Jan 27, 2016

ஜான் கெர்ரி – “சிரியாவில் நாங்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை”

கடந்த 19 டிசம்பர் 2015 சனிக்கிழமை அன்று அமெரிக்க அரசின் தலைமை செயலாளர் ஜான் கெர்ரி ரஷ்யா 1 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வாஷிங்டன் சிரியாவில் ஆட்சியை அகற்ற முற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது,:” இந்நாட்டின் அரசமைப்பை மாற்ற நாங்கள் முயற்சிக்கவில்லை” என்று வலியுறுத்தி கூறினார். மேலும் அவர் கூறுகையில் “அதாவது சிரிய அரசாங்கத்தின் அனைத்து அம்சங்களிலும் மாற்றம் வேண்டும் என்ற அர்த்தம் இல்லை மாறாக, சிரியாவில் உள்ள அரசு நிறுவனங்கள் அப்படியே இருக்கட்டும்” என்று கூறுகிறார்.

இந்த பேட்டி அமெரிக்காவின் நயவஞ்சகதனத்தை அப்பட்டமாக காட்டுகிறது: 18/8/2011ல் ஒபாமா கூறும்போது “அசாத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.” அசாதின் நாட்கள் எண்ணப்படுகின்றன: என்று கூறி பல செய்திகள் வெளியிடப்பட்டது.ஒரு அறிக்கையிலிருந்து மற்றொரு அறிக்கையாக தொடர்ந்து அமெரிக்க நிர்வாகம் பசாரின் குற்றங்கள் மன்னிக்க முடியாதது என்று சொல்லி வந்த நிலையில் , பல்வேறு அறிக்கைகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டும்,மேலும் மனித உரிமை அமைப்பின் சமீபத்திய அறிக்கையான “If the Dead Could Speak: the mass deaths and torture in Syrian prisons” 16 டிசம்பர் 2015 புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், “சிரியாவின் பல முகாம்களில் சித்திரவதை, துன்புறுத்தல்,பட்டினி சாவு மற்றும் நோய் ஏற்படுத்தும் காரணிகளுக்கான பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக கூறுகிறது”. அந்த அறிக்கையில் அசாதின் சிறை கொட்டடியில் சித்திரவதை காரணமாக பல ஆயிரக்கணக்கான சிறை கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மறுக்க முடியாத ஆதாரங்கள் பல அடுக்கப்பட்டுள்ளது.

வியன்னா மாநாட்டில் கடந்த 30/10/2015 அன்று எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு பிறகும், கொலைகார டமாஸ்கஸ் அரசு அப்பாவி பொதுமக்கள் மீது “நெருப்பு குழம்புகளை” வீசி வருகிறது . இதை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்தும் விதமாக அதன் கொலைகார கூட்டாளியான புதினும் பள்ளிகளிலும் , மருத்துவமனைகளிலும், முக்கிய சந்தைகளிலும் குண்டு வீசி தாக்கி மக்களை கொன்று வருகிறார். இதெற்கெல்லாம் பச்சை கொடி காண்பித்திருக்கிறது அமெரிக்கா. ஆனால் அது சோளக்கொல்லை பொம்மை “ISIS” யை , தவிர மற்றவைகளை ஒரு தீங்காகவே பார்க்கவில்லை. ஆனால் இதன் பிறகும் கெர்ரி கிரிமினல் தூதர்களையெல்லாம் அழைத்து ஒரு மிதமான எதிர்ப்பு படையை உருவாக்கி அரசு படைகளுடன் இணைத்து ISIS உடன் போரிட அழைக்கிறார்.

சிரிய மக்களுக்கு இத்துணை காயங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் ,கெர்ரி சிரியாவின் அரசு நிறுவனங்களை அமெரிக்கா பராமரிக்க விரும்புவதாக அறிவிக்கிறார். அவர் எதை “நிறுவனங்கள்” என்று அழைக்கிறார் தெரியுமா??? மனிதகுலத்திற்கு எதிராக சொல்லெனா குற்றங்கள் செய்து, ஸ்டாலின்,ஹிட்லர்,பினோச்சே அரசுகளை மிஞ்சிய கொடூரங்களை புரிந்த அமெரிக்காவின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் உளவுத்துறையையும் மற்றும் அதை சார்ந்த அரசு அமைப்புகளையே குறிப்பிடுகிறார்.

நிச்சயமாக, இஸ்லாமிய உம்மத்திற்கெதிராக அமெரிக்காவின் இந்த வெறுப்பும் வெளிப்படையான சதியையும் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட போவதில்லை. ஏனெனில், ஐரோப்பிய காலனித்துவ காலத்திலிருந்தே முஸ்லிம் நாடுகளின் மீது அமெரிக்காவிற்கு இருக்கும் பேராசை அதனை தொடர்ந்து வந்த அமெரிக்க அரசுகளிடமும் இருக்கிறது என்பது தெரிந்த ஒன்றுதான். எப்படி இருந்தாலும் கெர்ரியின் அந்த அறிக்கையோடு நாம் நின்று விடவில்லை. அதே அறிக்கையில் மேலும் அவர் “வியன்னா பேச்சுவார்த்தை ‘சிரியாவின் நெருக்கடிக்கு அரசியல் தீர்வே சரி’ என்ற ஒரே நிலைமைக்கு ரஷ்யா, அமெரிக்க மற்றும் இரான் ஆகிய நாடுகள் ஒன்றுபட்டிருப்பதை காட்டுகிறது” என்று கூறுகிறார். குப்ரின் தலைமை பீடமான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் புனிதமற்ற கூட்டணியை ஏற்படுத்திய ஈரானின் தலைவர்களை வாழ்த்துகிறோம். ஷாமின் புரட்சியை ஒடுக்குவதற்காக மிகப்பெரிய ஷைத்தானுக்கு உதவி செய்ய முயலுவதின் மூலம் எங்களை ஏமாற்றி நீங்கள் தோற்று விட்டீர்கள் என்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

எவரெல்லாம் ரியாத், இஸ்தான்புல், ஜெனிவா, வியன்னா மற்றும் நியூயார்க் பேச்சுவார்த்தைகளுக்கு நோக்கி விரைந்தீர்களோ அவர்களுக்கு கூறி கொள்கிறோம்: உலக காலனியாதிக்க தலைவர்களின் பின்னால் மூச்சிரைக்க நீ ஓடுவது குறித்து உனக்கு வெட்கமாக இல்லையா??? முக்கியமாக அமெரிக்காவின் பின்னால்.. அதாவது எந்த நாடு பாத் கட்சியினரின் , தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் காலத்திலும்இருந்த நுஸைரி அரசின் குற்றங்களை மூடி மறைத்ததோ அந்நாட்டின் பின்னால்? மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரிடமும் போர் தொடுத்து கொண்டிருக்கும் ஐநாவிடமா இன்னும் முட்டாளாகி கொண்டிருக்கிறாய்??? அது இன்னும் சிரிய மக்களுக்கு அல்லது முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு சிறந்ததை வழங்கும் என்று எதிர்பார்க்கிறாயா?? உங்கள் எவரிடமும் சிறிதளவு நன்மை இருக்குமானால் அமெரிக்காவின் கயிற்றை விட்டு விட்டு அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடியுங்கள், ஆனால் எவர் அமெரிக்காவை திருத்திபடுத்த வேண்டும் என்று முற்படுகிறாரோ அவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெருத்த ஏமாற்றத்தையும் கேவலத்தையும் அடைவார் என்பதே இறுதி முடிவாக இருக்கும்.

8:36 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَـنَّمَ يُحْشَرُوْنَۙ‏

8:36. நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் – முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment