Showing posts with label NATO. Show all posts
Showing posts with label NATO. Show all posts

Sep 17, 2013

'மூஜாஹிடீன்கள்' காத்திருக்கின்றனர் !!! சிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை ! (ஒரு பார்வை ) PART 02





சிரிய விவகாரத்தில் மேற்கின் நுழைவுக்குப் பின் இப்போது இன்னொரு 'ரீலும்' பக்குவமாக விடப்படுகிறது . அது ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து விடயங்களை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது . இங்கு ஒரு விடயத்தை நாம் தெளிவாக உணர வேண்டும் . அது இன்று உலகில் தனிப்பெரும் அதிகார அந்தஸ்தில் இருப்பது முதலாளித்துவம் மட்டுமே ஆகும் .அந்த வகையில் ரஷ்யாவோ , சீனாவோ சித்தாந்த எதிர்நிலை என்ற நிலையை பறிகொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது .

எனவே புதிய சந்தை பிடிப்பு ,வளக்கொல்லை தொடர்பான போட்டி அரசியல் மட்டுமே இன்று இவைகளுக்கு மத்தியில் இருக்கின்றது . அதிலும் ரஷ்யா தனது MIC 29 ரக அதிவேக தாக்குதல் விமானங்களை கூட உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் தேடும் அளவுக்கு பஞ்சத்தில் அடிபட்டுள்ளது என்பதை நாம் சொன்னால் சிலருக்கு ஒரு 'ஜோக்' போல இருக்கும் . ஆனால் அதுதான் உண்மையாகும் .

ஆனால் இந்த போட்டி ஏகாதிபத்திய வாதிகளுக்கு இடையில் சிரிய விவகாரத்தில் கூட்டு என்பது ஏன் ?அதாவது ஒட்டு மொத்தமாக U .N ,NATO ,ரஷ்யா என உலகச் சண்டியர்கள் இணைவது ஏன் ? அதன் ஒரே காரணம் தமது கேவலமான சுரண்டல் பிழைப்பு மீது ஒட்டு மொத்தமாக ஒரு பயங்கர அடி விழப்போகிறது என்ற அச்சமே ஆகும் . இந்த அச்சத்தின் காரணம் உணர சிரியப் போராளிகள் தரப்பில் இருந்து வந்துள்ள கூட்டு அறிக்கையின் சுருக்கத்தை கீழே தருகிறோம் .

"சிரியாவில் பெரும்பகுதி தற்போது எமது கட்டுப்பாட்டிலேயே உள்ளது . இன்னும் குறிப்பிட்ட சில சதுர கிலோமீட்டர்களே பசர் அல் அசாத் வசம் இருக்கின்றது . மற்றும் இந்த NATO ,U .N , தலையீடானது எமது எதிர்கால இஸ்லாமிய அரசிற்கான அடித்தளத்தை அழித்து 'திமோகிரசி' எனும் குப்ரிய தேசிய அரசியலை சிரியாவில் புகுத்துவதற்கான நடவடிக்கையே ஆகும் . அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் .

மேலும் சிரியாவின் அணைத்து தரைமார்க்கப் பாதைகளும் எமது பூரண கட்டுப்பாட்டிலேயே உள்ளது .சிரிய மக்களும் எம்மோடு இருக்கிறார்கள் . பசர் அல் அசாதோ , அமெரிக்காவோ ,ரஷ்யாவோ , NATO வோ , ஐநாவோ எவர்களாக இருந்தாலும் எமது பார்வையில் ஒரே தரத்தை உடையவர்கள் . இஸ்லாத்தை நிலைநாட்டும் பணியில் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் நாம் எதையும் சந்திக்க தயாராகவே உள்ளோம் ! அல்லாஹ் எங்களோடு இருக்கின்றான் ". என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது .

எனவே எம்மால் கணிக்கக் கூடிய விடயம் என்னவென்றால் , முதலாளித்துவம் தனது சித்தாந்த ஆதிக்கத்தின் அழிவுப்புள்ளியை தெளிவாகவே சிரியாவில் இனம் கண்டுள்ளது . அந்தப் பதற்றம் அடிவயிற்றை கலக்க U .N ,NATO ,ரஷ்ய கூட்டு என சகல இராஜதந்திர , இராணுவ சைணியங்களையும் களமிறக்கி ஏதாவது ஒன்றை செய்யப் பார்க்கிறது .

அத்தோடு இஸ்லாம் சுற்றிச் சுழன்று தனது பூர்வீக நிலப்பரப்பின் மீது இருந்தே தனது மீள் மேலாதிக்க வரலாற்றை தொடரப் போகிறது ! என்ற அச்சம் இன்று யகூதி ,நசாராக்களுக்கு மட்டுமல்ல ,குறுநில குபேரர்களாய் சுக போகத்தில் திளைக்கும் அராபிய மன்னர்களுக்கும் ஏற்பட்டுள்ளது .பல பில்லியன்களை வீசி முஸ்லீம்களின் இரத்தத்தை அவர்கள் பருகும் PEPSI போல குடித்தாவது இந்த நெருக்கடியில் இருந்து தப்ப சிலுவை நிழலில் தஞ்சம் புகுந்துள்ளனர் .

இன்று இருக்கும் நிலையில் NATO விற்கு ஒரு உள்ளார்ந்த உதவித்தளம் ,மற்றும் சப்போர்ட் படைகள் அங்கு அவசியமாகும். அந்தப் பணியை பசர் அல் அசாதே செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை .ஈரானின் 'ஹிஸ்புஸ் சைத்தான்கள் ' தாம் அவர்களோடு உள்ளார்களே ! இருந்தாலும் மற்றக் களங்கள் போல் அல்லாமல் NATO தனது தரைப்படை அனுப்பும் நிலை வந்தால் .... அந்தப் படை பட்டப் பகலில் கூட 'நைட் விசனோடு' தான். செல்லவேண்டி இருக்கும். காரணம் தமது எதிர்காலம் தொடர்பில் ஒரு இருண்ட சூனியத்தில் தான் இறக்கி விடப்பட்டிருப்பார்.

சிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை ! (ஒரு பார்வை )




சிரிய விவகாரத்தில் U .N தனது அறிக்கையை இப்போது வெளியிட்டுள்ளது .அதன்படி சிரியாவில் நிகழ்ந்துள்ள யுத்தக் குற்றங்களில் பசர் அல் அசாத் தரப்பு மற்றும் சிரியப் போராளிகள் தரப்பு ஆகிய இருபக்கமும் குற்றமிழைத்துள்ளது என்றும் ,சிவிலியன்கள் படுகொலை விவகாரத்தில் இரு தரப்பும் தாராளமாக ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது .

அதே நேரம் பசர் அல் அசாத் இரசாயன மற்றும் அழிவுதரும் ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பில் NATO வின் நிபந்தனைகளுக்கு தாம் கட்டுப்படுவதை உறுதிப்படுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்வந்துள்ளார் .

இந்த வகையில் U .N அறிக்கையானது சிரிய விகாரத்தில் மேற்குலகு தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது .அதாவது பசர் அல் அசாத்தோடு விடயங்கள் முடியப் போவதில்லை ! அது ஒரு உப்புச் சப்பற்ற தொடக்கம் மட்டுமே என்பதையும் ,தாம் உண்மையிலேயே எதிர்பார்க்கும் எதிரியை நோக்கி விடும் யுத்தப் பிரகடனமாகவும் விடயத்தை கருத முடியும் .

இந்த U .N (ஐக்கிய நாடுகள் சபை ) என்பது எப்படியான நிறுவனம் என நாம் முன்னர் ஒரு பதிவில் தெளிவாக விளக்கியுள்ளோம் . அதனால் இப்போது சுருக்கமாக விடயத்தை பார்த்தால் இப்படிக் கூறலாம் . மகாபாரத இதிகாசத்தில் பஞ்சபாண்டவர்களின் மனைவி திரெளபதி பற்றி அறிவீர்களா ? அதாவது ஐந்து கணவன் மாருக்கு ஒரு மனைவி போல அதை விட' அட்வான்சாக ' இன்று ஏகாதிபத்தியங்களின் மனைவியாகவும் அதே நேரத்தில் இஸ்ரேலின் வைப்பாட்டியாகவும் தொழிற்படும் அமைப்பே இந்த U .N ஆகும் .

'வீட்டோ ' என்ற 'சுப்பர் பவர்' சர்வாதிகாரத்தில் அடிக்கடி சோரம் போனாலும் அறிக்கை விடுவதில் மட்டும் ஒரு சுத்தமான கற்புக்கரசி ! நீதிக்காக ,நியாயத்துக்காக இந்த அமைப்பு சாதித்தது என்பதை விட ஏகாதிபத்தியங்களுக்கு இலாபங்களை நிறையவே சம்பாதித்து கொடுத்துள்ளது . அவர்களின் அரசியல் ,பொருளாதார ,இராணுவ நிர்ணய செயற்பாடுகளுக்கு இந்த U .N நிறையவே தோள் கொடுத்துள்ளது .

அதுவும் குறிப்பாக முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுடன் நெருக்கமும் விசுவாசமும் அதிகம் .ஜெனீவா இதன் வசிப்பிடமாக இருப்பதால் புகுந்த வீட்டு கலாசாரத்தை பின்பற்றி தன் கணவர்மார்களின் நிகழ்கால ,எதிர்கால 'அக்சன் பிளான்களை ' அறிக்கையாக வெளியிட்டு விடுவதில் இந்த U .N ஒரு PERFECT ஆன பொண்டாட்டி .

அந்த வகையில் மேற்குலகு சிரிய விவகாரத்தில் எத்தகு நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது !? என்பது தொடர்பில் இந்த U .N அறிக்கை ஒரு தெளிவான முன்னறிவிப்பை செய்துள்ளது என்று தான் எம்மால் கருத முடிகிறது . அந்த இலக்கு சிரியப் போராளிகள் தாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . சரி இனி இதுவிடயத்தில் சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர் ? இன்ஷா அல்லாஹ் மறுபதிவில் தருகிறேன்.