Showing posts with label இஸ்லாமிய ஆட்சி. Show all posts
Showing posts with label இஸ்லாமிய ஆட்சி. Show all posts

Jul 19, 2016

இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா..??



இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா, அதாவது சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் (தாலிபானிற்கு கீழ்) போன்ற நாடுகளில்?


ல்லை
, தற்போதய முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தின் சில பகுதிகளை மட்டுமே நடைமுறை படுத்தி வருகின்றன: அதிகப்படியாக அவை குடும்பவியல் சட்டங்களின் சில பகுதிகளை உபயோகித்து வருகின்றன, ஆனால் எந்தவொரு நாடும் முழுமையாக தன் சட்டங்களையும் கொள்கைகளையும் இஸ்லாமிய அடிப்படையில் பிரித்தியேகமாக அமைத்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில், இஸ்லாமிய சட்டத்தை குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் அல்லது இஸ்லாமிய உணர்வுகள் மீது தான் அக்கறை கொண்டுள்ளதாக அடையாள படுத்துவதற்காக மட்டுமே உபயோகித்து வருகிறது, ஹுதூத்(தண்டனை) சட்டத்திலும் இதே நிலை தான். இது தான் தகுதியற்ற ஊழலுற்ற அரசாங்கங்கள் மற்றும் அவைகளின் மேற்கத்திய எஜமானர்கள் மற்றும் ஊடகங்கள் இஸ்லாமிய சட்டம் செயலற்று இருப்பதாகவும் மேலும் அதனால் சமூகத்தை நிர்வகிக்க முடியாது என்று சித்தரிப்பதற்காக செயல்படுத்தும் திட்டமாகும்.3

பல லட்சக்கணக்கான திருக்குர்’ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்களை அன்பளிப்பாக வழங்கலாம் மற்றும் உலகெங்கும் பள்ளிவாயில்கள் நிர்மானிக்க அதிகப்படியான நிதிகளை சவூதி அரேபியா அன்பளிக்காக வழங்கலாம், எவ்வாறிருப்பினும் சில இஸ்லாமிய அடிப்படைகளை கொண்ட சட்டங்கள் மற்றும் சில மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களையும் கொண்டு சவூதி அரேபியா ஒரு கலப்படமான சட்டங்களையே பின்பற்றி வருகின்றது. எனினும் இஸ்லாமிய கண்ணோட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அவைகளை அது சட்டங்கள் என குறிப்பிடுவதில்லை. இஸ்லாமிய சட்டங்களையும் மனிதன் இயற்றிய சட்டங்களையும் வேறுபடுத்தி காட்ட சவூதி பிரத்தியேகமாக குறிப்பிட்ட சில வார்த்தைகளை உபயோகிக்கின்றது. அரசியலமைப்பு சம்மந்தமான ஒரு அரபி நூலில் அதன் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், “சவூதியில் விதி(ஆனூன்) மற்றும் சட்டம்(தஷ்ரீ’) போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய ஷரீஆவிலுருந்து எடுக்கப்பட்டவைகளை குறிப்பிடுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது…4 மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களை பொறுத்தவரை அதாவது அமைப்புகள் (அந்திமா) அல்லது வழிமுளைகள (த’லீமாத்) அல்லது பிரகடனங்கள் (அவாமிர்)……. இது தவிர ஒரு பரம்பரை முடியாட்சியான சவூதி அரேபியா மார்க்க நிறுவனங்களை முதலாளித்துவ மற்றும் மேற்கத்திய உலகிற்கு ஆதரவான திட்டங்களுக்கான எதிர்ப்புகளை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக உபயோகித்து வருகிறது.

இதை போன்று தாலீபானும் இஸ்லாத்தின் சில அம்சங்களை நடைமுறை படுத்தி வந்தது. ஆப்கானிஸ்தானை தாலீபான்கள் ஆண்ட போது அவர்கள் ஒருபோதும் தாங்கள் இஸ்லாமிய அரசாங்க முறையான கிலாஃபத் முறையை பின்பற்றுகிறோம் என்று கூறியதில்லை, மாறாக தங்களை ஒரு அமீரகமாகவே அடையாள படுத்தியது அது வெளியுறவு கொள்கை அற்ற ஒரு சில சட்ட வறையறைகளை கொண்டு ஒரு எல்லைக்குள் மட்டுமே செயற்படும் ஒரு அரசியல் நிறுவனமாக தான் செயல்பட்டது. இஸ்லாமிய ஆட்சியமைப்பானது பொருளாதாரம், சமூகவியல், ஆட்சிமுறையாக இருக்கட்டும் மேலும் வெளியுறவு கொள்கை அமைத்து கொள்வது ஆகட்டும் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் நடைமுறை படுத்தக்கூடியதாக இருக்கும், கிலாஃபத்தானது ஒரு தனித்து விடுபடக்கூடிய நாடு கிடையாது.

ஈரானிய அரசியலமைப்பு பல அம்சங்கள் இஸ்லாத்தோடு ஒத்து போகக்கூடிய வகையில் இருக்கின்றன அதேபோல மற்றவைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிராக உள்ளது. ஈரானிய அரசியல் சாசனத்தின் விதி 6 இவ்வாறு கூறுகின்றது: “ஈரானின் இஸ்லாமிய குடியரசு, நாட்டின் விவகாரங்களை ஜனாதிபதி, இஸ்லாமிய கலந்தாய்வு சபை உறுப்பினர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் போன்றவர்களை தேர்தல்கள் நடத்தி தேர்த்தெடுப்பது உட்பட பொதுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் நாட்டின் விவகாரங்களை மேற்கொள்ள வேண்டும், அல்லது பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அதன் சில விவகாரங்களில் அரசியல் சாசனத்தின் இதர விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை தழுவி மேற்கொள்ள வேண்டும்.” இஸ்லாமிய அமைப்பை கொண்ட அரசியலமைப்பு – அதாவது கிலாஃபத்தானது முழுமையாக இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாகும். ஈரானின் விஷயத்தில் இது பொருந்தாது ஏனெனில் அது தனது அரசியலமைப்பில் ” நாட்டின் விவகாரங்களை தேர்தல்கள் மூலம் வெகுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவதாக” அறிவிக்கிறது”. இஸ்லாத்தை பொறுத்தவரை நாட்டின் விவகாரங்கள் வெகுஜன கருத்தின் அடிப்படையில் அல்லாமல் ஷரீ’ஆவின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

Sources: sindhanai.org

Dec 1, 2015

அரசு பற்றிய இஸ்லாத்தின் கருத்தாக்கம்– பாகம் – 2

இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான் என்பதால், இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஆட்சியாளர்கள் முழுமையான முறையிலும் எவ்வாறு அருளப்பட்டுள்ளதோ அதேமுறையிலும் நடைமுறைப்படுத்தவேண்டியது கட்டாயமாகும். ஏனெனில்
 
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
 
وَمَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
 
அல்லாஹ்வின்தூதர்எவற்றைகொண்டுவந்துள்ளாரோஅவற்றைஎடுத்துக்கொள்ளுங்கள், அவர்எவற்றைவிட்டும்உங்களைதடுக்கிறாரோஅவற்றைவிட்டும்தவிர்ந்துகொள்ளுங்கள்இன்னும்அல்லாஹ்வைஅஞ்சிஹக்கொள்ளுங்கள், நிச்சயமாகஅல்லாஹ்தண்டனைஅளிப்பதில்கடுமையானவனாகஇருக்கிறான்ஹ   (அல்ஹஷ்ர் : 7)
 
இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘مَا’ என்ற அரபி வார்த்தை பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே நபி(ஸல்) ஏவியுள்ள அனைத்து கட்டளைகளையும் ஏற்று செயல்படுத்தவேண்டும் என்பதும் அவர்கள்(ஸல்) தடைசெய்துள்ள அனைத்திலிருந்தும் விலகிக் கொள்ளவேண்டும் என்பதும் கட்டாயமாகும்(வாஜிபாகும்). இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ஏவல் மற்றும் விலக்கல் தொடர்பான வேண்டுகோள் திட்டவட்டமான கட்டளையாக உள்ளது ஏனெனில், இந்த வசனத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்று செயல்படாதவர்களுக்கும் அவர்கள் (ஸல்) தடைசெய்துள்ள விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு’ என்ற சொற்றொடர் இந்த கட்டளை திட்டவட்டமானது என்பதற்குரிய கரீனாவாக விளங்குகிறது.
 
மேலும் அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு தீர்ப்பளிக்கவேண்டும் என்று தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அவன்(சுபு) கட்டளையிட்டுள்ளான்,
 
‎‎‎وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ
  ‎‎‎‎        ‎‎‎‎‎‎        ‎‎‎  
 
அன்றியும்அல்லாஹ்அருளியவற்றைகொண்டுஅவர்கள்மத்தியில்தீர்ப்பளிப்பீராக (அல்மாயிதா : 49)
 
அல்லாஹ்(சுபு) அருளியுள்ளவை ஏவல்கள் என்றாலும் விலக்கல்கள் என்றாலும் அவை தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் மட்டுமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற இந்த கட்டளை அல்லாஹ்(சுபு) அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுக்கு பின்னர் வருகின்ற அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் அளிக்கப்பட்ட திட்டவட்டமான கட்டளையாக உள்ளது, ஏனெனில் ‘مَا’ என்ற இந்த வார்த்தை பொதுவான அர்த்தம் கொண்டது என்பதால் அதில் அல்லாஹ்(சுபு) அருளிய அனைத்து சட்டங்களும் அடங்கும்.
 
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களுக்கு பின்னர் ஆட்சியதிகாரத்தை பெற்றுள்ள அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களும் மக்களின் மனஇச்சைகளை பின்பற்று வதிலிருந்தும் அவர்களுடைய அபிலாஷைகளுக்கு கட்டுப்படுவதிலிருந்தும் தடைசெய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ
 
அவர்களுடையமனஇச்சைகளைநீர்பின்பற்றாதிருப்பீராகஅல்லாஹ்அருளியசிலவற்றிலிருந்துஉம்மைதிருப்பிவிடாதவகையில்அவர்களிடம்ஹஎச்சரிக்கையுடன்இருந்துகொள்வீராக!   (அல்மாயிதா : 49)
 
அல்லாஹ்(சுபு) அருளியவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தும்போது மக்களின் களங்கமுற்ற கருத்தாக்கங்களுக்கு ஏற்ப நடந்துகொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களையும் அவர்களுக்கு பின்னர் வரும் முஸ்லிம் ஆட்சியாளர்களையும் அல்லாஹ்(சுபு) எச்சரிக்கை செய்கிறான். அல்லாஹ்(சுபு) அருளியவற்றுக்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது கூடும் என்றோ அல்லது அல்லாஹ்(சுபு) அருளியவை சட்டரீதியானதல்ல என்றோ ஒருவர் கருதினால் அவர் நிச்சயமாக காஃபிர் என்று அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்!
 
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
 
எவர்கள்அல்லாஹ்அருளியவற்றைகொண்டுதீர்ப்பளிக்கவில்லையோநிச்சயமாகஅவர்கள்காஃபிர்கள்ஆவார்கள் (அல்மாயிதா : 44)
 
அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது கூடும்  என்று நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நிய மானவற்றை கொண்டு ஆட்சி செய்தால் அவர் ஃபாஸிக் (வெளிப்படையாக பாவம் செய்பவர்) என்றும் ழாளிம் (அநீதம் இழைப்பபவர்) என்றும் அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்.
 
இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை முழுமையாகவும் விரிவாகவும் ஒரே சமயத்திலும் மேற்கொள்ளவேண்டுமே ஒழிய படிப்படியாக மேற்கொள்ளக்கூடாது ஏனெனில் படிப்படியான நடைமுறைப்படுத்துதல் என்பது இஸ்லாமிய சட்டங்களுக்கு வெளிப்படையான முறையில் முரண்பாடாக இருக்கிறது. இஸ்லாமிய சட்டங்களின் சட்டரீதியான மதிப்பில் நம்பிக்கை கொள்ளாத நிலையில் அல்லது இஸ்லாமிய சட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றின் சட்டரீதியான மதிப்பில் நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ்(சுபு) அருளிய அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அல்லது சில சட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு மற்ற சில சட்டங்களை புறக்கணித்துவிட்டார் என்றால் அவர் காஃபிர் என்றே கருதப்படுவார். இஸ்லாத்தின் சட்டங்களில் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் அவற்றை ஒருவர் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அவர் பாவியாகவும் மாறு செய்தவராகவும் கருதப்படுவார்.
 
எனவே ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம்காட்டவும் கூடாது, சட்டங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தவும் கூடாது, ஏனெனில் குறிப்பிட்ட ஒரு வாஜிபிற்கும் மற்றொரு வாஜிபிற்கும் இடையிலும், குறிப்பிட்ட ஒரு விலக்கலுக்கும் மற்றொரு விலக்கலுக்கும் இடையிலும், குறிப்பிட்ட ஒரு சட்டத்திற்கும் மற்றொரு சட்டத்திற்கும் இடையிலும் எத்தகைய வேறுபாடுகளும் கிடையாது! அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் அனைத்தும் சமமானவையாகும், எத்தகைய தாமதமோ அல்லது தள்ளிப்போடுதலோ அல்லது படிப்படியான நடைமுறைப்படுத்துதலோ எதுவுமின்றி அவையனைத்தையும் ஒரேநேரத்தில் முழுமையாகவும் விரிவாகவும் உடனடியாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும், இதற்கு மாறுபாடான முறையில் செயல்படுபவர் கீழ்க்கண்ட அல்லாஹ்(சுபு)வின் வார்த்தையின் அடிப்படையில் தண்டனைக்குரியவராகவே கருதப்படுவார்!
 
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ‎‎‎‎
 
ஆகவேவேதத்தில்சிலவற்றில்ஈமான்கொண்டுசிலவற்றைநீங்கள்நிராகரிக்கிறீர்களா! இவ்வாறுசெய்பவர்களுக்குஇம்மையில்இழிவைதவிரவேறொன்றுமில்லை. அன்றியும்மறுமையிலோகொடியவேதனையின்பால்அவர்கள்திருப்பப்படுவார்கள்! நிச்சயமாகநீங்கள்செய்பவைகுறித்துஅல்லாஹ்பாராமுகமாகஇல்லை (அல்பகரா : 85)
 
ஆகவே இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலில்லை அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சூழல் ஏற்படவில்லை அல்லது ஷரீஆவை நடை முறைப்படுத்துவதற்கு உலகமக்களின் வெகுஜனக்கருத்து எதிராக உள்ளது அல்லது இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் அனுமதிக்காது அல்லது இது போன்ற அற்பமான மதிப்பற்ற சாக்குப்போக்குகள் அடிப்படையில் இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இஸ்லாமிய அரசு மனிதர்களை கொண்டுள்ள அரசாக உள்ளதே ஒழிய (தெய்வீகம் பொருந்திய) புனிதமான அரசல்ல; அதை நடத்திச்செல்லும் கலீஃபா அல்லது இமாம் மனிதராக இருக்கிறார் என்பதால் அவர் புனிதமானவராகவோ அல்லது மாசற்றவராகவோ (மஃஸும்) இருப்பதற்கு சாத்தியமில்லை. அவரை உம்மா நியமனம் செய்கிறதே ஒழிய அல்லாஹ் (சுபு) நியமனம் செய்வதில்லை ஏனெனில் ஆட்சியதிகாரத்தை அவன்(சுபு) உம்மாவுக்கு அளித்திருக்கிறான், எனவே உம்மாவின் சார்பில் கலீஃபா ஆட்சிசெய்யும் பொருட்டு பைஆ மூலமாக அவரை நியமனம் செய்யும் அதிகாரத்தை அல்லாஹ்(சுபு) உம்மாவிற்கேஹ அளித்து உள்ளான். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்(ரளி) அறிவித்திருப்பதாவது : நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன், ‘கைகளால் கைலாகு அளிப்பதின் மூலமும் இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதின் மூலமும் எவரேனும் ஒருவர் ஓர் இமாமுக்கு பைஆ அளித்தால் பிறகு இயன்றவரையில் அவர் அவருக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும்’ அப்துல்லாஹ் இப்னு உமர்(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிற்றுள்ளேன், ‘எவரேனும் தமது கழுத்தில் கலீஃபாவின் பைஆ இல்லாத நிலையில் மரண மடைந்தால் பிறகு அவருடைய மரணம் ஜாஹிலிய்யா (அறியாமை காலத்து) மரணமாகும்’ உம்மாவின் சார்பாக கலீஃபா ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார், எனவே கலீஃபா பதவிக்கு நியமிக்கப்படும் நபரிடம் அவருக்குரிய ஆட்சியதிகாரம் தொடர்பான சட்டரீதியான அதிகாரங்களை அளிக்கவேண்டியது கட்டாயமாகும், தனது அபிப்ராயத்தின் அடிப்படையில் செயலாக்க அமைப்புகள், சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கு அவருக்கு உரிமையுண்டு. கலீஃபா பதவியை ஏற்றுக்கொள்ளும் நபர் மனிதராகவே இருக்கிறார், எனவே அவர் தவறிழைப்பதற்கும் ஞாபகமறதிக்கு உட்படுவதற்கும் பொய்யுரைப்பதற்கும் துரேகம் இழைப்பதற்கும் அல்லது மக்களுக்கு எதிராக கலகம் செய்வதற்கும் சாத்தியம் இருக்கிறது, அவர் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக இல்லை ஏனெனில் மாசற்ற நிலை என்பது முற்றிலும் நபிமார்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் மட்டுமே உரியதாகும்.
 
கலீஃபாவாக இருக்கும் இமாம் தவறு செய்யக்கூடும் என்றும் அவர் அநீதம் இழைப் பராகவோ அல்லது பாவம் செய்பவராகவோ இருக்கக்கூடும் என்றும் அதன்காரணமாக மக்கள் அவரை வெறுக்கவும் சபிக்கவும் கூடும் என்றும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நமக்கு அறிவித்து கொடுத்துள்ளார்கள். மேலும் கலீஃபா வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற் கொள்ளக்கூடும் என்பதையும் அவர்கள்(ஸல்) நமக்கு அறிவித்துள்ளார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் இமாம் அல்லது கலீஃபா மாசற்ற நிலையில் தூய்மையானவராக இருக்கிறார் என்பதுடன் முரண்படுகின்றன என்பதோடு அவர் பாவம் செய்வதிலிருந்து பரிசுத்தமானவராக இருக்கிறார் என்பதையும் மறுக்கின்றன. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது ‘அறிந்துகொள்ளுங்கள்! இமாம் என்பவர் கேடமாகும், அவருக்கு பின்னால் நின்று மக்கள் போரிடுவார்கள், அவரை கொண்டே தங்களை பாதுகாத்து கொள்வார்கள்’ நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஃப் இப்னு மாலிக்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் பதிவு செய்யப் பட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது : ‘உங்களுடைய இமாம்களில் சிறந்தவர் யார் எனில் நீங்கள் அவரை நேசிப்பீர்கள் அவரும் உங்களை நேசிப்பார்; நீங்கள் அவருக்காக துஆ செய்வீர்கள் அவரும் உங்களுக்காக துஆ செய்வார். உங்களுடைய இமாம்களில் மோசமானவர் யார் எனில் நீங்கள் அவரை வெறுப்பீர்கள் அவரும் உங்களை வெறுப்பார்; நீங்கள் அவரை சபிப்பீர்கள் அவரும் உங்களை சபிப்பார்’ உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்ததாக புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : ‘நபி(ஸல்) அவர்கள் எங்களை (பைஆ செய்வதற்கு) அழைத்தார்கள் எனவே நாங்கள் அவர்களிடம் பைஆ செய்தோம். ‘இன்பத்திலும் துன்பத்திலும் இலகுவிலும் கஷ்டத்திலும் நாங்கள் முழுமையாக கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரத்தை பெற்றுள்ளவர்களுடன் சர்ச்சை செய்ய மாட்டோம் என்றும் ‘அல்லாஹ்(சுபு)விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குஃப்ரை கண்டால் ஒழியஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  பைஆ செய்தோம்’ இமாம் அல்லது கலீஃபா தவறு செய்யக்கூடும் என்பதற்கும் பாவம் செய்யக்கூடும் என்பதற்கும் இந்த ஹதீஸ்கள் தெளிவான ஆதாரங்களாக விளங்குகின்றன என்ற முறையில் இமாம் அல்லது கலீஃபா மாசற்றவராக (infallible) இல்லை என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன.
 
ஆகவே முஸ்லிம்கள் ஆட்சியாளரை தட்டிக்கேட்கவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) ஹகட்டளையிட்டுள்ளான் என்பதால் இது அவர்களுடைய உரிமையாக இருக்கிறது ஏனெனில் ஆட்சியாளர் ஆட்சியதிகாரத்தில் மக்களின் பிரதிநிதியாகவும் அதிகாரம் பெற்றவராகவும் இருந்தபோதும், மக்கள் அவரை பதவியில் அமர்த்துகிறார்கள் என்றபோதும் அவர் தவறு செய்யக்கூடும் என்பதாலும் பாவம் செய்பவராகவும் குஃப்ர் செயல்பாடுகளை மேற்கொள்ப வராகவும் இருக்கக்கூடும் என்பதாலும் அவர் புனிதமானவராக இருப்பதற்கோ அல்லது பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக இருப்பதற்கோ சாத்தியமில்லை.
 
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
‎‎‎وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ    ‎‎  ‎‎                    
 
(ஈமான்கொண்டவர்களே!)
உங்களிலிருந்துஒருகூட்டத்தினர்சிறந்தவற்றின்பால்அழைப்பவர்களாகவும்நன்மையைஏவிதீமையைதடுப்பவர்களாகவும்இருக்கவேண்டும், நிச்சயமாகஅவர்கள்தான்வெற்றியாளர்கள்  (ஆலஇம்ரான் : 104)
 சிறந்த ஜிஹாது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, ‘கொடுங்கோல்ஆட்சியாளரிடம்சத்தியத்தைஉரைப்பதுதான்சிறந்தஜிஹாதாகும்!’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள்(ஸல்) கூறியதாவது, ‘ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிபும்(ரளி) கொடுங்கோல் இமாம் முன்பாக நின்றுகொண்டு நன்மையை ஏவி தீமையை தடுத்து அதன்காரணமாக கொலை செய்யப்பட்ட மனிதரும் ஷுஹாதாவின் தலைவர் ஆவார்கள்’ அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரளி) அறிவித்து ஸுனன் அபூதாவூதில் பதிவுசெய்யப்பட்ட ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘அல்லாஹ்வின்மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கவேண்டும். அன்றியும் அநீதம் இழைப்பவரின் கைகளை நீங்கள் தடுத்து நிறுத்தவேண்டும்; (தீமை செய்வதிலிருந்து) அவரை தடுத்து சத்தியத்தின்பால் செலுத்தவேண்டும்’ இப்னு மஸ்வூது(ரளி) அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பதாவது : ‘இல்லாவிடில் (பரஸ்ப்பர) பகைமையை கொண்டு அல்லாஹ் உங்களுடைய இதயங்களில் அடிப்பான்; அவர்களை சபித்ததுபோல் உங்களையும் சபிப்பான்!’
 
சில தருணங்களில் நாவைக்கொண்டு ஆட்சியாளர்களை தடுப்பதற்கு அப்பாற்பட்டு ஆயுத போராட்டம் மேற்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிட்டுள்ளது, கலீஃபா வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் பின்வரும் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது போல் அவருக்கு எதிராக ஆயுதமேந்தி போர் செய்யவேண்டும் என்று அது நமக்கு கட்டளையிட்டுள்ளது, உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்திருப்பதாவது : அல்லாஹ்விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குஃப்ரை அவர் மேற்கொள்ளாத வரையில் அதிகாரம் பெற்றுள்ளவர்களிடம் நாங்கள் சர்ச்சை செய்யமாட்டோம் (என்று பைஆ செய்தோம்)’
 
முஸ்லிம் சகோதரர்களே!
 
இதுதான் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து நிறுவவேண்டும் என்று அல்லாஹ் (சுபு) கட்டளையிட்டுள்ள இஸ்லாமிய அரசாகும்! நபித்துவத்தின் அடிச்சுவட்டின்மீது ‘கிலாஃபா ராஷிதாவை’ நிறுவும் பொருட்டும், ‘அதன்பின்னர் நபித்துவத்தின் வழிமுறையில் மீண்டும் கிலாஃபா ராஷிதா ஏற்படும்’ என்ற அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் நற்செய்தியை உண்மைப்படுத்தும் பொருட்டும் எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்!

Nov 21, 2015

அரசு பற்றிய இஸ்லாத்தின் கருத்தாக்கம்– பாகம் – 1

அத்தவ்லா என்ற அரபி வார்த்தைக்கு மொழியியல் ரீதியாக கலப - மிகைத்துவிடுதல்’ என்று பொருளாகும். காலத்தின் மாறுதலை சுட்டிக்காட்டுவதற்கு இந்த வார்த்தையை பயன் படுத்துவதும் வழக்கத்தில் இருந்தது. ‘நாட்கள் மாற்றப்பட்டுள்ளன அல்லது சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன’ என்று மொழியியல் ரீதியாக கூறப்படுகிறது, இதற்கு நாட்கள் மாற்றமடைந்து விட்டன அல்லது அல்லாஹ்(சுபு) மக்களுக்கு மத்தியில் அவற்றை மாற்றுகிறான் போன்ற அர்த்தங்கள் உள்ளன.
 
 
கருத்தாக்கங்களில் (concepts) ஏற்படும் மாற்றங்கள், காலத்தால் ஏற்படும் மாற்றங்கள், மக்களுக்கு மத்தியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசுகள் மாற்றம் அடைகின்றன. ‘அரசு என்ற மொழிவழக்கு ரீதியான வார்த்தை குறிப்பிட்ட நிலப் பரப்பில் வாழும் மக்கள் கூட்டத்தின் மீது ஏவல் மற்றும் விலக்கல் தொடர்பான ஆணைகளை பிறப்பிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ள அமைப்பை குறிப்பிடுகிறது. எனினும் சமுதாயங்களின் எதார்த்த நிலையை பொருத்தும் அவர்களின் கண்ணோட்டங்களை பொருத்தும் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாக ‘அரசு’ தொடர்பான வரையறைகள் மாறுபடுகின்றன.
 
 
 உதாரணமாக மேற்கத்திய மக்கள் அரசின் எதார்த்தநிலை குறித்தும் அரசு அமல்படுத்தும் சட்டங்கள் குறித்தும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டிருக்கிறார்கள். வரலாற்றின் மத்தியகால கட்டத்தில் நிகழ்ந்ததை போன்று அரசின் எதார்த்தநிலை மதச்சார்பு கொண்ட தாகவோ அல்லது சர்வாதிகாரத்தை கொண்டதாகவோ அல்லது ஜனநாயக முறையை கொண்டதாகவோ இருக்கலாம். எனினும் அரசு அதன் நிலப்பரப்பிலும் அதன் மக்கள் கூட்டத்திலும் அதன் ஆட்சியாளரிலும் எதிரொலிக்கிறது என்பதை பொருத்தும், இம்மூன்று அம்சங்களும் அரசின் அடித்தளமாக விளங்குகின்றன என்பதை பொருத்தும் மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தார்கள். மேற்கத்திய மக்களை பொருத்தவரை, அரசு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்படுகிறது என்றும் அதில் குறிப்பிட்ட மக்கள் கூட்டம் நிரந்தரமாக வசித்துவருகிறது என்றும் ஆட்சியதிகாரம் பெற்ற ஆட்சியாளர் ஒருவர் அவர்களுக்கு தலைமையேற்று வழிநடத்துகிறார் என்றும் கருதுகிறார்கள்.
 
 
இஸ்லாமிய அரசை பொருத்தவரை அது ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்யும் அரசியல் மையமாகவும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பாகவும் விளங்குகிறது. வேறுவகையில் கூறினால், அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் மற்றும் இஸ்லாத்தின் செய்தியை உலக முழுவதற்கும் எடுத்துச்செல்லுதல் ஆகிய பணிகளை நிறைவேற்றுகின்ற அரசாக கிலாஃபா விளங்குகிறது, ஏனெனில் இஸ்லாமிய நிலப்பரப்புகளில் ஷரீஆ சட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கும், இஸ்லாம் முழு உலகிற்கும் ஒளியாகவும் நேர்வழி காட்டுகின்ற மகத்தான செய்தியாகவும் விளங்குகிறது என்பதால் அதை தஃவா மூலமாகவும் ஜிஹாது மூலமாகவும் எடுத்துச்செல்வதற்கும், உரிய வழிமுறையாக (தரீக்கா) இஸ்லாமிய அரசு திகழவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்.
 
 
இஸ்லாமிய அரசு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்பட்டிருந்தபோதும், தன்னுடைய குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்தற்குரிய பொறுப்பை சுமந்து கொண்டிருந்த போதும், அதன் நிலப்பரப்பின் அளவையோ அல்லது அதன் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையையோ அது அடித்தளமாக கருதுவதில்லை. எனினும் எல்லா காலகட்டங்களிலும் அதன் குடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டுதான் இருந்தது!
 
இனத்திலும் நிறத்திலும் மொழியிலும் வேறுபட்ட மக்கள் அதன் குடிமக்களாக விளங்கினார்கள். நிலப் பரப்பை பொருத்தவரை குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்பட்டிருக்கும் வகையில் அது சுருங்கிய தாகவோ குறுகிய எல்லைகளை கொண்டதாகவோ இருக்கவில்லை மாறாக எப்போதும் அதன் எல்லைகள் விரிந்துகொண்டேயிருந்தது ஏனெனில் அது உலகளாவிய மகத்தான செய்தியை தன்னிடத்தே கொண்டுள்ளது! அதை முழு உலகிற்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் உலக மக்கள் அனைவரையும் அதன்பால் அழைக்கவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) ஹகட்டளையிட்டுள்ளான்!
 
வெள்ளையராக அல்லது கருப்பராக இருந்தபோதும், அரபுகளாக அரபல்லாதவர்களாக இருந்தபோதும், ஐரோப்பியர்களாக அமெரிக்கர்களாக ரஷ்யர்களாக இருந்தபோதும் அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தை தழுவிக்கொள்ளும் வகையில் அனைவருக்கும் இஸ்லாத்தின் செய்தியை எத்திவைக்க வேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்! ஆகவே எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இஸ்லாத்தின் அழைப்பிற்கு செவி சாய்த்து அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தில் இணைந்துவிட்டால் பிறகு அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அரசின் குடிமக்களில் ஒருபகுதியினராக ஆகிவிடுவார்கள், அவர்களின் நிலப்பரப்புகள் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளாக ஆகிவிடும்! இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச்செல்லும் பொருட்டு எந்த நிலப்பரப்பை ஜிஹாது மூலமாக அரசு வெற்றிகொள்கிறதோ அதுவும் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளின் ஒருபகுதியாகவும் அதன் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டதாகவும் ஆகிவிடும், அதன் மக்கள் இஸ்லாத்தை தழுவினாலும் தழுவாவிட்டாலும் சரியே!
 
 
எந்தவொரு புதிய அரசும் அது தோன்றியுள்ள புதிய சிந்தனையின் மீதுதான் நிலை கொண்டிருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நிலப்பரப்பின் அதிகாரம் கைப்பற்றப்பட்டு ஆட்சி யதிகாரம் மாறும்போது அரசு தொடர்பான மக்களின் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஏனெனில் சிந்தனை கருத்தாக்கங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மாற்றமடையும்போது அவை ஒருவருடைய நடத்தை பண்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அப்போது அவர் இந்த கருத்தாக்கங்களி னால் வடிவமைக்கப்படுகிறார். எனவே வாழ்வியல் தொடர்பான அவருடைய கண்ணோட்டம் மாறிவிடுகிறது, இதன்விளைவாக மற்ற மக்களுடன் கொண்டுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை தொடர்பான அவருடைய கண்ணோட்டமும் மாறிவிடுகிறது. மக்களின் விவகாரங்கள், அவர்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள், அவர்களுடைய நலன்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் பொருட்டுதான் எந்தவொரு ஆட்சியமைப்பும் நிறுவப்படுகிறது.
 
 
இரண்டாவது அகபா உடன்படிக்கையில் அன்ஸாரிகள் பைஆ அளித்தபின்னர் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவை அடைந்தார்கள். அகாபாவில் அளிக்கப்பட்டது பாதுகாப்பு, போர் மற்றும் மதீனாவின் ஆட்சியதிகாரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்குதல் ஆகியவை தொடர்பான பைஆ என்பதால் மதீனாவை அடைந்த உடனேயே இஸ்லாமிய அரசை நிறுவும் பணியை நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். இஸ்லாமிய அரசின் தோற்றம் என்பது இஸ்லாத்தின் புதிய அகீதாவும் நபி(ஸல்) அவர்கள் மீது ஈமான்கொண்டிருந்த மக்கள் ஏற்றுக்கொண்டிருந்த பல புதிய கருத்தாக்கங்களும் ஏற்படுத்திய விளைவுகளாகவே இருந்தது. இந்த கருத்தாக்கங்கள் நபி(ஸல்) அவர்களை பின்பற்றிய மக்களிடம் வாழ்வியல் பற்றிய புதியதோர் கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இதன்விளைவாக மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம் புதிய பரிமாணத்தை அடைந்திருந்தது.
 
 
சட்டவடிவங்கள் தொடர்பான வசனங்கள் அருளப்படாத நிலையில் இந்த அகீதாவின் அடிப்படையிலும் அதிலிருந்து தோன்றிய கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். எனவே இஸ்லாமிய அரசு என்பது புதிய அகீதா மற்றும் அதிலிருந்து தோன்றிய பல புதிய சிந்தனைகள், கருத்தாக்கங்கள் ஆகிய வற்றின் மீது கட்டமைக்கப்பட்ட புதிய அரசாக விளங்கியது.
 
 
அதன் இயல்பிலும் கட்டமைப்பிலும் அதன் இலட்சியத்திலும் அதன் அடித்தளத்திலும் முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மை கொண்ட ஓர் அரசாக இஸ்லாமிய அரசு விளங்கியது. உலகில் நிலைபெற்றிருந்த மற்ற அனைத்து அரசுகளிலிருந்து இயல்பிலும் அமைப்பிலும் முழுமை யாக வேறுபட்ட ஓர் அரசாக திகழ்ந்தது. இஸ்லாமிய அரசு ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் & வணங்கிவழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹுவை தவிர வேறில்லை; முஹம்மது(ஸல்) அவனுடைய தூதராக இருக்கிறார்’ என்ற இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு தோன்றிய அரசாக இருந்தது. இஸ்லாத்தின் அகீதா என்பது வாழ்வியல் பற்றிய முழுமையான சிந்தனையாகும், அதனடிப்படையிலும் அதிலிருந்து தோன்றியுள்ள சிந்தனைகள் மற்றும் கருத்தாக்கங்கள் அடிப்படையிலும் வாழ்வியல் தொடர் பான முஸ்லிம்களின் கண்ணோட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கண்ணோட்டம், வாழ்வு என்பது படைப்பாளன் ஒருவனால் படைக்கப்பட்டுள்ளது அந்த படைப்பாளனின் ஏவல், விலக்கல் கட்டளைகள் அடிப்படையில்தான் அது நடத்திச்செல்லப்படுகிறது என்ற நம்பிக்கை யின்பால் மனிதர்களை இட்டுச்செல்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை, அல்லாஹ்(சுபு) ஒருவனை தவிர்த்து சட்டம் வழங்குவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை என்பதும் இந்த வாழ்க்கையிலும் இஸ்லாமிய அரசிலும் அல்லாஹ்(சுபு)வின் சட்டத்தை தவிர்த்து உம்மாவிற்கும் அல்லது மக்களுக்கும் அல்லது ஆட்சியாளருக்கும் அல்லது வேறு எதற்கும் இறையாண்மை (sovereingty) கிடையாது என்பதும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மையாக இருக்கிறது.
 
 
ஆகவே எந்தவொரு சட்டத்தை இயற்றுவதற்கும் அல்லது அல்லாஹ்(சுபு)  தன்னுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிற்கு அந்நியமான ஹஎந்தவொரு செயலாக்க அமைப்பை (system) அல்லது விதிமுறையை உருவாக்குவதற்கும் உம்மாவிற்கோ அல்லது ஆட்சியாளருக்கோ அனுமதியில்லை. இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுகின்ற ஏதேனும் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு உம்மா பொதுவான முறையில் ஒப்புதல் தெரிவித்தபோதும் அந்த ஒப்புதலுக்கு எத்தகைய மதிப்பும் கிடையாது. எனவே உதாரணமாக, வட்டி அடிப்படையிலுள்ள வரவுசெலவுகள் இல்லாமல் பொருளாதாரமும் வர்த்தகமும் செழிக்காது என்ற கருத்தில் வட்டியை சட்டரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது தனிமனித சுதந்திரம் என்ற அடிப்படையில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகளை சட்ட ரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது மனிதஉரிமை மீறல் என்ற அடிப்படையில் மார்க்கத்தை விட்டு வெளியேறியவரை கொலை செய்வதை தடைசெய்வதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது இஸ்லாமிய அரசு என்ற முறையில் இஸ்லாமிய அகீதாவிற்கு அப்பாற்பட்டு மற்றொரு அடிப்படை கோட்பாடு இருப்பதை அனுமதிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஆட்சியதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பரம்பரை வாரிசுரிமை அளிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளை அமைப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும், பொதுக்கருத்து என்ற அடிப்படையில் இதுபோன்ற எத்தகைய விவகாரங்களுக்கு ஒப்புதல் அளித்தாலும் அவையனைத்திற்கும் எத்தகைய மதிப்பும் கிடையாது அவற்றிற்கு சட்டரீதியாக எத்தகைய அங்கீகாரமும் கிடையாது, ஏனெனில் அல்லாஹ்(சுபு) மட்டுமே சட்டம் வழங்கு பவனாக (Legislator) இருக்கிறான் என்ற முறையிலும் சட்டம் வழங்குவதற்குரிய அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்ற முறையிலும் ஹஇவை இஸ்லாமிய சட்டங்களுக்கும் ஷரீஆவின் இறையாண்மைக்கும் அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள ஈமானிற்கும் முரண்பாடாக இருக்கின்றன.
 
 
இஸ்லாமிய அகீதா இஸ்லாமிய அரசின் அடித்தளமாக விளங்குகிறது என்ற முறையில் மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்தை இயற்று வதற்கோ அல்லது அரசியல் சாஸனம் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட செயலாக்க அமைப்பு அல்லது அரசாணை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கோ அல்லது அல்லாஹ்(சுபு) அருளியவற்றுஹக்கு அந்நியமான சட்டங்கள் எதனையும் இஸ்லாமிய அரசின் நடைமுறைப் படுத்துதலில் கொண்டுவருதற்கோ ஆட்சியாளர்களாக இருந்தாலும் நீதிபதிகள், அறிவுஜீவிகள், அரசியல் மேதைகள், ஷூரா கவுன்ஸில் உறுப்பினர்கள், மஜ்லிஸுல் உம்மா உறுப்பினர்கள், அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் சட்டரீதியான எத்தகைய அதிகாரமும் கிடையாது! மேலும் அரசு விவகாரங்களை நடத்திச்செல்லும் பொருட்டு மக்களை நிர்பந்தம் செய்வதிலிருந்தும், மனிதர்கள் உருவாக்கிய செயலாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதற்கு மக்களுக்கு தேர்வுரிமையை அளிப்பதிலிருந்தும் ஆட்சியாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள்.
 
 
கலீஃபா தனது சட்டரீதியான அதிகாரத்தின் அடிப்படையில் அரசியல் சாஸனத்தை அல்லது செயலாக்க அமைப்பை (system) அல்லது சட்டத்தை ஏற்று அமல்படுத்தும்போது அவற்றை அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகியவற்றிலிருந்து தனது இஜ்திஹாத் மூலமாக எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது முஸ்லிம் களிலுள்ள சட்டயியல் நிபுணர்கள் மற்றும் கற்றறிந்த அறிஞர்கள் ஆகியவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய அரசின் அரசியல் சாஸனம், அதன் செயலாக்க அமைப்புகள், மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை அல்லாஹ்(சுபு) தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிலிருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவதுஹ அல்லாஹ்(சுபு)வின் வேதம், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட கியாஸ் (anology) ஆகியவற்றிலிருந்தும் ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவுகளிலிருந்தும் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
 
 
எனவே இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றியிராத சிந்தனைகள் எதையும் பாதுகாப்ப திலிருந்தும் அல்லது அதுபோன்ற கருத்தாக்கங்கள், சட்டங்கள், அரசியல் சாஸனங்கள், விதி முறைகள் அல்லது அளவுகோல்கள் ஆகியவற்றை பரிசீலிப்பதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது. அன்றியும் அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகிவற்றிலிருந்து கொண்டுவரப்படாதவை மற்றும் சட்ட ரீதியான கியாஸ் அல்லது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டுவரப்படாதவை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதிலிருந்தும் அது தடைசெய்யப் பட்டுள்ளது. எனவே ஜனநாயகத்தின் அடிப்படையிலுள்ள வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்வதிலிருந்தும் பன்முக நம்பிக்கைகள், முஸ்லிம்கள் பரம்பரை அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை பெறுதல், மதச்சார்பின்மை கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளுதல் அல்லது பல்வேறு வகையான சுதந்திரங்கள் போன்ற ஜனநாயம் அழைப்புவிடுக்கும் ஆட்சியமைப்பு அம்சங்கள் எவற்றையும் ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இவையனைத்தும் இஸ்லாமிய ஷரீஆவிற்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் முரணாக இருக்கின்றன. மேலும் தேசியவாதம், தேசப்பற்று, சுயஆட்சி போன்ற கருத்தாக்கங்களை பரிசீலனை செய்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த கருத்தாக்கங்கள் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆ சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன. அன்றியும் இவற்றை இஸ்லாமிய ஷரீஆ ஆழமாக வெறுக்கிறது என்ற முறையிலும் இவற்றை ஏற்று அமல்படுத்துவது குறித்து கடுமையாக எச்சரித்திருக்கிறது என்ற முறையிலும் இவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. மன்னராட்சி, குடியரசு ஆட்சி, சர்வாதிகார ஆட்சி மற்றும் ஏகாதிபத்திய ஆட்சி போன்ற ஆட்சியமைப்பு தொடர்பான கருத்தாக்கங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப் பட்டுள்ளது, ஏனெனில் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆவிலிருந்து எடுக்கப்படவில்லை என்ற அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன.
 
 

Nov 8, 2015

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 4




கலீஃபாவை தேர்வுசெய்யும் தேர்தல் :

     புதிய கலீஃபாவை தேர்வுசெய்வதில் மஜ்லிஸ் அஷ்ஷுரா உறுப்பினர்களில் குறைந்தபட்சம் பெரும்பான்மையினரின் ஓப்புதலையேனும் கலீஃபா வேட்பாளர் பெறவேண்டியது கட்டாயம் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

     கலீஃபா வேட்பாளர் மஜ்லிஸ் அஷ்ஷூராவில் உள்ளவராகவும் சிறந்த இஸ்லாமிய பண்புகளை பெற்றவராகவும் இருக்கும்பட்சத்தில் ஒரேயொரு ஓட்டு அடிப்படையில் கூட தகுதியுள்ள நபருக்கு கலீஃபா பதவியை அளிக்கலாம் என்று அல்அஷரி(ரஹ்) கருதுகிறார். இவ்வாறு செய்யும்போது முறையான ஆதாரம் அல்லது சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படை யிலுள்ள சட்டரீதியான ஆட்சேபனைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

     சிறந்த முஸ்லிம்களாக உள்ள மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்கள் இருவரின் ஓட்டுக்களை கலீஃபா வேட்பாளர் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்களிலுள்ள மற்றொரு குழுவினர் அபிப்ராயம் கூறுகிறார்கள் (ஏனெனில் மஜ்லிஸ் அஷ்ஷூரா என்பது ஒரு ஜம்ஆ என்ற முறையில் அதில் மூன்று நபர்கள் இடம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்)

       கலீஃபா வேட்பாளருக்கு எதிரான ஆட்சேபனைகள் எதுவும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் நான்கு ஓட்டுகளை கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்று நான்காவது அபிப்ராயம் கூறுகிறது, ஏனெனில் இஸ்லாத்தில் விபச்சாரம் தொடர்பான குற்றத்தை நிரூபனம் செய்வதற்கு நான்கு சாட்சிகள் கட்டாயமாக இருக்கிறது.

     ஒரு ஜம்ஆவின் குறைந்தபட்ச பலத்தை பெற்றிருக்கும் வகையில் கலீஃபா வேட்பாளர் குறைந்தது மூன்று ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டியது கட்டாயமாகும் என்று ஐந்தாவது அபிப்ராயம் கூறுகிறது.

     வலுவான முறையில் தீர்மானிக்கும் விதமாக கலீஃபா வேட்பாளர் குறைந்தபட்சம் ஐந்து ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டும் என்று ஆறாவது அபிப்ராயம் கூறுகிறது.

     இறுதியாக, புதிதாக தேர்வுசெய்யப்படும் கலீஃபா வேட்பாளர் மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்களின் 40 ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்களிலுள்ள ஏழாவது குழுவினர் கருதுகிறார்கள், ஏனெனில் (சில அறிஞர்களின் அபிப்ராயத்தின்படி) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை சட்டரீதியாக செல்லுபடியாக வேண்டும் என்றால் அதற்கு 40 பேர்கள் இணைந்து தொழுகையை நிறைவேற்றவேண்டும்.

கலீஃபாவை பதவிநீக்கம் செய்தல் :

     அல்மாவர்தி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபா குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சி செய்யும்போது அவரை பின்பற்ற வேண்டியதும் அவருக்கு ஆதரவு அளிக்கவேண்டியதும் கட்டாயமாகும். இதற்குமாறாக, அவர் அநீதமானவராகவோ அல்லது (குருட்டுத்தன்மை அல்லது உடலுறுப்புகள் துண்டிக்கப்படுதல் ஆகியவற்றின் காரணமாக) உடல் ஊனமுள்ளவராக ஆகிவிடும் பட்சத்தில் அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்பாக்தாதி(ரஹ்)ஹ கூறுவதாவது : ‘கலீஃபா நீதி தவறி செயல்படும் பட்சத்தில் அவர் நேர்வழிக்கு திரும்பும் வகையில் உம்மா அவரை முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும், இதற்கு பலன் ஏற்படவில்லை என்றால் பிறகு அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்ஜுவைனி(ரஹ்) கூறுவதாவது : ‘உம்மாவின் இலட்சியம் இஸ்லாமாக இருப்பதால் இந்த இலட்சியத்திலிருந்து விலகிச்செல்லும் எவரையும் கலீஃபா பதிவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பது கட்டாயமாகும்’

     அஷிகிஸ்தானி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘கலீஃபா அறியாமை உடையவராகவோ அநீதம் இழைப்பவராகவோ அலட்சியம் செய்பவராகவோ இருக்கும் பட்சத்தில் அல்லது பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர் காஃபிராக ஆகிவிடும் பட்சத்தில் உடனடியாக அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்கஸ்ஸாலி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபா அநீதம் இழைப்பவராக இருக்கும்பட்சத்தில் தனது குற்றத்திலிருந்து விலகிக்கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தல் செய்யவேண்டும், அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் பிறகு அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்துவிவேண்டும்’

     அல்இஜி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபாவை பதவிநீக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காரணங்கள் தொடர்பான திட்டவட்டமான பட்டியல் உம்மாவிடம் இருக்கிறது’

     அல்அஸ்கலானி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘கலீஃபா நிராகரிப்பவரை போல செயல்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் அவருக்கு கீழ்ப்படிவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதோடு அவருக்கு எதிராக போரிடுதல் வாஜிபாகும். ஒருவருக்கு ஆற்றல் இருக்கும் என்றால் அவரை எதிர்த்து நிற்கவேண்டியது வாஜிபாகும் & இதற்கு மகத்தான நற்கூலி இருக்கிறது. இத்தகைய சூழல் ஏற்படும்போது அதை கண்டுகொள்ளாமல் விலகியிருப்பதை ஒருவர் தேர்வுசெய்தால் பிறகு அவர் பாவத்தில் வீழ்ந்துவிடுவார், அதேவேளையில் அவருக்கு எதிராக போரிட ஆற்றல் இல்லாதவர்கள் (அவரை எதிர்த்து போரிடுபவர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு) ஹிஜ்ரத் செய்யவேண்டும்’

அல்அஸ்கலானி(ரஹ்) தனது அபிப்ராயத்திற்கு ஆதரவாக குர்ஆனின் இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்.

     அல்அஹ்ஸாப்  அத்தியாயத்தின் 67&68வது வசனங்கள் முதல் ஆதாரமாகும் : அன்றியும் எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் வழிபட்டோம். நாங்கள் தவறான வழியில் செல்லும்படி அவர்கள் செய்துவிட்டார்கள். எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இருமடங்கு வேதனையை கொடுத்து அவர்கள்மீது மாபெரும் சாபத்தை ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார்கள். இரண்டாவது ஆதாரம் அல்பகரா அத்தியா யத்தின் 167வது வசனமாகும் : அன்றியும் (அவர்களை) பின்பற்றிய இவர்கள், ‘நாம் மற்றொரு முறை (உலகத்திற்கு) திரும்பிச்செல்ல கூடுமாயின் எங்களை இவர்கள் கைவிட்டபடியே நாங்களும் இவர்களை கைவிட்டுவிடுவோம்’ என்று கூறுவார்கள். இவ்வாறே (அவர்களுடைய நெஞ்சங்கள் துயரமடையும் பொருட்டு) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக்காட்டுவான். அன்றியும் அவர்கள் நரக நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.

இப்னு உமர்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

     அமீர்கள் தீயவற்றை ஏவினால் தவிர அவர்களுக்கு முஸ்லிம்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (தீயவற்றை ஏவும்) இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் அவர்களுக்கு கட்டுப்படவும் கூடாது செவிசாய்க்கவும் கூடாது. (நூல் : முஸ்லிம்)

இப்னு மாலிக்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     சிறந்த அமீர் யாரெனில் அவரை நீங்கள் நேசிப்பீர்கள் அவரும் உங்களை நேசிப்பார்; மோசமான அமீர் யாரெனில் அவரை நீங்கள் வெறுப்பீர்கள் அவரும் உங்களை வெறுப்பார். எனினும் உங்களுடைய அமீர் அநீதம் இழைப்பவராக இருந்தாலும் அவர் தொழுகையை நிறைவேற்றும் வரையில்,  வெளிப்படையான குஃப்ரை ஏவாத வரையில் அவருக்கு எதிராக போரிடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (முஸ்லிம்)

உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     அனைத்து காரியங்களிலும் அனைத்து சூழல்களிலும் நீங்கள் உங்கள் அமீருக்கு கட்டுப் பட்டு நடந்துகொள்ளுங்கள், வெளிப்படையான குஃப்ரை ஏவாத வரையில் அவரை பதவிநீக்கம் செய்யாதீர்கள்.

  அறிஞர்களின் வேறுபட்ட கண்ணோட்டங்கள் தொடர்பாக விரிவான விளக்கம் தே¬ப் பட்டால் http://www-personal.umich.edu/~luqman/Belief/Khilafah/eleven.html என்ற இணையதளத்தை பார்க்கவும்

     அல்மாவர்தி(ரஹ்) இஸ்லாமிய ஆட்சியமைப்பு சட்டங்கள் தொடர்பாக ‘அல்அஹ்காம் அஸ்ஸுல்த்தானியா’ என்ற நூலை எழுதியுள்ள போதும் அவரை போன்ற அறிஞர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டும் அதேவேளையில் இஸ்லாத்தில் ஆட்சியமைப்பு சட்டங்கள் எதுவுமில்லை என்று கூறுபவர்கள் அறிவுரீதியாக உண்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதத்தோன்றுகிறது!

சட்டங்களை ஏற்று அமல்படுத்துதல் அரசிற்கு வாஜிபு அல்ல எனும்போது இஸ்லாமிய அரசை பெற்றுக்கொள்ளும் வகையில் ஆட்சியாளர் முஸ்லிமாக இருந்தால் அதுவே போதுமானதாகும்!

     மேற்கண்ட கூற்றிற்கு விரிவான பதில் கூறத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். உட்பிரிவு விவகாரங்களில் கலீஃபா சட்டங்களை ஏற்று அமல்படுத்தலாம் அல்லது (ஆளுநர்கள், ஆமில்கள், நீதிபதிகள் ஆகியோர் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கும்வரை) அவர்களுடைய சொந்த இஜ்திஹாத் அடிப்படையில்ஹ சட்டங்களை ஏற்று அமல்படுத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கலாம்.

மக்களிடமிருந்து இல்மை பெற்றுக்கொள்ளும்போது தக்வாவை மட்டுமே அடிப்படையாக கொள்ளவேண்டும் :

ஹதீஸ்கலையின் பிதாமகர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி(ரஹ்) கூறியிருப்பதாவது,

     எவரிடமிருந்து இல்மை பெற்றுக்கொள்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் ஏனெனில் அது உங்களுடைய தீனாக இருக்கிறது!

     நமது தீனுடைய விளங்கிக்கொள்ளுதலை சிதைப்பதற்கும் திரித்துக்கூறி பிரச்சாரம் செய்வதற்கும் இஸ்லாத்தின் எதிரிகள் தங்களுடைய அனைத்து ஆற்றல்களையும் செலவிட்டு வரும் இந்த தருணத்தில் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. அறிஞர்களும், குர்ஆனை ஓதும் காரீகளும், முன்னாள் இஸ்லாமிய அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும், எழுத்தாளர்களும், இமாம்களும் இஸ்லாத்திற்கு எதிரான ஆயுதங்களாக பிரயோகப்படுத்தப் படுகிறார்கள்!

     நயவஞ்சகர்களும் (முனாஃபிகூன்), மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்களும் (முர்த்ததூன்), வெளிப்படையாக பாவம் செய்பவர்களும் (ஃபாஸிகூன்), இன்னும் நிராகரிப்பவர்களும் (காஃபிரூன்) கூட இஸ்லாத்தில் மிகுந்த அறிவுடையவர்களாக இருக்கலாம் என்பதை நாம் நமது முந்தைய வரலாற்றிலிருந்து உணர்ந்துகொள்ளவேண்டும். நாம் அவர்களிடமிருந்து மார்க்க அறிவை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் இதற்கு பொருளாகும். நேசத்திற்குரிய நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதுகுறித்து நம்மை எச்சரிக்கை செய்துள்ளார்கள்!

எனது உம்மாவின் விஷயத்தில் குர்ஆனை கொண்டு விவாதம் செய்யும் நாவன்மை பெற்றுள்ள நயவஞ்சகர்கள் குறித்துதான் நான் மிகுந்த அச்சம் கொண்டுள்ளேன் (நூல் : அஹ்மது, அல்பஸார், இப்னு அப்து அல்பர்&பக்கம் 439)

     முஸ்லிம்கள் ஒருகலீஃபாவை பெற்றிருக்கவேண்டியது வாஜிபாகும். மனித சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்வது தடைசெய்யப்பட்டுள்ளது போன்ற இஸ்லாத்தின் திட்டவட்டமான அஹ்காமில் பூசல்களை ஏற்படுத்துபவர்கள் இவர்களில் இருக்கிறார்கள். இவர்கள் ஏற்படுத்தும் பூசல்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தியுள்ளது என்றால், இஸ்லாத்தில் ஓரினசேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது என்பதில் இவர்கள் சர்ச்சை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

     அறிஞர்களின் பலவீனமான அபிப்ராயங்களையும் பூசல்களை ஏற்படுத்தும் வன்மமான அபிப்ராயங்களையும் மேற்கோள் காட்டுவதில் எப்போதும் குறியாக இருந்து வருகிறார்கள் என்பதால் இவர்களை குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளவேண்டும்!

இமாம் அல்பைஹகீ அறிவித்திருப்பதாவது :

     ‘இஸ்மாயீல் அல்காதி கூறினார், ‘ஒருநாள் நான் அப்பாஸித் கலீஃபாக்களில் ஒருவரான அல்முஃதாதித் அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். உடனடியாக அவர் ஒரு நூலை என்னிடம் காண்பித்து அதை படிக்கும்படி கூறினார். அந்த நூலில் அதன் ஆசிரியர் அனைத்து உலாமாக்களும் கூறிய விநோதமான கூற்றுகளை தொகுத்திருந்தார். எனவே இந்த நூலின் ஆசிரியர் பொதுவான மார்க்க கொள்கைகளுக்கு புறம்பாக தீய கோட்பாடுகளை பின்பற்றும் மனிதர் (லீமீக்ஷீமீtவீநீ) என்று நான் கலீஃபாவிடம் கூறினேன். அவர் ஏன் இவ்வாறு செய்துள்ளார் என்று கலீஃபா என்னிடம் வினவினார், இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறையில் எந்த அறிஞர்களும் கருத்து கூறவில்லை என்று நான் கூறினேன். மனக்கொடையுடன் (முஃதா) கூடிய திருமணத்தை சட்டரீதியானதாக ஆக்கிய அவன் இசை பாடுவதை சட்டரீதியானதாக ஆக்க வில்லை, ஒரு செயலை சட்டரீதியானதாக ஆக்கிய அவன் மற்றொரு செயலை சட்டரீதியான தாக ஆக்கவில்லை! ஒவ்வொரு ஆலிமும் சில விநோதமான அபிப்ராயத்தை கூறியிருப்பார்கள், எனவே அனைத்து இமாம்களின் வன்மமான கருத்துக்களை ஒருவர் தொகுத்து அவற்றை ஏற்று செயல்பட எண்ணினார் என்றால் பிறகு தீன் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அந்த நூலை எரித்துவிடும்படி கலீஃபா கட்டளையிட்டார்’ .

     இமாம் அல்அவ்ஸயி(ரஹ்) கூறியிருப்பதாவது, ‘அறிஞர்களின் கூற்றுகளில் விநோதமான அபிப்ராயங்களை தேடுபவர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிடுகிறார். குறிப்பிட்ட ஓர்அறிஞர் மிகுந்த அறிவு பெற்றவராகவும் மிக்க மதிப்பு உடையவராகவும் இருக்கும் அதேவேளையில் வன்மம் நிறைந்த சில கருத்துக்களை கூறுபவராகவும் இருக்கக்கூடும். எனவே ஒவ்வொரு அறிஞர்களும் கூறிய வன்மமான கருத்துக்களை திரட்டி அதை புதிய மத்ஹபாக ஆக்குவதற்கு ஒருவர் முனைந்தால் பிறகு அதிலிருந்து நீங்கள் எத்தகைய இல்மை பெற்றுக்கொள்ள முடியும்!’(நூல் : இஜ்திஹாத் மேற்கொள்வதற்கு எவருக்கு உரிமையிருக்கிறது, ஆசிரியர் : ஸல்மான் அல் உதஹ்)

 குறிப்பிட்ட சிலர் நன்கு படித்தவர்களாகவும் சிறந்த நினைவாற்றல் உள்ளவர்களாகவும் அறிவுத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கக்கூடும், எனினும் அவர்களிடமிருந்து நாம் இல்மை  பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர்களிடம் விஸ்வாசம் கொள்ளலாம் என்றும் இதற்கு அர்த்தம் கிடையாது. கடந்த காலத்தில் மகத்தான அறிவை பெற்றிருந்தவர்களும் பெரும்பெரும் ஃபிக்ஹ் நூற்களை எழுதியவர்களும்கூட இஸ்லாத்தைவிட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்! அவர்களுடன் ஒப்பிடும்போது இன்றைக்கு விந்தையான கருத்துக்களை கூறும் அறிஞர்கள் கற்றுக்குட்டிகளாகவே இருக்கிறார்கள்!ஹ

     இப்னு ருஷ்த் அவார்ரிஸ் (கி. பி. 1126-1198) மாலிக் மத்ஹபை பின்பற்றும் அறிஞராக இருந்தார், அவர் ‘பிதாயத் அல்முஜ்தஹித் வ நிஹாயத் அல்முக்தாயித் ’ என்ற பிரபலமான ஃபிக்ஹ் நூலை எழுதியிருந்தார், எனினும் அது தத்துவ நூலாக ஆகிவிட்டதால் இஸ்லாத் திலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்பதை அனேகமானவர்கள் அறிவார்கள். பிரபலமான விஞ்ஞானியாகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய இப்னு ஸினா போன்றவர்கள் இறுதியில் இந்த உலகம் அழிவற்றது என்றும் என்றென்றும் நிலையானது என்றும் சிந்தித்ததின் மூலமாக மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டவர்களில் (முர்தத்) ஆகிவிட்டார்கள்!

     அறிவில் மிகைத்தவர்களை நாம் காணலாம், எனினும் தக்வா என்ற நிபந்தனையை அவர்கள் நிறைவுசெய்தால் ஒழிய அவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்வதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மற்றவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்ளுதல் என்ற விவகாரத்தில் கீழ்க்கண்ட சில முக்கியமான கருத்துக்கள் ஒருவரின் தக்வாவை அறிந்து கொள்வதற்கு உறைக்கல்லாக பயன்படுகிறது :

  • அவர் இஸ்லாத்தின் திட்டவட்டமான விஷயங்களுக்கு எதிராக இருக்கக்கூடாது

  • அவருடைய பேச்சுக்களுடன் அவருடைய செயல்பாடுகள் முரண்படக்கூடாது

  • அவர் இரட்டை முகம் கொண்டவராக இருக்கக்கூடாது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது : இரட்டை முகம் கொண்டவர்கள்தான் மனிதர்களில் மிகவும் தீயவர்கள் ஆவார்கள்! இத்தகையவர்கள் இவர்களிடம் ஒரு முகத்தையும் அவர்களிடம் ஒருமுகத்தையும் காண்பிப்பார்கள் (நூல் : புஹாரி, முஸ்லிம்)

  • அஹ்காம் ஷரீஆவில் அவர் வரம்புமீறக்கூடாது பின்வரும் ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பது போல அவர் நிஃபாக் தன்மையை கொண்டவராக இருக்கக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘நயவஞ்சகரின் அறிகுறிகள் மூன்றாகும் : பேசும்போது பொய்யுரைப்பார்; வாஹக்குறுதி அளித்தால் அதற்கு மாறுசெய்வார்; அமானிதமாக ஏதேனும் ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வார். அவர் நோன்பு நோற்றாலும் தொழுகையை நிறைவேற்றினாலும் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் (அவர் நயவஞ்சகரே!) (புஹாரி, முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘எவர் நான்கு (வகையான) தன்மைகளை பெற்றிருக் கிறாரோ அவர் நயவஞ்சகர் ஆவார், ஒருவர் இந்த நான்கு தன்மைகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்கும் நிலையில் அதிலிருந்து நீங்கிக்கொள்ளாத வரையில் அவர் நய வஞ்சகர்களில் ஒருவராகவே இருந்துவருவார் : பேசினால் பொய்யுரைப்பார்; வாக்குறுதி அளித்தால் அதற்கு மாறுசெய்வார்; ஒப்பந்தம் செய்தால் அதற்கு துரோகமிழைப்பார்; சச்சரவு செய்யும்போது கண்ணியக்குறைவாகவும் அவமரியாதையாகவும் நடந்து கொள்வார். (புஹாரி)

     நயவஞ்சக தன்மையில் இரண்டு நிலைகள் இருக்கின்றன; ஒன்று நம்பிக்கையுடன் தொடர்புடையது மற்றொன்று செயலுடன் தொடர்புடையது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இன்னு ஆமிர்(ரளி) அறிவித்துள்ள ஸஹீஹ் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

     எனது உம்மாவிலுள்ள நயவஞ்சகர்களில் பெரும்பான்மையினர் காரீகளில் (கிராத் ஓதுபவர்களில்) உள்ளவர்களாக இருப்பார்கள்! (அஹ்மது, தப்ரானி மற்றும் இதர ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பார்க்கவும் – ஸஹீஹ் அல்ஜமீ# 1203)

இமாம் அல்மனாவி(ரஹ்) ஃபய்துல் கத்ர் என்ற தனது நூலில் இந்த ஹதீஸ் பற்றி குறிப்பிட்டிருப்பதாவது : ஹஹ

     ‘எது நோக்கமாக உள்ளதோ அந்த அசலான அர்த்தத்திற்கு அப்பாற்பட்டு இவர்கள் வியாக்ஞானம் அளிப்பார்கள், அன்றியும் அதன் அர்த்தத்தை தவறான கோணத்தில் காட்டு வார்கள். (ஷரீஆ) உரையில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளை அவர்கள் மனனம் செய்திருந்த போதும் அது சுட்டிக்காட்டும் அர்த்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) காலத்தில் இருந்த நயவஞ்சகர்கள் இத்தகைய தன்மைகளையே பெற்றிருந்தார்கள்’

இமாம் அஷ்ஷமக்ஷரி(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘நபி(ஸல்) அவர்கள் நிஃபாக் (நயவஞ்சகத்தன்மை) பற்றி குறிப்பிடும்போது ரியா (மற்றவர் களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக வணக்கவழிபாடு தொடர்பான செயல்பாடுகளை மேற் கொள்ளுதல்) என்ற அர்த்தத்திலேயே கூறியுள்ளார்கள். ஏனெனில் உள்ளரங்கமாக நம்பிக்கை மற்றும் வெளியரங்கமான செயல்பாடு ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கின்றன என்பதை (நிஃபாக், ரியா ஆகிய) இந்த இரண்டு தன்மைகளும் சுட்டிக்காட்டுகின்றன’

     ‘நபி(ஸல்) அவர்கள் நிஃபாக் பற்றி கூறும்போது செயல்பாடுகள் தொடர்பான நிஃபாக் தன்மையை சுட்டிக்காட்டுவதை நோக்கமாக கொண்டிருந்தார்களே ஒழிய குஃப்ர் தொடர்பான நிஃபாக் தன்மையை சுட்டிக்காட்டுவதை நோக்கமாக கொள்ளவில்லை’

     ‘நயவஞ்சகர்கள் உள்ளார்ந்த முறையில் ஈமான் கொண்டிராதபோதும் தங்களது உயிர்கள், உடமைகள் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்வதற்காக ஈமான் கொண்டிருப்பதை போல வெளியில் காட்டிக்கொள்வார்கள். ரியா எனும் பகட்டுக்காட்டும் தன்மையை கொண்டுள்ள மனிதர் இம்மையில் குறிப்பிட்ட சில ஆதாயங்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் மறுமையில் நற்கூலியை பெற்றுத்தரும் செயல்பாடுகளை மேற்கொள்வார். (வழி கேட்டில் உள்ள) காரீ ஒருவர் தன்னுடைய அறிவையும் செயலையும் மக்கள் புகழ்ந்து கூற வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டிருந்தபோதும் தான் அல்லாஹ்(சுபு)வின் நற்கூலியின் பொருட்டே செயல்படுவதாக வெளியில் கூறிக்கொள்வார். இந்த மூன்று வகையான மனிதர்களும் பொதுவாக ஒருதன்மையை பெற்றிருப்பார்கள் & அவர்களுடைய உள்ளரங்கமான நோக்கமும் வெளியரங்கமான செயல்பாடும் வேறுபட்டதாக இருக்கும்’

     இதன்காரணமாகவே இமாம் அல்கஸ்ஸாலி(ரஹ்) பின்வருமாறு கூறியிருக்கிறார்,

     கீழ்க்கண்ட நான்கு தன்மைகளை கொண்டுள்ள காரீகளிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

  • அல்&அமல் (உலக ஆதாயத்தை அதில் நோக்கமாக கொண்டிருப்பார்கள்)

  • அல்&அஜ்லா (தனது செயல்களுக்குரிய ஆதாயத்தை இம்மையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசரப்படுவார்கள்)

  • அல்&கிப்ர் (தற்பெருமையும் பெரும் அகம்பாவமும் கொண்டவர்களாக இருப்பார்கள்)

  • அல்&ஹஸது (பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் பெற்றுள்ளவற்றை தான் பெறவேண்டும் என்றும் மற்றவர்கள் பெற்றுள்ளதை அவர்கள் இழந்துவிடவேண்டும் என்றும் விரும்புவார்கள்)

     உலக ஆதாயத்தை தேடுவதில் வழிகேட்டில் இருக்கும் காரீ இஸ்லாத்திற்கு முரண்பட்ட வற்றையும் ஒழுக்க மாண்புகளுக்கு புறம்பானவற்றையும் மேற்கொள்வார். பொய்யுரைத்தல், தூற்றுதல், இழிவுபடுத்துதல், ஏமாற்றுதல் போன்ற தீயசெயல்பாடுகள் அனைத்தையும் கொடுங் குற்றவாளிகள் வெட்கி தலைகுணியும் அளவுக்கு மோசமான முறையில் மேற்கொள்வார்.

இமாம் அந்நவவி(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘(வழிகேட்டில் இருக்கும்) காரீ, உலமா ஆகியவரை தவிர்த்து மற்ற எவரும் என்னை இழிவு படுத்துவார்கள் என்று நான் அஞ்சவில்லை’

     அவருடைய இந்த கூற்றை செவியுற்றவர்கள் தங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்தி னார்கள், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது,

     ‘இந்த கூற்று அசலாக என்னுடையதல்ல, அது இப்ராஹிம் அந்நகய்(ரஹ்ஹ) கூறியதாகும்’

அத்தா(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘காரீகள் குறித்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்! (முக்கியத்துமற்ற சிறிய விஷயத்தில்) நான் அவர்களில் ஒருவருடன் கருத்துவேறுபாடு கொள்ளும் பட்சத்தில், உதாரணமாக ஒருபழத்தை பற்றி கூறும்போது ‘அது இனிப்பாக இருக்கிறது’ என்று நான் கூறினால் ‘அது அழுகிவிட்டது’ என்று அவர்கள் கூறுவார்கள்! பிறகு எனது இரத்தத்தை ஓட்டும் பொருட்டு (எனக்கு மரண தண்டனை அளிக்கும் பொருட்டு)ஹ கொடுங்கோலரான ஸுல்தானிடம் (சென்று) வழிவகை தேடுவார்கள்!’

அல்ஃபுதைல் இப்னு இய்யாது(ரஹ்) தனது புதல்வரிடம் கூறியதாவது :

     ‘காரீகளிடமிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ள ஒருவீட்டை விலைகொடுத்து வாங்கு வாயாக! அவர்களிடமிருந்து எனக்கு என்ன தேவை இருக்கிறது?! என்னிடமுள்ள ஒருகுறை வெளிப்பட்டால் அப்போது எனது மரணத்திற்கு அவர்கள் வழிவகை தேடுவார்கள்! என்னிடமுள்ள ஒரு நற்குணம் பற்றி மற்றவர்கள் வெளிப்படையாக பேசினால் அப்போது என்மீது பொறாமை கொள்வார்கள்! மக்களுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும்போது நிச்சயமாக அவர்கள் அகம்பாவம் கொண்டவர்களாகவும் உதவி மனப்பான்மை அற்றவர் களாகவும் இருப்பதை நீ காண்பாய். மற்றவர்கள் அனைவரைவிடவும் தங்களுடைய தொழுகை சிறந்தது போன்று அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். சுவனம் செல்வதற்கும் நரக நெருப்பி லிருந்து விடுதலை அடைவதற்கும் நன்மராயம் கூறப்படும் வகையில் அவர்களுக்கு வஹீ அருளப் பட்டுள்ளதை போன்று நடந்துகொள்வார்கள். தங்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் நாடும் அதேவேளையில் மற்றவர்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் நாடுவார்கள். தீவிரமான தற்பெருமைக்காரர்களாகவும் பெரும் அகம்பாவம் கொண்டவர்களாகவும் இருந்தபோதும் நைந்துபோன பழய ஆடையை அணிந்து கொண்டு அடக்கம் நிறைந்தவர்கள் போன்று எளிமையுடன் காட்சியளிப்பார்கள்!’  (அல்மனாவி எழுதியுள்ள விரிவுரை நூலின் பாகம் 2 பக்கம் 80-81)

      மதச்சார்பற்ற இஸ்லாத்தை முன்மொழிபவர்களின் தர்க்கவாதங்களை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் சிந்திக்கவேண்டும், நாம் அவர்களின் கண்ணோட்டங்களை பின்பற்றுவோம் எனில் இஸ்லாமிய உலகத்திலுள்ள கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும், முஸ்லிம் நிலப்பரப்புகள் துண்டாடப்பட்டிருப்பதையும், காலனியாதிக்க குஃப்ஃபார் நமது நிலங்களை ஆக்கிரமித்திருப்பதையும் அங்கீகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! அழைப்புப் பணி மேற்கொண்டுள்ள உண்மையான முஸ்லிம்களை கைது செய்வதையும் அவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்குவதையும் அங்கீகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! இதன் விளைவாக நாம் இம்மையிலும் மறுமையிலும் பெரும் இழப்புகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்!

ஸஹீஹ் அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டு, ஹஹஅத்தப்ரானியின் அல்கபீர் வல் பஸாரில் பதிவு செய்யப்பட்டுள்ள அவ்ஃப் இன்னு மாலிக்(ரளி) அறிவிப்பில்‎ கூறப்பட்டிருப்பதாவது :

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     எனது உம்மாவினர் எழுபதிற்கும் மேற்பட்ட பிரிவுகளாக ஆகிவிடுவார்கள்! அவர்களில் தங்கள்  சொந்த அபிப்ராயத்தின் அடிப்படையில் விவகாரங்களை மதிப்பிடும் மனிதர்கள்தான் எனது உம்மாவின் மீதுள்ள மிகப்பெரிய சோதனையாக இருப்பார்கள்! எனவே தடைசெய்யப் பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாகவும் அனுமதிக்கப்பட்டவற்றை தடைசெய்யப்பட்ட வையாகவும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்! இந்த ஹதீஸ் அல்ஹைஸமியின் மஜ்மா அஸ்&ஸவாயித் என்ற நூலின் கிதாபுல் இல்ம் என்ற முதற்பாகத்தில் அத்தக்லித் வல் கியாஸ் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

அபூஸியாது இப்னு ஹுளைர் அறிவிப்புத்தொடர் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸை அபூஷமா பதிவுசெய்துள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது :

     ‘இஸ்லாத்தை அழிக்கக்கூடியது எது என்பதை நீர் அறிவீரா?’ என்று உமர்(ரளி) என்னிடம் வினவினார். ‘இல்லை’ என்று நான் கூறினேன். ‘ஓர் அறிஞர் (சட்டத்தில்) ஒரு தவறு செய்கிறார், மக்களின் வழிகேட்டை நாடுகின்ற நயவஞ்சகர்கள் தங்களின் எழுத்தை கொண்டு அதில் விவாதம் செய்கிறார்கள்; அமீர்கள் அதை கொண்டு ஆட்சிசெய்கிறார்கள்!’ என்று கூறினார்.
 
 
Sources

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 3

கிலாஃபாவின் உட்பிரிவு விவகாரங்களில் அறிஞர்கள் கருத்துவேறுபாடுகள் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இஸ்லாத்தில் அரசியல் இல்லை என்று அர்த்தமா?!
 
 
 

     கிலாஃபா தொடர்பான உட்பிரிவு விவகாரங்களில் பாரம்பரிய உலாமாக்கள் பல்வேறு கருத்துவேறுபாடுகளை கொண்டுள்ளார்கள் என்பதால் அது இஸ்லாத்தில் திட்டவட்டமான விவகாரமாக இல்லை என்பது மற்றொரு விந்தையான கண்ணோட்டமாக இருக்கிறது. அதாவது அரசியல் தொடர்பான அனைத்து விவகாரங்களும் திட்டவட்டமற்றது என்பதால் இஸ்லாத்தின் ஆட்சியமைப்பு அம்சங்கள் திட்டவட்டமானதாக இல்லை என்பது இதன் பொருளாகும்!

     தொழுகையின் உட்பிரிவு விவகாரங்களில் அறிஞர்கள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ளார்கள் என்பதால் தொழுகையின் வாஜிபை தள்ளுபடி செய்துவிடலாம் என்பதை போன்றதுதான் இந்த கண்ணோட்டமாகும். வாஜிபு தொடர்பான உட்பிரிவில் கருத்து வேறு பாடுகள் இருந்தபோதும் அதன் முக்கியமான அடிப்படைகள் திட்டவட்டமானவையாக இருக்கின்றன என்பதால் அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது கேலிக்கும் நிந்தனைக்கும் உரிய கருத்தாகவே இருக்கிறது.

     ஆட்சியமைப்பு தொடர்பான கண்ணோட்டமும் இதுபோன்றதுதான். சொல்வழக்கு தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் சட்டரீதியான இக்திலாஃப் (கருத்து வேறுபாடுகள்) ஆகியவை எத்தகையதாக இருந்தபோதும் ஆட்சியமைப்பு தொடர்பாக தெளிவான திட்ட வட்டமான அஹ்காம் ஷரீஆ இருக்கின்றன, அதை தரீக்கா (இஸ்லாத்தின் வழிமுறை – method) என்று அல்லது நிழாம் (இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு system of Islam) என்று அழைக் கிறீர்களா அல்லது வேறுவிதமாக அழைக்கிறீர்களா என்பது இங்கு முக்கியமல்ல மாறாக, இந்த அஹ்காம் ஷரீஆவைஹ இன்றைய முஸ்லிம் நாடுகளின் அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் கவனத்திற்குரிய விஷயமாகும்!

     ஆட்சியமைப்பு தொடர்பான சில திட்டவட்டமான அஹ்காம் ஷரீஆவை இப்போது நாம் ஆய்வு செய்வோம், இந்த சட்டங்களின் உட்பிரிவுகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும் என்பது உண்மையே. இந்த சட்டங்கள் குறைந்தபட்சம் திட்டவட்டமான அர்த்தத்தை கொண்டுள்ளன, அவற்றில் சில அறிவிப்பு ரீதியாக திட்டவட்டமானமானவையாக இருக்கின்றன. அவற்றிற்கு மத்தியிலுள்ள வேறுபாடுகள் தெளிவாக அறியப்பட்டதுதான், அவற்றில் சிலவற்றை ஒருவர் மறுக்கும் பட்சத்தில் அது வெளிப்படையான பாவத்தின்பால் இட்டுச்செல்லும், இன்னும் திட்டவட்டமான அறிவிப்பாகவும் (Qata’i subooti – definite in transmission) திட்டவட்டமான அர்த்தத்தை கொண்டதாகவும் (Qata’i Dalalah – definite in meaning) உள்ளவற்றை மறுத்தால் அது குஃப்ரின்பால் இட்டுச்செல்லும். ஆட்சியமைப்பு தொடர்பான திட்டவட்ட மான அஹ்காம் ஷரீஆ பின்வருமாறு :

  • கலீஃபாவை பெற்றிருக்கவேண்டியது வாஜிபாகும்.

 இவ்விவகாரம் தொடர்பாக இடம்பெற்றுள்ள பன்முக ஆதாரங்களையும் அறிஞர்களின் மேற்கோள்களையும் மீண்டும் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை என்பதால் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுதல் போதுமானதாக இருக்கும். கலீஃபாவிற்குரிய நிபந்தனைகளில் சிலவற்றில் அறிஞர்கள் கருத்துவேறுபாடுகள் கொண்டுள்ளார்கள், அவற்றில் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகள் திட்டவட்டமானதாக இருக்கின்றன.

 இமாம் அந்நவவி(ரஹ்) (கி. பி. 1278ல் மரணமுற்றார்) கூறியிருப்பதாவது :

 ‘கலீஃபாவை தேர்வுசெய்ய வேண்டியது முஸ்லிம்கள்மீது வாஜிபாக இருக்கிறது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளார்கள்’ (அந்நவவியின் ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 12 பக்கம் 205)

  ‘இஸ்லாத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை வெட்டவெளிச்சமாக்குதல்’ என்ற நூலின் இரண்டாம்   பாகத்தில் இது தொடர்பான மற்ற ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

  • கலீஃபாவிற்கு பைஆ செய்வது வாஜிபாகும்.

     இந்த விவகாரத்தின் உட்பிரிவுகள் தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருப்பது உண்மையே. http://www-personal.umich.edu/~luqman/Belief/Khilafah/eleven.html என்ற இணைய தளத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

  • மாகாணங்களை ஆட்சிசெய்யும் வாலி (ஆளுநர்கள்) மற்றும் நகரங்களை ஆட்சிசெய்யும் ஆமில் (மேயர்கள்) ஆகியவர்களை நியமிப்பதற்கு கலீஃபாவிற்கு அதிகாரமுண்டு என்பதற்கு சுன்னாவிலும் இஜ்மா அஸ்ஸஹாபாவிலும் ஆதாரம் இருக்கிறது.

  • அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் (இதுகுறித்து ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது) இது கலீஃபா, வாலி, ஆமில் ஆகிய அனைவர்மீதும் வாஜிபாகும்.

  • ஒருகலீஃபாவிற்கு அதிகமாக இருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது (இதுகுறித்து ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது)

  • ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு கலீஃபாவிற்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்கு சுன்னா மற்றும் இஜ்மா அஸ்ஸஹாபா ஆகியவற்றில் தெளிவான ஆதாரம் இருக்கிறது. எனினும் நீதித் துறையின் தூணாக விளங்கும் பல்வேறு வகையான நீதிபதிகளின் தகுதிகள் போன்ற உட்பிரிவுகள் தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.

  • குற்றவியல் தண்டனை சட்டங்களை (hudud) நடைமுறைப்படுத்தவேண்டியது வாஜிபாகும். பல்வேறு தண்டனை சட்டங்களும் கிஸாஸ் தொடர்பான சட்டங்களும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • ஜிஹாது மேற்கொள்ளுதல் வாஜிபாகும். குர்ஆனில் ஜிஹாது தொடர்பாக 119 வசனங்கள் அருளப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் அது நன்கு அறியப்பட்ட விஷமாக இருக்கிறது.

  • ஸகாத் வசூலித்து அதற்கு உரிமையுள்ளவர்களிடம் விநியோகம் செய்யவேண்டியது வாஜிபாகும். ஸகாத்தை பெறுவதற்கு உரிமையுள்ள எட்டு பிரிவினர்களில் அரசின் சார்பாக ஸகாத் வசூலிப்பவர் ஒருவராக இருக்கிறார் என்பது குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இதற்கு சுன்னாவிலும் இஜ்மா அஸ்ஸஹாபாவிலும் ஆதாரம் நிறுவப்பட்டுள்ளது. ஸகாத் கொடுக்க மறுத்தவர்களுடன் அபூபக்கர்(ரளி) போரிட்டார் என்பது பிரபலமாக அறியப்பட்ட செய்தியாகும்

  • சட்டங்களை ஏற்று அமல்படுத்துவதற்கு கலீஃபா அதிகாரம் பெற்றுள்ளார்,  சட்ட ரீதியாக கருத்துவேறுபாடு உள்ள விவகாரங்களில் அவர் குறிப்பிட்ட சட்டத்தை ஏற்று அமல்படுத்தும்போது கலீஃபாவின் அபிப்ராயம் அனைவரையும் கட்டுப்படுத்தும். அதிகாரத்தை கொண்டுள்ளவர்களுக்கு (உலில் அம்ர்) கீழ்படியவேண்டும் என்பது குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது, அன்றியும் கலீஃபாவிற்கு கட்டுப்பட்டு நடப்பது வாஜிபு என்பதை பல்வேறு ஹதீஸ்கள் சுட்டிக்காட்டுகின்றன. சட்டத்தை ஏற்று அமல் படுத்துவதை பொருத்தவரை அதற்கு இஜ்மா அஸ்ஸஹாபாவில் ஆதாரம் இருக்கிறது.

     இவை அறிஞர்களின் ஒருமித்த கருத்து அடிப்படையிலுள்ள ஆட்சியமைப்பு தொடர்பான பல்வேறு சட்டங்களில் சிலவாகும். தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, நிக்காஹ், ஒப்பந்தங்கள் மற்றும் இதர அஹ்காம் ஷரீஆவில் தங்களுடைய விளங்கிக்கொள்ளுதல் அடிப்படையில் வெவ்வேறு முஜ்தஹிதின்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களை கொண்டிருப்பது போலவே அரசு தொடர்பான சில விவகாரங்களிலும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டுள் ளார்கள். இவற்றில் கலீஃபாவிற்குரிய நிபந்தனைகள், ஷூரா மேற்கொள்ளுதல், மஹ்காமத் அல்மழாளிம்ஹ (அநீதி செயல்பாடுகள் தொடர்பான நீதிமன்றம்) போன்ற விவகாரங்கள் அடங்கும். ஆட்சியமைப்பின் உட்பிரிவுகள் தொடர்பாக பாரம்பரிய அறிஞர்களின் வேறுபட்ட கண்ணோட்டங்கள் கீழே குறிப்படப்பட்டுள்ளன :

மஜ்லிஸ் அஷ்ஷூரா :

     அல்மாவர்தி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் மூன்று நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும் : அவர் நீதி செலுத்துபவராக இருக்கவேண்டும்; கலீஃபா நல்ல அம்சங்களை பெற்றவரா அல்லது தீயஅம்சங்களை பெற்றவரா என்பதை சீர்தூக்கிப்பார்த்து வேறுபாடுகளை அறிந்துகொள்வதற்குரிய அறிவுத்திறனை பெற்ற வராக இருக்கவேண்டும்; சிறந்த தலைவரை தேர்வுசெய்யும் அளவுக்கு அவர் போதுமான ஞானத்தையும் தீர்மானிக்கும் திறனையும் பெற்றவராக இருக்கவேண்டும்’

     அல்ஜுவைனி(ரஹ்) கூறியிருப்பதாவது : ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் நான்கு நிபந்தனைகளை நிறைவுசெய்ய வேண்டும். அவர் ஆணாக இருக்க வேண்டும்; அறிவுத்திறன் பெற்றவராக இருக்கவேண்டும்; சராசரி மனிதரைவிட உயர்வானவராக இருக்கவேண்டும்;  முஸ்லிமாக இருக்கவேண்டும்’

     அப்துல் ஜப்பார்(ரஹ்) கூறியிருப்பதாவது : ‘மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுபப்பினராக உள்ள ஒவ்வொருவரும் எவரை கலீஃபாவாக தேர்வுசெய்ய வேண்டும் என்பதில் அறிவித்திறன் பெற்ற வராக இருக்கவேண்டும். குறிப்பாக இஸ்லாமிய அறிவு பெற்றவராகவும் பொதுவாக ஞானமும் தீர்மானிக்கும் திறனும் உடையவராகவும் இருக்கவேண்டும்’

     அல்பாக்தாதி(ரஹ்) கூறியிருப்பதாவது : ‘மதிநுட்பத்துடன் தேர்வுசெய்யும் திறன்பெற்றுள்ள மனிதர்களிலிருந்து கலீஃபாவும் மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்களும் தேர்வுசெய்யப்பட வேண்டும்’
 
Sources