Jul 4, 2016

உக்பா பின் ஆமிர்(ரலி) - இஸ்லாத்தின் இன்னொரு அடையாளம்...!


ஆடு மேய்க்கும் இடையனாகத்தான் தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்குர்ஆனை மனனமிட்டவர்.

நபியுடன் எப்போதும் இருந்து அவரது சுன்னாவை தன் வாழ்வில் அப்படியே கொண்டு வந்தவர்.

முஸ்லிம் வாரிசுரிமை சொத்து தொடர்பான அஷ்-ஷரிய்யாவின் சட்டங்களை கலீபாக்களே இவரை கேட்டுத்தான் முடிவு சொல்வார்கள். இதையெல்லாம் தாண்டி உஹத்தில் ஆரம்பித்து தன் மரணம் வரைக்குமான இஸ்லாத்தின் எல்லாப் போர்களிலும் பங்கு கொண்டவர்.

டமஸ்கஸ் முற்றுகையின் போது ரோமானியர்களிற்கு எதிரான இஸ்லாமிய அரசின் இராணுவத்தில் துணை தளபதியாக போரிட்டவர். தனது படைகளை நேர்த்தியாக வழிநடாத்தியவர். அமீர் முஆவியா அவர்கள் டமஸ்கஸ்ஸில் தனது கிலாபாவை அமைத்த போது இவரை எகிப்தின் கவர்னராக நியமித்தார். முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு, ஸைத் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு, இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு போன்றே இவரும் இஸ்லாத்தை கற்பிக்கும் பேராசானாக திகழ்ந்தார். இன்றைய பாஷையில் புரபசர் லெவல்.

03 வருடங்களின் பின்னர் அமீர் முஆவியா கடல் கடந்த சண்டைகளை ஆரம்பித்தார். Island of Rhodes மத்தியதரைக்கடலில் உள்ள தீவுக்கூட்டம். அங்கே செல்ல வேண்டும் என்று சண்டையிட முடியுமா என முஆவியா உக்பாவை வேண்டினார். நான் ஒரு கவர்னர் அதனை விட்டு விட்டு மீண்டும் சண்டையிட செல்வதா என அவர் சிந்திக்கவேயில்லை. “யா முஆவியா, கப்பல் எங்கே நிற்கிறது?” என்று தான் கேட்டார்கள். அப்படியொரு ஈமானிய வார்ப்பில் உருவாக்கப்பட்ட நபித்தோழர் அவர்.

உக்பா பின் ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு. அல்லாஹ் அவரை இந்த பூமியில் கண்ணியமாக வாழ வைத்தான். டமஸ்கஸ்ஸில் உள்ள சென் தோமஸ் கேட் என்பது பிரதானிகள் வாழும் இடம். அதில் உள்ள தோட்டத்தில் வீடமைத்து வாழ்ந்தார். எகிப்து சென்ற போது கெய்ரோவின் அருகில் முக்கத்தம் மலையடிவாரத்தில் அழகான வீட்டில் வாழ்ந்தார். 


ஆடு மேய்க்கும் இடையனை,திண்ணைத்தோழரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எங்கு கொண்டு சென்று வைத்துள்ளான். ஆனால்...

தினமும் குறிபார்த்து அம்பு எய்து பிரக்டிஸ் பண்ணும் வழக்கமுடையவர். ஒரு நாளும் இதிலிருந்து அவர் தவறியதில்லை. மரணம் அவரை முத்தமிட்ட போது அவரை அதே நைலின் கிழக்குக்கரை முக்கத்தம் மலையடிவாரத்தில் அடக்கம் செய்தார்கள். மீண்டும் அவர் பிள்ளைகள் வீடு திரும்பி தந்தையின் அறையை திறந்து அவர் என்ன விட்டு சென்றுள்ளார் என்று பார்த்தனர்.

70 வில்லுகள். அதன் 70 அம்பறாக்கள். எல்லாவற்றிலும் லோட் செய்யப்பட்ட அம்புகள். கூடவே ஒரு கடிதம் இருந்தது. அதில் அவர் இப்படியெழுதியிருந்தார்.........

“எனது சொத்தாக நான் விட்டுச் செல்லும் இந்த விற்களையும், அம்பறாக்களையும் முஜாஹித்களிற்கு விநியோகம் செய்து விடுங்கள், ஜிஹாத்தில் அவர்களிற்கு அது அதிகம் உதவி செய்யும்....”

ஸதக்கத்துல் ஜாரியா பற்றி நான் அறிந்துள்ளேன். உக்பா பின் ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது மரண சாஸனம்.... அவரது வில்லுகளில் இருந்து அல்லாஹு அக்பர் ஒலியுடன் புறப்படும் அம்புகள் குஃபாரை துளைத்து செல்லும் போது அதற்காக அவரிற்கு கிடைக்கும்..........! சுபுஹானல்லாஹ்.

இந்த மாமனிதர்களின் தியாகங்களில் வலுவாக்கப்பட்ட இஸ்லாத்தை தான் நாம் எதற்கெல்லாமோ ரப்பராக வளைக்கின்றோம்.



Abu Maslama

No comments:

Post a Comment