Jul 14, 2016

எழுதுவதாலும் ,சித்தாந்தம் கற்பிப்பதாலும் கிலாபா வருமா !?

எழுதுவதனால் ,பேசுவதனால் ,மக்களுக்கு சித்தாந்தம் கற்பிப்பதால்  கிலாபா வந்துவிடுமா என்ற கேள்வி எம்மில் சில  சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது . குறிப்பிட்ட சகோதரர்கள் இஸ்லாமிய கிலாபவின் வருகயின்மூலம்தான் முஸ்லிம்களின் மறுமலர்ச்சி உறுதிப்படும் .மற்றும் இஸ்லாம் மேலோங்கும் என்ற விடயத்தை நன்கறிந்தவர்களும் இஸ்லாத்தை நேசிக்கக்கூடியவர்களும் ஆகும் .!!

 இந்த சகோதரர்கள் மத்தியில்  இவ்வாறான ஒரு  கேள்வி எழுகின்றமைக்கான அடிப்படைக்காரணம் இவர்களுக்கு  கிலாபா அரசு இந்த உலகிலிருந்து  இல்லாமால் போனதன் வரலாற்றுப்பின்னணி பற்றிய போதிய தெளிவின்மையே ஆகும் .!!

அந்தவகையில் கிலாபவை இல்லாமல் செய்த வரலாற்றை ஆழமாக  நோக்கும்போது குப்பார்களால் மேற்க்கொள்ளப்பட்ட  மிகப்பிரதான  போர் வகை சிந்தனைப்போர்  என்பதை அறிந்துகொள்ளமுடியும்.!! 

உம்மத்தை ஒன்றிணைக்க உழைப்பவர் மிக முக்கியமாக அறிய வேண்டியது  உம்மத்தை பிரிவிக்குள்ளாக்கி அதன் ஒன்றினைவினூடாக கிலாபத்தை உருவாகாமல் தடுக்கும் அந்த நச்சு சிந்தணைகள் என்ன அவை இன்றைய உலகில் எடுத்துள்ள வடிவங்கள் என்ன ,அவற்றை எவ்வாறு முஸ்லிம்களிடமிருந்து களைவது ,அதில் உள்ள தடைகள் என்ன என்பவை  பற்றி ஆகும் .!!

இவ்வாறன புரிதலோடும்  தெளிவான இஸ்லாமிய  சித்ததாந்த அறிவோடும்   உம்மத்தினுள் தஹ்வா பணி புரிதல் மூலமாகவே  அந்த தவாஹ் பணி கிலாபாவின் வருகைக்கு வழிவகுக்கும் .!!

கிலாபா அரசின் முக்கியத்துவத்தை  முதலில் முஸ்லீம்கள் உணரவேண்டும் .இந்த உணருதலை கொண்டுவர அவர்களை வழி நடாத்தும் பிற சித்ததாந்த சிந்தணைகள் களையப்படுதல் வேண்டும் ;மாற்றுத்தீர்வை அவர்கள் வேண்டிநிற்கும் வேளையில் சிதத்தாந்த இஸ்லாம் அவர்களுக்கு கற்ப்பிக்கப்படுதல்  வேண்டும் இந்தப்பணி பரந்தளவில் உம்மத்தில் ஒரு ஒழுங்குமுறையில் முன்னெடுக்கப்படுதல் வேண்டும் .உம்மத்தில் இடம்பெறும் இந்த  சீரிய விழிப்புணர்வுப்பிரச்சாரத்தின் மூலமாகவே உருவாகும் கிலாபா பலம்பொருந்தியதாகவும் எதிரி அரசுகளின் சதி ,சூழ்ச்சிகளிலிருந்து உலக முஸ்லீம்களால் பாதுகாக்கப்படக்கூடியவாறும் காணப்படும் .!!

கிலாபா என்பது ஒரு வெறும் அரபுப்பெயர்தாங்கிய அரசு அல்ல அது ஒரு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு சித்ததாந்த அரசு .!!

#சிந்தணைகள்_வெடிகுண்டுகளைவிட_சக்திவாய்ந்தவை

from Mohamed Nafras

No comments:

Post a Comment