May 26, 2014

நாளைய தலைவர்களாக வரவேண்டிய இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சிந்தனைத் தெளிவுகள் என்ன...?


இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்று பொதுவாக எல்லோரும் அழைப்பார்கள். ஆம் நாளைய தலைவர்களாகவுள்ள இன்றைய இளைஞர்கள் எத்தகைய தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். அந்த தலைமைத்துவம் என்ன? 

தலைவர்கள் ஒரு இலக்கு நோக்கி சமூகத்தை வழிநாடாத்துபவர்கள். எந்த இலக்கு நோக்கி இன்று தலைவர்கள் மனிதர்களை வழிநாடாத்துகிறார்கள்? இன்றைய அவர்களது இலக்கு என்ன? நாளைய தலைவர்களாக வரவுள்ள எமது முஸ்லிம் இளைஞர்களின் இலக்கு என்ன? ஒரு முஸ்லிம் தலைமையிடம் இருக்க வேண்டிய இலக்கு என்ன?

ஒரு முஸ்லிம் அவனது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் தமது இலக்கை தீர்மானிக்கவேண்டும். அந்த இலக்கு இஸ்லாமிய சரீஆ வரம்புகளை பாதுகாப்பதாகவும் சரீஆவை உலகில் நிலைநாட்டக் கூடியதாகவும் அமையவேண்டும்.

ஆனால் இன்று இளைஞர்களது இலக்குகளை மேற்கினது முதலாளித்துவ தலைமை வடிவமைக்கிறது. அதன் மதஒதுக்கல் சிந்தனையின் அடிப்படையில் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனும் தலைமைத்துவப் பயிற்சியை இளைஞர் சமூகத்திற்கு வழங்குகிறது.

ஒரு முஸ்லிம் தனது இலக்கை ஷரீஆ அடிப்படையில் ஒழுங்குபடுத்த கடமைப்பட்டுள்ளான். ஆனால் இன்று அவனது இலக்கை துள்ளியமாக வடிவமைக்கும் இஸ்லாமிய அரசு இல்லாததால் அவன் வேரொறு அகீதாவில் பிறந்துள்ள உலக தலைமையினால் வழிநடாத்தப்படுகிறான். இந்நிலை மிகவும் ஆபத்தான போக்கு. அதனால்தான் அவனுக்கு இஸ்லாம் ஒரு சீரியசான விடயமாக தோனவில்லை. அவனது சிந்தனையில் தெளிவு இல்லை.

ஆகவே, அவனது சிந்தனை சீர்செய்யப்பட வேண்டும். அவனது இலக்குகள் இஸ்லாமிய அடிப்படையில் நெறிப்படுத்தப்படவேண்டும். அவ்வாறு நெறிப்படுத்தப்பட்டு பண்படுத்தப்பட்ட இஸ்லாமிய தலைமையாக மாறும் இளைஞர் சமூகம் நாளைய முஸ்லிம் உம்மத்தை வழிநாடாத்தும் தலைமைகளாக வரவேண்டும். அவர்கள்தான் நாளைய இஸ்லாத்தின் தூதுவர்கள். பாதுகாவலர்கள். தலைவர்கள் என்பதனை உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

No comments:

Post a Comment