின் பொதுமக்கள் அல்-கஸ்ஸாமில் இணைந்து செயற்பட விளையும் சந்தர்ப்பங்களை இந்த சண்டைகள் உருவாக்கியமை.
  • ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படையணி பல சண்டைகளில் தங்களை மரபு இராணுவமாக வெளிப்படுத்திய நிலையில் தாக்குதல்களை எதிர்கொண்டமையானது அவர்கள் மரபு இராணுவமாக மாறுவதற்கான பல சாத்தியக்கூறுகளை அவர்களிற்கு வழங்கியுள்ளமை. 
  • இஸ்ஸத்தீன் எல்-கஸ்ஸாம் படையணி மரபு இராணுவ தன்மைகளை பெறுவதானல் இஸ்ரேலிய இராணுவம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள பாதகமான சவால்கள்.
  • அல்-கஸ்ஸாமின் ரொக்கெட் தாக்குதல் தளங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாத இஸ்ரேலிய தாக்குதல்களின் இயலாமைகள்.
  • இஸ்ரேலிய தாக்குதல் விமானங்கள் கடந்த காலங்களைப் போல தாழப்பறக்க முடியாத நிலைமை. 
  • இஸ்ரேலிய கடற்கலங்கள் காஸாவின் கடற்கரை வந்து நின்று தாக்குதல் செய்ய முடியாமல் ஹமாஸினால் தடுக்கப்பட்டமை. 
  • இஸ்லாமிக் அல்-ஜிஹாத் அணியினர் மேற்கொண்ட நெடுந்தூர ஏவுகணை வீச்சும் அவற்றின் லோஞ்சிங் பேட்களை மொபைல் அமைப்பில் இடம்மாற்றும் செய்பாடுகளின் வேகமும் இஸ்ரேலிய விமானங்களாலும் ஆட்டிலறிகளினாலும் அவற்றை அழிக்க முடியாமல் போன நிலைமைகளும். 
  • இஸ்ரேல் சண்டைகளில் பெரிதுமும் தங்கியிருந்த மர்கவா டாங்கிகளின் பின்னடைவுகள். அவற்றை தாக்கியழிக்கும் ரஸ்ய தொழில் நுட்ப அன்டி டேங் லோஞ்சர்கள் அல்-கஸ்ஸாம், இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகளின் வசம் வந்தடைந்தமை.
  • ஹமாஸின் சுரங்கங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாமை. 
  • ஹமாஸின் வெடிகுண்டு தயாரிப்பு நிலையங்களை பூரணமாக அழிக்க முடியாமை.
  • காஸாவில் ஹமாஸின் வெற்றியினால் பலவீனப்படுத்தப்படும் மேற்குக்கரையின் மஹ்மூத் அப்பாஸ் அணியினர். 
  • காஸாவின் வெற்றியினால் ஹமாஸ் மீதான மேற்குக்கரை இளைஞர்களின் ஆத்மார்த்த மோககும் அல்-பதாஃ மீதான நம்பிக்கை இழப்பும். இது ஹமாஸை மீண்டும் அங்கு காலூன்ற வழி வகுப்பது. 
  • காஸாவின் சண்டைகளை லிமிட்டர் வோர் ஸ்ட்டர்ஜியில் முடிக்க முடியாமல் போனமையினால் அதனை லோங் வோர் ஸ்ட்டர்ஜிக்கு மாற்ற வேண்டிய கள நிலைமைகளும் உலக கோப்பையில் லயித்த உலகம் இப்போது காஸாவை பார்க்க ஆரம்பித்த கால அவகாசத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள். 

கொல்லப்பட்ட 13 Golani Brigade இராணுவ வீரர்களும் புதைகுழியாக மாறிய “Shijaiya” நகரும்...!




“எதிரி முன்னேறும் போது நீ பின்வாங்கு. எதிரி இளைப்பாறும் போது நீ பாய்ந்து தாக்கு. பாம்பு போன்ற அதன் வரிசையை வசதியான வளைவுகளில் வெட்டி விடு. எதிரி நெருப்பாக வரும் போது நீ நீராக மாறிவிடு” - டக்டிஸ் ஒப் வோர் - மாஓ சேதுங் (தி லிட்டில் ரெட் புக்).

இது தான் நடந்தது காஸாவின் எல்லைப்புற நகரான Shijaiyah-வுக்கு அருகில் முன்னேறிய இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரின் Golani Brigade (1st Brigade)-இற்கும். இஸ்ரேலின் முதல் பிரக்கேட் இது. 1948-ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போதே இதுவும் ஸ்தாபிக்கப்பட்டது. இஸ்ரேலின் முதன்மை தலைவர்கள் அனைவரும் இந்த பிரிக்கேட்டில் சேவையாற்றியுள்ளனர். சினாய் யுத்தம், 06 நாள் அரபு யுத்தம், அட்டிரசன் சண்டை, யோம் கிப்ர் சண்டை, உகண்டாவின் ஒப்பரேசன் என்டபே, லெபனானின் நதிக்கரையோர ஒப்பரேசன் லிடானி, முதலாம், இரண்டாம் லெபனான் யுத்தம், இரண்டு இந்திபாதாக்களிற்கு எதிரான தாக்குதல்கள் என இந்த பிரிக்கேட் மிகவும் அனுபவம் வாய்ந்தது. இதன் இரண்டு பிரிக்கேட் கொமாண்டர்கள் IDF-ன் பிரதம தளபதிகளாக கடமையாற்றியுள்ளனர். நம்பகமான வேகமாக தாக்குதல் நடாத்தி முன்னேறும் இன்பென்றி இது. 36-வது ஆர்மர் ரெஜிமண்டின் துணை பிரிக்கேட்.

“ஒப்பரேசன் புரடெக்டிவ் எட்ஜ்” (Operation protective Edge) எனும் இன்றைய காஸா மீதான தாக்குதலிற்கு இந்த அணியே முதன்மை அணியாக களமிறங்கியது. கடந்த சனிக்கிழமை பின்னிரவில் இது Shijaiyah-வின் எல்லை வரை முன்னேறி “பிளேசர் லைட்டினை” வானத்தை நோக்கி செலுத்திய போது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இந்த நகரின் எல்லைகளை நோக்கி குண்டுத்தாக்குதலை பரவலாக நிகழ்த்தியது. அதன் பின்னர் கோலானி பிரிக்கேட் தன் நகர்வை ஆரம்பித்தது. சுமார் 50 டாங்கிகள் கவச வாகனங்கள் முன்னகர்ந்த வேளையில் பலஸ்தீன போராளிகள் துப்பாக்கி தாக்குதல்களை நடாத்தினர். அதனைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் தங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியவாறு நகரத் தொடங்கியது இந்த படையணி.

09 அல்லது 10 வாகனங்கள் முன்னகர்ந்த வேளையில் குறுக்காக இருபுறமும் இடைமறித்து பலஸ்தீன போராளிகள் கோலனி அணியை நோக்கி அகோரமாக தாக்குதல் நடாத்த ஆரம்பித்தனர். நிலத்தில் சிறு குழிகள் வெட்டி புரக் மூவ் செய்திருந்த பலஸ்தீன போராளிகளின் தாக்குதல் அணியொன்று டாங்கிகளை நோக்கியும் துருப்புக்காவி வாகனங்களை நோக்கியும் தாக்குதல்களை ஆரம்பித்தது. இதில் ஒரு டாங்கியும், இரண்டு கவச வாகனங்களும் தீப்ற்றி எரிந்தன. உடனேயே நகர்ந்த இராணுவம் தன் வாகனங்களை பின்னகர்த்த ஆரம்பித்தது.

முன்னாள் சென்ற வாகன அணி தனது தொடர்பு அறுக்கப்பட்ட நிலையில் கட்டளை தலைமையினால் அபோர்ட் த மிசன் கொமாண்ட் அவர்களிற்கு வழங்கப்பட்டது. தங்கள் டாங்கிகளும் வெடித்து விடும் என நினைத்து நிலத்தில் குதித்து கவர் எடுத்த நிலையில் பெக்வேர்ட் மூவினை செய்ய முனைந்தனர். இதன் போது நடந்த கடுமையான துப்பாக்கிச் சமர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித் தகவல்களின் அடிப்படையில் தங்கள் தரப்பில் 13 கோலானி லைட் இன்பன்ட்றி சோல்ஜர்களை தாங்கள் இழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். பொதுவாகவே இஸ்ரேல் தனது இழப்புக்களினை பெரிதும் குறைத்து வெளியிடுவதே வழமை.

தாக்குதல்களிற்கு அல்-கஸ்ஸாம் போராளிகள் உரிமை கோரியுள்ளதுடன், “தாங்கள் நடாத்திய மோட்டார் தாக்குதல்கள் எதிர்பார்ததனை விடவும் அதிக இழப்புக்களை எதிரிக்கு ஏற்பட்டுள்ளதாகவும்” அறிவித்துள்ளனர். “இனி வரும் சண்டைகளிலும் குறுந்தூர மோட்டார்களின் பங்கானது முக்கியமானதாக இருக்கப்போகிறது” என்றும் கூறியுள்ளனர். அனுமானமாக 29 யஹுதி படையினரை தாம் கொன்றிருக்கலாம் என கணக்கு வெளியிட்டுள்ளனர். தங்கள் தரப்பில் ஒரு போராளி வீரமரணம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “நாம் அவர்களை எச்சரித்திருந்தோம். காஸாவினுள் நுழைந்தால் அதன் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும் என்று” என்ற தங்கள் முன்னைய எச்சரிக்கையையும் ஹமாஸ் நினைவூட்டியுள்ளது.

Shijaiyah தாக்குதல்களில் 100 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் மாண்டு போயுள்ளனர். இவர்கள் அனைவரும் பொதுமக்கள். பலர் வீதிகளில் துடி துடித்து இறக்க தயாராகிய வேளையில் அம்புயுலன்ஸ்களை கூட அவர்கள் அருகில் கொண்டு சென்று நிறுத்த முடியாத அளவிற்கு படு கோரமான ஆட்டிலறி தாக்குதலை மேற்கொண்டது இஸ்ரேலிய இராணுவம். தங்கள் இழப்புக்களின் வலியை தாங்காமல் இதனை அவர்கள் நிகழ்த்தியிருந்தனர்.

எதிர்பார்க்கப்பட்ட களமுனை என்பதனால் ஹமாஸ் ஏற்கனவே அங்குள்ள மக்களை ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்திருந்த அகதி முகாம்களிற்கு நகர்த்தியிருந்தது. அதனால் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. அப்படியிருந்தும் கூட அநியாயமாக 100 இற்கும் மேற்பட்ட உயிர்கள் சில மணித்தியாலங்களில் காவு கொள்ளப்பட்டுள்ளன. காஸாவின் மத்தியில் உள்ளள Shifa Hospital-இற்கு காயப்பட்டவர்கள் காலதாமதமாகி கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நடந்த இந்த ஆக்ரோசமான சமரின் வெடிப்புச் சத்தங்கள் காஸாவின் மத்திய பகுதிவரை கேட்கும் அளவிற்கு துப்பாக்கிச் சமர் வெடித்திருந்தது.

khaibarthalam

முக்கியச்செய்திகள் :



காஸா மீதான சியோனிஸ ஆக்கிரமிப்புத் தாக்குதல் ஆரம்பித்து இதுவரை...!

425 பேர் ஷஹீதாஹியுள்ளனர்.
அதில் 112 குழந்தைகள், 40 பெண்கள், 25 முதியவர்கள் அடங்குவர்.

4000 பேர்வரை காயப்பட்டுள்ளனர்.

அதே வேளை குறைந்தது 15 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ...

போராளிகளின் கணிப்பின் படி 30 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

75 பேர்வரை காயப்பட்டுள்ளனர்.

ஷுஜாஇய்யாக் குடியிருப்பு மீது இஸ்ரேலிய படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலில் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அது சர்வதேச கவனத்தை தற்போது காஸா மீது திருப்பியுள்ள நிலையில் அதற்கெதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டபடி உள்ளன.

தொலைக்காட்சியில் தோன்றி இஸ்ரேல் சார்பாக பேசுபவர்களின் நிலையை கவனிக்கும் போது ஆற்றாமையும் தோல்வியை மறைக்கும் முனைப்பும் தெளிவாக தெரிகிறது.

இனிமேல் இந்த இழப்புகள் இறுதியாக இருக்கட்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் இராணுவ , அரசியல் மற்றும் ஊடக ரீதியாக எடுக்கும் நகர்வுகள் காஸாவின் வானில் இஸ்ரேலின் ஒளிக் குண்டுகளுக்கும் மேலால் நம்பிக்கை நட்சத்திரமாக கண்சிமிட்டுகின்றன

Source&Press -Fairoos
Abusheik Muhammed

தேங்கி நிற்கும் யூத இராணுவம்..... நெருங்கி வரும் பலஸ்தீன் போராளிகள்.....!!



10 தினங்கள் தொடரான வான் தாக்குதல்களையும், கடற்தாக்குதல்களையும் நடாத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கடந்த வியாழன் அன்று தங்கள் தரை ஆக்கிரமிப்பை ஆரம்பித்தார்கள். காஸாவின் இஸ்ரேல் பக்கத்தில் அமைந்துள்ள எல்லைகளை கடக்க முற்பட்ட போது அவர்களை அதிர வைத்தவை சுரங்க பாதைகளின் வாயில்கள். படைகளிற்கு முன்னதாக வேவுத்தகவல்களை வழங்கும் இஸ்ரேலிய அணியே இவற்றை முதலில் கண்டது. எல்லை கண்காணிப்பு கோபுரங்களையும், கண்காணிப்பு கமாராக்களையும் ஏமாற்றிய நிலையில் பலஸ்தீன போராளிகள் சுரங்க வாயில்களை இஸ்ரேலிய எல்லைகளினுள் அமைத்திருந்தனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின் படி 13 சுரங்க வாயில்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவை ரபாஃவின் சிவிலியன் பாவனைக்கான சுரங்க வாயில்கள் போலல்லாது இராணுவ பாவனைக்கு உசிதாமான விதத்தில் அமைவுற்றிருந்தன. இதன் பின்னரே போராளிகள் இஸ்ரேலிற்குள் நுழையும் மார்க்கம் பற்றிய அவர்களது ஊகங்கள் ஊர்ஜிதமானது.

காஸாவின் கடற்கரையோரத்தினை பலஸ்தீன போராளிகள் கடுமையான கண்காணிப்பிற்குள் உள்ளாக்கியுள்ளனர். பல தாக்குதல் குழுக்கள் இதற்கண்மையில் கவர் எடுத்து காத்துள்ளன. கடல் மார்க்கமாக சடுதியாக உள்நுழையந்து தனது சிறப்பு ப் படை கொமாண்டோக்களை கொண்டு தாக்கும் இஸ்ரேலின் தந்திரோபாயம் பயனற்ற நிலையில் எல்லை வாயில்கள் ஊடாக நுழைய வேண்டிய நிலை இஸ்ரேலிய படைகளிற்கு ஏற்பட்டுள்ளது.

“ஸ்டீல் வோல்” என பலஸ்தீனப் போராளிகளையும் குறிப்பாக தற்கொலை தாக்குதல் நடாத்துபவர்களையும் உள்நுழைய விடாமல் கட்டிய உருக்கு மதில் சுவர்கள் இப்போது இஸ்ரேலிய படைகளிற்கும் எதிரியாக போய் விட்டது. நினைத்த சாதகமான இலக்கில் தங்கள் டாங்கிகளை நகர்த்த முடியாமல் தடுத்து நிற்கின்றன இந்த ஸ்டீல் வோல்கள். காஸாவினுள் உள்நுழைய வேண்டும் என்றால் இப்போது அவர்களும் “எவகேசன் பொயின்ட்ஸ்” எனும் நுழை அல்லது வெளியேறும் வாயில்கள் ஊடாகவே நகர வேண்டியுள்ளதால் அந்த வாயில்களை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் தயாராக காத்திருக்கின்றனர்.

சுமார் 01 கிலோ மீட்டர் தூரத்தில் இருதரப்பும் நெருங்கி நிற்பதனால் விமான தாக்குதல்களை கூட துல்லியமான ஏவுகணைத்தாக்குதல்கள் என்ற வட்டத்தில் மட்டும் மட்டுப்படுத்தும் நிலை இஸ்ரேலிய படைகளிற்கு ஏற்பட்டுள்ளது. விமான குண்டுத்தாக்குதல்களை நினைத்தவாறு வீச முடியாது. அது பல வேளைகளில் தங்கள் தரப்பிற்கே சேதங்களை ஏற்படுத்தி விடும்.

தற்காப்பு சண்டைகளை ஹமாஸ் நிகழ்த்துகையைில் அதனை எப்படி எதிர் கொள்வது என்று தயார்படுத்தப்பட்ட இஸ்ரேலிய படைகள் இப்போது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகள் தற்காப்பு சமர்களை செய்யும் பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ள போதிலும் அவர்கள் பல முனைகளிலும் திடீரென உட்புகுந்து தாக்குதல்களை நடாத்துகின்றனர்.

சுமார் 15 - 20 பேர் கொண்ட தாக்குதல் அணிகள் என்பதனால் அவர்கள் மேல் பெரும் குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்த முடியாத அதே வேளை பலஸ்தீன போராளிகள் பாம்பு போல வளைந்து கிடக்கும் டாங்கி மற்றும் கவச வாகன அணிகளை இலக்கு வைத்து ரொக்கெட் லோஞ்சர்கள் மூலமும், அன்டி டேங் லோஞ்சர்கள் மூலமும் 05 நிமிட தாக்குதல்களை நிகழ்த்து விட்டு தளம் திரும்பி விடுகின்றனர். எதிரியின் நகர்வை, தாக்குதல் நடாத்தும் இடத்தை இனங்கண்டு பதில் தாக்குதல் நடாத்துவதற்கு முன்பே இவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றனர். காரணம் சிறு குழுவாகவே அவர்கள் தங்களது அசைவுகளை மேற்கொள்வதாகும்.

ஆட்டிலறிகளினால் தாக்குதல் நிகழ்த்த முடியாத அளவு களத்தில் நெருங்கி நிற்கிறார்கள் இரு தரப்பும். மோட்டார்களை கொண்டு மட்டும் எதிர்தரப்பு நோக்கி குண்டுகளை ஏவலாம். இஸ்ரேலிற்கு முடியுமான இந்த தாக்குதலை பலஸ்தீனப் போராளிகளினாலும் செய்ய முடியும

எர்பன் வோரை ஆரம்பித்தால் நகரின் கட்டங்களினுள் சண்டைகள் ஆரம்பமாகும். வான் தாக்குதலின் துணையை இழந்த நிலையில் சண்டைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு நேர்ந்தால் யூதப்படைகளின் உட்புகும் பாதைகளை பலஸ்தீன போராளிகள் துண்டாடி கட்அவுட் போட்டு விடுவார்கள். இதன் பின்பு இலகுவாக யூதப்படைகளை அழித்து விடுவார்கள். அது மட்டுமல்லாது காஸாவில் உள் நுழைந்து வெளியேறுவது என்றால் அது டாங்கிகளின் வழித்துணையுடன் மட்டுமே முடியும். டாங்கிகளை நகர்த்த முன்னர் ஏரியா கிளியரிங் செய்வதும், எனிமி அம்புஸ்ஸை நியூற்றலைஸ் பண்ணியாக வேண்டும். இப்போது இஸ்ரேலிய படைகள் இதைத்தான் செய்ய எத்தனிக்கின்றன.

Jul 20, 2014

ஹமாஸின் தலைவர் (அரசியல்) “Khaled Mashal” உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!



“ஹமாஸ்” காஸாவின் நிலங்களை மட்டுமல்ல, அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வருபவர். இஸ்ரேலின் சின்-பெட் பல முறை இவரை படுகொலை செய்ய முயன்றும் இறைவன் அருளால் இன்றும் அதன் தலைமமையை கொண்டு செல்பவர்.

உலக முஸ்லிம் உம்மாவிற்கு அதன் இணையத்தளம் ஊடாக ஹமாஸ் சார்பாக அவர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

“ஓஹ்..... எமது உலக முஸ்லிம் சகோதர்களே..!! எங்களிற்கு இங்க என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எமது மண்ணை யூத இராணுவம் மீண்டும் ஒரு முறை விழுங்க முற்பட்டுள்ளது. அவர்களிற்கு எதிரான எமது போராட்டம் இதுவரை நடந்ததையும் விட எழுச்சியுடனும் பல அர்ப்பணங்களிற்கு மத்தியிலும் இடம்பெற்று வருகிறது. யஹுதிகள் இப்போது ஒரு புதிய எதிரியுடன் மோதுகிறார்கள். ஆம் நாம் அவர்களிற்கு எதிராக பல எதிர்பாராத தாக்குதல் முறைகளையும் சண்டைகளையும் ஆரம்பித்துள்ளோம். இதனை நான் பெருமையுடனும் சந்தோசத்துடனும் இந்த புனிித ரமாழானில் உங்களிற்கு சொல்லிக்கொள்கிறேன்”.

“உலகம் முழுதும் முஜாஹித்கள் போராடுகிறார்கள். அதற்காக தங்கள் உயிர்களை இறைவனின் பாதையில் இழக்கிறார்கள். அது போன்றே காஸாவிலும் புனித யுத்தம் நடக்கிறது. நீங்கள் இந்த சண்டைகளில் பங்கேற்க அவாவுற்றிருப்பீர்கள். உங்கள் உளமார்ந்த இந்த எண்ணத்தை ஹமாஸின் சார்பில் பாரட்டுகிறேன். ஆனால் எமக்கு உங்கள் ஆட்பலம் தேவையில்லை. தாராளமாக எமது போராளிகள் அதற்காக திரண்டுள்ளார்கள். எமக்கு ஆயுதங்களும் தேவையில்லை. யஹுதிகளை எதிர்கொள்ளும் மனப்பலம் எம்மிடம் உண்டு. அதுவே எமது பிரதான ஆயுதம். ஆயுத தளவாடங்கள் எம்மிடம் கையிறுப்பில் உள்ளன. அவற்றை காஸாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.”

“ஓ... எம் அன்பின் முஸ்லிம் சகோதரர்களே..!! எமக்கு மருந்துகள் தேவை. காயப்படும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் காப்பாற்ற அவை தேவைப்படுகின்றன. மேலும் வைத்தியர்கள் தேவை. யஹுதிகள் வீசும் குண்டுகள் அபாயகரமானவை. அவை எமது உடன் பிறப்புக்களை படுகாயப்படுத்துகின்றன. எமது குழந்தைகளிற்கு பால்மா தேவை. இந்த ரமழானில் நீங்கள் இவற்றை எமக்கு வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மட்டும் எடுங்கள். மற்றவற்றை எமது எல்-கஸ்ஸாம் பார்த்துக்கொள்ளும்.”

“ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும், குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள். யாரெல்லாம் ஸியோனிஸ்ட்களால் கொல்லப்பட்டார்களோ அவர்களிற்கு பிர்தவ்ஸ் எனும் ஜன்னத் கிடைக்க துஆ செய்யுங்கள். எமது ஆன்மீக தலைவரும் ஹமாஸின் தந்தையுமான சேய்ஹ் அஹ்மத் யாஸீன் (ரஹ்) அவர்கள் எம்மை எல்லாக் கருமங்களிலும் துஆவை கொண்டு ஆரம்பித்து துஆவை கொண்டு முடிக்கும் படி அடிக்கடி பணிப்பார்கள். அவர்கள் காட்டிய பாதையில் தான் நாம் பயணிக்கின்றோம். ஒ... முஸ்லிம் உம்மாவே உங்கள் துஆக்களை விட பெரிய ஆயுதம் கஸ்ஸாமிடம் இல்லை. அவற்றை நீங்கள் எங்களிற்காக வழங்குங்கள். ஆமீன். யஹுதியின் அழிவு இதில் இருந்தே ஆரம்பிக்கும் ......”.

“Battle Rats” - வியட்நாமிய களங்களை ருசிக்கும் யூத இராணுவ படையணிகள் !!



by:Abu Maslama

“ எதிரி பெரும் படையாக திரண்டு வரும் போது நீ உன்னை சிறு சிறு குழுக்களாக மாற்றிக்கொள். எதிரி உன்னை இலக்கு வைத்து தாக்குதலிற்கு ஆயத்தமாகும் போது உன் ஒவ்வொரு குழுக்களும் தனித்தனியாக எதிரியை இலக்கு வைத்து தாக்குதலிற்கு தயாராக வேண்டும் ” - ஜெனரல் சன்-சூ (Art of War).

இஸ்ரேலின் தரை வழியான படை நகர்வில் இந்த யுத்தத் தத்துவத்தை ஹமாஸ் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. இதற்கு பல இடங்களிலும் நடந்த சண்டைகள் சாட்சியம் பகர்கின்றன. அமெரிக்காவிற்கு வட வியட்டநாம் எப்படி மரணப் புதைகுழியாக மாறியதோ அது போன்றே இஸ்ரேலிய படைகளிற்கு காஸாவும் இரத்தத்தினால் குழைந்த சதுப்பு நிலங்களாக காத்திருக்கின்றன. ஒரு தேசத்தின் பெரும் படையை, அதி நவீன ஆயுத வல்லமையை கொண்ட இராணுவத்தை எதிர்த்து சுற்றி வளைக்கப்பட்ட ஒரு குறும் நிலப்பரப்பில் சண்டையிடுதல் என்பதும் தமது இருப்பை தக்க வைத்தல் என்பதும் இராணுவ ரீதியில் சாத்தியமானதா?, என்பது ஒரு சாமானியனிற்கும் எழும் சாதாரண கேள்விகள். இந்த கேள்விகள் இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் படையணிகளிற்கு தெரியாததும் புரியாததும் அல்ல.

எப்படி காஸாவை கூறு போடும் விடயத்திலும் அங்குள்ள ஹமாஸையும், இஸ்லாமிக் ஜிஹாத்தையும் அழித்தொழிக்கும் விடயத்தில் யூத அரசிடம் ஒரு திட்டம் உள்ளதோ அது போலவே காஸாவில் களமிறங்கியுள்ள பலஸ்தீன போராளிகளிடமும் ஒரு திட்டம் உள்ளது. வருங்கால சண்டைகள் இதனை உண்மைப்படுத்தலாம். முள்ளிவாய்க்காலில் புலிகள் மக்களை மனிதக் கேடயமாக வைத்து அழிந்து போன வரலாற்று உதாரணங்களை வைத்து ஹமாஸின் கதியும் அதுதான் என பல தமிழ் ஊடகங்கள் ஆருடங் கூறுகின்றன. அப்படித்தான் நடக்கும் என்றால் இஸ்ரேலிய அரசு இலங்கையின் நட்சத்திர தளபதிகள் பொன்சேகா, சவீந்திர சில்வா, ரவிப்பிரியா என பலரிடம் என்ன செய்வது எப்படி செய்வது என்று ஆலோசனை கேட்டிருக்கும்.

அப்படி ஒரு களச்சூழலை காஸாவில் உருவாக்க முடியாது என்பது இஸ்ரேலிய இராணுவத்திற்கு நன்கு தெரியும், அது போலவே ஹமாஸிற்கும் அது தெரியும். இங்கே இஸ்ரேலிற்கு தேவை ஹமாஸை ஒன்று மொத்தமாக அழிப்பது அல்ல. அப்படி அழிப்பதாக இருந்தால் ஒட்டுமொத்த காஸா மக்களையும் கொல்ல வேண்டும். ஒரு ஹமாஸின் போராளி மண்ணில் சாயும் போது 09 காஸாவின் இளைஞர்கள் அவன் கையிலிருந்து வீழ்ந்த துப்பாக்கியை மீண்டும் யூதர்களிற்கு எதிராக உயர்த்த போட்டி போடுகிறார்கள். ஹமாஸில் இருந்து காஸாவையோ காஸாவில் இருந்து ஹமாஸையோ ஒரு போதும் பிரிக்க முடியாது என்பேதே உண்மை. இஸ்ரேல் மேற்கொண்ட இன்றைய தாக்குதல்கள் மேலும் மேலும் ஹமாஸுடன் மக்களை இறுக மானசீகமாகவும் பொளதீகமாகவும் பிணைத்து வருகிறதே அன்றி வேறில்லை.

நேற்றைய ஹமாஸின் தாக்குதல் சம்பவம் ஒன்றை பார்ப்போம்......
தெற்கு காஸாவின் எல்லையில் Sufa-வை நோக்கி ஒரு சுரங்க வாயிலின் ஊடாக டனலை அமைத்திருந்தார்கள் அல்-கஸ்ஸாம் போராளிகள். அதன் ஊடாக சென்று இஸ்ரேலிய வேவுப்படையினரின் கண்களில் படும்படியாக சில நடமாட்டங்களையும் செய்திருந்தார்கள். உடனடியாகவே இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் அவர்களை நோக்கி கடும் தாக்குதலை ஆரம்பித்தது. போராளிகள் வேகமாக பின்வாங்கி சுரங்கம் ஊடாக காஸாவிற்குள் நுழைந்தார்கள். இவர்களை பின் தொடர்ந்து இரண்டு பிளட்டூன் IDF படையினர் சுரங்கத்தினுள் நுழைந்து தாக்கியவாறு காஸாவின் எல்லை வரை சென்றனர்.

தங்கள் போராளிகள் அனைவரும் தளம் திரும்பியதை உறுதி செய்த அல்-கஸ்ஸாம் விசேட தாக்குதல் அணியினர் ஏற்கனவே சுரங்கத்தினுள் பொருத்தி உருமறைப்பு செய்து வைத்திருந்த சைட் சார்ஜர்களை (கிளைமோர்) வெடிக்க வைத்தனர். அந்த சுரங்கம் தோண்டப்பட்ட விதமே குண்டுகள் வெடித்தால் அப்படியே சரியும் வண்ணம். நிலைமை தலைகீழானது. Sufa-வின் அருகே 03 ஹெலிகொப்டர்களில் அந்த டனலினுள் நுழைந்த இஸ்ரேலிய படையினரை ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் சென்றது இஸ்ரேலிய மீட்பு இராணுவம்.

எவ்வளவு இழப்புக்கள் யூத ஆக்கிரமிப்பு படையினரிற்கு நிகழ்ந்தது என்பது பற்றிய எந்த விபரத்தையும் இஸ்ரேலிய அரசு வெளியிடவில்லை. அவர்கள் அதனை வெளியிடவும் போவதில்லை. இது அவர்களது படையினரதும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களினதும் மனோ நிலையை, போர் வலுவை பாதிக்கும் என்பது அவர்களிற்கு தெரியும். அது போலவே ஹமாஸிற்கும் இழப்புக்களின் ரோஸ்டர் என்ன என்பதை அனுமானிக்க முடியாத நிலை.

இப்போது காஸாவின் சுரங்கங்களும் வெடிக்கின்றன. எலிகளை வேட்டையாடுவது போல பாய்ந்து சென்ற யூத இராணுவத்திற்கு இப்போது புரிந்திருக்கும் அவர்கள் எலிகள் அல்ல “பேட்டில் ரேட்ஸ்” என்று

கடந்த இருபத்தினான்கு மணிநேரத்தில் 29 இஸ்ரேலியப் படையினர் கொலை


கடந்த இருபத்தினான்கு மணிநேரத்திற்குள் 29 இஸ்ரேலிய படையினரை கொன்றுள்ளதாக அல் கஸ்ஸாம் பிரிகேட்ஜ் அறிவித்துள்ளது. 

இன்று அதிகாலை இராணுவ ஊர்தியொன்றின் கதவைத் திறந்த போராளி ஒருவர் அதனுள்ளிருந்த 14 இராணுவத்தினரை சுட்டுக் கொன்றதாகவும் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் என அது மேலும் தெரிவித்துள்ளது. 

நேற்றும் இன்றும் தலா இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எங்கிருந்து ராக்கட்டுகளும் துப்பாக்கி குண்டுகளும் வருகின்றன என்பதை நாம் அறியோம். நாம் பிசாசுகளுடனேயே போராடுகிறோம். மிகப் பயங்கரமான இரவுகளை காஸா எல்லையில் நாம் கழித்து வருகிறோம் என இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்திருப்பதாக ஹீப்று இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

- Meelparvai Media



சாபத்தின் சந்ததியே! அவர்கள் சஹாதத்தின்
இரத்த சிகப்போடு சுவனத்தை சுவைக்க ஆசை கொண்ட முஜாஹிதீன்கள்! அய்யூபியின்(ரஹ்) வாரிசுகள்!
முடிந்தால் அவர்களின் உயிரற்ற உடல் மீது
ஆக்கிரமிப்பை தொடர்ந்து கொள்! அப்போதும் உன் சைனியத்தில்
சரிபாதி சவக்கிடங்கை கண்டிருக்கும்! மறுபாதி வெருண்டு ஓட காத்திருக்கும்!!ஏனென்றால் நீ யூதன்!!!


“எங்கள் இறைவா! எங்கள் சகோதரர்களுக்கு பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் சகோதரர்களின் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது நாங்கள் வெற்றியடைய உதவி செய்வாயாக!!

ஆமீன்.....

இஸ்ரேலின் தரைநகர்வுகள் பற்றிய யூதக்குறிப்புகள் !!

 

 By:Abu Sayyaf

“ஓர் இராணுவ கொமாண்டரிற்கு தாக்குதலை ஆரம்பியுங்கள் என கட்டளை இடுவது இலகுவானது. ஆனால் அந்த தாக்குதலை ஆரம்பித்து முன்னகரும் சிப்பாய்க்கு மட்டுமே தெரியும் அது எவ்வளவு சிரமமானது என்று” . இஸ்ரேலிய படையினர் (I.D.F.) காஸா மீதான தரை சண்டைகளை இப்போது ஆரம்பித்துள்ளனர். காஸாவினுள் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொள்ளும் அவர்களிற்கு இரண்டு பணிகள் முன்னெழுந்து நிற்கின்றன. பலஸ்தீன போராளிகளை எதிர்கொண்டு அவர்களை அழித்தொழிப்பது அல்லது பின்வாங்க வைப்பது. காஸாவில் இருந்து இஸ்ரேலிய எல்லைகள் ஊடாக தோண்டப்பட்டுள்ள “டனல்ஸ்” எனும் சுரங்கப்பாதைகளை கண்டறிந்து அவற்றை அழித்து நிர்மூலமாக்குவது.

பெஞ்சமின் நெதன்யாகூ 2005-ல் இஸ்ரேலினால் திட்டமிடப்பட்ட காஸாவின் கரையோரங்களையும், வடக்கு காஸாவையும் முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் அடிப்படையிலேயே மீண்டும் 2014-ல் ரமழான் மாதத்தை இலக்காக கொண்டு தனது தாக்குதல்களை ஆரம்பிக்குமாறு இஸ்ரேலிய வான்படைக்கு உத்தரவிட்டார். தொடரான வான் தாக்குதல்கள் ஊடாக காஸாவின் மாமூல் நிலையை சீர்குலைத்த பின்னர் தரை தாக்குதலை ஆரம்பித்து காஸாவை விழுங்குவது அவரது திட்டம். எல்லாமே அவர் திட்டப்படி நடந்தது. அவரது பாதுகாப்பு அமைச்சு வழங்கிய வோர் அஸஸ்மன்ட் ரிப்போர்ட் படி எதிர்பார்த்த ரொக்கெட் தாக்குதல்களை விடவும் பல மடங்கு அதிகரித்த ரொக்கெட் தாக்குதல்கள் அவரை யுத்தம் தொடர்பான மீளாய்விற்கு இட்டுச் சென்றது.

யுத்தம் ஆரம்பிக்க முன்னர் கூட்டப்பட்ட உயர் அமைச்சரவை கூட்டம் யுத்தம் ஆரம்பித்து ஒரு வாரகாலத்தினுள் மீண்டும் கூட்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் எழுந்தது இஸ்ரேலிற்கு. காஸாவிற்குள் இருந்து வந்து விழும் ரொக்கெட்களை தடுத்து விடலாம், அவற்றின் இலக்குகளும் அவ்வளது துல்லியம் இல்லை. ஆனால் சுரங்கப்பாதைகள் ஊடாக இஸ்ரேலிய எல்லைகளில் நுழைந்து ஏவப்படும் ரொக்கெட்களை அவர்களால் தடுக்க முடியாமல் போனது. கூடவே அவை இலக்கை சரியாக சென்றடைந்து தாக்கும் திறனையும் தடுக்க முடியாமல் போனது. பலஸ்தீனர்கள் உபயோகம் செய்யும் சுரங்கப்பாதைகள் ரஃபாவில் தான் இருக்கிறது என நினைத்த இஸ்ரேலிற்கு அது தங்கள் எல்லை வரை நீளும் எதிர்பார்க்கவில்லை.

1600 இற்கும் அதிகமான ரொக்கெட்கள் இஸ்ரேல் முழுதும் மழை போல பொழிந்தமை இஸ்ரேலை யுத்தம் தொடர்பான தந்திரோபாய மாற்றங்களை நோக்கி தள்ளியுள்ளது. பலஸ்தீன போராளிகளை பொருத்த அளவில் அவர்களின் இலக்கு எதிரியை உள்வாங்கி தாக்கியழிப்பது, முடிந்தால் அவர்களை உயிருடன் பிடிப்பது. யூத ஊடகங்கள் இதுவரை Beit Lahia மற்றும் Beit Hanoun போன்றவற்றின் எல்லைகளில் 13 சுரங்கப்பாதைகளை தாம் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளன.

கடல் வான் தரை என மூன்று நிலைகளில் இருந்தும் குண்டுத்தாக்குதல்களை சமகாலத்தில் நிகழ்த்திய பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் காஸாவினுள் மெல்ல கவனமாக நுழைந்துள்ளனர். இந்த நகர்வில் இதுவரை இஸ்ரேல் 01 டேங்கையும், 03 துருப்பு காவி வாகனங்களையும், 01 தாக்குதல் கவச வாகனத்தையும் இழந்துள்ளது. பலஸ்தீன போராளிகள் தங்கள் சொந்த திட்டமிடல்களின் படி எதிரியை உள்வாங்கி தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.

தரையுத்தம் என்றால் இரு தரப்பினரும் நேரடியாகவே மோதிக்கொள்வர். காஸாவின் நுழைவாயில்கள் ஊடாக முன்னேற முயலும் இஸ்ரேலிய இராணுவம் சில மணித்தியாலங்கள் கடும் மோதல் பின்னர் எதுவும் இல்லாத நிலை. மீண்டும் மோதல் என பலஸ்தீன போராளிகள் விட்டு விட்டு அடிக்கும் சண்டைகளினால் தங்கள் வேகமான முன்னேற்றங்களை தவிர்த்து வருகின்றனர். அவர்களது முதன்நிலை இலக்காக சுரங்கப்பாதைகளை கைப்பற்றுவதே உள்ளது.

இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் “பாதுகாப்பு படையினரிற்கு எதையும் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் காஸா முழுவதையும் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்” எனக் கூறியுள்ள அதே வேளை இஸ்ரேலிய முன்னால் இராணுவ ஜெனரல்கள் இந்த யுத்தத்தை பிரதமர் நினைப்பது போல முடிக்க முடியாது என அறிவித்துள்ளனர்.

காஸாவில் இஸ்ரேலிய படையணியினர் “கெரில்லா யுத்தத்தை” எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பலஸ்தீன போராளிகள் அதற்காகவே காத்திருக்கின்றனர். அவர்கள் ஒரு எர்பன் வோன் எனும் நகர்புற சண்டைகளை நிகழ்த்த தயாராகி விட்டனர். அதனை அவர்கள் தங்கள் அகதி முகாம்கள் வரை நகர்த்தி செல்லவுள்ளனர். இந்த சண்டைகளில் எதிரிகள் நேரடியாக சண்டையிடத போது எமது பலமிக்க டாங்கிகளால் ஒன்றும் செய்ய இயலாது. மேலும் அவர்கள் எமது டாங்கிகளை அழிப்பதனை முதல் இலக்காக கொண்டு தங்கள் தாக்குதல்களை வடிவமைத்துள்ளதை உணர முடிகின்றது” என தெரிவித்துள்ளனர்.

Brigadier-General Yousef al-Sharqawi இது பற்றி கூறுகையில் “இஸ்ரேலிய அரசு எதிர்பார்க்கும் 365 சதுர கிலோ மீட்டர் பரப்பை கைப்பற்றுவது என்பது இரண்டு மில்லியன் மக்களுடன் சம்மந்தம் உடையது. இதில் எல்லோருமே ஹமாஸ் அங்கத்தவர்களாக அல்லது ஆதரவாளர்களக இருக்கும் போது இதனை இஸ்ரேலிய அரசினால் செய்து முடிக்க முடியாது. தவறான இலக்கை மீண்டும் தவறான வழியில் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முட்டாள்த்தனமாக செயற்பாடுகளில் நெதன்யாகூ இறங்கியுள்ளார்” எனச்சாடியுள்ளார்.

ஜுவிஸ் டிபென்ஸ் ஸ்டடீஸ் எனும் அமைப்பு காஸா தரைச்சமர் பற்றி வெளியிட்டுள்ள அறிவிப்வில் “கடந்த காலங்கள் போலல்லாது ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் என்பன நாம் எதிர்பார்க்காத புதிய யுக்திகள் , ஆயுதங்கள் என்பனவற்றை இந்தச் சண்டைகளில் அறிமுகம் செய்துள்ள நிலையில், தரைச் சண்டைகளில் அதன் யுக்திகள் என்ன, ஆயுதங்கள் என்ன என்பது எமக்கு தெரியாது. இது எமது படையினரை வலிதாக காவு கொடுக்கும் ஒரு முயற்ச்சியாகவே கணிக்க கூடியதாக உள்ளது எனவும் இதன் வலி இஸ்ரேலை பலவீனப்படுத்துமேயல்லாது பலப்படுத்தாது” எனவும் தெரிவித்துள்ளது. “கட்டிடங்களை தரைமட்டமாக்குவதும், உயிர்களை கொல்வதும், சிறுவர்களை கைது செய்வதும் தான் யுத்தம் என நினைக்கின்றார் நெதன்யாகூ. ஆனால் இதன் பின்விளைவுகளும் இழப்புக்களும் இஸ்ரேலிற்கு கடுமையாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளது.

Jul 18, 2014

Flash News :அதிகாலை பொழுதின் தாக்குதலும் ,இஸ்ரேலின் பொய் செய்தியும்!

இஸ்ரேல்- காசா முக்கியமான செய்திகள்
1.காசாவின் தென் பகுதியிலுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட ஷோபா நகரத்தினுள் இன்று அதிகாலை கதா இபுல் கஸ்ஸாம் இஸ்லாம் போராளிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல் சியோனிச தேசத்தின் அரசியல், ராணுவம், மற்றும் ஊடக மட்டங்களில் தளர்வு மற்றும் தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

2.இது குறித்த செய்திகளை வெளியிட சியோனிச ஊடக கண்காணிப்பு மையம் கடும் தணிக்கையினை 
வெளியிட்டு உள்ளது ..

3.சியோனிச ஊடகம் வெளியிட்ட தகவல் 13 பேர் சுரங்கப்பாதை வழியாக வந்த குழுவை கவனித்து தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 8 பேர் பலியாக மீதி 5 பேர் தப்பி விட்டதாக முதல் தகவல் வெளியிட்டது ..

4.மேலும் சியோனிச சேனல் 3 வான்படையினர் சிலரை தாக்குவது போலவீடியோ வெளியிட்டது ..அது போலியானது என் நிபுணர்கள் கூறுகின்றனர் ..

5.இது குறித்து அறிக்கை வெளியிட்ட கஸ்ஸாம் அணியினர் அதிகாலை 4 மணிக்கு இடம் பெற்றதாகவும் ,வெற்றிகரமாக பணியை முடித்து விட்டு அனைவரும் திரும்பியதாகவும் தகவல் இருந்தது ..அதில் போராளிகள் குறித்த எண்ணிக்கை குறித்து வெளியிட வில்லை

6.பேராசிரியர் அபூ அத்னான் அபூ ஆமிர்,"அல்கஸ்ஸாம் அணியினர் அணைத்து தகவல்களையும் வெளியிடாமல மூச்சை அடிக்கி பிடித்து உள்ளது என் தெரிவிக்கின்றார்.

7.மேலும் அது அடுத்து அடுத்து இன்னும் வெளிவரவுள்ள அதிர்ச்சிகரமான நிகழ்வுக்கு தொடக்கமாக இருக்கலாம்!

Source- Fairooz Mahath,Qatar 

8.வடக்கு காசா பகுதியில் பெய்ட் லஹியா மற்றும் பெய்ட் ஹனூன் மீது குண்டுத்தாக்குதலில் 15 பேர் காயம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Source- Shehab News

9.காஸாவுக்கு எகிப்து அரசிடமிருந்து வந்த உதவிப் பொருட்கள் ....
கெட்டுப்போனவை...


source- شہۧخہۧصيہۧة فلہۧسہۧطينہۧية

10.இன்று இஸ்ரேலின் பல பகுதிகளிலும் நூற்றுக்கும் அதிகமான
ஏவுகணைகள் வந்து வீழ்ந்துள்ளதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது

Source- Al Jazeera

11.ஓர் அமெரிக்கப் பெண் டெல் அவிவ் விமான நிலையத்தை
வந்தடைந்ததும் " பலஸ்தீனுக்கு உங்களை வரவேற்கின்றோம் "
என்ற வாசகதுடன்....உண்மை உலகுக்கே தெரியும் .

Source- Rwae3 Media | روائع ميديا للإعلام الهادف'

12.இஸ்ரேல் சஹீபர் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை கொன்றுள்ளது இஸ்ரேலியர்களின் நோக்கம் இதுவே! ...

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம் - பேச்சு 

13."காசா தரைப்படை நடவடிக்கையை வெற்றி பெறவும் மற்றும் அவர்கள் படைகள் பாதுகாப்பாக அங்கு இருந்து திரும்பிவரவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்"..

சியோனிச எதிரி படைகளின் தலைமை அதிகாரி
பென்னி கான்தூஸ்- பேச்சு 








Source- Sheha
தகவல் Abusheik Muhammed

“ஹமாஸ்” ஈரானிய அஜண்டாவில் கட்டுண்டுள்ளதா?



by: Abu Khadeejah

நம்மில் பலரிற்கு ஒரு குழப்பம் உண்டு. பலஸ்தீனத்தில் போராடும் இஸ்லாமிய குழுக்களின் பெயர்கள் தொடர்பில் அவை எழுகின்றன. அல்-கஸ்ஸாம் படையணி, இஸ்லாமிக் ஜிஹாத், ஜுன்த்-அல்லாஹ், அல்-அக்ஸா பிரிக்கேட், அல்-குத்ஸ் பிரிகேட் இவையெல்லாம் ஹமாஸினுடையதா அல்லத தனியானவையா அவை என்பதே அந்தக் குழப்பம். இது பற்றிய சில புரிதல்களை இந்த பதிவின் ஊடாக ஆரம்பிப்போம். ஹமாஸ் எனும் இயக்கம் தன்னை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளது. அதன் அரசியல் பிரிவை நாம் யாவரும் அறிவோம். அது போலவே அதன் இராணுவ பிரிவில் (இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம்) சில தளபதிகளையும் நாம் அறிந்திருக்கலாம். அவர்களது உளவு மற்றும் வேவுத்தாக்குதல் பிரிவை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இஸ்ரேலின் மொஸாட்டும், ஸின்-பெட்டும் கூட தலையை பிய்க்கும் விடயம் இது. சொல்லப்போனால் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர்கள் பலரிற்கு கூட அதன் உளவுப்பிரிவு பற்றி துல்லியமாக எதுவுமே தெரியாது. இங்கு நாம் ஹமாஸின் கட்டமைப்பு பற்றி பேசவில்லை. மாறாக அவர்களது செயற்தளங்கள் பற்றியே பேச விளைகின்றோம்.

ஹமாஸ் காஸாவின் விடுதலைக்காக போராடும் இரண்டு இன்திபாதாக்களை செய்த மக்கள் இயக்கம். ஸியோனிஸ்ட்களின் அட்டூழியங்களை எதிர்க்கும் அதற்கு பதிலடி கொடுக்கும் உறுதி மிக்க அமைப்பு. அதே நேரம் தனது ஆளுகைக்குள் வேறு அமைப்புக்கள் செயற்படுவதை அது விரும்புவதில்லை. (வட இலங்கையில் விடுதலைப்புலிகளைப் போல). மாற்று அமைப்பு தலைவர்களை அதன் தளபதிகளை ஹமாஸ் கொலை செய்த வரலாறுகள் உண்டு. அதன் அறுவடையை இப்போது அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பது வேறு விடயம். ஹமாஸின் கறுப்பு பக்கங்கள் பற்றி பேசுவது அல்ல இந்த பதிவின் நோக்கம்.

ஹமாஸ் தனது இராணுவ செயற்பாட்டிற்கு பெரிதும் ஹிஸ்புல்லாக்களை சார்ந்து நிற்க வேண்டிய தேவைகள் உள்ளன. இதற்கு பூகோள எல்லைகள் முதற்காரணியாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை ஹிஸ்புல்லாஹ்வும் நன்றாகவே பயன்படுத்தி வருகிறது. ஈரானிய அரசியல் பூகோள நலன்களிற்கான நகர்வுகளின் அடிப்படையிலேயே இவர்களது உதவி காஸாவிற்கு கிடைக்கிறது. இன்று நடக்கும் சண்டைகள் வரை ஹிஸ்புல்லாஹ் போராளிகளினால் வழங்கப்பம் ஆயுதங்கள், இராணுவ தொழில்நுட்ப அறிவுகள், சில நேரங்களில் தோழமை சூட்டாதரவு என அது ஹிஸ்புல்லாஹ்வின் கட்டுக்குள் இறுகியுள்ளது. காஸாவின் விடுதலைக்காக ஐ.எஸ். எனும் இஸ்லாமிய கிலாபாவின் படைகளை அழைக்க முடியாத அரசியல் நிர்ப்பந்தங்கள் நிறைந்த நிலையில் அது செயற்படும் கட்டாய நிலை உள்ளது. இதனால் ஹமாஸை ஸலபி சிந்தனைசார் அமைப்புக்கள் இதுவும் SHIA-க்களின் அமைப்பு என இலகுவாக சுட்ட வகைசெய்து விடுகிறது.

மேற்கு கரையிலும் காஸாவிலும் சமகால செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த ஹமாஸிற்கு ஒரு கட்டத்தில் மேற்குக்கரையை முற்றியும் இழக்கும் நிலை உருவாகியது. பல ஹமாஸின் தோழர்கள் அல்-பதாஃவினரால் கொலை செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டனர். காஸாவை தங்கள் தளமாக மாற்றிக்கொண்ட ஹமாஸ் தன்னை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்ததில் வெற்றி கண்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல் திறன், ஆட்பலம் போன்ற பல இராணுவக்காரணிகளினால் இப்போது ஹமாஸிற்கு தனியாக போராட முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனால் ஏனைய போராட்டக்குழுக்களிற்கான வாயிலை ஆது சில வருடங்களாகவே திறந்து விட்டுள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஏனைய போராளிக்குழுக்கள் இப்போது காஸாவின் சில பகுதிகளை தம் வசப்படுத்தி யூத அரசிற்கு எதிரான தாக்குதல்களை முன்னேடுத்து வருகின்றன.

இந்த புறநிலை களங்களிலேயே நாம் காஸாவின் இஸ்ரேலிற்கு எதிரான போராட்டத்தை நோக்குவது சரியாக அமையும். பல ஏனைய குழுக்களின் தாக்குதல்களைக் கூட ஹமாஸ் அவர்கள் செய்தது என செய்தி வெளியிடுவதில்லை. அவையும் தனது போராளிகளினால் செய்யப்பட்டது போன்ற மாயையை மெல்ல அனுமதிக்கிறது ஹமாஸ்.

ஹனபி, சாபி போன்ற பல மத்ஹப்புகள் சார்ந்த போராளிகளையும், இஃஹ்வானிய கொள்கைகளை சுமந்த போராளிகளையும் ஹமாஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. இஸ்லாமிய ஆட்சி, இஸ்லமிய எமிரேட்ஸ், இஸ்லாமிய கிலாபா என்றெல்லாம் ஹமாஸ் பேசியதே கிடையாது. பலஸ்தீன மண்ணின் விடுதலைக்கான, ஸியோனியஸ சக்திகளின் தாக்குதல்களிற்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாகவே அது தன்னை வெளிப்படுத்தி வருகிறது. மார்க்கம் சார்ந்த கொள்கைகள், பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள் என்றேல்லாம் ஹமாஸ் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்தியதில்லை.

பலஸ்தீன் மீதான யூத குடியேற்றங்களை தடுப்பதுடன் அது தன்னை மட்டுப்படுத்திக்கொள்ள முனைகிறது. அல்-அக்ஸா (அல்-குத்ஸ்) மீட்பு போராட்டம் என்பதனை தனது கொள்கைரீதியான திட்டமாக கொண்டுள்ள போதிலும் அதற்கான வலிதான இராணுவ செயற்பாடுகள் பற்றி அது எந்த முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. மண்ணின் விடுதலைக்கான மக்கள் இயக்கமாக அது தன்னை அடையாளப்படுத்தியதில் கணிசமான வெற்றியைக்கண்டுள்ளது. இதன் சர்வதேச உறவுகள் குறித்த கொள்கைகளும் ஒரு பக்கம் சாராத அதன் நலன்களிற்கு ஏற்ப மாறக்கூடிய செயற்திட்டத்தையும் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் கொண்டுள்ளது.

ஹமாஸ் பற்றிய பிரமாண்டமான மித்க்கள், மாயைகள், கனவுகள் என்பன தவறான அடித்தளங்களாகும். இஸ்லாமிய மார்க்க சட்ட வரையறைகளினுள் போராடும் ஒரு தேசிய அல்லது மண் விடுதலைக்கான இயக்கம் எனும் எல்லைகளிற்குள் அதனை பார்ப்பதே சிறந்தது. இதன் ஊடாக ஹமாஸினால் மட்டும் தான் காஸாவையும் பிலஸ்தீனையும் மீட்கவும் காப்பாற்றவும் முடியும் எனும் தவறான கற்பிதங்களை அகற்றிவிட முடியும்.

இன்சாஅல்லாஹ் எதிர்வரும் நாட்களில் ஏனைய அமைப்புக்களின் சித்தாந்த செயற்பாடுகள் பற்றிப்பார்ப்போம். ....

காஸா மீதான இஸ்ரேலிய போர் குற்றங்கள்...!

 

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் அதன் இரண்டாவது வாரத்தில் நுழைந்திருக்கையில், அந்த அட்டூழியங்கள் மீது மேலும் மேலும் ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருப்பது, உலகெங்கிலும் சீற்றத்தின் பரந்தளவிலான வெளிப்பாடுகளை உருவாக்கி வருகிறது.

ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவின் பல போராட்டங்கள்,ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும் கூட, காசாவிற்கு எதிரான ஒருதலைபட்சமான "யுத்தத்தின்" குற்றகரமான குணாம்சத்தை மக்கள் அதிகளவில் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கின்றன.

ஜூலை 7இல் காசா மீது இடைவிடாத விமான தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியின் மீது இஸ்ரேல் 1,300க்கும் மேற்பட்ட குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது, அதாவது ஒரு நாளின்24 மணி நேரத்தில் சராசரியாக ஒவ்வொரு ஒன்பது நிமிடத்திற்கும் ஒரு பாரிய குண்டு வெடிப்பாகும்.

எகிப்திய ஆட்சியால் முன்வைக்கப்பட்ட ஒரு போர்நிறுத்த பரிந்துரையைப் பரிசீலிக்க செவ்வாயன்று காலை இஸ்ரேலின் பாதுகாப்பு குழு ஒன்றுகூட இருப்பதாக செய்திகள் வெளியானதற்கு இடையே, இந்த தாக்குதல் சிறிதும் குறைக்கப்படவில்லை என்பதோடு, இஸ்ரேலிய துருப்புகளும் டாங்கிகளும் சாத்தியமான ஒரு தரைவழி படையெடுப்புக்காக காசா எல்லையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன.

ஹமாஸ் மற்றும் இதர பாலஸ்தீன குழுக்களும் 900க்கும் அதிகமான ராக்கெட்டுக்களை வீசியுள்ளன, ஆனால் ஏற்பட்ட சேதங்களைப் பொறுத்த வரையில் ஒப்பிடுவதற்கு அங்கே ஒன்றும் இருக்கவில்லை. அந்த ராக்கெட்டுக்கள் மிக பழமையாகவும் மற்றும் இலக்கின்றியும் செலுத்தப்பட்டு இருந்ததோடு, பெரும்பாலும் திறந்தவெளியையே தாக்கி இருந்தன; அதில் இஸ்ரேலியர் ஒருவர் கூட கொல்லப்படவில்லை. பூமியில் அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான, அதாவது ஒவ்வொரு சதுர மைலுக்கும் 10,000கும் மேல் மக்கள் வாழும் காசாவில் விழுந்த இஸ்ரேலின் ஒவ்வொரு குண்டும், ஏவுகணையும் ஏதாவதொரு மனித வசிப்பிடங்களைக் குறி வைத்திருக்கிறது.

திங்களன்று இக்கட்டுரை எழுதப்படுகையில் காசாவில் பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 185க்கும் மேலாக இருந்தது. இந்த பரந்த பெரும்பான்மையினர் எந்தவொரு பாலஸ்தீன ஆயுதமேந்திய குழுக்களின் போராளிகள் அல்ல, அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள், மேலும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாக குறைந்தபட்சம் 50 குழந்தைகளும் இதில் உள்ளடங்குவார்கள். குறைந்தபட்சம் 1,200க்கும் மேலான காசாவாசிகள் காயமடைந்துள்ளனர்.

சமீபத்திய காசா தாக்குதல் தொடங்கியதற்குப் பின்னர், இஸ்ரேல் இராணுவமும் அதன் முதல் பலியாக மேற்கு கரையில் ஒருவர் கொல்லப்பட்டதை அறிவித்திருந்தது. மேற்கு கரையின் தெற்கு பகுதியில் உள்ள சாமுவா கிராமத்தில் 21 வயதான முனிர் அஹ்மத் ஹாம்டான் அல்-பதாரின் என்ற ஒரு பாலஸ்தீனியர், சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காசா யுத்தத்திற்கு எதிரானதும், இஸ்ரேலிய கார்கள் மீது கல்வீச்சை உட்கொண்டிருந்ததுமான, ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதே அவரது"குற்றமாக" இருந்தது.

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும், காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண வேலைகள் அமைப்பின் கமிஷனர் ஜெனரல் பிறீ கிராஹென்புஹல் (Pierre Krähenbühl) திங்களன்று பத்திரிகைகளுக்கு தெரிவிக்கையில், காசா பகுதியில் வன்முறை தீவிரமடைந்திருப்பது குறித்தும் மற்றும் பாலஸ்தீன அகதிகள் உட்பட அது பொதுமக்களின் வாழ்வை மற்றும் ஸ்தூலப் பொருட்களின் எண்ணிக்கையை நாசமாக்கி வருவது குறித்தும் அவர் "ஆழமாக கவலை கொண்டிருப்பதாகவும்,எச்சரிக்கை அடைந்திருப்பதாகவும்" தெரிவித்தார்.

“சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக, பொதுமக்களுக்கு எதிராகவோ மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பிற்கு எதிராகவோ அல்லது அதற்கு ஆபத்து விளைவிக்கும் விதத்திலோ தாக்குதல்கள் நடத்துவதை முடிவுக்குக் கொண்டு வருமாறு,"அவர் இஸ்ரேலுக்கு அழைப்புவிடுத்தார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் யுத்த குற்றங்களாக கருதப்படும் பல தொடர்ச்சியான கொடூர சம்பவங்கள் செய்திகளில் வெளி வந்துள்ளன.பின்வரும் உண்மைகள், இஸ்ரேலிலும் உட்பட, உலக ஊடகங்களில் பரந்தளவில் வெளியானவை ஆகும்:

· வடக்கு காசாவின், ஜபாலியாவில் ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு மையத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசியது, அதில் ஒரு செவிலியர் மற்றும் மூன்று ஊனமுற்றோர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் அந்த குண்டு வெடிப்பில் கடுமையாக தீக்காயங்களுக்கு உள்ளானார்கள். பெய்ட் லாஹியாவில் ஊனமுற்றவர்களின் வசிப்பிடத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டார்கள், நான்கு பேர் காயமடைந்தார்கள்.

· ஒரு உணவுவிடுதியில் உலக கோப்பை அரையிறுதி கால் பந்தாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எட்டு பாலஸ்தீனியர்கள் ஒரு இஸ்ரேலிய விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். அந்த உணவுவிடுதி, குறிப்பாக முஸ்லீம்கள் பகல் முழுதும் நோன்பிருந்து இருட்டிய பின்னர் சாப்பிடும் ரம்ழானின் போது, மாலை நேரத்தில் உள்ளூர் மக்கள் ஒன்று கூடுவதற்குரிய இடமாக நன்கறியப்பட்டதாகும்.

· பெய்ட் ஹனோனில் ஹமாத் குடும்பத்தின் ஐந்து அங்கத்தவர்களைக் கொன்றும், மற்றும் 8 முதல் 13 வயது வரையிலான ஆறு குழந்தைகள் உட்பட காவாரா குடும்பத்தின் எட்டு அங்கத்தவர்களைக் கொன்றும், மற்றும் காசாவின் தலைமை பொலிஸ் அதிகாரியைக் கொல்லும் ஒரு முயற்சியில் அதிர்ச்சியூட்டும் வகையில் அல்-தாய்ஷ் குடும்பத்தின் 17 உறுப்பினர்களைக் கொன்றும், இஸ்ரேலிய யுத்த விமானங்கள் மீண்டும் மீண்டும் ஹமாஸின் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அதிகாரிகளின் குடும்பங்களை இலக்கில் இருத்தி வந்துள்ளது.

· காசா நகரின் எல் வாஃபா மறுவாழ்வு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பாஸ்மான் அலாஷி கொடுத்த தகவலின்படி, வெள்ளியன்று தனித்தனியாக ஐந்து முறை அந்த மருத்துவமனையை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கின. அந்த தாக்குதல்கள் மருத்துவமனையின் 30நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் மேல்மாடி தண்ணீர் தொட்டிகளைச் சிதைத்திருந்தது.

· ஜெனிவா தீர்மானங்களை மீறி, இஸ்ரேல் வேண்டுமென்றே காசாவின் அப்பாவி மக்களைக் குறி வைத்து வருகின்றது என்பதற்கு தெளிவான ஆதாரமாக, விமான தாக்குதல்களில் 1,000க்கும் மேற்பட்ட தனிநபர்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது கடுமையாக சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

· இதற்கும் மேலாக காசாவிற்குள் மருந்து பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் விதத்தில், இஸ்ரேல் மற்றும் எகிப்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையால் விமானத் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மேற்கொண்டும் ஆபத்திற்கு உள்ளாகி உள்ளனர்.ஏற்கனவே பல மருத்துவமனைகள் குறைந்தளவிலான அடிப்படை மருந்து பொருட்களோடு ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதோடு,இன்னும் 10 நாட்களுக்கு குண்டுவீச்சு தொடர்ந்தால் பேரழிவாக போய் முடியுமென்று மருத்துவர்களும், மருத்துவ சேவை பணியாளர்களும் தெரிவித்தனர். இஸ்ரேலிய-எகிப்திய முற்றுகையானது, எரிவாயு இல்லாத பகுதிகளில் அவசியமான அவசர சேவைகளை வழங்க முடியாதபடிக்கு, ஆம்புலன்சுகளுக்கான எரிபொருள் வினியோகங்களையும் பாதித்துள்ளது.

· மத்திய காசாவில் அல்-நுஷ்ரத்தின் ஒரு மசூதி, சனியன்று இரவு நள்ளிரவு வேட்டைகளில் அழிக்கப்பட்டது, ஒட்டுமொத்த குடும்பங்களையும் அடியோடு அழிக்கும் அபாயத்தோடு, பெரும் எண்ணிக்கையில் பாலஸ்தீனியர்கள் ஒன்றுகூடும் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட இதுபோன்ற டஜன் கணக்கான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

· ஜூலை 9 அன்று, மிகத் தெளிவாக "தொலைக்காட்சி" என்று பெரிய சிவப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த காரை பாலஸ்தீன இதழாளர் ஹமீத் ஷெஹாப் ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில், ஒரு இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலினால் அவர் அங்கே எரிந்து சாம்பலானார். ஷெஹாப் உள்ளூர் பத்திரிகை நிறுவனமான மீடியா24க்காக வேலை செய்து வந்தவராவார். “காசா பகுதி மீதான கூட்டு தண்டனையின் கொடூரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களைக் காட்டி பாலஸ்தீன இதழாளர்களை அதைரியப்படுத்துவதற்கான திட்டமிட்ட மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட" ஒரு நடவடிக்கையாக இந்த படுகொலையை பாலஸ்தீன இதழாளர்களின் கூட்டமைப்பு கண்டனம் செய்தது.

காசாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் மஹ்மொத் தஹீர்அல் ஜஜீராவிற்கு கூறுகையில், “மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் மிகத் தெளிவாக ஒரு சர்வதேச சட்டமீறலாகும். சுகாதார மையங்களை மோதலில் இருந்து விலக்கி வைக்குமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறது," என்றார்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாக கொண்டவை என்று இஸ்ரேலிய ஆட்சி குறிப்பிடும் சில நடவடிக்கைகளே கூட, சர்வதேச சட்டங்களின் கீழ் யுத்த குற்றமாக வருகின்றன. சான்றாக,ஜூலை 13இல், உடனடியாக ஒரு பெரிய இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதால் மக்களை வெளியேறுமாறு எச்சரித்து வடக்கு காசாவில் ஆயிரக் கணக்கான துண்டறிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் வீசியது. அதன் காரணமாக சுமார் 17,000 மக்கள் வெளியேறினார்கள், இது அவர்களின் உயிர் வாழ்க்கை மீதான பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்டு அப்பாவி மக்களை வேண்டுமென்றே இடம் பெயர்த்ததாக இருந்தது.

காசாவின் பொதுமக்களை இலக்காக வைத்து அவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை மூடிமறைக்க இஸ்ரேலிய அதிகாரிகள்,உயர்மட்டத்திலிருந்தும் கூட, எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை.ஞாயிறன்று அமெரிக்க தொலைக்காட்சி வலையமைப்பான ABCஆல் நேர்காணல் செய்யப்பட்ட பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாஹூ,அவரது சொந்த குற்றங்களுக்கு ஹமாஸைக் குற்றஞ்சாட்ட முனைந்தார்,அவர் தெளிவற்ற விதத்தில்: “யார் மசூதிகளுக்குள் ஒளிந்திருப்பது? ஹமாஸ்.யார் மருத்துவமனைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது?ஹமாஸ்.

யார் மக்கள் வசிப்பிடங்களிலோ அல்லது சிறார் பள்ளிகளுக்கு அருகிலோ இராணுவ மையங்களை அமைத்திருப்பது? ஹமாஸ். ஹமாஸ் காசாவின் மக்களை ஒரு மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என்பதோடு அது காசா மக்களுக்கு பேரழிவுகளையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறது," என்றார்.

முற்றிலுமாக அந்த சொற்களோடு, முரண்பட்ட விதத்தில், மசூதிகள்,மருத்துவமனைகள், மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் சிறார் பள்ளிக்கூடங்களை திட்டமிட்டு இலக்கில் வைத்ததை நெத்தனியாஹூ ஒப்புக் கொள்கிறார். இந்த ஒளிநாடாவே ஒரு யுத்த குற்ற தீர்ப்பாணயத்திற்கு ஆதாரமாக வைக்கப்பட வேண்டும்.

இஸ்ரேலிய பத்திரிகைகளிலேயே கூட, காசாவில் நடத்தப்பட்டு வருகிற அட்டூழியங்களின் அளவுகளின் மீது அங்கே ஒரு அதிருப்திகரமான விவாதங்கள் நிலவுகின்றன. “காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களை நிகழ்த்தி வருகிறதா?" என்ற தலைப்பில் Ha’aretzஇல் வெளியான மிக கவனமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கட்டுரை, இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் நடவடிக்கைளை விரிவாக ஆராய்ந்த பின்னர், அதன் முடிவுரையில், கவனமாக "ஆமாம்" என்று குறிப்பிட்டிருந்தது.

அந்த கருத்துரை குறிப்பிடுகையில், “அது வெறுமனே, தடை செய்யப்பட்டதான, மக்களைத் திட்டமிட்டு இலக்கில் வைத்தல் என்பது மட்டுமல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். தாக்குதல்கள் அதன் இயல்பிலேயே இராணுவ இலக்குகளோடு சேர்ந்து, பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் பொருட்களையோ கண்மூடித்தனமாக தாக்கினால்,அதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்... காசாவில் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் அந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் சில அறிக்கைகளோடு சேர்ந்து, அங்கே பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள் என்பதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதானது, இஸ்ரேல் தவிர்த்திருக்க வேண்டிய,அவற்றில் சில ஒருவேளை யுத்த குற்றங்களாகவும் வரையறை செய்யப்பட்டிருக்கக்கூடிய, சில நடவடிக்கைகளை நடத்தியுள்ளதற்கான சாத்தியக்கூறுகளை உயர்த்துகிறது.

'துல்லியமின்மையால்' அல்லது'தவறுதலாக' நடந்ததென்ற வாதங்களின் அடிப்படையில் அவற்றை விட்டுவிட முடியாதளவிற்கு அந்த விடயங்களின் எண்ணிக்கை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது," என்று குறிப்பிட்டது.

உலக கோப்பை உணவு விடுதி குண்டுவீச்சு மற்றும் ஹமாஸ் அதிகாரிகளின் ஒட்டுமொத்த குடும்பங்களை அழிப்பது உட்பட மேலே குறிப்பிட்ட பல சம்பவங்களை மேற்கோளிட்டுக் காட்டி அக்கட்டுரை தொடர்கையில், அது ஒரு குறிப்பிட்ட கேள்வியை முன்வைத்தது: “அங்கே வசித்த பல பொதுமக்களைக் கொன்ற ஒரு தாக்குதலான, IDF இராணுவ பிரிவு தளபதியின் வீட்டின் மீதான ஒரு தாக்குதலைக் குறித்து இஸ்ரேல் என்ன கூறும்? அதுபோன்றவொரு நடவடிக்கை சட்டவிரோதமானதென்றால், பின்னர் காசாவில் என்ன செய்யப்பட்டு வருகிறது," என்று கேள்வி எழுப்பியது.

Khaibar Thalam