Showing posts with label ஹிஜ்ரி. Show all posts
Showing posts with label ஹிஜ்ரி. Show all posts

Oct 26, 2015

ஹிஜ்ரி 1437 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?

 
ஹிஜ்ரி 1437 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?

ஒரு சுயநலமிக்க கொடூரமான குப்ரிய சித்தாந்த அதிகாரத்தின் கீழ் அந்த அசத்திய (அ)நாகரீகத்தின் அடிப்படையில் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பிட்டு ஏதோ பெயருக்காக ஹிஜ்ராவை கல்குலேட் பண்ணுவது முஸ்லீம்களுக்கு இன்று ஒரு சம்பிரதாயம் !

அந்தவகையில் இன்னொரு முஹர்ரமும் பிறந்துள்ளது .

அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா 1? இன்னாலில்லாஹ் சொல்வதா !? என்பதே இப்போதுள்ள கேள்வி !

ஹிஜ்ரி 1437 அவலத்தின் அரவணைப்புடன் முஸ்லீம் உம்மத்துக்கு வந்தனம் கூறுகிறது ! சந்தி சிரிக்கும் சகோதர சண்டை ! எதிரிக்கு எடுபிடி ஆகிய கேவல அரசியல் ! உசூலிய விவாதத்துக்குள் உம்மத்தை அமரவைத்தல்!அசுர ஆதிக்கத்தில் அடிவாங்கும் வழமை என விழி பிதிங்கி விடிவை தேடும் நிலையில் முஸ்லீம் உம்மத்துக்கு ஹிஜ்ரா என்ற வரலாற்று விடிவு இன்று புலப்படாத ஒரு ஆன்மீக இதிகாசமே!

அதிலும் தேசம் ,தேசியம் ,சர்வதேசம் என இருக்கின்ற பிறையையும் எட்டாக வேறு பிரித்து விட்டார்கள் ! அதோடு சில மதப் பூசாரிகளிடம் இருக்கும் பஞ்சாங்கம் போல ஆளுக்கொரு கணிப்பு சொல்லும் கண்றாவி ஆகிவிட்டது இஸ்லாத்தின் கலண்டர் என்பதுதான் இன்று கவலையாக இருக்கிறது ! பக்காவான பன்றியின் தொழுவத்தில் பசுக்கன்று தான் தானாக வாழ நினைத்தால் சாத்தியமா!?

மலத்தை மரமாக்கி கழிவை இலை ஆக்கி உண்ணும் பக்குவத்தில் மாறுவது தவிர மாற்று வழி இருக்குமா !? நடந்துள்ளது அதுதான் .இஸ்லாம் என்பது ஒரு தனித்துவமான சித்தாந்தம் ,முதலாளித்துவம் என்பது இன்னொரு சித்தாந்தம் இங்கு உடன்பாடு என்பதற்கு வழியே இல்லை . ஒரு சித்தாந்தம் அதன் விழுமியங்களையும் அதன் நாகரீகத்தையும் சுமந்த வாழ்வியலை கொண்டிருக்கும்.

அந்தவகையில் கிரிகேரியன் (சூரிய ) கலண்டர் கணிப்பு என்பது குப்ரின் நாகரீகம் அதில் இஸ்லாத்துக்கோ ,முஸ்லீமுக்கோ பங்கில்லை என்பதை முஸ்லீம் உம்மத் உணர வேண்டும் . இன்னும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட அது ஒரு பலம்மிக்க அரசியல் அதிகாரமாக உருவாக வேண்டும் அதன் மூலம் மாத்திரமே முஸ்லீம்களின் இம்மை ,மறுமை வாழ்வு வெற்றி அடையும் என்பதையும் பிறையை அடிப்படையாக கொண்ட சந்திரக்கலண்டரை அந்த ஒரே தலைமையிலான கிலாபா அரசு மாத்திரமே மிக சிறப்பாக அமுல் படுத்தும் என்பதும் தீர்க்க தரிசனமான வரலாற்று உண்மையாகும் .

நன்றி
ஹந்தக் களம்