Mar 10, 2014

பெண்ணியம் பேசும் கூட்டத்திற்கு அல்லாஹ் கூறும் செய்தி...?

இரவு பகலும் எவ்வாறு அதன் தன்மையில் கடமையில் வேறுபட்டு அதற்குரிய தன்மையை கொண்டுள்ளதோ அதேபோன்று ஆணையும் பெண்ணையும் வேறுபட்ட தன்மையில் அவரவர்களுக்கு தனித்துவமான பணிகளுடனும் பொறுப்புக்களுடனும் படைத்துள்ளான் என்பதனை மிக அழகாக தனது திருமறையில் விளக்குகிறான்.

ஆனால் அவர்கள்கள் விடயத்தில் பொதுப்படையாக இருப்பது அவர்கள் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் பாவங்களை விட்டும் தவிர்ந்து அவனது கோபத்தை விட்டும் பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதும் தங்களிடம் உள்ளவற்றை அல்லாஹ்விற்கான வாரி வழங்குவதுமாகும்.

அத்துடன் அவர்கள் அனைத்து நன்மைகளும் நலவுகளும் அல்லாஹ்விடம் இருந்துதான் வருகிறது என்று உண்மைப்படுத்தியபடி வாழ்வதுமாகும்.

அவ்வாறு வாழும் அவர்களுக்கே அல்லாஹ் அவர்களது ஈருலக வழிகளையும் இலகுபடுத்துவான் எனும் கருப்பொருளை மிக அழகிய முறையில் தனது திருமறையில் சூறதுல் லைல்லில் முதல் 7 வசனங்களில் கூறுவதாக ஷெய்ஹ் அபூதல்ஹா அழகான தப்ஸீர் விளக்கத்தை வழங்குகிறார்.

No comments:

Post a Comment