Showing posts with label சவுதி. Show all posts
Showing posts with label சவுதி. Show all posts

Sep 7, 2016

ஏமன் மீதான போர்

ஏமன் மீதான போரில், சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைப்பதாக அறிவித்துள்ளது.
 
ஒபாமாவின் யுக்தியை அமெரிக்கா தொடர்கிறது, தொலைவிலிருந்து போர்களை இயக்கும் அந்த யுக்தியின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களை அமெரிக்கா குறைத்துள்ளது. (செய்தி – ரியுடர்ஸ்)
 
கூட்டுப்படை போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல், உளவு செயதிகள் பரிமாற்றம் போன்றவற்றை சவுதி அரேபியாவோடு ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு “ஜாயின்ட் கம்பைன்ட் பிளானிங் செல்” என்ற செயல்திட்டதை தொடங்கியது, இதில் தற்போது ஐந்திற்கும் குறைவானவர்களே பனியமர்த்தபட்டுள்ளார்கள் என்று அமெரிக்காவின் கடற்படையின் செயதிதொடர்பாளர் லெஃப்டினன்ட்  இயன் மேக் கன்னகெய் பஹ்ரைனில் ரியுடர்ஸ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இந்த பணிக்காக சவூதி தலைநகர் ரியாத் உட்பட பல இடங்களில் ஆமாரத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 45 லிருந்து 5 ஆகா குறைக்கப்படுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வாறு அமெரிக்க ராணுவத்தினர்களின்ண் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் ஏமனில் தொடுக்கப்படும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. இது தொடர்பாக குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தீர்வின்றி முறிவுற்றதால் ஏமன் மீதான சவுதியின் தாக்குதல் தீவிரமடயக்கூடும்.
 
முஸ்லீம் நாடுகளில் அமெரிக்கா நேரடியாக் இறங்கி போர் புரியும் நம்பிக்கையை இழந்துவிட்டது, அதனால் மற்ற தோழமை நாடுகளின் உதவியின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருகிறது. அமெரிக்காவின் இந்த நிலமையை எப்போது உலகம் கண்டறிந்து புரிந்துகொள்ளும்?
 
 
செய்தி பார்வை 20.08.16

Jan 28, 2016

சவூதி அரேபியா இஸ்லாமிய அரசா அல்லது குஃப்ர் அரசா – பாகம் – 2

 
சவூதி அரசு மற்றும் அரபுநிதியம் (Arab Monetary Fund) :
 
அபூதாபியை மையமாக கொண்டு இயங்கும் அரபு நிதியம் என்ற நிதியியல் அமைப்பு வட்டி அடிப்படையில் இயங்கும் மிகப்பெரிய நிறுவனமாகும், 4-/7/76 ல் மொரோக்கோவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அது நிறுவப்பட்டது. சவூதி அரசுதான் அதன் மிகப் பெரிய பங்குதாரராக இருக்கிறது, மற்ற அனைத்து பங்குதாரர்களை விடவும் அதன் பங்குத் தொகை மதிப்பில் சராசரியாக 3.2 சதவீதத்தை வட்டியாக பெற்றுவருகிறது!
 
சவூதி மற்றும் சர்வதேச நிதியம் (International Monetary Fund) :
 
சர்வதேச நிதியம் எனும் மேற்கத்திய நிதி நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரர்களில் சவூதி ஆறாவது பெரிய பங்குதாரராக விளங்குகிறது! இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குத் தொகையில் சவூதி 3.5 சதவீதத்தை முதலீடு செய்துள்ளது, இதன்காரணமாக அந்நிறுவனத்தின் நிர்வாக செயற்குழுவில் நிரந்தர உறுப்பு நாடாக சவூதி திகழ்கிறது!
எனவே, வட்டி அடிப்படையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதை நிரந்தர கொள்கை யாக கொண்டுள்ள ஓர் அரசு எவ்வாறு இஸ்லாமிய அரசாக இருக்கமுடியும்? ஆயிரக்கணக் கான அல்குர்ஆன் பிரதிகளை நன்கொடையாக அளிப்பதின் காரணமாகவா? அல்லது அல்&ஸவ்து ஆதரவாளர்களான அறிஞர்கள் அவ்வாறு கூறுவதின் காரணமாகவா?!
 
சவூதி மற்றும் அதன் அந்நிய உறவுகள் : நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் :
 
ஐக்கியநாட்டு சபையில் சவூதி உறுப்பினராக இருப்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்றுதான். ஐ.நா. சபையின் அரசியல் சாஸனம் விதிமுறை 92 அடிப்படையில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஐ.நா.வின் பிரதான நீதித்துறை அமைப்பாக விளங்குகிறது. ஐ.நா. சபையின் அரசியல் சாஸனத்தின் ஒருபகுதியாக விளங்கும் செயலாக்கஅமைப்பு அடிப்படையில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தனது கடமைகளை நிறைவேற்றிவருகிறது. உறுப்பினராக உள்ள ஒவ்வொரு அரசும் இந்த செயலாக்க அமைப்பை மதித்து நடக்கவேண்டியதும் அதை அங்கீகரிக்க வேண்டியதும் கட்டாயமாகும். விதிமுறை 94 கூறுவதாவது : “ஐ.நா-. சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் தான் தொடர்பு கொண்டுள்ள வழக்குகளில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளவேண்டும்”
சர்வதேச சட்டங்கள் அல்லாஹ்(சுபு)வின் வேதத்திலிருந்தும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளதா? சவூதி அரசு அதற்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? இஸ்லாத்தை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே ஐ.நா-. சபை உருவாக்கப்பட்டுள்ளது. சவூதி அரசு ஐ.நா-.வின் உறுப்பினராக மட்டும் இல்லை அதை ஆதாரிப்பதில் முன்னோடியாகவும் திகழ்கிறது! அது ஐ.நா-. சபையை நிறுவிய நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது என்று சிலர் கூறும் அளவுக்கு சவூதி அரசு அதற்கு நெருக்கமாக இருந்து வருகிறது. சவூதியின் அன்றைய வெளிவிவகார அமைச்சராக இருந்த இளவரசர் ஃபைஸல் இப்னு அப்துல் அஸீஸ் 1945ல் ஸான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் கூறியதாவது : “காகிதத்தில் எழுதியுள்ள இந்த விதிமுறைகளுக்கு நாம் கட்டுப்பட்டு நடந்து கொள்வோம் . . . இந்த அரசியல் சாஸனம் நமக்கு அடித்தளமான அமையட்டும்! அதன்மீது நமது சிறந்த புதிய உலகத்தை உருவாக்குவோம்!”
 
சவூதி மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) :
 
1946ல் ஐக்கியநாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்ற சர்வதேச நிறுவனம் உருவாக்கப்பட்டபோது சவூதி அரசு அதற்கு 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதின் மூலம் அதன் உருவாக்கத்தில் பெரும்பொறுப்பை எடுத்துக்கொண்டது. இத்தகைய பெருந்தொகையை வட்டியில்லா கடனாக அளித்ததோடு 5000 டாலர்களை அதன் திட்டங் களுக்கு நன்கொடையாக வழங்கியது. இஸ்லாத்தை திரித்து பிரச்சாரம் செய்தல் மற்றும் மேற்கத்திய சிந்தனைகளை பரப்புதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. உதாரணமாக, இந்த நிறுவனம் வெளியிட்ட ‘மனித இனத்தின் வரலாறு மற்றும் அதன் அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்களஞ்சியம்’ (Encyclopedia on the History of Human Race and its Development)  என்ற கலைக்களஞ்சியம் தொடர்பான நூலின் பாகம் 3 அதிகாரம் 10ல் கூறப்பட்டிருப்பதாவது :
  • இஸ்லாம் என்பது இட்டுக்கட்டப்பட்ட ஒரு மதமாகும், அது யூதம், கிருஸ்த்தவம் மற்றும் அரபியாவின் பலதெய்வ கோட்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக் கப்பட்டுள்ளது.
  • குர்ஆன் என்பது சகிப்புத்தன்மையற்ற ஒரு நூலாகும்
  • இறைத்தூதருக்கு பின்னர் நீண்டகாலத்திற்கு பிறகு இறைத்தூதர் பெயரால் அவரை பற்றிய ஹதீஸ் அறிவிப்புகளை சிலர் உருவாக்கினார்கள்
  • ரோமர்கள், பாரசீகர்கள், கிருஸ்த்தவ தேவாலய சட்டங்கள் மற்றும் பைபிளின் பழய   ஏற்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் முஸ்லிம் சட்ட அறிஞர்கள் இஸ்லாமிய சட்டவியலை ஏற்படுத்தினார்கள்
உள்ளபடியே, தலா நூர் அத்தர் என்பவர் ‘சவூதி மற்றும் ஐ. நா. சபை’ என்ற தமது நூலில் சவூதியை புகழந்து கூறும் வண்ணம், ‘சவூதி அரசு யுனஸ்கோ (UNESCO) நிறுவனத்திற்கு 17,040,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தது’ என்று கூறியுள்ளார்.
இஸ்லாத்தை குறித்து அவதூறு பரப்பும் வண்ணம் யுனஸ்கோ நிறுவனம் எழுதியுள்ள கருத்துக்கள் குறித்து சவூதி அரசாங்கம் அறியாமை கொண்டுள்ளதா அல்லது அதுகுறித்து ஒருபோதும் கேள்விப்படவில்லையா?! அல்லது இதன்பொருட்டுதான் அது மாபெரும் தொகையை நன்கொடையாக அளித்ததா?!
 
 சவூதி மற்றும் அரபுலீக் :
 
இந்த தேசியவாத அமைப்பில் சவூதி உறுப்பினராக மட்டும் இருக்கவில்லை மாறாக அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் திகழ்கிறது! அரபுலீக் அரசியல் சாஸனத்தின் 8வது விதிமுறை கூறுவதாவது : ‘அரபுலீக்கில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் அதன் உறுப்பினராக உள்ள மற்ற நாடுகளின் நிலையான ஆட்சிமுறையை மதித்து நடந்துகொள்ளவேண்டும். இந்த அரசுகளின் உரிமை என்று அதை கருதவேண்டும் என்பதோடு அவற்றின் ஆட்சிமுறைகளை மாற்றும் நோக்கத்துடன் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை தனக்குத்தானே கடமையாக ஆக்கிக்கொள்ளவேண்டும்’
 
சவூதியை இஸ்லாமிய அரசு என்று ஒருவேளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், குஃப்ரை அங்கீகரிப்பதற்கும் அதற்கு ஆதரவு நல்குவதற்கும் அதை மாற்றுவதற்கு முயற்சிக்க மாட்டோம் என்று உறுதியளிப்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதியிருக்கிறதா? எனவே இராக்கின் பாத்திஸ்ட் அரசும், சிரியாவின் அலவைத் அரசும் மதிக்கப்படவேண்டுமா? சவூதி அரசு பிரச்சாரம் செய்துவரும் தேசியவாதம் தொடர்பான சட்டம் பரவலாக அறியப்பட்டது என்ற முறையில் அதுகுறித்து நாம் இங்கு குறிப்பிடவில்லை.
 
சாக்குப்போக்கு வாதங்கள் :
 
சவூதி அரசு சுயவிருப்பம் இல்லாத நிலையில் நிர்பந்தத்தின் காரணமாக இந்த நிலைப் பாட்டை எடுத்துள்ளது என்று சிலர் கூறுகிறார்கள்! குறிப்பிட்ட நிகழ்வுகளை பொருத்தும் சவூதி அரசின் குறிப்பிட்ட வாக்குமூலத்தை பொருத்தும் இவ்வாறு கூறலாம், ஆனால் பிரிட்டன் அரசால் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து சவூதி அரசு மேற்கூறப்பட்ட அடிப்படையில் தனது கொள்கைகளை வகுத்து செயல்படும்போது எவரும் இவ்வாறு கூறமுடியாது. எந்தநிலையிலும் மன்னர் ஃபஹது இதற்கு மாற்றமாகவே அறிவிப்பு செய்துவருகிறார், “ஒவ்வொரு குடிமகனும் தனது நாட்டை பொருத்து தலைநிமிர்ந்து நடக்கும் வகையில் செயல்படவேண்டும். சவூதி அரேபியாவின் அரசாட்சியில் அந்நிய நாடுகள் எவ்வகையிலும் தலையீடு செய்வதற்கு அனுமதிக்காத வகையில் பரஸ்ப்பர பயன்களின் அடிப்படையில் நட்புரீதியான உறவுகளை மற்ற நாடுகளுடன் நாம் கொண்டுள்ளோம் (ஹிஜ்ரி 1405 ஸஃபர் பிறை 8 வியாழன் அன்று மன்னர் ஆற்றிய உரையிலிருந்து)
ஆகவே சவூதி அரசு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெளிவாகும். இதன்முடிவாக, கிலாஃபாவை மறுநிர்மாணம் செய்வதின் மூலமாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக பணியாற்றுதல் என்பது முஸ்லிம்கள்மீது வாஜிபாக இருக்கிறது.

சவூதி அரேபியா இஸ்லாமிய அரசா அல்லது குஃப்ர் அரசா – பாகம் – 1

 
எந்தவொரு நாட்டிலேனும் தன்னுடைய தீன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதா என்பதை அறிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயமாகும், ஏனெனில் அல்லாஹ் (சுபு)வுடைய தீனின் சட்டங்கள்ஹ அடிப்படையில் ஆட்சிசெய்யும் அரசிற்கு முஸ்லிம்கள் பைஆ செய்யவேண்டியது கட்டாயமாக இருக்கிறது. வேறுவகையில் கூறினால், இஸ்லாமிய அகீதா மற்றும் ஷரீஆ சட்டங்கள் அடிப்படையில் கலீஃபாவின் தலைமையில் இயங்குவதுதான் கிலாஃபா அரசாகும், அதற்கு நாம் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) நமக்கு கட்டளையிட்டுள்ளான். ஆகவே கிலாஃபா அரசின் தோற்றம் என்பது கற்பனையானதும் அல்ல யூககோட்பாட்டின் அடிப்படையில் உள்ளதும் அல்ல! வேறுவகையில் கூறுவதென்றால், மன்னர் சல்மான் முஸ்லிம்களின் கலீஃபாவா? சவூதி அரேபியா இஸ்லாமிய அரசா? என்பதுதான் கேள்வியாகும்! சவூதி அரேபியா இஸ்லாமிய அரசுதான் என்று நாம் முடிவு செய்தால் பிறகு இஸ்லாமிய அரசை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கட்டாயக்கடமை நம்மைவிட்டு நீங்கிவிடும்! (அன்றியும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட குறிக்கோளின் பொருட்டு இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் நேரத்தையும் ஆற்றல்களையும் வீணாக செலவிட்டு வருகின்றன என்பதுதான் இதற்கு பொருளாகும்!)

முஸ்லிம்களின் பார்வை :
 
சவூதி அரேபியா ஓர் இஸ்லாமிய அரசு என்ற கண்ணோட்டத்தை பல முஸ்லிம்கள் கொண்டுள்ளார்கள். ஓர் அரசு இஸ்லாமிய அரசா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கும் அளவுகோலை பெற்றிராத காரணத்தாலும், சவூதி அரசு பொய்யான தோற்றத்தை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் அதன் எதார்த்தநிலை குறித்த அறிவு இல்லாத காரணத் தாலும் முஸ்லிம்களில் பலர் இவ்வாறு கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரசு லட்சக்கணக்கான சங்கைமிக்க குர்ஆன் பிரதிகளையும் இஸ்லாமிய நூற்களையும் நன்கொடையாக அளித்துவருவதோடு உலகம் முழுவதிலும் மஸ்ஜிதுகளை கட்டுவதற்கு ஏராளமான பணத்தை அள்ளி வழங்குகிறது! இதன்காரணமாக மக்கள் அதை ஓர் இஸ்லாமிய அரசு என்று நம்புகிறார்கள்! எனவே அதன் உண்மைநிலையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்!
 
இஸ்லாமிய அரசிற்குரிய அளவுகோல் :
 
ஓர் அரசு இஸ்லாமிய அரசாக இருக்கவேண்டும் என்றால் அதன் அரசியல் சாஸனம், சட்டங்கள், விதிமுறைகள், கட்டமைப்புகள், அந்நியநாட்டு உறவுகள் ஆகியவற்றிற்கும் அதன் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கும் இஸ்லாமிய அகீதாவை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஓர் அரசு இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் ஆட்சிசெய்யவில்லை என்றால் அல்லது அதன் எந்தவொரு விவகாரத்திலும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரமூலங்களிலிருந்து சட்டங்களை எடுத்துக்கொள்கிறது என்றால் அது இஸ்லாமிய அரசாக இருக்காது மாறாக குஃப்ர் அரசாகவே இருக்கும்.
 
இந்த அளவுகோலின் அடிப்படையில் இப்போது நாம் சவூதி அரசை ஆய்வுசெய்வோம் :
 
சவூதி அரசும் மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களும் :
 
சவூதி அரசு கலப்படமான சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்கிறது, அவற்றில் சில இஸ்லாமிய சட்டங்களாகவும் மற்றும் சில மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களாகவும் உள்ளன. எனினும் இஸ்லாமிய பார்வையை தன்மீது நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் அவற்றை சட்டங்கள் என்று அழைப்பதிலிருந்து அது தவிர்ந்துகொள்கிறது! இஸ்லாமிய சட்டங்களையும் மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களையும் வேறுபடுத்திக்காட்டும் வகையில் குறிப்பிட்ட மொழியியல் சொல்வழக்கை அந்த அரசு பயன்படுத்திவருகிறது. ‘அரபு நாடுகளின் அரசியல் சாஸன சட்டங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள அரபி நூலில் ‘சவூதி அரேபிய அரசாட்சியின் அரசியல் சாஸனம்’ என்ற உட்பிரிவு அத்தியாயத்தில் அதன் ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார் : ‘கானூன் (சட்டம்) மற்றும் தஷ்ரீ (சட்டவடிவங்கள்) ஆகிய வார்த்தைகள் இஸ்லாமிய சட்டங்களை குறிப்பிடுவதற்கு மட்டுமே சவூதி அரசால் பயன் படுத்தப்படுகின்றன . . . செயலாக்க அமைப்புகள் போன்ற மனிதர்கள் உருவாக்கியுள்ளவை அல்லது அறிவுறுத்தல்கள் (தஃலிமாத்) அல்லது அரசாணைகள் (அவாமிர்) ஆகியவற்றை பொருத்தவரை . . .’ டாக்டர் மஹ்மூது அல்மக்ரிபி எழுதிய அல்வஜீஸ் ஃபீ தாரீக் அல் கவானீன் (அரசாணைகள் பற்றிய வரலாற்று சுருக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ள அரபு நூலின் 443 வது பக்கத்தில் கடந்தகாலத்தில் இருந்த சட்டங்கள் எளிமையான இஸ்லாமிய சட்டங்களாக இருந்தன என்று குறிப்பிட்டுவிட்டு சவூதி அரசை புகழந்துகூறும் வகையில் அதில் கூறப்பட்டிருப்பதாவது : சவூதி அரசும் அதன் இயற்கை வளங்களும் தோன்றிய பின்னர் இந்த சூழலில் மாற்றம் ஏற்பட்டது. இந்த புதிய சூழலுக்கு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் தேவைப் பட்டன. இந்த மாற்றங்களின் காரணமாக புதிய சட்டங்களின் தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக கீழ்க்கண்ட விவகாரங்களில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன : நீதிமன்றங்கள், வர்த்தம், குற்றவியல் சட்டங்கள், தொழிலாளர்கள், வரிவிதிப்பு மற்றும் இதர துறைகளில் புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன’
 
வர்த்தக சட்டங்கள் தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “தரைவழி மற்றும் கடல்வழி வர்த்தகங்கள் தொடர்பான ‘வர்த்தக செயலாக்க அமைப்பு’ என்று அறியப்பட்ட சட்டங்கள் யாவும் சவூதி அரசின் வர்த்தக சட்டங்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. கி.பி. 1931 ல் வெளியிடப்பட்ட இந்த சட்டங்கள் அரபு சட்டங்கள் என்றாலும் அல்லது ஐரோப்பிய சட்டங்கள் என்றாலும் நவீன வர்த்தக சட்டங்களுக்கு ஒப்பானவையாகும்’’ இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை பொருத்தவரை அவர் பின்வருமாறு கூறியுள்ளார் : “பொதுமக்களின் நலன்கருதி அவற்றில் சில மாற்றங்களை செய்வது அவசியமாக இருக்கிறது” மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது : “பொதுமக்களின் நலன் அடிப்படையில் அரசின் வரிவிதிப்பு வருவாய் தொடர்பான சட்டங்களை உருவாக்கவேண்டியதும் அவசியமாக இருக்கிறது”
உள்ளபடியே நவீனகால வர்த்தக சட்டங்களுக்கு ஒப்பான சட்டங்களை சவூதி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்று இந்நூலின் ஆசிரியர் நமக்கு எடுத்துக்கூறுகிறார். மேலும் பொதுமக்களின் நலன் கருதி சில இஸ்லாமிய சட்டங்களை மாற்றியதின் மூலம் அல்சவூது அல்லாஹ்(சுபு)வின் தீனில் மாற்றம் செய்துள்ளார் என்றும் அவர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்!
உண்மையில் சவூதி அரசு பல்வேறு மனித சட்டங்களை பின்பற்றி வருகிறது, அவற்றை இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடவில்லை! அவற்றில் சில பின்வருமாறு :
  • வங்கிகள் கண்காணிப்பு செயலாக்க அமைப்பு (The system of observing banks) & மன்னரின் அரசாணை (the king’s edict # M/5) அடிப்படையில் ஹிஜ்ரி 1386 ல் வெளியிடப்பட்டது.
  • சவூதி அரபு குடியுரிமை செயலாக்க அமைப்பு (the system of Saudi Arab citizenship) & மந்திரிசபை தீர்மானம் (# M/4 )அடிப்படையில் 1974 ஜனவரி 25 ல் முடிவுசெய்யப்பட்டு உயர்மட்டக்குழுவில் மன்னர் ஆற்றிய உரையின் (High Council #8/5/8604) அடிப்படையில் 1974 பிஃப்ரவரி 22 ல் அங்கீகாரம் வழங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
  • அச்சடிக்கப்பட்ட பிரதிகள் மற்றும் வெளியீடுகள் தொடர்பான செயலாக்க அமைப்பு & மன்னரின் அரசாணை (#M/17 (13-4-1402 AH)) அடிப்படையில் வெளியிடப்பட்டது.
  • தரிசுநிலங்களை பண்படுத்துதல் தொடர்பான சட்டங்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் ஒருவர் ஒருதுண்டு தரிசுநிலத்தை பண்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் அது அவருக்கு உரிமையாக ஆகிவிடும். ஆனால் இந்த இஸ்லாமிய சட்டத்தை ரத்துசெய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு கி. பி. 1987 முதல் இதுதொடர்பான மனித சட்டங்கள் அமலுக்கு வந்தன.
  • சவூதி அரேபியா குடிமகளாக இல்லாத பெண்ணை திருமணம் செய்துகொள்ளுதல் தொடர்பான செயலாக்க அமைப்பு
  • வரிவிதிப்பு தொடர்பான பொதுச்சட்டங்கள் & மன்னரின் அரசாணை (#M/9 (4-6-1395 AH)) அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது
ஷரீஆ நீதிமன்றங்கள் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் :
மற்ற முஸ்லிம் நாடுகளை போலவே சவூதியில் ஷரீஆ நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டு உரிமையியல் நீதிமன்றங்கள் அல்லது மனித சட்டங்கள் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் நீதி மன்றங்கள் இயங்கிவருகின்றன. இதற்கு முன்பு குறிப்பிடப்பட்டது போல் அங்கு வசிக்கும் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைவார்கள் என்பதற்காக அல்லது சவூதி அரசின் மிகப்பெரிய தூண்களாக விளங்கும் அந்நாட்டின் அறிஞர்கள் சங்கடம் அடைவார்கள் என்பதற்காக அவற்றை சவூதி அரசு உரிமையியல் நீதிமன்றங்கள் என்று அழைப்பதில்லை. சவூதி அரசை பொருத்தவரை, மனித சட்டங்கள் அனைத்தும் அநீதி செயல்பாடுகள் கவுன்ஸில் (Dewan of Mazhalim – council of injustice) போன்ற சட்டப்பேரவை மற்றும் தேர்வுக்குழு (legal forums council and committee) மூலமாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த பேரவைக்குழு மற்ற நாடுகளில் இயங்கும் உரிமையியல் நீதிமன்றங்களை போன்றதாகும்.
 
மற்ற நாடுகளிலுள்ள உரிமையியல் நீதிமன்றங்களை சவூதி அறிஞர்கள் குஃப்ர் என்று குறிப்பிடுகிறார்கள் ஆனால் அவர்களுடைய நாட்டில் இயங்கும் சட்டப்பேரவை தேர்வுக் குழுவை பற்றி அவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு தைரியம் ஏற்படவில்லை! இந்த குழு வட்டி, மோசடி, லஞ்சம் போன்ற ஷரீஆ நீதிமன்றங்கள் விசாரிக்காத வழக்குகளை கையாளுகின்றன. இந்த சட்டப்பேரவை தேர்வுக்குழுவில் ஷைக்குகளும் ஸொர்போன் (Sorbonne) சட்டக்கல்லூரி போன்ற கல்லூரிகளின் வழக்கறிஞர்களும் இடம் பெற்றுள்ளார்கள், இஸ்லாத்திற்கு அந்நியமான சில விதிமுறைகள் அரசாணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தீர்ப்புகளை அளித்து வருகிறார்கள்.
 
உதாரணமாக, இராணுவ நீதிமன்றங்கள் திவான் (Dewan of military courts) என்று அழைக்கப் படும் தனிப்பட்ட திவானின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் 11/11/1366 கிபி ல் வெளியிடப்பட்ட சவூதி அரேபிய இராணுவத்தின் செயலாக்க அமைப்பு (the system of Saudi Arab Army) என்றழைக்கப்படும் மனித சட்டங்கள் பிரயோகிக்கப் படுகின்றன. இராணுவத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பிரயோகிக்கப்படும் இந்த சட்டங்களில் ஷரீஆ சட்டங்களும் அதற்கு அந்நியமான சட்டங்களும் அடங்கியுள்ளன. உதாரணமாக அவற்றில் ஹிராபா எனப்படும் மனித சட்டம் இடம்பெற்றுள்ளது, இதன் அடிப்படையில் அரசை கவிழ்ப்பதற்கு முயற்சிப்பவர்கள் கொல்லப்படுவார்கள். உண்மையில் இஸ்லாமிய இயக்கவாதிகளை ஒடுக்குவதற்காகவே இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக இராணுவம் அல்-ஸவ்து குடும்பத்தை நீக்கிவிட்டு மற்றொரு இஸ்லாமிய ஆட்சி யாளரை கொண்டுவரும் முயற்சிகளை தடுக்கும் பொருட்டே இந்த சட்டங்கள் கொண்டுவரப் பட்டன. திருட்டு குற்றத்திற்கு உரிய தண்டனையை பொருத்தவரை அது இஸ்லாத்தின் அடிப் படையில் நிறைவேற்றப்படும் என்று சவூதி அரசு கூறிக்கொண்ட போதும் அதுதொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. திருட்டு குற்றம் புரிந்த நபர் குடிமக்களில் உள்ளவராக இருந்தாலும் இராணுவத்தினராக இருந்தாலும் கலீஃபா என்றாலும்கூட அவருடைய கையை துண்டிக்கவேண்டும் என்பதுதான் அறியப்பட்ட இஸ்லாமிய தண்டனையாக இருக்கிறது. எனினும் ‘சவூதி அரேபிய இராணுவ செயலாக்க அமைப்பு’ என்ற சட்டத்தின் 8 வது பிரிவு 12 வது விதிமுறையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால் : ‘இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் மற்ற அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரின் பொருட் களையோ அல்லது பணத்தையோ திருடினால் அந்த பொருள் நுகர்பொருளாக இருக்கும் நிலையில் அதை பயன்படுத்திவிட்டால் பிறகு அதற்குரிய பணத்தை கொடுத்துவிடவேண்டும் என்பதோடு ஒன்றரை மாதம் முதல் மூன்று மாதங்கள்வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் ஓர் அதிகாரி திருட்டு குற்றம் புரிந்துவிட்ட நிலையில் அதற்குரிய பரிகாரத்தையும் தண்டனையையும் ஏற்றுக்கொள்ள விரும்பினால் அவர் இராணுவ செயலாக்க அமைப்பு விதிமுறை 20 மற்றும் 22 பிரிவு 3ன் அடிப்படையில் தண்டிக்கப்படுவார். இராணுவ செயலாக்கஅமைப்பு அடிப்படையில் சில குற்றங்கள் ஷரீஆ நீதிமன்றங்களுக்கும் சில குற்றங்கள் விசாரணை குழுவிற்கும் (Council of trials) உட்பட்டதாகும்’
 
பிரிட்டனினால் உருவாக்கப்பட்டு அமெரிக்காவினால் பராமரிக்கப்படும் இந்த அரசின் ஆதரவாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியவர்களிடம் நாம் கேட்கிறோம்! இஸ்லாத்தின் சட்டங்கள் சிலர் நடைமுறைப்படுத்தும் வகையிலும் சிலர் நடைமுறைப்படுத்த முடியாத வகையிலும் உள்ளனவா-? அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றின் அடிப்படையில் தண்டனை சட்டத்தை இயற்றுவது தொடர்பான இஸ்லாமிய சட்டம் என்ன?
சவூதி அரசு வட்டி வரவுசெலவுகளை மேற்கொண்டுவருகிறது! ஹரம் ஷரீஃபிற்கு அருகில் நடந்து செல்பவர்கள் பிரிடிஷ்-சவூதி வங்கி, அமெரிக்க-சவூதி வங்கி, அரபு-தேசிய வங்கி, கெய்ரோ-சவூதி வங்கி ஆகியவற்றை காணலாம். ஹிஜ்ரி 1386ல் வெளியிடப்பட்ட மன்னரின் அரசாணை (the king’s edict # M/5) அடிப்படையில் வங்கிகள் தொடர்பான விதிமுறை 1ல் இடம்பெற்றுள்ள சவூதி சட்டங்களுக்கு இணக்கமாக இந்த வங்கிகள் வட்டி அடிப்படையிலுள்ள கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுவருகின்றன. வட்டி மற்றும் வங்கி நடிவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கையாளும் வகையில் நிதியியல் நிறுவன அமைப்பின் குறிப்பிட்ட தேர்வுக்குழுவிற்கு வழக்குகள் அனைத்தும் தானாகவே மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த வகை வழக்குகள் எதுவும் ஷரீஆ நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படாது! இந்த சட்டத்திற்கு முன்னதாக வங்கியிலோ அல்லது நிதித்துறை அமைப்புகளிலோ கடன் வாங்கிய ஒருவர் தவணையை தாமாதமாக செலுத்தும்போது அவர்மீது உபரியான வட்டி விதிக்கப்படும், அத்தகைய தருணங்களில் கடன் வாங்கியவர் ஷரீஆ நீதிமன்றத்தை நாடுவார், அவர்மீது விதிக்கப்பட்ட வட்டியை ஷரீஆ நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பு அளிக்கும், இதனால் நிதியியல் சார்ந்த சச்சரவுகள் அங்கு ஏற்பட்டுவந்தன.
 
ஒரே நிலப்பரப்பில் ஒருபுறம் ஷரீஆ நீதிமன்றங்களும் மறுபுறம் வங்கிகளும் அவர்களுக்கு தேவையாக இருக்கின்றன என்பது நகைச்சுவை காட்சிகளுக்கு ஒப்பாக இருக்கின்றன என்றே தோன்றுகிறது. நிதியியல் தொடர்பான இந்த சச்சரவுகளுக்கு தீர்வுகாணும் வகையில் இது தொடர்பான வழக்குகளில் ஷரீஆ நீதிமன்றம் தலையிடுவதற்கு ‘சிறப்பு சட்டங்கள்’ வாயிலாக தடை விதிக்கப்பட்டது.
 
 
சவூதி அரசிற்கும் GCC (Gulf Cooperation Council) எனப்படும் நிதியியல் அமைப்பிற்கும் இடையிலுள்ள உறவு வட்டி அடிப்படையில் உள்ளதாகும். ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தின் (Unified Economic Agreement) விதிமுறை 22ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது : “உறுப்பினர்களாக உள்ள அரசுகள் தங்களுடைய வங்கிநிதி தொடர்பான நிதியியல் நடிவடிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதோடு நிதியியல் நிறுவன அமைப்புகளுக்கு மத்தியிலுள்ள ஒத்துழைப்பை அதிகரிக்கவேண்டும்” இது வட்டி அடிப்படையிலுள்ள நடவடிக்கை என்பது தெளிவானதாகும் ஏனெனில் வங்கிகளும் நிதி நிறுவன அமைப்புகளும் வட்டியை அடிப்படையாக கொண்டே இயங்கிவருகின்றன.

Sep 7, 2015

வளைகுடா நாடுகள் ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?


பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் ஐரோப்பாவை நோக்கி பயணிக்கிறார்கள்

பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும் குறிப்பாக மூன்று வயது ஆலன் குர்தியின் சடலம் துருக்கிய கடற்கரையோரம் தரை ஒதுங்கிக் கிடந்த கோலம், இவை அனைத்தும் போரில் இருந்து தப்பி ஓடிவருபவர்களுக்கு மேலதிகமாக உதவ வேண்டும் என்கிற பரவலான, வலுவான கோரிக்கைகளை உருவாக்கியுள்ளது.

அத்தோடு, வளைகுடா நாடுகளுக்கிடையிலான கூட்டுறவில் அங்கம் வகிக்கும் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கடார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை தம் எல்லைக்கதவுகளை இந்த அகதிகளுக்கு திறக்க மறுக்கும் போக்குக்கு எதிராக கடும் கோபமும் கொப்பளிக்கத் துவங்கியிருக்கிறது.

இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். வளைகுடா நாடுகள் சிரிய அகதிகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்காக எதையும் செய்யவும் இல்லை.

அதேசமயம், இதில் தனி நபர்கள் வெளிப்படுத்திய பெருந்தன்மையானது மிகவும் குறிப்பிடத்தக்கது.நாளை விடியும் என்கிற நம்பிக்கையில் இன்றைய இரவில் நீளும் நடைபயணம்

தனிப்பட்ட நபர்கள் வசூல் செய்த, தானமாக அளித்த தொகை பல்லாயிரக்கணக்கான டாலர்களைத் தொட்டது. உதாரணமாக இந்த நாடுகளின் தேசிய நிறுவன (கடார் பெட்ரோலியம் ஒரு உதாரணம்) ஊழியர்களிடம் தமது சம்பளத்தில் ஒரு பகுதியை மாதாமாதம் சிரிய அகதிகளுக்கு உதவத் தரமுடியுமா என்று கேட்டபோது, பலர் அதற்கு ஒப்புதல் அளித்தனர்.

வளைகுடா நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அளித்த நிதி உதவியின் அளவு சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்.

ஆனால், சிரியாவின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வராமல் நீடித்ததன் விளைவாக, முகாம்களில் வசிக்கும் லட்சக்கணக்கான அகதிகளுக்குத் தேவையான உதவிகள் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை.

விளைவு இவ்வளவு பெரிய மக்கள் தொகை ஒரே நேரத்தில் இடம்பெயரும் இந்த சிக்கலுக்கு வேறு வகையான தீர்வுகளைக் காணவேண்டிய நிர்ப்பந்தம் உலகத்துக்கு ஏற்பட்டது.

காரணம், போரினால் களைத்து, முகாம்களில் வாழ்ந்துவந்த சிரியர்கள், தமது எதிர்கால வாழ்வு மற்றும் பொருளாதார நம்பிக்கையை முற்றாக இழந்த நிலையில், மோதல் பிரதேசங்களை விட்டு வெளியேறி, பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லத் துவங்கினார்கள்.இரண்டாம் உலகப்போருக்குப்பின் பல்லாயிரம் அகதிகள் இடம்பெயர்வது முதல்முறை எனப்படுகிறது

சுருக்கமாக சொல்வதானால், முகாம்களில் இருந்த மக்களுக்கு உணவும் உறைவிடமும் தருவது என்பது நேற்றைய பிரச்சனைகளுக்கான தீர்வு.

இன்றைய அதிமுக்கிய பிரச்சனை என்பது, லட்சக்கணக்கான மக்கள் வாழ்வதற்கான இடத்தைத் தேடுவது. இங்கே தான் வளைகுடா நாடுகள் விடை காண முடியாமல் திணறுகின்றன.

ஸ்திரத்தன்மை குறித்த பயங்கள்

வளைகுடா நாடுகள் சிரிய நாட்டவர்களை தம் நாடுகளுக்குள் அனுமதித்திருந்தாலும் (2011 ஆம் ஆண்டு முதல் ஐந்து லட்சம் சிரியர்களைத் தனது எல்லைக்குள் அனுமதித்திருப்பதாக சவுதி அரேபியா கூறுகிறது) அவர்களைக் குடியேற்றப் பணியாளர்களாக மட்டுமே இந்த நாடுகள் உள்வாங்கியிருக்கின்றன.

மற்றபடி, பெருமளவிலான அகதிகள் ஒரே நேரத்தில் கிளம்பி வரும்போது, அவர்களுக்கு வேலை கொடுக்க நிறுவனங்களோ, அவர்களை ஆதரிக்கும் தனி நபர்களோ இல்லாத சூழலில் அப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை எப்படி தம் நாட்டுக்குள் உள்வாங்குவது என்பது குறித்து இந்த வளைகுடா நாடுகளிடம் தெளிவான, வரையறுக்கப்பட்ட கொள்கைகள் எவையும் இல்லை.அசாத் ஆதரவாளர்கள் நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்துவார்கள் என வளைகுடா நாடுகள் அஞ்சுகின்றன

இதை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், தத்தமது எல்லைகளுக்குள் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து வளைகுடா நாடுகளுக்கு இருக்கும் கவலைகள் பற்றி ஆழமாக உள் சென்று பார்ப்பது அவசியம். அதுமட்டுமல்லாமல், இந்த நாடுகளின் சமூக அடையாளம் மற்றும் வளைகுடா நாடுகளின் குடிமகன் என்பதை அந்த நாடுகள் எப்படி பார்க்கின்றன என்கிற கேள்விகளையும் நாம் ஆராய வேண்டும்.

2012 ஆம் ஆண்டு வாக்கில் பஷார் அல் அசாதுக்கு எதிரான போர் என்பது சுன்னி வளைகுடா நாடுகளின் நலன்களுக்கும், இரான் தலைமையிலான அதன் கூட்டணிக்கும் இடையிலானதொரு தெளிவான போட்டியாக உருவெடுத்து நிலைபெற்றது.

அதன் விளைவாக, அசாத்துக்கு ஆதரவான சிரியர்கள் வளைகுடா நாடுகளில் ஊடுறுவி பழிவாங்க முனையக் கூடும் என்கிற ஆழமான அச்சம் வளைகுடா நாடுகளில் பரவத் துவங்கியது.

அதனால் சிரியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வரும் பயணிகளை கடுமையாக சோதனை செய்யும் நடைமுறைகள் அதிகரித்தன. அது மட்டுமல்ல, வளைகுடா நாடுகளில் வேலை செய்யவரும் சிரிய பணியாளர்களுக்கு அனுமதி கிடைப்பது கடினமாகிப் போனது. ஏற்கனவே வளைகுடா நாடுகளில் பணியில் இருந்த சிரிய நாட்டுத் தொழிலாளர்களின் பணியாளர் விசாக்கள் புதுப்பிக்கப்படுவதிலும் கூடுதல் சிரமங்கள் ஏற்பட்டன.

வளைகுடா நாடுகளின் இந்த கொள்கை இன்னமும் மாறவில்லை. அதிலும் குறிப்பாக கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் அசாத் ஆதரவாளர்கள் தம் மீது எதிர்த்தாக்குதல்கள் தொடுக்கக் கூடும் என்று கூடுதலாக கவலைப் படுகின்றன.பெருமளவு அகதிகளின் வருகை நாட்டின் குடியுரிமை சமநிலையை பாதிக்கும் என்று வளைகுடா நாடுகள் அஞ்சுகின்றன



கடந்த மூன்று ஆண்டுகளாக, வளைகுடா நாடுகளில் பல்வேறு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சந்தடியில்லாமல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஏராளமான ஊகங்கள் உலா வருகின்றன. அதேசமயம், அசாத் ஆதரவாளர்கள் சதி செய்ததற்கான நேரடி ஆதாரங்கள் எவையும் இதுவரை பொதுதளத்தில் வெளியாகவில்லை.

நாட்டின் குடிமக்கள் சமநிலை

அத்துடன், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் வருவது வளைகுடா நாடுகள் இயங்குவதற்கு அவசியமானதாக கருதப்படும் சிக்கலான குடிமக்கள் சமநிலையை புரட்டிப்போடுமோ என்கிற அச்சமும் காணப்படுகிறது.

உதாரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஆகிய இருநாடுகளிலும் வசிக்கும் மக்கள் தொகையில் அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சுமார் 10 சதவீதம் பேர் மட்டுமே. இந்த இரு நாடுகளிலும் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் இடைக்கால பணியாளர்களே.

வளைகுடா நாடுகளுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு முழுநேர வேலை இருந்தால் மட்டுமே அங்கே தங்க அனுமதிக்கப்படுவார்கள். அந்த வேலைக்கான பணி நியமன காலம் முடிந்ததும், இந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பவேண்டும். எனவே வெளிநாட்டவர் வேலையில்லாமல் வளைகுடா நாடுகளில் தங்கியிருக்க முடியாது.வளைகுடா நாடுகள் பெருமளவு வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு இயங்கினாலும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்காது

இந்த அணுகுமுறையில் தான் வளைகுடா நாடுகள் செயற்படுகின்றன.

அதாவது பெருமளவிலான உடல் உழைப்புத் தொழிலாளிகள் மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்களைத் தொடர்ந்து தற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்வதன் மூலம், வளைகுடா நாட்டின் அரபிக் குடிமக்கள் தத்தமது நாடுகளில் தமது மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

அத்துடன், மற்ற நாடுகளின் அரபிகளாலோ, தெற்காசியப் பணியாளர்களாலோ தமது மேலாண்மை பறிக்கப்படாமலும் இவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

முணுமுணுப்பான விவாதம்

எனவே, ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் எந்த வேலை உத்தரவாதமும் இல்லாமல், என்று திரும்பப்போகிறார்கள் என்கிற காலக் கெடுவும் இல்லாமல் தமது நாட்டுக்குள் வருவது என்பது வளைகுடா நாடுகளுக்கு மிகப்பெரிய தர்மசங்கடமான விஷயம்.அரபு நாடுகள் அகதிளுக்கு உதவவில்லை என்கிற கோபம் அதிகரித்து வருகிறது

வளைகுடா நாடுகளின் குடியுரிமை அடையாளம், சமூக கட்டமைப்பு மற்றும் குடியுரிமை சமநிலை ஆகியவற்றுக்கு சிரிய அகதிகளால் உருவாகக்கூடிய ஆபத்தின் அளவை ஒப்பிட கடந்தகால முன்னுதாரணங்கள் எவையும் இல்லை. 1948 ஆம் ஆண்டின் பெருமளவு பாலஸ்தீனர் வெளயேற்றம் கூட இதற்கு ஈடாகாது.

வளைகுடா நாடுகளின் குடிமக்கள் சமநிலைக்கும், சமூக அடையாளத்துக்கும் இந்த அகதிகளால் ஆபத்து வந்துவிடும் என்கிற ஆழமான பயத்தை போக்குவது மிகவும் கடினம். இது தொடர்பில், வெளிப்படையான அல்லது ராஜதந்திர ரீதீயிலான அழுத்தம், அதிலும் குறிப்பாக மேற்குலக நாடுகளிடமிருந்து கொடுக்கப்பட்டால் அது பலன் தருமா என்பது சந்தேகமே.

இந்த விவகாரத்தில் வளைகுடா நாடுகளின் ஆளும் குடும்பங்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவதற்கான வெளிப்படையான விவாதங்கள் எவையும் காணப்படவில்லை.

மேலும், அசாதையும் அவரது அரசாங்கத்தையும் கையாள்வது எப்படி என்று மேற்குலகம் விரைந்து முடிவெடித்திருந்தால் இந்த சிக்கலே இந்த அளவுக்கு தீவிரமடைந்திருக்காது என்று வளைகுடா நாட்டு அறிவுஜீவிகள் கருதுகிறார்கள்.அகதிகளாக அல்லலுற்றவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள்

எனவே, இந்த அகதிகள் பிரச்சனை தொடர்பாக மேற்குலக நாட்டு ராஜதந்திரிகளின் கோரிக்கைகள் அனைத்துமே கேளாக்காதுகளை நோக்கிய கோரிக்கைகளாக மட்டுமே முடியக் கூடும்.

(தோஹாவில் இருக்கும் ராயல் யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த மத்திய கிழக்கு ஆய்வாளர் மைக்கெல் ஸ்டீபன்ஸ் பிபிசிக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்).

Thanks BBC