Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Sep 6, 2016

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குறை கூறியதால் பாகிஸ்தான் அதிர்ப்தி

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குற்றம் சாட்டியதால் பாகிஸ்தான் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய அரசை நிலைபெரச்செய்வது குறித்த பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த குற்றச்சாட்டால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை மற்றும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொல்வதாகவும், மற்ற தீவிரவாத அமைப்புகளான ஹக்கானி குழு உட்பட பல குழுக்களுக்கு அது அடைக்கலம் அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. (செய்தி – வாய்ஸ் ஆப் அமெரிக்கா)
ஒபாமா அரசு, மாணிய அடிப்படையில் பாகிஸ்தானுக்கு விற்கவிருந்த F 16 போர் விமான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அண்மையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் “பாகிஸ்தான் நட்பு நாடா அல்லது எதிரி நாடா” என்ற தலைப்பில் நடந்த விவாதம் பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய ஆப்கனிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கிவரும் ஹாக்கணி, தாலிபான் போன்ற குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. ஆகையால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துவரும் பொருளாதாரம் மற்றும் இராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை பதிவுசெய்தனர்.
ஆப்கனிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதரான ஸல்மே கலில்ஜாத் அமெரிக்கா, வட கொரியாவை கையாளுவதை போல் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஆப்கனிஸ்தானில் தனக்கு சாதகமான நாடவடிக்கைகளை சாதித்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனினும் பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறிய பிரிவினரால் எழுப்பப்பட்ட அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறிவிட்டனர். (செய்தி – பிஸ்னஸ் ரேகார்டர்)
செய்தி கண்ணோட்டம்:
அமெரிக்காவின் குற்றச்சாட்டால் பாகிஸ்தான் ஆச்சரியபடவோ, அதிருப்தி அடையவோ ஒன்றும் இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரை, ஆசியாவில் தனது முதன்மை ஏஜென்டாக இந்தியாவை நிலைநிறுத்த பாகிஸ்தானை பணயமாகவே பயன்படுத்துகிறது. மேலும் பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் நாடு என்பதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் இஸ்லாமிய அரசான கிலாபா நிறுவப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டவாறே அமெரிக்கா செயல்படுகிறது.
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்

“மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்”
மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் இரண்டு முஸ்லிம் பெண்கள் மத்திய பிரதேசத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அப்பெண்களிடம் அதிக அளவிலான மாட்டு இறைச்சி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பெண்களை கைது செய்யும் தருணத்தில் ஒரு கும்பல் அவ்விரு பெண்களையும் “கோமாதா வாழ்க” என்ற குரலோடு காவல் துறை முன்னிலையில் தாக்கினார்கள் (NDTV செய்தி அறிக்கை).
மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்ஸுர் ரயில் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியிலும், NDTV செய்தியிலும் ஒளிபரப்பானது . காவல் துறையினர் அந்த பெண்களிடம் பறிமுதல் செய்த இறைச்சியை சோதனை செய்ததில் அது பசு இறைச்சி அல்ல எருமை மாட்டின் இறைச்சி என்றும் தெரிய வந்தது . ( இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி)
ஆனாலும் அப்பெண்களிடம் தகுந்த உரிமம் இல்லாததால் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் இந்து மக்கள் பசு மாட்டை புனிதமாக கருதுகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் பசுவை அறுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
சென்ற மாதம் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் பசுவை அறுத்ததாக கூறி 4 தலித் இனத்தை சேர்ந்தவர்களை ஆடைகளை அவிழ்த்து காரில் கட்டிவைத்து ஒரு இந்து கும்பல் கடுமையாக தாக்கியதால் தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி கண்ணோட்டம்:
இந்திய அரசியல் வாதிகள் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறி பெருமை கொள்கின்றனர். ஆனால் உண்மையோ இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமக்களாக தான் கருத படுகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்து வெறியர்களால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கையால் முஸ்லிம்கள் வரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14.4% சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் இருகின்றனர், ஸச்சார் அறிக்கை படி 31% சதவிகித முஸ்லிம்கள் அதாவது மூன்று முஸ்லிம்களில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறுகின்றது..
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர் வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக் கூடாது

“ஐரோப்பாவிற்கு முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர்வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக்கூடாது என்று டச்சு (நெதர்லாண்டு) வலதுசாரி தலைவர் கீர்ட் வில்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்”.

சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளின் ஒருவர் ISISயின் பெயரால்- அண்மையில் ஜெர்மனியிலுள்ள அன்ஸ்பாக் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலையொட்டி, நெதர்லாண்டின் சுதந்திர கட்சியின் தலைவரான கீர்ட் வில்டர்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருப்பது தீவிரவாதிகள் நுழைவதற்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கிறது என்று கூறி நெதர்லாண்டின் பிரதமர் மார்க் ரூட் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சென்ற மாதம் அமெரிக்க ஊடகத்தில் (Breitbart) வெளிவந்த கட்டுரை ஒன்றில் வில்டர்ஸ் கூறுகையில், முஸ்லிம்கள் இஸ்லாத்தை புறம் தள்ளுமாறும், மேற்குலகின் சுதந்திரப்போக்கை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவர் அக்கட்டுரையில் குறிப்பிடுகையில் ‘இஸ்லாம் சர்வாதிகார போக்கை கொண்ட மார்க்கம், அதன் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளானவர்கள் தான் முஸ்லிம்கள்.

மேலும் அக்கட்டுரையில் அவர் எழுதுகையில், முஸ்லிம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரின சேர்க்கையாளராக மாறுவதை பற்றி சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பெண், முஸ்லிம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய முன் வருவதற்கு கற்பனை செய்ய வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்துவத்திற்கோ, வேறு மதத்திற்கோ அல்லது இறைமறுப்பாளராகவோ மாற முன் வர வேண்டும்.

இது போன்று முஸ்லிம்கள் சிந்திக்க தொடங்கினால் அது அவர்களுக்கு மட்டுமன்றி மேற்கத்திய கலாச்சாரத்தின் நலனிற்கும் உகந்ததாகும்.

முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமிய மார்க்கத்திற்கு புறமுதுகு காட்டி விட்டு, கிறிஸ்துவராகவோ, இறை மறுப்பாளராகவோ அல்லது வேறு கொள்கைகளை நோக்கி விரைய வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்கள் தங்களை இஸ்லாம் மற்றும் முஹம்மதின் கடிவாளத்திலிருந்து விடுவித்து கொள்வதே அவர்களுக்கு சிறந்ததாகும். இவ்வாறு வில்டர்ஸ் தனது கட்டுரையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்தை பதிவு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நெதர்லாண்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தேர்தலுக்கான கருத்து கணிப்பில் இவர் முன்னிலையில் உள்ளார். இவர் வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி மற்றும் வலதுசாரிகளின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கை கையாளுபவர் என்பது பலரும் அறிந்ததே.

வில்டர்ஸ்யின் எழுத்தில் 2008 ஆம் ஆண்டு ‘பித்னா” எனும் ஆவணப்படம் வெளிவந்தது அதில் இஸ்லாத்தையும், குர்ஆனையும் தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்தது முஸ்லிம்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

செய்தி கண்ணோட்டம்:

முஸ்லிம்கள் இஸ்லாத்தை முழுமையாக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்ற முயல்வதும், அதை நிலைநிறுத்தும் உண்மையான இஸ்லாமிய அரசான கிலாபாவை நோக்கி முயற்சிகள் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாததால் இஸ்லாத்திற்கெதிரான இவர்களது கருத்துக்களும், செயல்பாடுகளும் அப்பட்டமாக வெளிபடுவதை காணமுடிகிறது. போர் காரணமாக முஸ்லிம்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதை தடுக்கும் வகையிலான இவரது கருத்துக்கு ஐரோப்பியர்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது.

http://sindhanai.org

செய்தி பார்வை 29.07.16



Jul 22, 2016

வெடிகுண்டுத் தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 40 பேர் பலி

AFP

அலெப்போ நகரில் வெடி குண்டு தாக்குதல் நடத்தி, சிரியா கிளர்ச்சிக்காரர்கள், சுமார் 40 அரசு ஆதரவு சிப்பாய்கள் மற்றும் போராளிகளை கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


படையினர் பெருமளவு பயன்படுத்தும் கட்டடத்துக்குக் கீழே தோண்டப்பட்ட சுரங்கப் பாதைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக பிரிட்டன் ஆதரவு பெற்ற மனித உரிமைக்கான சிரியா அவதானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் வியாழக்கிழமையன்று நடத்தப்பட்டது ஆனால் அதன் விளைவுகள் தற்போதுதான் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


BBC

Jul 11, 2016

இராக் மீதான டோனி பிளேரின் போர் நியாயமற்றது: சில்காட்



சதாம் ஹுசைனிடம் இருந்து பிரிட்டனுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லாத நிலையில், அமைதி வழிக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி முடிக்காமலே பிரிட்டிஷ் அரசாங்கம் 2003 ஆம் ஆண்டில் இராக் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இணைந்ததாக அந்த போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
தவறான உளவுத்தகவல்களின் அடிப்படையில் இராக் மீது போர் தொடுக்கும் கொள்கைமுடிவு எடுக்கப்பட்டது தெளிவாகியுள்ளதாக சர் ஜான் சில்காட் தனது விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளார்.
அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தனது முக்கிய கூட்டாளிகளுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அமெரிக்காவுடன் சேர்ந்து இராக் மீது போருக்கு போனதாகவும் அந்த விசாரணை அறிக்கை கூறியுள்ளது.

பிரிட்டன் அரசியலில் முக்கிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சில்காட் விசாரணை அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கும் காணொளி.

BBC

Jul 8, 2016

ரமதானும் குண்டுவெடிப்புகளும்

முஃமீன்களின் குருதி அநியாயமாக சிந்தப்பட்ட இன்னுமொரு ரமதானை சற்று முன்னரே நாம் தாண்டியிருக்கிறோம். இஸ்தான்புல் விமானநிலையத் தாக்குதலாக இருக்கலாம், டாக்கா சிற்றுண்டிச் சாலைச் தாக்குதலாக இருக்கலாம், கராச்சியில் கவ்வாலின் படுகொலையாக இருக்கலாம், பக்தாத் சிடி சென்டர் குண்டு வெடிப்பாக இருக்கலாம், இன்று புனித்தளமான மதீனா அல் முனவ்வரா உட்பட அரேபிய தீபகற்பத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களாக இருக்கலாம் - அவை அனைத்தும் ரமதானின் புனிதத்தன்மையை மதியாத, உம்மத்தை கதிகலங்க வைத்த நிகழ்வுகளாக இடம்பெற்று இருக்கின்றன.
இவ்வாறு இந்த புனித மாதத்தில் பதைக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட எமது உறவுகளை அல்லாஹ்(சுபு) ஷ}ஹதாக்களாக ஏற்றுக்கொள்வானாக! இவற்றில் அகப்பட்டு காயமடைந்தவர்களுக்கு விரைவான சுகத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிறைவான பொறுமையும் வழங்குவானாக!
இவை இஸ்லாமிய குழுக்களில் கைவேலைகள் என்று சிலர் கூற, இன்னும் சிலர் அவை போன்ற குழுக்களின் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட சில தனிநபர்களின் தன்னிச்கையான கருமங்கள் என நம்ப, இன்னும் சிலர் இவை வெளிநாட்டு நாசகார பாதுகாப்பு முகவர்களின் சதிவேலைகள் என வாதாடலாம்.
எனினும் எது நிச்சயமானது என்றால் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சூழ்ச்சிகள் பலிக்காத அல்லாஹ்(சுபு)வின் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்பதே.
மேலும் எது நிச்சயமானது என்றால் சிந்தப்பட்ட இரத்தையும், உருவாகியிருக்கும் பீதியையும் தாண்டி இந்த நிகழ்வுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் எதிரிகளும், முஸ்லிம்களின் எதிரிகளும் கச்சிதமாகப் பயன்படுத்துவார்கள் என்பதுமே.
  • முஸ்லிம் உலக அரசுகள் இந்த நிகழ்வுகளை விமர்சகர்களினதும், அரசியல் எதிராளிகளினதும் குரல்வலைகளை நசுக்குவதற்காக பயன்படுத்துவார்கள். அத்தகையவர்கள் வன்முறை நடவடிக்கைகளுடன் எவ்வித தொடர்பற்றிருந்தாலும் கூட. சவூதி மன்னர் சல்மான் தீவிரவாதத்தை இருப்புக்கரம் கொண்டு நசுக்கப்போவதாக நேன்று முன்தினம் தெரிவிருத்திருந்தமை இதற்கொரு நல்ல சமிக்ஞை.

  • மேற்குலக அரசாங்கங்கள் தமது இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு இந்தத் தாக்குதல்களை பயன்படுத்துவார்கள்.

  • இஸ்லாத்தின் எதிரிகள் இந்தத் தாக்குதல்களை இஸ்லாத்தின் அரசியல் சிந்தனைகளை மலினப்படுத்துவதற்கும், இஸ்லாத்தை மதச்சார்பின்மையாக்க அழைப்பு விடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

  • இந்த நிகழ்வுகள் முஸ்லிம் உலகில் காணப்படும் இஸ்லாமிய மாற்றத்திற்கான அழைப்புக்களிலிருந்து மக்களை தூரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். 70களின் எகிப்த்திலே பயன்படுத்தப்பட்டதைபோல...90களில் அல்ஜீரியாவிலே பயன்படுத்தப்பட்டதைப்போல...

  • இத்தகைய நடவடிக்கைகளைக் பயன்படுத்தி இஸ்லாமே வன்முறைகளின் தோற்றுவாய் எனப் பரப்புரை செய்யப்படும் புனைவுகளால்; பஷாரினது அல்லது சீசியினது சடவாத அரசுகள் நிகழ்த்தும் வன்முறைகளும், காலணித்துவ அல்லது நவகாலணித்துவ அரசுகளான சவூதியும், குருங்குழுவாத பக்தாத் அரசும் புரியும் அயோக்கியங்களும்;, மேற்குலக சக்திகள் ஆளில்லா விமானங்களையும், நேரடி படையெடுப்புக்களையும்; பயன்படுத்தி மேற்கொள்ளும் அத்துமீறல்களும், பலஸ்தீனத்திலும், காஷ்மீரிலும் தசாப்த்தங்களாக தொடரும் ஆக்கிரமிப்புக்களும் மூடி மறைக்கப்படும். இஸ்லாமே அனைத்து பிரச்சனைகளுக்குமான சூத்திரதாரி என காட்டப்படும்.

ஆனால் உண்மை தலைகீழானது. இஸ்லாத்தின் அரசியல் பிரசன்னம் உலகில் இல்லாமையே அனைத்து பிரச்சனைகளுக்குமான மூலம் என்பதைதான் வரலாறு பகர்கிறது!
எமது உலகில் நிலைக்கும் இந்த அராஜகச் சூழல் 1924 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உத்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சியிலிருந்தே வீரியமடைந்தது.
இன்று முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதோர்களையும், குருங்குழுவாத வேறுபாடுகளாலும், சிந்தனைப்பள்ளி பிரிவுகளாலும் வேறுபட்டவர்களையும் ஓர் தேசத்தின் பிரஜைகளாக நீதமாக வழிநாடத்தும் கலீஃபா எம் மத்தியில் இல்லை. மாறாக இன்று எம்மீது வீற்றிருப்பது பிரித்தாளும் நரித்தனத்திற்கு இந்த வேறுபாடுகளை பயன்படுத்தும் கொடுங்கோல் ஆட்சியாளர்களே.
வெளிநாட்டுப் படையெடுப்புக்களில் இருந்து எம்மை பாதுகாப்பதற்கும், எமது நிலங்களை ஆக்கிரமிப்புக்களிலிருந்து மீட்டெடுப்பதற்கும் எமக்கொரு கேடயம் (இமாம்) இல்லை. எது சரி, எது பிழை என அதிகார பூர்வமாக வழிகாட்ட எமக்கொரு தலைமை இல்லை. எமது நிலங்களில் இன்றிருக்கும் உயர்தர ஆன்மீகத் தலைவர்களில் அனேகர் அவ்வவ்வரசுகளின் ஊதுகுழல்களாகவே தொழிற்படுகின்றனர்.
உலக வல்லாதிக்க சக்திகளின் கொடிய முதலாளித்துவ கொள்கைகளால் அல்லலுறும் முஸ்லிம்களையும், ஏனைய நலிவுற்ற மக்களையும் மீட்டெடுப்பதற்கு எமக்கொரு அமீருல் முஃமிமீன் இல்லை. மாறாக கொடிய முதலாளித்துவதற்கு இஸ்லாமியச் சான்றுதல் அளிப்பதற்கு எம்மில் பல தலைமைகள் தலையெடுத்திருக்கிறார்கள்.
எனவே முஃமீன்களின் உயிரழப்புக்களுக்காக கண்ணீர் வடிக்கும் நாம், இத்தகைய நாசகார நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடையும் நாம் இந்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேற்றப்படும் இன்றைய உலக சூழலை மறந்து அவற்றைப் பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வுகளின் கர்த்தாக்கள் யார்? அரங்கேற்றாளர்கள் யார்? பாத்திரங்கள் யார்? அதற்காக ஆடுவது யார்? பாடுவது யார் என்பதை ஆழமாக நோக்க வேண்டும். இந்த இழி நிலையை உலகு ஏன் அனுபவிக்கிறது? அதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன என்பதை வஹியின் வெளிச்சத்தில் தேட வேண்டும்.
அவ்வாறு செய்தால்...
மனிதகுல அவலங்களின் தீர்வுக்கும், பீடித்திருக்கும் பீதிகளின் முடிவுக்கும், முழு உலக அமைதிக்கும் வல்ல இறைவன் எதனை தீர்வாக முன்வைக்கிறானோ அதன் பக்கம் எம் கவனம் குவியும். உலகம் அமைதிப் பூங்காவாக மலரும். தீர்வு திருமறையின் ஒரே வசனத்தில் இவ்வாறு அமைகிறது,
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அந்நூர்:55)

Sources : Darulaman.net

Jul 3, 2016

காசாவில் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள்

இஸ்ரேலிய போர் விமானங்கள் அதிகாலையில் காசா நகர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹமாஸ் இயக்கத்திற்கு தொடர்புடைய நான்கு இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.

ஹமாஸின் கட்டுப்பாட்டில் தற்போது காசா நிலப்பரப்பு உள்ளது.இந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்திருப்பதாக பாலஸ்தீன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, காசா பகுதியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று, இஸ்ரேலில் உள்ள காலியான மழலையர் பள்ளிக் கட்டிடத்தைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

செய்தி BBC

உலக நிதி நெருக்கடிக்கு பிறகு கிரேக்கத்தை விட்டு வெளியேறிய அரை மில்லியன் மக்கள்

2008 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கிரேக்க வங்கி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையில் தொடங்கிய , வெளியேறியோர் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டு 100 ஆயிரத்திற்கு (ஒரு லட்சம்) மேலானோராக அதிகரித்து, தொடர்ந்த ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி கண்டது.

ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்பட வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புகளை பெற்று, பலரும் வெளியேறியுள்ளதாக நம்பப்படுகிறது.

கிரேக்கத்தின் வேலையில்லா திண்டாட்டம் ஏறக்குறைய 25 சதவீதமாக இருக்கிறது. இளைஞர்களின் மத்தியில் இந்த சதவீதம் இன்னும் அதிமாகும்.

செய்தி BBC

எமது சரியான பார்வை:

தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவதுபற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்குவது பற்றியும் மட்டுமே குடியேற்றநாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப்பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரிநிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.

மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைக்கும் வழிமுறையும் சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும்தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது என்பதை சம கால வரலாறு கூறிநிற்கின்றது.

இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனிதசமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும்.

இஸ்லாமியர்களின்பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும்நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின்படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு எனஇஸ்லாம் கருதுகிறது.


2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம்கருதுகிறது.


3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும்,இறைவனின் வளங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம்கருதுகிறது.


4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும்இஸ்லாம் இதற்காக நிர்வகிக்கிறது.


ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பைஉறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.

எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ-இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம்உம்மாவிடையே, அல்லாஹ்வின் வளங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொருமனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.


பங்களாதேஷ் முஸ்லீம் உம்மாவின் புதிய பலிபீடமா!? (ஒரு சிறு குறிப்பு )


எமது பழிவாங்கும் சிந்தனை, அவசியமற்ற அவசர முடிவுகள் போராட்டத்தை வழிநடாத்துமாக இருந்தால் எதிரிக்கு சாதகமான அரசியலை நாம் தொட்டு விட்டோம் என்பதை உணர வேண்டும்! சித்தாந்தவழி சிந்தனையில் இருந்து திட்டமிடலும் போராட்டமும் நெறிப்படுத்தப்படல் வேண்டும்.

மிலிட்டரி ரிபலியன்ஸ இலகுவாக நவ காலனிஸ்டுகள் தங்க கான்ரோல்ல எடுத்திடுவாங்க! ஒரு கொள்கை வழி அரசற்ற நிலையில அது மிக மிக ஆபத்தான பாதை என்பத மறந்திடக் கூடாது!

பங்களாதேஷ் தாக்குதல் சம்பவத்தின் பின் இந்தியன் ராவின் மறைகரம் தொழிற்பட்டிருக்குமா? என சிந்திக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு! இத்தகு உளவு அமைப்புகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை செய்வதன் ஊடாக ஒருவகை செயற்கை அவசர நிலையை இந்த பிராந்தியத்தில ஏற்படுத்தி அதில் தமக்கு சாதகமான அரசியல் இலாபங்களை அனுபவிக்கலாம்!

பாகிஸ்தானிலோ, இந்தியாவிலோ இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் அது உலகின் கவணத்தை ஈர்த்திருக்காது! ஏன்னா ஏற்கனவே இந்தப் படமெல்லாம் ஓட்டியாச்சு! எனவே தான் புரஜக்டர பங்களாதேஷ் பக்கம் திருப்பிட்டாங்க!

ஏற்கனவே ஷசீனா அரசு இஸ்லாமிய சிந்தனா வாதிகள் மீது கடும்பிடி காட்டியதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்! பலியாடுகளும் பலிபீடங்களும் தயார் செய்யப் பட்டதாகவே நாம் ஊகிக்க முடியுது! எதிர்கால நடவடிக்கைகள் இந்த ஊகத்திற்கான ஆதாரங்களை தரலாம் இன்ஷாஅல்லாஹ்.

Mar 24, 2016

சவுதி அரேபியா காய்ந்து வருகிறது

செய்தி பார்வை 17.02.16


 
 
தலைப்பு செய்திகள்:

இங்கிலாந்தின் மத்திய கிழக்கின் தடுமாற்றம்
 
சவுதி அரேபியா காய்ந்து வருகிறது
 
சிரியாவிலுள்ள மருத்துவமனைகளை தாக்கியது ரஷ்யா
 
 
இங்கிலாந்தின் மத்திய கிழக்கின் தடுமாற்றம்
 
பிப்ரவரி 15ம் தேதி திங்கட்கிழமை, இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் பிலிப் ஹேமண்ட் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தலை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் அல்லது அவர்களுடைய மஸ்ஜித்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சிறைகளில் நடப்பது என்ன என்பது பற்றி குருட்டுத்தனமாக இருக்கின்றனர் என இஸ்லாமிய நாடுகள் மீது குற்றம் சாட்டினார். மேலும் அவர் (மேற்கினது ஆதரவு பெற்ற) முஸ்லம் தலைவர்கள் தங்களது ஆக்ரோஷமான திட்டங்களை கொண்டு குடிமக்களை சிறை பிடிப்பதை விமர்சித்து  ”சில சமயம் மக்களை சிறை வைப்பது நல்ல விஷயம் தான், ஆனால் இவ்வாறு சிறை வைப்பது மக்களை சிந்திப்பதில் இருந்து தடுத்து நிறுத்த போவதில்லை மாறாக பல மக்களை இந்த அடிப்படைவாத சிந்தனையை நோக்கிய ஈர்ப்பை பலமடைய செய்யும்.” என கூறினார். அவருடைய பேச்சின் முடிவாக இங்கிலாந்தின் அடிப்படைவாத்த்திற்கு எதிரான கொள்கைகளை பாராட்டி பேசி மற்ற அரசியல் தலைவர்கள் இந்த கொள்கையை உதாரணமாக எடுத்து செயல்பட கோரிக்கை விடுத்து அவர் பேச்சை முடித்து கொண்டார். இஸ்லாமிய அரசியல் சிந்தனையை ஒடுக்கும் விதமான இந்த கொள்கையை சமீப காலமாக பல வழிகளில் செயல்படுத்தும் காரியங்கள் முடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை அச்சுறுத்துவது, குழந்தைகளை பற்றி அரசு அதிகாரிகளிடம் புகார் அளிப்பது மற்றும் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் பள்ளிக்குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் வேவு பார்க்க தூண்டுவது இது போன்றவை அந்த திட்டங்களில் சில. மத்திய கிழக்கு நாடுகள் அரபு வசந்தத்திற்கு பிறகு மீண்டும் சாதாரண நிலைக்கு வந்து கொண்டிருக்கும் வேலையில் அல்லது சிரியா போன்று தனது எதிர்காலத்தை தீர்மாணிக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் வேலையில், இஸ்லாமிய உணர்ச்சிகள் அதிகரித்து வருவது மேற்குலக நாடுகளுக்கு தங்களது கைப்பாவைகளை அங்கு நிலை திறுத்துவதற்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.  மேற்குலகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என்றால் அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்துள்ளன, எனவே ஒரு புதிய மதசார்பற்ற அரபுகளை உருவாக்க அரபு நாடுகளில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு இருந்தாலும் இந்த திட்டங்கள் உள்நாட்டில் தோல்வியை தழுவினதை போன்று மத்திய கிழக்கிலும் தோல்வியை கவ்வும் என்பதில் சந்தேகமில்லை.
 
சவுதி அரேபியா காய்ந்து வருகிறது
 
பிப்ரவரி 16ம் தேதி செவ்வாய் கிழமையன்று, சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் மற்ற எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணை உற்பத்தியை நிறுத்தி கொண்டால் தாங்களும் எண்ணை உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக அறிவித்தன. எனினும் ஈரான் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவு, அதற்கு காரணம் ஈரான் மீதிருந்த சர்வதேச தடை சமீபத்தில் தான் நீக்கப்பட்டுள்ளது அதனால் சர்வதேச சந்தை அதற்கு திறந்து விடப்பட்ட காரணத்தால் அதன் எண்ணை உற்பத்தி அதிகரிக்க கூடும். எனினும் இந்த பேச்சுவார்த்தை ஈரான் மீதிருந்த தடை நீக்கம் செய்யப்படுவதற்கு முன் நடைபெற்று இருந்தால் சரியாக இருந்திருக்கும், இருப்பினும் ஈரானை சேர்க்காமலே தற்போதைய சர்வதேச எண்ணை விநியோகம் அதிகரித்து இருக்கின்ற காரணத்தால் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவத்தை இழந்துள்ளது. இந்த உபயோகமற்ற ஒப்பந்தம் எண்ணை விலையில் எதிரொலித்திருக்கின்றது, இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பினால் LCOcl பாரல் ஒன்று 35.55 டாலருக்கு உயர்ந்துள்ளது ஆனால், இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் விலை 34 டாலருக்கு குறைந்துள்ளது. ஈரான் தன்னுடைய உற்பத்தி திறனை விட குறைவாக தற்போது ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பாரல்கள் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது, ஆகையால் ஈரானுக்குள் எண்ணை உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது இதன் காரணமாக மேலும் விலை குறைக்கக்கூடிய நிலையை உருவாக்கும். எவ்வாறு இருப்பினும் எண்ணை விலைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் 98 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை பட்ஜெட் கொண்ட சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தின் பாதிப்பினை சரி செய்ய இது சிரிய அளவில் தான் உதவும்.
 
சிரியா மருத்துவமனைகளை தாக்கியது ரஷ்யா
 
பஷார் அல்-அசாத் அலெப்போவில் பெரும் தாக்குதலை தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தருணத்தில் ரஷ்யா சிரியாவில் கண்மூடித்தனமாக குண்டு மழை பொழிந்து வருகிறது. மரத் அல்-நு’மன் எனும் இடத்தில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்த பட்சம் 7 பேர் கொல்லப்பட்டனர், பிப்ரவரி 15 திங்கட்கிழமை ரஷ்ய போர் விமானங்களால் இத்லிப் தாக்கப்பட்டது. அருகாமையிலிள்ள அலெப்போ மாகாணத்தில் உள்ள அஸாஸ் எனும் இடத்தில் ஒரு ஏவுகணை குழந்தைகள் நல மருத்துவமனகயை தாக்கியது, இதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மேலும் பல பேர் காயப்பட்டனர். (Doctors Without Borders)எல்லையை கடந்த மருத்துவர்கள் (MSF என்னும் பிரஞ்சு அடைமொழியை கொண்டும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்) எனும் அமைப்பு இந்த மருத்துவ நிலையத்திற்கு உதவி அளித்து வருகின்றனர், இந்த மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்த்தை இவர்கள் உறுதி செய்தனர். இத்லிபில் உள்ள இந்த 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சில மணித்துளிகளுக்கு இடையிலாக நடத்தப்பட்ட இரண்டு தொடர் தாக்குதலில் இதுவரை நான்கு முறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. MSF ன் தலைவரான மேசிமிலியேனோ ரெபோடெங்கோ “இது மருத்துவ கட்டிடம் என தெரிந்தே வேண்டும் என்றே நடத்தப்பட்ட தாக்குதலாக தெரிகின்றது, இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நீர்மூலமாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மீது தொடுத்த தாக்குதலால் இப்பகுதியை சுற்றி வாழ்ந்து வரும் 40,000 மக்களை எவ்வித மருத்துவ சேவையையும் பெறுவதற்கு முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.” என கூறினார். அசாதின் பக்கம் அலை வீச தொடங்கியுள்ள இப்போதைய நிலையில் மருத்துமனை என்றும் பள்ளிக்கூடம் என்றும் பார்க்காமல் ரஷ்யா சிரிய மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி கொண்டு வருகிறது. சிரியா மக்கள் உண்மையான மாற்றத்தை கோரி வருகையில் ரஷ்யா இந்த உணர்வை காலத்திற்கும் அழித்துவிட நாடுகிறது.

Mar 23, 2016

துருக்கி, சிரிய அகதிகளை துரும்பாக வீசி சூதாடி வருகிறது


       

 
 
கடந்த மார்ச் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றியமானது, தான் துருக்கியுடன் ஓர் முக்கிய உடன்பாட்டிற்கு வந்ததாக அறிவித்தது. அந்த உடன்பாடு துருக்கியூடாக சிரிய அகதிகள் மற்றும் ஏனைய அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைவதை துருக்கி கட்டுப்படுத்த வேண்டும் என்பது பற்றியது. அகதிகள் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டிய வேளையில் பிரஸல்ஸிலே இடம்பெற்ற மாநாட்டிலே துருக்கிய பிரதமர் அஹ்மத் தாவுதுக்லு, தாம், துருக்கியூடாக அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை கட்டுபடுத்த வேண்டுமானால், அல்லது ஏற்கனவே துருக்கியை விட்டு கடலினூடாக கிரேக்கத்திற்கு வெளியேறிய அகதிகளை துருக்கிக்குள் மீள அனுமதிக்க வேண்டுமானால் தமக்கு 6 பில்லியன் யூரோக்கள் தரவேண்டும் என்றும், தமது பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் விசாவின்றி பயணிப்பது அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார். அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டுக்குள் அகதிகள் நுழைவதைத் தடுப்பதற்காக தனது எல்லைகளை மென்மேலும் இறுக்கமாக மூடிவந்தன. சிரியா, ஆப்கான், ஈராக் மற்றும் ஏனைய சில முஸ்லிம் நாட்டிகளிலிருந்து யுத்தத்தின் கோரப்படியிலிருந்து தப்பிப்பதற்காக வெளியேறிய முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள என சுமார் 14,000 அகதிகள் மூடப்பட்டிருக்கும் மஸடோனிய எல்லையில் கடுமையான குளிரிலும், மழையிலும் போதுமான உணவோ, மருத்துவ வசதியோ, சுகாதார வசதியோ இன்றி வாடுகின்றனர். “எல்லைகளற்ற வைத்தியர்கள்” என்ற தொண்டு நிறுவனம் ஐரோப்பிய தலைவர்களைப் பார்த்து அவர்கள் “யதார்த்த உலகில் இல்லை” என்று விமர்சித்துள்ளது.
 
சில பிரதிபலிப்புக்கள்:
 
தற்போது பிரஸல்ஸ், உலகிலுள்ள மிகவுமே பலகீனமான, நாதியற்ற மக்களின் உரிமைகளை வணிகம் செய்யும் ஒரு கேவலமான சந்தையாக மாறிவருகிறது. ஐரோப்பிய நாடுகள் தமது குறுகிய அரசியல் மற்றும் தேசிய நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தாமே முன்னின்று உருவாக்கிய சர்வதேச மற்றும் ஐரோப்பிய பட்டயங்களை உதறித்தள்ளி வருகின்றனர். தாம் வளர்த்துவந்த மகோன்னத சட்டங்களாக பீற்றிக்கொள்ளும் தமது மனித உரிமைச் சட்டங்களிலேயே அவர்கள் தடக்கி விழுந்து வருகின்றனர்.
 
அகதி அந்தஸ்த்தை கோரும் மக்களை கூட்டாக மூன்றாவது நாட்டுக்கு பலவந்தமாக வெளியேற்றுவது சர்வதேச மற்றும் ஐரோப்பிய சட்டத்தின் படி தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் அது 1951ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டினதும், மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டினதும், ஏனைய சர்வதேச ஒப்பந்தங்களின் தீர்மானங்களினதும் அத்துமீறலாகும். இவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற நினைப்பது பற்றி கருத்துத் தெரிவித்த ஐ. நா சபையின் அகதிகளுக்கான உயர் ஆளுநர், “சிரிய அகதிகளை நாடுகடத்துவது அவர்களின் பாதுகாப்பை கடுமையாக கேள்விக்குள்ளாக்குவதுடன், அவர்களை மீண்டும் யுத்த வலயத்திற்குள் தள்ளும் நிலையை உருவாக்கும்” என்பதாக எச்சரிக்கிறார். ஐரோப்பாவின் அதிகரித்து வரும் இந்த நிலைப்பாட்டை விமர்சிக்கின்ற “த காடியன்” பத்திரிகையின் ஒரு கட்டுரையாளர் “ ஐரோப்பா பணம் கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் ஒரு விடயத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதுதான் அகதிகளை தமது எல்லைக்கு வெளியே வைத்திருப்பது” என எழுதுகிறார். ஆரம்பம் தொட்டே அகதிகளை தனது நாட்டுக்குள் பெருமளவில் வரவேற்ற ஜேர்மனிய ஆளுநர் அன்ஜெலா மேர்க்கலின் நிலைப்பாட்டால் உள்நாட்டுக்குள்ளும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் அவரது ஆதரவு பெருமளவில் சரிந்து வருவதை நாம் அவதானிக்கிறோம்.
 
இந்த சூழலில் சிரிய அகதிகள் பிரச்சனை தொட்பாக ஒரு முஸ்லிம் நாடான துருக்கி அடுத்தடுத்து எடுக்கின்ற நிலைப்பாடுகள் எம்மை வாந்தி எடுக்கச் செய்கின்றன. முதலாளித்துவ, தேசியவாத துருக்கிய அரசாங்கம் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அகதிகளின் அவலத்தை ஐரோப்பாவில் தான் அடைய நினைக்கும் அரசியல் இலக்குகளுக்காக சூதாடும் சீட்டாகப் பயன்படுத்தும் கேவலத்தைச் கனகச்சிதமாகச் செய்து வருகிறது. கிரேக்கத்திலும், ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் பச்சிளம் பாலகர்களுடன், ஆண்களும், பெண்களும் தம்மை கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள எதுவுமின்றி உரைந்து போகும் காட்சிகளைக் கண்டபோதோ, காற்றிலும், மழையிலும் அடிபட்டு உண்ண உணவின்றியும், ஒதுங்க இடமின்றியும் நின்ற காட்சிகளை பார்த்தபோதோ அல்லது அந்த நாடுகளின் எல்லைப்பாதுகாப்பு படைகளினால் மனிதநேயமற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்ட போதோ, அல்லது சுமார் நாலாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் மத்தியதரைக்கடலிலே மூழ்கி மரணித்தபோதோ, அவர்களை தமது நாட்டுக்குள் வைத்திருப்போம், பாதுகாப்போம், வாழ்க்கை கொடுப்போம் என்று எண்ணாத துருக்கிய அரசு, இன்று இந்த அகதிகளை தமது நாட்டுக்குள் வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கெட்டித்தனமாக பிச்சை கேட்கும் காட்சி முஸ்லிம் உம்மத்திற்கே இழிவைப் பெற்றுத் தருகிறது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் என்ற  சகோதர வாஞ்சையுடன் அல்லது ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பிழைத்து வருகின்ற மக்களை அரவணைத்து அடைக்களம் கொடுப்பது மார்க்கக் கடமை என்ற சிந்தையுடன் ஒரு நொடிப்பொழுதும் சிந்திக்காது, இந்த முஸ்லிம்களின் அவலத்தை தமது அருவருப்பான அரசியல் அறுவடைக்காக பாவித்து வருவதின் ஊடாக, தானும் ஒரு சாதாரண கீழ்த்தர முதலாளித்துவ தேசமே என்பதை துருக்கி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
 
மேலும் இந்த சிரிய அகதிகள் பிரச்சனை, மேற்குலகும், துருக்கியும், ஏனைய பல முஸ்லிம் அரசுகளும் நடைமுறைப்படுத்தும் ஜனநாயகத்தினதும், மதஒதுக்கல் கொள்கையினதும், முதலாளித்துவத்தினதும், தேசியவாதத்தினதும் கோரமான முகத்தை உலகுக்கு தோலுரித்து காட்டியிருக்கிறது. அதேபோல இந்த முறைமையின் கீழ் மனித உரிமையை நிலைநாட்டப்போகிறோம் என்ற நியாயத்தைக் கூறி ஏனைய நாடுகளின் மீது  குண்டு வீசி, ஆக்கிரமித்து, காலணித்துவம் செய்யும் அரசுகள், தமது வாக்கு வங்கிகளில் அரசியல் பிரபல்யத்தை வளர்த்துக் கொள்வதற்காக அடக்குமுறைக்குள்ளான பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பிடிங்கி எறிவதையும் நாம் அவதானிக்கிறோம். இந்த முறைமைகள் கொள்கையை விட ஜனரஞ்சகத்தை தூக்கிப்பிடிப்பதை காண்கிறோம். இந்த முறைமைகள் மனிதர்களிடமிருந்து மனிதத்தையும், மனிதாபிமானத்தையும், அகற்றி, மனித அவலங்களைக் கண்டு கசியாத கண்களையும், அழுகுரல்களைக் கேட்டு கலங்காத உள்ளத்தையும் விதைத்திருப்பதை கவலையுடன் நோக்குகிறோம்.
 
அகதிகளாக்கப்பட்டு பொருத்தமான அடைக்களத்தை பெற்றுக்கொள்ள முடியாது, ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கும், பின் மீண்டும் அந்த நாட்டிலிருந்து பிரிதொரு நாட்டுக்கும் விரட்டப்பட்டு, பல நாடுகளின் எல்லைகளில் வாரக்கணக்காக, மாதக்கணக்காக பல்லாயிரக்கணக்கான மக்களை பரிதவிக்க விடும்  “தேசிய அரசுகள்” என்ற சிந்தனை நடைமுறைக்கு உதவாதது என்பதையும், அது நவீன காலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள சக்தியற்றது என்பதையும் இந்த அகதிகள் பிரச்சனை நிரூபித்துள்ளது.  சொல்லொண்ணா துயரங்களை சந்தித்து வரும் இந்த அகதிகளை உலகம் கையாளும் விதம் இன்றைய உலக ஒழுங்கின் கேவலமான தராதரத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. மனித விழுமியங்களுக்கும், அவர்களின் கண்ணியத்திற்கும் ஒரு சதத்தின் பெறுமதியைக் கூட வழங்க நினைக்காத, சடவாத முதலாளித்துவ முறைமைகளால் ஆதிக்கம் பெற்ற இன்றைய உலக ஒழுங்கு இந்த அகதிகள் பிரச்சனையையோ அல்லது இதுபோன்ற உலகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளையோ தீர்ப்பதற்கு தகுதியற்றது என்பதை உலகம் தற்போது புரிந்து வருகிறது. எனவே ஒடுக்கபட்;ட, நாதியற்ற, பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயநலமும், போட்டியும் நிறைந்த இன்றைய உலக ஒழுங்கின் கீழ் கட்டுண்டிருக்கும் எந்தவொரு தேசமும் முறையாக உதவப்போவதில்லை.
 
எனவே உலகம் உடனடியாக இன்னுமொரு உலக ஒழுங்கை வேண்டி நிற்கிறது. அந்த உலக ஒழுங்கு மனித அவலங்களை, சடவாத பொருளியல் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டோ, குறுகிய தேசிய நலன்களைக் கொண்டோ கையாளாத, மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு அதிலே எவ்விதத்திலும் சமரசம் செய்யாத ஒரு உலக ஒழுங்காக தோற்றம் பெற வேண்டும். அத்தகைய ஒரு உலக ஒழுங்கை நோக்கி உலகம் நகருவதற்கு, நீதியையும், மனித நேயத்தையும் எந்தகைய விலையைக் கொடுத்தாயினும் உலகில் நிலைநாட்டக்கூடிய நேர்வழிபெற்ற கிலாஃபா ஒன்றினால் மாத்திரமே வழிகாட்ட முடியும். அந்த கிலாஃபா அரசு, உலகிலுள்ள ஏனைய தேசங்களுக்கு மனிதர்களை மனிதர்களாக நோக்குகின்ற, அவர்களின் அவலங்களைக் கண்டு தூய்மையாக அக்கறை கொள்கின்ற, நவீன கால சவால்களை தீர்க்கமான அறிவுடனும், நேர்மையான அணுகுமுறையுடனும் எதிர்கொண்டு தீர்த்து வைக்கின்ற பாதையில் வழி காட்டும்.
 
பக்கச்சார்புக்கும், அநீதிக்கும் அப்பாற்பட்டவனான, முழு மனித குலத்தினதும் நலனை நன்கறிந்தவனான அல்லாஹ்(சுபு)வின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செய்யும் கிலாஃபா அரசால் மாத்திரமே மனிதகுலத்தை உய்விக்க முடியும். வரலாற்றில் மனிதநேயத்திற்கும், பெரும்தன்மைக்கும், உதவிக்கரம் நீட்டுவதற்கும் தனக்கென தனியான தடம்பதித்த, முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாது, அல்லல்பட்ட, அவலப்பட்ட மக்களுக்காக தனது எல்லைகளைத் திறந்து அடைக்களம் கொடுத்த பெருமைக்குரிய வரலாற்றை உடைய கிலாஃபா அரசின் மீள் வருகையே இன்றைய உடனடித் தேவையாகும்.  அத்தகைய ஒரு அரசு உலகில் தோற்றம் பெறும் போது ஏன் இறைவன் அவனது இறுதித்தூதரை அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை என்று அழைத்தான் என்பதை உலகம் வெகுவிரைவில் உணர்ந்து கொள்ளும்! இன்ஷா அல்லாஹ்!
 
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல் அன்பியா:107)

Mar 21, 2016

நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகிப்படுத்துவோம்!!!!

செய்தி பார்வை 14.02.16


தலைப்பு செய்திகள்:

நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகப்படுத்துவோம் என்பதை அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷ்யா சிரியாவில் உலக யுத்தம் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி வருகிறது

8 எஃப்-16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்போவதாக அரசவை  கூறியுள்ளது.


நவீன வீட்டு மின்னனு உபகரணங்களை வேவு பார்ப்பதற்காக உபயோகிப்படுத்துவோம் என்பதை அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்களால் மக்கள் அனுப்பும் செய்திகளை மேற்கொள்ளப்பட்டு வரும் குறியீட்டுச் சொற்களால் மறைப்பதின்(encryption) உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணத்தால் அமெரிக்க புலனாய்வு துறை  தனது கண்காணிக்கும் திறமையை இன்னும் இழந்துவிடவில்லை என்பதற்கான ஆதாரம் உங்களுக்கு வேண்டுமானால், தேசிய புலனாய்வு இயக்குனர், ஜேம்ஸ் கிளாப்பர் செவ்வாய் கிழமை அன்று அளித்த வாக்குமூலத்தை விட வேறு எதுவும் தேவையில்லை. ஒன்றுக்கு ஒன்று பிணையப்பட்டு செயல்படுத்த போகும் செயல்கள்  குறித்து கிளாப்பர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் வெப்பநிலை காப்பான்(thermostats), புகைப்பட கருவி மற்றும் இதர சாதனங்கள் அதிகமாக இப்போது இனையத்துடன் பினையப்பட்டுள்ளது – இது புலனாய்வு நிறுவனங்களுக்கு தாங்கள் குறி வைத்திருக்கும் குறிப்பாக அனேகமாக பொது மக்களை வேவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த உபகரணங்களை வாங்கும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இது பற்றி எதுவும் அறியாமல் இருக்கின்றார்கள் என்பது தான் மிகுவும் ஆபாயகரமானதாக இருக்கின்றது. “வரும் காலங்களில், புலனாய்வு துறை இதை (இணையதள விஷயங்களை) அடையாளத்திற்காகவும், வேவு பார்ப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்காகவும் அல்லது தொடர்புகளுடன் இணைப்பை ஏற்படுத்தி கொள்வதற்காகவும் மற்றும் அவர்களக்காக வேலை செய்யக்கூடியவர்ளை தேர்ந்தெடுப்பதற்காகவும் அல்லது பயன்படுத்துபவரின் தகவல்களை அறிந்து கொள்வதற்காகவும் உபயோப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.” என கிளாப்பர் அரசவையில் “அமெரிக்கவிற்கு எதிரான அச்சுறத்தல்களின் ஆய்வு”(assessment of threats) எனும் வருடாந்திர ஆய்வின் ஒரு பகுதியாக இதை அறிவித்தார். கிளாப்பர் உண்மையில் கூறுவது கடந்த வாரம் ஹார்வர்டின் பெர்கமான் சென்டர் வெளியிட்ட ஒரு மாபெரும் கருத்துக்கணிப்பை ஒத்துப்போவதாகவே உள்ளது. இது எஃப்.பி.ஐ யின் சமீபத்திய கோரிக்கையான நாங்கள் ” இருட்டில் இருக்கிறோம்” – குறியாட்டுச்சொற்களை மாற்றி அமைப்பதன் காரணமாக  சந்தேகத்திற்குரியவர்களை வேவு பார்க்கும் திறனை இழந்து வருகிறோம் – என்பது அதிகமாக ஊதி பெரிதாக்கப்பட்ட விஷயமாகவே இருக்கின்றது, குறிப்பாக ஏனெனில் விசாரணை நிறுவனங்களுக்கு வேவு பார்ப்பதற்கு பல தரப்பட்ட வழிகள் இருக்கின்றன. இது பல புலனாய்வு அறிஞர்களிடமிருந்து கருத்தை எதிரொலிக்க செய்திருக்கின்றது,  இவர்கள் தெளிவாக ஒரு விஷயத்தை எதிரொலிக்கின்றனர், அதாவது “இருட்டில் இருக்கின்றோம்” என்பதை விட நாம் இப்போது “உளவு பார்ப்பதின் பொற்காலத்தில் இருக்கின்றோம்”. தனியுரிமைக்காக வாதாடுபவர்கள் இணையதளத்தை அரசு தனக்கு சாதமாக பயன்படுத்துவதற்கு எந்த அளவு ஆற்றல் உடையது என்பதை பல வருடங்களாகவே அறிந்திருக்கின்றனர். சட்ட நிறுவனங்களும் இதை அறிந்து வைத்திருக்கின்றன, அவை இணையதள நிறுவனுங்களுக்கு விவரங்களை கேட்டு வரும் நீதிமன்ற ஆணைகளுக்கு இணங்க தாங்கள் கடத்தும் விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாத அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. காவல்துறை கூகுல் நிறுவனத்தால் நடத்தப்படும் டிராப்கேம் (Dropcam) நிறுவனத்திடம் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க பொதுமக்களின் வீடுகளில் உள்ள நிகழ்பதிவு கருவிகளில் உள்ள காணொளி பதிவுகளை கேட்டு வருகிறது. வேவு பார்த்து தகவல்களை சேகரிக்கும் நிறுவனமான ஃபிட்பிட்(Fitbit)டிடமிருந்து தகவல்களை பிரதிவாதிகளுக்கு எதிராக பலமுறை உபயோக படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தனியுரிமைக்கான மீறல்களுக்கான சாத்தியக்கூறுகள் தற்போது பல கோடி கணக்கான வீடுகளை சென்று அடைந்துள்ளது: சாம்சங் நிறுவனம் கடந்த வருடம் வீடுகளில் நடைபெறும் உறையாடல்கள் அனைத்தையும் கேட்கும் தன்மை கொண்ட தொலைக்காட்சி பெட்டி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, அது தனது பொருளின் அச்சு பிரதியில் பொதுமக்களை தங்களது அதிமுக்கிய விஷயங்களை இத்தொலைக்காட்சி பெட்டி முன்பு  வைத்து பேச வேண்டாம் என எச்சரித்துள்ளது. {Source: The Guardian}


மேற்கத்திய அரசாங்கங்கள் தங்களது நாகரிக்கதரதின் சரிவு ஏற்பட இருப்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற காரணத்தால் அதற்கு தனது சொந்த மக்களை வேவு பார்க்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இது மக்களின் நலனுக்கு எதிராக அவர்களின் நலன்களை பறித்து தங்களது சொந்த நலன்களை பாதுகாப்பதற்காக பெரும் பணக்காரர்களால் கடத்தப்பட்ட தாராளமய ஜனநாயக கொள்கைக்கு எதிராக கிளர்ச்சி செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட ஒரு நிர்பந்தமான முயற்சி தான் இது.

 
ரஷ்யா சிரியாவில் உலக யுத்தம் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி வருகிறது 


ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ்  அனைத்து சக்திகளும்  சிரியாவில் “இன்னொரு உலக யுத்தத்தை ஏற்படுத்துவதற்கு” பதிலாக ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்ச்சை நடத்தி நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என கூறினார். “அமெரிக்கர்களும் நமது அரபு கூட்டாளிகளும் அங்கு  நிரந்தரமான போர் நடைபெறுவதை விரும்புகின்றனரா என நன்கு சிந்திக்க வேண்டும்”. என்று ஜெர்மனியின் ஹேன்டுல்ஸ்பிளாட் (Handlesblatt) எனும் செய்தித்தாளுக்கு பேட்டியளிக்கையில் கூறினார். இவ்வகையான போரை உடனடியாக வெல்வது என்பது முடியாத காரியமாகும், குறிப்பாக எல்லோரும் எல்லோருக்கும் எதிராக சண்டையிட்டு கொண்டிருக்கும் அரபு உலகில் இது அறவே முடியாத காரியமாகும்.” என கூறினார். இன்னொரு புதிய உலக யுத்தத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு பதிலாக அனைத்து தரப்பினரையும் கட்டாயமாக பேச்சுவார்த்தை மேஜையில் உட்கார வைக்க வேண்டும்” என கூறினார். அமெரிக்காவும் ரஷ்யாவும் பிரச்சினையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தரப்பினரிடமும் போர் திறுத்தத்தை கொண்டு வருவதற்காக அழுத்தம் தர வேண்டும். ரஷ்யா அலெப்போ நகரை சுற்றியுள்ள பகுதிகளில் பஷார் அல்-அசாதிற்கு ஆதரவான படைகள் முன்னேற்றம் அடைவதற்கு உதவும் விதமாக குண்டுகளை வீசி வருகிறது. அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய ஆகாயப்படைகளும் சிரியாவின் வட பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. [Source: Al Arabiyya]

மெட்வடேவ் நிச்சயமாக தவறாக புரிந்து வைத்துள்ளார்! சிரியாவில் மூன்றாம் உலக யுத்தம் சில வருடங்களுக்கு முன்னரே ஐ. நா பாதுகாப்பு அமைப்பின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் அசாதின் பிராந்திய அண்டை நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கொண்ட எதிர்ப்பாளர்கள் மீது மறைமுக மற்றும் நேரடி ஆதரவு அளித்து தாக்குதல்கள் மேற்கொண்ட போதே தொடங்கிவிட்டது. இந்த யுத்தத்தில் பங்கு பெறும் இரு தரப்புகள் தெளிவாகிவிட்டது: ஒன்று மதசார்பற்ற அடிப்படைவாதவாதிகள் மற்றும் அதற்கு எதிராக இஸ்லாம்.


பாகிஸ்தானுக்கு 8 எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய இருக்கிறோம், என அரசவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று ஒபாமா நிர்வாகம் பாகிஸ்தானுக்கு 8 எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய இருப்பதாக அரசவைக்கு தெரிவித்தது. இந்த முன்மொழிதல் ஒப்பந்தம் முப்பது நாள் அறிவிப்பு காலத்தில் இருக்கும் அதன் பின்னர் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்படும். இந்த வாரத்திற்கு முன்னர், அமெரிக்க அரசுத்துறை அரசவைக்கு அது பாகிஸ்தானின் தாக்குதல் திறமையை மேம்படுத்த போவதாக அறிவித்திருந்தது, எஃப்-16 ரக போர் விமானம் சம்மந்தமான ஒப்பந்தங்கள் திறைமறைவாக நடைபெற்றிருக்க கூடும் என்பதற்கான சான்றாகும். மேலும் வியாழனன்று, அரசுத்துறை செய்தி தொடர்பாளர், மார்க் டோனர், ஒரு செய்தி குறிப்பில் அமெரிக்காவின் பாகிஸ்தானுக்கான ஆயுத விற்பனை என்பது தீவிரவாத்த்திற்கு எதிரகவும் மற்றும் அமெரிக்க வெறியுறவு கொள்கையின் நலன்களை பாதுகாப்பதற்கு பெரிதும் உதவும் என கூறினார். இந்த கருத்துக்களை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்களை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட ஒபாமா நிர்வாகத்திற்கு கோரிக்கை விடும் வண்ணமாக சில அமெரிக்க சட்ட வல்லுனர்கள் சில செயல்களையும் அமெரிக்க ஊடகங்கள் அதற்கான பரப்புறையை மோற்கொண்டனர். அரசவை இந்த முன்மொழியப்பட்ட விற்பனையை தாமதித்தாலும், நிர்வாகம் அமெரிக்காவின் அதிமுக்கிய விவகாரங்களின் நலனுக்காகவே என்று வலியுறுத்தி இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றும் எண்ணம் கொண்டுள்ளது. அரசு நிர்வாக செய்தி வெளியீட்டின் போது ஒரு இந்திய ஊடகவியலாளர் செய்தி தொடர்பாளர் மார்க் டோனரிடம் ஒருவேளை குடியரசு கட்சியை சார்ந்த பாப் கார்க்கர் அமெரிக்க வெளயுறவு அதிகாரி ஜான் கெர்ரிக்கு செவ்வாய் அன்று பாகிஸ்தானுக்கு செய்ய உள்ள இந்த விற்பனையை நிறுத்தக்கூறி கடிதம் எழுதினால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு. “இது கொள்கை சம்பந்தமாக இருப்பதால் நடக்கவிருக்கும் ஆயுத விற்பனை  சம்பந்தமாகவோ அல்லது இடமாற்றம் செய்வது பற்றியோ அல்லது கேபிடல் ஹில்லுடன் நாங்கள் நடத்திய முதல் ஆலோசனை பற்றியோ எந்தவித அதிகாரப்பூர்வ அரசவை அறிவிப்பு வெளி வருவதற்கு முன் நாங்கள் எந்தவிதமான கருத்தும் கூற முடியாது,” என டோனர் பதிலளித்தார். ஆனால் அவர் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவி அளித்து வருவது பற்றிய விரிவான விஷயங்களுக்கு பதிலளித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்: “அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களுக்காக நாங்கள் அரசவையுடன் இணைந்து எங்களின் கூட்டாளிகள் மற்றும் கூட்டணி நாடுகளுக்கு  பாதுகாப்பில் உதவும் வண்ணமாக அவர்களின் தாக்குதல் திறனை அதிகரித்து  பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்வோம் என நம்புகிறோம்.”

இந்த விஷயத்தில் பெரும்பாலான பாகிஸ்தானியர்களின் கொழுந்து விட்டு எறியும் கேள்வி என்னவென்றால் பாகிஸ்தான் எஃப்-16ஐ பெறுமா என்பதல்ல ஆனால் அது எவ்வாறு உபயோகப்படுத்தப்படும் என்று தான். ஒரு வேளை பாகிஸ்தான் இந்த எஃப-16 கள பாகிஸ்தானின் எல்லை கட்டுப்பாட்டை மதிப்பிழக்க செய்யும் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு எதிராக உபயோக படுத்த போகிறதா அல்லது பழங்குடி பகுதியில் உள்ள முஸ்லிம்களின் உதிரப்போக்கை இன்னும் அதிகமான அளவில் ஏற்படுத்துவதற்காக உபயோக படுத்த போகிறதா?

Mar 15, 2016

செய்தி பார்வை 10.02.16

தலைப்பு செய்திகள்:
 
 
 - நயவஞ்சக மெர்கல் மற்றும் செல்லப்பிராணி எர்துகான்.
 

- சிரியாவில் நடைபெறும் இனச்சுத்திகரிப்பு.
 

- அலெப்போவின் மீது படையெடுப்புக்கான நேரம் நெருங்கிவிட்டது
.

 நயவஞ்சக மெர்கல் மற்றும் செல்லப்பிராணி எர்துகான்.
 

 2016 பிப்ரவரி 8ம் நாள் திங்கட்கிழமை அன்று துருக்கி மற்றும் ஜெர்மனி நாடுகளின் அதிகாரிகள் “சட்டத்திற்கு புறம்பாக குடியேறுபவர்களை” கட்டுப்படுத்த போவதாக அங்காராவில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலின் துருக்கி பயணத்தை தொடர்ந்து விடப்பட்டது. ரஷ்யா சிரியாவின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவது என்னை ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் என்னை திகிலடைய வைத்துள்ளது என மெர்கல் குறிப்பிட்டார், இந்த சமீபத்திய அலெப்போவின் மீதான தாக்குதல் நடவடிக்கை 35,000 புதிய அகதிகளை துருக்கியின் எல்லைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த வெடிகுண்டு தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அகதிகளின் படையெடுப்பு அதிகரித்தல் ஆகியவற்றை தொடர்பு படுத்தும் அதே வேளையில் ஜெர்மனி சிரியாவில் நிலைகொண்டு அதன் மீது வெடிகுண்டுகளை வீசி அங்குள்ள மக்களை விரட்டியடித்து இன்னும் அதிகமான அகதிகளை உருவாக்கி வரும் அதன் நேச நாடுகளின் விமானங்களை காப்பாற்றி வருகிறது. நிச்சயமாக அறிவார்ந்த செயல் என்னவாக இருக்கும் என்றால் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளை நோக்கி மிக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அகதிகளை உருவாக்காமல் தடுக்க அந்நாட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்களை தடுத்தாலே போதுமானது. எர்துகானும் பழிக்கு உள்ளாவதிலிருந்து தப்பித்தவர் கிடையாது ஏனெனில் அவர் அமெரிக்கா சிரியாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க விமானங்களை துருக்கி விமானத்தளத்திலிருந்து இயக்க அனுமதி அளித்தவர். துருக்கி பில்லியன் கணக்கில் அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதற்காக செலவு செய்யலாம் ஆனால் இந்த சிரியாவின் பிரச்சினையை தனது இராணுவத்தை அனுப்புவதன் மூலம் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைத்துவிட முடியும். துருக்கி தனது அனைத்து வெளியுறவு கொள்கைகளில் வெறுமனே மேற்கத்திய தீர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்து அதற்கு உதவும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது, அது தன்னிச்சையாக தான் எடுக்கவிருக்கும் தீர்வுகளை நடைமுறை படுத்துவதற்கும் அதனை செயலாற்றுவமற்குமான ஆற்றல் அதிகாகவே இருந்தபோதிலும்  அது என்றும் அதற்கென ஒரு தன்னிச்சையான தீர்வுகளை உருவாக்குவதில்லை.
 

 சிரியாவில் நடைபெறும் இனச்சுத்திகரிப்பு.
 

சிரியாவில் கைதிகளை ‘அடியோடு அழிக்கும்’ வேலை நடந்து வருவதாக ஐ.நா வின் குறிப்பிட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறைக்கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மரணம் ஏற்படும் அளவு அடித்துள்ளதாகவும் அல்லது சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் சிக்கி மரணிக்கும் விதமாக அவர்களை  கண்டு கொள்ளாமல் அங்கேயே விட்டு விட்டதாகவும் சர்வதேச விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள், இவ்வகையான செயல்கள் சர்வதேச சட்டப்படி “இனச் சுத்தகரிப்பு” என்னும் வகையை கொண்டது. அதிபர் பஷார் அல்-அசாதின் அரசால் கொல்லப்பட்ட சிறைக்கைதிகளை பற்றிய 25 பக்கங்களை கொண்ட அறிக்கையை ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற விசாரணை குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 2011 மார்ச் முதல் 2015 நவம்பர் வரை எடுக்கப்பட்ட 621 நேர்காணல்களிலிருந்து தொகுக்கப்பட்டதாகும். “அதிகமான அளவில் நடைப்பெற்ற சிறைக்கைதிகளின் மரணங்களை காணும்போது  மனிதநேயத்திற்கு எதிரான இனச்சுத்தகரிப்பு செய்யும் இந்த அளவிற்கான குற்ற செயல்களை செய்த்தற்கு சிரிய அரசாங்கமே முழு பொறுப்பு,” என இந்த விசாரணை குழுவின் தலைவர் பால் பின்ஹெய்ரோ, கூறினார். மேலும் அவர் ” இப்போது உயிரோடிருக்கும் ஒவ்வொரு சிறைக்கைதியும் நினைத்து பார்க்க முடியாத அளவு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.” என கூறினார்.
 


அலெப்போவின் மீது படையெடுப்பபுக்கான காலம் கணிந்துவிட்டது.
 

சிரியாவின் மிகப்பெரிய மற்றும் வர்த்தக நகரம் இப்போது பஷார் அல்-அசாதின் அரசு முழு அளவிலான படையெடுப்பு நடத்த ஆயத்தமாகி வருவதால் பெரும் பிரளயத்தில் சிக்கி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த அரசின் முற்றுகை நடத்த இருப்பதன் காரணமாக தங்களது உணவு மற்றும் இதர வாழ்வாதார தேவைகள் கிடைக்காமல் போக்க்கூடிய அபாயமான நிலையில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் தான் தமஸ்கஸின் அரசு அலவிகளின் கோட்டையான லதாகியாவில் போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பின்வாங்கும் நிலையிலிருந்தது. ஆனால் தக்க சமயத்தில் நடத்தப்பட்ட ரஷ்யாவின் தாக்குதலால் அல்-அசாத் அரசு கவிழ்ந்து விடாமல் பாதுகாக்கப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதல் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும், பின்னர் அது அசாத் அரசுக்கு பலன்களை தர தொடங்கியுள்ளது. இந்த வாரம், ரஷ்ய வான்வழி தாக்குதல் அல்-அசாத் மற்றும் அவருடைய ராணுவப்படைகள் போராளிகள் வசம் இருந்த துருக்கி எல்லையையும் அலெப்போவையும் இணைக்கும் “அஜாஜ் (Azaz corrider) சாலையை நெருக்க உதவியது. அரசின் படைகள் ஷி’ஆ வீரர்களுடன் கூட்டு சேர்ந்து  இந்நகரை தெற்கு, மேற்கு மற்றும் வடக்கிலிருந்து இந்தகரை நோக்கி நகர்ந்து வருவதால் இந்நகரை சுற்றிவளைக்கும் வாய்ப்புகள் இவர்களுக்கு பிரகாசமாக உள்ளது. போராளிகள் வசம் இருக்கும் இப்பகுதி வீழ்ந்து விட்டால் இது அசாதிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் மற்றும் போராளிகளுக்கு இது 2011 ல் இந்த கிளர்ச்சி ஏற்பட்ட காலம் முதல் இதுவரை அது சந்தித்ததில் மிக மோசமான பின்னடைவாக அமையக்கூடும்.

Dec 1, 2015

செய்தி பார்வை : 14 நவம்பர் 2015

தலைப்புகள் :
  • பாரிஸ் தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு ஹோலன்ட் இஸ்லாமிய அரசு (IS) மீது பழிசுமத்தல்.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அப்கானிஸ்தானிய கைதிகள் மீது சர்வதேச கூட்டுப்படையினர் அத்துமீறல் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக சுட்டி காட்டுகிறது.
  • ரஷ்யா இஸ்லாமிய போராளிகளுக்கு புதிய தளமாக விளங்குகிறது.
 பாரிஸ் தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு ஹோலன்ட் இஸ்லாமிய அரசு (IS) மீது பழிசுமத்தல்
 
பிரஞ்சு அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் பாரிஸ் நகரில் தொடர் தாக்குதல் நடத்தி 128 உயிர்கள் வரை கொன்ற சம்பவம் இஸ்லாமிய அரசால்(IS) ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தியவை என குற்றம் சாட்டியுள்ளார், எட்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள் மற்றும் தற்கொலை படையினருடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் “வெளியிலிருந்து ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டதாகும்’ என பிரஞ்சு அதிபர் ஃபிரான்கோஸ் ஹோலன்ட் கூறியுள்ளார். மதுபான விடுதிகள், உணவு விடுதிகள், இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடம் மற்றும் மிகவும் பிரசித்தி பெற்ற கால்பந்தாட்ட போட்டி நடந்த மைதானம் இவைகளை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் இவை. இந்த தாக்குதலுக்கு IS பொறுப்பேற்றுள்ளது. பெல்ஜியத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், பிரான்சில் இரண்டாம் உலகப்போருக்கு பின் அமைதிக்கு எதிராக நடந்த மிக மோசமான தாக்குதல் இது, இதன் விளைவாக ஒரு அவசர நிலையை திரு் ஹோலன்ட் ஏற்படுத்தியுள்ளார் என நீதியமைச்சார் கூறியள்ளார், மேலும் ஐரோப்பாவில் 2004 ல் மேட்ரிட் நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு பின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவம் அதில் 80 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய அரசு (IS) சனிக்கிழமை அன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது அதில் ” எட்டு சகோதரர்கள் மூலம் வெடிகுண்டுகளை கொண்ட இடுப்புவார்களை அணிந்தவாரும் துப்பாக்கிகளை ஏந்தியவாரும்” இந்த தாக்குதலை “மிகவும் ஜாக்கிரதையாக” தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை நோக்கி தொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இத்தாக்குதல் சிரியா மற்றும் ஈராக்கில் IS போராளிகள் மீதான தாக்குதலில் பிரான்ஸ் பங்களிப்பதன் எதிரொலியாக தொடுக்கப்பட்டது என வெளியிட்டுள்ளது. அதற்கு சற்றுமுன் அதிபர் ஹோலன்டு பிரான்ஸ் மீது “ஒரு கோழைத்தனமான வெட்கப்படக்கூடிய மற்றும் கோர தாக்குதல்” தொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரான்ஸ் இதற்கு பதிலடி கொடுக்கும் போது இஸ்லாமிய அரசின்(IS) போராளிகளுக்கு எவ்வித கருணையும் காட்டாது என கூறினார். மேலும் சட்டத்திற்குட்பட்டு அனைத்து உபகரணங்களையும்…..அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போர்க்களங்களிலும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உபயோகிப்பதற்கு உறுதியுடன் இருப்பதாக கூறினார். [மூலம்: BBC]
பிரான்சில் இதுவரை யாரும் பிரஞ்சு மக்களை காக்க தவறிய ஹோலன்டை பார்த்து எந்த கடிணமான கேள்விகளையும் கேட்கவில்லை. 2015 ஜனவரியில் நடந்த சார்லி ஹெப்டோ தாக்குதலிலிருந்து 10500 பேரகள் கொண்ட படையை நிறுவியுள்ளது மேலும் பாதுகாப்பை மேம்படுத்த பல மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது, மேலும் அது ஏற்படுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக எளிதாக மீறப்பட்டுள்ளது. ஹோலன்டு மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரியின் ராஜினாமாவை கோருவதற்கு பதிலாக, சிரியாவில் ராணுவ படையெடுப்பு எடுக்க கோரும் சத்தம் தான் அதிகமாகி கொண்டிருக்கிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அப்கானிஸ்தானிய கைதிகள் மீது சர்வதேச கூட்டுப்படையினரின் அத்துமீறல்களுக்கான ஆதாரம் இருப்பதாக சுட்டி காட்டுகிறது.
 
 ஐ.நா வழக்குறைஞர்கள் 12.11.15 அன்று சர்வதேச படைகள் அப்கானிஸ்தானில் சிறைக்கைதிகளுக்கு உடலளவிலும் உள்ளத்தளவிலும் அத்துமீறி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2003 ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினர் மீது தொடுக்கப்பட்ட குற்றப்புகார்களை விசாரித்து வருகின்றது, ஆனால் இவ்விசாரணையின் நிலை குறித்த இதற்கு முந்தைய அறிக்கைகள் குற்றம் நடத்தப்படது குறித்தும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெளிவற்ற நிலையிலிருந்தது. இதன் சமீபத்திய ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையில் இது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது, நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரி கூறுகையில் அமெரிக்க வீரர்களின் குற்றம்சாட்டப்பட்ட வழக்குகளை விசாரித்ததில் எவ்வித குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கட்டளையிடும் உயர்ந்த பதவியிலுள்ளவர்களை சென்றடையவும் முடியவில்லை. இந்த கண்டுபிடிப்பு நீதிமன்றத்தின் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையை மேலும் முனைப்படைய செய்யும். இது இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர் அல்லாத மற்றும் முன்பு இந்த நீதிமன்றம் அமைவதற்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்த அமெரிக்காவிற்கு பிரச்சினைக்குரியதாக அமையக்கூடும். “அதிபயங்கர விசாரணை யுத்திகளை மேற்கொண்டதின் விளைவாக உடலளவிலும் உள்ளத்தளவிலும் மிகுந்த காயத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.” என விசாரணை அதிகாரிகள் எழுதியுள்ளனர். அவர்கள் சர்வதேச மற்றும் அமெரிக்க படையினர் மேற்கொண்ட அத்துமீறலின் ஆழத்தையும் அளவையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றோம் என கூறினர். NATO படையை சார்ந்த அனைவரும் கூட்டாக அப்கானிஸ்தானில் 2001 ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு படை திட்டத்தில் பங்கு கொண்டனர். அமெரிக்க மற்றும் இதர நாட்டு படைகள் தொடர்ந்து அப்கானிஸ்தானில் NATO பயிற்சி திட்டம் என்ற பெயரில் நீடித்து வருகின்றனர். [மூலம்: ரய்டர்ஸ்]
என்னதான் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அப்கானிஸ்தானில் நடந்த ஆக்கிரமிப்பாளர்களின் கரங்களால் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கான ஆதாரத்தை கண்டுபிடித்தாலும். அமெரிக்க படையினரை தண்டிப்பதிலிருந்து பாதுகாக்கும் அப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையேயான இரு நாட்டிற்கு மத்தியில் ஏற்பட்ட ஒப்பந்தம் நீடித்து இருக்கையில் இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்த குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தர முடியுமா என்பது கேள்விக்குறி.
 ரஷ்யா இஸ்லாமிய போராளிகளின் புதிய தளமாக விளங்குகிறது
 
ரஷ்யா சிரியாவில் தனது பங்களிப்பை அதிகப்படுத்திவரும் நிலையில், அது தனது ராணுவத்தை புதை குழியில் சிக்க வைக்கக்கூடிய ஆபத்தான நிலையை எடுத்துள்ளது. அதன் படையெடுப்பு ஏற்கெனவே அதற்கு இருந்த உள்நாட்டு அச்சுறுத்தலை அதிகப்படுத்தியுள்ளது, அது முழு நாட்டையும் நிலைகுலைய செய்யக்கூடியதாக இருக்கின்றது. ரஷ்யாவில் ஒரு புது வகையான இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்து வருகிறது, அதற்கு எரியூட்டும் விதமாக ரஷ்ய வீரர்கள் உள்நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த அளவிற்கு சாத்தியக்கூறுகளுடன் ஒரு தீவிரமான பயங்கரவாத குழு அமைவது என்பது நினைத்து பார்க்கக்கூடிய அளவில் கூட இருந்திருக்கவில்லை. அந்நேரத்தில் ரஷ்யா மண்ணில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வட காகேசிய பகுதியை சார்ந்த செச்நியா போராட்டக்காரர்களின் தூண்டுதலின் பெயரில் நடத்தப்பட்டது. 2009 ல் செச்சென்யாவில் தான் வெற்றி கொண்டதாக அறிவித்த ரஷ்யா அடிப்படைவாத பயங்கரவாதத்தின் அச்சத்தை பெருமளவில் கட்டுப்படுத்துவதற்கு உறுதியுடன் இருந்தது. ஆனால் பயங்கரவாத இஸ்லாம் காணாமல் போய்விடவில்லை. உண்மையில், அடிப்படைவாத கருத்துக்கள் செசன்யாவிலிருந்து ரஷ்ய மத்திய பகுதி முழுவதும் பரவியது. அவை மத்திய கிழக்கினால் பயிக்சியளிக்கப்பட்ட ரஷ்ய இமாம்கள் மூலம் பரப்பப்பட்டு அதற்கு நாட்டின் முஸ்லிம் குடிமக்கள் மற்றும் மாஸ்கோவிலுள்ள மத்திய ஆசியாவிலிருந்து குடி புகுந்தவர்கள் என புதிய ஆதரவாளர்களை கிடைக்கப்பெற்றது. மேலும் இளைஞர்கள் சிலர் மற்றும் நீண்ட காலமாக இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு கொண்ட முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாக மாறி வருகின்றனர். அவர்களின் ஐரோப்பிய சகோதரர்களை போல இவர்கள் மேற்கத்திய ‘சிலுவை போராளிகளுக்கு’ எதிராக கோபத்தை வரவைக்கும் இணையதள காணொளிகளையும் சமூகதள செய்திகளையும் பார்க்கின்றனர். இது ரஷ்யாவிற்கு மிகவும் ஆபத்தாகும். நாடு பயங்கரவாத இஸ்லாத்திற்கு எதிரான போரில் புதிய முனையாக மாறிவிட்டது, ஐரோப்பாவின் அதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட நாடு இந்த போரை சந்திக்க தயார் செய்ய தவறிவிட்டது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி இஸ்லாமிய அரசுடன்(IS) கைகோர்ந்து 5000 ரஷ்ய மற்றும் முன்னால் சோவியத் நாடுகளை சார்ந்த மக்கள் போரிட்டு வருகின்றனர் ( தனிமனித குழுக்கள் 7000 மக்கள் வரை இருக்கலாம் என கூறுகின்றனர்). இன்றைய நிலையில் அரபு மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்து இஸ்லாமிய அரசு (IS) மத்தியில் முகவும் பிரபலமான மொழியாக ரஷ்ய மொழி இருக்கின்றது. சிரியாவிலுள்ள தரய்யாவில் காணப்பட்ட துண்டு பிரசுரத்தில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இவ்வாறு கூறுகின்றது:
 
‘இன்று சிரியா, நாளை ரஷ்யா! செச்னிய மற்றும் டாடார்களே எழுந்திருங்கள்!
புதினே, நாங்கள் உனது மாளிகையில் தொழுவோம்!” ரஷ்ய அதிகாரிகள் அபாயத்தை உணர்ந்து விழித்து எழுந்திருக்கின்றனர். புதினின் தலைமை அதிகாரி, செர்ஜி இவாநோவ், இஸ்லாமிய அரசுடன் சேர்ந்து சண்டையிட்ட பல ரஷ்யர்கள் நாடு திரும்பிவிட்டனர், இது நேரடியான ஆபத்தை விளைவிக்கூடியதாக இருக்கின்றது என கூறினார். செப்டம்பர் மாதம் நடந்த ஐ.நா பொதுக்கூட்டத்தில் புதின் உறையாற்றுகையில் “சிரியாவில் ‘இரத்தத்தின் வாடையை’ நுகர்ந்த போராளிகள் ரஷ்யாவிற்கு திரும்பி “அவர்களுடைய பயங்கரவாத” செயல்களை இங்கு தொடர்வார்கள் என அறிவித்தார். ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு படை சிரிய பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அதிகமில்லாத வட காகசஸ் பகுதியில் தீவிரவாத்த்திற்கு எதிரான சிறிய அளவிலான தாக்குதல்களை மட்டுமே நடத்தும் வழக்கம் கொண்டிருந்தது. அடிப்படைவாதிகளாக மாறும் தாதர்களையும் பஷ்கிர்ஸ்களையும் எதிர்கொள்ளும் அளவு தயார் நிலையில் அவர்கள் இல்லை, இதனால் பெருதகரங்களில் வாழும் மத்திய ஆசியர்களிடமும் உள்நாட்டிலும் இஸ்லாமிய அரசின்(IS) ஊடுருவலை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. இந்த காரியம் மிகவும் சவாலானதாகும் ஏனெனில் இந்த புதிய ஜிஹாதானது பூலோக அளவில் பரப்பளவு மிகுதியானதாகும் (ரஷ்ய அதிகாரிகள் தீவிரவாதிகளை கிழக்கு சைபீரியாவில் கைது செய்த விவரத்தை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன) மேலும் அது நகரங்களிலும் சிறகை விரித்துள்ளது. இதன் விளைவாக, தீவிரவாத அமைப்புகள் ஒருங்கினைவதற்கும் மற்றும் ஒளிவதற்கும் எவ்வித சிரமுமின்றி எளிதாக செயல்பட வித்திடுகிறது. ரஷ்யாவில் அஹ்லுஸ் சுன்னாவினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் புதின் சிரியாவில் உள்ள அஹ்லுஸ் சுன்னாவினருக்கு எதிராக காய் நகர்த்தியது தீவிரவாதத்திற்கு எதிரான ஆபத்தை மேலும் அதிகப்படுத்திக்கொண்டு விட்டார். ஏற்கெனவே, 55 வஹ்ஹாபிய அறிஞர்கள் சிரியாவின் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதளுக்கு எதிராக ஜிஹாத் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். (மூலம்: வாஷிங்டன் போஸ்ட்)
ரஷ்யாவும் மேற்குலகும் வேண்டுமென்றே அடிப்படைவாதத்திற்கான மூலக்காரணத்தை தீர்ப்பதற்கான காரியங்களை தவிர்க்கின்றன அதாவது
அ) முஸ்லிம் நாடுகளில் கண்டனத்திற்குரிய முறையிலான வெளிநாட்டு தலையீடு.
ஆ) பலவீனமான அறிவுடைய மேற்கத்திய சிந்தனை.