Showing posts with label பி.ஜே.பி. Show all posts
Showing posts with label பி.ஜே.பி. Show all posts

Sep 6, 2016

முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்

“மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்”
மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் இரண்டு முஸ்லிம் பெண்கள் மத்திய பிரதேசத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அப்பெண்களிடம் அதிக அளவிலான மாட்டு இறைச்சி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பெண்களை கைது செய்யும் தருணத்தில் ஒரு கும்பல் அவ்விரு பெண்களையும் “கோமாதா வாழ்க” என்ற குரலோடு காவல் துறை முன்னிலையில் தாக்கினார்கள் (NDTV செய்தி அறிக்கை).
மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்ஸுர் ரயில் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியிலும், NDTV செய்தியிலும் ஒளிபரப்பானது . காவல் துறையினர் அந்த பெண்களிடம் பறிமுதல் செய்த இறைச்சியை சோதனை செய்ததில் அது பசு இறைச்சி அல்ல எருமை மாட்டின் இறைச்சி என்றும் தெரிய வந்தது . ( இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி)
ஆனாலும் அப்பெண்களிடம் தகுந்த உரிமம் இல்லாததால் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் இந்து மக்கள் பசு மாட்டை புனிதமாக கருதுகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் பசுவை அறுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
சென்ற மாதம் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் பசுவை அறுத்ததாக கூறி 4 தலித் இனத்தை சேர்ந்தவர்களை ஆடைகளை அவிழ்த்து காரில் கட்டிவைத்து ஒரு இந்து கும்பல் கடுமையாக தாக்கியதால் தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி கண்ணோட்டம்:
இந்திய அரசியல் வாதிகள் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறி பெருமை கொள்கின்றனர். ஆனால் உண்மையோ இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமக்களாக தான் கருத படுகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்து வெறியர்களால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கையால் முஸ்லிம்கள் வரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14.4% சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் இருகின்றனர், ஸச்சார் அறிக்கை படி 31% சதவிகித முஸ்லிம்கள் அதாவது மூன்று முஸ்லிம்களில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறுகின்றது..
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

Jul 9, 2016

சங் பாரிவார சாத்தான்களின் சல்லித்தனமான செயல்கள்....!!

வாசியுங்கள்..பகிருங்கள்...

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் ...

ஆட்சியை பிடித்த பிறகும்கூட மதவெறியை தூண்டும் விதமாக பேசி ஊடகங்களின் வாயில் அரைபட சங் பரிவார கூட்டம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...

சங் பரிவாரத்துக்கு இரண்டு வெளிப்படையான  முகம் உண்டு..ஒன்று இந்து மத காவலர்கள்..
இண்டாவது தேச பக்தர்கள்...
ஆனால் இரண்டுமே பொய் என்பது உலகறிந்த ரகசியம்..

இப்போது வளர்ச்சி அமைதி வளம் என்றெல்லாம் புளுகி ஆட்சியை பிடித்த பின்னர் மோடியை பிரதமராக்கிய கார்ப்பரேட்டுகளுக்கு பிரதிபலன் நிச்சயம் செய்தே ஆகவேண்டும்..
அதன் பலனாகத்தான் மோடி நாடுநாடாக சுற்றி இந்தியாவை விற்றுக்கொண்டும்,அம்பானி அதானிக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தரும் புரோக்கர் வேலையையும் செய்துகொண்டு இருக்கிறார்..

உள்ளூர் வியாபாரிகளில் தொடங்கி உலக வியாபாரிகள் வரை அத்தனை பேருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மோடியை ஆட்சியை விட்டு மாற்றவே மாட்டார்கள்...

நாம்தான் ஓட்டுப்போட்டு பிரதமரை தேர்ந்தெடுக்கிறோம் என நினைத்தால் நம்மை  விட முட்டாள்கள்  உலகில் இல்லை..

நாம் யாருக்காக அழவேண்டும்,யாருக்காக சிரிக்க வேண்டும்,யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம் கார்ப்பரேட்டுகளின் கையில் தான் இருக்கிறது..

இந்தியாவின் 80% ஊடகங்கள் கார்ப்பரேட்டுகள் கைவசம்..அதன் வழியாகத்தான் யாரை தீவிரவாதி ஆக்கவேண்டும்,யாரை தேசியவாதி ஆக்கவேண்டும் என அவர்கள் நம்மை உளவியல் ரீதியாக ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்....

விசயத்துக்கு வருவோம்..

பாஜக இந்துமத காவலர்கள் கிடையாது என்பதையும்,தேசதுரோகிகளின் சங்கமம் என்பதையும் பாதிக்கு பாதியாக அறிந்து வைத்திருக்கிறோம்...

இது போன்ற மதரீதியான சர்ச்சைகளை கிளப்பிவிடுவதன் மூலமாக தாங்கள் இந்து மத காவலர்கள் தான் என்றும்,முஸ்லிம்& கிருஸ்துவர்களை ஒடுக்க வந்தவர்கள் என்றும் நிறுவ முயற்சிப்பதோடு, தேசத்தை மோடி பட்டா போட்டு விற்றுக்கொண்டும்,பொருளாதாரத்தை நாசம் செய்துகொண்டு இருப்பதையும் மறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்...

அவ்வளவு ஏன்??

முகநூலில் நாம் கூட பாஜகவை ஒரு மதவெறிக்கட்சியாகத்தானே உருவகப்படுத்துகிறோம்?

கம்யூனிச கொள்கை கொண்ட சிலர் மட்டுமே பாஜகவை கார்ப்பரேட்டுகளின் அடிமை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்...

தன்னுடைய மதவெறி முகத்தை மட்டும் முன்னால் நிறுத்திவிட்டு தேசத்தை மீண்டும் ஒருமுறை அடிமையாக்கும் டேஷ்பக்தி முகத்தை மறைக்க முயல்கிறது பாஜக...

அதை அப்படியே கார்ப்பரேட் ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன...
ஊடகங்களில் கூட ரயில் கட்டண உயர்வு,பெட்ரோல் டீசல் விலை உயர்வு,அந்நிய முதலீடு,தனியார்மயமாக்கல்,தாராளமயமாக்கல் குறித்து விவாதிப்பதில்லை...பாஜகவின் மதவெறி முகத்தை மட்டுமே விவாதப்பொருளாக கொண்டு "என்னதான் பாஜக மதவெறி பிடித்த கட்சியானாலும் நமக்கு நல்லது செஞ்சிருக்காங்கப்பா" என்பதை போன்ற மாயையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்....

இதே நிலை நீடிக்குமானால் பாஜக இந்த ஆட்சியில் செய்த அயோக்கியத்தனங்கள் எதுவுமே வெளியே வராமல் அமிழ்ந்து விடும்...

பெட்ரொல் டீசல் விலை கூடும்போது பாகிஸ்தானை திட்டுவதும், ராணுவம் மற்றும் ஆயுதத்துறையில் 100% அந்நிய முதலீட்டுக்காக தலித்துகளை கொல்வதும், அம்பானி,அதானிகளுக்கு நாட்டை கூட்டிக்கொடுக்கும்போது முஸ்லிம்களுக்கு எதிரான விஷத்தை கக்குவதுமாக தங்களின் வலியோன் காலை நக்கும்போது எளியோனை எட்டிமிதித்து பார்வைகளை திசைதிருப்பும் முயற்சியில் வெற்றி பெற்ற ஆரிய சதிக்கும்பல் இது...

இப்போதும் கூட மோடி என்னும் கார்ப்பரேட் புரோக்கர் அயோக்கிய ஆட்சியின் 45 ஆயிரம் கோடி ரூபாய் மெகா ஊழலை மறைக்க உலகறிந்த இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர்.ஜாகிர் நாய்க் அவர்களின் பேச்சு தீவிரவாதத்தை தூண்டுவதாக கொழுப்பெடுத்த ஊடக பன்றிகள் உளறிக்கொண்டு திரிகின்றன...

எப்போதெல்லாம் இந்த சங் பரிவார கும்பலின் ஊழல்,பொருளாதார குற்றங்கள், கார்ப்பரேட் பொறுக்கித்தனங்கள் ஆகியவை வெளியே வருகின்றனவோ அப்போதெல்லாம் மக்களின் முன்னே இந்த சாத்தான் கூட்டத்தின் சங் பரிவார முகத்தை மட்டுமே காட்டி பிரச்சினையை திசை திருப்பும் திருகுதாள வேலைகளை திறம்பட செய்கின்றன புரொக்கர் ஊடகங்கள்...

காரணம்???

தேசிய அளவிலும், மாநில அளவிலும்
இருக்கும் ஊடகங்களின் முதலாளிகள் அல்லது பினாமிகள் பாஜகவின் எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசமான சொறிபிடித்த நாய்கள் என்பதே பிரதான மற்றும் புரதான காரணம்...

நான் முன்னரே சொன்னது போல இன்னும் 20 ஆண்டுகளுக்கு பாஜக தான் ஆட்சி செய்யும் நிலை உருவாகும்...

ஆகவே பாஜகவின் மதவெறி முகத்தோடு சேர்த்து கார்ப்பரேட் அடிமை முகத்தையும் உலகிற்கு காட்டியாக வேண்டும்...

நம்மிடம் இருக்கும் மிகச்சிறந்த ஆயுதமான வலைத்தளங்களை சரியாக பயன்படுத்துவோம்...

சங் பாரிவார சாத்தான்களின் சல்லித்தனமான செயல்களை சந்திசிரிக்க வைப்போம்...

அன்புடன் :- மாணிக் வீரமணி. ...

www.udagam.com

ஆதாரம் கொண்டு வர முடியுமா – மீடியாக்களுக்கு பகிரங்க சாவல் விடுத்துள்ள ஜாகிர் நாயக்

பிஜேபி மீது தற்போது எழுந்துள்ள 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காக மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விதம் ஜாகிர் நாயக் குறி்த்த சர்ச்சையை எழுப்பியுள்ளது பிஜேபி அரசு.

பிஜேபி அரசு மீது எழுந்த 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து வாய் திறக்காத நேஷனல் மீடியாக்கள் ஜாகிர் நாயக் சர்ச்சையை தூக்கி பிடிக்கின்றது.

இஸ்லாம் மதத்தை சாராத சமூக ஆர்வலர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



மீடியாவில் ஜாகிர் நாயகிற்கு எதிராக பேசும் டைம்ஸ் நவ் அர்னாப் பிஜேபியின் பின்னனியை சோ்ர்ந்தவர் என சோசியல் மீடியாவில் பல முறை விமர்சிக்கப்பட்டவர் என்பதும் இதை உறுதிப்படுத்துகின்றது.



தனது மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாகிர் நாயக் அவர்கள் ஒட்மொத்த இந்திய மீடியாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

அதில் , ”பங்களாதேஷ் ல் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் எனது பேச்சால் தான் அவ்வாறு நடந்தது என பங்களாதேஷ் அரசு தெரிவித்திருப்பதாக ஆதாரப்புர்வமான ஒரு செய்தியை கொண்டு வாருங்கள் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தான் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து வந்தேன் எனக்கு அங்கு தடை விதித்துள்ளதாக மீடியாக்கள் அப்பட்டமாக அவதூறு பரப்புகின்றது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தானே பேசியதாகவும் அவர்கள், நாங்கள் எதுவும் அப்படி சொல்ல வில்லை அந்த செய்தியை நாங்கள் நம்புவும் இல்லை எனக் பங்களாதேஷ் அரசு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ஜாகிர் நாயக் அவா்கள் இதில் கூறியுள்ளார்கள்.

ஜாகிர் நாயக்கின் இந்த பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் அரசு இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பங்களாதேஷ் ன் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் அவர்கள் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source :

http://www.bbc.com/news/world-asia-36462026

சம்பந்தபட்ட அரசே ஒன்றும் சொல்லதா நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு பிஜேபி அரசு வருவது ஏன் மீடியாக்கள் முனைப்பு காட்டுவது ஏன் ? முஸ்லிம்களுக்கு இந்தியாவில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஜாகிர் நாயகம் வெளியிட்டுள்ள வீடியோ அவரது இந்த சாவை ஏற்க மீடியாக்கள் தயாரா ?


Source
kaalaimalar.net

Jun 4, 2014

பள்ளிவாசலுக்குள் புகுந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல்!

இன்ஷா அல்லாஹ்!! இனியாவது இந்தியாவில் நடத்தப்படும் போராட்டங்களில் கிலாபத்தை உச்சயரிக்க வேண்டும்!! இது இந்தியாவின் இஸ்லாமிய மறுமலர்ச்சி நேரம்.....


வேலூர் மாவட்டம் கே.கே.நகர்பகுதியில் உள்ள ஆர்.என்.பாளையம் “மஸ்ஜிதே சுபானியா “03-06-2014 இன்று மாலை மக்ரீஃப் தொழுகைக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பி.ஜே.பி. பாசிச சக்திகள் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தீடீரென பள்ளிவாசலுக்குள் புகுந்து சராமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த திடீர் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் மோதினார் பலத்த காயம் அடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் .

பள்ளிவாசல் மற்றும் பள்ளிவாசல் பக்கத்தில் உள்ள வீடுகள் என பயங்கரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். முஸ்லீம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தவுடன் தாங்கள் வந்த பைக்கை விட்டுவிட்டு வன்முறையாளர்கள் தப்பி ஓடினர் ..

கயவர்கள் வந்த பைக்கை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர் (அந்த பைக்கை மேலே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணலாம்). காவல்துறைக்கு தகவல் கொடுத்தபின் வந்த போலிசார் ஓன்று கூடியிருந்த மக்களை விரட்டி அடித்தனர்

Sources From http://www.adiraipirai.in/