Dec 1, 2011

பொதுச் சொத்துக்களும், நரக நெருப்பும்

இப்னு அப்பாஸ் (ரழி), தனக்கு உமர் (ரழி) அவர்கள் தெரிவித்ததாகப் பின்வரும் சம்பவத்தை அறிவிக்கின்றார்கள் : கைபர் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி 'அவர் ஷஹீத், இவர் ஷஹீத்", என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் 'இவரும் ஷஹீத்" என்றனர். அதுகேட்ட நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது மேலங்கியைத் (திருட்டுத் தனமாக) அபகரித்துக் கொண்டார். அந்த ஆடையுடன் அவரை நான் நரகில் கண்டேன்"" என்று கூறி விட்டு, ''உமர் இப்னு கத்தாபே! நீர் சென்று முஃமீன்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள்"" என்று மக்களுக்கு மத்தியில் சொல்வீராக"" என்றார்கள்.

(ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் ஈமான் - 182)

யுத்தத்தின் போது எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட (கனீமத்) பொருட்களிலிருந்து ஓர் ஆடையைத் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்ட நபருக்கு நேர்ந்த கதி இந்த ஹதீஸில் சித்தரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துக்களை அபகரிப்போர், அவற்றில் கையாடல் செய்வோர், அதிகாரத்தைப் பயன்படுத்தி தம் சொந்த நலன்களை ஈட்டிக் கொள்வோர் போன்றோருக்கு இந்த ஹதீஸில் மிகுந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் கனீமத் பொருட்களை அல்லாஹ் கூறிய பிரகாரமே பங்கிடுவார்கள். ஆனால், அவ்வாறு உத்தியோகப்பூர்வமாக அப்பொருட்கள் பங்கிடப்படு முன்னர் அப்பொருட்களில் ஏதாவது ஒன்றையோ பலதையோ தனிப்பட்ட முறையில் திருடுவது குற்றமாகும். 'குலூல்" எனப்படும். இது பெரும் பாவங்களில் ஒன்று என்பது இஜ்மாவான முடிவு என இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்கள்.

நாம் விளக்க எடுத்துக் கொண்ட ஹதீஸிலிருந்து பல உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

அல்லாஹ் மார்க்கத்திற்காக நடைபெற்ற யுத்தமாயினும் அதில் கிடைத்த கனீமத்தை அது பங்கிடப்பட முன்னர் ஒருவர் திருடினால் அவர் நரகம் நுழைவார்.

அவரது ஈமானிலும் அது பாதிப்பை உண்டு பண்ணும்.

அவர் மோசடி செய்த பொருள் அற்பமானதாயினும் சரியே.

ஜிஹாதில் ஈடுபட்டார் என்ற சிறப்பை அவர் பெற மாட்டார். அதாவது ஷஹீத் எனப்பட மாட்டார்.

அவர் கொல்லப்பட்டால் புனித உயிர்த்தியாகத்தின் சிறப்புக் கிட்டாது.

அற்பமானதாக இருப்பினும் சரியே


ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ள இன்னுமொரு அறிவிப்பில், கைபர் யுத்தத்தின் போது எதிரிகளது அம்பெய்தலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்ட ஒருவரைப் பார்த்து 'அவர் உயிர்த்தியாகம் செய்திருப்பதால் வாழ்த்துக்கள்" என ஸஹாபாக்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு ''முஹம்மதின் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் (அல்லாஹ்) மீது ஆணையாக கைபரில் கிடைத்த கனீமத்கள் பங்கிடப்படுவதற்கு முன்னர் அவற்றிலிருந்து அவர் அபகரித்த ஒரு சிறிய போர்வை (ஷம்லா) அவர்மீது நெருப்பாகப் பற்றி எரிகிறது"" என்றார்கள். இதுகேட்டு மக்கள் பதட்ட முற்றிருக்கையில் செருப்பின் ஒரு தோல் வார் அல்லது இரண்டு வார்களை எடுத்துக் கொண்டு அங்கு வந்த ஒரு நபர் 'இவை கைபரில் நான் (திருட்டுத்தனமாகக கனீமத்திலிருந்து) எடுத்தவை" என்றார். அதுகேட்ட நபியவர்கள் ''நெருப்பிலான ஒரு வார் அல்லது நெருப்பிலான இரண்டு வார்கள்"" என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் ஈமான் - 183)

அதாவது செருப்பு வாரை அபகரிப்பவர் கூட அதனை அணிந்த வண்ணம் நரகில் இருப்பார் என்பதே இதன் பொருளாகும். இந்த வாரின் காரணமாகத் தான் அவர் நரகில் நுழைவார் என்றும் பொருள் கொள்ள முடியும். மேலுள்ள ஹதீஸில் வந்துள்ள போர்வை விசயமாகவும் இவ்விளக்கத்தையே கூறலாம்.

ஸஹீஹ{ல் புஹாரியில் வந்துள்ள மற்றொரு ஹதீஸில் கர்கரா என்பவர் யுத்த சந்தர்ப்பத்தில் ஆடையொன்றை அபகரித்ததால் அவரும் நரகவாதி என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (கிதாபுல் ஜிஹாத் - 190)

கைபரின் போது இறந்த இன்னுமொரு நபருடைய ஜனாஸாவுக்கான தொழுகையை நடாத்தி வைப்பதற்கு நபியவர்கள் மறுத்தார்கள். அப்போது அங்கிருந்தோர் ஆச்சரியமுள்ளு ''அவர் அல்லாஹ்வின் பாதையில் போராடிக் கொண்டே யுத்தப் பொருளைத் திருடியிருக்கின்றார்"" என்று நபியவர்கள் கூறியதாகவும் அவரது பொட்டலங்களை ஸஹாபாக்கள் ஆராய்ந்து பார்த்த போது இரண்டு திர்ஹம்கள் கூட பெறுமதியற்ற யூதர்களது ஆபரணமொன்று அங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஆதாரம் : மாலிக் - ஜிஹாத் - பக்.458, அஹ்மத் : 4-411, அபூதாவூத் - 2710, நஸஈ - 4:64, இப்னு மாஜா – 2848, ஹாகிம் - 2:127)

இங்கும் கூட இரண்டு திர்ஹம்கள் திருடப்பட்டமைக்காக அவர் மீது தொழுகை நடாத்த நபியவர்கள் மறுத்தமை பொதுச்சொத்தில் - அது சிறியதாயினும் பெரியதாயினும் எவரும் ஆசைவைக்கலாகாது என்பதை உணர்த்துவதற்காகும்.

அந்த ஹதீஸ்களிலிருந்து அடியார்களுடன் தொடர்பான உரிமைகள் (ஹ{கூகுல் இபாத்) எவ்வளவு தூரம் மதிக்கப்பட வேண்டும் என்பதைப் புரிய முடியும். குறிப்பாக சொத்துக்களில் - அவை தனி மனிதர்களுக்குரியவையாகவோ பொதுச் சொத்துக்களாகவோ இருப்பினும் அவற்றில் - நியாயமற்ற விதத்தில் கைவைப்பது, அனுபவிப்பது பாரதூரமான குற்றமாகும். அவை அற்பமானவையாக இருப்பினும் சரியே. முதலில் கொஞ்சம் எடுப்பவன் காலப் போக்கில் அதிகமாக எடுப்பதற்குத் தலைப்பட்டு விடுவார் என்பதனாலேயே இந்தக் கடுமையான தண்டனைக்கு அவர் உள்ளாக்கப்படுகின்றார்.

அம்பலப்படுத்தல்

கனீமத் பொருட்களில் திருடுபவர் அந்தப் பொருட்களுடனேயே மறுமையில் வந்திருப்பார் என குர்ஆனும் ஹதீஸ{ம் தெளிவாகவே குறிப்பிடுகின்றன. அந்த நபர் திருடியிருப்பது யாருக்கும் பொதுவான சொத்து என்பதால் தான் அல்லாஹ் அந்த நபரைப் பலருக்கு மத்தியில் அம்பலப்படுத்துகிறான்.

''(யுத்த பொருட்களில்) அபகரித்தவர் தான் அபகரித்த பொருட்களுடனேயே மறுமையில் வந்து நிற்பார்" என (3:61) அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

ஸஹீஹ{ல் புகாரியில் வந்துள்ள பிரிதொரு ஹதீஸின் சுருக்கமாவது, யுத்தப் பொருட்களில் ஆடு, குதிரை, ஒட்டகம் என்பவற்றை யாராவது ஒரு போராளி திருடினால் சுமந்து கொண்டு வருவார். அவை ஒவ்வொன்றும் சப்தமிடும். அப்போது அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'என்னைக் காப்பாற்றுங்கள்: என்று கூக்குரலிடுவார். ''உலகில் இருக்கும் போது நான் உனக்கு (தெளிவாகவே இவ்வாறு யுத்தப் பொருட்களில் மோசடி செய்வது) தவறு என்று கூறியிருக்கிறேன். எனவே, என்னால் உனக்கு எதனையும் செய்ய முடியாது"" என்று நபி (ஸல்) கூறுவார்கள். இப்படியான ஒரு துர்ப்பாக்கியமான நிலையில் முஸ்லிம்களில் எவரையும் தான் மறுமையில் ஒருபோதும் காணக் கூடாது என ஸஹாபாக்களைப் பார்த்து நபியவர்கள் கூறி, இவ்வாறான மோசடியின் பாரதூரத்தைப் பற்றி அதிக அளவு பேசினார்கள். (நீண்ட ஹதீஸின் கருத்து வடிவமே இங்கு தரப்படுகிறது. விரிவாகப் பார்க்க (ஸஹீஹ் புஹாரி, கிதாபுல் ஜிஹாத்)

பொதுச் சொத்துக்களை அல்லது பிறரது பொருட்களை எவ்வளவு அவதானத்துடனும் எச்சரிக்கையோடும் கையாள வேண்டும் என்பதனை உணர்த்த மேலுள்ள ஹதீஸ்கள் போதுமானவையாகும்.

எனவே, ஹராமாக அநியாயமாகத் தேட் பெற்ற பொருளை கழுத்தில் சுமந்து கொண்டு மறுமையில் வந்து பலரது முன்னிலையிலும் அவமானப்படும் துர்ப்பாக்கிய நிலைக்கு எவரும் ஆளாகிட நேரிடும் என்ற பயம் பொறுப்புக்களைச் சுமப்பவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.

அபகரிப்பின் வடிவங்கள்

யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் மட்டுமல்ல வக்ப் சொத்துக்கள், அநாதைகளது உடைமைகள், அரசசார்பற்ற நிறுவனங்களது சொத்துக்கள், அரச சொத்துக்கள், பைத்துல்மால் சொந்தமான பொருட்கள் என்பவற்றை கையாளும் போதும் இதே எச்சரிக்கை உணர்வு அவசியமாகும். பெரும்பாலானோர் இந்த விசயத்தில் மிகுந்த அசிரத்தையோடு நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் தமது பொருட்களைப் போல அவற்றை மதிப்பதில்லை. பாதுகாப்பதில்லை. மாறாக கிடைத்த சந்தர்ப்பங்களை 'நன்கு பயன்படுத்தி" அவற்றைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர். அலுவலகத் தொலைபேசி, காகிதங்கள், அரசாங்க வாகனம் மற்றும் உடமைகள் போன்றவற்றை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பாவிக்கின்றார்கள். இது பெரிய குற்றமாகும்.

ஒருவர் எந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளாரோ அப்பதவியைகத் தனக்கான அல்லது தனது உறவினர்களுக்கான நலன்களை அடைந்து கொள்வதற்காக ஒருபோதும் பயன்படுத்தலாகாது. ஏனெனில் பிறரது சொத்தையோ தனது அதிகாரத்தையோ சட்ட ரீதியற்ற முறையில் முறைகேடாகப் பயன்படுத்துவது பெரும் துரோகமாகும்.

சம்பளத்துக்கு அப்பால்

அரசுகளும் கம்பெனிகளும் வேலையாட்களுக்குக் குறிப்பிட்ட அளவு சம்பளத்தை வழங்குகின்றன. ஆனால், அத்தொகையை விட அதிகமான அளவைப் பெற்றுக் கொள்ள ஒருவர் குறுக்குவழிகளை நாடினால் அது ஹராமான சம்பாத்தியமாகவே இஸ்லாத்தில் கணிக்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : ''நாம் நமது பொறுப்பொன்றுக்காக ஒருவரை அதிகாரியாக நியமித்து சம்பளமாக அவருக்கு ஒரு தொகையைக் கொடுக்கையில் அதற்கு மேலதிகமாக அவர் எடுத்தால் அது (குலூல்) அபகரிப்பாகும்"". (அபூதாவூது)

ஏனெனில், பலவீனர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் செலவிடப்பட வேண்டிய நிலையிலுள்ள அல்லது பொதுப்பணிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய பணத்தையே அவர் மோசடி செய்கின்றார் என்பதனால் தான் நபியவர்கள் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள்.

ஆனால், நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒரு களஞ்சியத்திலிருந்து, அல்லது நிதியிலிருந்து ஒருவர் மிகவுமே அற்பமான அளவைக் கூட திருடுவது, சட்டரீதியற்ற முறையில் அபகரிப்பதாகும் என்று நபி (ஸல்) வஅர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள் :

''உங்களில் ஒருவரை நாம் ஒரு பொறுப்புக்காக நியமித்து அவர் எம்மிடம் காட்டாமல் ஒரு தையல் ஊசியை அல்லது அதனை விட அற்பமான ஒரு பொருளi மறைத்தாலும் அது (குலூல்) மோசடியாகும். அதனை எடுத்துக் கொண்டு மறுமைநாளில் அவர் வருவார்.. .. உங்களில் ஒருவரை ஒரு பொறுப்புக்காக நாம் நியமித்தால் (அவர் சேகரித்த பொருள்) குறைந்த அளவாயினும் அதிக அளவாயினும் (அவை அனைத்தையும், அவர் எம்மிடம்) எடுத்து வரட்டும். அவருக்கு அப்பொருளிலிருந்து எந்த அளவு (நியாயமாக, சம்பளமாகவோ அல்லது சட்டபூர்வமாகவோ) வழங்கப்படுகிறதோ அந்த அளவை அவர் எடுத்துக் கொள்ளட்டும். அவர் எடுக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டவற்றை அவர் விட்டு விடட்டும்"". (ஆதாரம் : முஸ்லிம், கிதாபுல் இமாரா – 1833)

எனவே. சட்ட ரீதியற்ற முறையிலும் குறுக்கு வழிகளிலும் ஒருவர் மேலதிகமாக அனுபவிக்க முயல்வது குற்றமாகும்.

அன்பளிப்பும் லஞ்சமும்

அதுமட்டுமின்றி அபூஸயீத் (ரழி) அவர்களது கருத்துப்படி அதிகாரிகள் குடிமக்களிடம் இருந்து பெறும் அன்பளிப்புக்கள் (புகைவள) கூட (குலூல்) மோசடியாகவே அமையும்.

நபி (ஸல்) அவர்க்ள இப்னு லுத்பியா என்பவரை ஸகாத் சேகரிக்க அனுப்பினார்கள். தான் சேகரித்த பொருட்களில் ஒருபகுதியைச் சுட்டிக்காட்டிய லுத்பியா அவர்கள் அவை ஸகாத் பணம் என்றும் வேறு ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி அவை தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்தவை என்றும் கூறிய போது நபியவர்கள் 'இவர் தனது தாயின், தகப்பனின் வீட்டில் இருந்திருந்தால் இந்த அன்பளிப்புக்கள் கிடைத்திருக்குமா? என்று வினவி விட்டு ''எவன் கைவசம் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவர் (லுத்பியா) இந்தப் பொருட்களில் எதனையும் எடுக்கலாகாது. அப்படி எடுத்தால் (மறுமையில்) அதனைத் தனது கழுத்தில் சுமந்து கொண்ட தான் அவர் வருவார்.."" என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தனது இரண்டு கைகளையும் கமுக்கட்டு தெரியுமளவுக்கு உயர்த்தி, அல்லாஹ்வே நான் எத்தி வைத்து விட்டேனா?"" என்று கேட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சத்தை அல்லது அன்பளிப்புக்களைப் பெறுகின்ற பொழுது மறுபுறத்தில் சமூகக் கடமைகளில் அவர்கள் கோட்டை விடுவதற்கு ஈடாகவே அவற்றைப் பெறுவார்கள். பக்கசார்பான தீர்ப்புகளை வழங்குவதற்கோ வரியிலிருந்து லஞ்சம் வழங்குவோரை விலக்கிக் கொள்வதற்கோ, விஷேச சலுகைகளை அவர்களுக்கு வழங்குவதற்கோ அதிகாரிகள் லஞ்சத்தை அல்லது அன்பளிப்பைப் பெறுவது முழு சமுதாயத்திற்கும் எதிராக அவர்கள் இழைக்கும் துரோகமாகும். அப்படியான நடைமுறைகள் இருக்கும் சமுதாயம் குட்டிச்சுவராகி சின்னாபின்னப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும் அந்த சமூகம் பயந்தாங்கொள்ளியாகி எதிரிகளது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி விடும். இது இறைவன் விதித்த நியதியாகும்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எந்த சமுதாயத்தில் (குலூல்) மோசடி பரவலாக இடம் பெறுகின்றதோ அவர்களுக்கு மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்படும்"". (முஅத்தா மாலிக் - கிதாபுல் ஜிஹாத்-26)

இந்த குலூல் எனப்படும் மோசடியில் ஈடுபடும் ஒருவர் அந்த சந்தர்ப்பத்தில் ஈமானுடன் இருக்க மாட்டார் என்பதை பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் பிரஸ்தாபித்தார்கள் : ''உங்களில் ஒருவர் மோசடி செய்கையில் அவர் முஃமினாக இருக்க மாட்டார். உங்களை நான் அப்படியான நிலையை விட்டும் கடுமையாக எச்சரிக்கிறேன்"". (முஸ்லிம் - கிதாபுல் ஈமான் - 103)

முன்னோரின் பேணுதல்

எனவே, அற்பமான பொருளாயினும் தனி மனிதர்களுக்கோ அரசுக்கோ, நிறுவனங்களுக்கோ அவை சொந்தமாக இருந்தாலும் அவற்றை தப்பான, முறையற்ற வழிகளில் விழுங்குவது மிகப் பெரிய குற்றம என உணர்ந்த எமது முன்னோர் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டார்கள். தமக்குக் கிடைத்த அதிகாரங்களையும், பதவிகளையும் அமானிதமாகவும் அல்லாஹ்வுக்கு கணக்குக் காட்ட வேண்டி பொறுப்புக்களாகவுமே கணித்து கடமை உணர்ச்சியின் உச்சத்திலிருந்து செயல்பட்டிருக்கின்றார்கள்.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கையில் தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்து, தன்னிடம் இருந்த பைத்துல்மாலுக்குச் சொந்தமான ஓர் ஒட்டகத்தையும், அடிமை ஒருவரையும், கந்தலான, மயிர்கள் கொட்டிய ஒரு துணியையும் பைத்துல்மாலில் சேர்த்து விடும்படி பணித்தார்கள். அவர்களது மரணத்தின் பின் அவை மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒருவர் புதிய கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் வந்து விசயத்தைக் கூறிய பொழுது, உமர் (ரலி) அவர்கள் பூமியில் கண்ணீர் சிந்தும் வரை அழுதார்கள். ஆனால், அவற்றை பைத்துல்மாலில் சேர்க்கவே அவர்கள் விரும்பினார்கள். இதுபற்றி அறிந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவாகள் 'இவற்றை அபூபக்கரின் குடும்பத்தாரிடமிருந்து பறிக்கப் பார்க்கின்றீர்களா? அவர்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள்" என்று கூறிய பொழுது, உமர் (ரலி) அவர்கள், ''எனது ஆட்சியில் இது நடக்காது"" என்றார்கள்.

உமர் (ரலி) தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிடச் சற்றுப் பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புல் தரையில் அதனை மேய்த்திருக்கலாம் என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது. அரச செல்வாக்கினால் இப்படி நடந்திருக்கலாம் என்பது அவர்களது கணிப்பாக இருந்தது. எனவே, அதனை விற்று அதன் பெறுமதியை பைத்துல்மாலில் சேர்த்து விடும்படி அவர்கள் தனது மகனைப் பணித்தார்கள்.

ஒரு தடவை அலி (ரலி) அவர்கள், போர்வையொன்றால் போர்த்திக் கொண்டிருந்த போதிலும் குளிரால் அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அன்தாரா (ரலி) அவர்கள் ''உமக்கும், குடும்பத்தாருக்கும் பைத்துல்மாலிலிருந்து ஒரு பங்கை அல்லாஹ் வைத்திருக்கின்றான். அப்படியிருக்க நீர் குளிரால் நடுங்குவதா?"" எனக் கேட்டார்கள். அப்போது அலி(ரலி) அவர்கள், ''அல்லாஹ் மீது சத்தியமாக நான் உங்களது இந்த (பைத்துல்மால்) பணத்திலிருந்த எந்த ஒரு பகுதியையும் எடுத்து அதனைக் குறைத்து விட மாட்டேன். இந்தப் போர்வையும் கூட எனது வீட்டிலிருந்த நான் பெற்றது தான்"" என்றார்கள். (அல் பிதாயா – பாகம் 7, பக் - 3)

எனவே, பொதுச் சொத்துக்கள் மற்றும் பிறரது உடமைகள் என்பவை மிகவுமே கவனமாகக் கையாளப்படல் வேண்டும். அப்படியில்லாத போது உலகிலும் மறுமையிலும் மிகப் பெரிய நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. உலகில் சம்பாதிக்கப்பட்ட பொருள் எவ்வழியில் தேடப்பட்டது என்ற முக்கியமான கேள்விக்கு மறுமையில் சரியான பதிலை அளிக்கும் வரை ஓர் அடியானின் கால்கள் இரண்டும் இருக்கும் இடத்தை விட்டும் நரக முடியாத நிலை உருவாகும்.(திர்மிதி)

தடுக்கப்பட்ட வழியில் பெற்ற உணவை உண்டு ஆடை உடுத்தி நிற்பவனது பிரார்த்தனை கூட அங்கீகரிக்கப்பட மாட்டாது. (முஸ்லிம்)

இக்கருத்துக்களை வேறு சில நபிமொழிகள் மூலமும் விளங்க முடிகிறது. அல்குர்ஆனிலும் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

''உங்களுக்கு மத்தியில் உங்கள் சொத்து செல்வங்களை அநியாயமான முறையில் புசிக்காதீர்கள்"" (2:188) ''அதிகமான யூத அறிஞர்களும், கிறிஸ்தவ பாதிரிகளும் மக்களது சொத்துக்களை அநியாயமான முறையில் புசிக்கிறார்கள்"". (9:34)

''அநாதைகளின் சொத்துக்களை மிகவுமே சிறந்த வழிமுறையில் அன்றி நீங்கள் (கையாள வேண்டாம்) அணுக வேண்டாம்"". (6:152)

விசுவாசிகளே! நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துரோகம் செய்யாதீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அடைமானங்களுக்கும் (பதவிகள், பொருட்கள்) நீங்கள் மோசடி (துரோகம்) செய்யாதீர்கள். (8:28)

எனவே, அல்லாஹ்வின் சந்நிதியில் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தோடு சிறிய, பெரிய அனைத்துப் பொறுப்புக்களையும் சொத்துக்களையும் கையாள்வது அவசியமாகும். குறிப்பாக, அடியார்களுக்கு வழங்க வேண்டிய பொருள்கள் உரிமைகள் விசயத்தில் இஸ்லாம் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதை மறக்காமல் செயல்படுவது அனைவரதும் தலையாய கடமையாகும்.

புதிய(முதலாளித்துவ) இந்தியா!

"levis jeans" ஸும்,"van heusen"ஸும்
வந்ததால் - எங்களின்
பருத்தி காதி துணிகள்
பழசாய்ப் போயின!

"நைட்டியும்","கவுனும்"
வந்ததால் - எங்களின்
தாவணிகளும்,புடவைகளும்
தரமிழந்துப் போயின!

"pizza" வும் "burger" ரும்
வந்ததால் - எங்களின்
இட்லி,சப்பாத்திக்களை
சுவை இழக்க வைத்தன!

"axe perfume" உம் "olay" க்களும்
வந்ததால் - எங்களின்
மஞ்சளும்,மருதாணிக்களும்
வாசம் இழந்துப் போயின!

"valentine's day, friendship day" க்களும்
வந்ததால் - எங்களின்
நட்புக்களும்,கல்யாணங்களும்
கோர்ட் படிகள் ஏறுகின்றன!

"cricket"டும்,"golf" பும்
வந்ததால் - எங்களின்
கபடியும்,மல்யுத்தமும்
களையிழந்துப் போயின!

"wine" னும்,"vodka" வும்
வந்ததால் - எங்களின்
கூழையும்,கள்ளையும்
குழித்தோண்டிப் புதைத்தன!

"standard charted,american express bank" கும்
வந்ததால் - எங்களின்
கூட்டுறவு வங்கிகள்
திவாலாகிப்போயின!

"dollar ,euro" க்களும்
வந்ததால் - எங்களின்
மூளைகள் வெளிநாடுகளில்
அடமானத்திற்க்கு விற்கப்பட்டன!

இதோ....
"walmart" டும்,"tesco" வும்
வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்
உழைக்கும் விவசாயிகளும் கூட இனி...
அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்
மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்.

இருப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு ஆசைப்படும்
அரசியல் அதிகாரிகளுக்கு
மீனைவிட தூண்டில் பெரிதென்று
புரிவதெப்போது?

Nov 26, 2011

ஹிஜ்ரத் வருடம் 1433 -நீங்களும் நாங்களும் சாதித்தது என்ன?


ஹிஜ்ரி 1432 ஆம் ஆண்டு நம்மிடையே விடை பெற்று புதிய வருடமாக 1433 பிறந்து விட்டது.அந்த ஞாபகமே நம்மில் பலருக்கு இல்லை. ஹிஜ்ரி வருடம் என்றால் என்ன என்று தெரியாத முஸ்லிம்கள் பலர் இருக்கின்றார்கள். ஹிஜ்ரி புது வருடக் கொண்டாட்டங்கள் என்ற ஒன்று இல்லை எனினும், அந்த வருடம் பிறக்க இருப்பதையாவது நம்மில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கின்றோம் என்றால், அத்தகைய நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சரி! தெரிந்து வைத்திருப்பவர்கள் தான் என்ன சாதித்து விட்டார்கள் என்றால், அந்த ஹிஜ்ரி வருடங்கள் ஓடி ஓடி இளைத்து, நூலாகி நிற்கின்றதே! எதற்காக இந்த ஹிஜ்ரி வருடம் உருவானது, யார் உருவாக்கியது, அதன் பின்னணி என்ன? என்பது பற்றியெல்லாம் இந்த சமுதாயம் என்றைக்கு சிந்தித்துப் பார்க்கப் போகின்றது என்பதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சில் கனமான சுமை வந்து அழுத்துகின்றது.

ஆனால் ஹிஜ்ரி பிறந்து 1432 ஆண்டுகள் முடிந்து விட்டதே! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏன் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அதன் முக்கியத்துவம் என்ன? அந்த முக்கியத்துவம் இன்றைக்கு உணரப்பட்டிருக்கின்றதா?

மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்பிய அந்த சமூக அமைப்பு இன்றைக்கு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றதா? இல்லையெனில், அந்த சமூக அமைப்பை கட்டியமைப்பது யார் பொறுப்பு? அலட்டிக் கொள்ள வேண்டியதொரு பிரச்னை நம் முன் நிற்கின்றதே என்பது பற்றி இந்த சமூகம் எப்பொழுது தனக்குள் விவாதித்துக் கொள்ளப் போகின்றது..! அந்த விவாதம் தலையெடுக்கும் காலம் தான் இந்த சமூகத்தின் விடிவுக்கான காலமாக இருக்கும். ஆம்! எப்பொழுது இந்த முஸ்லிம் சமூகம் சமுதாய ரீதியாக ஒன்றுபட்டு, ஒரு இஸ்லாமிய ஆட்சிக்கான மறுமலர்ச்சியைக் காணுகின்றதோ அன்றைய தினம் தான் இந்த உலகத்திற்கும் கூடிய விடிவு நாளாகும்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவை வெறுத்து மதீனாவிற்குச் சென்றதைத் தான், ஹிஜ்ரத் என்று வரலாறு கூறுகின்றது.

அப்படி நோக்கினால், அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவை வெறுத்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? இல்லை..! இல்லை..! அது முதல் கஃபா என்ற ஆலயத்தைச் சுமந்து கொண்டிருக்கின்ற பூமி! எனவே அதனை வெறுத்திருக்க நியாயமில்லை.

அந்த மக்கள் தந்த துன்பத்தைக் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். தன்னை குருதி சொட்டச் சொட்ட அடித்து விரட்டிய தாயிஃப் வாசிகளைக் கூட அண்ணலார் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லையே! எனும் போது, மக்கா வாசிகளையும் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். அப்படியானால் எதை வெறுத்தார்கள்?

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தினைச் செயல்படுத்தும் ஒரு சூழல் மக்காவில் உருவாகவில்லை. அந்த உருவாக்கத்துக்குத் தொடர்ந்தும் குறைஷித் தலைவர்கள் தடையாகவே இருந்து வந்தார்கள். ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களின் சாத்வீகமான அணுகுமுறைகள் அத்தனையும் அந்தத் தலைவர்களிடம் தோற்றுப் போயின. அவர்களோடு போரிடுவதற்கான அனுமதியை அல்லாஹ் வழங்கியிருக்கவுமில்லை. எனவே அந்த மக்காவை விட்டு, தாஇபுக்குப் போனார்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவில் உருவாக்க முடியாமல் போன சூழலை தாயிஃப் மக்கள் உருவாக்கித் தரலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. ஆனால் அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

அண்ணலார் (ஸல்) அவர்கள் எதிர்பார்த்த சூழல் இது தான். அல்லாஹ்வுடைய தீனை இந்தப் பூமியில் நிலைநாட்டுவதற்கு உதவியாகவும், பக்கபலமாகவும், நிழல் போல் தன்னைத் தொடரும் ஒரு (குழுவல்ல) சமூகம் தேவை. அவர்கள் தனக்கு முற்று முழுதாகக் கட்டுப்பட வேண்டும். தனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்லாத்துக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும். தீனுல் இஸ்லாத்தின் தேவைகளை அவர்கள் தமது மனைவி பிள்ளைகளின் தேவைகளைப் போல, அல்லது அவற்றை விட மேலாகக் கருத வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் சூழல் மக்காவில் உருவாகவில்லை. தாஇபிலும் கிடைக்கவில்லை. ஆனால், இந்த சூழல் மதீனாவில் மெல்ல மெல்ல உதயமாகியது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு பயணமாகியது என்பது அவர்கள் எதிர்பார்;த்த அந்த சூழல் உருவாகிய பின்பு தான். மதீனாவில் இந்த சூழல் உருவாக ஏறத்தாழ மூன்று வருடங்கள் எடுத்தன.

அங்கு இந்த சூழல் உருவாகி விட்ட ஒரே காரணத்தால் நபிகளார் மதீனாவுக்குப் போய்விடவுமில்லை. ஏற்கனவே கூறப்பட்ட நபிகளாரின் எதிர்பார்ப்புகளை தவறாது நிறைவேற்றுவோம் என்று மதீனாவாசிகள் அண்ணலாருக்கு உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்த பின்னர் தான் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குப் போகச் சம்மதித்தார்கள். அந்த உறுதிப்பிரமாணம் தான் வரலாற்றில் (பைஅதுல் அகபா) அகபா உடன்படிக்கை எனப்படுகிறது. நபிகளாரின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று முதன் முதலில் பைஅத் செய்த சமூகம் மதீனா சமூகமே! அதனால் அன்சார்கள் என்ற அழியாப் பெயரை அவர்கள் வரலாற்றில் தம்வசமாக்கிக் கொண்டார்கள்.

இங்கு ஒரு கேள்வி எழுவதற்கு இடமிருக்கிறது. மக்காவாசிகள் அதாவது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற உத்தமர்கள் நபிகளாரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தயாராக இருக்கவில்லையா?

உண்மையில் மதீனாவாசிகளை விட இவர்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர். அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறினால் அதனையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில், இஸ்லாத்தின் முதிர்ச்சி அவர்களை விட இவர்களுக்கே இருந்திருக்கிறது.

என்றாலும், மக்கா முஸ்லிம்கள் ரஸுலுல்லாஹ் எதிர்பார்த்த ஒரு சமூகமாக இருக்கவில்லை. அவர்கள் ஆங்காங்கே சிதறி வாழும் தனிமனிதர்களைக் கொண்ட ஒரு குழுவாகவே இருந்திருக்கிறார்கள். அன்றைய சமூக அமைப்பில் இத்தகைய குழுக்களுக்கு அதிகாரமில்லை. சமூகம் சமூகமாக வாழ்ந்த கோத்திரங்களுக்கே அதிகாரம் இருந்தது. எனவே அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்பதை, ரஸுலுல்லாஹ் அதிகாரம் இல்லாதவர்களிடம் கேட்கவில்லை. மக்காவில் அதிகாரம் இருந்த குறைஷிக் கோத்திரம் இறுதி வரை ரஸுலுல்லாஹ்வுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இங்கு தாஇகள் ரஸுலுல்லாஹ்விடமிருந்து ஒரு முன்மாதிரியைப் பெற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. சிதறிய தனிமனிதர்களை ஒருங்கிணைந்து ஒரு குழுவை அமைப்பதனால் இஸ்லாத்தின் முற்றுமுழுதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட முடியாது. சமூகத்தை உருவாக்குவதனால் மட்டுமே கூடுதலான இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். எனவே குழு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு தாஇகள் செயல்படலாகாது. சமூக உருவாக்கமே தாஇகளின் செயல்பாட்டுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

இந்த வகையில் தாஇகள் சமூகத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கலாகாது. அது இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை சிதைக்கும் ஒரு முயற்சியாகும். ஊரை இரண்டாக்காதீர்கள் என்று நாம் கூறும் போது அதனைப் பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் இது. ஊரோடு ஒத்தோடுவதற்கான அழைப்பு என்று தவறாக அதற்கு விளக்கம் கற்பிக்க முனைகிறார்கள். இந்த தவறான விளக்கம் ரஸுலுல்லாஹ்வின் ஒரு சுன்னாவைப் பரிகாசமாக்கி விடுகிறது.

ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் எதிர்பார்ப்புகளை முற்று முழுதாக நிறைவேற்றும் ஒரு சமூக சூழலை அன்னாருக்கு பெற்றுக் கொடுத்தது. மதீனா நபிகளாருக்கு ஏற்படுத்திக் கொடுத்த அந்த சமூக சூழலை மக்காவில் முயன்றும் பெற முடியாமல் போனதே மக்காவை நபிகளார் துறக்கக் காரணம். இந்த வகையில் மக்காவை அவர்கள் வெறுக்கவில்லை. மக்காவின் மனிதர்களையும் அவர்கள் வெறுக்கவில்லை. ஆனால் மக்காவின் சூழலை வெறுத்தார்கள் என்று கூறலாம். அதுவே ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் இங்கு மற்றுமொரு சுன்னாவை எமக்குக் கற்றுத் தருகிறது. இஸ்லாத்தை செயல்படுத்த முடியாத ஒரு சூழல் என்பதன் பொருள், சமூகம் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத சூழல் என்பதாகும். நபிகளாரின் வாழ்வில் மக்கா இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

இத்தகையதொரு நிலை இன்றைய தாஇகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விடைதேடி அவர்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. நபிகளாரின் சுன்னா வழிகாட்டுகிறது. அதனைப் பின்பற்றலாம்.

உதாரணத்திற்கு ஒரு கிராமம் இஸ்லாத்தின் எழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாஇகள் என்ன செய்ய வேண்டும்? மக்காவில் நபிகளார் என்ன செய்தார்களோ அதனைச் செய்யலாம்.

நபிகளார் மக்காவில் இஸ்லாத்தின் அடிப்படைகளைப் போதித்தார்கள். எதிர்ப்பு வந்தது. அழகிய பொறுமையைக் கைக் கொண்டார்கள். (அழகிய பொறுமைக்கும் ஆற்றாத பொறுமைக்கும் இடையில் வித்தியாசமிருக்கிறது). தளர்ந்து விடவில்லை. தலைவர்கள் சந்தித்தார்கள். பாமரர்களை சந்தித்தார்கள். தம்மை ஏற்று விசுவாசம் கொண்டவர்களுக்கு பயிற்சிகைள வழங்கினார்கள். துன்பம் செய்வோருக்கு நல்லன செய்தார்கள். அவர்களைத் தூற்றவில்லை. துன்பம் செய்யவுமில்லை. சாபமிடவில்லை. சாடவுமில்லை. அடித்து உடைத்து நொறுக்கவுமில்லை. சிலைகள் மூடியிருந்த கஃபாவை அவர்கள் பகிஷ்கரிக்கவுமில்லை. ஈமான் கொண்டவர்களை அவர்களது வீடுகளிலிருந்து பிரித்து விடவுமில்லை. அல் மவ்த்து பில்குர்பா எனக் குர்ஆன் கூறும் உறவினர்களின் அன்பை அவர்கள் வெட்டிவிடவுமில்லை. தன்னை ஏற்று விசுவாசம் கொள்ளாத தனது சிறிய தந்தை அபூதாலிபின் பாதுகாப்பை அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஷிஅபு அபீதாலிப் எனும் பள்ளாத்தாக்கில் மூன்று வருடங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட போது அதனை எதிர்த்தும் போரடவில்லை. ஓரிரவிலும், ஒரு பகலிலும் மாற்றத்தைக் கொண்டு வர அவர்கள் எத்தணிக்கவுமில்லை.

அண்ணலாரின் இந்தப் போக்கின் ஒவ்வொரு ஏட்டிலும் ஒரு தாஇக்குப் படிப்பினை இருக்கிறது. அதுவும் அண்ணலார் காபிர்களுக்கு மத்தியில் இந்தப் போக்கைக் கடைபிடித்தார்கள். இன்றைய தாஇகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்தப் போக்கை கடைபிடிக்க முடியாதா?

அண்ணலாரின் இந்தப் போக்கு மக்கா இரத்தக் கறை படியாமல் பாதுகாத்தது. மக்காவில் ஒன்றுக் கொன்று எதிராக இரண்டு குழுக்கள் மோதும் நிலை இதனால் தவிர்க்கப்பட்டது. இஸ்லாத்தை எதிர்த்து நின்றவர்களின் உள்ளங்களில் தீராத ஒரு பகைமை வளர்ந்து விடாமல் நபிகளாரின் இந்தப் போக்கு அணை போட்டது. ஒருநாள் அவர்களோடு ஒன்றிணையலாம் என்ற நம்பிக்கை இந்தப் போக்கை உரம் ஊட்டியது.

நபிகளாரின் இந்த சுன்னாவை இன்றைய தாஇகள் ஏன் விளங்கிக் கொள்ளாதிருக்கிறார்கள்? என்பது புரியவில்லை. விளங்கிக் கொள்ளாதிருந்தாலும் பாரவாயில்லை. ஊரோடு ஒத்தோடுதல் என்று இதற்குத் தவறான விளக்கம் தராதிருந்தால்!

நபி (ஸல்) அவர்கள் இந்தப் போக்கை பதின்மூன்று வருடங்களாக மக்காவில் பரீட்சித்தார்கள். மாற்றம் ஏற்படவில்லை. அதற்காக அவர்கள் தனது போக்கை மாற்றவுமில்லை. செய்த மாற்றம் என்னவென்றால் மாற்றம் ஏற்பட்டிருந்த ஒரு இடத்தை (மதீனாவை) நோக்கித் தன்னை மாற்றிக் கொண்டார்கள். அது தான் ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் மற்றுமொரு குழுவின் தலையிடியை நபிகளாருக்குத் தந்தது. அவர்கள் தாம் யூதர்கள். மக்காவில் குறைஷிகளோடு நபிகளார் எந்த அணுகுமுறையைக் கையாண்டார்களோ அதே அணுகுமுறையை யூதர்களுடனும் கையாண்டார்கள். சற்று வித்தியாசமாக! அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தி உடன்படிக்கை எழுதி, நாங்களும் நீங்களும் சமாதானமாக வாழ்வோம் என்றார்கள். ஆனால் யூதர்கள் எப்போதாவது சமாதானத்தை விரும்பினார்களா? அவர்கள் நயவஞ்சகமாக சமாதானத்தை முறித்துக் கொண்டார்கள். எனவே மீண்டும் அவர்களோடு சற்று வித்தியாசமாக நடக்க வேண்டிய ஏற்பட்டது. நடவடிக்கை எடுத்தார்கள்.

மக்காவில் உடன்படிக்கையில்லை. எனவே நடவடிக்கையுமில்லை. இங்கே உடன்படிக்கை இருந்ததனால் நடவடிக்கையும் இருந்தது. இந்த அணுகுமுறை உலகத்தில் அன்றிலிருந்து இன்று வரை அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த அணுகுமுறை மதீனாவில் ஒரு பிளவை ஏற்படுத்தவில்லை.

மக்காவில் சாத்வீகத்தால் செய்த அதே வேலையை அண்ணலார் மதீனாவில் சட்டத்தால் செய்தார்கள். இந்த அணுகுமுறை இஸ்லாத்தை நிர்மாணிக்கும் முயற்சியின் அத்திவாரமாகும். மட்டுமல்ல, ரஸுலுல்லாஹ் ஈட்டிய வெற்றிகளின் இரகசியமும் இதுவாகத்தானிருக்கிறது.

தாஇகளே! அழைப்பாளர்களே! நபிகளாரின் சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கிறோமே, மக்காவையும் மதீனாவையும் முன்மாதிரியாக வைத்து நபிகளாரின் சுன்னாவை கிராமங்கள் தோறும் பின்பற்ற எங்களால் முடியாதா?

மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு


உலக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசுஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ கடமைக்காகச் செய்வதுபோல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியக் கலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சாரச் செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மற்றவர்களின்முன் இறைவன் அளித்த உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கேலிக்குள்ளாக்கி வருகின்றது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்தியக் கலாச்சாரங்கள் கொள்ளை கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க மௌன அழைப்பு விடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும் இஸ்லாமிய உலகிற்குப் புத்துணர்ச்சியைத் தந்து, வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு பதில் எவ்வித உணர்வுமின்றி சாதாரணமாகக் கடந்து செல்வதற்குக் காரணம் இம்முஸ்லிம் சமூகம் சங்கைமிக்க முஹர்ரம் மாதத்தின் மகத்துவத்தைச் சரியாக உணராததும், இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பேணுவதன் கட்டாயத்தை அறியாததுமாகும்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:
இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.

இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.
இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.
"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள.

இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பை முஸ்லிம் உலகம் அனுஷ்டித்து வருகின்றது.
முஹர்ரம் மாதப் படிப்பினைகள்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.

யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.

இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.

ஆனால் இன்று நடப்பது என்ன?

பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் புதுவருடப்பிறப்பு எனில் அது ஜனவரி 1 தான்.
பெரும்பாலான முஸ்லிம்கள் தினசரி உபயோகிக்கும் நாள்காட்டியும் மாற்றார்களின் கடவுள்களை மகிமைப் படுத்தும் அல்லது நினைவு படுத்தும் முகமாகப் பெயரிடப்பட்ட கிழமைகளைக் கொண்ட நாட்காட்டிதான்.
பெரும்பாலான முஸ்லிம்கள் உடுத்தும் ஆடை முறையும் கரண்டைக்கு கீழே இழுபடும் அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மேற்கத்திய ஆடைமுறைதான்.
ஷியா முஸ்லிம்கள் இறந்தவர்களை நினைவு கூரும் முறையும், மாற்றார்கள் தன்னிலை மறந்து தரையில் விழுந்து அழுது புரண்டு தங்களது அங்கங்களையே காயப்படுத்திக் கொள்ளும் "பஞ்சா" போன்ற முறைகள்தாம்.
இன்னும் அடுக்கிக் கொள்ள இச்சமுதாயத்தில் அனாச்சார விஷயங்கள் எண்ணற்று மலிந்து நிறைந்துள்ளன.

இவ்விதம் அனாச்சாரங்களின் கூடாரமாக கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு முஹர்ரம் மாதத் துவக்கம் தரும் மகத்தான மற்றொரு சிந்தனை என்ன?

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருடத்தின் ஆரம்ப மாதம் என்பதோடு நிற்காமல் சற்று அதன் ஆழத்திற்கு இறங்கிச் சென்றால் புதுவருடம் தரும் மகத்தான சிந்தனையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

Nov 21, 2011

நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல இஸ்லாமிய ஷரியாவை தான்!!!

எகிப்தில் மாற்று ஆட்சிமுறைக்கான ஒரு மாற்றத்தை மக்கள் கேட்டனர் ஆனால் நடந்தது என்ன? ஒரு அநீதமான் ஆட்சி போய் மற்றொரு அநீதமான ஆட்சி வந்துவிட்டதை கண்டு முஸ்லிம் உம்மத் மீண்டும் கொந்தளிப்ப.நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல இஸ்லாமிய ஷரியாவை தான்....

எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.ஆட்சி அதிகாரம் ராணுவத்தின் கையில் வந்தது. இதற்கிடையில் இந்தமாத இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.ஆனால் சட்ட மறுசீரமைப்பு மற்றும் ராணுவ ஆட்சி போன்றவற்றிர்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

இது கடந்த வெள்ளிக்கிழமை தீவிரம் அடைந்தது. கெய்ரோ, அலெக்சாண்டிரியா ஆகிய நகரங்களில் சுமார் 1லட்சத் துக்கும் மேல் கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கி தொடர்ந்து போராடினர். இதற்கு ராணுவ ஆட்சியாளர் கள் அனுமதிக்க வில்லை. கூடாரத்தை அகற்றி விட்டு தக்ரீர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் எஸ்சாம் ஷராப் உத்தரவிட்டார். ஆனால், இதை போராட்டக்காரர்கள் கேட்கவில்லை.

இதையடுத்து நேற்று இரவு தக்ரீர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடா ரங்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்குமீண்டும் கலவரம் வெடித்தது. அதில் சுமார் 700 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இப்போராட்டம் கெய்ரோவை தொடர்ந்து தற்போது அலெக்சாண்டி ரியா, சூயஷ் நகரங்களுக்கும் கலவரம் பரவியுள்ளது.

Nov 9, 2011

எப்போது எழுவது? இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு முடிவே கிடையாதா?

அபூ அய்யூப் முஹம்மது

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்துக்கு புதிய விடயமல்ல.ஏனெனில் சத்தியத்துக்கும்அசத்தியத்துக்கும் இடையிலான போராட்டங்கள் மறுமை நாள் வரையும் இருக்கும் என்பது இறைவன் வகுத்துள்ள வழி முறையாகும். இந்த எதிர்ப்புகளுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்பதையும், இந்த வழிகாட்டலின் படி பதில் கொடுத்த முன்னோர்களின் வரலாறு என்ன என்பதையும் மீட்டிப் பார்ப்பது இன்றைய முஸ்லிம்கள் மீதுள்ள கடமையாகும்.

இஸ்லாத்தின் எதிரிகள் குறிப்பாக மேற்குலகம் இஸ்லாமிய சட்ட திட்டங்களையும் எமது நேசத்துக்குரிய தூதர் முஹம்மது (ஸல்)அவர்களையும் திட்டமிட்ட ரீதியில் காலத்துக்குக் காலம் அவமதித்து வருவது உலகறிந்த உண்மையாகும். இதன் தொடரில் (கடந்த வார இறுதியிலும் நேற்றும் 03-11-2011)பிரான்ஸில் எமது நேசத்துக்குரிய தூதர் முஹம்மது (ஸல்)அவர்களை நையாண்டி செய்து’ஷார்லி எப்தோ’( Charlie Hebdo) சஞ்சிகை செய்திகளை வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.

கடந்த பல வருடங்களாக மேற்குலகிலே நமக்குப் பழகிப்போன இஸ்லாத்துக்கெதிரான தொடர்ச்சியான தாக்குதல்களின் இன்னொரு வெளிப்பாடே இது. ஹிஜாபுக்கு எதிரான தாக்குதல்கள், நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை மிக மோசமாக சித்தரித்த கேலிச்சித்திரங்கள், அல் குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்ற கோஷங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். இவை தான் மேற்குலக அரசியல் வாதிகளால் சகிப்புத்தன்மை,மிதவாதம் என சிலாகித்துப் பேசப்படும் விழுமியங்களின் நிஜமான முகங்களாகும்.

இது போன்ற தாக்குதல்கள் வரும் போது, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இதன்மூலம் என்ன நாடப்படுகிறது? இஸ்லாமிய ரீதியில் மிகச்சரியான பதிலை எப்படிக் கொடுப்பது? ஆகிய அம்சங்களை அறிந்து செயற்படுவது மிக அவசியமாகும்.

மேற்குலகின் மிக முக்கிய எதிர்ப்பார்ப்புகளில் ஒன்றாக ‘கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி, மேற்குலகின் பெருமானங்களையும் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தல்’ என்ற விடயம் காணப்படுகின்றது.அதாவது அவமதித்தல் என்பதை நாம் விரும்பாதபோதிலும், கருத்துச்சுதந்திரம் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, அவமதிப்பதும் நிந்திப்பதும் அடுத்தவரின் உரிமையாகும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கு அப்பால் சென்று, நாம் மிகவும் புனிதமாக மதிக்கின்ற அம்சங்கள் தான் நிந்திக்கப்பட்டாலும் அதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதனை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது என்பதற்கான நியாயங்களைப் பார்ப்போம்.

முதலாவது: இன்று மதச்சார்பற்றவர்களாலும், மற்றோராலும் இஸ்லாம் நிந்திக்கப்படுவது போன்று யாருடைய புனித நம்பிக்கைகளையும் விளையாட்டுத்தனமாகவேனும் அவமதிப்பதற்கு ஒரு போதும் இஸ்லாம் அனுமதித்ததில்லை.

இரண்டாவது: தீமையைத்தடுத்தல் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைத் தொட்டும் வந்துள்ள மிகப் பிரபல்யமான ஹதீஸிலே தீமையானது கையாலோ நாவாலோ மாற்றப் படாத போது குறித்த தீமையை உள்ளத்தால் வெறுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். இதன்படி தீமையை உள்ளத்தால் வெறுத்தல் என்ற ஈமானின் மிகப் பலவீனமான கட்டத்தையும் தாண்டி இஸ்லாத்தை நிந்திப்பதற்கு அனுமதிக்கின்ற வரம்பில்லாத கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வது அடிப்படை ஈமானையே பாதிக்கின்ற விடயமாகும். இதனை ஏற்பது ஹராமாகும்.

மூன்றாவது: பேச்சுச் சுதந்திரம் என்ற மேற்குலக மாயை சமூகத்திலுள்ள அனேக அநீதிகளுக்கு காரணமாக அமைந்து விட்டதைக் காண முடிகிறது. ஐரோப்பாவிலே நபி ஈஸா (அலை)அவர்கள் கேலி செய்யப்படுவது ஒரு சாதாரண விடயமாகும். இத்தகைய அவதூறுகளை மேற்குலகம் குறிப்பாக கிறிஸ்தவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆயினும் மனித வரலாற்றில் மிகச்சிறந்த மாமனிதர்களான இவர்களையே கேலி செய்யும் அதே சமூகம் தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் போன்றோர் அவமதிக்கப்படும் போது கவலைப்படுகிறது. இப்படி ஒரு முரண்பாடான நிலைப்பாடு இவர்களிடம் காணப்படுகிறது.

இச்சமூகத்தைப் பொறுத்தவரையில் மட்டுப்படுத்தப்படாத பேச்சுச் சுதந்திரம் என்பது பிறரை அவமரியாதை செய்வதற்கான சுதந்திரமேயாகும். இவ்வாறான ஒரு சமூகத்தில் அமைதியோ சாந்தியோ நிலவ முடியாது. ஐரோப்பிய வரலாற்றை மீட்டிப் பார்க்கின்ற போது அவர்களால் சிறுபான்மை தொடர்பாக சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள முடியவில்லை என்பது புலனாகின்றது. மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற உரிமையானது மற்றவர்களை அவமதித்து அவர்களை ஒடுக்கும் உரிமையாக புது வடிவம் எடுத்திருப்பதை ஐரோப்பாவின் புதிய வரலாற்றிலே காணலாம்.

காலத்துக்குக் காலம் முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதற்கென்று பல கீழ்த்தரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆத்திரமூட்டலுக்கு எதிராக ஏதாவது வன்முறைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

அப்படியாயின் இது தொடர்பாக முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1.இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலனைப் பாதுகாக்கின்ற கிலாபா அரசொன்று இல்லாத நிலமையில் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் நற்பெயரையும் காப்பது சாத்தியமில்லை என்பதை முஸ்லிம்கள் முதலில் உணர்ந்தாக வேண்டும்.

கிலாபா ஆட்சி இருந்த போது அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் கேலி செய்வதற்கு சகலரும் மிகவும் தயக்கம் காட்டியே வந்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். பின்வரும் வரலாற்று நிகழ்வு இதற்கு சிறந்த சான்றாகும்.

’1889ல் முஹமட்’ எனும் பெயரில் இஸ்லாத்துக் கெதிரான மேடை நாடகமொன்றை பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த கவிஞரும் நாடக ஆசிரியருமான ‘ஹென்றி த போர்னியர்’ என்பவர் எழுதினார்.1890 ஆம் ஆண்டில் உஸ்மானிய கிலாபத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரான்ஸின் பிரதம மந்திரி ‘சார்ல்ஸ் த பிரகினண்ட்’ இந்த நாடகத்தைத் தடை செய்தார்.

மேற்படி நாடகத்தின் ஒத்திகை அரங்கேறிக் கொண்டிருக்கும் போது துருக்கிய பத்திரிகை யொன்று பிரான்ஸ் பத்திரிகையொன்றை மேற் கோள் காட்டி ‘ஹென்றி த போர்னியர்’ரின் அடுத்த வெளியீடாக ’1989ல் முஹமட்’ எனும் நாடகம் வரப் போகின்றது என்ற செய்தியை மீள் பிரசுரம் செய்திருந்தது.

இந்த நாடகத்தின் மூலம் போர்னியர் தனது அறியாமையையும் காரணமில்லாமல் முஸ்லிம்கள் மீது வைத்துள்ள காழ்ப்புணர்ச்சியையும் பாரபட்சத்தையும் வெளிக்காட்டியிருந்தார்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் பிரான்ஸில் துருக்கியின் தூதுவராக இருந்த இஸ்ஸத் பாஷா விடம் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் மீதான தாக்குதலோ முஸ்லிம்களின் மதிப்புக்குரிய நம்பிக்கைகளோ இதில் உள்ளடக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியிருந்தது.

பாரசீகத்தில் இறந்தவர்கள் மீது இரங்கல் என்ற அடிப்படையில் நபி முஹம்மது(ஸல்) அவர்களும் ஷீஆக்களின் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களும் நாடகங்களில் சித்தரிக்கப் படுகிறார்களே என்ற வாதத்தை ‘போர்னியர்’ சுட்டிக்காட்டினார்.இதே வேளை அல்ஜீரியாவிலும் டியுனீஸயாவிலும் அவரது நாடகம் தடை செய்யப்படுவதை ஏற்றுக் கொண்டார். இருந்தாலும் இந்த வாதங்கள் யாவும் துருக்கிய நிர்வாகிகளைத் திருப்திப் படுத்துவதில் தோல்வி கண்டன.

இதனைத் தொடர்ந்து 1890 ஆம் ஆண்டில் பிரான்ஸின் பிரதம மந்திரி ‘சார்ல்ஸ் த பிரகினண்ட்’ இந்த நாடகம் வெளிவருவதை பிரான்ஸிலும் தடை செய்தார்.இந்தத் தடை கலீபா சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது..

இந்த மேடை நாடகத்தில் ஒரு பெண்ணுக்காகவும் கிரிஸ்த்தவ மதத்தின் மீது கொண்ட கால்ப்புணர்ச்சி காரணமாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் தற்கொலை செய்து கொண்டார் என சித்தரிக்கப்பட்டிருந்தது. இது நிச்சியமாக முஸ்லிம்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற விடயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த இஸ்லாமிய எதிர்ப்பு மேடை நாடகத்தை முதலில் எதிர்க்கும் போது துருக்கிய தூதுவரோ கலீபாவோ நாடகத்தைப் பார்த்ததட்கு எந்த ஆதாரமும் இல்லை.குறைந்த பட்சம் படித்து அறிந்திருப்பார்கள்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் ‘பிரான்ஸ் அரசின் சரணடைதல்’ துருக்கிய கிலாபத்தின் அழுத்தத்தின் காரணமாகவே நடை பெற்றது என்பதாகும்.

இந்த அழுத்தத்தின் காரணமாக சரணடைதல் என்ற விடயம் நம்பக் கூடியதாக இருக்கின்றது என்பதை ,மார்டினோ’ என்பவர் அக்கால அரசியல் நிலைமையோடு ஒப்பிட்டுக் கருத்துக் கூறியுள்ளார். அதாவது 1889ம் ஆண்டு ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்லியம் இஸ்தனபூல் மற்றும் கிட்டிய கிழக்கில் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில் பிரான்ஸ் செய்கின்ற எந்தச் செயலும் துருக்கி ஜெர்மனியோடு கரம் கோர்க்க வழி செய்து விடக்கூடாது என்பதில் பிரான்சுக்கு பேரச்சம் இருந்தது. மேலும் பிரான்சுக்கும் வட ஆபிரிக்காவின் அதிகமான முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பும் இந்த சரணடைவுக்கு அழுத்தம் கொடுத்த காரணியாக இருந்தது என்பதற்கு மிகுந்த இடம் பாடு உள்ளது.

இந்த வரலாற்றுச் சம்பவத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

முதலாவது: இஸ்லாத்துக்கெதிரான எந்தச் செயலையும் தட்டிக் கேட்டல் இஸ்லாமிய ஆட்சியில் இருப்போரின் பணியாகும்.

இரண்டாவது: எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்ற அளவுக்கு பலம் பொறுந்தியதாக இஸ்லாமிய ஆட்சி இருப்பது அவசியம்.

மூன்றாவது: உஸ்மானிய சாம்ராஜ்யம் அதன் இறுதிக் கட்டத்தில் பல வகையிலம் பலவீனமான நிலையில் இருந்தது என்றிருந்தாலும் கிலாபத்தும் கலீபாவும் செய்ய வேண்டிய விடயங்கள் ஆட்சியாளர்களுக்கு நன்கு பரிட்சயமாக இருந்தன.

நான்காவது: இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காக்கின்ற பணி கலீபா மூலம் முன்னெடுக்கப்படுவது இஸ்லாமிய அடிப்படை என்பதும் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் நிறை வேற்றப்பட்ட கடமை என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இன்று அலைகள் போன்று தொடராகவும் இரகசியமாகவும் பரகசியமாகவும் தொடுக்கப்படுகின்ற சிந்தனா ரீதியான, இராணுவ ரீதியான தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் கிலாபா ஆட்சியின் மூலம் பதில் அளிப்பதே நிரத்தரத் தீர்வாகும். முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் காக்கக் கூடிய கலீபாவை முஸ்லிம்கள் ஏற்படுத்தாமல் மேற்கொள்கின்ற எந்தப் பணியும் நிரந்தரத் தீர்வாக இருக்காது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து செயற்பட இன்றே முன் வரவேண்டும்.

மேற்குலக தலைவர்களைப பொறுத்தவரையில் சுரண்டலையும் ஆக்கிரமிப்பையும் ஊக்குவிக்கின்ற ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை தமது விழுமியங்கள் எனக் கூறிக்கோண்டு எல்லா நிலையிலும் அவற்றைக் காப்பதற்காக பாடுபடுகின்றார்கள். எமது அருமை நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் கண்ணியத்தையும் இஸ்லாத்தின் பெருமையையும் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய எமது ஆட்சியாளர்களோ முஸ்லிம் தலைவர்களோ தங்களது நலனுக்காக மட்டும் குரல் கொடுத்து விட்டு மௌனமாகி விடுகின்றனர். நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் கண்ணியத்தையும் இஸ்லாத்தின் பெருமையையும் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய எமது ஆட்சியாளர்கள் எங்கே?என்ற கேள்விக்கு விடை காண முடியாமல் முஸ்லிம்களாகிய நாம் பல ஆண்டுகளைக் கடந்து விட்டோம்.

ஆகவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கின்ற ஒரு கிலாபாவை மீண்டும் நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் முழு ஆர்வத்துடன் முஸ்லிம்கள் கலந்து கொள்ள வேண்டும். இது போன்ற இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புதிய தாக்குதல்கள் வரும் போதெல்லாம் கிலாபாவை நிலைநாட்டுவதற்கான எமது முயற்சிகளைப் பல மடங்காகப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

2. இறைத்தூதர்களையே மதிக்காத ஒரு சமூகத்திலே எந்த ஒரு சாதாரன மனிதனுக்கும் மரியாதை கிட்டும் என எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே மேற்குலகிலே குற்றச் செயல்கள் மலிந்த, பாதுகாப்பும் அமைதியும் இல்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது என்ற யதார்த்த நிலையை விவாதங்கள, கலந்துரையாடல்கள, கட்டுரைகள, வெகுஜன தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். தேவையேற்பட்டால் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

3. இச்சந்தர்ப்பத்தில் முஹம்மது (ஸல்)அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது பற்றி அதிகமானோர் கேள்விகளை எழுப்புவார்கள்;. முஸ்லிம்களாகிய நாம் இதனை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி படைப்புகளிலே மிகச் சிறந்தவரும் மிக அழகிய உதாரண புருஷருமான முஹம்மது (ஸல்)அவர்கள் பற்றிய அறிவை உலக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக் கெதிரான கேலிச் சித்திரத்தை மேற்குலக அரசியல் வாதிகளும் வெகுஜன தொடர்பு சாதனங்களும் ஆதரித்தது போன்று இந்தப் புதிய அவமதிப்பையும் மேறகுலகு ஆதரிக்கலாம். எவ்வாறான நிலை ஏற்பட்ட போதிலும் முஸ்லிம்கள் அனைவரும் இந்த அவமதிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு நபிகள் நாயகம் ஸல் அவர்களையும் இஸ்லாத்தையும் ஆழமாகவும் தூய்மையாகவும் நேசிக்கிறோம்; என்பதற்கு அல்லாஹ்வின் முன் சான்று பகர இச்சந்தர்ப்பத்தை ஆர்வத்துடன் பயன்படுத்த முன்வர வேண்டும்.

அல்லாஹ் (சுபு)கூறுகிறான்:

61:14 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنصَارَ اللَّهِ كَمَا قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ ۖ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ ۖ فَآمَنَت طَّائِفَةٌ مِّن بَنِي إِسْرَائِيلَ وَكَفَرَت طَّائِفَةٌ ۖ فَأَيَّدْنَا الَّذِينَ آمَنُوا عَلَىٰ عَدُوِّهِمْ فَأَصْبَحُوا ظَاهِرِينَ

61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி ‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?’ எனக் கேட்க சீடர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்’ என்று கூறியதுபோல் நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும் இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.


சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதனைத் துயரவும் அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதனைத் தவிர்ந்து கொள்ளவும் அல்லாஹ் எமக்கு அருள்பாளிப்பானாக!

sources from ourummah.org

Nov 4, 2011

கிலாபத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?

அகீதாவை நோக்கி அழைப்போம். சரியாகச் சொன்னீர்கள். அகீதா தான் முதல் கட்டப்பணி இது தான் நபி வழியும் கூட.நாம் எடுக்க வேண்டிய முதல் முயற்சியும் இது தான்.

இஸ்லாம் பூரணத்துவமாகிவிட்டது. ஆனால் இஸ்லாத்தின் பூரணத்துவம் ஏட்டில் தான் இன்று இருக்கின்றது.ஏட்டில் இருக்கின்ற சட்ட திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான வழி முறைகளையும் காட்டித் தந்த மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான்.

ஆண்கள் ஐவேளைத் தொழுகையை வீட்டிலும் தொழலாம்.ஏன் பள்ளிவாசல் கட்டி அங்கு இமாமைத் தொடர்ந்து தொழுகின்றோம்? இது தான் நபி வழியில் அமைந்த தொழுகையை நடை முறைப்படுத்திய ஒழுங்கு.இந்த அழகிய நபி வழியை வாழ்வின் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு வருவது அவசியமாகும். இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

நாம் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, இறந்ததன் பின் அந்த குழந்தைகளுக்கு எமது சொத்துக்கள் எப்படிப்போய்ச் சேர வேண்டும் என்பதை கடமையாக்கிய மார்க்கம் இஸ்லாம். ஆனால் அந்தக் கடமையைச் செய்வதற்கான ஒழுங்கை கட்டி எழுப்புவது தான் இந்த வாரிசுச் சட்டத்தை நடை முறைப் படுத்துவதற்கான நபி வழி. இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

நாம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகிறோம்.எமது சகல கொடுக்கல் வாங்கலும் ஹலாலான முறையில் இருக்க வேண்டும்.வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டம் ஒழிக்கப்பட்டு வட்டியில்லா பொருளாதாரக் கொள்கை நம் வீட்டில் மாத்திரமல்ல.நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஸக்காத் என்ற கடமையை நபிவழியில் நிறை வேற்றவும், நமது நாடுகளில் பரவிக் கிடக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான நீர்,நெருப்பு (சகல விதமான கனிப் பொருட்கள்) ,பயிர் நிலம்; ஆகியவற்றை அடுத்தவர்களுக்குத் தாரை வார்த்து குறிப்பிட்ட சிலர் வயிறு வளர்ப்பதை இல்லாமல ஒழித்து, அவற்றை சரியாக பாதுகாத்து, அதலிருந்து பயன் பெறுவதற்கான வசதிகளைச் செய்வது என இஸ்லாம் பணிக்கும் பொருளாதாரத் திட்டத்தை நடை முறைப் படுத்துவதும் நபி வழியாகும். இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

எமது உயிர் மானம் உடைமை ஆகியவற்றைக் காப்பது கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக போராட்டம் செய்வதை எமது மார்க்கம் எமக்கு விதித்துள்ளது.இந்தப் போராட்டத்தை வழிநடத்தும் ஏக தலைவர் எமக்கென்று என்றும் இருந்தே வந்தார். எம்மைப் பாதுகாப்பதோடு, இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் பணியையும் அவர் செய்தார். இது தான் நபி வழியிலான அரசியல் ஒழுங்கு. இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

எப்படி பள்ளிவாசலைக் கட்டி இமாமை நியமித்து அவரைப் பின்பற்றித் தொழுகின்றோமோ அது போல் தான் இதுவும்.அகீதாவுக்கு அழைப்பது தான் முக்கியம், பள்ளிவாசலையும் இமாமையும் அவரைப பின்பற்றுவதையும் பற்றிப் பேசுவதில் என்ன பலன்? என்று நான் கூற மாட்டேன்.நீங்களும் கூறமாட்டீர்கள் என்றே நம்புகின்றேன்.

எமது ஊரில் பலருக்கும் எழுத வாசிக்கத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் டாக்டராக சிலர் வரவேண்டும் என்று முயற்சிக்காமல் இருப்பதா? இப்படி இருப்பது உலக நடை முறையைத் தெறியாததாலும் இஸ்லாம் என்ற அழகிய மார்க்கத்தின் இயல்பைப் புரியாததாலும் மாத்திரமே நிகழ முடியும்.உங்கள் குடும்பத்திலேயே எத்தனை படிப்பாளிகள் உருவாகி விட்டார்கள் என்பது உங்களுக்குத் தான் நன்கு தெரியும். டாக்டராக்க வேண்டும் என்ற சிந்தனையும், அதற்கான முயற்சிகளும், தியாகங்களும் இன்றி யார் டாக்டர் ஆனார் என்று சொல்ல முடியுமா?

குர்ஆன் ஹதீஸின் படி அமைந்த இஸ்லாமிய வாழ்க்கைத் திட்டம் ஏட்டிலேயே இருக்கட்டும் என்று எந்த முஸ்லிமும் ஆசை வைக்க மாட்டான். இந்த வாழ்க்கைத் திட்டத்தை எப்படி நபிகளார் நடை முறைப்படுத்தினார்கள் என்பதை அறிவதற்கு முயற்சி செய்வான். நல் வழி நடந்த நம் முன்னோர் செய்ததும் சொன்னதும் எம்மில் இருக்கின்ற எத்தனையோ மனிதர்கள் கூறக் கூடிய கருத்துக்களைவிட சிறந்தது என்பதைக் கண்டு கொள்வான். இந்தக் கருத்து நபிகளாரின் கருத்தாகும். இதைக் கூட ஏற்காத நம்மவர்கள் நாம் சொல்வதையா கேட்கப் போகிறார்கள்..

கிலாபத் பற்றி ஏன் இப்போது பேசுகிறோம் என்றால் இமாமைப் பின் தொடர்ந்து தொழுவது நபி வழி என்பதை எப்படி விளங்கிக் கொண்டோமோ அவ்வாறே கலீபாவின் பின்னால் இருந்து இஸ்லாத்தை அதன் மொத்த உருவில் நடை முறைப்படுத்த அவருக்குத் துணையாக இருப்பதும் இஸ்லாத்தின் ஜோதியை அழைப்புப் பணி அறப் போர் என்ற அடிப்படையில் உலகெங்கும் அவர் எடுத்துச் செல்லும் போது, வெற்றியை அல்லது வீர மரணத்தை அடைவதும் நபி வழி என்பதை நம்புகின்றோம். அதனால் தான் கிலாபாவைபப் பற்றி இன்றே சிந்திக்கிறோம், பேசுகிறோம், அதன் பால் அழைக்கிறோம்.

கிலாபத் சிந்தனையை ஏற்க மறுப்பது இஸ்லாம் பூரணத்துவமாக நடை முறைப்படுத்தப் படுவதற்கான ஒழுங்கை மறுப்பதாகும். இஸ்லாம் முஸ்லிம்ம்களாலேயே தவறாகப் புரியப்பட்டு விட்டதற்கு இது சிறந்த சான்றாகும்.

சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதனைத் துயரவும் அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதனைத் தவிர்ந்து கொள்ளவும் அல்லாஹ் எமக்கு அருள்பாளிப்பானாக!

ஆக்கம்:அபூ அய்யூப் முஹம்மது

Oct 28, 2011

கேணல் கடாபி: ஒரு சரித்திரத்தின் சரிவு

M.ஷாமில் முஹம்மட்
1942 ஆம் ஆண்டு ஜூன், 7ஆம் திகதி பிறந்த கடாபி தனது வாலிப பருவத்தில் இராணுவத்தில் இணைந்தார். அன்றைய லிபிய மன்னரான முஹம்மத் இத்ரீஸ் அஸ்ஸனூஸி என்பவர் சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 1969 ஆம் ஆண்டு தனது 27 வது வயதில் இராணுவ சதிப் புரட்சி மூலம் லிபியாவின் ஆட்சியை கைப்பற்றினார்.
இவரின் காலத்தில் ரஷிய சோசலிஷம் களந்த அரபு இனத் தேசியவாதத்தை முழங்கியவரான எகிப்திய ஜனாதிபதி -இவரும் இராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியவர் – கமால் அப்துல நாசரின் பரந்த அரபு தேசியவாதத்தினால் அல்லது ”நாசரிஷம்” என்று அழைக்கப்பட்ட சோசலிஷமும் அரபு தேசியவாதமும் களந்த கோட்பாட்டால் தாக்கமுற்ற கடாபி முஸ்லிம் அரபு உலகில் மேற்கின் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை கமால் அப்துல் நாசரின் வழிநின்று தானும் கடுமையாக எதிர்த்தார்.
கடாபி லிபியாவின் நிர்வாகத்தை கைப்பற்றி சில மாதங்களில் இவருக்கு எதிரான மற்றுமொரு புரட்சியை லிபியாவில் இவர் முறியடித்தார் என்று சொல்லப்படுகின்றது அதை தொடர்ந்து , நாட்டின் முக்கிய நிர்வாகம் முழுவதும் தனக்கு நன்கு விசுவாசமான உறவினர்களை கொண்டு கட்டியமைத்தார். இதன்போது தான் உருவாக்கிய மிகவும் பரந்த பாரிய புலனாய்வு அமைப்பின் ஊடக தினமும் லிபிய மக்களை கண்காணித்து வந்தார்.
கடாபி லிபியாவை இராணுவ சதிப் புரட்சி மூலம் கைப்பற்றும்போது இருந்த மோசமான பொருளாதார நிலையிலிருந்து லிபியாவை மீட்டார் பொருளாதார முறைமையில் பலமாற்றங்களை அறிவித்தார். தனது சோஷலிச அரபு தேசியவாத மற்றும் ஆபிரிக்க தேசியவாத தத்துவத்தை விளக்கும் The Green Book எனும் புத்தகத்தை 1975 ஆம் ஆண்டு எழுதினார். அதில் ”மூன்றாவது சர்வதேச தத்துவம்” என்ற தத்துவம் ஒன்றை முன்வைத்தார் அதுதான் நாட்டின் யாப்பு என்றும் கூறும் அளவுக்கு சென்றது . நாட்டில் எண்ணெய் அகழ்வு மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவங்கள பெரும்தொகையை லிபிய மக்களுக்கு வழங்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்றார். நாட்டின் பொருளாதரத்தை டொலரை புறம்தள்ளி தங்கத்தை மையமாக கொண்டதாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கினார் .
லிபியாவின் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பதிலாக அவர்களை முதலீடுகளின் பங்குதாரர்கள் என அறிவித்தார், பிற்காலத்தில் பல இலவச திட்டங்களை அறிவித்து லிபியாவின் மக்கள் அனைவருக்கும் இலவச சுகாதாரம் , மருத்துவம் , இலவச கல்வி , இலவச மின்சாரம், வட்டியற்ற கடன், வாகன கொடுப்பனவு அதாவது லிபிய நபர் ஒருவர் வாகனம் ஒன்றை வாங்க நினைத்தால் அதற்கு 50 % கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் , திருமணம் முடித்தால் வாழ்க்கை செலவுக்கான பெரும்தொகை பணம் வழங்கப்படும் என்றும் பல பெருளாதார திட்டங்களை அறிவித்தார். லிபியாவை கடனற்ற நாடாக நிர்வகித்தார். தன்னை லிபிய மக்களுக்கு ஒரு சிறந்த சகோதரனாக அறிவித்தார். பலஸ்தீன மக்களின் எழுச்சிக்கு தனது முழு ஆதரவை வழங்கினார். அதேபோன்று கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராடத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் இஸ்ரேலுடனான போரில் தான் நேரடியாக பங்குபற்றினார், இவைகள் மூலம் கடாபி லிபியாவை தனது சர்வாதிகார ஆட்சியின் பிடியில் தொடந்து வைத்திருக்க முடியும் என்று கருதினார். லிபியாவை 42 ஆண்டுகள் சர்வாதிகாரப் பிடியில்வைத்து அரபு நாடுகளில் நீண்ட காலம் சர்வாதிகார ஆட்சி நடத்திய நபர் என்ற பெருமையையையும் பெற்றார்.
இதன்போது கடாபி தன்னையறியாமலே மிக பாரிய வரலாலற்று தவறு ஒன்றை தொடர்ந்து செய்துவந்தார் . அவர் இஸ்லாமிய கோட்பாடுகள் சிலவற்றில் தனது விருப்பபடி மாற்றங்கள் செய்யுமாறு போதித்தார். இவர் கொண்டிருந்த சோஷலிச அரபு தேசியவாதத்தின் விளைவாகவே அது வெளிப்பட்டது. அல் குர்ஆனிலிருந்து சில வசனங்களை நீக்கவேண்டும் என்றார் அல் குர்ஆனில் அதிகமாக வரும் குல்- கூறுவீராக – என்ற சொற்களை நீக்கவேண்டும் . அந்த சொற்கள் முஹம்மதிற்கு மட்டும் உரியது. இப்பொழுது அந்த சொற்கள் தேவையற்றவை என்றார் . ஹிஜாப் அறியாமைக்கால பழக்கம் என்றார் , இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றான ஹதீஸ்களை அவசியமற்றவை நம்மிக்கை கொள்ள தகுதியற்றவை என்றார். இவற்றை எதிர்த்த வாலிபர்களை படுகொலை செய்தார்.
1978 ஆம் ஆண்டு சில வாலிபர்கள் கடாபியை அணுகி அவரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவரை மீண்டும் இஸ்லாத்தை நோக்கி அழைக்க துணிவாக சென்றனர். கடாபியுடன் அவர்கள் நான்கு மணித்தியாலங்கள் அவரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவரின் பெரும் தவறுகளை அவருக்கு உணர்த்தமுயற்சித்தனர் ஆனால் கடாபி கடும் சீற்றம் கொண்டார் தன்னிடம் தவறுகளை துணிவுடன் எடுத்துரைத்த 13 வாலிபர்களையும் அவர்களின் பொறியியல் பல்கலை கழக வளாகத்தில் தூக்கிலிட்டு கொலைசெய்யுமாறு வீர தீர கட்டளை பிறப்பித்தார். இவர்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இஸ்லாமிய சர்வதேச அமைப்பை சேர்ந்த வாலிபர்களும் இருந்தனர். பிடித்து வரப்பட இந்த 13 வாலிபர்களும் அவர்களின் சக மாணவர்கள் , ஆசிரியர்கள் , குடும்பத்தினர் முன்நிலையில் தூக்கியிலிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் சஹீத்தாகாத நிலையில் மீண்டும் தூக்கில் போடப்பட்டு அவரின் மகனின் முன்நிலையில் இராணுவவாகனம் ஒன்றில் கட்டப்பட்டு வீதிகளில் இழுத்து செல்லப்பட்டார். அந்த கொல்லப்பட்ட நபரின் மகனுக்கு தற்போது 28 வயது என்பது குறிப்பிடத்தக்கது. கடாபி தனது 42 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியின் போது படுகொலை செய்தவர்களின் உறவுகள்தான் தற்போது கடாபிக்கு எதிராக போராடியவர்கள்.
கடாபி தன்னை எதிர்க்கும் எவரையும் உயிருடன் இருக்க அனுமதிக்கவில்லை. தனது எதிரிகளை மட்டுமல்ல தமக்கு எதிராக முனுமுக்கும் எந்த நபரையும் அவர் சிறைப்பிடித்து வதைமுகாமில் வதைக்க தயங்கவில்லை கைது செய்யப்படுபவர்கள் எந்த விதமான நீதி விசாரணையும் இன்றி படுகொலை செய்யப்படுவது லிபியாவில் சாதாரண செய்தி என்ற நிலை நீண்ட காலமாகவேன் தொடர்ந்தது. லிபிய மக்கள் இவர் எழுதிய ”பசுமை புரட்சி” உட்பட மற்றைய அனைத்து நூல்களும் லிபியாவின் குப்பை என கூறத் தொடங்கினர் இதனால் நூற்றுக் கணக்கானவர்கள் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பிராந்தியத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி குறிப்பாக துனீசியாவினதும் எகிப்தினதும் மக்கள் எழுச்சியின் தாக்கம் லிபியாவை இலகுவாக தாக்கத் தொடங்கியது. துனீசியா மக்கள் எழுச்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய மக்கள் எழுச்சி என்று தொடரான மக்கள் எழுச்சி போராட்டங்கள் லிபியாவில் போராட்ட அணிகளை உருவாக்கியது.
ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளால் பிடிக்கப்பட்ட 6 வது நாள், கடாபி தனது பாரிய ஆயுத களஞ்சியங்களை அழித்துவிடுவதாக தெரிவித்து அதனை சர்வதேச நாடுகள் ஆய்வு நடத்தவும் அனுமதித்துடன் அமெரிக்காவின்” பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு” முழு ஆதரவையும் கடாபி தெரிவித்தார். கடாபி 2003 ஆம் ஆண்டில் அணு ஆயுத திட்டத்தை கைவிட்டார். விளைவு 2003 ஆம் ஆண்டில் மேற்கு லிபியா மீதான பொருளாதார தடையை நீக்கியது. கடந்த 7 ஆண்டுகளாக லிபியா மேற்குடன் வர்த்தக உறவை வலுவாக ஏற்படுத்தியது. இதன்போது லிபியாவின் எண்ணெய் கிணருகளை கொண்டுள்ள பகுதிகளில் அரைநிர்வாண , முழு நிர்வாண விடுதிகள் உருவாக்க பட்டமை லிபிய மக்கள் தமது சமூக நீதிக்கு விரோதமாக பார்க்கத்தொடங்கினர்.
லிபியாவை பொறுத்த வரையில் இராணுவத்தின் ஒரு சாரரும் கடாபியின் கூலி படையான ‘மக்கள் இராணுவமும்’ மக்களை கொன்று குவித்தது கடாபி மிகவும் கொடுரமானவர் என்பதற்கு கடந்த 1996 ஆம் ஆண்டிலும் தலைநகரான திரிபோலியில் அமைந்துள்ள அபூ சலீம் சிறைச்சாலையில் ஒரு இரவில் 1200 கைதிகளை எந்தவித கருணையும் இன்றி படுகொலை செய்தமையை குறிப்பிடலாம் இதுவரையும் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளானர் அது பற்றிய தகவல் இனிவெளிவரும். லிபியாவில் பல நூற்றுகணக்கான இஸ்லாமிய புத்திஜீவிகள பல்கலை கழகங்களிலும் ஆய்வு மையங்களிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், கடாபியை மிக தெளிவான அல்லாஹ்வின் எதிரியாக லிபிய மக்கள் பார்கின்றனர். இங்கு ஆர்பாட்டங்களில் ஈடுபடும் பல கோத்திரங்களை இணைக்கும் இயக்கமாக ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’ பார்க்க படுகின்றது. இந்த இயக்கம் சணூசி என்ற இம்மாமால் சூடான் ,மற்றும் லிபியாவில் இஸ்லாமிய அரசியல் , மற்றும் ஆன்மீக சிந்தனைகளை போதிக்கும் முகமாக 1836 ஆம் ஆண்டு மக்காவில் உருவாக்கப்பட்டது தற்போது இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் பல சணூசி இயக்க சிந்தனையும் தற்கால இயக்கங்களுடைய சிந்தனை போக்கையும் கொண்டுள்ளதாக பார்க்கபடுகின்றது.
லிபிய மக்களின் உள்ளங்களில் இஸ்லாம் நிறைந்துள்ளது. அவர்கள் எப்போதும் அதன் பால் கவரப்பட்டவர்களாகவே உள்ளனர் ஆனால் கடாபிக்கு எதிராக நடைபெற்ற போரை வழிநடத்தியது மேற்கு ஏகாதிபத்தியம்தான் அவர்களின் ஆதரவுடன்தான் கடாபி அகற்றப்பட்டுள்ளார். இதை இரண்டு வகையாக பார்க்கமுடியும் ஒன்று ஏகாதிபத்தியம் தனது இலக்குகளை லிபியாவிலும் பிராந்தியத்திலும் அடைந்துகொள்ள இஸ்லாமிய போராளிகளை ஒன்றிணைத்து பயன்படுத்தியுள்ளது . அதேபோன்று இஸ்லாமிய சக்தி தமக்கு முன்னிருந்த மிகப்பாரிய தடையை தகர்க்க ஏகாதிபத்தியத்தை பயன்படுத்திகொண்டது.
தற்போது லிபியா சர்வதேச வியாபார மாபியாக்களினதும் , சர்வதேச புலனாய்வு பயங்கரவாதிகளினதும் சத்திர சிகிச்சைகளமாக மாறியுள்ள நிலையைத்தான் தற்போது பார்க்கின்றோம் துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் மேற்கின் மேலாதிக்க நகர்வுகள் புறம்பானதாகவும் லிபியாவில் ஆப்கான ஈராக் , பாகிஸ்தான் மாதிரிகளிலும் அமைய வாய்ப்புள்ளது போன்று தெரிகின்றது. எதையும் உடனடியாக தீர்மானமாக கூறமுடியாவிட்டாலும் எகிப்தை போன்று அதன் அளவுக்காவது பார்க்க முடியாதுள்ளது. கடாபி ஒரு கொடிய சரித்திரத்தின் சரிவு, லிபியா: ஒரு புதிய வரலாற்றின் ஆரம்பம் மட்டுமே .
Sources From ourummah.org

Oct 24, 2011

ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது...!!

அபூ அய்யூப் முஹம்மத்


ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது. புதியதோர் எதிர் காலத்துக்கு ஆல்லாஹுத் தஆலா அடித்தளமிடுகிறான்: அநியாயக்காரன் இம்மையிலும் மறுமையிலும் எவ்வாறான இழிவுகளை அடைவான் என்பதற்கான மற்றுமோர் உதாரணமே கடாபியின் தோல்வியாகும்.

கடாபியையும் அவனது சர்வாதிகார ஆட்சியையும் இல்லாமல் செய்தமை விசுவாசிகளுக்கு மிகச் சிறப்பான ஒரு செய்தியாகும். وَبَشِّرِ الْمُؤْمِنِينَ 10:87. மேலும்இ நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!’ ஜ10:87ஸ இவன் தனது 42 வருட சர்வாதிகார ஆட்சியில் ஆயிரக்கணக்கானோரை படுகொலை செய்து, பல்லாயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்து, மில்லியக் கணக்கானோருக்கு சொல்லொனா அநியாயங்களைப் புரிந்தான். தன்னை எதிர்த்தனர் என்பதற்காக சிலரையும் இஸ்லாமிய நம்பிக்கை பற்றி தான் கொண்டிருந்த சிந்தனைக்கு எதிராக, குறிப்பாக நபிகளாரின் சுன்னாவை மறுத்த போது தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்டனர் என்பதற்காக இன்னும் பலரையும் கொலை செய்தான்.சிறையிலடைத்தான். துன்புறுத்தினான்.

இவன் தான், மேற்குலகின் குறிப்பாக பிரித்தானியா, இத்தாலி போன்ற நாடுகளின் விருப்பு வெறுப்;புக்களை ஆபிரிக்காவில் நிறைவேற்றி வந்தவன். கடாபியை நேடோ படை எதிர்த்துப் போராடியது என்பது மக்களின் புரட்சியோடு கலக்கப்பட்ட ஒரு நாடகமே. பிரித்தானிய பொலிஸ் அதிகாரியைக் கொன்றான், ஐ ஆர் ஏ என்ற பயங்கரவாத அமைப்புக்கு உதவினான் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு பிரத்தானிய வரலாற்றின் மிகப் பெரிய பயங்கரவாதி எனக் கருதப்பட்ட போதிலும் பிரித்தானியாவின் முன்னால் பிரதம மந்திரி டோனி பிளேயர் கடாபியை கட்டித் தழுவியமையைக் கண்டோம்.

‘டோனி பிளேயரை’த் தொடர்ந்து வந்த ‘கோடன் பிரவுன்’ நத்தார்ப் பண்டிகை வாழ்த்து அட்டை அனுப்பியமையும், தற்போதைய பிரதமர் டேவிட் கமரூனோ, கடாபியின் ஆட்சி முடிந்து விட்டது என்ற இறுதிக் கட்ட நிலையில் தான் கடாபிக்கு எதிராக கருத்துக் கூறியமையும், 2011 ம் ஆண்டு வரை கனரக ஆயுதங்களை கடாபிக்கு விற்பனை செய்தமையும் கடாபியின் மகனோடு மிக நெருக்கமான உறவை பேணி வந்தமையும் அவதானிக்கத் தக்கது.

லிபியாவின் மக்களோ அயலில் உள்ள அரபு ஆட்சிகளின் உதவிகள் கிடைக்காததன் காரணமாக நேடோ படைகளின் உதவியைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினர். நேடோவின் பங்களிப்பு கடாபி, முபாரக், பென் அலீ, பஷார அல் அஸத், அலீ அப்தல்லாஹ் ஸாலிஹ், பஹ்ரைனின் ஹம்மாத் பின் ஈஸா, மற்றும் அல் ஸஊத் பரம்பரையின் முடி ஆட்சி ஆகிய அநியாயக்கார சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு உதவுவதாகவே உள்ளது. நேடோவின் செயல்கள் எப்போதும் சுய லாபம் கருதியதாகவே உள்ளது..ஒரு போதும் மனிதாபிமானம் என்ற ரீதியில் இருந்ததேயில்லை.

கடாபியின் கேவலமான முடிவு உலகெங்கும் பரவிய இந்த வேளையில் ஒவ்வொரு அநியாயக்காரனும் சர்வாதிகாரியும் தத்தமது தவனையும் முடிவுக்கு வந்து விட்டது என்பதை கண்கூடாகப் பார்த்து பாடங்களைக் கற்றுக் கொள்ளட்டும். புதியதோர் எதிர்காலத்துக்கு ஆல்லாஹுத் தஆலா அடித்தளமிடுகிறான் என்ற நல்லுணர்வை எமது சமூகம் பெற்றுக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தின் நீதி மட்டும் தான் தமக்கு பாதுகாப்பையும் சாந்தி சமாதானத்தையும் நிச்சியம் தரும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தும் பணி புரியும் போது நிச்சியமாக அல்லாஹ் வாக்களித்த அனைத்தும் நிறைவேறியே தீரும்.

24:55 وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ

24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களைஇ அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல்இ பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும்இ இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும்இ அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும்இ அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ‘அவர்கள் என்னோடு (எதையும்இ எவரையும்) இணைவைக்காதுஇ அவர்கள் என்னையே வணங்குவார்கள்;’ இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

Oct 22, 2011

மாற்றம் தேடும் வழி முறைகள்


'ஷஹாதத் கலிமா'வைச் சுமந்த முன்னோர்,
அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.
சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,
சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம்.

குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,
குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,
குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,
குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்!

முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,
சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,
இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,
ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.

பூரண இஸ்லாத்தில் நுழைந்த முன்னோர்,
பாரெங்கும் பங்காற்றி சாதனைகள் புரிந்தார்கள்.
பாதி இஸ்லாத்தையும் புரியாத நாம்,
பாதையைக் காட்டும் குருடனாய் அலைகின்றோம்.

ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக் கென்றோர்,
அழைப்பாலும் அறப் போராலும் கண்டங்களை வென்றார்கள்,
ஆட்சி யதிகாரத்தை மனிதனுக்குத் தந்து,
எம் தேசங்களிலேயே சிறைப்படுத்தப் படுகின்றோம்.

ஒரு 'உம்மத்;' ஒரு 'கிலாபத்' கோட்பாட்டை
ஒரு கணமும் மறந்ததில்;லை முன்னோர்கள்.
'பிளவே எம் பாதை', 'பிரிவினையே எம் வேதம்' என்று
சிதறிய கண்ணாடித் துண்டுகளாக்கியது நம்மவர்கள்.

இறை சட்டங்களால் ஆளப்பட்டதைத் தான்,
'இகாமதுத் தீன்' என்றார்கள்,
விஷத்தில் சிறிது பாலிருந்தாலும்,
வாழும் மனிதனுக்கு தீர்வென்கிறோம் நாம்.

கொள்கைத் தெளிவோடும் தெளிவான வழியோடும்
அழைப்புப் பணிக்கு அழகு சேர்த்தார்கள்.
மயக்கமான கொள்கையோடும் மாறும் வழிமுறைகளோடும்,
முழு மனித வீழ்ச்சியின் கர்த்தாக்கள் ஆனோமே!

சுவனத்தை நாடியும் கோட்பாட்டை மதித்தும்
கட்டுப்பட்ட முன்மாதிரிப் படையே முன்னோர்கள்.
ஆட்களை மகிழ்வூட்டி உலகை அடைவதற்காய்,
கூலிக்கு மாரடிக்கும் ஊதியப் படையே நம்மவர்கள்.

மக்களே!
அனைத்து முஸ்லிம்களையும் அணைத்துக் கொள்வோமே.
நம் முன்னோரின் வழியில் முன்னேறிச் செல்வோமே!
செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருப்போமே!
இறை கலிமாவை உலகெங்கும் ஓங்கச் செய்வோமே!

மக்களே
சம்பூரண இஸ்லாத்தை ஏற்கத் தயங்காதீர்!
'ஷரீஅத்'தில்லா ஆட்சிக்கு வாக்கைத் தராதீர்!
'கிலாபத்' தானாய் வருமென்று தட்டிக் கழிக்காதீர்!
'மஹ்தி' மீட்கட்டுமே யென்று முடங்கிக் கிடக்காதீர்!

மக்களே!
நபி தந்த வழி முறையை பற்றிக் கொள்ளுங்கள்!
'இறையாட்சி தான் தீர்வென்று உரத்துக் சொல்லுங்கள்!
படையின் உதவியோடு தீனை நிலை நாட்டுங்கள்!
நபி வழி கிலாபத்தை மீண்டுமாய்க் கட்டி எழுப்புங்கள்!