இஸ்ரேலிய போர் விமானங்கள் அதிகாலையில் காசா நகர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஹமாஸ் இயக்கத்திற்கு தொடர்புடைய நான்கு இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் தற்போது காசா நிலப்பரப்பு உள்ளது.இந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்திருப்பதாக பாலஸ்தீன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, காசா பகுதியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று, இஸ்ரேலில் உள்ள காலியான மழலையர் பள்ளிக் கட்டிடத்தைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி BBC

No comments:
Post a Comment