Showing posts with label இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும். Show all posts
Showing posts with label இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும். Show all posts

Jun 20, 2014

இறையாதிக்கம் (ஹாகிமிய்யத்துல்லாஹி)

2. இறையாதிக்கம் (ஹாகிமிய்யத்துல்லாஹி)

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 4


உலகத்தைப் பற்றிய இக்கருத்துக்களின் அடிப்படையில் யார் உண்மையில் இவ்வுலகின் மீது ஆதிக்கம் செலுத்துகிறானோ அவனே மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்துபவன் என்று குர்ஆன் கூறுகின்றது. கட்டுப்பத்தக்கூடிய, கட்டளையிடக்கூடிய அதிகாரம் அவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

இவ்வுலகத்தில் சிறிய அணு முதற்கொண்டு வானளாவிய விண்வெளி அமைப்புவரை அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தே செயல்படுகின்றன. அதுபோன்ற மனிதனைப் பொறுத்த வரையிலும் அவனுடைய வாழ்க்கையில் அவனால் கட்டுபடுத்த இயலாத பகுதிகள் இறைவன் வகுத்த நியதிகளின் படியே செயல்படுகின்றன. ஆனால் மனிதன் சிந்தித்து முடிவுக்கக்ககுடைய விசயங்களில் தனது ஆளுமையை அல்லாஹ் பலவந்தமாக திணிப்பதில்லை. மாறாக இறைவேதங்களின் வாயிலாக வழிகாட்டுகிரான்!!

அவ்வழிவந்த இறுதிவேதம்தான் திருக்குர்ஆன் . அறிவு பூர்வமாக சிந்தித்து அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளுமாறு, கட்டுப்பாடு நடக்குமாறு குர்ஆன் மனிதனுக்கு அறிவுறுத்துகிறது.

பல்வேறு கோணங்களில் குர்ஆன் இதை விரிவாக வலயுறுத்துகின்றது.


(அ) இவ்வுலகின் ‘ரப்’ தான் மனிதனின் ‘ரப்’ (இரட்சகன்) ஆகவும் உள்ளான். அவனுடைய ‘ரபூபிய்யத்’ தையே ஏற்று நடக்கவேண்டும்:

6:162. நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

6:163. “அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

114:2. (அவனே) மனிதர்களின் அரசன்;

114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.

10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?


Apr 17, 2014

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 3


(ஈ) ஆதிக்க செலுத்தத் தேவையான பண்புகளும், அதிகாரமும் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளன. அப்பண்புகளுக்கு பொருத்தமானவர் உலகில் வேறு ஏவரும் கிடையாது. அவனே அனைவரையும் மிகைத்தவன்; அனைத்தையும் அறிந்தவன்; மாசற்றவன்; குற்றமற்றவன்; அனைவரையும் கண்காணிப்பவன்; அபயம் அளிப்பவன்; உயிருள்ள, உயிரற்ற எல்லாப் பொருட்களும் அவனுக்கு கட்டுப்பாடு உள்ளன; நன்மையும் தீமையும் அவன் கட்டுப்பாட்டில் தாம் உள்ளன; அவனைத் தவிர அல்லது அவன் அனுமதியின்றி யாரும், யாருக்கும் நன்மையயோ, தீமையயோ செய்திட முடியாது.

அவன் அனுமதியின்றி யாரும் அவன் முன்னே சிபாரிசு செய்திட இயலாது. அவன் யாரை நாடுகின்றானோ அவனைப் பிடிப்பான். நாடியவரை விட்டுவிடுவான். அவனை எதிரித்து எங்கும் “அப்பில்” பண்ண முடியாது. அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், அனைவரும் அவனுக்கு கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும். அவன் நினைத்தது நடக்கும். நடப்பதை தடுத்திட யாராலும் முடியாது. ஆதிக்க செலுத்த தேவையான இத்தனை தகுதிகளும் அல்லாஹ்விதம்தான் உள்ளன. இவற்றில் யாரும் அவனுக்கு இணையாக முடியாது.

6:18. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.

59:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

67:1. எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

2:83.ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.

10:65. (நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

48:11“அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்” எனக் கூறும்.

10:107. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.

2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

18:26. “அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.

72:22. கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.

23:88. “எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.

85:13. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.

85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.

5:1. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.

13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

21:23. அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.

18:27. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.

95:8. அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

7:128. நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.

( இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Apr 10, 2014

குர்ஆன் கூறும் அரசியல்



இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 2
குர்ஆன் கூறும் அரசியல்

1. உலகத்தைப் பற்றிய பார்வை

உலகத்தைப் பற்றிய பார்வையை சரியாகப் புரிந்து கொண்டால் தான் குர்ஆன் கூறும் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். அரசியல் நோக்கில் அதைப்பற்றி ஆராயும் போது கீழ்வரும் விசயங்களில் நமக்கு புலபடுகின்றன.

(அ) மனிதனுடைய, இவ்வுலகினுடைய மற்றும் இவ்வுலகில் மனிதன் பண்படுத்தும் அனைத்துப் பொருள்களுடைய, படைப்பாளன் அல்லாஹ் ஆவான்.

6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்;

13:16. (நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.

4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;

2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;

35:3. மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா?

56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?

56:63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

56:64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?

56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?

56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

56:72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

(ஆ) தன்னால் படைக்கப்பட்ட இவ்வனைத்தும் படைப்பினக்களின் சொந்தக்கரன்னும், ஆதிக்கம் செலுத்துபவனும், நிர்வகிப்பவனும் அவனே ஆவான்.

30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

(இ) இவ்வுலகின் மீதான ஆதிக்கம் – ஹாகிமிய்யத் (Sovereignty) அல்லாஹ்வைத் தவிர வேறுயாருக்கும் கிடையாது. அதில் பங்கு கேட்கவோ, பங்கு பெறவோ யாருக்கும் உரிமை கிடையாது

2:107. நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?

25:2. (அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது; அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை;

28:70. மேலும்: அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.

6:57. தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்

18:26. வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.

3:154. “இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?” (என்று, அதற்கு) “நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

30:4. சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

57:5. வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.

16:17. (அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?

13:16. “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”;

35:40. “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?”

35:41. நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.


( இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Apr 9, 2014

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 1


நூல் பெயர் : இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்


ஆசிரியர் : மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்களின் புகழ்பெற்ற நூற்களில் ஒன்றான ‘கிலாஃபத் வ முலூகிய்யத்’ எனும் நூலை தமிழில் ஹிந்துஸ்தான் பதிப்பகம் வெளியிட்டயர்கள்.

இஸ்லாமிய இறையாட்சி - கிலாஃபத் – என்றால் என்ன? எத்தகையதொரு ஆட்சி அமைப்பை இஸ்லாம் உருவாக்க நினைக்கிறது? எதற்காக உருவாக்க நினைக்கிறது? அவ்வமைப்பைக் கொண்டு இவ்வுலகில் என்ன சாதிக்க நினைக்கிறது? என்பன பற்றியெல்லாம் மௌலானா அவர்கள் இந்நூலில் அழகாக வர்ணித்துள்ளார்கள்.

அதுபோன்றே, உண்மையான இஸ்லாமிய இறையாட்சி - கிலாஃபத் எவ்வாறு இருக்க வேண்டும்? எத்தகையதொரு, எடுத்துக்காட்டான கிலாஃபத் ஆட்சியாக ஈமானில் முந்திக்கொண்ட சஹாபாப் பெருந்தகைகளின் ஆட்சி திகழ்ந்து? என்பதனை விளக்குவதோடு மட்டுமல்லாமல், கிலாஃபத், பிற்காலத்தில் எவ்வாறு மன்னராட்சியாக மாறிப்போனது என்பதனையும் மௌலானா விவரித்துள்ளார்கள்.


முன்னுரை

கிலாஃபத்தை பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன? முதலாம் நூற்றாண்டில் எந்தெந்த நியதிகளின் கீழ் அது செயல்பட்டது? என்னென்ன காரணக்களால் அது மன்னராட்சியாக மாறியது? அதனால் ஏற்பட்ட விளைவுகள் யாவை? அவ்விளைவுகளினால் உம்மத்தில் ஏற்பட்ட எதிர்த்தாக்கங்கள் என்னென்ன?

என்பன பற்றியெல்லாம் மௌலானா விவரித்துள்ளார்கள. இன்ஷா அல்லாஹ் இந்த நூலில் உள்ள ஒரு சில பகுதிகளை வரும் நாட்களில் இந்த இணையத்தளத்தில் தரக் இருக்கிறன்.

இஸ்லாமியச் சகோதரன்,

Islamicuprising.blogspot.com

( இன்ஷா அல்லாஹ் தொடரும்…)