May 26, 2014

அல்லாஹ் தனது ஒளியை பூரணப்படுத்தியே தீர்வான்…!

இன்று இஸ்லாத்திற்கு எதிரான விஷமப்பிரச்சாரங்களை முடுக்கிவிடும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கையிலும் அதன் பிரச்சார வேலைத்திட்டங்களை பகிரங்கமாக பொ.பல.சே போன்ற மதத்தீவிரவாத அமைப்பினால் முன்னெடுப்பதெல்லாம் அல்லாவுடைய ஒளியை அணைத்து விடவேண்டும் என்ற நோக்கத்துடைனேயே நடைபெறுகிறது. 

“அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள்உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள், தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.” (60:2)

"(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;."(Quran 4:89)

ஆனால் அல்லாஹ் தனது ஒளியை இவர்கள் எவ்வாறு அணைக்க முற்பட்டாலும் பூரணப்படுத்தியே தீர்வான்.

"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்." (Quran 61: 8)

அதற்கு எமது பங்களிப்பு அவசியம். அதுதான் நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதுமாகும்!

இஸ்லாத்திற்கு எதிரான விஷமக்கருத்துக்களை (குறிப்பாக ஒரு முஸ்லிமை அடிப்படைவாதியாக, தீவிரவாதியாகவும், இஸ்லாத்தை காட்டுமிராண்டிச்சட்டங்களை கொண்டு மதமாகவும், ஜனநாயக விரோதியாகவும், முஸ்லிம்கள் பெண்அடிமைத்துவம் செய்பவர்கள், கற்கால வாழ்வை நோக்கி நகர்பவர்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு) எதிர்கொள்வது எனும் தீமையை தடுக்கும் பணியை நாம் செய்யவேண்டும்.

மேலும்இஸ்லாத்தை ஒட்டு மொத்த நன்மையாக பௌத்த பெருமக்களுக்கு ஏவ வேண்டும். அதுவே அவனது ஒளியை பூரணப்படுத்துவதற்கான நடைமுறையாகும்.

இந்த உம்மத்தின் சிறப்பும் கண்ணியமும் “நன்மையை ஏவி தீமையை தடுப்பதில்தான் உள்ளது” என்பது பற்றி அல்லாஹ் இவ்வாறு அவனது திருமறையில் விபரிக்கிறான்.

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;” (3:110)

No comments:

Post a Comment