May 23, 2014

இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது


عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ


திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின

وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ

உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது

كُفِّنتِ في لَيلِ الزَفافِ بِثَوبِه

திருமண இரவன்று அந்த ஆடையால் உனக்கு கஃபனிடப்பட்டது

وَدُفِنتِ عِندَ تَبَلُّجِ الإِصباحِ

அதிகாலைப் பொழுதில் நீ அடக்கம் செய்யப்பட்டாய்

شُيِّعتِ مِن هَلَعٍ بِعَبرَةِ ضاحِكٍ

ஆனந்தக்கண்ணீருடன் திகிலூட்டம் புடைசூழ உன் அடக்கம் நடந்தேறியது

في كُلِّ ناحِيَةٍ وَسَكرَةِ صاح

ஒவ்வொரு நிலப்பகுதியும் மரண வேதனையால் அலறியது

ضَجَّت عَلَيكِ مَآذِنٌ وَمَنابِرٌ

மிம்பர்களும் மினாராக்களும் உனக்காக ஓலமிட்டன

وَبَكَت عَلَيكَ مَمالِكٌ وَنَواحِ

பேரரசுகளும் மாகாணங்களும் உனக்காக அழுதன

الهِندُ والِهَةٌ وَمِصرُ حَزينَةٌ

இந்தியா துக்கத்தால் தடுமாறியது; எகிப்து கவலையுற்றது

تَبكي عَلَيكِ بِمَدمَعٍ سَحّاحِ

இவை உனக்காக கண்ணீர் பெருக்கெடுக்க அழுதன

وَالشامُ تَسأَلُ وَالعِراقُ وَفارِسٌ

ஷாம்,ஈராக் மற்றும் பாரசீகம் வினவின

أَمَحا مِنَ الأَرضِ الخِلافَةَ ماحِ

உங்களுடைய நிலத்திலிருந்து கிலாஃபத்தை யாராவது துடைத்தெறிந்து விட்டார்களா?

وَأَتَت لَكَ الجُمَعُ الجَلائِلُ مَأتَماً

மேன்மை பொருந்திய நன்மக்கள் உன்னுடைய அடக்கத்தில் பங்கெடுத்தனர்

فَقَعَدنَ فيهِ مَقاعِدَ الأَنواحِ

அவர்கள் ஒப்பாரி வைக்குமிடத்தில் அமர்ந்தார்கள்

يا لَلرِجالِ لَحُرَّةٍ مَوؤودَةٍ

ஓ ! மனிதா ! உயிருடன் புதைக்கப்பட்ட கண்ணியமிக்கவளை கவனி !

قُتِلَت بِغَيرِ جَريرَةٍ وَجُناحِ

இவள் எந்த குற்றமோ பாவமோ செய்யாமல் கொல்லப்பட்டிருக்கிறாள்

(“امير الشعراء – கவிஞர்களின் அமீர்” என்று போற்றப்படும் எகிப்திய கவி அஹ்மது ஷவ்கி அவர்கள் முஸ்லிம் உம்மத்தின் ஒரே தலைமையான கிலாஃபா வீழ்த்தப்பட்டபோது மனம் வருந்தி பாடிய அரபுக் கவிதைகளிருந்து சில வரிகள்)

உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் இஸ்தான்புல் நகரில் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார். முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாஸானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை கீழ்க்கண்டவாறு உமிழ்ந்தார்.

“The situation now is that Turkey is dead and will never rise again because we have destroyed its moral strength, the Khilafah and Islam.”

“துருக்கி இப்பொழுது வீழ்ந்துவிட்டது.. அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்ட சக்தியான கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் நாம் வீழ்த்திவிட்டோம்.”

நபி صلى الله عليه وسلمஅவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உஸ்மானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3 ) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை, கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது.

கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் தகர்க்கும் முதல் முயற்சியாக பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாவது சிலுவைப்போரை போப் இரண்டாம் உர்பன் துவக்கி வைத்தார்..எனினும் இவர்களின் இருநூறு ஆண்டுகால சிலுவை ஆக்கிரமிப்பை சலாஹுதீன் அய்யூபி(ரஹ்) அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.

கவுன்ட் ஹென்றி டெகாஸ்ட்ரி என்ற பிரஞ்சு எழுத்தாளர் 1896 ஆம் ஆண்டு எழுதிய “இஸ்லாம்” என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:-

“I cannot imagine what the Muslims would say if they heard the tales of the mediaeval ages and understood what the Christian orators used to say in their hymns; all our hymns even those which emerged before the 12th century emanated from one concept which was the cause of the crusades, these hymns were filled with hatred towards the Muslims due to the total ignorance of their religion. As a result of those hymns and songs, hatred against that religion became fixed in people’s minds, and the erroneous ideas deeply rooted, some of which are still carried nowadays. Everyone used to regard the Muslims as polytheists, disbelievers, idol worshippers and apostates.”

“மத்தியகால கற்பனை கதைகளைப்பற்றி கேள்விப்பட்டாலோ,அதைப்பற்றி கிறிஸ்தவ கதாசிரியர்களின் கடவுள் துதிபாடுதலில் கூறப்பட்டவற்றை கேள்விப் பட்டாலோ முஸ்லிம்கள் என்ன கூறுவார்கள் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. நமது அனைத்து துதிபாடுகளும் 12-ம் நூற்றாண்டிற்கு முன்னர் கிளம்பிய ஒரு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டவைகள். அதுவே சிலுவைப் போர் ஏற்பட காரணமாக அமைந்தது. இப்புகழ் பாட்டுக்கள் அனைத்தும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உள்ளடக்கியதாக இருந்தது. இது முஸ்லிம்களின் மதத்தை பற்றிய அவர்களின் அறியாமையால் ஏற்பட்டது. இவ்வகையான துதிபாட்டுகள், இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான வெறுப்பை கிறிஸ்தவ மக்களின் மனதில் நிரந்தரமாக்கியது.இதன் மூலம் ஆழ்ந்து வேரூன்றிய சில தவறான எண்ணங்கள் இன்றளவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரும் முஸ்லிம்களை பல் தெய்வ கொள்கை உடையவர்கள் எனவும் இறைமறுப்பாளர்கள் எனவும் சிலை வழிபாட்டாளர்கள் எனவும் கிரிஸ்தவ சமயத்திலிருந்து வெளியானவர்கள் எனவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்”.

முஸ்லிம்களுடன் நீண்டகாலம் போராடி தோல்வி கண்ட சிலுவை ஆக்கிரமிப்பாளர்கள், ஆயதப்போராட்டத்தால் முஸ்லிம்ளை ஒருபோதும் வீழ்த்தமுடியாது என்பதை விளங்கிக் கொண்டார்கள். எனவே முஸ்லிம்களை சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என்பதை உணர்ந்து அதற்கான சதித் திட்டங்களைத் தீட்டினார்கள். எனவே இதற்காக 16 ஆம் நூற்றாண்டின் முடிவில் மால்டாவில் ஒரு மையத்தை கிறிஸ்தவ மிஸனரியினர் நிறுவினார்கள்.மால்டாவை தலைமையிடமாக்க் கொண்டு முஸ்லிம்களின் உள்ளத்தில் மேற்கத்திய நச்சு சிந்தனைகளை பிரிட்டிஷ்-பிரஞ்சு-அமெரிக்க மிஸனரியினர் விதைக்கலாயினர்.இந்த காலகட்டத்தில்தான் முஸ்லிம்களிடையே மேற்கத்திய சிந்தனைகள் ஊடுருவத் துவங்கியது.

இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தைத் தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள். இதற்காக பெய்ரூட் மையம் துவக்கப்பட்டது.கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஸனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதின் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர்.அவர்கள் சமூகத்தில் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளைக் கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றிபெற முடியும் என்பதால், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும், துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.இதற்காக துருக்கிய இளைஞர் சங்கம் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.கிலாஃபத்தை அழித்த முஸ்தஃபா கமால் பாஷா இதில் உறுப்பினராக இருந்தான்.

எனவேதான் முஸ்தபா கமால் இவ்வாறு கூறினான்:-

“Was it not because of the Khilafah, Islam and the clergy that the Turkish peasants fought and died for five centuries? It is high time Turkey looked after her own interests and ignored the Indians and the Arabs. Turkey should rid itself of leading the Muslims.”

“துருக்கி குடியானவர்கள் கடந்த ஐந்து நூற்றாண்டு காலமாக கிலாஃபா, இஸ்லாம் மற்றும் திருச்சபைக்காக சண்டையிட்டு உயிர் நீத்துள்ளார்கள். இனி துருக்கி தன்னுடைய நலன்களை மட்டுமே கவனித்துக் கொண்டு இந்தியர்கள் மற்றும் அரபியர்களை புறக்கணிக்க வேண்டும். மேலும் முஸ்லிம்ளை தலைமை தாங்குவதிலிருந்து துருக்கி தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும்”

ஒரே அமீரின் கீழிருந்த கிலாஃபத்தின் நிலப்பரப்பை பல நாடுகளாக கூறுபோட்டு தங்களின் ஏஜண்டுகளை ஆட்சியில் அமர்த்துவதற்காக 1916 ஆம் ஆண்டு பிரிட்டனும் ஃபிரான்ஸும் ஒன்றிணைந்து Sykes-Picot agreement என்று அறியப்படும் ரகசிய ஒப்பந்த்ததை ஏற்படுத்தினர். ஃபிரான்ஸ் தூதர் Georges-Picot மற்றும் பிரிட்டிஷ் அரசியல் ஆலோசகர் Mark Sykes மத்தியில் இந்த சதித்திட்டத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்கிழக்கு துருக்கிய பகுதி, ஈராக்கின் வட பகுதி,சிரியா,லெபனான் போன்ற நிலப்பரப்புகளை ஃபிரான்ஸ் எடுத்துக் கொள்வது எனவும்,ஜோர்டான்,ஈராக்,ஹைஃபா போன்ற பகுதிகளை பிரிட்டன் எடுத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.இன்றைய மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைக்கோடுகள் Sykes-Picot ஒப்பந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன.

கிலாஃபத்தை வீழ்த்துவதற்கு பிரிட்டன், ஃபிரான்ஸ்,ரஷ்யா போன்ற நாடுகள் திட்டம் தீட்டினர்.இதில் முஸ்தஃபா கமாலை முன்னிறுத்தி பிரிட்டன் சதிவலையை பின்னியிருந்தது.இதன் விளைவாகவே முஸ்தஃபா கமால் பாஷா உஸ்மானிய கிலாஃபத்தின் அதிகாரத்தில் நுழைய முடிந்தது.துருக்கியின் விடுதலைக் குறித்து விவாதிக்க 1922 ஆம் ஆண்டு லாஸான் மாநாட்டை பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் கர்ஸன் பிரபு கூட்டினார்.கிலாஃபத்திலிருந்து துருக்கியை விடுவிக்க கீழ்க்கண்ட நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.

1.கிலாஃபத்தின் ஒட்டுமொத்த மறைவு

2. கிலாஃபத்தின் எல்லையிலிருந்து கலீஃபாவை வெளியே துரத்துதல்

3.கிலாஃபத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்

4. துருக்கியை மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்தல்


இந்த நான்கு நிபந்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் மாநாடு வெற்றியாக கருதப்பட்டது.எனினும் துருக்கியில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் கிலாஃபத்தை தங்களின் இதயத்தில் வைத்து போற்றியதால் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த முஸ்லிகளின் தலைமையை ஒரேயடியாக வீழ்த்த முடியவில்லை.இதனால் லாஸான் மாநாட்டு தீர்மானங்கள் தோல்வியை தழுவியது.ஆயினும் பிரிட்டன் தன்னுடைய தந்திர முயற்சியை விட்டுவிடவில்லை. எனவே தங்களின் கங்காணி முஸ்தஃபா கமாலை முழு பலத்தையும் பிரயோகித்து கிலாஃபத்தை வீழ்த்துமாறு கூறினர்.இறுதியாக கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் முழு பலத்தை வைத்து அச்சுறுத்தி கிலாஃபத்தை அகற்றுவதற்கான மசோதாவைக் கொண்டுவந்து கிலாஃபத்தை அழித்தான்.

முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற பிரிட்டனின் கங்காணி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட்தும் முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாமிய பூமி பல தேசங்களாக பிளவுபடுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்ஃபார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர். மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர். அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கிவருகின்றனர்

கிலாஃபத்தை அழித்தபின்னர் காலனியாதிக்க காஃபிர்கள் ஓய்ந்துவிடவில்ல. அந்த கிலாஃபா மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான் கர்ஸன் பிரபு இவ்வாறு கூறினார்:-

“We must put an end to anything which brings about any Islamic unity between the sons of the Muslims. As we have already succeeded in finishing off the Caliphate, so we must ensure that there will never arise again unity for the Muslims, whether it be intellectual or cultural unity”

“முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

எனவேதான் கிலாஃபத்தின் மீள்வருகை குறித்து அச்சமும் கவலையும் கொண்டிருந்த அமெரிக்க அதிபராயிருந்த புஷ் இவ்வாறு கூறினார்:-

“…establish a violent political utopia across the Middle East, which they call Khilafah, where all would be ruled according to their hateful ideology… This Khilafah would be a totalitarian Islamic empire encompassing all current and former Muslim lands, stretching from Europe to North Africa, the Middle East and Southeast Asia”. …………Washington Post

“ மத்திய கிழக்கில் கிலாஃபத்திற்காக அழைப்பு விடுப்பவர்கள் வெறுப்புமிக்க சித்தாந்தத்தின்(இஸ்லாம்) அடிப்படையில் ஆட்சி செய்ய முயல்வதாகவும், அந்த கிலாஃபா என்பது தற்போதைய மற்றும் முந்தைய இஸ்லாமிய நிலங்களை உள்ளடக்கிய …பரந்து விரிந்த ஐரோப்பாவிலிருந்து வடஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலான பகுதிகளை உள்ளடக்கிய முழுமையான இஸ்லாமிய அரசாகும்”.


ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் சமீபத்தில் இரண்டாவது ஜெனீவா மாநாடு முடிவுற்றதும் NTV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“It is important that the political process is accompanied by combining the healthy forces, who are thinking about their homeland, and not about the establishment of the Khilafah in the Middle East and North Africa. To unite them and help them in many different ways to combat a terrorist threat. This is a goal for the whole region and for the world”.

“சிரியாவின் அரசியல் நிகழ்வானது தன் தாய்நாட்டின் சிந்தனை கொண்ட ஆரோக்கியமான சக்திகளுக்கிடையே ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டுமே தவிர, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் கிலாஃபத்தினை மீண்டும் நிறுவுவதற்காக அமையக்கூடாது. தாய்நாட்டின் சிந்தனை கொண்ட சக்திகளை ஒருங்கிணைத்து பல வழிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். இதுவே அனைத்து பிராந்தியத்திற்கும் அனைத்து உலகிற்குமான குறிக்கோளாகும்.


மேற்குலகினர் மீண்டும் கிலாஃபா ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான தடைக்கற்களை ஏற்படுத்தியுள்ளனர்.

*தேசியவாதம்,தேசப்பற்று,சோஷலிஸம்,மதச்சார்பின்மை போன்ற சிந்தனைகளை முஸ்லிம்களின் உள்ளத்தில் திணித்துவிட்டனர்.இதற்கான அரசியல் குழுக்களையும் தன்னார்வ நிறுவனங்களையும் முஸ்லிம் உலகில் ஏற்படுத்தியுள்ளனர்.

*இஸ்லாத்திற்கு முரணான பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை இதற்காகவே வடிவமைத்தனர்.இது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

*முஸ்லிம் உலகின் பொருளாதாரத்தை மேற்கத்திய காலனியாதிக்க அரசுகளும், அந்நாட்டின் தனியார் நிறுவனங்களும் தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.இதனால் முஸ்லிம் உம்மா தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

*முஸ்லிம் நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனைகளை ஊக்குவித்து அதில் மேற்குலகம் குளிர் காய்ந்து வருகிறது.

அரபு லீக்,இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC - Organisation of Islamic countries) போன்ற அமைப்புகளை மேற்குலகினர் தோற்றுவித்து முஸ்லிம்களின் பிரச்சனைகளை இதன் மூலமாகவே தீர்த்துவைக்க முடியும் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

*முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்கத்தியர்களின் ஏஜண்டுகளாக இருப்பதால் இஸ்லாத்தை முற்றாக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ ஆட்சியமைப்பை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். மேலும் இஸ்லாத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநாட்ட பாடுபட்டுவரும் முஸ்லிம்களை தங்களின் மேற்கத்திய எஜமானர்களின் முழு ஆசீர்வாதத்துடன் ஒடுக்கி வருகின்றனர்.

எனினும் இவர்களின் சதிவலைகளையெல்லாம் அறுத்தெறிந்து உலகளாவிய முஸ்லிம்கள் முன்னேறி வருகின்றனர்.எனவே இந்த மாபெரும் பணியில் பங்கெடுக்காத சகோதர சகோதரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் கிலாஃபத்தின் மீள்வருகைக்காக பாடுபடுபவர்களுடன் இணைந்து தோள் கொடுப்போம்.

May 17, 2014

சத்தியம் எது? அசத்தியம் என்பது என்ன?

உண்மையான,என்றும் மாறாத,நிலையான,சரியான விழுமங்களுக்கு பெயர் தான் சத்தியம். உலக மக்கள் ஏற்றுக் கொள்வதால் யாதொன்றும் சத்தியம் ஆவதில்லை.”சுயமாக” இருப்பது தான் சத்தியம். இதனை தெளிவாக நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.

ஒட்டு மொத்த மக்களும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் முற்றாக ஒதுக்கி தள்ளினாலும் சத்தியம் அசத்தியம் ஆகி விடாது. அப்போதும் அது சத்தியமாகதான் இருக்கும். உலக மக்கள் ஏற்று கொண்டால் தான் சத்தியமாக நீடிக்கும் என்கிற கட்டாயத்திற்கு அப்பாற்பட்டது தான் சத்தியம்.

உலகம் சத்தியத்தை ஏற்கின்றதா இல்லையா என்பது ஒரு பொருட்டே கிடையாது. உலகம் ஏற்று கொள்ள மறுப்பதால் சத்தியம் தோற்று போவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி அசத்தியத்தை ஏற்றுக் கொண்ட உலகம் தான் தோற்று போனது.

துன்பங்களும் துயரங்களும் சத்தியத்திற்கு வருவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மீது தான் அவை மழையாய் பொழியும். நன்கு ஆராய்ந்து எல்லாக் கோணங்களிலும் சீர்தூக்கிப் பார்த்து முழுமையான மனதிருப்தியுடன் சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள், சத்தியமே மேலோங்க வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் ஓயாமல் ஒழியாமல் உழைப்பவர்கள்,சத்தியமே மேலோங்க வேண்டும் என்பதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் மீது துன்பங்களும் துயரங்களும் புயலாய் வீசலாம். ஆனால் அவர்களை தோற்றுப் போனவர்களாகச் சொல்ல முடியாது.

இறைத்தூதர்களில் சிலர் வாழ்நாள் முழுவதையும் சத்திய அழைப்பில் செலவிட்ட பிறகும் அவர்களை பின்பற்றி நடக்க எவருமே முன் வரவில்லை என்கிற வரலாற்று குறிப்பை நபிமொழிகளில் வாசிக்க முடிகின்றது. அப்படியானால் அந்த இறைதூதர்களை தோற்றுப் போனவர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக கிடையாது. அவர்களை ஏற்று கொள்ள மறுத்த அசத்தியவாதிகளைத் தங்களின் தலைவர்களாக ஏற்று கொண்ட சமூகத்தினர் தான் தோற்றுப் போனவர்கள்...!

நம்முடைய கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமக்கு முன் இருக்கின்ற பணி ஒன்றே ஒன்றுதான். இருள்களை விரட்டியடிக்க வழி விளக்குகளை ஏற்றுவது தான்...! சாகின்ற வரை இதனை செய்து கொண்டிருப்போம்...!

வழிகெட்டுப் போனவர்கள்,வழிகெடுப்பவர்களின் பட்டியலில் நம்முடைய பெயர் இடம் பெற்று விடக்கூடாது என்பது தான் நமக்கு இருக்கின்ற ஒற்றை கவலை...! இதற்காக இறைவனிடம் பாதுகாவலைத் தேடிக் கொண்டே இருப்போம்...!

அசத்திய இருட்டை விரட்டியடிக்கின்ற மிக பெரும் பணியில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்தியிருக்கின்றான். இந்த மாபெரும் பணிக்காக அல்லாஹ் நம்மை தேர்ந்தெடுத்திருக்கின்றான். இவ்வாறு நம் மீது மிகப்பெரும் அருளை பொழிந்திருக்கின்றான்.

அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்கு ஓரே வழிதான் இருக்கின்றது. இருளை விரட்டி அடிக்க விளக்குகளை ஏற்றிக் கொண்டே போவது...! அதே பணியில் உயிரைத் துறப்பது...!

இன்ஷா அல்லாஹ்....

இறுதி மூச்சு வரை இதே பணி தான்


மெளலானா மெளதூதி (ரஹ்) நன்றி : சமரசம்


நன்றி http://islamiyakolgai.blogspot.in/

இஸ்லாமிய உம்மத் தற்போது சிந்திக்க வேண்டிய தருணமிது ....

இஸ்லாமிய உம்மத்களின் (இந்திய முஸ்லிம்களின்) சக்தி,உணர்ச்சி ,உணர்வு ,உழைப்பு எல்லாம் பாராளுமன்ற ஜனநாயக குப்ர் ஆட்சியமைப்பு தேர்தலில் வீண் விரயமாய் போனது....
இஸ்லாமிய சமுதாயம் முன்னுக்கு வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு ஒவ்வரு இஸ்லாமிய இயக்கங்களும் ,கட்சிகளும், அமைப்புகளும் , தத்தமது சிந்தனையின் பால் ஆளுக்கொரு வழிமுறையை கொண்டு முழுவதுமாக தோல்வியை தழுவியது ...ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்ற கோசத்தை வைத்து சமாதானம் அடைய வேண்டாம் ...காரணம் முஸ்லிம்களின் பிரதிநிகளாக தங்களை காட்டிகொண்ட அத்தனை இயக்கங்களும் ஒரே அணியில் இருந்தும் பலனில்லை.
இது எதை காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும் ....
இஸ்லாமிய உம்மத் எதை நோக்கி பயணிக்க வேண்டுமோ அதை விட்டு விட்டு வேறொரு சிந்தனையின் பால் வழி தவறிப்போய் என்னசெய்வதேண்டு தெரியாமல் சிக்கி தவிக்கிறது ...
இஸ்லாமிய உம்மத் தற்போது சிந்திக்க வேண்டிய தருணமிது ....
1. இஸ்லாத்தை மேலோங்க செய்ய அதனது அகீதாவை வாழ்க்கை திட்டமாக எடுத்து செயல்பட நபி ஸல் சுன்னாவின் பிரகாரம் தனது சிந்தனையில் துல்லியமும் தெளிவும் வேண்டும்.
2. தங்களது சிந்தனையில் எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற சரியான வழிமுறை அறிய வேண்டும்.
3. சிந்தனை எந்த ஒரு தனிநபரையும் சார்ந்து இருக்க கூடாது .
4. இஸ்லாமிய வாழ்க்கை திட்டத்தை அமுல்படுத்த நினைக்கும் ஒவ்வருவரிடமும் சரியான பிணைப்பு இருக்க வேண்டும்....
இப்படி சரியான திட்டமிடுதல் ஒரு அமைப்பிடம் இருக்குமெனில் இஸ்லாம் மறுமலர்ச்சி அடையும் அல்லாஹ்வின் உதவியோடு.....
மிக சமீபத்தில் ....

வேர்களை தேடும் விழுது



வேர்களை தேடும் விழுது
மங்காப் பொன் மாநபியின் சமூகத்திற்கு
எனை அழைத்து செல்லுங்கள்
கொஞ்சம் உலகாயத மோகம் கலைந்து...
இதமாய் இதயத்தை வருடி விட
அந்த மாநபியின் சமூகத்துக்கு
எனை இட்டுச் செல்லுங்கள்.
 
எங்கே
எமது நபியின் குயில் பிலால்
பிலாலே !
உங்கள் சுருதி மாறா குரலெடுத்து
எனக்காக ஒரு முறை
அதான் சொல்லுங்களேன்.
 
காது இனிக்க இனிக்க
இப்னு மஸீதின்
கிராத் கேட்க வேண்டுமே
 
அஸ்ஸலாமு அலைக்கும்
ஹாரிதா இப்னு நுஃமான்
எங்கே உங்களது தாய் -
பெற்றவருக்கு பணிவிடை செய்து
சொர்க்கத்தில் குரான் ஓதும்
பாக்கியம் பெற்றவரல்லவா நீங்கள்
 
அபூ ஹீரைரா !
உங்களிடம் எனக்காக
புத்தம் புது ஹதீஸ்
ஒன்று இருக்கிறதா
 
அபுபக்கரே !
உங்கள் ஈமானின் ஒரு துளியை
தூவுங்களேன்
 
உமரே !
பகுத்தறிவின் ஆழத்தின்
நுணுக்கம் தெரிந்த அறிவு ஜீவியே !
எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு திறமை
ஆச்சரியம் எனக்கில்லை
நீங்களெல்லாம்
முஹம்மது எனும் சுடரில்
பாடம் பயின்ற மேதைகள் அல்லவா
 
ஓ முஸைப் இப்னு உமைரா
எங்கே உங்களது எமன் தேசத்து
காலணி பட்டில் நெய்த சீமை சட்டை
சுகந்தம் வீசும் அத்தர் மணம்
ஈமானின் சுகம் கண்டு
இத்தனை செளகரியமும்
துறந்ததாய் சொன்னார்கள்
இத்தியாகத்தின் பாசறையில்
என்னையும் சேருங்களேன்
எனது ஈமான் தளும்பும் போதுகளில்
எங்கே ஹன்ழரா ?
 
உங்கள் கவலையில் எனக்கும்
இடம் உண்டா ?
 
முதல் இரவில் வியர்வை காயுமுன்னே
விடியலின் வெள்ளி மறையும் முன்னே
போர்களத்தில் குருதி சிந்திய
ஷாஹிதே ஹன்ழராவே
உங்கள் இளம் மனைவிக்கும்
 
அல்லாஹ் அருள் சொறியட்டும்
உஹது மலையே ! உஹது மலையே !
ஹம்ஸா அம்பு பட்டு சாய்ந்த போது
உன்னால் அசையாமல் இருக்க முடிந்ததா?
 
எனது அன்னை ஆயிஷாவை
கண் நிறைய காண வேண்டும்
சொர்க்கம் சொந்தமாகியும்
அழுது அழுது குரான் ஓதும்
 
என் அன்பு தாயே
பதினெட்டு தாண்டு முன்
துணை இழந்த இளமையே
உங்கள் ஈமானின் பலம் புதிரில்லை
எமக்கு புதிதுமில்லை
அபுபக்கரின் மகளல்லவா நீங்கள்..
 
எனது உம்மா கதீஜாவிடம்
என்னை இட்டு செல்லுங்கள்
எங்கள் நபிக்கு தோள் கொடுத்து
அல்லாஹ்வின் சலாம் ஏற்று
பாத்திமாவெனும் மாணிக்கத்தை
கருவில் சுமந்த
அந்த தூய ஆத்மா
என் உயிர் தாயின் மடியில்
ஒரு கணம் சாய வேண்டும்
அள்ளி கொடுக்க கை நீளும்
 
அன்னை ஜைனப் எங்கே ?
தாயே எனக்கும் பசிக்கிறது
அன்ன கரண்டி எடுத்து
நரகம் தீண்டாத அந்த விரல்களால்
கொஞ்சம் ஊட்டி விடுங்கள்ளேன்
 
ஸ அத் இப்னு முஆத் உடைய
மரண ஊர்வலத்தில்
எனக்கும் கலந்து கொள்ள
இடம் இருக்குமா
மலாயிக்காமார்களுடன் நடந்து செல்லும்
பாக்கியமேனும் கிட்டுமே
 
என் உயிர் நபியே ! யா ரசூலே !
உங்கள் சமூகத்தின்
இதமான வாழ்க்கைக்குள்
நானும் வருகிறேனே
கொஞ்சம் உறங்கி, நிறைய விழித்து
அழுது தொழுது
ஏழையாய், ஆனந்தமாய் வாழ
என் உயிர் மேலும் ஆளுமை
கொண்ட நபியே ! யா ரசூலே !
 
உங்கள் பாசறையில்
என்னையும்
அணைத்துக் கொள்ளுங்களேன்.
நீங்கள் கருணையின் ஊற்று
எனக்காக உங்கள் இரக்கத்தில் இன்ஷா அல்லாஹ் இடம் இருக்கும்...


நன்றி !...

May 9, 2014

King of Brunei Betrays Islam


News:
Last week Hassanal Bolkiah, the Sultan of Brunei unveiled plans to implement sharia law. He said, "With faith and gratitude to Allah the Almighty, I declare that tomorrow, Thursday 1 May 2014, will see the enforcement of sharia law phase one, to be followed by the other phases."
The plan was immediately denounced by the West and recently famous western personalities have started boycott properties in the West owned by the absolute monarch.
Comment:
Media reports clarified that Sharia law would only be limited to penal matters and that it would be implemented in three stages. The first stage includes: fines or jail terms for offences ranging from indecent behaviour to failure to attend Friday prayers. The second stage will include: Islamic punishments for theft and robbery, while the last stage will cover Islamic punishments for homosexuality and adultery. The edict also stated that the law would be applied to both Muslims and non-Muslims.
There are three main problems with this announcement. First and foremost, is that Islamic sharia cannot be restricted to mere penal codes. Islam is a complete way of life and the Islamic sharia is responsible for governing all aspects of life, which are more than just criminal matters i.e. it also encompasses social, economic, political, foreign affairs etc. To compartmentalise or secularise Islam is strictly forbidden. Allah سبحانه وتعالى mentions in the Quran:
وَمَن لَّمْ يَحْكُم بِمَا أنزَلَ اللّهُ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ
"Those who do not judge by what Allah has sent down, such people are Zalimoun (wrongdoers)."
(Al Maidah: 45)
وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللّهُ فَأُوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ
"Those who do not judge by what Allah has sent down, such people are Fasiqoon (deviators)."
(Al Maidah: 47)
Incidentally, the Sultan of Brunei quoted these very same verses in the speech announcing the implementation of such punishments. Yet, he remained oblivious to the fact that these same verses also apply to rule by Islam in all aspects of life, and that includes the right of the Ummah to select their ruler and not someone who was imposed upon them by the British.
Second, Islam cannot be implemented in a piecemeal fashion, where the implementation of some rules is delayed. Picking and choosing between the implementation of Islamic rules is a grave sin. Allah سبحانه وتعالى says
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاء مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُمْ إِلاَّ خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
"Do you, then, believe in one part of the Book and reject the other? What repayment will there be for any of you who do that except disgrace in this world? And on the Day of Rising, they will be returned to the harshest of punishments. Allah is not unaware of what you do."
(Al Baqara: 85)
Again, Hassanal Bolkiah quoted this verse, but did not choose to ponder on its meaning, as it fully applies on him.
Third, the secularisation of Islam and its gradual implementation will never bring dignity or honour to the Ummah, nor will it grant her peace and security. The only reason Hassanal Bolkiah and other rulers persist with the gradual implementation of Islam is because it allows them to mollify the sentiment of Muslims and maintain the status quo, which is to guard the riches of the Muslim lands for the Kafir colonialist powers.
Besides this, the piecemeal implementation of Islam will never yield the full realisation of Islamic sharia in Muslim lands as it is commonly understood by some. The Muslim Brotherhood in Egypt and the Taliban in Afghanistan have found this out to their own cost.
All of this gives relentless ammunition to the enemies of the Ummah to point fingers at Islam's inability to solve problems, which again is major exaggeration of reality. When the messenger of Allah صلى الله عليه وسلم established the first Islamic state in Madina nations embraced Islam, as they witnessed first-hand the complete implementation of Islam working in practice. This was followed by the Khulafah after him صلى الله عليه وسلم.
Hence, Muslims must redouble their efforts to re-establish the Khilafah Rashida, as the only means to fully realise the complete implementation of Islam, and also to silence the Kafir colonialist. For surely, when the Khilafah returns, the oppressed people in the West will leave in droves to embrace Islam causing their rulers immense distress and anguish.
Written for The Central Media Office of Hizb ut Tahrir by
Abu Hashem

Khilafah.com

May 7, 2014

வரலாற்றின் ஒளியில் இஸ்லாமிய நாட்காட்டி

முஸ்லிம்களின்  வணக்க வழிபாடுகளான நோன்பு, ஹஜ் போன்றவற்றை தீர்மானிப்பதற்கு இஸ்லாம் பிறையை அளவுகோலாக்கியுள்ளது. அதேபோன்று  பிறையை மையமாக வைத்து முடிவுசெய்யப்படும்  சந்திர நாட்காட்டி மூலமாக ஸகாத் கணக்கீடு,இத்தா,போர் விலக்கப்பட்ட மாதங்கள் போன்றவற்றை தீர்மானிக்கவேண்டும் என்பதையும் இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்:“அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன.  (அல் பகரா:189)
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய (பதிவுப்)புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அத்தவ்பா:36)
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلَّا بِالْحَقِّ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசம், சந்திரனை ஒளிவுள்மாகவுளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(சந்திரனாகிய) அதற்கு மாறிமாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை.அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.    (யூனூஸ்:5)
முஸ்லிம்களின் நாட்காட்டி சந்திரனை அடிப்படையாகக்கொண்டே அமையவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. மேற்கண்ட வசனத்தில் சந்திரனை மனிதர்களுக்கான நாட்காட்டி என்பதாக அல்லாஹ் سبحانه وتعالىகூறுகிறான்.இன்று உலகை ஆதிக்கம் செலுத்தும் கிரிகோரியன் நாட்காட்டி(Gregorian calendar – Solar calendar) துல்லியமற்றதாகும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. கடந்த காலங்களில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதிலி­ருந்து இதன் தரத்தை விளங்கிக் கொள்ளலாம்.தகவல் தொடர்பிற்காக முஸ்லிம்கள் இந்த நாட்காட்டியை பயன்படுத்துவது தவறில்லை என்றாலும் பிறையை அடிப்படையாகக்கொண்ட துல்லியமான சந்திர நாட்காட்டியின்(Lunar calendar) முக்கியத்துவத்தை முஸ்லிம்கள் அறியாமல் இருப்பது வருந்தத்தக்க விசயமாகும்.  மேற்கத்திய நாகரீகத்தின் மயக்கத்தின் காரணமாக முஸ்லிம் உலகு இஸ்லாமிய நாட்காட்டிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. சில முஸ்லிம் நாடுகள் சந்திர நாட்காட்டியை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும்,அவர்கள் வடிவமைத்துள்ள நாட்காட்டிகள் தேசியவாத எல்லைக்கோட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பிராந்திய நாட்காட்டிகளாகும்.எனவே இவர்களின் ஹிஜ்ரா நாட்காட்டியில் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் மத்தியிலான தேதியிலும் மாறுபாடு உள்ளது.மனித சமுதாயம் பின்பற்றமுடியாத இத்தகைய நாட்காட்டிகளால் கிரிகோரியன் நாட்காட்டியை போற்ற வேண்டிய நிலைக்கு இந்த உம்மத்தை இவர்கள் ஆளாக்கியுள்ளனர்.
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த மாபெரும் நிகழ்வான ஹிஜ்ரத்தை மையமாகக் கொண்டு  உருவாக்கப்பட்ட ஹிஜ்ரா நாட்காட்டியை  உமர்(ரலி) அவர்கள் இந்த உம்மத்திற்கு நற்கொடையாக  வழங்கினார்கள். இதன் காரணமாக இந்த உம்மத்தின் வரலாறு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டதோடு, சீரான ஒரே சமுதாயமாக இந்த உம்மா சுடர்விட்டு பிரகாசிக்கவும் வழிவகுத்தது.
ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் சந்திரனை மையமாக் கொண்டு மாதங்களை கணக்கிட்டு வந்தனர்.ஆனால் ஆண்டுகளின் கணக்கை,முன்பு  மக்காவில் நடைமுறையில் இருந்துவந்த யானையாண்டு மூலமாக குறிப்பிட்டு வந்தார்கள்.கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில் எழுந்த சில சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கு நாட்காட்டியை உருவாக்கவேண்டிய அவசியமான சூழல் ஏற்பட்டது. ஒரு மனிதர் இன்னொருவருவரிடம்   ஷவ்வால் மாதத்தில்  திரும்ப  அளிப்பதாக கூறி கடன் வாங்கியிருந்தார். கடன் வாங்கியவர் அதை நிறைவேற்றாததால்,உமர்(ரலி) அவர்களிடம் இதுபற்றி முறையிடப்பட்டது. எந்த ஆண்டின் ஷவ்வால் மாதத்தில் கடனை திரும்ப அளிப்பதாக வாக்குறுதி கூறினீர்கள் என்பதாக உமர்(ரலி)அவர்கள் வினவியபோதுதான் இந்த பிரச்சனையின் ஆழம் உணரப்பட்டு இஸ்லாமிய நாட்காட்டி ஒன்றை உருவாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் இஸ்லாமிய அரசான கிலா ஃபத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த  பாக்தாத் மாகாணத்திற்கு ஆளுநராக அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களை கலீபா உமர்(ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி)அவர்கள், உமர்(ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்.அதில் உங்களிடமிருந்து வரும் கடிதங்களில் தேதிகள் இல்லாதாதால் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக முறையிட்டிருந்தார்கள். எனவே  உமர்(ரலி)அவர்கள் இஸ்லாமிய நாட்காட்டியை உருவாக்குவது தொடர்பாக ஸஹாபாக்களை கலந்தாலோசித்தார்கள்.அப்போது ஸஹாபாக்களால் கூறப்பட்ட நான்கு ஆலோசனைகளும், நபி صلى الله عليه وسلم அவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததன.
فَلَمَّا جَمَعَ عَلَى ذَلِكَ قَالَ قَوْمٌ أَرِّخُوا لِلْمَوْلِدِ وَقَالَ قَائِلٌ لِلْمَبْعَثِ وَقَالَ قَائِلٌ مِنْ حِينِ خَرَجَ مُهَاجِرًا وَقَالَ قَائِلٌ مِنْ حِينِ تُوُفِّيَ
1) நபி صلى الله عليه وسلمஅவர்கள் பிறந்த ஆண்டு 2) இவ்வுலகைவிட்டு பிரிந்த ஆண்டு 3) நபியாக தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 4)ஹிஜ்ரா மேற்கொண்ட ஆண்டு (ஃபத்ஹுல் பாரி)..அலி(ரலி) அவர்கள் தெரிவித்த ஆலோசனையின்படி  ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளின் கணக்கை துவங்குவது என்று இறுதியாக முடிவு செய்யப்பட்டது.
جَمَعَ عُمَرُ النَّاسَ فَسَأَلَهُمْ مِنْ أَيِّ يَوْمٍ يُكْتَبُ التَّارِيخُ؟ فَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: «مِنْ يَوْمِ هَاجَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَرَكَ أَرْضَ الشِّرْكِ» فَفَعَلَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ
உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து ‘வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு ஹிஜ்ரா  சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள்.  (ஸயீத் பின் முஸய்யப் , ஹாகிம்)
مَا عَدُّوا مِنْ مَبْعَثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ مِنْ وَفَاتِهِ، مَا عَدُّوا إِلَّا مِنْ مَقْدَمِهِ المَدِينَةَ
மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி صلى الله عليه وسلمஅவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டதிலிருந்தோ அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு(ஹிஜ்ரா செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.    (ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), புகாரி)
முஸ்லிம்களின் நாட்காட்டி ஹிஜ்ரா நடந்தேறிய ஆண்டிலிருந்து துவங்கவேண்டுமென்று உமர்(ரலி) அவர்களால் முடிவு செய்யப்பட்டதிலிருந்து ஹிஜ்ரத்தின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.நபி صلى الله عليه وسلمஅவர்கள் மக்காவில் இஸ்லாத்தை நிலைநாட்ட உரிய  ஆதரவு கிடைக்காததால் அதைச்சுற்றி வாழ்ந்த பல்வேறு கோத்திரத்தார்களிடம் இஸ்லாத்தை எடுத்துரைத்து ஆதரவு கோரினார்கள்.இக்கடின முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்காமல் பெரும் இன்னல்களை சந்தித்தார்கள். மதீனாவிலிருந்த  வந்த அவ்ஸ்,கஸ்ரஜ் கோத்திரத்தார்களிடமிருந்து   இஸ்லாமிய அரசை நிறுவ நபி صلى الله عليه وسلمஅவர்களுக்கு உதவி  கிடைத்தது.எனவே நபிصلى الله عليه وسلمஅவர்கள் அதற்குரிய முன்னேற்பாடுகளுடன் ஹிஜ்ரா மேற்கொண்டு மதீனாவில்  இஸ்லாமிய அரசை  நிறுவினார்கள். எனவே இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட  இந்த ஆண்டிலிருந்து இஸ்லாமிய ஆண்டை துவங்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நபி صلى الله عليه وسلمஅவர்கள் ஹிஜ்ரா மேற்கொண்டு ரபீவுல் அவ்வலில் தான் மதீனா வந்தடைந்தார்கள்.  ஆனால் ரபீவுல் அவ்வல் மாதத்தை வருடப்பிறப்பின் முதல் மாதமாக வைத்திருக்க வேண்டும். அறியாமைக் கால மக்கள் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தை வைத்திருந்ததாலும், ஹஜ்ஜை முடித்துவிட்டு ஹாஜிகள் அப்போதுதான் திரும்புவார்கள் என்பதாலும் முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாக்கலாம்  என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறியதன் அடிப்படையில் உமர்(ரலி) அவர்கள், முஹர்ரம் மாதத்தை வருடத்தின் முதல் மாதமாகக்கொண்ட  ஹிஜ்ரா நாட்காட்டியை ஏற்படுத்தினார்கள்
ثُمَّ قَالَ بِأَيِّ شَهْرٍ نَبْدَأُ فَقَالَ قَوْمٌ مِنْ رَجَبٍ وَقَالَ قَائِلٌ مِنْ رَمَضَانَ فَقَالَ عُثْمَانُ أَرِّخُوا الْمُحَرَّمَ فَإِنَّهُ شَهْرٌ حَرَامٌ وَهُوَ أَوَّلُ السَّنَةِ وَمُنْصَرَفُ النَّاسِ مِنَ الْحَجِّ
எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்றபோது, சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். ”ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் (போர் தடை செய்யப்பட்ட மாதம்) என்பதாலும் மக்கள் ஹஜ் செய்து விட்டு திரும்பும் போது வரும் முதல் மாதம் என்பதாலும் முஹர்ரம்” என்று குறிப்பிட்டார்கள்.        (ஃபத்ஹுல் பாரி)
முஸ்தஃபா கமால் பாஷா என்ற கைக்கூலியைக்கொண்டு ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருந்த முஸ்லிம்களை மேற்கத்திய காஃபிர்கள் சிதறடித்தனர்.இதன் காரணமாக தேசியவாத அடிப்படையில் முஸ்லிம் நாடுகள் தோற்றம் பெற்றன. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலக முஸ்லிம்களின் ஒரேஅமீராக இருந்துவந்த கலீஃபாக்களால்  நடைமுறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய நாட்காட்டியை கிலாஃபத்தை வீழ்த்திய பிறகு (ஹிஜ்ரி 1342, ரஜப் 28) முஸ்தஃபா கமால் பாஷா முடக்கினான்.
தேசியவாத மயக்கத்தில் இந்த உம்மத்தை மூழ்கடித்த முஸ்லிம் ஆட்சியாளர்கள், இஸ்லாமிய நாட்காட்டியை பின்பற்ற இயலாத நாட்காட்டி என்ற அளவிற்கு உருமாற்றிவிட்டனர்.சில முஸ்லிம் நாடுகள் ஹிஜ்ரா நாட்காட்டியை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும்,அவர்கள் வடிவமைத்துள்ள நாட்காட்டி  தேசியவாத எல்லைக்கோட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மண்டல நாட்காட்டிகள் ஆகும்.சர்வதேச நாட்காட்டி என்ற நிலையிலிருந்து தரம் தாழ்த்திய இவர்களின் சந்திர நாட்காட்டியில் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் மத்தியிலான தேதியிலும் மாறுபாடு உள்ளது.மனித சமுதாயம் என்றுமே பின்பற்ற முடியாத இத்தகைய நாட்காட்டிகளால், இந்த முஸ்லிம் உம்மா ஒரே சமுதாயம் என்ற நிலையிலிருந்து கீழிறங்க வழிவகுத்துள்ளனர். இனி மீண்டும் வரவிருக்கின்ற முஸ்லிம்களின் ஒரே தலைமையான கிலாஃபா அரசால் மட்டுமே நம்முடைய முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹிஜ்ரா  நாட்காட்டிக்கு உயிரோட்டம் அளிக்க இயலும் என்பதில்  ஐயமில்லை.
Sources : http://sindhanai.org/

May 6, 2014

இஸ்லாம் சம்பூரணமான வாழ்க்கைத்திட்டம்!


“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.” (5:3)

இஸ்லாம் சம்பூரணமான வாழ்க்கைத்திட்டம். மனிதனது வாழ்வியல் விவகாரங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான அனைத்து உறவுகளையும் அது நிர்ணயம் செய்கிறது. அனைத்து வாழ்வியல் விவகாரங்களில் எழும் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை இஸ்லாம் வழங்குகிறது.

மேலும் படைப்பாளனான அல்லாஹ்வுடன் மனிதன் கொண்டுள்ள உறவு, மனிதன் தனக்குத் தான்னே கொண்டுள்ள உறவு, மனிதன் இதர மனிதர்களுடன் கொண்டுள்ள அனைத்து வகையான உறவுகளையும் அனைத்துக் காலங்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் வகையில் இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ளது.

இஸ்லாம் தனித்தன்மை கொண்ட தீர்க்கமான கருத்துக்களை கொண்டிருப்பதுடன் அவற்றில் இருந்து தனித்தன்மையான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

இக்கலாச்சாரம் வாழ்வியல் கண்ணோட்டம் குறித்து கோடிட்டுக் காட்டுவதுடன் அக்கலாச்சார வட்டத்தினுள் உறுதியாக நிலைப்படுத்துகிறது.

அத்துடன் தனித்துவம் கொண்ட சிந்தனைகளையும் ஹலால் ஹறாம் அடிப்படையிலான வாழ்வியல் கண்ணோட்டத்தையும் தனித்துவம் கொண்ட வாழ்க்கை முறையையும் இஸ்லாமிய ஷரீஆ உருவாக்கியுள்ளது.

இஸ்லாத்தின் செய்தி ஒரு முழுமையான செயலாக்க அமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஆட்சியமைப்பு, பொருளாதாரம், சமூகம், கல்வி, உள்நாட்டு விவகாரம், வெளிநாட்டு விவகாரம் தொடர்பான அரசின் கொள்கைகளையும் அரசிற்கும் சமூகத்திற்கும் மத்தியில் உள்ள உறவுகளையும், அரசிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் உள்ள உறவுகளையும், போர் மற்றும் அமைதி ஆகியவற்றில் ஏனைய அரசுகள் மற்றும் சமூகங்களுக்கு மத்தியிலும் உள்ள உறவுகளையும் நிர்ணயித்துள்ள ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

இவ்வாழ்க்கைச் சித்தாந்தத்தை அமுல்படுத்தும் இஸ்லாமிய அரசே கிலாபத்து அரசாகும்.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இஸ்லாம் பற்றிய அடிப்படையை “மாற்றீட்டுச் சித்தாந்தமாக”, “மாற்றீட்டு வாழ்க்கை முறையாக” பெரும்பான்மை குப்ர் சமூகத்திற்கு முன்வைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.

இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களது வாழ்கை முறைக்கெதிராகவும் முன்னெடுக்கப்படும் சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தள்ளப்பட்டுள்ளது என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் பொறுப்பு பற்றி சிந்தித்து செயற்படவேண்டும்.

இஸ்லாத்தை வெறுமனே ஒரு மதமாக பார்க்கும் சிந்தனைப்போக்கை மாற்றி அது வாழ்வில் எழும் அனைத்து விடயங்களுக்குமான தீர்வை வழங்கும் ஒரு “வாழ்க்கைச் சித்தாந்தமாக” விளங்கி தீனுல் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட உலக தலைமைத்துவம் மீள உலகில் உருவாகி மனித சமூகம் நேர்வழிப்பட, நிம்மதியடைய தமது தஃவாபற்றி பரந்து சிந்திக்க வேண்டும்.

“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.” (16:89)

“மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.” (59:7)

May 4, 2014

பன்றியின் மரபணுவை வெள்ளரி செடியில் செலுத்துவதற்கு அனுமதி உண்டா ?

 
செடிகளின் வளர்ச்சியையும் மகசூலையும் அதிகரிக்க,வெள்ளரி செடி அல்லது மற்ற செடிகளில் பன்றியின் மரபணுவை எடுத்து உபயோகிக்க அனுமதி கிடையாது.
பின்வரும் காரணங்களுக்காக பன்றி அசுத்தமானதாகவும், தடுக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
             தானாக செத்தது,இரத்தம்,பன்றியின் மாமிசம்,அல்லாஹ் அல்லாத வேறு பெயர்கள் கூறப்பட்டவைகளை அல்லாஹ் உங்களுக்கு தடை செய்துள்ளான்.ஆகவே எவரேனும் வரம்பு மீறாமலும் பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றை புசிக்க) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமாகாது.நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும் மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
                                                                                                                                              (அல் பகரா :173)
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ
தானாக செத்தது,இரத்தம்,பன்றி இறைச்சி,அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவை ஆகியவை உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளன.
                                                                                                                                                  (அல் மாயிதா:3)
  அபு தஃலபா அல் குஷனி அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:-
… وَأَنَا فِي أَرْضِ أَهْلِ الْكِتَابِ وَهُمْ يَأْكُلُونَ فِي آنِيَتِهِمْ الْخِنْزِيرَ وَيَشْرَبُونَ فِيهَا الْخَمْرَ فَآكُلُ فِيهَا وَأَشْرَبُ؟ قَالَ فَصَعَّدَ فِيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ….وَإِنْ وَجَدْتَ عَنْ آنِيَةِ الْكُفَّارِ غِنًى فَلَا تَأْكُلْ فِيهَا، وَإِنْ لَم تَجِدْ غِنًى فَارْحَضْهَا بِالْمَاءِ رَحْضًا شَدِيدًا ثُمَّ كُلْ فِيهَا…..
 ”நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மத்தியில் வாழ்கிறோம்; அவர்கள் தங்கள் பாத்திரத்தில் பன்றி இறைச்சியை சமைக்கின்றனர்; மேலும் மதுவை அவர்களின் பாத்திரத்தில் பருகுகின்றனர்.”அந்த பாத்திரங்களை பயன்படுத்தலாமா என்றபோது, நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்…நீங்கள் வேறு ஏதாவது பாத்திரங்களை கண்டால், அதிலிருந்து உண்டும் குடித்தும் கொள்ளுங்கள். அப்படி உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால், அவைகளை தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்து பின் (அதிலிருந்து) உண்ணவும் பருகவும் செய்யுங்கள்.”                   (தபரானி)
அஃதாவது ஒருவருக்கு பாத்திரம் தேவைப்பட்டு அதைத்தவிர அவருக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால், அதை நன்றாக கழுவிக்கொள்ளவும். இந்த பாத்திரங்களை சுத்தம் செய்ய கழுவுதல் அவசியமாக இருப்பதன் காரணத்தால், மது மற்றும் பன்றிகள் அசுத்தமானவையாகும். நபிصلى الله عليه وسلمஅவர்கள் அப்பாத்திரங்களை தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்யுமாறு கூறியது அதை தூய்மைப்படுத்துவதற்காகும்.இது பன்றி மற்றும் மது அசுத்தமானவை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُخَالِطُ الْمُشْرِكِينَ وَلَيْسَ  لَنَا قُدُورٌ وَلَا آنِيَةٌ غَيْرُ آنِيَتِهِمْ , قَالَ: فَقَالَ: «اسْتَغْنُوا عَنْهَا مَا اسْتَطَعْتُمْ فَإِنْ لَمْ تَجِدُوا فَارْحَضُوهَا بِالْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُورُهَا ثُمَّ اطْبُخُوا فِيهَا
“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் பலதெய்வ வழிபாடு செய்பவர்களின் இடத்தில் இருக்கின்றோம்; அவர்களுடையதை தவிர வேறு பாத்திரங்கள் எங்களிடம் இல்லை”. ..அதற்கு நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்; அதிலிருந்து உங்களால் முடிந்த வரை விலகி இருங்கள்; அதைத்தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை எனில் அதை தண்ணீரால் நன்கு கழுவிக்கொள்ளவும். ஏனெனில் தண்ணீர் அவைகளை சுத்தப்படுத்தக்கூடியதாகும். பின்பு அதில் நீங்கள் சமைத்து கொள்ளுங்கள்.”                   (தாரகுத்னி)
நபிصلى الله عليه وسلمஅவர்கள் «فَإِنَّ الْمَاءَ طَهُورُهَا» “தண்ணீர் அதை தூய்மைப்படுத்த கூடியதாகும்” என்று கூறியதன் மூலம் மது மற்றும் பன்றி அசுத்தமானவைகள் என்று விளங்குகிறது. மேலும்
அசுத்தமானவைகளிலிருந்து ஆதாயமடைவதும் தடுக்கப்பட்டவை  என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.
நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்;-
إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الخَمْرِ، وَالمَيْتَةِ وَالخِنْزِيرِ وَالأَصْنَامِ ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ المَيْتَةِ، فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لاَ، هُوَ حَرَامٌ» ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»
“அல்லாஹ்வும் அவனது தூதரும் மது, செத்த மிருகங்கள், பன்றி, சிலை ஆகியவற்றை வியாபாரம் செய்வதை ஹராமாக்கியுள்ளார்கள்.”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! செத்த மிருகங்களின் கொழுப்பை கொண்டு படகிற்கு கொழுப்பிடுவது,அதன் துளைகளை மறைப்பது மற்றும் விளக்கிற்காக அதை பயன்படுத்துவது கூடுமா என்று கேட்கப்பட்டது. நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்..இல்லை! இவை  தடுக்கப்பட்டவையாகும்.அல்லாஹ் யூதர்களை நாசமாக்கட்டும்! அல்லாஹ் (மிருகங்களின்) கொழுப்பை அவர்களுக்கு ஹராமாக்கியிருந்தான்; எனினும் அவர்கள் அதன் கொழுப்பை உருக்கி அதை விற்று அதன் லாபத்தை உண்டனர்.”
                                                                                             (ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), புகாரி)
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بَلَغَ عُمَرَ أَنَّ سَمُرَةَ بَاعَ خَمْرًا، فَقَالَ: قَاتَلَ اللهُ سَمُرَةَ، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَجَمَلُوهَا، فَبَاعُوهَا
“சமுரா மது விற்பனை செய்ததாக உமர்(ரலி) அவர்களிடம் அறிவிக்கப்பட்டது. அல்லாஹ் சமுராவை நாசமாக்கட்டும்!  நபிصلى الله عليه وسلمஅவர்கள், அல்லாஹ் யூதர்களை சபிக்கட்டும்! அவர்களுக்கு கொழுப்பை(சாப்பிட) தடுக்கப்பட்டிருந்தும், அதை உருக்கி பின் அதை விற்றனர்.” என்று கூறியது அவருக்கு தெரியாதா என்று பதிலளித்தார்கள்.
                                                                                                                                                               (முஸ்லிம்)
நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
إِنَّ اللَّهَ حَرَّمَ الْخَمْرَ وَثَمَنَهَا، وَحَرَّمَ الْمَيْتَةَ وَثَمَنَهَا، وَحَرَّمَ الْخِنْزِيرَ وَثَمَنَهُ
“அல்லாஹ் மதுவையும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையையும் தடுத்திருக்கிறான்;செத்த மாமிசத்தையும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையையும் தடுத்திருக்கிறான்; மேலும் பன்றியையும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையையும் தடுத்திருக்கிறான்.” (அபூ ஹுரைரா(ரலி), அபூ தாவூது )
அசுத்தமானவைகளிலிருந்து ஆதாயமடைவது தடுக்கப்பட்டவை என்பதை மேற்கூறிய ஆதாரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.ஆகவே, வெள்ளரி மற்றும் அதை போன்ற செடிகளை செழிப்படைய செய்து அதன் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக பன்றியிலிருந்து மரபணுவை எடுத்து செடிகளில் செலுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அசுத்தமானவைகளிலிருந்து ஆதாயமடைவது தடுக்கப்பட்டுள்ளதால் இதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.
 அசுத்தமானவைகள் வெறுக்கப்பட்டதாயினும்  அவற்றை மருந்துக்காக உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதை இத்துடன்  ஒப்பிட்டு கூறமுடியாது.
அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள் :-
أَنَّ نَاسًا مِنْ عُرَيْنَةَ اجْتَوَوْا المَدِينَةَ «فَرَخَّصَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا، وَأَبْوَالِهَا»
“உரைனா கோத்திரத்தை சார்ந்த சிலர் மதீனாவிற்கு வந்தார்கள்; அவர்களுக்கு அதன் சீதோஷ்ண நிலை ஒத்துக்கொள்ளவில்லை;ஆகவே அல்லாவிஹ்ன் தூதர்صلى الله عليه وسلمஅவர்கள், ஜகாத்தாக கொடுக்கப்பட்ட ஒட்டக மந்தைக்கு சென்று அதன் பாலையும் சிறுநீரையும்(மருந்தாக) பருக அனுமதியளித்தார்கள்…”(புகாரி)
செடி வளர்ப்பு என்பது மருந்து என்னும் சொல்லின் அர்த்தத்தில் அடங்காத காரணத்தால், செடி வளர்ப்பதை மருந்திற்கு சமமானதாக கூறமுடியாது. ஆகவே செடியின் வளர்ச்சிக்காக பன்றியின் மரபணுவை உபயோகிக்க அனுமதி கிடையாது.

Sources sindhanai.org

விற்பனை இலக்கை மட்டும் மையமாக வைத்து தொழிலாளியின் படியை நிர்ணயிப்பது கூடுமா?

 
கேள்வி:-
இக்காலத்தில் சதவீதம் என்கிற வார்த்தையின் உபயோகம் அதிகரித்துள்ளது; அதாவது இந்த மாதத்தில் 4,00,000 ரூபாய் அளவில் நீங்கள் விற்பனை செய்திருந்தால், அதில் கால் சதவிகிதம் உங்களுக்கு படியாக கிடைக்கும்; அந்த விற்பனை இலக்கை அடையவில்லையெனில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது.
இதற்கு அனுமதி உண்டா?
ஒரு விற்பனை அங்காடியில்  வியாபாரிக்காக வேலை செய்யும் தொழிலாளிக்கு தன்னுடைய கூலியின் அளவு தெரிந்திருப்பது அவசியமாகும். மேலும் அவர் விற்பனை செய்த பொருட்களுக்காக கூலியுடன் சில சதவிகிதத்தை சேர்த்து கொடுக்கலாம். உதாரணமாக, அவருடைய சம்பளம் 1000 ரூபாய்  என்றிருந்தால், அவர் விற்பனை செய்த பொருட்களுக்காக கூடுதலாக 10 சதவிகிதத்தை உபரியாக அதனுடன் சேர்த்து வழங்கலாம்; இதற்கு தடை இல்லை. அவ்வாறில்லாமல் அவர் விற்பனை செய்த பொருட்களுக்கு மட்டும் சதவிகிதமாக வழங்குவது; அவர் விற்பனை செய்யும் பட்சத்தில் அவருக்கு 10 சதவிகிதம் கிடைக்கும்; அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவருக்கு எதுவும் கிடைக்காது என்று  நிர்ணயிப்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் உள்ளன… ஷரியா அடிப்படையிலான வலுவான கருத்து  என்னவெனில், இதற்கு அனுமதி கிடையாது.
வேறொருவருக்காக தொழிலாளியாக வேலை செய்வது, அதாவது அவருக்காக அவருடைய வணிக வளாகத்தில் விற்பனை செய்வது; அவர் விற்பனை செய்த தொகையில் சில சதவிகிதம் அவருக்கு சம்பளமாக வழங்கப்படும். அஃதாவது, அவர் விற்பனை செய்யும் பட்சத்தில், அவர் விற்பனை செய்ததில் சில சதவிகிதம் அவருக்கு கிடைக்கும். அவ்வாறு இல்லையெனில் அவருக்கு எதுவும் கிடைக்காது. தொழிலாளிக்கு தன்னுடைய கூலி எவ்வளவு என அறிந்திருப்பது அவசியம் என்ற அடிப்படையில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.அவர் விற்பனை செய்ததற்கான பொருட்களுக்காக கூடுதலாக சில சதவிகிதத்தை கூலியுடன் சேர்த்து கொடுக்கலாம். ஆனால் அவர் விற்பனை செய்த பொருட்களுக்கான சதவிகிதத்தை மட்டும் கூலியாக வழங்குவதற்கு அனுமதி கிடையாது.
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:-
مَنِ اسْتَأْجَرَ أَجِيرًا، فَلْيُعْلِمْهُ أَجْرَهُ
“யார் ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறாரோ, அவர் தொழிலாளிக்கு அவருடைய கூலியை தெரிவித்து கொள்ளட்டும்.”
                                               (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:-
أَعْطِ الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ
“தொழிலாளியின் வியர்வை உணர்வதற்கு முன் அவருடைய கூலியை வழங்கி விடுங்கள்”  (பைஹகீ)
இதனடிப்படையில், தொழிலாளிக்கு அவர் செய்யும் வேலைக்கு கூலி வழங்கப்பட வேண்டும். அவர் வேறொருவருக்காக கூலியில்லாமல் வேலை செய்வதற்கு அனுமதியில்லை. இதுவே இவ்விஷயத்தில் வலுவான நிலைப்பாடாகும்.
அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே; அவனே நீதிபதிகளில் சிறந்தவன்.

Sources sindhanai.org

கைகளால் வரையப்படும் சித்திரங்கள் குறித்த இஸ்லாமிய தீர்ப்பு

கேள்வி:-
 கைகளால் வரையப்படும் சித்திரங்கள் மற்றும் உயிருள்ள ஜீவன்களான மனிதன், மிருகங்களை சித்திரமாக வரைந்து வீடுகளில் வைத்திருத்தல், அதை தொங்கவிடுவது பற்றிய ஷரியா விதிமுறை என்ன?
மனிதர்களையும் மிருகங்களையும் சித்திரமாக தீட்டுவதென்பது இப்போது நடைபெற்று வரும் வழக்கமான விடயங்களில் ஒன்றாகிவிட்டது.மனிதனின் முயற்சியில், அதாவது எழுதுகோல் மூலமாகவோ அல்லது கணினியின் உபகரணம் கொண்டோ சித்திரம் தீட்டுவதென்பது, உயிருள்ள ஒன்றிற்கு பொய்யான தோற்றத்தை அளிப்பது போன்றதாகும். ஆகையால் தடுக்கப்பட்டவை என்னும் அளவுகோல் இதற்கு பொருந்தும்.
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்:-
مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا
“எவரொருவர் ஓர் உருவத்தை வரைந்தால், அதற்கு உயிர் கொடுக்கப்படும் வரை அல்லாஹ் அவருக்கு தண்டனை அளிப்பான். மேலும் அவர்களால் ஒருபோதும் அதற்கு உயிரளிக்க முடியாது”.                     (இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)
நபிصلى الله عليه وسلمஅவர்கள்  கூறினார்கள்:-
إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ
“உருவத்தை சித்திரமாக தீட்டுபவர்கள் மறுமை நாளில் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்; மேலும் அவர்களிடம் ‘நீங்கள் உருவாக்கிய ஓவியத்திற்கு உயிரளியுங்கள்’ என்று கூறப்படும்”.       (இப்னு உமர்(ரலி), புகாரி)
சித்திரங்களை வைத்திருப்பது, வீட்டில் வைத்திருப்பது, அதை தொங்கவிடுவது பற்றிய சட்டங்களை காண்போம்.
அ) தொழுகை விரிப்புகள், மஸ்ஜிதுகளின் திரைகள் அல்லது மஸ்ஜிதுகளுக்கான விளம்பரங்கள் மற்றும் இது போன்ற இடங்களில் தடுக்கப்பட்டதாகும். இதற்கு அனுமதியில்லை.
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கஃபாவினுள் இருந்த சித்திரங்கள் அழிக்கப்படும் வரை உள்ளே வர மறுத்தார்கள் என்று கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபிصلى الله عليه وسلمஅவர்கள் அவர்கள் சித்திரங்கள் அழிக்கப்படும் வரை உள்ளே நுழைய மாட்டேன் என்று கூறியது வழிபாட்டு தலங்களில் சித்திரங்கள் வைப்பதற்கு தடை என்பதற்கான கரீனா(قَرِينَة) ஆகும்.எனவே மஸ்ஜிதுகளில் சித்திரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
أَنَّ النَّبِيَّ صبى الله عليه وسلم لَمَّا رَأَى الصُّوَرَ فِي الْبَيْتِ يَعْنِي الْكَعْبَةَ لَمْ يَدْخُلْ وَأَمَرَ بِهَا فَمُحِيَتْ
“நபிصلى الله عليه وسلمஅவர்கள் அவர்கள் இல்லத்தில், அஃதாவது கஃபாவினுள் சித்திரத்தை கண்டதால் நுழையவில்லை;மேலும் அதை அழிக்க உத்தரவிட்டார்கள்.”
                                                                                                  (இப்னு அப்பாஸ்(ரலி),முஸ்லிம்)
ஆ) வழிபாடு அல்லாத வேறு இடங்களில் வைப்பதற்குரிய அனுமதி
மரியாதைக்குரியதாகவும், பெருமைக்காகவும் அவைகளை வைத்திருப்பது; அஃதாவது வணக்கத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் வீடுகளில் திரையாக, கல்விக்கூடங்களில் செயல் விளக்கத்திற்காக, ஆடைகளில் அல்லது துணிகளில் வரையப்படுவது…அல்லது பள்ளிக்கூடங்களில், அலுவலகங்களில், அல்லது விளம்பரங்களில் அல்லது பொருட்களின் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக நாடி உபயோகிப்பது அல்லது இது போன்ற விஷயங்கள்…. இவை அனைத்தும் விரும்பத்தகாத (مَكْرُوه)  செயலாகும்.
மிதியடிகள், படுத்து உறங்க பயன்படுத்தும் பாய்கள், தலையணைகள், மிதிக்கும் தரைகள் போன்றவை; வணக்கத்துக்குரிய அல்லது மதிப்பிற்குரிய இடங்களைத்தவிர மற்ற இடங்களில் இவற்றை வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சில ஆதாரங்கள்:-
நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்:-
لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ
                     ” நாய் மற்றும் சித்திரங்கள் உள்ள வீட்டினுள் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள்”.
                                                                                     (அபூ தல்ஹா(ரலி), முஸ்லிம்)
நபிصلى الله عليه وسلمஅவர்களிடமிருந்து கேட்டதாக  அபூ தல்ஹா(ரலி) மற்றொரு அறிவிப்பில் கூறுகிறார்கள்:-
إِلَّا رَقْمًا فِي ثَوْبٍ
                                  “துணிகளில் உள்ள சித்திரங்களை அச்சிடுதல் தவிர”  (புகாரி,முஸ்லிம்)
இது துணிகளில் சித்திரங்கள் அச்சிடுவதற்கான விதிவிலக்கு இருப்பதற்கு ஆதாரமாக திகழ்கிறது. அஃதாவது மலக்குகள் சித்திரம் உடைய துணிகளைக் கொண்ட வீடுகளில் நுழைவார்கள்;அஃதாவது கைகளால் தீட்டப்பட்ட சித்திரம்,தட்டையான சித்திரம் “துணிகளில் அச்சிடப்பட்டவை” ஆகுமானதாகும். ஏனென்றால் மலக்குகள் தட்டை வடிவிலான சித்திரம் கொண்ட வீடுகளில் நுழைவார்கள் என்பதாக அர்த்தம் கொள்கிறது. இருப்பினும், இது எவ்வகையில் அனுமதிக்கப்படுகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள மற்ற அறிவிப்புகள் கீழே குறிப்பிடப்படுகிறது:
ஆயிஷா(ரலி)  அறிவிக்கிறார்கள்:-
دَخَلَ عَلَيَّ النَّبِيُّ وَفِي الْبَيْتِ قِرَامٌ فِيهِ صُوَرٌ فَتَلَوَّنَ وَجْهُهُ ثُمَّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ
“நபிصلى الله عليه وسلمஅவர்கள் வீட்டில் நுழையும்போது அங்கு சித்திரங்கள்(மிருகங்கள்) உடைய திரைகள் தொங்குவதை கண்டு கோபத்தால் முகம் சிவக்க, அதை தன் கைகளால் பிடித்து பின்பு அதை துண்டு துண்டாக கிழித்து எறிந்தார்கள். (புகாரி)
அல்-கிராம் “القرام” என்பது ஒரு வகையான துணியை குறிக்கும். இது கதவுகளில் திரையாக உபயோகிக்க கூடியது. நபிصلى الله عليه وسلم அவர்களின் முகம் சிவந்து அதை தங்களது கைகளால் பிடித்தது என்பது, கதவுகளின் திரைகளில் உருவம் பதியப்பட்டவைகளை உபயோகிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது, எனவே இது மலக்குகள் உருவம் பதியப்பட்ட வீடுகளில் நுழைவது குறித்த அனுமதித்தலை பொறுத்தமட்டில், இதை விளக்குவதற்கான ஆதாரமானது இதற்கு ஆதரவாக இல்லை, அதாவது இது வெறுக்கப்பட்ட செயலாக உள்ளது. ஏனெனில் இந்த உருவம் பதியப்பட்ட திரைகளானது கதவுகளில் தொங்கவிடப்பட்ட இடமாக உள்ளது; இது மதிக்கப்படும் இடமாகும்.ஆகையால் மதிக்கப்படும் இடங்களில் உருவம் பதியப்பட்டதை தொங்கவிடுவது வெறுக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிصلى الله عليه وسلمஅவர்களிடம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது;-
وَمُرْ بِالسِّتْرِ يُقْطَعْ فَيُجْعَلَ مِنْهُ وِسَادَتَانِ تُوطَآَنِ
“திரையை கிழித்து அதிலிருந்து இரண்டு மெத்தைகளை அதன் மீது புரளுவதற்காக செய்யுங்கள் என்று  (ஜிப்ரீல்(அலை) அவர்கள் எனக்கு) கட்டளையிட்டார்கள்.”
                                                                                                             (அபூ ஹுரைரா(ரலி),  அஹ்மது)
ஆகவே ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிصلى الله عليه وسلمஅவர்கள் அவர்களுக்கு மதிப்பிற்குரிய இடத்திலிருந்து திரையை அகற்றி மக்கள் அதன் மீது புரளுவதற்குரிய இரண்டு மெத்தைகளாக ஆக்கிக்கொள்ள ஆணையிட்டுள்ளார்கள்.
இதிலிருந்து உருவம் பதியப்பட்டவைகளை மதிப்பிற்குரிய இடங்களில் அல்லாமல் வேறு இடங்களில் உபயோகிக்க அனுமதி உண்டு  என்பதை அறிய முடிகிறது.

Sources sindhanai.org

உயிர்களை பணயம் வைத்து குழந்தை பெற்றெடுக்கும் நைஜீரிய பெண்மணிகள்

ஏப்ரல் 8 ஆம் தேதி “allafrica.com” என்னும் இணையதளம் “நைஜீரிய பெண்கள் குழந்தை பெற்றெடுக்க தங்கள் உயிரை விடுகின்றனர்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது”. அதில் நைஜீரியாவில் அதிகப்படியான பிரசவ மரணம் ஏற்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது நிகேச்சி என்னும் ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணின் கதையிலிருந்து தொடங்குகிறது. இந்த பெண் தன்னுடைய பிரசவத்திற்கு தகுந்த சிகிட்சைக்கான காலதாமதத்தின் விளைவாக தன்னுடைய குழந்தையையும் பறிகொடுத்து, மிகுந்த உதிரக்கசிவினால் இறந்து போனார்.அக்காலதாமதமானது இருபத்தைந்து கிலோமீட்டர் தூரமுள்ள மருத்துவமனையை அடைய, மூன்று மணிநேர பயணம் மேற்கொண்டதால் ஏற்பட்டதாகும். பின்னர் மருத்துவர்களின் பற்றாக்குறையால் ஆறு மணிநேரம் காத்துக்கிடந்தார். மேலும் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தால் அவரை உட்பிரிவு பகுதியில் சேர்த்து சிகிட்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இச்செய்தியை எழுதியவர் “நைஜீரியாவில் கருவுறுதல் என்பது ஏறக்குறைய தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்றதாகும்” என்று கருத்து தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனம் 2012 ஆம் ஆண்டு “Trends in Maternal Mortality” எனும் வெளியீட்டில் Maternal Mortality Rate(MMR), நைஜீரியாவில் 1,00,000 குழந்தைகள் உயிருடன் பிறப்பதற்கு 630 தாய்மார்கள் பிரசவகாலத்தில் இறக்கின்றனர் என்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்நாடு பிரசவ மரணம் அதிகமாக ஏற்படுவதில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்வாறிருந்தும் நைஜீரிய அரசானது இதை ஒரு மிக முக்கிய பொதுசுகாதார பிரச்சினையாக கருதி இதற்கு தீர்வுகாண முன் வரவில்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யமன் போன்ற பல்வேறு முஸ்லிம் நாடுகளிலும் நைஜீரியாவை போன்று மருத்துவமனைகளில் தகுந்த உபகரணத்தின் தட்டுப்பாடு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையால் பிரசவநேர மரணங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நைஜீரியாவில்  Lagos State Civil Society Partnership மற்றும் இதர அமைப்புகளும் நாட்டில் ஆரம்ப சுகாதார மையங்களை தொடர்பு கொள்வது மற்றும் அதன் தரம் குறித்து 2013 ல் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், பல மையங்களில் பிரசவங்கள் இன்னும் மெழுகுவர்த்தி அல்லது சிமிழ் விளக்கின் வெளிச்சத்தில் தான் நடைபெறுகிறது என்று கூறுகிறது. சில நேரங்களில் ஊழியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து மின்சாரம் கிடைக்க செய்கின்றனர். மேலும் பல சுகாதார மையங்களின் மருத்துவர் மற்றும் நோயாளிகளின் விகிதமானது, 1 – க்கு 1653 என்ற விகிதத்தில் இருக்கின்றது. எகிப்திய அஸ்ஸூட் பல்கலைக்கழக மகப்பேறு பிரிவின் ஒரு விரிவுரையாளர், “நாம் குணப்படுத்த முடியாத நோய்களினால் பெண்கள் மரணிக்கவில்லை; மாறாக சமூகம் அவர்களது உயிர்களை காப்பாற்றவேண்டியது இன்றியமையாதது என்னும் முடிவை எடுக்காமல் இருப்பதே அதற்கான காரணம்” என்று கூறினார்.
 ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பொருளாதார நிபுணர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை(GDP) மறுபரிசீலனை செய்ததில் நைஜீரியாவிற்கு உலக பொருளாதாரத்தில் இருபத்தியாறாவது இடத்தை அளித்து  ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக அறிவித்தது; அது வருடந்தோறும் 7% வளர்ச்சி அடைந்து வருகிறதாம். நைஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக திகழ்கிறது; உலகின் பத்தாவது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் திகழ்கிறது; மேலும் எண்ணெய் நிறுவனமான BP-ன் படி எரிவாயு கொண்ட நாடுகளில் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. OPEC  இதன் பெட்ரோலிய ஏற்றுமதியின் அளவை 94.64 பில்லியன் டாலர்கள் என மதிப்பீடு செய்துள்ளது; இதன்மூலம் இந்நாடு கடந்த ஐம்பது ஆண்டுகளில் 600 பில்லியன் டாலர்களுக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. இவை அனைத்துமிருந்தும் இதன் நொறுங்கிப்போன சுகாதார அமைப்பிற்கு கூடுதலாக உலக வங்கி நைஜீரியாவை உலகில் அதிகமான மிகவும் ஏழைகளை கொண்ட ஐந்து நாடுகளின் பட்டியலில், மற்றொரு அதிகமான பொருளாதார வளர்ச்சியுடைய நாடான இந்தியாவுடன் சேர்த்துள்ளது.  மேலும் அப்பட்டியலில் நைஜீரியாவில் 70% மக்கள் நாளொன்றுக்கு 1.25 டாலர்களுக்கு கீழ் சம்பாதிக்கும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதாக கூறியுள்ளது.
இவையனைத்தும் GDP மற்றும் முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, தங்களது சமூகத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் வாழ்க்கை தரத்திற்கு முற்றிலும் இனைப்பற்றதாக உள்ளதை காட்டுகிறது. இந்த முதலாளித்துவ அமைப்பில் சொத்துகளின் வளர்ச்சியை செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பதையும், வெகுஜன மக்கள் கடுமையான ஏழ்மை நிலையில் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதையும், வளங்களை சமூகத்தினர் அனைவருக்கும் நியாயமான முறையில் பங்கிடாமல் சிலர் மட்டுமே அனுபவிக்கும் முறைகேடான பொருளாதார கொள்கைகளினால் மக்களுக்கு கிடைக்கும் பொது சேவைகளானது மிகவும் அவமானமான நிலையில் உள்ளதையும் காட்டுகிறது. மேலும்  முஸ்லிம் நாடுகளில் அமர்த்தப்படும் இஸ்லாம் அல்லாத அரசாங்கங்கள்,  மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு முன்னுரிமை கொடுக்காமல், ஆட்சியாளர்கள் தங்களது சொத்துக்களை அதிகப்படுத்துவதில் மட்டுமே தொடர்ந்து அக்கறை காட்டி வருகின்றது. இதற்கும் மேலாக அவர்கள் மக்களின் மீது நடைமுறைப்படுத்தும் குஃப்ரிய அமைப்பானது, மக்களின் விவகாரங்களை கவனிப்பதிலும் சமூகத்தின் வளங்களை நிர்வகிப்பதிலும் தகுதியற்று கிடப்பதை  சந்தேகமில்லாமல் உணர்த்துகிறது. மேலும் அங்கு ஊழல் என்பது அரசியலிலும் நிர்வாக அமைப்பிலும் தொற்றுநோயைப்போல் வியாபித்துள்ளது.
இத்தகைய அதிகப்படியான பிரசவநேர மரணத்தை சரிசெய்ய மனித உயிரின் மதிப்பை அறிந்த, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை முன்னுரிமையாக கொண்ட ஓர் ஆட்சியமைப்பின் மூலம் நிர்வகிப்பது இன்றைக்கு கட்டாய தேவையாகும். அந்த அரசின் சாதனையை GDP ன் வளர்ச்சி அல்லது கட்டிடங்களின் உயரத்தை கொண்டு கணக்கிடாமல்;  நீதி, சம உரிமை,  குடிமக்களிடம் அது ஏற்படுத்தும் மன அமைதி, அவர்களை எந்த அளவிற்கு சிறப்பாக பார்த்துக்கொள்கிறது என்பதை வைத்து கணக்கிடக்கூடியதாக இருக்கவேண்டும்.அத்தகைய ஆட்சியமைப்பானது கிலாஃபா ஆட்சி மட்டுமே ஆகும்; அதன் ஆட்சியாளர் மக்களின் பாதுகாவலர் மற்றும் மக்களின் சேவகராகராவார். இதைத்தான் நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியுள்ளார்கள்:-
كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளாவீர், மற்றும் ஒவ்வொருவரும் உங்களின் பொறுப்பை பற்றி விசாரிக்கப்படுவீர்கள், இமாமானவர் மக்கள் மீது பொறுப்பாளியாக உள்ளார்; மேலும் அவருடைய பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார்…” (புகாரி)
வரலாற்றில் கிலாஃபத்தின் ஆட்சிகாலத்தில் பொருளாதார வளர்ச்சியும் செல்வ செழிப்பும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு கிடைக்கும் பொதுசேவைகளின் தரமும் உயர்ந்ததாக இருந்தது. உதாரணமாக உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களின் கிலாஃபத்தின் போது வட ஆப்பிரிக்காவில் வறுமை முற்றிலுமாக துடைக்கப்பட்டது.  அல்லாஹ் வழங்கிய ஆட்சியமைப்பான கிலாஃபத்தில், அதன் அமீர்களான கலீஃபாக்கள் உலகமே பொறாமை கொள்ளும் அளவிற்கு மக்களுக்கு சேவைபுரிய சிறந்த மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களை போட்டி போட்டு நிறுவினர்; கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ மையங்களையும் ஏற்படுத்தினர்.
உலகளாவிய மருத்துவ நிபுணரான டாக்டர் சாம் லெஃப், தனது “From Witchcraft to World Health” என்னும் புத்தகத்தில் அப்பாஸிய கிலாஃபத்தை பற்றி குறிப்பிடுகையில்:-
“ஒவ்வொரு நகரமும் தனது சொந்த மருத்துவமனையை கொண்டிருந்தது. பக்தாதில் மட்டும் தாராளமாக அரசு பைத்துல்மாலின் துணையுடன் அனைத்து வசதிகளை கொண்ட நன்கு நிர்வகிக்கப்பட்ட அறுபதுமருத்துவமனைகள் இருந்தது. இவைகளில் சிகிட்சைகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டது. இதுபோன்ற சேவைகளே தற்போதைய நவநாகரீக மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
 இஸ்லாமிய சட்டங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு தங்களது அமைப்பையும் சமூகத்தையும் நிறுவியதன் வாயிலாக இது போன்ற பலன்களை மனித சமுதாயம் அனுபவித்தது. எனவே முஸ்லிம் உலகில் மீண்டும் பரிபூரண முறையில் கிலாஃபத்தை நிறுவுவதன் மூலமே இதுபோன்ற பலன்கள் மீண்டும் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.


Sources sindhanai.org