Mar 10, 2014

கலாச்சாரம் என்பது…?


வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமான அகீதாவில் இருந்து உருவாகும் அம்சமாக கலாச்சாரம் உள்ளது. இன்றுள்ள நவீன உலகில் ஒரு முஸ்லிம் நாகரீகம் எனும் பெயரில் மேற்கினதுகலாச்சாரத்தை சர்வசாதாரணமாக Copy யடித்து உள்வாங்கி பின்பற்றி வாழ்வதனை நாம்காணலாம்.
மேற்கினது கலாச்சாரம் வாழ்வியல் பற்றிய கண்ணோட்டத்தை பார்க்கும் பார்வை இஸ்லாத்தினதுவாழ்வியல் கண்ணோட்டத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாகும்.

மேற்கினது கலாச்சாரம் வாழ்வியலில் மதத்தின் தலையீட்டை நீக்கிவிடுதல் எனும் அடிப்படையில்மனோ இச்சையை பின்பற்றி வாழும் வழிமுறைகளில் உச்சகட்ட புலன் இன்பங்களை எந்தவிதமானவரையறைகளின்றி அனுபவிக்க வேண்டும் என்பதிலும் நிறுவப்பட்டுள்ளது. இந்த பார்வையில் ஒருமுஸ்லிம் தமது வாழ்வொழுங்கை அமைக்க முடியாது. அவன் அல்லாஹ் விதித்த வரம்புகளைமீறமுடியாது. அவ்வரம்புகளை பேணியபடி இறை திருப்பதியை நாடிய நிலையில்தான அவனதுபுலன் இன்பங்களை அவன் ஒழுங்குபடுத்தவேண்டும்..

ஆதலால் ஒரு முஸ்லிம் மேற்கினது காலாச்சாரத்தை பிரதிபலிக்கும் எந்த ஒன்றையும் பின்பற்றமுடியாது. அது அவனை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கும் தன்மையை அவனதுவாழ்வொழுங்கில் ஏற்படுத்தும்.

இன்று மேற்கினது காலாச்சாரம் ஒரு முஸ்லிமின் ஆடைமுதல் விளையாட்டுவரை வாழ்வின்அனைத்துத் துறையிலும் ஊடுறுவியுள்ளது. இதுபற்றி ஒவ்வொரு முஸ்லிமும் ஆழ்ந்து சிந்தித்துஎமது கலாச்சாரத்தை பண்பாட்டை வாழ்வில் ஒழுகிட முற்படவேண்டும். அதுவே எமது ஈருலகபாக்கியத்திற்கும் ஈடேற்றத்திற்கும் வழிவகுக்கும். இறை திருப்தியை பெற்ற மக்களாக வாழவழிவகுக்கும் என்பதனை உணரவேண்டும்.

அன்னிய கலாச்சாரங்களை எம்வாழ்வில் இருந்து களைந்திடுவோம்! அது பற்றிய சிந்தனைத்தெளிவைப் பெறுவோம்!

No comments:

Post a Comment