Showing posts with label பொருளாதார அடியாள். Show all posts
Showing posts with label பொருளாதார அடியாள். Show all posts

Nov 2, 2015

நானும் ஒரு பொருளாதார அடியாள் இறுதி பகுதி

 
மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP)

மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டினரால் உற்பத்தி செய்யப்பட்ட பணிகள் அல்லது பண்டங்களின் மொத்த இறுதி சந்தை மதிப்பாகும்.

 
மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP)

ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product - GDP).


நாம் அடிக்கடி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் கேள்விப்படும் இந்த இரண்டு வருத்தைகளும் மக்களை ஏமாற்றும் ஒரு கருவிகாக தான் பயன்படுத்தபடுகிறது.


இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது. (ஏப்ரல் 14,2015 dailythanthi)


வாக்குமூலம் - "மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்".


வாக்குமூலம் - “ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திலும், அது காலணிகளை உற்பத்தி செய்து வந்தாலும் சரி, விளையாட்டு பொருட்களைத் தயாரித்து வந்தாலும் சரி, கனரக இயந்திரங்களை உருவாக்கி வந்தாலும் சரி அவையனைத்தும் தங்களுக்கென்று பொருளாதார அடியாட்களைக் கொண்டுள்ளன. பொருளாதார அடியாட்களின் படை அணிவகுத்துச் செல்லத் தொடங்கி விட்டது. அது இந்த பூமி முழுவதும், மிக விரைவாகச் சுற்றி வளைத்து வருகிறது. வணிகர்கள் போல் உடையணிந்து மரியாதைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, இலண்டன், டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைமையகங்களிலிருந்து வரும் ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு கண்டத்திலும் ஊடுருவிப் பரவிவருகின்றார்கள். அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை, நிறுவன அதிகாரவர்க்கத்தின் அடிமைகள் ஆக்குகிறார்கள். அவர்களைக் கொண்டு நாடு முழுவதற்கும் கடிவாளமிடுகிறார்கள். மனிதனின் இரத்தத்தையே உறிஞ்சி எடுக்கும் கடின உழைப்புத் தொழிற்சாலைகளுக்குத் தங்களைத் தாங்களே விற்று கொள்ளும்படி பாவப்பட்ட மக்களைத் தூண்டுகிறார்கள்."




உலகப்பேரரசு அது சுயநலமிக்கது. தனக்கு மட்டுமே சேவை புரியக்கூடியது. வணிகத்தை மட்டுமே, இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. தனக்கு முன்பிருந்த எல்லாப் பேரரசுகளையும் போலவே, இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யவும், கண்ணில் காணும் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது. அதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் காலடியில் மேலும், மேலும் அதிக செல்வத்தைக் கொட்ட தேவையான அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தக்கூடியது உலகப் பேரரசு.


இஸ்லாத்திற்கு எதிரான யுத்தம்:

அடுத்த நூற்றாண்டில் நடக்கப் போகும் உண்மையான யுத்தம் கம்யூனிஸ்டுகளுக்கும், முதலாளித்துவாதிகளுக்கும் இடையேயானதாக இருக்காது. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயானதாகத்தான் இருக்கும்.

                           ஆர்னால்டு டோய்ன் பீ (Toyn Bee)
                          (Civilization on Trial and world and west)

மேற்கு உலகம், குறிப்பாக அதற்குத் தலைமை வகிக்கும் அமெரிக்கா உலகம் முழுவதையும் அடக்கியாள உறுதிபூண்டுள்ளது. இதுவரை வரலாறு காணாத மாபெரும் பேரரசாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறது. இதனால் தான் அமெரிக்க மற்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிக்கிறது. அதற்கு முதலாளித்துவ கொள்கையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இந்த முதலாளித்துவ கொள்கைக்கு இன்று பெரும் எதிரகாக இருப்பது இஸ்லாம மட்டுமே. வளந்து வரும் இஸ்லாமும், இஸ்லாமிய தலைமைக்கான (கிலாஃபத்) கோஷம்களும் அவர்களின் பேரரசு பேரரசை களைத்துக் கொண்டு இருக்கிறது. அவர்களின் அச்சபடு அவர்களின் செயல்பாடுகளில் தெரிக்கிறது. முதலாளித்துவ சித்தாந்தம் 2008ம் ஏற்பட்ட பொருளாதார சரிவின் முலம் அது இன்னும் தன்னால் தலை துக்க முடியாமல் இருக்கிறது. இவர்கள் எத்தனை  பொருளாதார அடியாள்களை கொண்டு தனது பொருளாதாரத்தை மேம்படுத்துனாலும் சரியே. 
 
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது.

தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்தது போல தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.


தீர்வு:

எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமே ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடை செய்திருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை மட்டுமே சிறந்த ஒரே மாற்று வழியாக இருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த இஸ்லாமிய தலைமை(கிலாஃபத்) வேண்டும். இஸ்லாமிய தலைமையில் உள்ள பொருளாதாரக் கொள்கையில் வெளிநாட்டவர் தலையீடு இருக்காது. ஆகையால் ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் இங்கு அவசியம் இருக்காது.

இஸ்லாம் மாத்திரமே விமோசணம்.
இன்ஷா அல்லாஹ்.


முற்றும்

நாசிக். S
DXB

Oct 30, 2015

நானும் ஒரு பொருளாதார அடியாள் பகுதி-1

“பொருளாதார அடியாட்கள் (Economic Hit Man) என்று அழைக்கப்படுவார் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபாடு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்த கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களுக்கு பெரும்பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொருளாதார நிபுணர்கள். உலக வங்கி (World Bank), சர்வதேச வளர்ச்சிக்கான அமரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் (US Agency for international Development USAID), மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி “உதவி” அமைப்புகளில் குவிந்திருக்கும் பணத்தை மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் பணப்பெட்டிகளுக்கும், இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டைப் பைகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.

மோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் முறைகேடுகள், லஞ்சம், மிரட்டிப்பணம் பறிப்பது, பாலியல், கொலை முதலியன இவர்களுடைய கருவிகள் ஆகும். பேராரசு எவ்வளவு பழமையானதோ அதேயளவுக்கு இவர்களது தந்திரங்களும் பழமையானவைதான். ஆனால் உலகமயமாக்கல் முழுவிச்சில் நடைபெற்றுவரும் இன்றைய உலகில் பொருளாதார அடியாட்களின் தந்திரங்கள் புதிய, பயங்கரமான பரிணாமங்களை எட்டியுள்ளன.

நானும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவன்தான்.

- ஜான் பெர்கின்ஸ் - 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'

உங்களுக்கு உலகை வலம் வர விருப்பமிருந்தால், கரடு முரடான பயணங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தால், உலக நாடுகளின் இயக்கத்தை எக்ஸ்ரே' கண் கொண்டு காணத் துடித்தால், ஏகாதிபத்தியத்தின் புற முதுகைக் காண ஆவலிருந்தால் - இந்தக் கட்டுரை தொடருந்து வாசிங்கள்.



"நாட்டினை சீரமைப்பதற்கு கடன் கொடுக்கிறோம். அதன் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்றினால் உங்கள் நாட்டின் பொருளாதாரம் இத்தனை சதவிகிதம் உயரும்.." என்று புள்ளிவிவரங்களின் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்களை சம்மதிக்கச் செய்வதே இந்த பொருளாதார அடியாட்களின் வேலை. அவ்வாறு சம்மதிக்காத அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் மற்றவர்களை கலகம் மற்றும் புரட்சி செய்ய தூண்டி விட்டு அந்த இடத்தில் தனக்கு சாதகமானவர்களை அமர்த்தி தான் நினைத்தை அமெரிக்கா அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ளும். இந்த பொருளாதார அடியாட்கள் தனியார் நிறுவனங்களுக்காகவே பணிபுரிவார்கள். ஆனால் அந்த தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறைமுக கூலிகள். ஒரு நாட்டியில் பொருளாதார அடியாட்கள் தோல்வியடைந்தால் சி.ஐ.ஏ ( C.I.A ) வால் இயக்கப்படும் இன்னொரு வகையான அடியாட்கள் “குள்ளநரி” களை கொண்டு அமெரிக்க செய்து முடிக்கும்.

ஈக்வடார், பனாமா, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், கொலம்பியா, வெனிசுலா என்று எண்ணெய் வள நாடுகளை கொள்ளை அடிக்க அமெரிக்கா செய்த குள்ளநரி வேலைகளைலும் அவர்களுக்கு ஒத்துழைக்காத பனாமாவின் ஜெனரல் டோரிஜோஸ், ஈக்வடாரின் பிரசிடெண்ட் ரோல்டோஸ் போன்றவர்கள் விமான விபத்தில் இறந்தார்கள். நிற்க. கொல்லபட்டார்கள். இது போன்ற வளைகுடா நாடுகளில் நடக்கும் போர்களும்,ஆட்சி மாற்றும்கலும் அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் பற்றிய புரியதலை ஏற்படுத்துகிறது.

நாசிக். S
DXB

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)