Jun 17, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-01

பைத்துல் முகத்தஸைப்பற்றியும் பலஸ்தீனைப்பற்றியும் முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கி.மு.13ம் நூற்றாண்டில் தான் அங்கு முதன்முதலில் யூதர்கள் குடியேறினார்கள். தொடர்ந்து அங்கு இரண்டு நூற்றாண்டுகளாக போரிட்டே அங்கு வாழ்ந்து வந்தனர். பலங்காலந்தொட்டு அவர்கள் அங்கு வசித்துவரவில்லை. அவர்கள் அப்பகுதியின் பூர்வீக குடிகளும் அல்லர். அங்கு வசித்து வந்த பூர்வீக குடிகள் பற்றி பைபிளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த ‪#‎செவ்விந்தியர்களை‬, அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த ‪#‎அபோரிஜின்களை‬ எப்படி வெள்ளையினம் முற்றாக அழித்து குடியேறினார்களோ அதேபோன்று தான் யூதர்கள் பலஸ்தீன் பகுதியில் வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்து அங்கே குடியேறினர்.
அதன் பின்பு யூதர்களின் கலகத்தை அடக்க ஆசிரியர்கள் கி.மு.8ம் நூற்றாண்டு வட பலஸ்தீன் பகுதி நோக்கி படையெடுத்து யூதர்களை முற்றாக அழித்து அப்பகுதியை விட்டு விரட்டியடித்துவிட்டு அண்மித்த பகுதிகளில் வசித்துவந்த அரபினத்தவர்களை குடியமர்த்திவிட்டு சென்றனர்.
அதன்பின்பு கி.மு.6ம் நூற்றாண்டில் பாபிலோனிய சக்கரவர்த்தி பஃக்து நஸர் தென்பலஸ்தீனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அங்கு வசித்துவந்த யூதர்களை முற்றாக வெளியேற்றினார். அத்துடன் பைத்துல் முகத்திஸையும் சின்னாபின்னமாக்கி சுவடே இல்லா அளவுக்கு அழித்தார்.
கி.மு.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹைஹலுஸ் ஸுலைமானி எனப்படும் Temple of Solomon ஐயும் முற்றாக சுவடே இல்லாத அளவுக்கு அழித்தார்.
பல ஆண்டுகளாக நாடோடிகளாக சுற்றித்திரிந்த யூதர்கள் ஈரானிய பேரரசின் ஆட்சிக்காலத்தில் மறுபடியும் பலஸ்தீன் மண்ணில் குடியேறினர். அப்போது பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் மறுபடியும் ஹைஹலுஸ் ஸுலைமானை நிறுவினர்.
ஆனால் இந்த குடியேற்றம் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கவில்லை. கி.பி.70ம்ஆண்டளவில் யூதர்கள் ரோம பேரரசை எதிர்த்து கலகம் செய்தார்கள். இந்த கலகத்தை அடக்கும் முயற்சியில் அப்பிரதேசமும் Temple of Solomonஉம் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதன்பின்பும் கி.பி.135ம் ஆண்டில் மறுபடியும் ஏற்பட்ட கலகத்தை அடக்கும் முயற்சியில் யூதர்கள் ரோம படையினால் பலஸ்தீன் பகுதியிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டனர். இதன் போது இப்பகுதியில் அரபினத்தவர்கள் மறுபடி குடியேற்றப்பட்டனர்.
இன்சா அல்லாஹ்...
தொடரும் ....
(இவ்வாக்கம் சையத் அபுல் அஃலா மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் "யஹூதியொ உன் கா மன்ஷூபாஹ்" என்ற மூல நூலின் தமிழாக்கத்தின் பகுதிகளாக வெளிவருகிறது.)

Jun 16, 2016

ஜப்பான் நோக்கிய அமெரிக்க வருகை....!!

 
பராக் ஒபாமா, கடந்த மாத இறுதியில், ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு விஜயம் செய்யும் பதவியிலிருக்கும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தால் ஆகஸ்ட் 6, 1945 இல் ஹிரோஷிமா மீதும், அதற்கு மூன்று நாட்கள் கழித்து மற்றொரு ஜப்பானிய நகரமான நாகசாகி மீதும் அணுகுண்டு வீசி அழித்தமை, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர் குற்றங்களின் ஒன்றாக இருக்கின்றது. 

சுமார் 200,000 பேர் கொல்லப்படுவதற்குக் காரணமான அந்த இரண்டு பாதுகாப்பற்ற ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை, இராணுவரீதியில் தேவையற்ற ஓர் நடவடிக்கை என்பதை, 71 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா இறுதியில் ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டதோ என்று ஒருவர் நினைக்கலாம். அதுபோன்ற எதுவும் நடக்காது. "இரண்டாம் உலக போரின் முடிவில் அணுகுண்டு பயன்படுத்திய முடிவை" ஒபாமா "மீண்டும் கருத்துக்கூற மாட்டார்,” என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. எனவே எந்தவிதமான மன்னிப்புக்கோரலும் இருக்காது.

ஜப்பானின் படையெடுப்பையும் மற்றும் அடுத்து நிகழவிருந்த அமெரிக்கர்களின் உயிரிழப்பையும் தடுப்பதற்கு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழிப்பதே ஒரேயொரு மாற்றீடாக இருந்தது என்று அறிவித்து, ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல்கள் நடத்தியமை சரியானதே என்று அமெரிக்க அரசாங்கம் தசாப்தங்களாக வலியுறுத்தி வந்துள்ளது.

அந்த குண்டுவீச்சுக்களின் சட்டபூர்வத்தன்மை மீது கேள்வி எழுப்புவதற்கான ஒவ்வொரு முயற்சியும், வெறித்தனமான மற்றும் நேர்மையற்ற பிரச்சாரத்தைச் சந்தித்துள்ளன, அதாவது அத்தகைய பிரச்சாரம் 1995 இல் அந்த குண்டுவீச்சு நடவடிக்கையின் 50 வது நினைவாண்டை நினைவுகூற ஸ்மித்சோனியன் அமைப்பினது (Smithsonian Institution) கண்காட்சியை இரத்து செய்யக் கூட நிர்பந்தித்தது. இத்தகைய குற்ற-ஒப்புதல்கள் சம்பந்தமாக நோட்ர் டேம் பல்கலைக்கழகத்தின் மதகுருவான Miscamble இன் ஒரு கருத்துரை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பிரசுரிக்கப்பட்டது. அதில் Miscamble பின்வருமாறு அறிவிக்கிறார், “அணுகுண்டு வீச்சுக்கு மன்னிப்புக் கோர அங்கே எந்த காரணமும் இல்லை,” ஏனென்றால் "[ஜனாதிபதி ஹேரி எஸ்.] ட்ரூமன் அமெரிக்கர்களின் கோரமான உயிரிழப்புகளைக் குறைக்கவும் மற்றும் பசிபிக் போரை சாத்தியமானளவிற்கு விரைவாக வெற்றிகொள்ள உதவுவதற்காகவும் தான், இராணுவரீதியிலும் மற்றும் தொழில்துறை ரீதியிலும் இரண்டு விதத்தில் பிரதான இலக்குகளாக இருந்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது குண்டுவீச அனுமதியளித்தார் அது ஒருசில ஜப்பானியர்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது,” என்றார். 

இதே உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், நியூ யோர்க் டைம்ஸ் இவ்வாரம், "ஜப்பானின் பிரதான தீவான ஹோன்சூ (Honshu) மீதான படையெடுப்பில் இழந்திருக்கக்கூடிய பத்தாயிரக் கணக்கான அமெரிக்கர்களது உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே குண்டுவீசும் அம்முடிவு" எடுக்கப்பட்டதாக வலியுறுத்துவோர்களை மேற்கோளிட்டது. இத்தகைய கூற்றுகளில் சிறிதும் நம்பகத்தன்மை கிடையாது.

இவை, அத்தாக்குதல்களுக்கு முன்னதாக, வாஷிங்டன் மற்றும் அமெரிக்க இராணுவ உயர் கட்டளையகத்தில் நடந்த விவாதங்களது உண்மையான உள்ளடக்கத்துடன் சம்பந்தமின்றி உள்ளன. 1945 இன் ஆரம்பத்தில், அமெரிக்கா மொத்த ஜப்பான் மீதும் வான்வழி மேலாதிக்கம் கொண்டிருந்ததுடன், ஜப்பானிய பெருநிலத்தின் வான் எல்லைக்குள் பல்வேறு தீவுகளைக் கைப்பற்றி இருந்தது. ஏறத்தாழ அதே நேரத்தில், குறிப்பிட்ட இராணுவ இலக்குகளைத் துல்லியமாக குண்டுவீசி தாக்குவதிலிருந்து, அமெரிக்கா, இறுதியில் சுமார் 100,000 பேர் கொல்லப்பட்ட டோக்கியோ மீதான மார்ச் 9-10 குண்டுவீச்சும் உள்ளடங்கலாக 67 ஜப்பானிய நகரங்களை தரைமட்டமாக்கிய கொடூரமான பரந்த குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு மாறியது. அமெரிக்க மூலோபாய விமானப்படை கட்டளையகத்தின் தலைவர் தளபதி கர்டிஸ் லெமேவிடம் (Curtis Lemay) 1945 இல் இன்னும் எத்தனை காலம் போர் தொடருமென வினவிய போது, அவர், “நாங்கள் ஒன்றுகூடி அது குறித்து சிறிது சிந்தித்தோம், செப்டம்பர் 1 வாக்கில் பெரும்பாலான இலக்குகளைச் தாக்கியழித்திருப்போம் என்பதற்கான அறிகிறிகள் காணப்பட்டன, அந்த இலக்குகளைக் காலியாக்கியப் பின்னர், போர் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியாது,” என்றார்.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான குண்டுவீச்சுக்கான காரணங்கள் மீது, அமெரிக்க உயர் கட்டளையகத்திற்கு உள்ளேயே சவால் விடுக்கப்பட்டன. ஒரு ஜோடி ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை மிகக் குறைந்த இராணுவ முக்கியத்துவமே கொண்டிருந்தது என்று அது வலியுறுத்தியது. படைத்துறைசாரா மக்கள் மீது குண்டு வீசுவதென்ற ஜனாதிபதி ட்ரூமெனின் உள்நோக்கத்தை தெரிய வந்ததன் மீது தளபதி ட்வைட் டி. ஈசன்ஹோவர் கூறுகையில், அவர் “மன அழுத்தத்தை” உணர்ந்ததாக தெரிவித்தார். “ஜப்பான் ஏற்கனவே தோற்றுப்போயிருந்தது என்ற எனது நம்பிக்கையின் அடிப்படையில் அந்த குண்டுகளை வீசுவது முற்றிலும் அவசியமற்றது என்று கருதினேன், இரண்டாவதாக ஏனென்றால் அமெரிக்கர்களைக் காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாக, இனியும் கட்டாயமாக அவசியம் பயன்படுத்த தேவையற்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தி உலக கருத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குவதை எமது நாடு தவிர்க்க வேண்டுமென நான் விரும்பினேன், இவை எனது ஆழ்ந்த அதிருப்திகளாக இருந்தன,” என்று தெரிவித்தார். 

  
ஏனைய உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அடுத்தடுத்து அதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டனர். அமெரிக்க பசிபிக் கடற்படையின் தலைமை தளபதி செஸ்டெர் டபிள்யூ நிமிட்ஸ் கூறுகையில், அப்போருக்குப் பின்னர் "முழுமையாக ஓர் இராணுவ கண்ணோட்டத்தில் பார்த்தால், ஜப்பானைத் தோற்கடிப்பதில் அணுகுண்டு எந்த தீர்க்கமான பங்கும் வகிக்கவில்லை,” என்றார். ஜனாதிபதி ட்ரூமெனின் முப்படைத் தளபதி அட்மிரல் வில்லியன் டி லீஹி, “ஜப்பானுக்கு எதிரான எங்களின் போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி எந்தவிதத்திலும் முக்கியமானரீதியில் உதவியாக இருக்கவில்லை,” என்பதை ஒப்புக் கொண்டார். ஏப்ரல் 12, 1945 இல் ஜனாதிபதி பிரான்ங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இன் மரணம், ஹேரி எஸ். ட்ரூமெனை ஜனாதிபதியாக கொண்டு வந்தது. இந்த மட்டுப்பட்ட இன்னும் சொல்லப்போனால் அறிவில்லாத அம்மனிதர், மிசோரி ஜனநாயக கட்சி அரசியல் எந்திரத்தை நடத்தி வந்தவரும், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவருடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, "பெண்டெர்காஸ்டின் செனட்டராக" (The Senator from Pendergast) கூறப்பட்டார். 

  அணுஆயுதங்களை பயன்படுத்துவதற்கான தார்மீக உள்நோக்கங்களை ட்ரூமென் முற்றிலுமாக புறக்கணித்திருந்தார். அவரது ஆலோசகர்களில் ஒருவர் பின்னர் நினைவுகூர்கையில், ஹிரோஷிமா மீது குண்டுவீசியதைக் குறித்து ட்ரூமெனுக்கு தெரிய வந்த போது, அவர் "அதனால் வியக்கத்தக்களவில் உற்சாகமடைந்தார், நான் அவரை சந்தித்த போது மீண்டும் மீண்டும் அதை குறித்து என்னுடன் உரையாடினார்,” என்றார். அந்த குண்டை பயன்படுத்த ட்ரூமென் முடிவெடுப்பதற்கு முன்னரே, ஜப்பானிய அரசாங்கம் பல மாதங்களாக அவர்கள் சரணடைய விரும்புவதாக பலமாக சமிக்ஞை காட்டி, அவர்களது பேரரசை மட்டும் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்குள் அந்த பேரரசை அதனிடமே ஒப்படைக்கும் எண்ணத்திற்கு வெள்ளை மாளிகை வந்திருந்தது, ஆனால் இந்த உண்மையை ஜப்பானுக்கு தெரிவிப்பதா வேண்டாமா என்பதில் பிளவுபட்டிருந்தது.

இறுதியில் ஜனாதிபதி ட்ரூமென் முதலில் குண்டுவீசவும், பின்னர் ஜப்பானிய அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை தெரிவிக்கவும் முடிவெடுத்தார். அப்படியானால், உலகின் கண்ணுக்கு முன்னால், எந்தவித இராணுவ நியாயப்படுத்தலும் இல்லாமல், என்றென்றைக்கும் அதை இழிவாக முத்திரை குத்தும் ஒரு நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் ஏன் நடத்தியது? போர் முடிவுக்கு வந்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான மோதல் தீவிரமடைந்திருந்தது. யால்டா உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு இணங்க, சோவியத் ஒன்றியம் அந்த உடன்படிக்கையில் அதற்கு வழங்கப்பட்ட பிராந்தியங்கள் மீது உரிமைகோரி, ஜப்பான் மீது படையெடுக்க இருந்தது மற்றும் போரின் போது அது ஏற்றிருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் ஓரளவிற்கு பாரிய பாத்திரம் வகிக்க விரும்பியது. சமீபத்தில் இரண்டு வரலாற்றாளர்கள் முன்வைத்ததைப் போல, அணுகுண்டை பயன்படுத்தியமை, “அமெரிக்காவின் முதல் பனிப்போர் நடவடிக்கையாகும்.” 

ஜேர்மனியை சோவியத் ஜெயித்திருந்தாலும், அமெரிக்கர்களே உலகின் எஜமானர்கள் என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அது சோவியத்திற்குக் கொடுக்க விரும்பியது. ஒட்டுமொத்த மனிதயினத்திற்கும் அச்சுறுத்தும் மற்றும் கட்டளையிடும் வகையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அழிக்கப்பட்டமை, உலகின் சவாலுக்கிடமற்ற ஏகாதிபத்திய மேலாதிக்க சக்தியாக அமெரிக்கா நுழைந்ததை அறிவித்தது. ஜனநாயகம் என்ற மெல்லிய மறைப்பின் பின்னால், அமெரிக்கா அதன் சொந்த நலன்களைப் பேணுவதற்கும் விரிவாக்குவதற்கும், குற்றத்தின் அளவைக் குறித்தோ அல்லது எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதைக் குறித்தோ கவலைப்படாமல், என்ன அவசியமானாலும் அதை செய்யும் என்பதற்கு சமிக்ஞை காட்டியது.

ஹிரோஷிமா குண்டுவீச்சுக்குப் பிந்தைய ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதற்கான அதன் தீர்மானத்தை அதிகரித்து மட்டுமே உள்ளது. ஒபாமா 7 கூட்டங்களில் பங்கெடுக்கும் பாகமாக ஹிரோஷிமாவிற்கு செல்வார், அங்கே அவர் சீனாவிற்கு எதிராக ஜப்பான் உடனான அமெரிக்காவின் கூட்டணியைப் பலப்படுத்த முயற்சிப்பார் மற்றும் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அந்நாட்டை மீள்-இராணுவமயமாக்குதலுக்கு ஒத்துழைப்பளிப்பார். 

  ஏனைய ஒவ்வொரு நாடுகளிடமிருந்தும் வெள்ளை மாளிகை "அணுஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையைக்" கோரினாலும், அது அமெரிக்க அணு ஆயுத கிடங்குகளை நவீனமயப்படுத்த ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு வருகிறது, அத்துடன் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையே போர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வருகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த கால குற்றங்களுக்கு மன்னிப்புக் கோருவதற்காக ஒபாமா ஹிரோஷிமாவிற்கு செல்லவில்லை, மாறாக புதிய குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்காக செல்கிறார். ஹிரோஷிமாவிற்குப் பின்னர் கொரியா மற்றும் வியட்நாமில்—மற்றும் கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் மத்தியக் கிழக்கு எங்கிலும்—மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு பொறுப்பான அமெரிக்கா, இன்றும் அதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்ற போது, அது பாரிய படுகொலைக்கு மன்னிப்பு கோரும் என்று ஒருவர் எப்படி எதிர்பார்க்க முடியும்?

Sources From Khaibar Thalam


Jun 15, 2016

வங்கம் தந்த பாடம்......!!

 
இஸ்லாத்தின் முதன்மை விரோதி “ஏகாதிபத்தியமே”. அது இயல்பான விரோதியும் கூட. ஏகாதிபத்தியத்தின் அடிப்படை பண்புகள் மூன்று.


1. வட்டியை மையமாகக் கொண்டியங்குதல்.

2. நாடுகளை கைப்பற்றல்.

3. அங்குள்ள வளங்களை சுரண்டி தனது தேசத்திற்கு கொண்டு செல்லுதல்.


இந்த மூன்றையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. அதனால் தான் ஏகாதிபத்தியம் இஸ்லாத்தின் விரோதியாகி போகிறது. . இஸ்லாத்தை வலுவிழக்க செய்ய வேண்டும் என்றால் அது கூறும் சட்டங்களை இல்லாதொழித்து மனிதனால் இயற்றப்பட்ட மேன் மேட் லோவினை அமுல்படுத்த வேண்டும் என்ற பொறி முறையில் அது உறுதியாக இருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் தெற்காசிய சுரண்டல் வர்த்தகத்தின் இன்றைய இலக்கு பங்களாதேஷ்.


நேற்றைய நீக்ரொய்ட் அடிமை சந்தையை பங்களாதேஷ் முஸ்லிம்களின் வறுமை மீண்டும் உருவாக்கியுள்ளது காலணித்துவவாதிகளிற்கு. உற்பத்தி தொழிற்சாலைகளிற்கான மலிவான தொழிலாளர் பட்டாளம், மற்றும் உற்பத்தியினால் ஏற்படும் கழிவுகள், சூழல் மாசடைவுகளை தங்கள் தேசத்தில் தவிர்த்து கொள்ளல் என்று அவை வங்கம் முழுதும் விரிந்து வருகின்றன. ஒரு முஸ்லிம் மற்றொருவனிற்கு அடிமைத்தனமாக செயற்பவதை இஸ்லாம் தடைசெய்கிறது.


இதனை இல்லாமல் செய்ய, ஹுக்குமே இலாஹியத்தை பங்களாதேஷில் உருவாக்க முயலும் அதன் இஸ்லாமிய தலைவர்களை இலக்கு வைத்துள்ளது ஏகாதிபத்தியம். அதன் 06-வது பலிக்கடாவாக நேற்று ஒருவரை மீண்டும் இழந்து விட்டது அந்த தேசம்.


ஹஸீனா அரசின் பின்னால் இஸ்லாம் வங்கத்தில் இருந்து துடைத்தெறியப்படல் வேண்டும் என்ற தெளிவான கருத்தில் இருக்கிறது ஏகாதிபத்திய தேசங்கள். அதற்கு முதற்படியாக இஸ்லாமிய ஆட்சியல், அதன் அதிகாரத்திற்கான கோட்பாட்டியல், இஸ்லாமிய அஷ்-ஷரிய்யா சட்டங்களை அமுல் செய்ய முயலும் சிந்தனைகள் என்பவற்றை அடியோடொழிக்க முயல்கிறது இந்த ஏகாதிபத்தியங்கள்.


எகிப்து பாணியில் ஆட்சியாளர்களிற்கு இஸ்லாம் மீதான வெறுப்பை உருவாக்கி மதச்சார்பற்ற தன்மை மீதான பற்றை உருவாக்கும் நிகழ்ச்சி நிரல் ஊடாக இஸ்லாத்தின் அதிகாரத்தை நோக்கிய பாதைக்கு வியர்வை சிந்தும் மனிதர்களை இரத்தம் சிந்த வைக்கின்றன இந்த ஏகாதிபத்தியங்கள்.

Sources From Khaibar Thalam

 

ஒபாமாவின் பதவிக்கால போர்கள்....!!

 
 
 
நியூயோர்க் டைம்ஸ் மே 15 அன்று தனது முகப்புப் பக்கத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஒரு முக்கியமான மைல்கல் எட்டப்பட்டிருப்பது பற்றி கவனத்தை ஈர்க்கிறது: “புஷ் அல்லது வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியை விடவும் அதிகமான காலம் அவர் போரில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.” ஒபாமா தனக்கு முன்பிருந்தவரது சாதனையை மே 6 அன்று விஞ்சியிருந்தார். 


ஆயினும் இன்னும் எட்டு மாத காலம் வெள்ளை மாளிகையில் அவர் இருப்பார் என்பதால், இன்னுமொரு சாதனையையும் அவர் எட்டவிருக்கிறார். டைம்ஸ் எழுதியது: “ஒபாமாவின் பதவிக் காலம் முடிகின்ற வரையிலும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபட்டிருக்குமாயின் - சிரியாவுக்கு 250 கூடுதல் சிறப்பு நடவடிக்கை துருப்புகளை அனுப்பவிருப்பதாக ஜனாதிபதி சமீபத்தில் அறிவித்திருப்பதை கொண்டு பார்த்தால் இது ஏறக்குறைய நிச்சயமான ஒன்று தான் - அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முழுப் பதவிக் காலமும் தேசத்தை போரில் ஈடுபடுத்தி வைத்திருந்த ஒரே ஜனாதிபதி என்ற ஒரு அபூர்வமான மரபை அவர் ஏற்படுத்தி விட்டுச் செல்வார்.”


தனது சாதனைப் பயணத்தின் பாதையில், திரு.ஒபாமா, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய மொத்தம் ஏழு நாடுகளில் ஆபத்துமிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்திருக்கிறார். இந்தப் பட்டியல் துரிதமாய் விரிந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் அமெரிக்கா, ஆபிரிக்காவில் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. போகோ ஹராம் கிளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் நைஜீரியா, கேமரூன், நைஜர் மற்றும் சாத் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகளை கட்டியெழுப்புவதை உள்ளடக்கியிருக்கின்றன.


இந்த டைம்ஸ் கட்டுரையை எழுதியிருக்கும் மார்க் லாண்ட்லர், ஒபாமா 2009 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் என்பதை எந்த நகைமுரண் உணர்வுமின்றிக் குறிப்பிடுகிறார். மாறாக, “ஒரு போர்-எதிர்ப்பு வேட்பாளராக அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சித்தவராக” அவர் ஜனாதிபதியை சித்தரிக்கிறார்.... “வெள்ளை மாளிகையில் தனது முதலாம் ஆண்டு முதலாகவே இந்த மாற்றமுடியாத [போர் பற்றிய] யதார்த்தத்துடன் அவர் மல்லுக்கட்டி வந்திருக்கிறார்...”


”ஆப்கானிஸ்தானிற்கு 30,000 கூடுதல் துருப்புகளை அனுப்பும் உத்தரவை வழங்கும் முன்பாக ஆர்லிங்டன் தேசியக் கல்லறைகளின் நடுவே” ஒபாமா ஒரு நடை சென்று வந்தார் என லாண்ட்லர் தனது வாசகர்களுக்குக் கூறுகிறார். ”போர் சில சமயங்களில் அவசியமானதாக இருக்கிறது, சில மட்டத்தில் போர் மனித முட்டாள்தனத்தின் ஒரு வெளிப்பாடாகவும் இருக்கிறது என்ற இரண்டு ஒத்துப்போகாததாய் தோன்றுகின்ற உண்மைகளுக்கு” மனிதகுலம் இணங்கிச் செல்ல வேண்டியதாய் இருக்கிறது என்று ஒபாமா 2009 நோபல் பரிசை பெற்றுக் கொண்டபோது இயலாமையுடன் புலம்பிய உரையின் ஒரு பத்தியை லாண்ட்லர் நினைவுகூர்ந்தார்.


இதில் ஒபாமாவின் பதவிக்காலத்தில், முட்டாள்தனம் தான் மேலோங்கியிருந்தது என்பது தெளிவு. ஆயினும் லாண்ட்லரின் மாவிரர் அங்கே ஒன்றும் செய்ய இயலாதிருந்தார். தனது போர்கள் “முடிப்பதற்கு மிகவும் சிக்கல்மிகுந்தவையாக கடினமாக இருந்தன” என்பதை ஒபாமா கண்டார்.


சிறப்பு போர் நடவடிக்கையாளரான சார்லஸ் கீட்டிங் IV ISIS படைகளுடனான ஒரு துப்பாக்கிச் சண்டையில் சமீபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி ஈராக்கில் அமெரிக்க படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது குறித்து ஒபாமா கூறுவதுடன் முரண்படுகிறது. டைம்ஸ் வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்து எழுதுகிறது, கீட்டிங்கின் மரணமானது “ஈராக்கிய படைகளுக்கு ஆலோசனையளிப்பதையும் உதவி செய்வதையும் மட்டுமே அமெரிக்கர்கள் செய்து கொண்டிருந்தனர் என்ற நிர்வாகத்தின் வாதத்தை ஒருபோதுமே நம்பமுடியாததாக்கியது.” வெளிப்படையான வார்த்தைகளில் இதைச் சொல்வதென்றால், ஒபாமா அமெரிக்க மக்களிடம் பொய் கூறி வந்திருக்கிறார்.


உள்ளார்ந்த நேர்மையின்மை தவிர, ஒபாமா குறித்த டைம்ஸின் சித்தரிப்பில் உண்மையான துன்பியலுக்கு தேவையானதாக இருக்கும் அத்தியாவசியமான கூறு இல்லாதிருக்கிறது: அதாவது ஜனாதிபதியின் நடவடிக்கைகளை தீர்மானித்த, அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட புறநிலை சக்திகளை அடையாளம் கண்டு கூறுதல். அமைதியை நேசிக்கும் இந்த மனிதர், ஜனாதிபதியாக ஆனதால், ஆளில்லா விமானக் கொலைகளை தனது சிறப்புத் தன்மையாக ஆக்க நேர்ந்ததற்காகவும் ஒரு அறநெறிரீதியான சாத்தானாக மாறத் தள்ளப்பட்டதற்காகவும் தனது வாசகர்களை கண்ணீர் வடிக்கச் செய்ய லாண்ட்லர் விரும்புகிறார் என்றால், ஒபாமாவின் இந்த “துன்பகரமான” விதியை தீர்மானித்த வரலாற்று சூழ்நிலைமைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு அவர் முயற்சி செய்திருக்க வேண்டும்.



ஆனால் இந்த சவாலை டைம்ஸ் தவிர்த்து விடுகிறது. ஒபாமாவின் போர் புரியும் சாதனையை கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையினது ஒட்டுமொத்தப் பாதையுடனும் தொடர்புபடுத்திக் காட்டுவதற்கு அது தவறி விடுகிறது. ஒபாமா 2009 இல் பதவியில் கால் வைக்கும் முன்பாகவே, அமெரிக்கா 1990-91 முதல் அமெரிக்க-ஈராக் போர் முதலாகவே ஏறக்குறைய தொடர்ச்சியானதொரு அடிப்படையில் போரில் ஈடுபட்டு வந்திருந்தது. 1990 ஆகஸ்டில் குவைத்தை ஈராக் இணைத்துக் கொண்டது தான் முதலாம் வளைகுடாப் போருக்கான போலிசாட்டாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் குவைத் அரசருடன் ஈராக் ஜனாதிபதி சதாம் குசைனின் மோதலுக்கு அமெரிக்கா காட்டிய வன்முறையான எதிர்வினை என்பது பரந்த உலக நிலைமைகள் மற்றும் கணிப்பீடுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் நிலையில் இருந்தது தான் - இறுதியில் 1991 டிசம்பரில் அது கலைக்கப்பட்டது - அமெரிக்க இராணுவ நடவடிக்கை நிகழ்ந்த வரலாற்று உள்ளடக்கமாக இருந்தது. ஜனாதிபதி முதலாவது புஷ் ஒரு “புதிய உலக ஒழுங்கின்” துவக்கத்தை அறிவித்தார். 1917 இல் நடந்த முதலாவது சோசலிசப் புரட்சியின் விளைபொருளான சோவியத் ஒன்றியம் குறிப்பாக 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்ததன் பின்னர் அமெரிக்க இராணுவ வலிமையை பிரயோகிப்பதற்கு ஒரு தடையாக இருந்தது. மேலும், வரலாற்று அர்த்தத்தில் ரஷ்யாவின் 1917 போல்ஷிவிக் புரட்சியுடன் பிணைந்ததாய் இருந்த 1949 இல் நடந்த சீனப்புரட்சியின் வெற்றியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதையில் மேலும் அதிகமான முட்டுக்கட்டைகளை இட்டது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும், அதனுடன் சேர்த்து சீனாவில் 1989 ஜூன் மாதத்தில் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலைகளை தொடர்ந்து முதலாளித்துவம் கட்டுப்பாடேதுமற்று மீட்சி செய்யப்பட்டதையும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் நோக்குடன் உலக புவியரசியலை பாரியளவில் மாற்றியமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமெரிக்க ஆளும் வர்க்கம் கண்டது. அமெரிக்கா தனது மிகப்பெரும் இராணுவ வல்லமையை தாட்சண்யமில்லாமல் பயன்படுத்துவதன் மூலமாக ஒரு நீண்ட காலத்தில் வீழ்ச்சியடைந்து போயிருந்த அதன் உலகளாவிய பொருளாதார நிலையை தலைகீழாக்கி விட முடியும் என்பதான நம்பிக்கையில் உயரடுக்குகளிடம் இருந்து இந்த நடவடிக்கைக்கு மிகப்பெரும் ஆதரவு கிட்டியது.


1992 பிப்ரவரியில் பாதுகாப்புத் துறை வரைவு செய்த பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டல் ஆவணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க அபிலாசைகளை சந்தேகத்திற்கிடமின்றி வலியுறுத்திக்கூறியது. ”எதிர்காலத்தில் மூலோபாய நோக்கங்களை அபிவிருத்தி செய்கின்ற மற்றும் பிராந்திய அல்லது உலக மேலாதிக்கத்தின் ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை உருவாக்குகின்ற நாடுகளோ அல்லது கூட்டணிகளோ உருவாக்கும் சாத்தியம் தோன்றலாம். எதிர்காலத்தில் அத்தகைய உலகளாவிய போட்டியாளர் ஒன்று தோன்றுவதை நிகழாமல் தடுப்பதன் மீது மறுகவனம் குவிப்பதே இப்போது நமது மூலோபாயமாக இருக்க வேண்டும்.”


1990கள் அமெரிக்காவின் இராணுவ வல்லமை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதை கண்டது, மிகக் குறிப்பாய் யூகோஸ்லேவியாவின் கலைப்பில். பால்கன் அரசுகள் மீது திணிக்கப்பட்ட மூர்க்கத்தனமான மறுசீரமைப்பு சகோதரர்களுக்கு இடையிலான ஒரு உள்நாட்டுப் போரை தூண்டியதுடன். இது கொசோவோ மாகாணப் பிரிவினையை ஏற்கச் செய்ய சேர்பியாவை நிர்ப்பந்திக்கிற அமெரிக்க தலைமையிலான 1999 ஆம் ஆண்டு குண்டுவீச்சுப் பிரச்சாரமாக உச்சம் பெற்றது. அந்த தசாப்தத்தில் நடந்த மற்ற முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் சோமாலியாவிலான தலையீடு (அது ஒரு பேரழிவில் முடிந்தது), ஹைட்டி மீதான இராணுவ ஆக்கிரமிப்பு, சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான குண்டுவீச்சு, மற்றும் ஈராக் மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சு காலகட்டங்களும் அடங்கும்.


செப்டம்பர் 11, 2001 சம்பவங்கள் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற ஒரு பிரச்சார சுலோகத்தை தொடக்க சந்தர்ப்பத்தை வழங்கியது. இந்த சுலோகம் மத்தியகிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் மற்றும் அடிக்கடி ஆபிரிக்காவிலும் இராணுவ நடவடிக்கைகளுக்குமான சகல-நோக்க நியாயப்படுத்தலை வழங்கியது. 2002 இல் அமெரிக்கா ஏற்றுக் கொண்ட “முன்கூட்டித்தாக்கும் யுத்தம்” என்ற புதிய கோட்பாட்டை அடியொற்றி அமெரிக்காவின் இராணுவ மூலோபாயம் திருத்தப்பட்டது. 



நிலவும் சர்வதேச சட்டத்தை மீறிய இந்த கோட்பாடு, அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலின் - இராணுவரீதியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, பொருளாதாரரீதியானதாக இருந்தாலும் கூட - ஒரு சாத்தியத்தை வழங்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகின்ற உலகின் எந்த ஒரு நாட்டின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது.


ஜனாதிபதி இரண்டாம் புஷ்ஷின் நிர்வாகம் 2001 இலையுதிர் காலத்தில் ஆப்கானிஸ்தான் படையெடுப்புக்கு உத்தரவிட்டது. 9/11 ஐத் தொடர்ந்த உரைகளில் புஷ் “21 ஆம் நூற்றாண்டின் போர்கள்” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார். இந்த விடயத்தில் அவர் துல்லியமாகவே கூறினார்.


“பயங்கரவாதத்தின் மீதான போர்” ஆனது ஆரம்பத்தில் இருந்தே உலகெங்கும் முடிவில்லாத இராணுவ நடவடிக்கைகளின் வரிசையாகவே சிந்திக்கப்பட்டது. ஒரு போர் அத்தியாவசியமாகவும் தவிர்க்கவியலாமலும் அடுத்த போருக்கு இட்டுச் செல்வதாய் இருந்தது. ஆப்கானிஸ்தான் போர் ஈராக் படையெடுப்புக்கான ஒத்திகையாக நிரூபணமானது. இராணுவ நடவடிக்கைகளுக்கான தொடுஎல்லை விரிந்துகொண்டே போனது. 


புதிய போர்கள் தொடங்கப்பட்டன, பழைய போர்கள் தொடரப்பட்டன. சிடுமூஞ்சித்தனத்துடன் மனித உரிமைகள் என்னும் போலிக்காரணங்கள் கையிலெடுக்கப்பட்டு லிபியாவுக்கு எதிரான போரை நடத்துவதற்கும் மும்மார் கடாபியின் ஆட்சியை தூக்கிவீசுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. அதே இரட்டைவேட சாக்கு சிரியாவில் ஒரு பினாமிப் போரை ஏற்பாடு செய்வதற்கும் பிரயோகிக்கப்பட்டது. மனித உயிர்கள் மற்றும் துயரங்களின் விடயத்தில் இந்தப் போர்கள் ஏற்படுத்திய பின்விளைவுகள் கணக்கிலடங்காதவை.


உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் மூலோபாய தர்க்கமானது மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் இரத்தம்பாயும் நவகாலனித்துவ நடவடிக்கைகளைக் கடந்த மோதல்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அமெரிக்காவின் புவிஅரசியல் அபிலாசைகள் சீனா மற்றும் ரஷ்யா உடன் அபாயம் பெருகிய மோதல்களுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இன்னும் சொன்னால், நடந்து கொண்டிருக்கும் பிராந்தியப் போர்கள் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஆசியக் கூட்டாளிகளுக்கும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையில் துரிதமாய் தீவிரப்பட்டுச் செல்லும் மோதலின் உள்ளார்ந்த பாகங்களாகி கொண்டிருக்கின்றன.


ஒபாமாவின் பதவிக்காலத்தை முடிவற்ற போர்களின் ஒரு காலமாக ஆக்கிய அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளில் அடித்தளத்தைகொண்டுள்ள ஆழமான புறநிலைக் காரணங்கள் குறித்து நியூஜோர்க் டைம்ஸ் அதிகம் எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல, அடுத்து வெள்ளை மாளிகையில் அமரவிருப்பவர் யாராயிருந்தாலும் - அவர் பெயர் கிளிண்டன் என்றாலும், டிரம்ப் என்றாலும், அல்லது சாண்டர்ஸே என்றாலும் - அவர் இதையே தான் என்பது மட்டுமல்ல, இதனினும் மோசமானதையே தரமுடியும் என்பது குறித்த முன்கூட்டிய எச்சரிக்கையையும் அது தன் வாசகர்களுக்கு வழங்கவில்லை. போர் பிரச்சினை என்பது இந்தத் தேர்தலில் “குறிப்பிடமுடியாத மிகப்பெரும் ஒன்றாய்” இருக்கிறது.


Sources From Khaibar Thalam

 

Jun 14, 2016

சீன அரசின் Xīnjiāng மாகாண முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளும் அதன் எதிர் விளைவுகளும் !! (மீள்பதிப்பு)



 
 



ரமழான் மாதம் வந்து விட்டாலே, ஒரு கரப்பான் பூச்சியை அல்லது ஓர் எலியை பார்ப்பது போல் முஸ்லிம்களை தொடர்ந்து கவனமாக அவதாானிக்கும் சீன காபிர்கள்.

Xinjiang. சரியாக சொன்னால் சீனா ஆக்கிரமித்த கஸகிஸ்த்தான், கிருக்கிஸ்த்தான், தஜிக்கிஸ்த்தான பெரு நிலப்பகுதி. சீன அரசு ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வந்து விட்டால் Xinjiang-ல் உள்ள முஸ்லிம்களின் அடிப்படை மனித உரிமைகளை மிக மோசமாக நசுக்குவது வழமையான விடயம். இம்முறையும் அது தனது அதிகார எல்லைகளிற்கு அப்பால், பொது நிறுவனங்களின் ஊடாகவும் அவர்களின் மீது தனது காட்டுத்தனமான உரிமை மீறல்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளது. இதில் தனியார் கம்பனிகள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், கல்லூரிகள் என பலவும் அடங்கும். மாகாணம் முழுவதும் இந்த சட்டங்கள் அமுலானாலும் இதன் உச்ச தாக்கங்கள் தலைநகர் உரும்கியிலேயே விளைந்துள்ளது.

ஒரு காலத்தில் பெரும்பான்மையாக உய்க்குர் முஸ்லிம்களும், அடுத்த சிறுபான்மையாக கஸாக் முஸ்லிம்களும் இருந்த இந்த மாகாணத்தில் சீன அரசு மிக நீண்டகாலமாக திட்டமிட்ட சட்டவிரோத குடியேற்றங்களை உருவாக்கி அங்கு 5 விகிதமாக இருந்த ஹான் இன சீனர்களை உய்க்குர் முஸ்லிம்களிற்கு சமானமாக பெருக்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி 42:42 என்ற சம விகிதாச்சாரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதுடன் கஸாக் முஸ்லிம்களை மிகச் சிறுபான்மையாளர்களாகவும் மாற்றியுள்ளது. உய்க்குர், கஸாக் மொழிகளை பேசுவதை பின்னிலைப்படுத்தி மன்டரின் மொழியை கட்டாய அரச மொழியாக சீன அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சரி ரமழானில் என்ன நடக்கிறது அங்கே என்று பார்ப்போம்.

இந்த ரமழானில் பாடசாலை மாணவர்களும் நோன்பு பிடிக்க முடியாத நிலை. கல்லூரி நிறுவாகங்கள் ஒரு உணவுப்பார்சலையும், தண்ணீர் போத்தலையும் முஸ்லிம் மாணவர்களிற்கு பலவந்தமாக கொடுத்து அதனை மதியம் உண்டு பருகும் படி வற்புருத்துவதுடன் யார் உண்கிறார்கள்?, யார் உண்ணவில்லை? என்பதனை கவனாக கண்காணிக்கிறார்கள். உண்ண மறுக்கும் மாணவர்கள் பற்றிய விபரம் உடனடியாகவே மாகாண பொலிஸாரிற்கு தெரியப்படுத்தப்படுகிறது. குறித்த மாணவர்களின் வீடுகளிற்கு உடனடியாக விரையும் பொலீஸார் அந்த மாணவர்களின் தாய் தந்தையர் மேல் விசாரணைகளை மேற்கொள்வதுடன் தேச துரோக வழக்குகள் வரை பதிவு செய்கின்றனர். 
இதற்கு ஒரு படி மேலாக Kashgar Normal College நிர்வாகம் சென்றுள்ளது. மாணவர்களிற்கு கடந்த மாதமே அது ஒரு சுற்று நிருபம் அனுப்பியுள்ளது. அதில் யாராவது நோன்பு நோற்றால் அவர்களை உடனடியாகவே வெளியேற்றுவோம் என்றும், இதற்கு முன் அவர்கள் தங்கள் கல்லூரியில் பெற்ற டிப்ளோமா மற்றும் உயர் சான்றிதல் கற்கை நெறிகளை உடனடியாகவே வலிதற்றதாக இரத்தச் செய்வோம் என்றும் அறிவித்துள்ளது. (2014)

இந்த நிலைமை தொழிற்சாலைகள், அலுவலகங்கள், தனியார் வேலைத்தளங்கள், சுரங்க அகழ்வு நிலையங்கள் என்று எல்லா மட்டங்களிலும் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரச ஸ்தாபனங்களிலும், அலுவலகங்களிலும் கேட்கவே தேவையில்லை. கரப்பான் பூச்சியை அவதானமாகப்பார்க்கும் நிலையில் நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் சீன காபிர்களால் உற்று நோக்கப்படுகிறார்கள்.

தராவீஹிற்கு தடை. ரமழான் உபந்நியாசங்களிற்கு தடை. சிறப்பு பிரசங்கங்களிற்கு தடை. ஏன் 03 பேர் ஒன்றாக ரமழானில் கூடி நின்று பேசுவதற்கும் தடை. இப்தார் நிகழ்வுகள் கூட தங்கள் வீடுகளில் மட்டும் தமக்கு தாமே நிகழ்த்திக்கொள்ள வேண்டும். அடுத்த வீட்டிற்கு சென்று கூட்டாக நோன்பு திறந்தால் கூட அது, புரட்சிகர சீனக்குடியரசிற்கு எதிரான ஒன்று கூடல் என்றே சட்டம் சொல்கிறது. புரிகிறதா ரமழானின் நிலை வடமேல் சீன மாகாணத்தில்?...

ஆனால் இந்த உரிமை மீறல்களையும், சீன அரசின் கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஈமானிய உந்துதலால் இரகசியமாக பல்லாயிரக்கணக்கான உய்க்குர் சீனர்கள் நோன்பு நோற்கிறார்கள். சின்சியாங்கின் பெரு நகரங்களிளேயே சீன காவலர்களினால் மோப்பம் பிடிக்க முடிகிறது. 1005 சிறு நகரங்களும் கிராமாங்களும் உள்ள இந்த மாகாணத்தில் அவர்களால் இதனை தடுக்க முடியாமல் போயுள்ளதே உண்மை நிலை.

ஐயன்ஸ்டைன் சொல்லும் ஒரு தாக்கத்திற்கு மறு தாக்கம் உண்டு எனும் பொளதீக விதி, சீனாவிற்கும் பொருத்தம். உரும்கியில் சீன அரசு செய்யும் ரமழான் மாத ஏதேச்சாதிகார நடைமுறைகள் பற்றி இப்போது சின்சியாங்கின் கிராமப்புர மக்கள் இது பற்றி பேசுகிறார்கள். விவசாயிகளாகவும், சுரங்க தொழிளார்களாகவும், தொழிற்சாலை வேலையாட்களாகவும் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட இவர்கள் இப்போது பீஜிங்கின் அநியாயங்கள் பற்றியும், ஹான் இனத்தவரின் இனவாத சட்டங்கள் பற்றியும் தங்களிற்குள் கூடி கூடி வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சீன அரசு 14 நகரங்களில் எது நடக்கக்கூடாது என எதிர்பார்த்ததோ அது இப்போது 1005 கிரமாங்களில் நடந்து கொண்டிருக்கிறது. புரட்சி பற்றிய பேசிய தேசம், உலக புரட்சிகளிற்கு வித்திட்ட தேசம் இப்போது செய்யும் பாசிஸ அடக்குமுறைகளிற்கு எதிராக மக்கள் தங்களிற்குள் பேசும் காலம் உருவாகி விட்டது. இதுபற்றியும், இதன் பின்னராக அடுத்த கட்டங்கள் பற்றியும் இதே சீன அரசின் பிதா மாவோ சேதுங் தனது லிட்டில் ரெட் புக்கில் என்ன சொல்லியுள்ளார் என்பதை இவர்களே உணரவில்லை.

by:Abu Sayyaf


China Restricts Ramadan Fast For Muslim Uyghurs in Xinjiang - 2016
http://www.rfa.org/english/news/uyghur/restricts-06092016162515.html

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி செய்த அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அதன்படி அன்று சீனாவை ஆட்சி செய்த "டாங்" பேரரசிற்கும் கடிதம் எழுதினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து மூன்றாம் கலீஃபா ஹஜ்ரத் உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் அதாவது கி.பி. 650ல் இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழு சீனாவிற்கு அனுப்பப்பட்டது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாமா ஹஜ்ரத் ஸஃதுபின் அபிவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் சென்ற அந்தக் குழு சீனாவின் டாங் பேரரசர் குவாஸாங் அவர்களை சந்தித்து ஒரிறை கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள்.

இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழுவிற்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் கொடுத்து வரவேற்ற குவாஸாங், முஸ்லிம்கள் விரும்பியவாறு சீனாவில் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு இடமளித்து உதவி செய்தார்.

ஹஜ்ரத் ஸஃது பின் அபிவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்ட அந்தப் பள்ளிவாசல் இன்றும் கேண்டன் நகரில் மெமோரியல் மஸ்ஜித் என்று அழைக்கப்பட்டு மிகக் கம்பீரமாக காட்சியளிக்கிறது.ஹஜ்ரத் ஸஃது பின் அபி வக்காஸ் அவர்களது அதிகாரப்பூர்வ வருகைக்கு முன்பாகவே அரபு வணிகர்கள் மூலம் இஸ்லாம் சீனாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு முழுவதும் சில்க்ரோடு வணிகத்தோடும் அரபு மக்கள் வந்து சேரும் இடமாகவும் இந்த சிங்ஜியாங் மாகாணம் விளங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளின் மக்களும் வியாபார நிமித்தமாக குடியேறியதால் பலவிதமான கலப்பு இனங்கள் சிங்ஜியாங் மாகாணத்தில் உருவானது.

1949 வரை சுயாட்சி பெற்ற தனிநாடாக சோவியத் யூனியனின் ஆதரவோடு கிழக்கு துருக்கிஸ்தான் என்ற பெயரில் விளங்கி வந்தது. இன்றைய சிங்ஜியாங் மாகாணம் முழுவதும் கிழக்கு துருக்கிஸ்தானாக இருந்தது.
 
1949ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மூலம் சிங்ஜியாங் பகுதியை தன்னோடு இணைத்துக் கொண்டது சீன குடியரசு. இந்த இணைப்பை ஏற்காத சிங்ஜியாங் மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். சீன குடியரசின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அன்றிலிருந்து இன்று வரை கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற அமைப்பு அந்த மக்களின் விடுதலைக்காக போராடி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் இப்போது தஜக்கிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர்

2009 இல் இடம்பெற்ற மோதல்

சீனாவின் வடமேற்கு எல்லைப் புறமாகாணமாக சிங்ஜியாங்க் உள்ளது. இதன் தலைநகரான உரும்கியில் கடந்த 2009 ஜூலை மாதம் 5 ஆம் தேதியன்று இரண்டு இனங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் 184 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் படுகாயமடைந்தனர்.

மோதலுக்கான காரணம்:

1949 வரை கிழக்கு துர்கிஸ்தானாக இருந்த சிங்ஜியாங் பகுதியில் 95 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள். உய்குர், கிர்கிஸ், உஸ்பெக், டாடார், ஸாலா போன்ற துருக்கிக் மொழி பேசும் முஸ்லிம் இனங்களும், டங்ஸயாங், பாவோன் என்ற மங்கோலிய இன முஸ்லிம்களும் தாஜித் என்ற ஈரானிய இன முஸ்லிம்களும் சைனிஸ் ஹாய் இன முஸ்லிம்களுமாக 95 விழுக்காடு முஸ்லிம்கள் தான் இந்த மாகாணத்தில் வாழ்ந்தனர். 4 சதவீத ஹான் இன மக்களும் வாழ்ந்து வந்தனர். இதில் உய்குர் இன முஸ்லிம்கள் தான்பெரும்பான்மையினர். 1949 வரை இந்த நிலைதான் இருந்தது.
சிங்ஜியாங் முஸ்லிம்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் கைவினை கலைஞர்கள். கைவினை பொருட்கள் செய்வதில் வல்லுனர்கள். சிங்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பான்மையை குறைக்க வேண்டும் என்ற சதிதிட்டத்தின் காரணமாக முஸ்லிமல்லாத ஹான் இன மக்களை சிங்ஜியாங் பகுதியில் குடியமர்த்த திட்டமிட்டது சீன அரசு.

சிங்ஜியாங் மாகாணத்தில் இயற்கை வளங்கள் அபரிமிதமாக உள்ளன. இன்றைய தேதியில் சீனாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 40 விழுக்காடு சிங்ஜியாங்கில் தான் கிடைக்கிறது. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் சீனாவின் 60 விழுக்காடு தேவையை பூர்த்தி செய்கிறது. இன்னும் பருத்தி, கால்நடை வளர்ப்பு, காற்றாலை, கம்பளி, வேளாண்மை என்று சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிங்ஜியாங் மாகாணம் திகழ்கிறது. இப்படிப்பட்ட மண்ணிற்கு சொந்தமான மக்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை குறைத்தால் தான் அங்கே உள்ள வளங்களை சுரண்ட முடியும் என்ற காரணத்தால் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் முஸ்லிம்களைப் புறக்கணித்து ஹான் இன மக்களை நியமித்தது.

உய்குர் முஸ்லிம்களிடம் உள்ள கைவினை பொருட்கள் தயாரிக்கும் திறனை பயன்படுத்தி விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்ஜியாங் பகுதியில் தொடங்காமல் மத்திய சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கினர். பிறகு இந்த மக்களை சிங்ஜியாங் மாகாணத்திலிருந்து மத்திய சீனாவிற்கு வேலை தேடி புலம் பெயர செய்தனர். தங்களது மண்ணின் வளங்களை சுரண்டத்தான் இந்த புலம்பெயர்தல் என்ற சூழ்ச்சியை அறியாத உய்குர் முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் வேலை தேடி புலம்பெயர்ந்தனர்.

பல்வேறு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த ஹான் இன மக்களை வைத்து சிங்ஜியாங் பகுதியின் வளங்கள் அனைத்தையும் சீன அரசு உறிஞ்சி வருகிறது. 1947ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள் 2004 கணக்கெடுப்புபடி 45 விழுக்காடாகவும் ஹான் இனத்தவர் 45 விழுக்காடாகவும் மாறிப்போயினர்.

வேலைதேடி சீனாவின் மத்திய மாகாணத்திற்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலின் காரணமாக சீன விளையாட்டுப் பொருட்களை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தடை செய்ததின் விளைவாக அவர்கள் பணியாற்றிய ஏறக்குறைய ஒரு லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

அதிர்ச்சியுற்ற முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணிற்கு வந்த போது தான் சிங்ஜியாங் மாகாணத்தில் எல்லா முக்கிய பொறுப்புகளிலும் ஹான் இனத்தவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒரு பக்கம் வேலை வாய்ப்பற்று வறுமையில் மண்ணின் மைந்தர்கள் வாட, மறுபக்கம் அவர்களின் வளங்களை எல்லாம் ஹான் இனத்தவர் சுரண்ட, இரு சமூகத்தாருக்கும் சம வாய்ப்பளிக்க வேண்டிய சீன கம்யூனிஸ்டு அரசு ஹான் இனத்தவர் பக்கம் ஒரு தலைபட்சமாக நடக்க, மோதல் முற்றி கலவரமாகி உயிர்பலி ஏற்பட்டுள்ளது.

1949ல் சிங்ஜியாங் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து சீன கம்யூனிஸ்ட் அரசு முஸ்லிம்கள் மீது மத ரீதியான தாக்குதலையும் தொடுத்து வருகிறது. முஸ்லிம் ஆண்கள் தாடி வைக்கக் கூடாது, பெண்கள் புர்கா அணியக் கூடாது 18 வயது நிரம்பியவர்கள் தான் பள்ளி வாசலுக்கு செல்லவேண்டும், அரசு அச்சடித்து தரும் குர் ஆனைத்தான் முஸ்லீம்கள் ஓத வேண்டும் என்ற முஸ்லிம்கள் தங்கள் உயிரே போனாலும் ஏற்றுக் கொள்ள இயலாத இத்தகையை ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது சீன அரசு. ஆனால் இந்த செய்திகள் எல்லாம் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை.

பாலஸ்தீனத்தில் அரபு மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து யூதர்களை இஸ்ரேல் அரசு குடியமர்த்துவது போல ஈழத்தில் தமிழ் மக்களையெல்லாம் அகதி முகாமில் அடைத்துவிட்டு தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் சிங்களர்களை இலங்கை அரசு குடியமர்த்துவது போலத்தான் சீன அரசு மண்ணின் மைந்தர்களைப் புலம் பெயர செய்து பிற மக்களை குடியமர்த்தி வளங்களை தேசியம் என்ற பெயரால் சுரண்டி வருகிறது. போதாக் குறைக்கு உய்குர் மக்களின் மொழியான துருக்கிக் என்ற அரபி வரி வடிவம் கொண்ட மொழியையும் சிதைத்து அவர்களது கலாச்சாரத்தையும் சிதைத்து வருகிறது. தொடர்ந்து சீன அரசிற்கு எதிராக புரட்சிகள் சிங்ஜியாங் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ் அது ஒரு நாள் நிச்சயம் வென்றே தீரும்!.

கட்டுரையாசிரியர்: C.M.N.ஸலீம்,

May 22, 2016

அமெரிக்கா சிரியாவிற்கென கொண்டிருக்கும் செயற்திட்டத்தை அடையாளம் காணுதல்

 

கடந்த வருடம் நடந்த “பாரீஸ் தாக்குதல்” மிகவும் துர்அதிர்ஷ்டமானது ஏனெனில் அது 130 அப்பாவி உயிர்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் இந்த சிரியாவில் நடைபெற்று வரும் புரட்சிக்கு எதிராக உலக சக்திகளை ஒன்று சேர்த்திருக்கின்றது. மேலும்  ஐ.எஸ்.ஐ.எஸ், அதன் செயல்கள் மூலம், இந்த புரட்சிக்கு இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவது இது முதன்முறை கிடையாது.
 
 
சிரிய புரட்சி 2011 ல் அரபு புரட்சியின் ஒரு கிளையாக தொடங்கியது. இது அந்த ஆண்டின் மார்ச் மாதம் பல தரப்பட்ட சிரிய சமுதாயத்தினர் தங்களுக்கு நாட்டின் அரசியல் இயந்திரத்தில் அடிப்படை மாற்றங்கள் வேண்டி சாலையில் இறங்கி போராடியதன் மூலம் தொடங்கியது. போராட்டக்காரர்கள் அதிபரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை, ஆனால் அவர்கள் கோரியது அதிகாரத்தின் தூன்களாக இருக்கும் அனைத்தையும் பிடுங்கி பொது ஜனங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பதே.
 
 
இந்த நிகழ்வு நடப்பது பற்றி எதுவம் தங்களுக்கு தெரியாது என்றே மேற்குலகு அரசுகளின் ஆரம்பகால விளக்கங்களாக இருந்து வந்தன. அல்-அசாதின் குடும்பம் சிரியாவை பல ஆண்டுகளாக கொடூரமான, இரும்பு கரங்களை கொண்டு ஆட்சி செய்து வருகின்றது. முதலில் ஹாஃபிஸ் அல் அசாதிற்கு கீழ் அதன் பின்னர் அவருடைய மகன் பஷார் அல்- அசாதிற்கு கீழ், சிறிய சந்தேகத்திற்குரிய செயல்கள் செய்தவதால் கூட கைது செய்யப்பட்டும், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டும்   (விடுவித்துக்கொள்ள முடியாத அளவில் சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டும்) மேலும் பெரும்பாலும் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆகையால், மேற்குலகின் அரசியல்வாதிகளின் எண்ணம் என்னவென்றால் துனீசியா மற்றும் எகிப்தில் செய்ததை போன்று சிரியாவில் செய்வதற்கு எவரும் துனிய மாட்டார்கள் என்பதே. உதாரணத்திற்கு, 2015 ம் ஆண்டு மார்ச் 7 ம் தேதி, சிரியாவில் போராட்டம் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஃபாரீன் அஃப்பையர்ஸ் (Foreign Affairs) எனும் பத்திரிக்கை மைக்கேல் ப்ரோனிங் என்பவர் எழுதிய ” The Sturdy House that Asad Built: Why Damascus is not Cairo”. என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியிட்டது.[1] எனினும், இரண்டு மாதங்கள் கழித்து 2015 ம் ஆண்டு மே 19ம் தேதி, ப்ரோனிங்  ”Cracks in the House of Asad: Why a Supposedly Stable Regime Is Looking Fragile”. [2]என்ற தலைப்பில் மற்றொரு தலையெங்கம் எழுத நிர்பந்திங்கப்பட்டார்.
 
 
இதற்கு அடுத்தபடியாக ஆச்சரியத்தில் இருந்த அமெரிக்காவும் சிரியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை விரும்பவில்லை. திரைமறைவில் அது சிரிய அரசுக்கு மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது, அதாவது 2000ம் ஆண்டில் ஹாஃபிஸ் அல் அசாத் இறந்தவுடன், அமெரிக்கா அவருடைய மகன் பஷாரை பதவியேற்க தூண்டியது. அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மேடலின் ஆல்பிரைட், இது விஷயமாக இவ்வாறு கூறினார்: “டாக்டர். பஷார் அசாத் பொறுப்பேற்று கொண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்வதை நான் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறேன்”. [3] அது முதற்கொண்டு பஷார் அல் அசாதை ஜான் கெர்ரியும் அமெரிக்க அரசை சார்ந்த மற்ற முன்னனி உறுப்பினர்களும் பலமுறை சந்தித்த நிகழ்வுகள் நடைபெற்றன[4] மேலும் இச்சந்திப்புகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 70% விஷயங்களுக்கு பஷார் அல் அசாத் ஒப்புக்கொண்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. [5] இதன் விளைவாக அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சிரியா மிகுந்த ஆதரவை அளித்து வருகிறது, எந்த அளவிற்கு என்றால் தனிநபர்களை அமெரிக்காவின் சார்பாக கொடுமை படுத்தும் அளவிற்கு இருந்து வருகிறது. [6]
 
 
ஆச்சர்யத்திற்கு இடமளிக்காத வகையில், இதன் காரணமாக, அமெரிக்கா சிரியாவில் நடைபெற்று வரும் புரட்சிக்கு ஒரு ” அரசியல் தீர்வை” மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. இந்த விஷயத்திற்காக ஆதரவை திரட்ட ஒரு சர்வதேச செயற்திட்ட குழுவை அமைக்க அது ஏற்பாடு செய்தது மேலும் ஜெனீவாவில் கருத்தரங்கம் முடிந்தவுடன் இந்த செயற்திட்ட குழு ஒரு “இறுதி செய்தியை” வெளியிட்டது அது அரசியல் தீர்வு” என்பதற்கான உண்மையான அர்த்தத்தை விளக்கியது: “அரசு மற்றும் எதிரணி உறுப்பினர்களை கொண்டு ஒரு அரசு மாற்றத்தை செயல்படுத்தும் ஒரு மேலான்மை குழுவை முழு செயலாற்றும் சக்திகளை உள்ளடக்கிவாறு உருவாக்க வேண்டும், மேலும் அரசு நிர்வாகங்கள் மற்றும் கைதேர்ந்த ஊழியர்கள் ராணுவப்படை மற்றும் பாதுகாப்புப்படை போன்றவை உள்ளடக்கிய  தொடர்ந்து செயல்படும் வண்ணம் அதை பரஸ்பர சம்மதத்துடன் அமைக்க வேண்டும்”. [7] வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், அரசின் தலை விழுவது தான் அமெரிக்காவின் திட்டம், எந்த வகையில் என்றால் அரசின் மற்ற தூண்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை போன்றவற்றை முன்னிருந்தவாரே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
 
 
ஆகையால், சிரிய புரட்சியாளர்களுக்கு உதவப்போவதில்லை என அமெரிக்கா முடிவெடுத்தது மேலும் ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஹிலாரி கிளிண்டன் விவரித்தார். ” நீங்கள் ஒரு ராணுவ திட்டத்தை தீட்டக்கூடியவராகவோ அல்லது வெளியுறவு அமைச்சராகவோ இருந்து உங்களது கண்ணுக்கு புலப்படாத  நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்ள கூடிய ஒரு எதிரணி இருக்கின்றதா என்று கண்டு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கையில்”, இதன் அர்த்தம் என்னவெனில் அமெரிக்காவிற்காக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி அதற்காக வேலை செய்யக்கூடிய எந்தவொரு எதிரணியையும் கண்டுகொள்ள முடியாமல் போனது. [8] கார்னெகீ என்டோவ்மெண்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் ஆரோன் லண்டு எனும் சிரியா ஆய்வாளர், கிளிண்டனின் கணக்கை ஊர்ஜிதப்படுத்தினார். “நீங்கள் மனித உரிமையை மதிக்கும் தூய்மையான, சுத்தமான, மதசார்பற்ற போராட்டக்குழுவை காணப்போவதில்லை ஏனெனில் அதுபோன்ற ஒன்று அங்கு இல்லவே இல்லை”, என்று கூறினார், மேலும் இதன் காரணமாகத்தான் அமெரிக்கா ஒரு” மிதவாத எதிரணியை” உருவாக்க முயலும் முயற்சிகள் முழுமையான தோல்வி அடைந்துள்ளது – சிரியன் நேஷனல் கவுன்சிலின் (SNC) ஆதிக்கமானது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களின் வரவேற்பு அறை வரை தான் உள்ளது [9], அதே சமயம் அமெரிக்காவால் பயில்விக்கப்பட்ட சிறிய அளவிளான சிரிய வீரர்களில் பெரும்பாலோர் சுதந்திர போராட்டக்குழுவினருடன் மறுபடியும் சேருகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. [10]
 
 
இந்த சூழ்நிலையில் சிரியாவினுல் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் வருகை அமெரிக்காவிற்கு பேருதவியாக அமைந்தது. 2013 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி முதல் 2014 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி வரை ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியாவில் நடத்திய தாக்குதல்களில் 64% மற்ற போராட்டக்குழுக்களின் மீது நடத்தப்பட்டதாகும் வெறும் 13% தாக்குதல்கள் தான் அரசின் மீது நடத்தப்பட்டது என ஜேன்ஸ் இன்டெலிஜென்ஸின் ஆய்வு தெரிவிக்கின்றது. அதேபோல் அல்-அசாதின் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ பெரும் அளவில் தொடாமல் விட்டுள்ளது. அதே காலத்தில் அது நடத்திய 982 தாக்குதல்களில் வெறும் 6% தாக்குதல்களை மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது நடத்தியுள்ளது. [11] ஆகையால் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் வருகை சிரிய புரட்சியாளர்களுக்கு இரண்டாவது எதிரியை கொண்டு வந்துள்ளது மேலும் இதன் காரணமாக அவர்களுக்கு இரண்டாவது முனையை எதிர்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது, அவர்களை நோக்கி அல்-அசாத் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கும் வேளையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிழக்கிலிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
 
அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக பெரும் காரியம் செய்யும் என ஒருவரும் எதிர்பார்க்க முடியாது, ஆகையால், சிரியாவின் மேடையில் அவர்கள் தோன்றியதிலிருந்து அமெரிக்காவின் நோக்கமான அரசை தக்கவைக்கும் செயலுக்கு உதவியாக அமைந்தது அதாவது போராட்டக்குழுக்கள் அல்-அசாதை தோற்கடிப்பதிலிருந்து தடுத்து நிறுத்துவது. மேலும் நிச்சயமாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக அமெரிக்கா 2014 ல்  நடத்திய தாக்குதல்களில் மிகவும் அரிதாகவே அதன் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் இலக்கை சென்றடைந்தது – இது தன்னிச்சையாக செயல்படும் போராட்டக்குழுக்களை தாக்க வேண்டும் என திட்டமிட்டு நடத்தப்பட்ட மறைமுக தாக்குதல்களாகும். [12]
 
 
ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ துடைத்தெறிவது ஒருபோதும் எங்களது நோக்கமாக இருந்தது அல்ல என ஒபாமா சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். “முதலில் அவர்களை கட்டுப்படுத்துவதே  ஆரம்பத்திலிருந்து எங்களுடைய நோக்கமாக இருந்து வந்தது, அவர்களை நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். அவர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் சிரியாவில் எந்தவொரு அடித்தளத்தையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்த பகுதியல் ஐ.எஸ்.ஐ.எல் ன்  இந்த படிப்படையான முன்னேற்றத்தை உங்களால் பார்க்க முடியாது”. [13] என அவர் கூறினார்.
 
 
இவை அனைத்தையும் காட்டிலும், 2015 கோடையில் சிரிய அரசு கவிழ்ந்து விடுமோ என அமெரிக்கா அச்சமுற தொடங்கியது. குறைந்த இடைவெளியில் அரசு தன் கட்டுப்பாட்டிலுள்ள  லட்டாக்கியா மற்றும் டமாஸ்கஸ் ஆகிய பகுதிகளை தவிர இத்லிப், ஹோம்ஸ், அலெப்போ மற்றும் தெய்ர் அல்-ஜோர் ஆகிய பகுதிகளில் புரட்சியாளர்களிடம் தோற்றது. ஆனால் புரட்சியாளர்கள் இவ்விரு பகுதிகளையும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்த ஒன்று கூடினர். [15] அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்த சூழ்நிலை பற்றி கலந்தாலோசிக்க  அதிகாரபூர்வமாக சந்திப்புகளை மேற்கொண்டனர். இந்த சந்திப்புகளின் வெளிப்பாடாக ரஷ்யா சிரிய அரசுக்கு ராணுவ ஒத்துழைப்பை வழங்க ஆரம்பித்தது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இவ்வாறு கூறினார்: நாங்கள் அனைவரும் ஒரு ஜனநாயக, ஒருங்கிணைந்த, மதசார்பற்ற சிரியாவை விரும்புகிறோம், அதை எப்படி அடைய போகிறோம் என்பது பற்றி சில விஷயங்களில் நாங்கள் கருத்து வேறுபாடு கொட்டுள்ளோம் (அமெரிக்காவுடன்). ஆனால் உடனடியாக எடுக்கப்போகும் சில நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்”. [16]
 
 
லாவ்ரோவ் தெரிவித்த கருத்து வேற்றுமை என்னவென்றால் அமெரிக்காவின் “அரசியல் தீர்வில்” பஷார் அல் அசாதின் பங்கு என்ன என்பது தான், ஆனால் இந்த விஷயத்திலும்  இவ்விரு தரப்பினரும் வெகு விரைவில் ஒரு தீர்வை ஏற்படுத்தி கொண்டனர். 4 வருட காலமாக அசாத் வெளியேற வேண்டும் என நிர்பந்தித்து வந்த அமெரிக்கா 2015 அக்டோபர் மாதத்தில் திடீரென அவர் வெளியேற வேண்டும் ஆனால் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது அவசியமில்லை என திடீரென அறிவித்தது. வேறு வார்த்தையில் கூற வேண்டும் எனில், ரஷ்யாவின் நிலையில் அமெரிக்கா தன்னை நிலைநிறுத்தி தங்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேற்றுமையை சரி செய்தது. [16] கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோ பயணம் மேற்கொண்ட அசாதிடம் கண்டிப்பாக தாங்கள் வெளியேற வேண்டும் என ரஷ்யா கூறியதாக இஸ்ரேலிலிருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. [17]
 
 
ஆகையால், 2015 அக்டோபர் தொடக்கத்தில் ரஷ்யா சிரியாவில் ராணுவ தாக்குதல்களை தொடங்கியது, இது அந்த நாட்டில் அமெரிக்காவின் நலன்களை பாதிக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி அல்ல. ஏனெனில் இது அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதராவாக, ரஷ்யா  அமெரிக்காவின் ஒப்புதலோடு தான் இதுபோன்று செயல்பட்டது. 2014 செப்டம்பரில் அமெரிக்கா எதை செய்ததோ அதே போன்று  ரஷ்யா சிரியாவில் தான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த வேண்டியே ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ  காரணம் காட்டியது ஏனெனில் அது ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தன்னுடைய தாக்குதல்களை தொடங்கவில்லை. மாறாக, அதன் தாக்குதல் சிரிய அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்த மற்றும் அரசின் மீது தாக்குதல்களை மேற்கொண்ட  மற்ற புரட்சிக்குழுக்களின் மீது தான் இருந்தது. [18] லாவ்ரோவ் இதை விவரித்து இவ்வாறு கூறினார்: “நாங்கள்  இவ்விஷயத்தில் இந்த கூட்டணியுடன் ஒரே பார்வையை தான் கொண்டுள்ளோம். நாங்கள் ஒரே அனுகுமுறையை தான் கொண்டுள்ளோம்: அது ஐ.எஸ்.ஐ.எல், அல்-நுஸ்ரா அல்லது வேறு தீவிரவாத குழுக்களாக இருந்தாலும் சரி.” [19]
 
 
அத்தருணத்தில், லாவ்ரோவ் குறிப்பிட்ட கூட்டணியில் பிரான்ஸ் சேராமல் இருந்தது. உண்மையில், சிரியாவில் பிரான்ஸ் எப்போதும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின்  திட்டங்களுக்கு மாற்றமாகவே செயல்படும் வரலாறை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, 2013 ல்,அசாத் டமாஸ்கஸிற்கு அருகில் கவ்ட்டா எனும் இடத்தில் ரசாயன ஆயுதங்களை உபயோகித்து 1,400 பேரை கொன்ற போது, பிரான்ஸ் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள கடின முயற்சி மேற்கொண்டது ஆனால் அதன்படி செயல்பட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மறுத்துவிட்டார். மிக சமீபத்தில்,  அமெரிக்கா அல்-அசாத் வெளியேற வேண்டும் என்ற  தனது முந்தய கோரிக்கையிலிருந்து அரசு மாற்றத்தை செயல்படுத்தும் காலம்வரை சில மாதங்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்று பின்வாங்கிய போது, அல்-அசாதை வெளியேற்ற வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து உறுதியாக இருந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அல்-அசாத் பிரச்சினை பற்றி விவாதித்து கொண்டிருந்த சமயம், அசாத் அரசின் மீது போர் குற்றத்திற்கான விசாரணையை திடீரென பிரான்ஸ் தொடங்கியது. [20]
 
 
2015 செப்டம்பர் மாதம் சிரியாவில் பிரான்ஸ் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளும் அமெரிக்காவுடன் ஒன்றிணையாமல் நடத்தப்படவை ஆகும். [21] இதன் விளைவாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அடங்கிய ஐந்து கண்கள் புலணாய்வு கூட்டணி எனப்படும் கூட்டணியில் பிரான்ஸ் இடம் பெறவில்லை. இந்த கூட்டணியில் மேற்கூறப்பட்ட ஐந்து நாடுகள் அத்தருணத்தில், லாவ்ரோவ் குறிப்பிட்ட கூட்டணியில் பிரான்ஸ் சேராமல் இருந்தது. உண்மையில், சிரியாவில் பிரான்ஸ் எப்போதும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின்  திட்டங்களுக்கு மாற்றமாகவே செயல்படும் வரலாறை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, 2013 ல்,அசாத் டமாஸ்கஸிற்கு அருகில் கவ்ட்டா எனும் இடத்தில் ரசாயன ஆயுதங்களை உபயோகித்து 1,400 பேரை கொன்ற போது, ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டது ஆனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இதை செயல்படுத்த மறுத்துவிட்டார். மிக சமீபத்தில், அமெரிக்கா அல்-அசாத் வெளியேற வேண்டும் என்ற தன்னுடைய முந்தய கோரிக்கையை தளர்த்தி ஆட்சி மாற்றம் நடைபெறும் காலம் வரை சில மாத காலம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்று பின்வாங்கிய போது, பிரான்ஸ்  தொடர்ந்து அல்-அசாதை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் தொடர்ந்து திடமாக இருந்து வந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அல்-அசாத் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த சமயம், பிரான்ஸ் திடீரென அசாத் அரசின் மீது போர் குற்றத்திற்கான விணாரணையை தொடங்கியது. [22]
 
 
நவம்பர் மாதம் 13ம் தேதி மாலை பாரீஸில் நடந்த தாக்குதல்கள் அமெரிக்காவுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள  பெருமளவில் உதவி புரிந்தது.
 
 
அச்சமயம் அமெரிக்கா சிரியாவுக்கான தன் திட்டத்திற்காக உலகை ஒன்றிணைப்பதற்காக சர்வதேச சமூகத்துடன் வியன்னாவில் கலந்தாய்வில் இருந்தது. அதிகாரபூர்வமாக, இந்த கலந்தாய்வு “ஒரு தீர்வை காணவேண்டும்” என்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டது, ஆனால் அங்கு நடந்த நிகழ்வுகளில் அது போன்ற ஒரு நிலை இருந்ததாக தெரியவில்லை. சிரியாவுக்கான வெளியுறவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஸ்டாஃபன் டி மிஸ்டுரா அமைத்த செயற்குழுவின் அனைத்து தலைமை பொறுப்பையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான செயற்திட்டம் குறித்து வரையறுத்தது. உலகின் இதர முன்னனி நாடுகளான ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தலைமை பொறுப்பு கொடுக்கப்படவில்லை இவர்கள் அனைவரும் அமெரிக்கா தயாரித்த செயற்திட்டத்தின் அடிப்படையிலான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தான்  அனுமதி அளிக்கப்பட்டது. வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், அமெரிக்கா சர்வதேச சமூகங்கள் தான் முன்வைக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறது, இந்த விஷயத்தில் ரஷ்யாவும் உடன்பட்டது. [23]
 
 
இது அந்த கலந்தாய்வின் முன்னேற்றத்தை தடுத்தது. அதாவது, பாரீஸ் தாக்கப்படும் வரை. நவம்பர் 14ம் தேதி, இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் திடீரென ஒரு ஒப்பதலுக்கு வந்தனர். சர்வதேச ஊடகங்கள்  வெளியிடப்பட்ட செய்தியாவது: “பாரீஸில் நடந்த தாக்குதலால் தூண்டப்பட்டு பதினேழு நாடுகள் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடித்து வைக்க தங்களுக்கிடையே இருந்து வேற்றுமைகளை களைந்து ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து கொண்டனர்”. [24] “பாரீஸ் நகரி்ல் நடந்த தாக்குதல் தூதர்களை ஒன்று சேர்த்திருக்கின்றது, இவர்கள் தங்கள் அளவிலான முந்தய பேச்சுவார்த்தைகளில்  ஏற்பட்ட வேற்றுமைகளை களைய முடியாமல் இருந்தனர். இந்த பாரீஸ தாக்குதல் ‘நீங்கள் அசாதிற்கு ஆதரவாக இருக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை என்பதை காட்டுகின்றது’, என்று லாவ்ரோவ் கூறினார், ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தான் உங்களது எதிரி’. [25]
 
 
சிரியாவிற்கான அமெரிக்காவின் திட்டங்களின் விவரங்கள் வரிமாறு:
 
. 2015 டிசம்பர் 14ம் தேதி: தூதர்கள் மறுபடியும் கூடி செயல்பாடுகளை சரிபார்க்க வேண்டும்.
 
. 2016 ஜனவரி 1ம் தேதி: சிரியா அரசையும் எதிரணியினரையும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா சபையிடம் கோரிக்கை வைக்க வேண்டும்
. 6 மாதங்களில் அல்லது 2016 மே மாதம் 14 ம் தேதி: சிரயா அரசுக்கும் எதிரணியினருக்கும் இடையே போர் நிறுத்தம் செய்து; புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை தொடங்க வேண்டும்.
. 18 மாதங்களில், அல்லது 2017 ம் ஆண்டு மே 14 ம் தேதி: ஐ.நா மேற்பார்வையில் புதிய அரசியல் அமைப்பின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும். [26]
 
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அதனுடன் அல்-கய்தாவின் அங்கமான நுஸ்ரா ஃபிரண்ட் தீவிரவாத அமைப்பையும், போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டில்  இருக்கும் நிலையிலும் ராணுவ தாக்குதல்கள் தொடுக்கும் பட்டியலில் இவர்களை வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஜோர்டானிய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த பட்டியலில், பிற்காலத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் திட்டங்களுக்கு உடன்பட மறுக்கும் சிரியாவின் இதர குழுக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். [27]
 
 
இந்த ஒப்பந்தத்திற்கு பிரான்சும் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் கார்டருக்கும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஜான்-வேஸ் லா டிரியானுக்கும் இடையே பாரீஸ் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து அந்த வார இறுதி நாட்களில் நடந்து தொலைபேசி உரையாடல்கள் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகள் களையப்பட்டது, இதன் விளைவாக சிரயாவில் அமெரிக்காவின் தலைமையில் செயல்பட பிரான்ஸ் சம்மதித்தது. இதன் பின்னர் அமெரிக்கா பிரான்சுடன் உளவுத்துறை தகவல்களை பரிமாற தொடங்கியது, மேலும் இவ்வாறு இரு நாடுகளும் சிரியாவில் ராணுவ தாக்குதல்களை ஒன்றினைந்து நடத்த தொடங்கியது. அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகளை நோக்கி பிரெஞ்சு போர் விமானங்கள் தாக்குதல் நடத்த தொடங்கியது. [28]
 
 
முடிவுறையாக, சிரியாவினுள் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் வருகை அல்-அசாத் அரசின் ஆட்சி நீடித்து இருக்க பெரும் உதவி புரிந்தது, மேலும் உண்மையில் அல்-அசாத் அரசுக்கு ஆதரவாக இருக்கும் சிரியாவின் மீதான அமெரிக்க, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு (மேலும் மற்றவர்கள்) நடத்தும் ராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்தும் வண்ணம் அமைந்தது, மேலும் இது உலகை சிரியாவிற்கான அமெரிக்காவில் திட்டத்தின் பால் ஒன்றிணைத்தது.
 
 
[1] “The Sturdy House that Asad Built: Why Dam­as­cus is not Cairo”, www.foreignaffairs.com/articles/syria/2011–03-07/sturdy-house-assad-built
[2] “Cracks in the House of Asad: Why a Sup­pos­edly Sta­ble Regime Is Look­ing Frag­ile”, www.foreignaffairs.com/articles/syria/2011–05-19/cracks-house-assad
[3] “Albright press brief­ing prior to depar­ture for Al-Asad funeral”, www.usembassy-israel.org.il/publish/peace/archives/2000/june/me0612d.html
[4] “Kerry dis­cov­ers Assad is no reformer”,
[5] www.enduringamerica.com/home/2010/12/1/wikileaks-document-syrias-assad-gives-the-ultimate-response.html
[6] “Syria: The Not So Long Ago Cher­ished US Part­ner in Intel­li­gence, Ren­di­tion & Tor­ture Oper­a­tions”, www.boilingfrogspost.com/2011/12/10/syria-the-not-so-long-ago-cherished-us-partner-in-intelligence-rendition-torture-operations/
[7] “Action Group for Syria: Final Com­mu­nique”, www.un.org/News/dh/infocus/Syria/FinalCommuniqueActionGroupforSyria.pdf
[8] “Clin­ton: Arm­ing rebels could help Al-Qaeda”, www.cbsnews.com/news/clinton-arming-syrian-rebels-could-help-al-qaeda/
[9] “Syr­ian Oppo­si­tion Groups Stop Pre­tend­ing”, www.newyorker.com/news/news-desk/syrian-opposition-groups-stop-pretending
[10] “Obama Admin­is­tra­tion Ends Effort to Train Syr­i­ans to Com­bat ISIS”, www.nytimes.com/2015/10/10/world/middleeast/pentagon-program-islamic-state-syria.html?_r=0
[11] “Is ISIS a US Proxy?”, www.revolutionobserver.com/2014/12/isis-a-us-proxy.html
[12] “Syria rebels dis­mayed by US air attacks on non-ISIS groups”, www.ft.com/intl/cms/s/0/12cd016e-4328-11e4-8a43-00144feabdc0.html#slide0 See also: www.revolutionobserver.com/2014/09/operation-saving-bashar-al-assad.html
[13] “Obama on ISIS: ‘We have Con­tained Them’ ”, www.realclearpolitics.com/video/2015/11/13/obama_on_isis_we_have_contained_them.html
[14] “String of losses in Syria leaves Asad regime increas­ingly pre­car­i­ous”, www.theguardian.com/world/2015/jun/11/syria-losses-east-assad-regime-precarious
[15] “Remarks with Russ­ian For­eign Min­is­ter Lavrov”, www.state.gov/secretary/remarks/2015/09/247662.htm
[16] “US says Asad must go, tim­ing down to nego­ti­a­tion”, www.reuters.com/article/2015/09/19/us-mideastcrisis-kerrytalks-idUSKCN0RJ0FX20150919
[17] “Putin told Assad ‘go or you’ll be made to go,’ Israeli offi­cials say”, www.timesofisrael.com/putin-told-assad-to-go-or-be-made-to-go-israeli-officials-say/
[18] “Rus­sians Strike Tar­gets in Syria, but not ISIS Areas”, www.nytimes.com/2015/10/01/world/europe/russia-airstrikes-syria.html
[19] “Rus­sia is strik­ing same tar­gets in Syria as US: Lavrov”, http://news.yahoo.com/russia-not-planning-air-strikes-iraq-lavrov-160921744.html
[20] “France more active than rest of the west in tack­ling Syria”, www.theguardian.com/world/2015/nov/14/france-active-policy-syria-assad-isis-paris-attacks-air-strikes
[21] “France launches its first airstrikes against ISIS in Syria”, http://edition.cnn.com/2015/09/27/middleeast/syria-france-isis-bombing/
[22] “France Launches Airstrikes Against Islamic State Strong­hold in Syria”, www.wsj.com/articles/u-s-providing-targeting-intelligence-to-france-for-strikes-on-islamic-state-after-paris-attacks-1447618522
[23] “Rus­sia accuses US of hijack­ing meet­ings to pre­pare for Syria talks, US says Moscow didn’t show”, www.usnews.com/news/world/articles/2015/11/12/russia-accuses-us-of-hijacking-preparations-for-syria-talks
[24] “Paris attacks: Syr­ian tran­si­tion plan reached by US, Rus­sia in Vienna talks”, www.smh.com.au/world/paris-attacks-syrian-transition-plan-reached-by-us-russia-in-vienna-talks-20151115-gkz9qa.html#ixzz3rqvYg8Vx
[25] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[26] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[27] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[28] “France Launches Airstrikes Against Islamic State Strong­hold in Syria”, www.wsj.com/articles/u-s-providing-targeting-intelligence-to-france-for-strikes-on-islamic-state-after-paris-attacks-1447618522

http://sindhanai.org/

May 3, 2016

தஃவா, களப்பணி, சிறை: ரிஷ்க் பற்றிய புரிதல்

     
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்று வந்த ஒரு நண்பர் எழுதிய, எமது சிந்தனையை தூண்டக்கூடிய ஓர் சிறிய ஆக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கிலாஃபத்தின் மீள்வருகைக்காக தீவிரமாகக் களப்பணிகளில் ஈடுபட்டு அடிக்கடி சிறைவாசம் அனுபவித்த சகோதரர்களை சந்தித்த அவரின் வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுபவை. நிச்சயம் அது உங்களையும் சிந்திக்கத் தூண்டும் என நம்புகிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்றிருந்த எனக்கு நீண்டகாலமாகத் அறிமுகமான ஒரு நண்பரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னை விட மிகவும் வயதில் குறைந்தவராய் இருந்தாலும் வாழ்வின் சோதனைகளை முகம் கொடுப்பதில் அவர் மிகவும் பக்குவப்பட்டவர். அவர் ஒரு அரசியல் செயற்பாட்டாளர். இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாக ஏற்று, அதன்படி வாழ்கின்ற, ஐக்கியப்பட்ட ஓர் உம்மத்தை உருவாக்குவதை நோக்கி அழைத்தல் என்ற அடிப்படையில் எங்களது செயற்பாடுகளுக்கு மத்தியில் பெரிய வேறுபாடு கிடையாது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், அவர் அந்த அரசியல் கருத்துக்களைக் கொண்டிருப்பதால் முகம் கொடுத்த சோதனைகள்தான்.
 
அவர் பல முறை சிறைவாசம் அனுபவித்ததால் அவரது கல்வியிலும், தனிப்பட்ட வாழ்விலும் அது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது. ஒருவருக்கு சிறை அனுபவத்தை வழங்க அவர் சிறைகளின் இழிவான வாழ்க்கைத் தரத்தையும், சித்திரவதையும் அனுபவிப்பது கட்டாயமானது என்பது முஸ்லிம் உலகின் சிறைகளின் யதார்த்தத்தை நீங்கள் அறிந்திருந்தால் தெரிந்திருக்கும்.
 
ஏன் அவர் அடிக்கடி சிறைக்குச் செல்ல வேண்டும்? அவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல மனிதர். வன்முறைகளை பரப்புரை செய்பவருமல்ல. எனினும் முஸ்லிம் உலகின் துரதிஷ்டமான நிலை என்னவென்றால் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்பது மாத்திரம் அரச இயந்திரத்தினால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட போதுமானது என்பதே.
 
இம்முறை அவரை சந்தித்த பொது பல மணிநேரங்கள் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். எனினும் விடைபெற முன்னர் அவர் எனக்கு ரிஷ்க் பற்றி புகட்டிய பாடத்தை, அத்தலைப்பில் பல கட்டுரைகளை வாசித்த பின்னரும், பல குத்பாக்களை நிகழ்த்திய பின்னரும் கூட அவர் விளக்கியது போல நான் புரிந்து கொண்டிருப்பேன் என்று நம்பவில்லை.
 
முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ரிஷ்க் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது என நாம் நம்புகிறோம். அந்த உறுதியான நம்பிக்கை எமது வாழ்வில் தொழிலை இழக்க நேரிடல், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படல் போன்ற சில பாதகமாக விடயங்கள் நடக்கின்றபோது எமது ஜீவனோபாயத்திற்கு என்ன செய்யப்போகிறோமோ தெரியவில்லை என்று அங்கலாய்ப்பதிலிருந்து எம்மை விடுவிக்க வேண்டும். மேலும் இந்த நம்பிக்கை வாழ்வாதாரம் பாதிப்படைந்து விடுமோ என அஞ்சி அல்லாஹ்(சுபு) எம் மீது சுமத்தியிருக்கின்ற கடமைகளை செய்வதில் சமரசம் செய்யாதிருக்க உதவ வேண்டும்.
 
ஒன்றை அறிந்து வைத்திருப்பது வேறு அதன்படி வாழ்வது என்பது வேறு
 
அந்த சகோதரர் வெளியேறிச் செல்லமுன் எனக்கு ஒரு கதை சொன்னார். அவர் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் அவரது குடும்பம் வேறொரு இடத்தில் சென்று வாழவேண்டியேற்பட்டதாம். அதனால் அதுவரை காலமும் படித்த பாடசாலையை விட்டு விலக வேண்டிய நிலை. அது அவரது பழைய நண்பர் வட்டத்திலிருந்து அவரைத் தூரமாக்கியதாம். பின்னர் புதிய நண்பர் வட்டம் ஒன்றை அவர் ஏற்படுத்திக் கொண்டாராம். அவருக்கு புதிய நண்பர்கள் கிடைந்த அதே சமயம் அவரது பழைய பாடசாலை நண்பர்கள் போதை பொருட்களுடனும், குற்றச்செயல்களுடனும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். அந்தத் தருணத்தில் தனக்கு நல்ல நண்பர்களை பெற்றுத்தந்தது அல்லாஹ்(சுபு) செய்த பேரருளாகும் என்று அவர் சொன்னார்.
 
பின்னர் அவரது பழைய நண்பர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது நண்பரும் ஏறத்தாழ அதே அனுபவத்தைதான் பெற்றிருக்கிறார். அவரும் சிறைக்கு சென்றிருக்கிறார். அவரது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருபாலாரினதும் அனுபவமும் ஒன்றாக இருந்தாலும் அதனை  அவர்கள் அடைந்த பாதை முற்றிலும் வேறுபட்டது. அவரது நண்பர்கள் தமது சுய இச்சையை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டார்கள். எனது நண்பரோ அல்லாஹ்(சுபு)வை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டிருக்கிறார்.
 
அவர் இறுதியாக ஒன்று சொன்னார், அதாவது அவரது ரிஷ்க் சிறைக்குள்தான் கிடைக்கும் என்று முன்பே எழுதப்பட்டிருந்தால் எந்த வகையிலோ நான் சிறைக்கு வந்து சேர்ந்துதான் இருப்பேன்;. ஆனால் அந்த ரிஷ்க்கை பெற்றுக் கொள்வதற்கு நாம் பாவிக்கும் வழியே கவனத்திற்குரியது என்று ரிஷ்க் பற்றிய புரிதலை மிக தத்ரூபமாகக் கூறி  முடித்தார்.
 
பின்னர் அவரை அழைத்துச் செல்ல வந்து விட்டார்கள். அவரும் விடைபெற்று சென்றுவிட்டார். அவரை திரும்ப எப்போது காணுவேனோ என சிந்தித்துக் கொண்டு எனது வீட்டுத்தொகுதிக்கு வந்துவிட்டேன். சில நிமிடங்கள் கழித்து எனது வீட்டு அழைப்பொலி கேட்டது. உள்ளே நுழைந்த எனது அன்னை  “பார், யாரை நான் திரும்ப அழைந்து வந்துள்ளேன்” என்று சொல்லி அந்த நண்பரைக் காட்டினார். அந்த நண்பர் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய போது அம்மா வீட்டில் இருக்கவில்லை, மாடிப்படியால் அவர் இறங்கிச் சென்று கொண்டிருந்தபோதுதான் வீடு திரும்பிக்கொண்டிருந்த அம்மா அவரைக் சந்தித்திருக்கிறார். அவர் வெளியேறிய போது இரவுச் சாப்பாட்டு நேரம் ஆகியிருந்தது. அவர் உணவருந்தாது சென்றதை அனுமதிக்காத எனது அம்மா அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் எங்களுடன் இராபோசனத்திற்காக மேசையில் அமர்ந்த அவர் பின்வருமாறு கூறினார், “இன்றிரவு எனது ரிஷ்க் இங்குதான் என எழுதப்பட்டிருக்கிறது” என்று.
 
sources: