Nov 2, 2015

நானும் ஒரு பொருளாதார அடியாள் இறுதி பகுதி

 
மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP)

மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டினரால் உற்பத்தி செய்யப்பட்ட பணிகள் அல்லது பண்டங்களின் மொத்த இறுதி சந்தை மதிப்பாகும்.

 
மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP)

ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product - GDP).


நாம் அடிக்கடி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் கேள்விப்படும் இந்த இரண்டு வருத்தைகளும் மக்களை ஏமாற்றும் ஒரு கருவிகாக தான் பயன்படுத்தபடுகிறது.


இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது. (ஏப்ரல் 14,2015 dailythanthi)


வாக்குமூலம் - "மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்".


வாக்குமூலம் - “ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திலும், அது காலணிகளை உற்பத்தி செய்து வந்தாலும் சரி, விளையாட்டு பொருட்களைத் தயாரித்து வந்தாலும் சரி, கனரக இயந்திரங்களை உருவாக்கி வந்தாலும் சரி அவையனைத்தும் தங்களுக்கென்று பொருளாதார அடியாட்களைக் கொண்டுள்ளன. பொருளாதார அடியாட்களின் படை அணிவகுத்துச் செல்லத் தொடங்கி விட்டது. அது இந்த பூமி முழுவதும், மிக விரைவாகச் சுற்றி வளைத்து வருகிறது. வணிகர்கள் போல் உடையணிந்து மரியாதைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, இலண்டன், டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைமையகங்களிலிருந்து வரும் ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு கண்டத்திலும் ஊடுருவிப் பரவிவருகின்றார்கள். அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை, நிறுவன அதிகாரவர்க்கத்தின் அடிமைகள் ஆக்குகிறார்கள். அவர்களைக் கொண்டு நாடு முழுவதற்கும் கடிவாளமிடுகிறார்கள். மனிதனின் இரத்தத்தையே உறிஞ்சி எடுக்கும் கடின உழைப்புத் தொழிற்சாலைகளுக்குத் தங்களைத் தாங்களே விற்று கொள்ளும்படி பாவப்பட்ட மக்களைத் தூண்டுகிறார்கள்."




உலகப்பேரரசு அது சுயநலமிக்கது. தனக்கு மட்டுமே சேவை புரியக்கூடியது. வணிகத்தை மட்டுமே, இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. தனக்கு முன்பிருந்த எல்லாப் பேரரசுகளையும் போலவே, இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யவும், கண்ணில் காணும் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது. அதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் காலடியில் மேலும், மேலும் அதிக செல்வத்தைக் கொட்ட தேவையான அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தக்கூடியது உலகப் பேரரசு.


இஸ்லாத்திற்கு எதிரான யுத்தம்:

அடுத்த நூற்றாண்டில் நடக்கப் போகும் உண்மையான யுத்தம் கம்யூனிஸ்டுகளுக்கும், முதலாளித்துவாதிகளுக்கும் இடையேயானதாக இருக்காது. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயானதாகத்தான் இருக்கும்.

                           ஆர்னால்டு டோய்ன் பீ (Toyn Bee)
                          (Civilization on Trial and world and west)

மேற்கு உலகம், குறிப்பாக அதற்குத் தலைமை வகிக்கும் அமெரிக்கா உலகம் முழுவதையும் அடக்கியாள உறுதிபூண்டுள்ளது. இதுவரை வரலாறு காணாத மாபெரும் பேரரசாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறது. இதனால் தான் அமெரிக்க மற்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிக்கிறது. அதற்கு முதலாளித்துவ கொள்கையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இந்த முதலாளித்துவ கொள்கைக்கு இன்று பெரும் எதிரகாக இருப்பது இஸ்லாம மட்டுமே. வளந்து வரும் இஸ்லாமும், இஸ்லாமிய தலைமைக்கான (கிலாஃபத்) கோஷம்களும் அவர்களின் பேரரசு பேரரசை களைத்துக் கொண்டு இருக்கிறது. அவர்களின் அச்சபடு அவர்களின் செயல்பாடுகளில் தெரிக்கிறது. முதலாளித்துவ சித்தாந்தம் 2008ம் ஏற்பட்ட பொருளாதார சரிவின் முலம் அது இன்னும் தன்னால் தலை துக்க முடியாமல் இருக்கிறது. இவர்கள் எத்தனை  பொருளாதார அடியாள்களை கொண்டு தனது பொருளாதாரத்தை மேம்படுத்துனாலும் சரியே. 
 
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது.

தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்தது போல தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.


தீர்வு:

எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமே ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடை செய்திருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை மட்டுமே சிறந்த ஒரே மாற்று வழியாக இருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த இஸ்லாமிய தலைமை(கிலாஃபத்) வேண்டும். இஸ்லாமிய தலைமையில் உள்ள பொருளாதாரக் கொள்கையில் வெளிநாட்டவர் தலையீடு இருக்காது. ஆகையால் ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் இங்கு அவசியம் இருக்காது.

இஸ்லாம் மாத்திரமே விமோசணம்.
இன்ஷா அல்லாஹ்.


முற்றும்

நாசிக். S
DXB

No comments:

Post a Comment